Saturday 30 January 2021

என்னுள்ளிலும் புட்டபர்த்தி சாய் பாபா

 

இன்று என் வாழ்க்கையில் ஒரு பொன்னாள்.  இன்று புட்டபர்த்தி சாய் பாபாவின் சரித்திரத்தில், இரண்டு பாகங்களைப் படிக்கும் பேறு பெற்றேன்.

சாதரணமாக நடக்கக் கூடியது இல்ல. நான் புட்டபர்த்தி மகானின் தீவிர பக்தனோ அல்லது அடிக்கடி பிரஸாந்தி நிலையம் சென்று சேவை செய்தவனோ அல்லது அவரை எங்கேயாவது நேரே தரிசித்தவனோ கிடையாது.

இதில் மிகுந்த ஆச்சர்யம் என்னவென்றால், இப்பொழுது, நான் இருக்கும் மந்தவெளியில் இருந்து, 10 நிமிடத்தில் புட்டபர்த்தி சாய் பாபாவின் கோவில் உள்ளது. மிகவும் அற்புதமாக நிர்வகித்து, சாய் பாக்தர்களின் தன்னலமற்ற சேவையுடன் அமைந்து இருக்கிறது.  ஓரே ஒரு முறை, வீபூதி வாங்குவதற்கு சென்றேன். அப்போது உள்ளே சென்று பார்க்கும்போது, அங்கே தனித்தனியாக பெண்களும் ஆண்களும் அமர்ந்து இருந்து மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தார்கள்

பிறகு நேற்று இரண்டாவது முறையாக  “தபோவனம்” என்ற அவரில் அற்புத லீலைகள் அடங்கிய புத்தகம் வாங்கச் சென்றேன்.  அந்தக் கதையை பின்னால் சொல்கிறேன்

என்னுடைய குழந்தைப் பருவம் பற்றி கொஞ்சம், சாய் பாபாவைப் பற்றி படிக்க நினைப்பவர்கள், “புட்டபர்த்தி சாய் பாபா அனுபவம்” என்ற பகுதிக்குப் போகலாம்:

நான் சாய் பாபா கோவில், சாய் சரிதம் இவைகளில் இருந்து விலகியே இருந்தேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. நான் பிறந்த செம்மங்குடி கிராமத்தில், நான் அம்மா என்று அழைக்கும் என் பாட்டி, முதலில் காண்பித்த கோவில், சிவன் கோவில், பிறகு பெருமாள் கோவில். ஆனந்தவல்லி உடனுறை அகச்தீஸ்வரரும், வரதராஜப் பெருமாளும்தான்.

என் அப்பா (தாத்தா) வை நான், செம்மங்குடியில் நினவு தெரிந்து பார்க்கும்போது, அவர் சிவ பூஜை, (சாளக்ராம பூஜை) செய்து கொண்டே இருப்பார். ஒரு நாள் கூட தவறியதே இல்லை. த்ரி கால சந்த்யாவந்தனம், சிவ பூஜை இரண்டும் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருப்பது என் தாத்தாவிடம் நான் வாங்கிய பிச்சை என்று கூட சொல்லலாம்.  என் அப்பாவிற்கு, வில்வம் பறித்துக் கொடுப்பது, ஜலம் எடுத்துக் கொடுப்பது என்ற சேவை ஒன்றுதான், இன்று என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்று சத்தியமாக நம்புவன் நான். அதனால் எனக்கு அனுஷ்டானம், சாளக்ராம பூஜை தான் மிக முக்கியம்.

பிறகு, மேலே படித்து, பெங்களூர், பாம்பே, துபாய் என்று ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, சென்னையில் மைலாப்பூரில் வந்த போது எனக்கு விட்ட குறை, தொட்ட குறையாக, கற்பகத்திடமும், காபாலியிடமும் இருந்த காதல், வேறு யாரிடமும் இல்லாமல் போனது உண்மை. பாவாடை கட்டினால், சிறுமி போல, புடவை காட்டினாள், மணப் பெண் போல, மடிசாறு கட்டினால் தாலி தொங்க தொங்க மங்களகரமாக இருக்கும் “மாமி” போல – என் மனதை இன்றும் கற்பகத்திடம் பறி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

கொரோனா சமயத்தில் கூட, கோபுரத்தைப் பார்த்துவிட்டாவது வரும் ஆசாமி நான்.

என் மனைவி அடிக்கடி மைலாபூரில் இருக்கும் ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு  செல்வாள். நாங்கள் இந்தக் கோவிலுக்கு பின்புறம் 2 வருடம் வாடகை வீட்டில் வேறு இருந்தோம். நிதமும் ஆரத்தி பாட்டுக்கள், கணீரென்று கேட்கும்.

முடிந்தபோது நானும் அவளுடம் செல்வேன். எந்த ஒரு குருநாதரையும் நான் வணங்கவேண்டும. என் மனது பாக்குவப்படவேண்டும் என்ற ஒரு பிரார்த்தனையும் அவரிடமே வைப்பேன். அந்த பக்குவம்தான் எனக்கு திருக்கோவிலூர் அருகில் இருக்கும் தபோவனம் ஞானானந்தரிடம் பக்தி செய்யத் தூண்டியது. பாத பூஜையில் மகத்துவத்தை அறிய வைத்தது. பல முறை சென்று திரும்பி வரும் போது,, அம்மாவைப் பிரிந்து வரும் சிறு குழந்தை போல மனது வருத்தப்படும் அளவுக்கு என்னை கொண்டு விட்டு இருக்கிறது. அவரை நினைக்காத நாள் இல்லை என்ற அளவுக்குக் கொண்டு விட்டது. இதுவும் குருவின் அளப்பரிய கருணையே அன்றி என்னிடம் ஒன்றுமே இல்லை.

ஒரே ஒரு முறை, நான் ஷீரடி கூட போய் இருக்கிறேன். ஆபீஸ் விஷயமாக பூனா போய் இருந்த பொது, நேரே கிளம்பி ஷீரடி போய், அங்கே ரூமில், பச்சை தண்ணீரில் விடியற்காலை குளித்து விட்டு, (அன்று ஏகாதசி) சாய் பாபாவை வணங்கி விட்டு வந்தேன். 

புட்டபர்த்தி சாய் பாபா அனுபவம்

திருப்பி விஷயத்திற்கு வருவோம். போன வாராம் முழுவதுமே எனக்கு மிகவும் டென்ஷன் ஆன வாரம் என்று சொல்லலாம். வீடு மாறி, மந்தவெளியில், திருவேங்கடம் தெரு (விரிவு) குடி போனேன்.

வீடு மாற்றுவது என்பது பெரிய கொடுமை. ஒரு வாரம் ஆன பின்பும்,  எதை எங்கே வைப்பது, பல சாமான்கள் எங்கு இருக்கிறது என்று இன்னும் புரியவில்லை.

தை பூசம் ஒரு பக்கம் அமக்களப் பட்டுக் கொண்டிருக்க, கொரோனா கொஞ்சம் கொஞ்சம் ஆக குறைந்து வரும் நிலையில், மயிலாப்பூர், தெப்பத்திற்காக, திமிலோகப் பட்டுக் கொண்டிருந்தது.

From now, You have to read carefully – the sequence of Events

போன வாரம், நான் மிகவும் மதிக்கும், நடமாடும் பெரியவாளாக நான் கருதும், மஹாதானபுரம் மாமா அவர்களின் பெண், சௌ.பாரதி (என் மச்சினனின் மனைவி) எனக்குப் போன் செய்து, “புட்டபர்த்தி சாய் பாபாவின் சரித்திரம் படிக்க ஒரு சான்ஸ் கிடைத்து இருக்கிறது, நீங்கள் படிக்கிறீர்களா” என்று என் மனைவியிடம் கேட்க, என் மனைவி ஓகே சொல்லி என்னிடம் சொன்னாள். நான் பார்க்கலாம் என்று சொன்னேன்.

வீடு மாறியதால், மிகவும் டெண்ஷன், மிகவும் களைத்துப் போய், இது ஏறக்குறைய மறந்தே விட்டது/

நேற்று, வெள்ளிக்கிழமை, என்னிடம் சாவி இருந்தது தெரியாமல், வீட்டை தெரியாமல் பூட்டி விட,, என் மனைவி எனக்கு போன் பண்ணி பேசியதில், நான் “வருவதற்கு 6 மணியாகும். நீ அப்படியே பொடி நடையாக சாய் பாபா கோவிலுக்கும் போய் வா” என்று சொன்னேன். பர்ஸ், பணம், செல் போன் ஒன்றுமே கிடையாது.  சரி என்று அவள் கிளம்பி சென்று, பாபா தரிசனம் முடிந்து, திரும்பி வந்து, வீட்டின் அருகே உள்ள, பிள்ளையார் கோவிலில் பிரதட்சிணம் செய்து கொண்டு இருந்தாள்.

அப்போது நான்கு வீடு தள்ளி, கும்பல், போலீஸ் வேன் இருக்க, விஜாரித்ததில், “அஹோபில மட” ஜீயர் வந்திருக்கிறார், என்று கேள்விப்பட்டு, எனக்கு உடனே போன் செய்ய, எனக்கு வெள்ளிக்கிழமை ஆபீஸ் பூஜை இருந்ததால், அதையும் முடித்துவிட்டு, வீட்டுக்கு நேரே வந்து, பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு, உடனே அங்கே சென்றேன். என் மனைவி அதற்கு முன்பே, சேவித்து விட்டு திரும்பி வர, நான் போய் நமஸ்காரம் செய்து திரும்பி வந்தேன்.

வரும்போது, மணி 6, அப்போதுதான், எனக்கு புட்டபர்த்தி சாய் பாபாவின் “திவ்ய சரித்ரம்” படிப்பதற்கு புஸ்தகம் இல்லையே என்று உறைத்தது. என்ன செய்வது, எனக்கு pdf அனுப்புகிறேன் என்று சௌ. பாரதி சொன்னபோது கூட, புத்தகத்தை ஸ்வாமியிடம் வைத்து, ஒரு புஷ்பத்தை சமர்ப்பித்து, பிறகு எடுத்துப் படிப்பது தான் சிறந்தது என்று நினைத்தேன்

சாய் மகான் எனக்களித்த ஆச்சரியங்களின் பிரவாகம் – இனி வருவது

உடனே கிளம்பி புட்டபர்த்தி சாய் பாபா கொவிலுக்கு சென்று புத்தகம் இருக்கா என்று பார்க்கலாம் என்று கிளபினேன். அங்கு போய், வண்டியை நிறுத்திய போது, கோவில் அமைதியாக இருந்தது. யாருமே இல்லை. “சரி,

நமக்கு pdf  தான் என்று நினைத்து உள்ளே போனால், “Library மூடலை சார், நீங்கள் போங்கள்” என்று ஒருவர் சொல்ல “முதல் ஆச்சரியம்”

உள்ளே போய், “தபோவனம்” புத்தகம் இருக்கிறதா என்று விசாரிக்க, அங்கு இருந்த பக்தர், இங்கிலீஷ், தமிழா என்று கேட்டார். அப்போது எனக்கு தெரியும், இது பல மொழகளில் இருக்கிறது. என்று. நான் தமிழ் என்று சொன்னேன். “சாரி சார், தமிழ் இல்லை” என்று சொன்னார். நான் மனதிக்குள் “நமக்குப் ப்ராப்தம்” அவ்வளவு தான். என்று கிளம்பும்போதுதான் – அந்த அதிசயம் நடந்தது

அவர் “என்னிடம் ஒரே ஒரு தமிழ் புத்தகம் இருக்கிறது. என் நண்பருக்குக் கொடுப்பதற்காக வைத்து இருக்கிறேன் அதை உங்களுக்குத் தருகிறேன்” என்று சொன்னார்” நான் அப்படியே “விக்கித்து நின்று விட்டேன்”. இப்படி ஒரு கருணையா, நான் இந்த கருணையை பெறுவதற்கு என்ன செய்தேன். மாணிக்கவாசகர் சொன்னது போல் “கொண்டது என் தன்னை, தந்தது உன் தன்னை, சங்கரா யார் கொலோ சதுரர்” என்ற வாக்கியத்தின் உண்மையை நான் அப்போது புரிந்து கொண்டேன்.  எனக்கு அழுகையே வந்து விட்டது.

அது மட்டும் இல்லை. என்னிடம் 500 ரூபாய் நோட்டுதான் இருந்தது. சில்லறை இல்லை. அவரிடமும் இல்லை. நான் மீண்டும் என் பர்சில் தேடியதில் 10 ரூபாய் குறைந்தது.  என்னடா இது என்று சொல்லி அவரைப் பார்க்க,  அவர் சிறிது யோசித்து. சற்று இருங்கள் என்று, ஒரு டிராயரைத் திறந்தார். அதில் கொஞ்சம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. என்ன ஆச்சர்யம், மிச்சம் அதில் இருந்தது. நான் வெல வெலவெலத்துப் போய் விட்டேன்.

இன்னும் முடியவில்லை”

இன்று, காலையில், திவ்ய சரித்ரம் படிப்பதற்கு சங்கல்பம் செய்து கொண்டு ஆரம்பித்தேன். இன்றுதான் முதல் முறையாக இந்த புத்தகத்தை தொடுகிறேன். எனக்கு  5 மேலும் 6 பகுதிகள் “படிப்பதற்காக அனுமதி அளித்து இருந்தார்கள். 5 வது பகுதி நானும் 6- என் மனைவியும் படிப்பதாக முடிவு செய்தோம்.

நான் “சாளக்ராம பூஜை” செய்து வருகிறேன். “சாம்ப பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்” என்ற ஒரு வரி என் சங்கல்பத்தில் வரும். திவ்ய சரித்ரத்தை படிப்பதற்கு முன்பு சங்கல்பத்தில் “சாம்ப பரமேஸ்வர” என்று வந்துவிட்டது. நான் சரிதான், தவறு ஒன்றுமில்லை என்று நினைத்து, புட்டபர்த்தி சாய் பாபாவையும், பிரார்த்தனை செய்து கொண்டு, படிக்க ஆராபித்தேன்.

என்ன ஆச்சர்யம். 5 வது chapter ல் “சாம்பா” என்ற வார்த்தைக்கு “அர்த்தம்” சொல்வது போல் ஒரு பாரா வந்தது.  எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல், ஹோமம், பூஜை ஒரு பிராமணனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதும் விளக்கப் பட்டு இருந்த்து. எனாக்காவே, அவரைப் புரிந்து கொள்ளாமல், இத்தனை காலமாக இருந்த எனக்காகவே அவர் எழுதியது போல இருந்து.

ஷீரடி சாய் பாபா தான் நான் என்று அர்த்தத்துடனும் ஒரு பாரா இருந்தது.

நான் காண்பது, கனவா, நனவா, நான் இருக்கும் உலகத்தில், எனக்கென்று இவ்வளவு, இறங்கி வந்து, தன்னைப் பற்றி, நான்தான் சர்வமும், நானும் உனக்கு குருநாதர் தான் என்று “சர்வ சுலபனாக” புட்டபர்த்தி சாய் பாபா பெய்த கருணை மழை – நான் நனைந்து நனைந்து ஆனந்தப் பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

நான் முன்னமே சொன்னாற்போல், எனக்கு இதற்க்கு இம்மி அளவு கூட அருகதை கிடையாது. புட்டபர்த்தி சாய் பாபா கோவிலில் சேவை செய்யும் மாந்தர்களில் கால் தூசு கூட நான் பெற மாட்டேன். எனக்கு அவர் செய்த கருணை நினைத்து மெய் சிலிர்க்கிறது.

என் மனைவி படித்த 6 வது பகுதியிலும், பல விஷயங்கள், நாங்கள் வாழ்ந்த வாழ்கையை, திரும்பிப் பார்க்க வாய்த்த விஷயங்கள் நிறைய.

சாய் பாபா கோவில், எதேச்சையாக சென்ற என் மனைவி, இன்று புட்டபர்த்தி சாய் பாபா சரித்ரம் படித்த நான்.  என் மனைவி வழி காட்ட, அபிராமி பட்டர் சொன்னது போல், “நின்றும், இருந்தும் கிடந்தும்” நினைப்பது உன்னை – என்று நான் சொல்ல, அருளுகிறார் இந்த மகான்.

ஒரு பாபநாசம் சிவன் அவர்களின் பாட்டு உண்டு “நெக்குருகி உன்னை பனியா கல் நெஞ்சன் எனக்கு அருள்வாய்- முருகா”  என்று

எனக்கு அருளி இருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது

சர்வம் சாய் மயம். சத்குரு புட்டபர்த்தி சாய் பாபாவின் சரணங்களிலும், அவருடைய கோடி கோடி பக்தர்களுக்கும், என் கண்ணீரை காணிக்கை ஆக்குகிறேன்.

பின் குறிப்பு : ஒரே மூச்சில் நான் தமிழில் என் “பதிவேடுகளில்” கட்டுரை எழுதியே இல்லை. ஒரு ஒரு பக்கமாக ஒரு வாரமாவது ஆகும். இது ஒரே மூச்சில், இடத்தை விட்டு எழுந்திராமல் – எழுதிய பதிவு.

இதுவும் குருநாதர் கருணை.

 

 

 

 

 

 

 

 

 

Thursday 28 January 2021

என் சினிமா ஆசையும் “சீன் கானரியும்”

 

ஹாலிவுட் நடிகரும், ஜேம்ஸ் பாண்ட் என்ற மிகவும் பிரபலமான பாத்திரத்தில் நடித்த, சீன கானரி, (சர் ஷான் கானரி) மறைந்த செய்தியைக் கேட்டு ஒரு இரண்டு நிமிடம் திகைத்துப் போனது உண்மை.

அமுல் நிறுவனம், தன்னுடைய அற்புதமான விளம்பரத்தில், இவரின் மறைவை மிகவும் நேர்த்தியாக அமைத்து இருந்தார்கள். அது இப்படி..

விளம்பரத்தின் மேலே

A Diamand Forever 

விளம்பரத்தின் கீழே

Connery, Sean Connery

இவரைப் பற்றித் தெரியாதவர்களுக்கு, மேலே சொல்லி இருப்பது அவர் ஜேம்ஸ் பாண்டாக நடித்த ஒரு படம். (அது அமுல் products களுக்கும் பொருந்தும்) கீழே போட்டிருப்பது, அவருடைய மிகவும் பிரபலமான, அவர் சொல்லும் ஒரு வரி.

My name is Bond, James Bond ... அதை அப்படியே மாற்றி

My name is Connery, Sean connery  என்பது போல் “அமுல்” விளம்பரம்.

நான் மிகவும் ரசித்த விளம்பரம்.

எங்கேயோ தமிழ் நாட்டு குக்க்ரமாத்தில் பிறந்த எனக்கு, ஒரு ஜேம்ஸ் பாண்டாக நடித்த ஒருவர் பாதித்திருக்கிறார் என்றார் அதுதான் சினிமாவின் பலம்.

கொஞ்சம் பின்னே போவோம்.........

செம்மங்குடியில் படித்த எனக்கு சினிமா படம் என்பது ஒரு கானல் நீர். கரண்ட் இல்லாத ஒரு கிராமத்தில் பிறந்து, பிறகு கரண்ட் வந்தபோது ஆச்சர்யத்த்துடன் பார்த்த நாட்கள் அவை.

எங்கள் செம்மங்குடி உயர் நிலைப் பள்ளியில் ஒரு முறை இப்போது இருக்கும் 32 inch டீ. வி போன்று ஒரு வெள்ளைத் திரையில், “வீதியின் விதிகள்” என்று “பின் புலத்தில் பேச” ஒரு 20 நிமிடம் படம் ஓடும். அது ஒவ்வொரு வகுப்பாக பிரித்து வரிசையில் நின்று உள்ளே (அந்த ரூமில்) விடுவார்கள். அது எங்களுக்கு பிரமிப்பான விஷயம். அதைப் பார்த்து விதிகளைக் கற்றுக் கொண்டேனோ என்னவோ, எனக்குப் பின்னே வட்டமாக ஒரு சக்கரம் சுழல, ஏதோ வெளிச்சத்துடன் எதோ ஒன்று வேகமாக அதனுள் செல்ல, படத்தை விட அந்த “சுற்றலை” ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எங்களுக்கு, வலது புறம் 5 கிலோ மீட்டர் தொலைவில் குடவாசல் பிலிப்ஸ் என்று ஒரு தியேட்டர் உண்டு, மணக்கால் அய்யம்பேட்டை என்று இந்தப் பக்கம் ஒரு 5 கிலோ மீட்டரில் உள்ள உரில் ஒரு ஒரு தியேட்டர் உண்டு. எனக்கு திருட்டுத்தனமாக சினிமா ஆசையை வளர்த்தது என் பள்ளியில் காட்டிய “வீதியின் விதிகள்” தான்.

தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று நம்மூர் ஜெய்சங்கர் என்ற நடிகரை விளம்பரப்படுத்தி சில படங்கள் வந்தபோது, ஜேம்ஸ் பாண்ட் என்றால் என்ன/யார் என்ற குழப்பத்தில் இருந்தேன்.   அதற்குப் பிறகு, பல வருடங்கள் கழித்து, திருச்சி அருணா தியேட்டர் ல், ரோஜர் மூர் நடித்த “SPY WHO LOVED ME” என்ற படத்தில் முதல் சீனில் ஸ்கேடிங் சண்டை ஒன்று இருக்கும். அதை பார்த்து அசந்து போனேன்.

பிறகு மெதுவாக ஜேம்ஸ் பாண்ட் படங்களை பார்க்க ஆரம்பித்து, சீன கானரியில் வலையில் வீழ்ந்தேன்.

இரண்டு படங்கள், சீன் கானரியின் அற்புதப் படைப்பு. இப்போது கூட, இங்கிலீஷ் மூவி சானலில் போட்டால், ரிமொட் ஐ கீழே வைத்து விடுவேன்

1.     GOLD FINGER

2.     THUNDERBALL

நல்ல உயரம், ஸ்டைலிஷ் ஆக ஒரு டிரஸ். துப்பாக்கி எடுத்து சுடுவதிலும் அழகு. ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கே உரித்தான
முத்தமிடும் காட்சிகளிலும் ஒரு நேரத்தி இருக்கும்.

அதக்குப் பிறகு, UNTOUCHABLE என்ற ஒரு படம் பார்த்தேன். அதில் ராபர்ட் டி நீரோ என்ற ஒரு அற்புதமான நடிகர் வில்லனாக நடித்து இருப்பார். அதில் கௌரவ வேடத்தில் சீ.கானரி நடித்து இருப்பார்.  பல முறை சீ. கானரிக்காக அந்தப் படத்தைப் பார்த்து இருக்கிறேன்.

இவருக்கு முன்பும், பின்பும் பல ஜேம்ஸ் பாண்டுகள் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மாளிடம் இருந்த ஒரு அழகு... கண்களில் பல கதைகள் சொல்வார்.

அவருடைய பேச்சே, இஷ்க், புஷ்க் என்று இருக்கும். ஸ்காட்டிஷ் அச்சென்ட் (SCOTTISH ACCENT)  போலும்.

என்னவா இருந்தால் என்ன. ஒரு 2 மணி நேரம் இந்த சினிமா என்ற மாய வலையில் என்னை கட்டிப்போட்ட அந்த அற்புதமான சீன கானரிக்காக, அவரின் ஆத்மா சாந்தி அடைவதற்காக, பரந்தாமனிடம் ஸ்தோத்ரம் செய்கிறேன்.

 

 

 

 

 


Sunday 24 January 2021

கொரோனாவும் ஸங்கீத சீசனும்

 

கொரேனாவால், இந்த சங்கீத சீசனில், என்னை மிகவும் பாதித்த விஷயம், பல உப பக்க வாத்தியக்காரர்கள், சுத்தமாக ஒரு கச்சேரியும் இல்லாமல், மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதை நான் நேரின் பார்த்தேன். இந்த வருடம் வெளி வந்த கச்சேரிகளில் கூட, மிருதங்கம், வயலின் மட்டும் இருந்ததே தவிர, கஞ்சிரா, கடம், முகர்சிங் போன்ற வாத்தியங்கள் “மிஸ்ஸிங்”.

இன்றொன்று, நாதஸ்வர கலைஞர்கள். நாங்கள் சாதரணமாக, தஞ்சாவூரில், கிராமத்தில் உள்ள கோவில்களில், 10 நாட்கள் உதஸவமாகச் செய்யும் பொது, ஒவ்வொரு நாளும், ஒரு நாதஸ்வர கலைஞர்கள் குழுவை வைத்து, 10 நாளும் 10 வேறு விதமான கலைஞர்களை வைத்து, அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து அழகு பார்த்த “தஞ்சாவூர் ஜில்லா” இந்த முறை ஒரு கல்யாணக் கச்சேரி கூட இல்லாமல் அவதிப படுவது, பெரிய சோகம்.

மேலும், முக்கயமான ஒன்று,  நிறைய பேருக்குத் தெரியாதது, முதியோர் இல்லத்தில் இருக்கும்  மக்களுக்கு, இலவசமாக சங்கீத கச்சேரிகளை "பணம் கட்டி"  அவர்கள் பார்ப்பதற்க்கு ஏற்பாடு செய்த  சில நல்ல உள்ளங்களை சந்திக்க நேர்ந்தது.  ஆச்சர்யப்பட்டேன்.   கொரோனாவால் விளைந்த நன்மை என்று நான் சொல்வேன்.   கோயம்புத்தூரிலும் சென்னையிலும் உள்ள பல மு.இ. அடக்கம்

நானும் மியூசிக் அகாடமி யும் தான் இன்னும் “ஸ” யூஸ் பண்ணுகிறோம் என்று நினைக்கிறேன். (ஸங்கீத வித்வத் சபை)

நான் எழுதும் இந்த பதிவு அரங்கேறும்போது, சங்கீத வித்வத் சபையில் “ஸதஸ்” நடந்து முன்டிண்டு இருக்கும். ஒரு- நான் எதிர்பார்த்த ரஞ்சனி காயத்ரியோ அல்லது வயதான இசைக் கலைஞர்களோ, யாருக்காவது, கலாநிதி விருது கிடைத்திருக்கும். சதஸ் முடிந்தவுடன் நல்ல சாப்பாடு கிடைத்து இருக்கும். டான்ஸ் (நடன நிகழ்சிகள் ஆரம்பித்து இருக்கும். அரிதாரம் பூசிய பெண்மணிகள் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு, தமிழ் குருமார்களிடம் ஆசி பெற்றுக் கொண்டு இருப்பார்கள். வாணி மஹாலில், ட்ராமா ஆரம்பித்து, காத்தாடியும், எஸ். வீ. சேகரும், Y G மகேந்திராவும் ஜமாய்த்துக் கொண்டு இருப்பார்கள்.

ரஜனிகாந்த் அரசியலுக்கு வராமலே, அரசியலில் இருந்து விலகியது போல், சங்கீத சீசன் ஆரம்பிக்காமலே முடிந்து விட்டது.

நான் சென்னை வந்து,  எல்லா வருடங்களிலும் சங்கீத சீசனில் கலந்து கொண்டு பல கச்சேரிகள் கேட்டு இருக்கிறேன். CA படித்த காலத்தில், படிப்பு, படிப்பு என்று இருந்ததனால், இந்த விஷயங்களுக்கு சான்ஸ் இல்லை. ஒரு ரவுண்டு, பெங்களூர், மும்பை, துபாய் என்று சுற்றி திரும்பவும் சென்னை வந்து முருகப்பா குழுமத்தில் வேலை கிடைத்து, அப்பாடா, என்று மூச்சு விட்டபிறகு, சங்கீதக் கச்சேரி பக்கம் என் காதுகளை அலைய விட்டேன். செம்மங்குடியில் பிறந்தது, ஸ்ரீனிவாச அய்யர் எதுத்தாதில் குடி இருந்தது,  என் அப்பாவின், அபார சங்கீத ஆர்வம், (மிக நன்றாகப் பாடுவார், சோமு என்றால் இன்றும் அவருக்கு கண்ணீர் வரும். மதுரை சோமுவின் சங்கீதத்தில் கரைந்ததவர். இன்றும் கரைந்து கொண்டு இருப்பவர்).

சென்னைக்கு குடி வந்தவுடன் எனக்கு மயிலாப்பூர், மந்தவெளிப்பாக்கம், மந்தவெளி சுற்றியே வாசம் செய்து வந்ததால், சங்கீதக் கடலை அள்ளி, அள்ளிக் குடிக்கும் பேறு பெற்றேன். சுற்றி வர சங்கீத சபாக்கள் நிறைந்து இருப்பதால், எப்படியாவது வாரத்திற்கு/மாதத்திற்க்கு என்று ஏதாவது ப்ரோக்ராம் நடந்து கொண்டே இருக்கும். உபன்யாசமா, நாம சந்கீர்த்தனமா, ராதா கல்யாணமா, திடீரென்று “தமிழும் நானும்” என்றும் சஞ்சய் ஆரம்பித்தால், “சஞ்சையும் நானும்” என்றும் கிளம்பி விடலாம்.. போதாதற்கு “ஹயுமர் க்ளப்” என்று எங்கள் ஊர் பக்கத்து “அரசவனங்காடு” ஸ்ரீ/ சேகர் ஒரு ப்ரோக்ராம் வைத்தால் அதிலும் ஆஜர். நாத இன்பம், ஆர்,கே கன்வென்ஷன் ஹால் எல்லாமே. “ஏழைகளின் சங்கீத வித்வத் சபை”. வாரா வாரம் யாராவது பாடிக் கொண்டே இருப்பார்கள், இங்கே. சங்கீதம் தழைத்து ஓங்கும் இடம் என்றால் சத்தியமாக எங்கள் மயிலாப்பூர் தான்.

என்னதான், மைலாப்பூர் மக்கள் புலம் பெயர்ந்து, நங்கநல்லூர், மடிப்பாக்கம், வேளச்சேரி என்று போனாலும், மைலாப்பூரிலேயே இருக்கும் இசை ரசிகர்கள், கற்பகம், கபாலி ஆசி பெற்றவர்கள்.

கொரோனா புரட்டிப் போட்டதில், டிசம்பர் சங்கீதம் சத்தியமாக ஆடிப் போனது உண்மை. சுமார் 5௦௦௦ கச்சேரிகள் நடக்கும் டிசம்பர் மாதத்தில் 5௦ கச்சேரிகள் கூட, அதுவும் கம்பயூட்டரில், “லைவ்” வீடியோ என்றும், பணம் கட்டினால் “லைவ்” ஆகவும் பார்க்கலாம், பிறகும் பார்க்கலாம் என்ற “வீட்டுக்குள்ளேயே” சங்கீத நிகழ்சிகளை கொண்டு வந்தார்கள்.

சாதாரணமாக, பாரதீய வித்யா பவன் தான் முதலில் கச்சேரிகள் ஆரம்பிக்கும். அது இலவசம் என்பதாலும், சஞ்சய் தவிர எல்லா முன்னணி, பாடகர்கள் பாடுகிறார்கள் என்பதாலும், டி வீ எல்லாம் வைத்து, கூட்டத்தை சமாளிப்பதாலும், என்னுடைய வீட்டிலிருந்து 1௦ நிமிடம் என்பதாலும். முக்கால்வாசி எல்லா கச்சேரிகளிலும் நான் இருப்பேன்.

எனக்குப் பிடித்த இடம் பா.வி.பவனம்தான், ஏனெனில், மயிலாப்பூர் வாசிகளான நாங்கள், படி தாண்டா பதிகள். எங்களுக்கும், கிருஷ்ணா கான சபாவோ, தியாக பிரஹ்ம காண சபாவோ, டிசம்பரில் முளைக்கும் ஹபிபுல்லா ரோடு ஹால் கச்சேரியோ, இன்போசிஸ் ஹால் கச்சேரியோ, பாகிஸ்தான் போல. நாங்கள் போக மாட்டோம்.

மேலும், பா.வி.பவேனில் என்ன சௌகர்யம் என்றால், வாசல் வரை சேர் போட்டு இருப்பார்கள். நினைத்தால் ஒரு பாட்டு கேட்டு அப்படியே எழுந்து வந்து விடலாம். மெயின் உருப்படி ராகம் வாசித்து வயலின் வாசிக்கும்போது, கொஞ்சம் கறிகாய் வாங்கிக் கொண்டு வந்துவிடலாம். தனி ஆவர்த்தனம் போது, கற்பகாம்பாளை போய் பார்த்து ஒருசுத்து சுத்திவிட்டு வந்து விடலாம்.

மற்றொரு இடம், NGS. நாரத கான சபாவின் “சான்னித்தியம்” எனக்கு ரொம்ப பிடிக்கும். சுவாமி ஹரிதாஸ் கிரி சுவாமி ஆரம்பித்ததினால் இருக்கலாம். சத்குரு ஞானாநந்தரின் பெரிய படம் இருப்பதினாலோ என்னவோ, ஒரு ஈர்ப்பு இருக்கும். அவர் நம்மையே பார்ப்பது போல இருக்கும்.

அது இந்த தடவை, பா.வி.ப புலம் பெயர்ந்து, கீழ்பாககத்தில் அருகில் எதோ ஒரு பள்ளியில் நடத்தினார்கள். மயிலாப்பூர் இருந்து, பஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணுவதாகவும் சொன்னார்கள். கூட்டம் வந்ததா என்று தெரிய வில்லை.

அப்போ அப்போ, யூ டியூபில், சில கச்சேரிகளை கேட்க முடிந்தது. சங்கீத வித்வத் சபையும், 90 நிமிடங்களுக்கு ஒரு கச்சேரி என்று போட்டார்கள். அதற்கு ரூ 3௦0 என்று நிர்ணயம் செய்தார்கள். ஒரு நாளைக்கு இரு கச்சேரிகள் கேட்க 300 ரூபாய் போய், ஒரு கச்சேரிக்கு என்று வைத்தார்கள். நான் கிட்டகேயே போகவில்லை. அகாடமியில், விக்னேஷ் ஈஸ்வர் மற்றும் கேட்டேன். சஞ்சையின் “தமிழும் நானும்” கேட்டேன்.. என்னுடைய டி.சீ முடிந்து விட்டது.

ஆக மொத்தத்தில், எனக்கு ஒரு சங்கீதப் பிடிப்பு இல்லாத சங்கீத சீசனாகப் பொய் விட்டது.

இந்த கொரோனா டயத்தில், நிறைய கச்சேரிகள் அந்தக் காலத்து, பாடகர்கள், பாடியதை, (புதுசு, புதுசாக யூ டியூபில் “அப்லோட்” செய்து கொண்டே இருந்தார்கள். அதனால்) கேட்கும் பாக்கியம் கிடைத்தது. செம்மங்குடி முதல் எம். எஸ், ஜி.என்.பீ, சேஷகோபாலன், டி எஸ் கல்யாணராமன் என்று பல பாடகர்களின் அருமையான் கச்சேரிகள் கேட்கும் பேறு பெற்றேன். அதற்க்கு நான் “கொரோனாவுக்கு” நன்றி சொல்ல வேண்டும். திடீரெண்டு காலையில் மாலியின் “கீரவாணி” கேட்டேன். கண்களில் இரு சொட்டு கண்ணீர்.

வேறு ஒரு எண்ணமும் தோன்றியது. இந்த வருடம் இசைக் கலைஞ்சர்கள் என்ன சபதம் எடுத்துக் கொள்வார்கள் என்று ஒரு நிமிடம் யோசித்ததன் விளைவு, கீழே

டி.எம் கிருஷ்ணா – “இந்த தடவையாவது, மெக்கா போய் “இறைவனிடம் கையேந்துங்கள் பாட்டை, ஹுசேன் (னி) ராகத்தில் பாட வேண்டும்.  கொரோனா ஒழிவதைப் பற்றி ஒரு பாட்டு எழுதி, அதை அமெரிக்காவில், கொரோனா இல்லாத ஒரு சர்ச்சில். தேவ மனோஹரியில் பாட வேண்டும்.

மகாதேவன் சங்கரநாராயணன் “  சொந்தமாக பாட்டு எழுதி பாடுவதை, நிறுத்திவிட்டு, அப்பா மாதிரி பாடாமல், நிறைய கச்சேரி செய்ய வேண்டும்

ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்:- சாரீரத்தை நன்கு வைத்துக் கொள்வது போல், சரீரத்தையும் கொஞ்சம் “நன்கு” கவனிக்க வேண்டும்

ரஞ்சனி காயத்ரி: சங்கீத கலாநிதி வாங்கும் வயது வந்துவிட்டது. இனிமேலாவது புஸ்தகத்தை வைத்துக்கொண்டு பாடாமல். நெட்ரூ பண்ணி பாடவேண்டும்

விஜய் சிவா – இந்த தடவையாவது ஒரு நடை, மியூசிக் அகாடமி போய் பேசி, அப்படியே அந்த சங்கீத கலாநிதி விருதையும் வாங்கி, குருநாதர், டி,கே ஜெயராமனுக்கு, பெருமை சேர்க்க வேண்டும்.

சஞ்சய் சுப்ரமண்யன் – நிறைய கோவில் போய் கச்சேரி பண்ணவேண்டும். கொஞ்சம் “பண விஷயத்தில்” கருணை காட்ட வேண்டும்

திருச்சூர் சகோதரர்கள்: இந்த தடவையாவது, அப்பாவைத்தவிர வேறு மிருதங்கக் காரர்களுக்கு சான்ஸ் கொடுத்து, அவர்களுடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றவேண்டும்.