Tuesday 27 November 2012

கார்த்திகைத் தீபம்

திருவண்ணாமலையே மகேசனாக் கோயில் கொண்டுள்ளது.
பஞ்ச பூத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை, ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.
தீபவழிபாடு பண்டைய காலந்தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது.

சைவர், வைஷ்ணர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும்
தீபவழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர்.

இந்தியாவில் வடக்கில் தீபவழிபாடு ‘தீபாவளி’ என்றும் , தெற்கே தீபவழிபாடு
‘ கார்த்திகை தீபம் ‘ என்றும் கொண்டாடப்படுகிறது.

தீபதானங்கள் பதினாறு வகை தென் நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது.
தீபவழிபாட்டில் சிறப்பானது ” கார்த்திகை தீபம் ஆகும்.”

இது கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது.

தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருணைப் போக்கி மெய்ஞானத்தைத் தருவதாகும்.

பண்டைய காலத்தில் ஞாயிறு, திங்கள், நெருப்பு இம்மூன்றையும்தான்
தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.

”அன்பே தகழியா ஆ ர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் ”

என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

இன்று தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆ ற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது இன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
” கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள் ” என்று  கார்த்திகை தீபத்தைப் பற்றிச் சிறப்பாக குறிப்பிடுவர்.

காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வர மண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.

திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான்.

மாணிக்கவாசகர், ”சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்று சிவபெருமானைக் குறித்துப் பாடியுள்ளார்.

குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் இலட்சுரமாக இருக்கும்.

ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி,சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிக்கு ஒப்பிடுவார்கள்.

நமிநந்தி அடிகள், கலியநாயனார், கணம்பில்ல நாயானார் போன்றோர் திருவிளக்கு ஏற்றி வைத்து கோயில்களில் தொண்டு செய்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது.

அகல், எண்ணெய், திரி சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது ‘விளக்கு’ என்று அழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன. இவையே சரியை, கிரியை,யோகம், ஞானம் ஆகும்.

இந்த அறவொளியையே தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம்.
முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால் முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாகப் ‘பரணி தீபம்’ கொண்டாடப்படுகிறது
.
வள்ளலார் ‘ஒளியின் வடிவம் சிவம்’ என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார்.

அப்பர் பெருமான் ‘நமசிவாய’ மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.
ருக்வேகத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னிபகவான் முக்கிய இடம் பெறுகிறார்.

கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல்,
அசையாமல் சஞ்சலமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.

திருமூலர் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில்:
”விளக்கொளியாகிய மின் கொடியாளை
விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !
– என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

”நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி…”
என்று கார்நாற்பது கூறுகிறது.

நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல் அழகுடையவளாய் என்பது பொருள்.

இறைவன் சந்நதியில் ஏற்றபப்டும் தீப ஒளியின் மகிமையை மகாபலிச் சக்கரவர்த்தியின் கதை மூலம் அறியலாம்.

முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தது. தான் அறியாமலேயே,

தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது.

இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான்.

அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.

தை மாதத்தில் சபரிமலை ஐயப்பன் சந்நிதியில் ”மகரஜோதி” தரிசனம் கேரளத்தில் மிகவும் பிரசித்தம்.

ஒரு சமயம் பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர்.  ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப் பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். அதுவே ”லிங்கோத்பவ மூர்த்தி” ஆகும்.

திருவண்ணாமலையே மகேசனாகக் கோயில் கொண்டுள்ளது. பஞ்ச பூதத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.  நினைத்தாலே முக்தி த்ரும் தலம் திருவண்ணாமலை.

திருவண்ணாமலையில் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வ்ழிபடப்படுகிறது.
கார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தாகவும்,

சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் இருக்கிறான்.
இன்றும் தீபதரிசனத்திற்கு சற்று முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார்

சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடிவந்து கொடிக் கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்ற உடன் வேட்டு சத்தத்துடன் மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும்.

அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். பஞ்சமூர்த்திகளும் தீப ஒளியை தரிசனம் செயவர்.

திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம்
முருகப்பெருமானுக்கு ஏற்றப்படுகிறது.

”கார்த்திகை விளக்கிட்டனன்” என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக
சிந்தாமணிகுறிப்பிடுகிறது.

தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் சொக்கப்பனை வேய்ந்து பனை ஒலையால் சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர்.

”சொக்கப் பனையை வணங்குவது சொக்கப்பனையாகும்” சொக்கப்பனாகிய சிவனை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை ஆகும்.

தொல்காப்பியம் ”வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்” என்று கார்த்திகையில் ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது.

கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்க
உகந்த விழா கும்.

பிறவிப்பிணி தீர வாழ்வில் எல்லா நலன்களும் பெற, கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று தொழுது, முற்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கி நன்மை அடைவோம்.

திருவண்ணாமலை தீபத்தைமுன்னிட்டு
திருநாவுக்கரசர் திருவண்ணாமலையில் பாடிய பதிகம்.
நான்காம் திருமுறை. பதிகம் 63. திருவண்ணாமலை : திருநேரிசை
திருச்சிற்றம்பலம்:

ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்தோட் சுடர்மழுப் படையி னானே
தியே அமரர் கோவே அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவிலேனே. 1
பண்தனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே யமரர் கோவே அணியணா மலையு ளானே
தொண்டனே னுன்னை யல்லாற் சொல்லுமா சொல்லி லேனே.2
உருவமு முயிரு மாகி ஓதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொலியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லால் மற்றொரு மாடி லேனே. 3
பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும் அணியணா மலையு ளானே. 4
பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா
அறைகழ லமர ரேத்து மணியணா மலையு ளானே
இறைவனே யுன்னை யல்லா லியாதுநான் நினைவி லேனே. 5
புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலா
அரிகுலம் மலிந்த வண்ணா மலையுளா யலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய் பாதநான் மறப்பி லேனே. 6
இரவியு மதியும் விண்ணு மிருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவன மெட்டுந் திசையளி யுருவ மானாய்
அரவுமிழ் மணிகொள் சோதி யணியணா மலையு ளானே
பரவுநின் பாத மல்லாற் பரமநான் பற்றி லேனே. 7
பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை யீந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்
ர்த்துவந் தீண்டு கொண்ட லணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத் திறமலால் திறமி லேனே. 8
பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்
லுநீர் கொண்டல் பூக மணியணா மலையு ளானே
வாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே. 9
இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த வெம்மான்
உரத்தினால் வரையை யூக்க வொருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த வண்ணா மலையுளா யமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே. 10
திருவண்ணாமலை தீபத்தைமுன்னிட்டு, அருணகிரிநாத சுவாமிகள்
திருவண்ணாமலையில் பாடிய திருப்புகழ்.
கடல்பரவு தரங்க மீதெழு திங்களாலே
கருதிமிக மடந்தை மார்சொல்வ தந்தியாலே
வடவனலை முனிந்து வீசிய தென்றலாலே
வயலருணையில் வஞ்சி போதந லங்கலாமோ
இடமுமையை மணந்த நாதரி றைஞ்சும்வீரா
எழுகிரிகள் பிளந்து வீழஎ றிந்தவேலா
அடலசுரர் கலங்கி யோடமு னிந்தகோவே
அரிபிரம புரந்த ராதியர் தம்பிரானே.
தீப தரிசனத் தத்துவமாக ஒரு பாடலை சிறீ அருணாசல ஸ்துதிபஞ்சகம் எனும்
நூலில் காணநேர்ந்தது. அப்பாடல்,
இத்தனுவே நான் எனும் மதியை நீத்து அப்
புத்தி இதயத்தே பொருந்தி அகநோக்கால்
அத்துவிதமாம் மெய் அகச்சுடர் காண்கை பூ
மத்தி எனும் அண்ணாமலைச் சுடர் காண் மெய்யே.
திருச்சிற்றம்பலம்

Sunday 25 November 2012

இந்து மதம் பற்றிய 200 பழமொழிகள்- Part 1

ராம ராம ராம

இராம பாணம் பட்டு உருவினாற்போல

இராமர் இருக்கும் இடம் அயோத்தி

இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது

இராம வாக்குக்கு இரண்டு உண்டோ?

அனுமார் வால் போல நீளுகிறதே

இராமனைப் போல ராசா இருந்தால் அனுமாரைப் போல சேவகனும் இருப்பான்

இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?

இராமன் மங்கையோடு இணங்கியது அவம்

இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா?

இரா முழுதும் இராமாயண்ம் கேட்டு சீதைக்கு ராமன் என்ன வேண்டும் என்ற கதை (சீதைக்கு ராமன் சித்தப்பன் என்ற கதை)

இராமேசுரத்துக்கும் காசிக்கும் போயும் என்னைப் பிடித்த சநீசுரன் தொலையல்ல

தம்பி உடையான் படைக்கஞ்சான் ( லெட்சுமணன் பற்றிய மொழி)

இராவண சந்யாசி போல இருக்கான்

இராவணன் குடிக்கு மஹோதரன் போலும், சுயோதனன் குடிக்கு சகுனி சுக்கிரீவ ஆக்கினையாய் இருக்கிறது

போலும்


சந்நியாசி புராணம்

சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்து சமுசாரம் மேலிட்டது போல

சந்நியாசி கோவணம் கட்டினது போல

சந்நியாசம் சகல நாசம்

சந்நியாசிக்குப் பழைய குணம் போகாது

சந்நியாசிக்கு சாதி மானம் போகாது

சந்நியாசி பயணம் திண்ணையை விட்டுக் குதிப்பது தான்

சந்நியாசி பூனை வளர்த்தது போல

சந்நியாசியைக் கடித்த நாய்க்கு பின்னாலெ நரகமாம், சந்நியாசிக்கு முன்னாலெ மரணமாம்

சந்நியாசியை நிந்தித்தவனுக்கு பின்னாலெ நரகமாம்

சந்நியாசி வீடு திண்ணைல

சபையிலெ நக்கீரன் அரசிலே விற்சேரன்

சப்தப் பிரம்மத்திலே அசப்த பிரம்மம் பிரகாசிக்கிறது

சப்தப் பிரம்மம் பரப் பிரம்மம் இரண்டையும் அறிய வேண்டியது



பழமொழிகளில் அவதாரம்

கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக் கூடாது (வாமன அவதாரம்)

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் (நரசிம்ம அவதாரம்)

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (காகாசுரன் கதை-ராமாவதாரம்)

சாத்திரம் கற்றவன் தானே காசு

சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்திரம்

சாத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள், கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு

சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்

சாபமிட்டருண்டோ? தலையில் திரு எழுத்தோ? வேக விட்டருண்டோ? எழுத்தின்படி தானோ?

சுவர்க்கத்திலே தோட்டியும் சரி, தொண்டமானும் சரி

சுவர்க்கத்துக்குப் போகிறபோது கக்கதிலே கூத்தியரா?

சுவர்க்கத்துக்குப் போகிறபோது கக்கதிலே ஒரு பிள்ளை ஏன்?

சுவர்க்கத்துக்குப் போனாலும் கக்கதிலே அட்சய பாத்திரமா?

சுவாமி வரங் கொடுத்தாலும் முன்னடியான் வரங் கொடான்

சூட்சுமத்தில இருக்குது மோட்சம்

சூட்சுமம் அறியாதவனுக்கு மோட்சம் இல்லை



14 லோகங்கள்

கீழேழு லோகமும் மேலேழு லோகமும் கண்ட காட்சியா?

குபேர பட்டணம் கொள்ளை போனாலும் கொடுத்து வையாத பாவிக்கு ஒன்றுமில்லை

ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதாம்

ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனது போல

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்

ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது

ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு

காவியுடுத்தவர் எல்லாம் விவேகானந்தரா?

ஏகாதசி மஹிமை

ஏகாதசிக்கு மா இடித்தாற் போல

ஏகாதசித் திருடியை ஏற்றடா ரததின் மேலே

ஏகாதசி மரணம் துவாதசி தகனம்

ஏகாதசி மரணம் நல்லதென்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா?

எறும்பு முதல் எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும் நாராயணன் என்னை காப்பாற்ற மாட்டானா?

ஓமப் பிண்டத்தை நாய் இச்சித்தாற் போல

வடக்கே போன வாலியும் வரக் காணோம்

அவன் தம்பி அங்கதன்

ரிஷிப் பண்டம் ராத்தங்காது

ஆண்டியே அன்னத்துக்கு அலையறச்சே லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறதாம்

ஆதி முதல்வனே பாய்ந்தோடும் போது ஐயர் மணி ஆட்டுவாரா?

ஆத்தாள் அம்மணம், அன்றாடம் கோ தானம்

ஆயிரம் உளிவாய்ப் பட்டுத்தான் ஒரு லிங்கம் ஆகவேண்டும்

சரியான சாப்பாட்டு ராமன்

அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய் பாரமா?

அண்ணாமலையாருக்கு 64 பூசை, ஆண்டிகளுக்கு 74 பூசை

அண்ணாமலையார் அருள் உண்டானால் மன்னார்சாமி மயிர் பிடுங்குமா?

வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி

பகீரதப் பிரயத்தனம் செய்தான்

அகாரியத்திலே பகீரதப் பிரயத்தனம் ஆகாது

அகோர தபசி, விபரீத நிபுணன்

அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?

அக்கினி தேவனுக்கு அபிடேகம் செய்தது போல இருக்கிறது

அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூறு வழியாக வரும்

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

வீட்டுக்கு வந்த வரலெட்சுமி

லெட்சுமி இருக்கும் இடத்தில சரசுவதி இருக்க மாட்டாள்

பெருங்காயம் இருந்த பாண்டம் வாசனை போகாது (பாவம் செய்தவர்கள் நிலை)

பிறவிக் குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற் போல

வைகுண்டம் என்பது திரு மாநகரம்

குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்தில்



வேத மகிமை

வேதியர்க்கு அழகு வேதம் ஓதுதல்

வேதத்தில் நாலு விதம் உண்டு

வேதத்திற்கு உலகம் பகை, உலகத்திற்கு ஞானம் பகை

வேதத்திற்கும் விக்ரகபக்திக்கும் பகை

வேதத்தை அறியாத கிழவன் வீண்

வேதம் ஆய்ந்து ஓதல் போதகர் முறைமை

வேதம் ஏன், நியாயம் ஏன், வித்தாரம் கள்ளருக்கு

வேதம் ஒத்த மித்திரன்

வேதம் கேடவரை, வேதம் கேடவர் என்பான் ஏன்?

வேதம் பொய்த்தாலும் வியாழம் பொய்யாது

உருத்திராக்கப் பூனை உபதேசம் பண்ணினது போல

ஐயப்பன் குதிரையை வையாளி விட்ட கதை

ஐயர் ஒன்றே கால் சேர் அவர் அணியும் லிங்கம் அரை சேர்

ஐயானாரே வாரும், கடாவைக் கொள்ளும்

ஐயனார் கோவிலிலே ஆனை பிடிக்க வேண்டும்

ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தங்கம்

ஐயனார் கோவில் மண்ணை மிதித்தவர் அத்தனை பேரும் பத்திரகாளி

கஞ்சி வரதப்பா என்றால் வாயில் வாரப்பா என்றானாம்

காசிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம்

கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுக்கும்

சுடலை ஞானம் திரும்பி வரும் மட்டும்தான் (ஸ்மசான வைராக்யம்)

தவசிச்சிக்கு தயிரும் சோறும் விசுவாசிக்கு வென்னீரும் பருக்கையும்

தவசிப்பிள்ளை நமசிவாயம் கையாசாரம்

தவசுக்குத் தனிமையும் தமிழுக்குத் துணையும்

தவசே அணிகலன், தாழ்மையே மேன்மை

தவத்திலிருதால் தலைவனைக் காணலாம்

தவத்துக்கொருவர் கல்விக்கிருவர்

உன்னையே நீ அறிவாய்

எல்லாம் தலை விதி (கர்ம வினைக் கொள்கை)

உடலில் உள்ள அழுக்கைப் போக்கிடலாம் உள்ளத்திலுள்ள

அழுக்கைப் போக்குவது கஷ்டம்

ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சுக் கும்பிட்டானாம்

மலையத்தனை சுவாமிக்கு கடுகத்தனை கற்பூரம்/ சாம்பிராணி



பெருமாள்

பெருமாளைச் சேர்ந்தோருக்குப் பிறப்பில்லை, பிச்சைச் சோற்றுக்கு எச்சல் இல்லை

பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு

பெருமாள் இருந்தால் அல்லவோ திருநாள் நடக்கப் போகிறது?

பெருமாள் என்கிற பெயரை மாற்றி பெத்த பெருமாள் ஆச்சு

பெருமாள் செல்கிற வழியில் புல்லாய் முளைத்தாலும் போதும்

பெருமாள் நினைத்தால் வாழ்வு குறைவா? பிரம்மா நினைத்தால் ஆயுசு குறைவா?

பெருமாள் புளிச்ச தண்ணீருக்கு அலைகிறான், அனுமார் ததியோதனம் கேட்கிறார்

பிச்சை எடுக்கிறதாம் அதைப் பிடுங்குகிறதாம் அனுமார்

பிள்ளையாரைப் பிடிச்ச சனி அரசமரத்தையும் பிடிச்சதாம்



மரணத்தை அருகில் வைத்துள்ளீர்களா.! இதோ மரணத்தை வெல்லும் வழி...!

இந்த உலகம் விசித்திரமானது. இங்கு வாழ்க்கை என்பது மிகவும் சிக்கலான ஒன்று. அதை வெற்றிகரமாக வாழ்ந்து முடித்து இந்த இன்னுலகை விட்டு நாம் மறைகிறோம். மனித வாழ்வில் பலர் தன்னுடைய வாழ்க்கைப்பயணத்தில் சந்திக்கும் சோதனைகள், வேதனைகள் மிகமிக அதிகம். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் எப்போது இறப்பான் என்று அவனுக்கு தெரியாது. அப்படி தெரியாத காரணத்தினாலே மனித குலம் ஒவ்வொறு நொடியும் மரணபயத்தோடே வாழ்கிறது.



ஆனால் மனிதர்களுள் பலபேர் தன்னுடைய மரணத்தை தன்னுடனே வைத்திருக்கிறார்கள். வேகம், பயமின்மை, அஜாக்கிரதை, முட்டாள்தனம், அவசரம், பாதுகாப்பின்மை, சரியானமுறையில் கையாலுதல் இல்லாமை, என பல்வேறு வகையில் ஒருவன் மரணத்தை சந்திக்கிறான். ஆக மரணம் என்பது எதோ ஒரு வகையில் நம்முடனே நாம் வைத்துக் கொள்கிறோம்.

மரணம் பயம் இல்லாத வரையில் நாம் நம்போக்கில் இருப்போம். மரணபயம் வந்துவிட்டால் அப்போதுதான் நம்முடைய மனது பயத்தை ஆட்கொள்கிறது.


அதுகுறித்த ஒரு ஜென்கதை....

இல்லறவாசி ஒருவர் அருகிலுள்ள ஊருக்குப் புறப்பட்டார். அவரால் மறுநாள்தான் திரும்பி வரமுடியும். எனவே, அவரது மனைவி மதியமும் இரவும் சாப்பிடுவதற்காக அவருக்கு ஒரு உணவுப் பொட்டலங்களை ஒரு பையில் போட்டுக் கெர்டுத்தாள். காட்டுவழியே தான அவரது பயணம் அமைந்தது.


அவர் நடுக்காட்டை அடைந்தபோது மதியம் ஆகிவிட்டது. ஒரு மரத்தடியில் அமர்ந்து மதிய உணவை உண்டார். உணவுக்குப் பின் பையை எடுத்துத் தோளில் தொங்க விட்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தார். நினைத்ததைவிட மிக விரைவில் சேர வேண்டிய இடத்தைச் சென்றடைந்த அவர் தனது வேலைகளை விரைவில் முடித்துக் கொண்டார். தனது ஊரை நோக்கிப் புறப்பட்டார். விரைவிலேயே புறப்பட்ட காரணத்தால், வீட்டிற்குச் சென்ற பின் இரவு உணவைச் சாப்பிடலாம் எனத் தீர்மானித்தார்.


திரும்பும் வழியில் அவர் ஒரு ஜென் துறைவி அமர்ந்திருப்பதை கண்டார். அந்த ஜென் துறவி இவரிடம், ”இன்று நீ உன் வீடு திரும்பினால் உன் மனைவி இறந்து விடுவாள், இன்று திரும்பவில்லை என்றால் நீ இறந்து விடுவாய்” என்று கூறினார்.

இதைக்கோட்ட இல்லறவாசி திடுக்கிட்டார். துறவிகளின் வார்த்தைகள் பொய்க்காது என்பதை அறிந்த அவர், தம் மனைவியின் உயிரைக் காக்கும் பொருட்டு அன்று வீடு திரும்புவதில்லை என்று முடிவு செய்தார். காட்டில் விலங்குகள் எந்த நிமிடமும் தன் மீது பாய்ந்து தன்னைக் கொன்று தின்னலாம் என்ற எதிர்பார்ப்புடன் அவர் மிக மெதுவாக, கவனமாக எல்லா திசைகளிலும் கூர்ந்து நோக்கியவாறு நடக்க ஆரம்பித்தார்.


சிறிது தூரம் நடந்தபிறகு, ஒரு மரத்தடியில் சில துறவிகள் அமர்ந்திருக்க தலைமைத் துறவி அருளுரை நிகழ்த்துவதைக் கண்டனர். அந்தத் தலைமைத்துறவி யாரென்று பார்த்தபோது அங்கு புத்தரைக் கண்டார்.


இல்லறவாசி ஆர்வத்துடன் அவரது அருளுரையைக் கேட்டார். உரை நிறைவுற்ற பின்னர், அவர் புத்தரை வணங்கினார். பின்னர் தான் வழியில் ஒருவரைச் சந்தித்ததை விளக்கமாக கூறி, தன்னைக் காக்குமாறு வேண்டினார்.


புன்னகை புரிந்த புத்தர். “எனக்குப் பசியாக இருக்கிறது. ஏதாவது சாப்பிட இருக்கிறதா?” என்று கேட்டார்.


இல்லறவாசி அளவற்ற மகிழ்ச்சியுடன் பையைத் திறக்க முற்பட்டார். ஆனால் புத்தர், அந்தப்பையை அப்படியே தன்னிடம் தருமாறு கேட்டார். இல்லறவாசியும் பையை அப்படியே புத்தரிடம் கொடுத்தார். புத்தர் மெதுவாக பையைத் திறந்து, அதன் உள்ளே இருந்த சிறிய விஷப்பாம்பை வெளியில் எடுத்தார்.


அதைக்கண்ட இல்லறவாசி திடுக்கிட்டான். மதியம் தான் உணவருந்தப் பையைத் திறந்து மரத்தடியில் வைத்திருந்தபோது விஷப்பாம்பு பைக்குள் சென்றிருக்க வேண்டும் என்று இல்லறவாசி புரிந்து கொண்டார். அப்போதுதான் துறவி சொன்னதன் பொருள் அவனுக்குப் புரிந்தது.

(ஒருவர் மரணத்தை எப்போதும் தன்னுடனேயே எடுத்துச் செல்கிறார். சாதுக்கள் தொடர்பு அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்)



2 X 7 = 14 லோகங்கள் யாவை ?

பூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 14 உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் யார் வசிக்கிறார் கள் என்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.


பூமிக்கு மேலே உள்ள 7 உலகங்கள்:-

1) சத்தியலோகம் – பிரம்மன்,

2) தபோலோகம் – தேவதைகள்,

3) ஜனோலோகம் – பித்ருக்கள்,

4) சொர்க்கம் – இந்திரன் மற்றும் தேவர்கள்

5) மஹர்லோகம் – முனிவர்கள்,

6) புனர்லோகம் – கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்,

7) பூலோகம் – மனிதர்கள், விலங்குகள் (ஒன்று முதல் ஆறு அறிவு படைத்த உயிரினங்கள்).

பாதாளத்தில் 7 லோகங்கள் உண்டு. அவை வருமாறு:-

1) அதல லோகம்,

2) விதல லோகம் – அரக்கர்கள்,

3) சுதலலோகம் – அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி,

4) தலாதல லோகம் – மாயாவிகள்,

5) மகாதல லோகம் – புகழ்பெற்ற அசுரர்கள்,

6) பாதாள லோகம் – வாசுகி முதலான பாம்புகள்,

7) ரஸாதல லோகம் – அசுர ஆசான்கள்.


ஏழு வகை பிறப்பு?

1.தேவர்2.மனிதர்3.விலங்குகள்4.பறவைகள்5.ஊர்வன6.நீர் வாழ்வன7.தாவரங்கள்

பாதாள லோகம் ஏழு

அதல

விதல

கதல

தலாதல

மகாதல

பாதாள

ரசாதல லோகங்கள் முறையே

அரக்க

அரசர்கள்

அடங்கா மாயாவிகள்

அச்சுறுத்தும் சர்ப்பங்கள்

ஆகியன வாழுமிடமாம்

அது பூமியின் பாதாள உலகத்திலாம்

Thursday 22 November 2012

STEP OUT TO ACHIEVE

Dear Youth of the World,
A ship is very safe in harbor. Can we keep all the ships just in the harbor always? They have to be taken to dangerous sea-routes if at all they should serve any purpose. We cannot change the powerful under-water currents, or stop storms and tsunamis and ensure a cent per cent safety and security to the seafarers. Great achievements and adventures have been made by talented and courageous people, only in spite of the potential dangers.
Helen Keller has said: “Security is mostly a superstition. It does not exist in nature, nor do the children of men as a whole experience it. Avoiding danger is no safer in the long run than outright exposure. Life is either a daring adventure or nothing.”
When his three cousin sisters died of pregnancies within a period of three months, Govindappa Venkataswamy of Madurai decided to become a gynecological expert and serve womankind. Soon after he came out of the medical school rheumatoid arthritis crippled him. In spite of years of hospitalization, he could come out only with some physical disabilities that disqualified him for gynecology. Any ordinary person would have given up. But Venkataswamy chose the field of ophthalmology and opened an 11-bed eye hospital in Madurai. He needed specially made instruments to suit his crippled hands. But his passion and high spirit enabled him to overcome all those obstacles; in the first year itself, he performed 5000 surgeries! The famous Dr. V now has clinics in which 200000 surgeries are performed in a year! They are one of the largest single-providers of eye-surgery in the world. His clinics are not run on donations or government grants; 70% of the patients do not pay anything or close to nothing for the service. But the clinics are managed profitably. This is because Dr. V has succeeded in making the operations so fast, efficient and cheap! He is confident of extending his service throughout the world by franchising!
Dr. V could not prevent what happened to him; but he faced them boldly and changed his response that has enabled him to serve millions of people in his life time. Praising Dr. V, the authors of Success Built to Last say: With his hands hopelessly crippled, you would think he had earned the right to give up. Instead, Dr. V refused to let that interrupt his commitment to save lives. (Success Built to Last by Jerry Porras, Stewart Emery and Mark Thompson – 2007 – ISBN 978-0-452-28870-6)
Let us also remember the words of John Wooden here: Things turn out best for the people who make the best of the way things turn out.
Those who run away from the scene at the drop of a hat can never become achievers. Only those who decide to fight and carry on can attain success in life.
Wishing you all the best,
T Joseph Benziger

நோ பார்மாலிட்டீஸ் ப்ளீஸ்...!


எண்ணம் போலத்தான் வாழ்க்கை. சரி, இதையும் சொல்றீங்க. அதே நேரம், நடக்கிற எல்லா விஷயங்களும் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டவைன்னும் சொல்றீங்க..? ஒன்னுக்கு ஒன்னு contra ஆகுதே.... கொஞ்சம் புரியும்படியா சொல்ல முடியுமான்னு நண்பர் ஒருத்தர் கேட்டார். 

இறைவன் விதி என்னும் ரூபத்தில் , ஒவ்வொருவரின் எண்ணங்களையும் செயல்களையும் தீர்மானிக்கிறார். அதன் விளைவுகளையும் கூட. ஒருவரது மதி செயல்படக்கூட விதி ஒத்துழைக்கவேண்டும். அவரவர் பூர்வ ஜென்ம வினைகள் விதி ரூபத்தில் இப்படித் தான் விளையாடுகின்றன. எல்லோரும் தான் கஷ்டப்பட்டு வேலை செய்றாங்க. ஆனால் ஒரு சிலர் மட்டும் மேலே மேலே உயர்ந்துவிடுறாங்க. ஆனால், இன்னும் சிலர் அவர் அவர் முயற்சிக்குப் பலன் கிடைக்காம தானே இருக்கிறாங்க. 

அதனால, நம்ம முயற்சிக்கு பலா பலன் குறைவா கிடைக்குதுன்னா, நம்ம கர்ம கணக்கிலே , கொஞ்சம் குறையுதுன்னு நினைச்சிக்கிட்டு , இன்னும் விடாமல் உங்கள் முயற்சியை தொடருங்கள்...! பலன் நிச்சயம். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். அதை நினைத்து வருந்தி பயன் இல்லை இனி நடக்க விருப்பவை மேலும் நம் பாவக் கணக்கில்  சேரா வண்ணம் நம் செயல்கள் அமையட்டும்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற ரெண்டுங் கெட்டான்  நம்பிக்கையின்மை தான் நம்மோட பெரிய  பலவீனம். கடவுள் இல்லவே இல்லை என்று வாதிடும் நாத்திக வாதிகள் கூட, மரண தருவாயில் யாராவது விபூதி கொடுத்தால், உடனே பூசிக் கொள்கிறார்கள் அப்படியாவது மரணம் தள்ளிப் போகாதா என்கிற நம்பிக்கையில். நம்மைப் போன்றவர்களுக்கு சிறிய வயதில் இருந்தே கடவுள் இருக்கிறார் என்றே சொல்லி சொல்லி வளர்த்து இருக்கிறார்கள். இருந்தாலும் மனதில் ஊசலாட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. முழு மனதோடு இறைவனை நம்புபவர்களுக்கு எந்த ஒரு பார்மாலிட்டீஸூம்  தேவையில்லை என்பதை கீழே உள்ள ஒரு சிறிய கதையைப் படிக்கும்போது நீங்கள் உணர முடியும்....



 

எந்த சக்தி நம்மை, இந்த உலகை ,இயக்குகிறதோ  அந்த பரம்பொருளை முழுவதும் பணிந்து - நம் அன்றாட கடமையை செவ்வனே செய்து வந்தாலே , நம் முயசிகள் பலனளிப்பதொடு - அவன் தரிசனமும் கிட்டும். இதுதான் ஒரு கர்ம யோகியின் செயல்...... நாம் அனைவரும் செய்யக் கூடியது இதுதான். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து சந்நியாசம் வாங்கிக் கொள்வது , இயலாத காரியம். ஆனால், அவனை நினைத்தபடியே நம் எல்லா செயல்களும் செய்வது நம்மால் முடியும் காரியம். நம்பிக்கையுடன் முயல்வோம்..!

ரொம்ப நாளைக்கு முன்பு, படித்த இரண்டு கதைகளை , நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். ரொம்ப எளிமையான, அதே சமயம் மனதை விட்டு அகலாத அருமையான கதைகள். இவை, நமக்கு ச் சொல்லும் செய்திகள் ஏராளம்...! படித்துப் பாருங்கள்!

கடவுள் உங்கள் ஊருக்கு வரப்போகிறார். இந்த அசரீரி ஒலியைக்கேட்டதும், மக்கள் அனைவரும் செய்துகொண்டிருந்த வேலைகளையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஊர் எல்லைக்கு ஓடினார்கள். அனைவரும் வழிமேல் விழிவைத்து  கடவுளுக்காகக் காத்திருந்தனர், ஒரே ஒரு 
வேலைக்காரச் சிறுமி மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தானுண்டு தன் வேலை உண்டு என வீட்டு வேலையை கவனமாக பார்த்து கொண்டிருந்தாள். 

கொஞ்சநேரத்தில் காற்றைப் போல், கதிரொளியைப் போல் முதியவர் ஒருவர் உதித்தார் ஊருக்குள்! வெறிச்சோடிக் கிடந்த வீதிகளில் வலம் வந்தார். ஆளரவமற்ற வீடுகளைப் பார்த்துப் புன்னகைத்தார். மெல்ல நடந்தார். ஒரு வீட்டுக்குள்ளிலிருந்து மட்டும் பாத்திரம் உருட்டும் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்தார் முதியவர். கடமை உண்ர்ச்சியுடன் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள் வேலைக்காரச் சிறுமி.

சின்னப் பெண்ணை வாஞ்சையோடு அருகே அழைத்தார் முதியவர். அளவான ஆசையையும், அளவற்ற ஆசியையும் கொடுத்தார். ஊரார் வந்ததும், நான் என் கடமையைச் செய்து கொண்டிருந்தால், கடவுள் எனக்கு தரிசனம் தந்தார் எனக்கூறு..! என்று சொல்லிவிட்டு அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு மறைந்தார். யார் தன் கடமையைச் சரியாக செய்கிறார்களோ அவர்களுக்கு கடவுள் தரிசனம் தருவார்.

நன்றி : தினமலர்
==================================================================

லியோ டால்ஸ்டாய் என்றாலே ரஷிய இலக்கியத்தின் சிறந்த படைப்புகளான ‘போரும் சமாதானமும்’ மற்றும் ‘அன்னா கரீனா’வும் நினைவுக்கு வரலாம். ஆனால் அவருடைய கட்டுரைகளும், சிறுகதைகளும் கூட மிகச்சிறந்தவையும், பொருள் பொதிந்தவையும் ஆகும். உதாரணத்திற்கு அவருடைய ’மூன்று ஞானிகள்’ என்ற சிறுகதையைச் சொல்லலாம்.

ஒரு பிஷப் பாதிரியார் பல யாத்திரிகர்களை அழைத்துக் கொண்டு கடல்கடந்து இருக்கும் ஒரு புனிதத்தலத்திற்குக் கப்பலில் செல்கிறார். கப்பலில் செல்கையில் அந்தப் புனிதத்தலத்திற்குப் போகும் வழியில் உள்ள ஒரு தீவில் மூன்று மகத்தான ஞானிகள் இருப்பதாக சிலர் பேசிக் கொள்வதைக் கேட்டார். மனித குலத்தின் மேம்பாட்டுக்காக அந்த ஞானிகள் சதா சர்வகாலம் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் சொல்லவே பிஷப்பிற்கு அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. கப்பல் கேப்டனிடம் அவர் அந்தத் தீவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார். அந்தத் தீவின் கரை வரை கப்பல் செல்ல முடியாதென்றும், தீவருகே சென்று ஒரு படகில் தான் அங்கு செல்ல முடியும் என்றும் கூறிய கேப்டன் அவரை மனம் மாற்றப் பார்க்கிறார். ஆனால் பிஷப் தன் விருப்பத்தில் உறுதியாய் இருக்கவே கேப்டன் ஒத்துக் கொள்கிறார்.

அந்தத் தீவிற்கு சற்று தொலைவில் கப்பல் நிற்க படகு மூலம் அந்தத் தீவிற்கு ஆவலுடன் பிஷப் பயணிக்கிறார். ஆனால் தீவில் மூன்று ஞானிகளைக் காண்பதற்குப் பதிலாக அவர் கண்டது கந்தலாடைகள் அணிந்த வயதான மூன்று கிழவர்களைத் தான். பிஷப்பின் உடைகளைப் பார்த்து அவர் மிக உயர்ந்த நிலையில் உள்ள பாதிரியார் என்பதைப் புரிந்து கொண்ட கிழவர்கள் அவரை பயபக்தியோடு வரவேற்று உபசரிக்கின்றனர்.

அவர்களிடம் சிறிது நேரம் பேசியவுடனேயே அவர்கள் மூவருக்கும், கல்வியறிவோ, பைபிள் பற்றிய ஞானமோ இல்லை என்பது பிஷப்பிற்குத் தெரிந்து விட்டது. இந்த படிப்பறிவில்லாத கிழவர்களைப் போய் ஞானிகள் என்று சொல்லித் தன் ஆவலை வீணாகத் தூண்டி விட்டார்களே என்று எண்ணிய பிஷப் அவர்களிடம் நீங்கள் எப்படி பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கேட்டார்.

“நாங்களும் மூவர். நீங்களும் மூவர். எங்கள் மீது கருணை காட்டுங்கள்” என்று சொல்லி பிரார்த்தனை செய்கிறோம்” என்று மூன்று கிழவர்களும் பணிவுடன் சொன்னார்கள்.

அவர்கள் நீங்கள் மூவர் என்று சொன்னது கர்த்தர், பிதா, பரிசுத்த ஆவியைச் சேர்த்துத் தான்.

பிஷப் திகைப்படைந்தார். “இது என்ன பிரார்த்தனை. இப்படியுமா பிரார்த்தனை செய்வார்கள்” என்று அவருக்கு தோன்றியது.

இவ்வளவு தூரம் வந்து இவர்களின் அறியாமையை அறிந்த பின் அவர்களுக்கு எப்படிப் பிரார்த்தனை செய்வது என்று சொல்லித் தருவது தன் கடமை என்று உணர்ந்த பிஷப் அவர்களுக்கு முறைப்படியாக பிரார்த்தனை செய்வது எப்படி என்பதைக் கற்றுத் தந்தார். அவர் அவர்களது அறிவுக்கேற்ப எளிய பிரார்த்தனையை தான் கற்றுத் தந்தார் என்றாலும் அதைக் கற்கவே அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். இத்தனை வருடங்கள் ஒரு வரி பிரார்த்தனை செய்து வந்த அவர்களுக்கு சில வரிகள் கொண்ட புதிய பிரார்த்தனை சிரமமாக இருந்ததில் ஆச்சரியம் இல்லை அல்லவா?

எப்படியோ அவர்களுக்கு முறைப்படி கற்றுத் தந்த பிஷப் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு படகு மூலம் கப்பலுக்குத் திரும்பினார். அவர் கப்பலை நெருங்கிய சமயத்தில் அந்த மூவரும் அவர் படகை நோக்கி ஓடோடி வந்தார்கள். “ஐயா எங்களை மன்னியுங்கள். எங்களுக்கு மீண்டும் தாங்கள் சொல்லித் தந்த பிரார்த்தனை மறந்து விட்டது. இனியொரு முறை சொல்லித் தருவீர்களா?”

தரையில் ஓடி வருவது போல கடலில் சர்வ சாதாரணமாக ஓடி வந்த அவர்களைப் பார்த்த பிஷப் பிரமித்தார். அவர்களை சிரம் தாழ்த்தி வணங்கி சொன்னார். ”நீங்கள் இது வரை செய்து வந்த பிரார்த்தனையையே தொடர்ந்து செய்யுங்கள் பெரியோர்களே. உங்களுக்கு வேறெந்த பிரார்த்தனையும், போதனையும் தேவையில்லை. முடிந்தால் தயவு செய்து எனக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்”

பிஷப்பே பழைய பிரார்த்தனையை தொடர்ந்து செய்தால் போதும் என்று அனுமதி அளித்து விட்ட திருப்தியில் அந்த மூவரும் அவரை வணங்கி விட்டு நிம்மதியாகத் தங்கள் தீவிற்குத் திரும்பினார்கள். அவர்கள் சென்ற திசையில் ஒரு பொன்னிற ஒளியை அந்தக் கப்பலில் இருந்த அனைவரும் கண்டார்கள்.

எந்த வழிபாட்டையும், பிரார்த்தனையையும் புனித நூல்களில் சொல்லப்பட்ட விதங்களை பின்பற்றியோ, முன்னோர் பின்பற்றி வந்த சம்பிரதாயங்களை பின்பற்றியோ, முறையான சடங்குகள் என்று நாம் நம்பி வருவதை பின்பற்றியோ செய்தால் தான் அது இறைவனை எட்டும் என்ற நம்பிக்கையில் தான் பெரும்பாலானோர் இருக்கின்றனர். பெரும்பாலான மதத்தலைவர்களும் அப்படியே தான் மக்களை வலியுறுத்துகின்றனர்.

ஆனால் பிரார்த்தனைகளின் மகத்துவம் சடங்கு, சம்பிரதாய வழிகளில் பின்பற்றப்படுவதில் இல்லை. அது ஆத்மார்த்தமாகவும், நம்பிக்கையுடனும், பக்தியுடனும் செய்யப்படுவதிலேயே தான் இருக்கின்றது. எல்லா மதங்களிலும் இந்த செய்தி பிரதானமாகச் சொல்லப்படுகின்றது.

நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் இதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். கண்ணப்ப நாயனார் வழிபட்ட விதம் சம்பிரதாயத்தைப் பின்பற்றியது அல்ல. ஆண்டாள் வழிபட்ட விதமும் அப்படியே. சபரியின் பக்தியும் அப்படியே. இறைவன் செவிமடுத்து வந்த பிரார்த்தனைகள் பெரும் பண்டிதர்களுடைய பிரார்த்தனைகளாக இருந்ததில்லை. நீண்ட சொல்லாடல்கள் நிறைந்ததாக இருந்ததில்லை. மாறாக அவை தூய்மையான, எளிமையான நெஞ்சங்கள் பெரும் பக்தியோடு செய்யப்பட்ட மனமுருகிச் செய்த பிரார்த்தனைகளாக இருந்திருக்கின்றன.

தருமி என்ற தரித்திரப் புலவனும், கண்ணப்பன் என்ற வேடுவனும், வந்தி என்ற பிட்டு விற்கும் கிழவியும் பிரார்த்தனையால் இறைவனைத் தங்களிடமே வரவழைத்த கதைகள் நாம் அறிவோம். டால்ஸ்டாய் சொன்ன அந்தக் கதையிலும் தேவாலயங்களில் முறைப்படி நீண்ட நேரம், நீண்ட காலம் முறைப்படி பிரார்த்தனை செய்தும் ஒரு பாதிரியார் அடையாத நிலையை ஒரு வேடிக்கையான வாசகத்தைப் பிரார்த்தனையாகச் சொல்லி வந்த மூன்று கள்ளங்கபடமற்ற கிழவர்கள் அடைந்ததைப் பார்த்தோம்.

எனவே உங்கள் பிரார்த்தனைகள் எளிமையாக இருக்கட்டும். அவை உண்மையாக இருக்கட்டும். அவை நியாயமானவையாக இருக்கட்டும். அவை இதயத்தின் ஆழத்தில் இருந்து வருபவையாக இருக்கட்டும். நீண்ட பிரார்த்தனைகளிலும், சடங்கு, சம்பிரதாயங்களிலும் அதிகமாய் கவனம் செலுத்தாமல் மனத்தூய்மையுடனும், பக்தியுடனும் பிரார்த்தித்தால் உங்கள் பிரார்த்தனைகள் என்றுமே வீண் போகாது.

இந்த அருமையான கதையை இணையத்தில் பதிவேற்றிய திரு என். கணேசன் அவர்களுக்கும் ஈழ நேசனுக்கும் மனமார்ந்த நன்றி!

உங்கள் முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய தடைக் கல்?

உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தால் முதலில்
அதை நீங்கள் ஒழிக்கவேண்டும்.
தாழ்வு மனப்பான்மைதான் உங்கள்
முன்னேற்றத்திற்கான மிகப் பெரிய தடைக் கல்லாகும்.



தாழ்வு மனப்பான்மை ஒருவரது தன்னம்பிக்கையைத் தகர்த்து எறிந்து விடும்.
எதையும் தோல்விகரமான மனப்பான்மையிலேயே எண்ணத் தோன்றும்.
சிலர் வறுமையான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள்.


பள்ளியில் படிக்கும்போதும் சரி கல்லூரியில் படிக்கும்போதும் சரி
இவர்கள் வசதியான பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கும்.
வசதியான பிள்ளைகள் அணிந்திருக்கும் உடைகள், செலவு செய்யும் மனப்பான்மை,
உணவுப் பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மனதைப் பெரிதும் காயப்படுத்தி இவர்களுடைய
தன்னம்பிக்கையை இழக்க வழி செய்கிறது. அதுவே அவர்களிடத்து  தாழ்வு மனப்பான்மை உண்டாகக் காரணம் ஆகிறது.


இந்தத் தாழ்வு மனப்பான்மை காலப்போக்கில் மற்றவர்கள் தங்களை
மதிக்க வேண்டும் பாராட்ட வேண்டும் என்ற ஆசையினால்
நியாயத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள்.


காலப்போக்கில் உண்மை தெரிந்த உடன் மிகவும் மனம் நொடிந்து
போய் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அவ நம்பிக்கையுடன் ஈடு படுகின்றனர்.


தாழ்வு மனப்பான்மை உங்கள் தோற்றத்தையே மாற்றி
மற்றவர்கள் உங்களை வெறுக்கும் அளவுக்கு செய்து விடும்.


சிலருக்குப் படிக்கும் காலத்திலேயே தாழ்வு மனப்பான்மை
உண்டாகிவிடும்.  அதன் விளைவாகச் சரியாகப் பாடங்களில்
கவனம் செலுத்தமுடியாமல் போய் குறைவான மதிப்பெண்
எடுப்பார்கள். மனம் நொந்து போய் இனி நம்மால் அதிக
மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்ற தவறான முடிவுக்கு
வந்து விடுவார்கள்.


பள்ளியில் நன்றாகப் படிக்காத எத்தனையோ பேர் நாட்டில்
முதல் மந்திரிகளாகவும் பிரதம மந்திரிகளாகவும் இருந்துள்ளார்கள்.
இதற்க்கு சரியான உதாரணம் மறைந்த பெருந்தலைவர்
காமராஜர் ஆவார்கள்.


பள்ளிப் படிப்பு என்பது ஒருவருடைய  வாழ்க்கையை ஓரளவு தான்
நிர்ணயம் செய்யும். ஒருவருடைய  வளமான வாழ்க்கையைத் தீர்மானம்
செய்ய வாழ்க்கையில் எத்தனையோ வழிகள் உள்ளன.


பிறக்கும் குழந்தைக்குத் தாழ்ந்தவரா உயர்ந்தவரா என்று தெரியாது.
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் சுய நலம் உள்ள
மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை.
படைப்பில் எவரும் உயர்ந்தவர் அல்ல தாழ்ந்தவர் அல்ல.
அனைவருமே சமம். 


இது போன்று தாழ்வு மனப்பான்மை உண்டாகப் பல காரணங்கள்
கூறலாம். தாழ்வு மனப்பான்மையை உங்கள் மனதிலிருந்து
விரட்ட வேண்டும் என்றால்
முதலில் நம்பிக்கை எனும் விதையை உங்கள் மனதில்
விதிக்க வேண்டும்.


நாம் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்ற நம்பிக்கை விதையை
மனதில் ஊட்டித் தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து எறியுங்கள்.  


நம்பிக்கை எனும் விதையை ஊட்டுவதற்குத் தியானம்
பெரிதும் உதவுகிறது. தியானம் எனும் அறிய கலையின் மூலமாக
தாழ்வு மனப்பான்மையினைத் தகர்த்து எறியலாம்.


தியானம் செய்வதின் மூலமாகச் சிந்தனைத் திறன் சரியாக
வேலை செய்து நாம் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்ற உண்மையினை
உணரச் செய்து  ஒருவரது மனதில் இருந்து தாழ்வு மனப்பான்மையினை தூக்கி எறியச்  செய்கிறது.

ஆறுவது சினம்; சீறுவது அல்ல

இன்னல்களை ஏற்படுத்திவிடும் கோபத்தின் கெடுதி உணர்ந்தே பெரியோர் பலரும் ‘கோபம் தவிர்! கோபம் தவிர்!’ என்று சொல்கிறார்கள். பாரதியும் அதைப் ‘பழகு’ என்றுதான் சொல்கிறான். பழக்கமில்லாவிட்டால் ஏடாகூடமாய்ப் பாய்ந்துவிடும்@ நம்மையும் சேர்த்தே குதறிவிடும் என்பதுதான். அதனால்தான் ‘சீறுவதல்ல, ஆறுவதே சினம்’ என்றிருக்கிறார்கள்.

அடுத்த வீட்டுக்காரனிலிருந்து அமெரிக்காவின் நடவடிக்கைகள் வரை நமது கோபத்துக்குத் தீனி போடப் பலப்பல உண்டு. அந்த நெருப்பினால் நாமும் நம்மோடு பிறரும் வெந்து விடாமல் பார்த்துக்கொள்ளத் தெரிய வேண்டும். தனிப்பட்ட கோபமாக இருந்தாலும் சரி சமூகக் கோபமாக இருந்தாலும் சரி அதன் பாதிப்புகள் விளைவுகளை நாம் உணர்ந்திருக்க வேண்டும்.இலக்கிய உதாரணங்களில் பார்த்தால் கூட, கோபம், அதற்கு ஆளாகியவர்களையும் அழித்து, கோபப்பட்டவர்களையும் அழித்தே அடங்கியிருக்கிறது. அப்படியொரு முதுசமாக நமக்குள் வந்திருக்கும் கோப-வன்முறை உணர்வுகளை, மனிதர்கள் இன்று அடைந்திருக்கும் நாகரிக வளர்ச்சியுடன் பொருத்தி ஆராய்ந்த பிறகே பொங்க வேண்டும். அதே பழைய ‘பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம்’ வகையறாக்களுடன் வீர, ரோச வெறிகளைப் பொங்க விடுவது…. பத்தாயிரம் வருட நாகரிக வளர்ச்சிக்குப் பின்னான இன்றைய மனிதனுக்குரிய இயல்போ விவேகமோ அல்ல.

“போர்த் தொழில் விந்தைகள் காண்பாய், ஹே! பூதலமே” என்ற பார்த்தனின் முழக்கத்தோடு எழுந்த பாண்டவர்களின் கோபம் கௌரவர்களை மட்டும் அழித்து அடங்கிவிடவில்லை. பாண்டவர் தரப்பையும் மிச்சம் விடாமல் அழித்துவிட்டே ஓய்ந்தது என்பதே உண்மை.

“பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடொழிப்பேன் மதுரையும்….” என்று பொங்கிய கண்ணகியின் கோபம் ஒரு நகரையே அழித்துவிட்டே ஓய்ந்தது.

“….உலகங்கள் வீயுமாறும் திக்குடை அண்ட கோளப் புறத்தவும் தீந்து நீரின் மொக்குளின் உடையுமாறும் காண் என முனியும் வேலை” என்று கோபத்தில் உலகை அழித்துவிடத்தான் துடிக்கிறது ராமனின் வீரமும்! “ஆராயாமல் மாயமானின் பின் சென்ற குற்றம் உங்களுடையது. குலத்துக்கே நாசம் உண்டாக்கியதில் பாதிப்பங்கு குற்றத்தை உங்களிடமே வைத்துக்கொண்டு சும்மா கோபவெறி கொள்ளுதல் தப்பு” என்று சடாயு எடுத்துரைப்பதாகக் கம்பன் பாடுகிறான்.

குலத்துக்கே நாசம் விளைவிக்கும் கோபத்தை யாரும் சரி என்று கொண்டாட முடியாது. அப்படிக் கொண்டாடுதல் முழுக்க முழுக்க சுயநலத்தின் பாற்பட்டதே.

கோபமும் வீரமும் வெகுமக்களின் அழிவைக் கொண்டுவருவதாக அமையும்போது, அது பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோபமாக இருந்தால் கூடப் பாராட்டப்பட முடியாத ஒன்றே. மக்களைக் காக்கின்ற வகையில் அந்தக் கோபத்தை ஒத்திவைப்பதோ அல்லது வேறுவழியில் சாதித்துக் கொள்வதற்கான புத்திசாலித்தனத்தைப் பிரயோகிப்பதோதான் நெஞ்சில் சமூக அக்கறை இருப்பவர்களின் எண்ணமாக இருக்கும்.

இத்தனை ஆண்டுகால மனித அறிவு வளர்ச்சியில், இந்த நிலையை வந்தடைய முடியாதவர்கள் வெறும் ஆதிமனித அழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் குழுவாகவே ரோசத்தில் தீய்ந்தழிவதைத் தடுக்க முடியாமற் போகும்.


--


      
          

kaRRadhum suTTadhum-sAlaGramam

This word has become extinct.  The most precious way of offering our Poojas is this.  It is one of the inseparable pooja in any staunch Hindu devotee.  To know more about in Tamil


பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம். இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல் ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது. பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது. 
இங்கு சக்ரதீர்த்தம் என்னும் இந்தப் பகுதி தான் சாளக்கிராமம்  என்றழைக்கப்படுகிறது.
இந்த ஹரி சேத்திரத்தில் உள்ள சகல கற்களிலும், (குளிர், காற்று இவைகளில்லாமல் அமைந்துள்ள ஸைலகர்ப்பத்தில்) விஷ்ணுவின் சகல  அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது.
சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.
சாளக்கிராமத்தின் சிறப்பு : சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு. சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள். சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம்.
சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும்.
1. ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண சாளக்கிராமம்.
2. நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிறாமம்,
3. இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம்.
4. இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன சாளக்கிராமம்.
5. வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம்.
6. விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது தாமோதர சாளக்கிராமம்.
7. மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்.
8. விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம்.
9. பதினான்கு சக்கரங்களும் கொண்டது ஆதிசேட சாளக்கிராமம்.
10. சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதன சாளக்கிராமம்.
11. ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம்.
12. மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம்.
13. இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ஹயக்ரீவ சாளக்கிராமம்.

14. இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம்.
15. துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது வாசுதேவ சாளக்கிராமம்.
16. சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன சாளக்கிராமம்.
17. விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது அநிருத்த சாளக்கிராமம்.
இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும்.   சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும்.
12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்விய தேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர்.   12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன.   வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.
நீலநிறம்     - செல்வத்தையும், சுகத்தையும் தரும்
பச்சை          - பலம், வலிமையைத் தரும்
கருப்பு          - புகழ், பெருமை சேரும்
புகைநிறம் - துக்கம், தரித்திரம்.
சாளக்கிராமம் என்பது என்ன?



அற்புதங்கள் நிறைந்த சாளக்கிராமம்!

ஒவ்வொரு கோவில்களிலும் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிகளுக்கு தான் வழிபாடு , திருவிழாக்கள் நடத்தப்படுவதை அறிந்திருப்போம். மூலஸ்தானத்தில் சாளக்கிராமம் என்ற ஒரு தெய்வீக கல்லுக்கு பூஜை நடப்பதை யாரும் அறிந்து இருக்க மாட்டார்கள்.   இந்த சாளக் கிராமம் நேபாளம் முக்திநாத் கோவில் அருகில் கண்டேகி நதியில் மட்டுமே உருவாகுகிறது. இதில் தான் சுவாமி குடியிருப்பதாக ஐதீகம். பெருமாள் கோவில்களில் இதை சாளக் கிராமம் என்றும், சிவன் கோவில்களில் பானலிங்கம் என்றும், விநாயகர் கோவிலில் சோனபத்ரம் என்றும் அழைக்கிறார்கள்.   இந்த சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி உள்ளதாம். பக்தர்கள் இறைவனை வேண்டி துளசி செடியை கண்டேகி ஆற்றில் போட்டு கைகளை விரித்து தண்ணீரில் மூழ்கியபடி நின்றால் தங்களுக்கு இறைவனின் அருள்படி சாளக் கிராமம் கிடைக்கும் என்கிறார்கள்.   நம் வீட்டிலும் இந்த சாள கிராமத்தை வைத்து வழிபடலாம். 12 சாளக் கிராமங்கள் இருந்தால் அந்த வீட்டில் பெருமாளே குடியேறி இருப்பதாக ஐதீகம்.