Thursday 9 November 2023

நிலை பெறுமாறு எண்ணுதியேல்.. –

 

நிலையான ஒன்றை வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்....?

செல்வம் – வரும் போகும்...

ஆரோக்கியம் – இன்று வரும் நாளை  போகும்

சுற்றவும் உறவும்.....ரயில் பிரயாணம் போல....

மனமோ – ஒரு நொடிக்கு ஓராயிரம் நினைவுகள்.

வாலிபம், சடார் என்று ..... முதுமை

 

இங்கு சற்று நின்று திருப்புகழை யோசிப்போம்

 

முதுமை பற்றி திருப்புகழ் நிறைய சொல்கிறது......

“மனையவள் நகைக்க, ஊரின் அனைவரும் நகைக்க, லோக மகளிரும் நகைக்க......”

என்று ஒரு திருப்புகழ்.... இதன் அர்த்தம்... “வயசாகி விட்டது, நோய் வந்து படுத்து விட்டோம்.. மனைவி நகைக்கிறாள். ஆசையாக நம்முடன் கூடி, அளவளாவிய மனைவி, நக்கல் அடிக்கிறாள்.  எப்படா கூடாரம் காலியாகும் என்று பார்க்கிறாள்”

இதில் மூன்றாவது வரி. லோகத்தில் உள்ள மகளிரும் நகைக்க. என்ற அர்த்தத்தில் ஒரு வார்த்தை வருகிறது. அருணகிரிநாதர், மிகவும் அனுபவத்துடன் இந்த வரியை எழுதுகிறார்.

லோகத்தில் வேறோரு பெண், நமக்குத் தெரியாதவள், நம் நிலைமையைப் பார்த்துச் சிரித்தால்,.. நமக்கு எப்படி இருக்கும். கூனிக் குறுகி போவோம்.  ஒரு ஆண், எந்த வயதாக இருந்தாலும், ஒரு பெண்ணிடம், பந்தா காட்டாமல் இருக்க மாட்டான். ஏதோ ஒரு வகையில்.

அப்படிபட்ட ஒரு பெண். நம்மைப் பார்த்து நகைத்தால். அது கொடுமை.

திரும்பவும் தலைப்புச் செய்திக்கு வருவோம்

இங்கு அப்பர் என்ன சொல்கிறார் என்றால்....

நிலை பெற வேண்டும் என்றால், நிதமும் கோவிலுக்குப் போ,

புலவர்கள் முன் உட்கார்ந்து, அவர் சொல்லும் கருத்துக்களை மெய் மறந்து கேள்.  தலை ஆரக் கும்பிடு.  கூத்து ஆடு. சங்கரா சங்கரா  என்று பிதற்று. ....என்கிறார்

தேவராம்:

நிலை பெறுமாறு என்னுகியேல் . நெஞ்சே நீ

வா. நித்தலும் எம்பிரானுடைய கோவில் புக்கு.

புலவர் தன் முன் அலகிட்டு, மெழுகும் இட்டு, பூமாலை

புனைந்து எத்தி, புகழ்ந்து பாடி, தலை ஆரக் கும்பிட்டு,

கூத்தும் ஆடி, சங்கரா ஜெய ஜெய போற்றி போற்றி என்றும்

அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ.....

 

Friday 25 August 2023

இன்றும் நான் காதலிக்கும் படம்

 

பிப்ரவரி 1964  இல் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது. அது அந்தக் கால இளைஞர்களை கட்டிப் போடுகிறது. ஒவ்வொரு காட்சியும் ஈஸ்ட்மேன் கலரில் செதுக்கப்பட்டு ஜொலிக்கிறது. வலுவான கதை என்று ஒன்று இருந்தே ஆகவேண்டும் என்று இருந்த காலத்தில், கொஞ்சம் கதை, நிறைய காமெடி, அசத்தலான மியூசிக் என்று விகிதாசாரத்தை பிரித்து வெளிவந்த படம். இன்று வரை பிரமிப்பையும், காதலையும் எனக்கு தந்து கொண்டு இருக்கும் படம். அது- காதலிக்க நேரமில்லை.

வாலி சொல்லுவார். சினிமா என்பது ஒரு டைரக்டர் ன் முயற்சி தான். எந்த கதையையும் ஒரு நல்ல டைரக்டர் மிக அழகாக செதுக்க முடியும். இசையோ, நடிகர்களோ மற்றவர்கள் பங்களிப்பு அப்புறம் தான். – எனக்கு இதில் உடன்பாடு உண்டு. 

இந்த வருடம் வந்த சில படங்கள்.  ஆண்டவன் கட்டளை, படகோட்டி, கர்ணன, வேட்டைக்காரன்.. இப்படிப் பார்த்தால் தான் கா.நே படத்தின் அருமை புரியும்.

நானும் இந்த வருடம் தான் பிறந்தேன். அதனால் நானும் இந்தப் படமும் அறுபது வயதில் குதித்து இருக்கிறோம்.

இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெரும் என்று அந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீதர் கூட நினைத்து இருக்க மாட்டார். இந்தப் படம் காரில் உட்கார்ந்து எழுதப்பட்ட கதை. பீச் ல் உட்கார்ந்து எழுதிய கதை, நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற ஒரு சீரியஸ் படம் எடுத்த பிறகு, ஒரு ஜாலியான படம் எடுக்க வேண்டும் என்று தோன்றி, பிறந்த கதை. – இதெல்லாம் செவி வழி செய்தி.

இந்தக் கதையெல்லாம் இருக்கட்டும்......

நான் சிறுவயது முதல் பார்த்த பல படங்களில் இன்றும் என் நெஞ்சை விட்டு அகலாத படங்கள் வெகு சில. அதில் முதாவதாக இருப்பது கா. நே. தான். தில்லானா மோகனாம்பாள், எங்க வீட்டுப் பிள்ளை போன்றவை மற்ற சில.

கா. நே எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதபடம். அருமையான பாடல். விஸ்வநாதன் ராமமூர்த்தி உச்சத்தில் இருந்த காலம். ஸ்ரீதர் – வி,ரா இணைந்து வழங்கிய பல படங்களில் இது உச்சத்தின் உச்சம் என்பேன்.

1964 ல் இப்படி ஒரு கற்பனை, இப்படி ஒரு சினிமா பார்வை என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஒரு முழு நீள காமெடி என்று சில படங்கள் இதற்கு முன்பு வந்தாலும் கூட. கா.நே . ஒரு நெத்தி அடிபடம்.  முத்துராமன், பாலையா போன்ற பழைய நடிகர்களைத் தவிர, மற்ற எல்லோரும் புது முகம். நாகேஷ் புது முகம் என்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்த யாரிடம் கேட்டாலும் அவர்கள் உடனே சொல்வது பாலையாவிடம், நாகேஷ் கதை சொல்லும் காட்சி தான். என்னை கேட்டால் இதை கடைசியில் தான் வைப்பேன். பல “அழகுகள்” இந்தக் கதையில் உண்டு.

 முதல் அழகு: முதல் சீனிலே, சித்திரம் போன்று வரைந்து அது நிஜமாகி, முத்துராமன் காஞ்சனாவாக உருப்பெற்று, சென்னை பீச் ல் டான்ஸ். “என்ன பார்வை” என்ற பாடல் யேசுதாஸ், பி. சுசீலா.. இந்தப் பாடல் முழுவதும் இளமை பொங்கி வழியும். கடந்த ஐந்து வருடங்களில், இப்படி ஒரு அழகான காதல் பாட்டு ஒரு இருந்தால் சொல்லுங்கள். இந்த பாடல் முழுவதும். இருவரும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். பின்புல விசுவல் மிகவும் பிரமாதமாக இருக்கும்

இந்தப் பாடலில் ஒரு சீனில், காரில் \முத்துராமன் வர. கார் நடு   கண்ணாடியில் (Centre Mirror)  காஞ்சனா முகம் தெரியும் இன்னொன்று, ஒரு ஆச்சர்யமான அழகு. அந்தக் கார் தானாகவே மூடிக்கொள்ளும். கிராமத்தில் இருந்து  வந்த எனக்கு, இந்தக் காட்சியெல்லாம் அப்படியே போட்டோ மாதிரி ஒட்டிக்கொண்டுவிட்டது. 1967 ல் கே. பாலச்சந்தர், அனுபவி ராஜ அனுபவி படம் எடுக்கும்போது, இப்படித்தான், நாகேஷயும், முத்துராமனையும், ஸ்டில் போட்டோ மாதிரி காட்டி. “அழகிருக்குது உலகிலே” பாட்டைப் போட்டு இருப்பார்.

இரண்டாம் அழகு – ரவிச்சந்திரன், “உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா” என்ற பாடல் பாடும் சீன்.  இது காஞ்சனாவையும், ராஜஸ்ரீ யையும் பார்த்து பாடுவதாக அமைந்த பாடல். இதில் முதல் சீனில், ஒரு காரை தலை கீழாக காண்பிப்பார். பிறகு ரவிச்சந்திரன் அந்தப் பாடலை பாட ஆரம்பிப்பார்.  இது ஒரு புது யுக்தி. ரவிச்சந்திரன், காரில் பானெட்டில் தலை கீழாகப் படுத்து இருப்பார். அவர் அந்தப் காரை பார்ப்பது போல் (தலை கீழாக) காண்பித்து இருப்பார் டைரக்டர். அந்தக் காலத்தில் இது எத்தனை பேருக்குத் தோன்றும்.

பிறகு, பாட்டில் கூட, முத்துராமனுக்கு,  கே.ஜே.யேசுதாஸ்,   ரவிச்சந்திரனுக்கு, பீ.பி. ஸ்ரீநிவாஸ்/  அதில் கூட ஒரு நேர்த்தி. “காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை” சாமியார் பாட்டு என்பதால் சீர்காழி. சீர்காழி யின் பாட்டை இவ்வளவு காதலுடன் யாரும் பாடி இருக்கமுடியாது.

  பிறகு. நாகேஷ் பாத்திர வடிவமைப்பு. அவர் பேசும் வசனம்..

உன் பேர் என்ன ?

மீன லோசனி

மீன ?

லோசனி

இனிமேல் உனக்கு லோஷன் எதுவும் வேண்டும். வெறும் மீனாதான்.

இன்னும் ஒன்று

மீனா. உனக்கு சினிமாவில் நடிக்க இஷ்டமா ?

ஆமா சார், நான் கலைக்கு சேவை செய்ய ஆசைப் படறேன்.

அத இப்ப சொல்லாத, அடுத்த படத்துக்கு ஒன்கிட்ட,  நொந்து போய் ஒரு producer வராம் பார் அவன்ட சொல்லு.

இன்னும் ஒன்று

சார். நீங்க படம் எடுத்து முடிக்கறதுக்குள்ள நான் கிழவி ஆயிடுவேன்.

ஆனா என்ன. ஒன்ன வச்சு அழகா, கலர்ல அவ்வையார் படம் எடுக்கிறேன்....

இப்படிப் பல “டான் டான்” வசனங்கள்...

இந்தப் பாடத்தில் இன்னொரு அழகு, ஒவ்வொரு சீனையும் தனித்தனியாக ரசிக்கலாம், சேர்ந்தும் ரசிக்கலாம். உதாரணமாக, ரவிச்சந்திரன்-நாகேஷ் கதை சொல்லும் காட்சி, சாப்பிடும் இடத்தில், பாலையா-நாகேஷ் வசனம்.

நாகேஷ்-பாலையா விடம் கதை சொல்ல, அதை வேர்த்து, விறுவிறுக்க, கண்ணில் மிரட்சியுடன் கேட்கும் பாலையா. அசகாய சூர நடிப்பு.

என்ன பார்வை பாட்டை வேகமாக ஊட விட்டால், “மலரென்ற முகம்” ஒன்று பாட்டின் சாயல் தெரியும். ஆனால் வி.ரா.. இசை ஜோடி அவர்கள் ஜித்தர்கள். 60 களிலும்   70 களிலும் அவர்களின் இசை மூலமாக என்னை வாழ வைத்த தெய்வங்கள்.

நான் படித்த பள்ளியிலும் சரி, மேற் படிப்பு படித்த திருச்சி யிலும், சரி, எத்தனை முறை இவர்கள் இசை அமைத்த பாடலகளை கேட்டு இருப்பேன். கர்நாடக சங்கீதம் என் வாழ்க்கையில் புகுந்து “கோலோச்சியதர்க்கு” முக்கிய காரணம் வி.ரா அவர்களின் மெல்லிசைதான்.  அதனால்தான், விஸ்வநாதன் அவர்களின் மறைவின் போது “எங்கேயும் எப்போதும், சங்கீதம் சந்தோஷம்” என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

தமிழ் தந்த தவப் படம் இது, தவப் புதல்வர்கள் ஸ்ரீதரும், விஸ்வநாதன் ராமமுர்த்தி அவர்களும்.

இந்தப் பதிவில் கண்ணதாசனைப் பற்றிக் குறிப்பிடவில்லை.  அவரைப் பற்றி என்ன என்று எழுத !!! எங்கள் இளமைப் பருவத்தை இனிமையாக்கியவர். 

“கால் நடந்த நடையிலே, காதலையும் அளந்தாள்”.

“அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனசு”

எண்ணிரெண்டு பதினாறு வயது, பாடலின் வரியில் வரும் வரிகள். ஏதோ ஒரு நிலையில், ஒவ்வொரு ஆண்மகனும், மேலே சொன்ன வரியை அனுபவித்து கடந்து போய் இருப்போம்.....

இந்த ரெண்டு வரியும் போதும்.  திருவள்ளுவராவது ஒன்று அரை  வரி எழுதி விளக்கினார்.  கண்ணதாசன் ஒரே வரி தான். 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Monday 12 June 2023

திருப்ப்கழ் என்ற ஒரு அமிர்தம் - பாகம் 1

 

பாகம் 1- தடிநிகர் அயிற்கடாவி.....

என்று ஒரு தமிழ் வார்த்தை இருக்கிறது. திருப்புகழில்.

 

தமிழை நேசிப்பவருக்கு திருப்புகழை நேசிக்காமல் இருக்க முடியாது. இந்த ஜன்மத்தில் திருப்புகழை நாம் படித்து விடவேண்டும். ராகம் தெரிந்தால் ராகத்தோடு பாடி விடவேண்டும். இல்லாவிட்டால் தமிழ் தெரிந்து இந்த ஜன்மம் வேஸ்ட்.....

 

நமக்கு மிகவும் தெரிந்த, “முத்தைத் திரு” பாட்டை எடுத்துக் கொண்டால், ஏதோ, ‘அகத்திக் கீரை” என்ற வார்த்தையெல்லாம் வருகிற மாதிரி இருக்கும். ஆனால் நிஜ அர்த்தமே வேறு.

 

இந்த தமிழகம், தமிழ் நாடு, என்று அரட்டை அடிப்பவர்களுக்கு, ஒரு நாலு திருப்புகழைப் பார்த்து படியுங்கள் என்று சொன்னால் போதும். பிறகு அப்படி ஒரு வாக்குவாதமே இருக்காது.

 

எனக்குத் தெரிந்தவரை, திருப்புகழ் ஒரு குழந்தை.  முருகனே ஒரு ஞானக்குழந்தை. அதனால் அவருடைய பாடலும் அப்படியே. அருணகிரிநாதர் போன்று ஒருவர் அவதரித்து நமக்குக் கொடுத்த அற்புதமான பொக்கிஷம் இது.

 

வள்ளி மலை சச்சிதானந்த ஸ்வாமிகள் பற்றி ஒரு கதை உண்டு. அவர் திருப்புகழுக்காக தம் வாழ் நாளை அர்ப்பணித்தவர்

 

பீ.எஸ். கிருஷ்ண அய்யர் என்பவர் வள்ளி மலை சச்சினாந்த சுவாமிகளுடன் கடைசி காலத்தில் நெருங்கி பழகியவர். ஸ்வாமிகள் சொன்னது “அருணகிரி நாதர்  திருஞான சம்பந்தர் அவதாரம் – என்று சொன்னதாக.

 

“இருமலு ரோக”. என்று ஒரு திருப்புகழ் உண்டு. டாக்டர்கள் வியாதி பேர் தெரியவில்லை என்றால் இந்தப் பாட்டை refer பண்ணலாம்.  அதே போல் “கெளரி மனோஹரி” ராகத்தில் “வலிவாத பித்தமோடு” என்று ஒரு பாடல் உண்டு

 

அருகே போய் கூப்பிட்டால் திருப்புகழ் கிட்டே வராது. அதன் போக்குக்குப் போய், ஆழப் புரிந்து கொண்டு. அருகே சென்றால், நம்மை அணைத்துக் கொள்ளும்

 

நாம் என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறோம் என்றால் kaummaaram.com க்குதான். திருப்புகழின் ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் எழுதி இருக்கிறார்கள்.  இதில் இங்கிலீஷ் ல் வேறு. பிரமிக்க வைக்கும் முயற்சி. ஸ்ரீ. கோபாலசுந்தரம் என்பவர் எழுதி இருக்கிறார். அவருக்கு ஒரு கோடி நமஸ்காரம் செய்யலாம்

 

உதாரணத்திற்கு, மேலே எழுதி இருக்கும். “தடி நிகரி அயிற்கடாவி” என்ற வரி. கீழ்க்காணும் வரியில் உள்ள ஒரு வார்த்தை..

 

.....தடி நிகரி அயிற்கடாவி அசுரர்கள் இறக்குமாறு, சமரிடை விடுத்த சோதி...... (மனையவள் என்று தொடங்கும் திருப்புகழ்) – சத்தியமாக பார்த்துப் படித்தாலே தப்பாக படிப்போம்

 

“மின்னல் போல ஒளி விடும் வேலாயுதத்தை வீசி” அசுரர்கள் இறக்குமாறு சண்டை போட்ட, ஒளிப்பிழம்பான முருகா: என்று இதற்குப் பொருள்.

 

இப்படி அர்த்தம் தெரியவில்லை என்றால் யாரும் திருப்புகழ் கிட்டயே போக மாட்டோம்.

 

இன்னொருவர், திருப்புகழ் ராகவன் சார். எல்லா பாடல்களுக்கும் ராகம் போட்டு, தாளக் கட்டையும் குறிப்பிட்டு, பாடவும் பாடி, அவரி இறுதி மூச்சு வரையும் பாடி, இன்றும் இந்தியா/உலகம் முழுவதும், திருப்புகழ் பஜனை என்று ஒன்று பிரமாதமாக நடந்து கொண்டு இருக்கிறது என்றால் அவர்தான் காரணம்.

 

உதாரணமாக, கெளரி மனோஹரியில், மேலே சொன்ன வல்லிவாத பித்தமொடு” – இந்த ஒரு பாடல் தான் இந்த ரகத்தில் இருக்கிறது. கௌமார்த்தில்  அவர் பாடியும் இருக்கிறார். எப்படி கரெக்டாக கெளரி மனோஹரியில் உட்காருகிறது என்பது இன்று வரை எனக்கு ஆச்சர்யம்

 

அதே போல் திருவான்மியூர் முருகன் மேல் தர்மவதி ராகத்தில் “குசமாகி” என்ற ஒரு பாடல் அமைக்கப் பட்டிருக்கிறது. இது ஒரு அபாயகரமான ராகம், கிட்டக்க அரை டஜன் ராகங்கள் தொட்டுக்கொண்டு இருக்கின்றன. அதை கற்றுக்கொண்டு பாடினால், தர்மவதி ராகத்தை யார் பாடினாலும் கண்டு பிடித்து விடலாம்.

 

திருப்புகழை ஆழப் படித்தால், முதல் ஆறு வரியில், நாம் எப்படி வாழ்கிறோம், எப்படி வாழ வேண்டும் என்று ஒரு நீதியை, “பளார்” என்று அறைகிறார் போல் சொல்லுவார். அடுத்த 6 வரியில், அந்த முருகன், திருமால் மருகன், எப்படி அணுக்ரஹம் செய்ய வேண்டும் என்று சொல்வார்.   

 

திருப்ப்கழை இன்னும் கொஞ்சம் புகழலாம் -