Friday 25 October 2013

அபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளு​ம்

கோயில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சல் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோயில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம். புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோயில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து செல்வாராம். இக்கோயில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார். மயிலாப்பூர் ஆலயத்தில் வள்ளுவன் வாசுகி சிலைகள் உள்ளன. ஒவ்வொர் ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோயிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர்முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோயில் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோயிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்ச்சி இது.

மயிலம் முருகன் கோயிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள். அனைவருக்கும் மேலான ஈஸ்வரனே கோயில் எழுப்பி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவபூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரமாக இருக்கிறது. இக்கோயில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முற்பட்ட கோயிலாகும். நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இரண்டு அடுக்குகள் கொண்டது. இந்தக் கோயிலின் கூரை தங்கத்தால் வேயப்பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சன்னதிக்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கட்டழகப் பெருமாள் கோயில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோயிலுக்கு 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தமிழ் எழுத்துகள் 247-ஐ தத்துவார்த்தமாக உணர்த்தும் விதமாக அமைந்துள்ளன இப்படிகள். இம்மலையிலுள்ள சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் நாவல் மரப் பொந்திலிருந்து வருகிறது. கோயிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.

1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.

7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.

8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.

9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.

12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.


 13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.

14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.

15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.

16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.

17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.

18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.

19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.

20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது. எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.

21. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.

சீ.ஊ.போ

இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் அவர்களின் இந்த ‘சீ.ஊ.போ’ பகிர்வு, சிலபல சாவுகளையும், தீர்மானங்களையும் உரசிச் செல்கிறது. வட பழனியில் தங்கி plaza manner அப்பார்ட்மெண்டில் அனிமேசன் படித்துக்கொண்டிருந்த சமயம்.நாமும் ஒரு நாள் இதைப்போல ஒரு அப்பார்ட்பெண்ட் வீடு சொந்தமாக வாங்கிவிட வேண்டும் என்ற கனவோடு இருந்தேன். அந்த குடியிருப்பில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட யாரென்றே அறிமுகப்படுத்திக்கொண்டதில்லை.
எதிர் வீட்டில் 50 வயதிற்கு மேலிருக்கும்ஒரு பெண்மனி மட்டும் எப்போதாவது பேசுவார்.”என்ன தம்பி இப்போ தான் வறீங்களா.., சாப்டீங்களா..” . “ஆமாங்மா ..சாப்ட்டோம்”என்பதைபோல இயல்பான வார்த்தைகளோடு சரி.அந்த ஓரிரு வார்த்தைகள் பேசுவதும் அவர் மட்டும் தான்.
ஒருமுறை நானும் நமது ஃபேஸ்புக் ரோமியோ Shiva Fx ம் வெளியே சென்றுவிட்டு அறைக்கு வந்தோம்.அப்போது எதிர் வீட்டில் ஐந்தாறு பேர் புதிதாக உட்கார்ந்திருந்தார்கள்.சரி ஏதோ விசேசம் போலிருக்கிறது என்று எங்கள் அறைக்கு உள்ளே போய் விட்டோம்.
உள்ளே போன பிறகு தான் சொன்னார்கள் எதிர்வீட்டில் இருந்த பென்மனி இறந்து விட்டார் என்று. எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.அவர் இறந்ததை காட்டிலும் அவர் இறப்பிற்க்காக வந்த சொந்தம் இவ்வளவு தானா என்பதே அதிர்ச்சிக்கு காரணம்.இதே நம்ம ஊரா இருந்திருந்தா ரொம்ப சாதாரன மனிதன் இறந்திருந்தா கூட இன்னேரம் ஆயிரம் ஆயிரத்தைனூரு பேர் கூடி இருப்பங்களே என்று வியப்பு.இந்த பெண்மனி இதுவரை சம்பாதித்தது இந்த ஏழெட்டு பேர் தானா என பெரிய குழப்பத்திற்க்கு ஆளாகிப்போனேன்.
எனது குரு அன்பு சார் சொன்னார் “சிட்டில எல்லாம் இப்படிதான் ஊர்ல மாதிரி எல்லாரும் வேல வெட்டிய விட்டுட்டு வந்து ஆறுதல் சொல்லிகிட்டு இருக்க மாட்டாங்க”என்று. ஆம் எங்க ஊர் பக்கமெல்லாம் ஒருவர் இறந்து விட்டால் பெரும்பாலும் ஊரில் யாரும் வேலைக்கு போக மாட்டார்கள்.சுற்றுபக்கத்து வீடுகளில் சமைக்கமாட்டார்கள்.திருவிழாவோ வேறு ஏதேனும் கொண்டாட்டங்களோ இருந்தால் தள்ளி வைத்து விடுவார்கள்.இறந்தவர்களின் குடும்பத்திலுருப்பவர்கள் ஓரளவு மனநிலை தேறும் நாள்வரை அவர்களுடன் உறவினர்கள் இருப்பார்கள்.
”சரி அழுவாதப்பா அவரு செத்துட்டா நாங்கல்லாம் இல்லயா ஒனக்கு,ஒனக்கு எதா இருந்தாலும் நாங்க பாத்துக்குவோம் நீ தைரியமா இரு”என்று சொல்கிற வார்த்தைகள் தரும் ஆறுதலை வார்த்தையால் விவரிக்க முடியாது. எதிர்வீட்டு பெண்மனியை எடுத்து செல்வதற்க்காக ஒரு ஆம்னி வண்டி வந்திருந்தது.பிணத்தை வெளியே தூக்கி வந்தார்கள்,நாங்களும் இணைந்து கொண்டோம்.
நான் பிணத்தை பார்த்ததை விட சுற்றி இருப்பவர்கள் முகத்தையே பார்த்தேன்.எல்லோரும் சிறிதும் பெரிதுமான விசும்பலோடு நிறுத்திக்கொண்டனர்.நாம் அழுவதை பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் யாராவது பாத்தால் என்ன ஆவது என்று நினைத்துகொண்டே அழுததை போல் அழுதார்கள். நமது ஊரிலெல்லாம் பிணம் வீட்டை விட்டு போகும் போது ஓவென கதறுவார்கள்.
இத்தனை காலமாக நீ இந்த வீட்டில் இருந்த போது எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தோம்..இனி நீ இந்த வீட்டிற்க்கு எப்போது வரப்போகிறாய்..நீ இல்லாத இந்த வீட்டில் நாங்கள் எப்படி வாழப்போகிறோம்..என்ற மனக்குமுறல் தான் அந்த கதறல். இங்கே அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.ஆம்னி வண்டியில் பிணத்தோடு சிலரும் மற்றொரு வண்டியில் சிலரும் போக நானும் sivafx ம் டூ வீலரில் பின்தொடர்ந்தோம்.
கண்ணம்மா பேட்டை மின்சார சுடுகாடு.பிணத்தை ஒரு ட்ராலியில் வைத்து உள்ளே தள்ளினார்கள்.முன்பக்க கதவு மெதுவாக கீழே இறங்கி கொண்டிருந்தது.முழுவதுமாய் இறங்குவதற்க்குள்ளே துணியெல்லாம் பொசுங்க தொடங்கியது.
தனக்காக அழுவதை கூட நாகரீக குறைச்சலாக நினைக்கும் ஐந்தாறு பேரை மட்டுமே சம்பாதிக்க முடிந்த நகர வாழ்வின் சதை வடிவம் எரிந்து முடிந்தது. கதவை திறந்த போது சாம்பலாக கொட்டிக்கிடந்தது.அந்த சாம்பல் குவியலில் எனது “அப்பார்ட்மெண்ட் கனவு” எந்த இடத்தில் கிடக்கிறது என பிரித்து பார்க்க முடியவில்லை.
எனது அறைக்கு போன பிறகு ஏற்பட்ட மனஓட்டம் விவரிக்க முடியாதது.என் அறையிலுருந்த சுவிட்ச் பாக்ஸில் எழுதி வைத்தேன் “சீ.ஊ.போ.” என்று. என் அறைக்கு வருபவர்கள் எல்லோரும் கேட்பார்கள் “அது என்ன சீ.ஊ.போ. என்று. “அது எனது குறிக்கோள் அவ்ளோ தான் எக்ஸ்ப்ளைன் எல்லாம் பண்ண முடியாது முடிஞ்சா கண்டு புடிச்சுக்கோங்க”என்று சொல்லி விடுவேன்.
ஒருமுறை அப்பா அறைக்கு வந்திருந்தார்.சுவிட்ச் பாக்ஸயே பார்த்துக் கொண்டிருந்தவர் “எதுக்குடா சுச்சி பொட்டீல ‘சீக்கிரம் ஊருக்கே போயிருனும்’னு எழுதி வச்சுருக்ற”என்றார். ஆம் ..ஆச்சரியமாக அவர் கண்டுபிடித்து விட்டார். அது தான் சரி.
அந்த அறையை காலி செய்து கொண்டு வந்த பிறகு வெங்காயம் படத்தின் post productionக்காக தான் சென்னை போனேன்.
இங்கு வந்த பிறகு பணக்காரத்தனமான,நவீனத்துவமான வாழ்வை வாழ முடியாவிட்டாலும் நிம்மதியான எனக்கு பிடித்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
தேங்ஸ் டூ தேனாம்பேட்டை சுடுகாடு

'மஹிஷ சதகம்’

கடமை மறந்து கண்டபடி ஆட்சி செய்த ஒரு நாட்டின் மன்னனை கவிஞர் ஒருவர் மனம் திருந்த வைத்த வித்தியாசமான கதையை இங்கே அழகாகச் சொல்கிறார் மகா பெரியவா.


( 'மஹிஷ சதகம்’)





'ஷாஹஜின்னு ஒரு ராஜா. அவர் காலத்துல, 'குட்டிக்கவி’ன்னு ஒருத்தர் இருந்தார். பெயர்ல மட்டுமில்ல, வயசுலேயும் அப்ப அவர் குட்டியா- குழந்தையாத்தான் இருந்தார்.


ஷாஹஜிக்கு அப்புறம் அவருடைய பிள்ளை ப்ரதாப ஸிம்ஹன் ராஜாவானான். ராஜ்ய நிர்வாஹத்தைத் திறம்பட நடத்தி வந்த முக்ய அதிகாரிகளான நானாஜி ப்ரபு, சந்தர பானு, ஆனந்தராயர் முதலான பெரியவர்கள் கால க்ரமத்தில் காலமாகிவிட்டார்கள். நல்லவனான ப்ரதாப ஸிம்ஹன் துரதிருஷ்டவசமாக கல்வி, கேள்விகள் இல்லாத சில சில்லறை ஆஸாமிகளின் வசப்பட்டுவிட்டான். அவர்களை ஆலோசகர்களாக வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்ததில் ஆட்சி சீர்குலைந்து, அவனது சோணாட்டு மக்கள் பலவிதத்தில் கஷ்டப்படும்படி ஆயிற்று.


அப்போதுதான் ராஜாவை தைர்யமாக இடித்துரைக்க வேண்டுமென்று குட்டிகவி ஒரு காவியம் எழுதப் புறப்பட்டார். இப்போது 'குட்டி’யாக இல்லாமல் நல்ல வயஸு வந்தவராகவே அவர் ஆகியிருந்தார். மன்னனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்த குட்டிகவி, இக்காலத்தில் satire என்றும் irony என்றும் சொல்கிறார்களே... மறைமுகமாக, ஹாஸ்ய ரஸத்தோடு குத்திக்காட்டி எழுதுகிறார்களே... அப்படி ஒரு காவியம் எழுதுவது என்று ஆரம்பித்தார். இப்படி எழுதுவதை 'சலோக்தி’ என்பார்கள். வெளியிலே ஒன்றைச் சொல்லி உள்ளே இன்னொன்றை உணர்த்துகிற முறையையும் கையாண்டார். இந்த அணிக்கு 'அந்யாப தேசம்’ என்று பெயர். இக்காலத்திலே கார்ட்டூன் என்று போடுகிறார்கள். அதில் மநுஷர்களையே மிருகங்கள் மாதிரி கூடக் கேலியாகச் சித்திரிக்கிறார்கள். குட்டிகவி வார்த்தையாலேயே கார்ட்டூன் போட்டார்.


அந்த நூல் இப்போதும் இருக்கிறது. நூறு ச்லோகம் கொண்ட அதற்கு 'மஹிஷ சதகம்’ என்று பெயர். எருமையை ஸ்தோத்ரம் பண்ணும் நூறு பாட்டு என்று புரிகிற தோல்லியோ? தலைப்பிலேயே பரிஹாஸமாக இடித்துச் சொல்லுதல்!
'மஹிஷி’ என்று ராணிக்குப் பெயர் இருக்கிறது. 'பட்டமஹிஷி’ என்கிறோம். ஆனால் ராஜாவுக்கு 'மஹிஷன்’ என்று பேரில்லை. 'மஹி’ என்றால் பூமி என்பதை வைத்து 'மஹீசன்’ 'மஹிபதி’ என்றுதான் பெயர்கள் இருக்கின்றன.


குட்டிகவி, மஹிஷ சதகம் பண்ண ஆரம்பித்து விட்டார். அவர் 'சதகம்’ பண்ணத்தான் நினைத்தாரோ அல்லது 'ஸாஹஸ்ரீ’யாக ஆயிரம் ச்லோகம் பண்ண நினைத்தாரோ? கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோகம் பண்ணிப் பண்ணி, அவற்றை ராஜாவுக்கே அனுப்பிவைத்தார்.


அதன் ஸப்ஜெக்ட்டைச் சுருக்கமாகச் சொன்னால்... அஸத்தானவர்களைத் தன் பையில் வைத்துக்கொண்டு, அவர்களுக்கு 'ஆமாம் பூசாரி’ போடுகிற ஒரு ராஜாவுக்கு ஸேவகம் செய்து பிழைப்பதைவிட, ஒரு எருமைக்கடாவை வைத்துக் கொண்டு, அதனால் 'உழுதுண்டு வாழ்வதே மேல்’ என்பதுதான்! உழுதுண்டு வாழ்வதற்காக எதை ஏரிலே பூட்டிப் 'பின் செல்கி’றோமோ, அந்த எருமையையே 'தொழுது’ ஸ்துதிப்பதாகத்தான் ஸ்லோகங்கள் செய்தார்.


அதிலே இரண்டே இரண்டின் தாத்பர்யத்தை மட்டும் சொல்கிறேன்.


''மஹா பண்டிதரான ஸ்ரீதரர் தம் வித்யையைக் காசுக்கு விற்கிறார். ஷட்-தர்சனம் கற்ற அம்பு தீக்ஷிதர், சோற்றுக்குத் தாளம் போடுகிறார். ஷட்-தர்சனமாவது... சை! க்யாதி வாய்ந்த குட்டிகவியுங்கூட துஷ்ட தனிகரின் வாசலில் காத்துக் காத்து ஓய்ந்து போய்த் தூங்கி விழுந்துவிட்டார். இத்தனையும் எதனால்? மஹிஷேச்வரனான எருமைக் கடவுளான- உன்னை அநுஸரித்து ஆச்ரயிக்காத துர்பாக் யத்தின் பலன்தான்!'' என்று ஒரு ஸ்லோகம்.


இன்னொன்றில், 'எருமையே! ராப் பகலாக நிலத்தை உழுது உழுது ஏன் கஷ்டப்படுகிறாய்? இப்போது ராஜஸபையில் இருப்பவர்களோடு நீயும் சேர்ந்து ஸுகஜீவனம் பெறலாமே! 'எனக்கு அறிவில்லையே, ஸாமர்த்யமில்லையே!’ என்றெல்லாம் வீணுக்கு அலட்டிக் கொள்ளாதே! தற்போதைய ஸபாக்காரர் களோடு பார்த்தால் உன்னை ப்ருஹஸ்பதி என்றே சொல்லணுமாக்கும்!'' என்கிறார்.


இவர் அனுப்ப அனுப்ப ஸ்லோகங்களைப் பார்த்துக் கொண்டே போன ராஜாவுக்கு - அவனும் உள்ளூர நல்ல ஸ்வபாவமுள்ளவன் என்றேனே... அதனால், மனஸிலே நன்றாகத் தைத்து, தான் பண்ணுகிறது தப்பு என்று உணர்ந்தான்.


ராஜரீக ஹோதாவைப் பார்க்காமல் ப்ரதாப ஸிம்ஹன் குட்டிகவியிடம் போய், தனக்கு நல்லறிவு பிறந்துவிட்டதாகவும், ஞான சூன்யமான ஸ்வய நல கோஷ்டியை நீக்கிவிட்டு, விஷயமறிந்த ஸத்துக் களை ஆலோசகர்களாகப் போட்டுக்கொண்டு ஆட்சி நடத்துவதாகவும் வாக்குக் கொடுத்தான். தேசத்துக்கு உபகாரமாகத் தாம் எடுத்துக்கொண்ட காரியம் பலிதமானதில் குட்டிகவி ஸந்தோஷம் அடைந்தார்.


அதோடு, அவர் தாம் கவனம் செய்து கொண்டிருந்த பரிஹாஸ காவியத்துக்கும் 'ஃபுல் ஸ்டாப்’ போட்டுவிட்டார். அதுவரை ஸரியாக நூறு ஸ்லோகங்கள் ஆகியிருந்ததால் 'மஹிஷ சதகம்’ என்று அதற்குப் பெயர் கொடுத்து வைத்து விட்டார்.


'ராஜாதான் திருந்திவிட்டானே, ஏன் அந்த ச்லோகங்களைக் கிழித்துப் போட்டிருக்கக் கூடாது?’ என்றால், 'ராஜாவையுங்கூட ஒரு கவியானவன் அடக்கி நல்வழிக்குக் கொண்டு வரமுடியும். நாட்டை அடக்கி, ஆள்கிற வனுக்கும் மேலான சக்தியைக் கவி நிஜமாகவே பெற்றவன்’ என்பதற்கு ப்ரத்யக்ஷ நிரூபணமாக இந்தக் காவியம் இருந்து கொண்டிருக்கட்டும் என்றே கிழித்துப் போடாமல் வைத்துவிட்டார். வருங்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கும் ஒரு பாடமாக- எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று வைத்துவிட்டார்.


ராஜாவும் அந்தச் சுவடிகளை confiscate பண்ணுவது, proscribe பண்ணுவது என்று பறிமுதல், தடை செய்யாததையும் இங்கே சொல்லவேண்டும்.'


ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

Different Things Motivate Different People- BY A SON THROUGH HIS FATHER'S EYES

Author: Mr. Rajesh Kumar Arora - published in ASPIRE house magazine of Chola MS


There was a young boy who sued to come for regular practice but always played in the reserves and never made it to the soccer team eleven.  While he was practicing, his father used to sit at the far end, waiting for him.


The matches had started and for four days, he didn't show up for practice or the quarter or semi-finals.


All of a sudden he showed up for the finals, went to the coach and said, "Coach, you have always kept me in the reserves and never let me play in the finals.  But today, please let me play."


The coach said, "Son, I'm sorry, I can't let you.  There are better players than you and besides, it is the finals, the reputation of the school is at stake and I cannot take a chance." The boy pleaded, "Coach, I promise I will not let you down.  I be of you, please let me play." The coach had never seen the boy plead like this before. 


He said, ÖK, son, go, play.  But remember, I am going against my better judgment and the reputation of the school is at stake.  Don't let me down."


The game started and the boy played like a house on fire.  Every time he got the ball, he shot a goal.  Needless to say, he was the best player and the star of the game.  His team had a spectacular win.  When the game finished, the coach went up to him and said, "Son, how could I have been so wrong in my life. I have never seen you play like this before.  What happened?  How did you play so well?"


The Boy replied, "Coach, my father is watching me today".  The coach turned around and looked at the place where the boy's father used to sit.  There was no one there.  He said, "Son, your father used to sit there when you came for practice, but I don't see anyone there today."


The boy replied, "Coach, there is something I never told you.  My father was blind. Just four days ago, he died.  Today is the first day he is watching me from above.


F   Forever with my familyA   Always there for me no matter whatever it isT   The only one who's thereH   He is my Hero till the endE   Encourage me in every thing I doR   Really the only one, no one can beat him.              He is the best!

கர்நாடக இசையில் முதலில் ஊ லல்லல்லா

கடந்த ஒரு வருடமாக, மதுரை மணி அய்யரின் ரசிகர்கள் மாதம் ஒருமுறை கூடி, அவரது கச்சேரி பதிவுகளில் ஒன்றை, ரசிகர்களுக்காக ஒலிபரப்புவார்கள். லட்சுமிபுரத்தில் ஒரு நண்பர் வீட்டு மொட்டைமாடியில், சுமார் 25 முதல் 30 பேர் குழுமியிருப்பார்கள். அன்று அவருக்குப் பக்கவாத்தியம் வாசிப்பவர்கள் யார் என்று அமைப்பாளர் எஸ்.எல். நரசிம்மன் சொல்லமாட்டார். “மதுரை மணி சங்கீதம் தான் முக்கியம். வயலின், மிருதங்கம் யார் என்பதை எல்லாம் நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்’ என்பார். இந்தக் கச்சேரியைக் கேட்க பூனாவிலிருந்து ஒரு ரசிகர் விமானத்தில் வந்து இரண்டு முறை கலந்து கொண்டார்.

மயிலாப்பூர் லஸ்ஸில், சுமார் 75 பேர் வசதியாக அமரும் சிறு ஹாலில் ஒரு மாதம் இந்த நிகழ்ச்சி நடந்த போது, கூட்டம் தாங்க முடியவில்லை. 200 பேர் உட்கார்ந்து கொள்ள வேண்டி வந்தது! பாத்ரூமில்கூட ரசிகர்கள் அமர்ந்து இசை கேட்டார்கள். மேடையில் ஒரு நாற்காலியில் மணி அய்யர் படம் மட்டும். சின்ன டேப் ரிக்கார்டரில் அவருடைய இசை ஒலி நாடாவைச் சழல விட்டார்கள். கூட்டத்தைப் பார்த்த அமைப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், அடுத்த மாத நிகழ்ச்சியை கிருஷ்ணகான சபாவில் நடத்தினார். கிட்டத்தட்ட அரங்கில் முக்கால் பகுதி நிரம்பியிருந்தது. பாடகர் மறைந்து சுமார் 40 வருடங்களுக்குப் பிறகும் அவருடைய இசையைக் கேட்க பெரும்கூட்டம் வருவது மதுரை மணிக்கு மட்டுமே!
சமீபத்தில் சென்னை மியூஸிக் அகாடமி விமர்சகர்கள் கருத்தரங்கில், “ஓவியக் கண்காட்சியில், ஓவியர் இல்லாமல் நம்மால் ஓவியத்தை மட்டும் ரசிக்க முடிவது போல், பாடகர் மேடையில் இல்லாமல், அவருடைய இசையை அப்படி ரசிக்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்கள். “மதுரை மணி அய்யரின் இசையை அப்படி ரசிக்க முடியும்’ என்று மேற்படி நிகழ்ச்சிகள் நிரூபித்தன.

இசை, ஓவியம் இரண்டிலும் புகழ்பெற்ற எஸ்.ராஜம், மணி அய்யரின் சங்கீதத்தை ரசித்தவர். “தமிழிசை இயக்கம் தொடங்கும் முன்பே எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல், ஏராளமான தமிழ்ப் பாடல்களை மணி அய்யர் பாடி பிரபலப்படுத்தியிருக்கிறார்’ என்று பாராட்டியிருக்கிறார்.

தந்தை ராமசாமி அய்யரும், மாமா மதுரை புஜ்பவனம் அய்யரும் மணியின் ஆரம்ப காலத் தூண்டுதல்கள். தொடக்கத்தில் ராஜம் பாகவதரும், பின்னர் ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரும், அவருடைய ஆசான்கள். மணி அய்யரின் சுருதி சுத்தமான இசை பற்றி, “சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கலாம், மணி அய்யர் சுருதி விலகவே மாட்டார்’ என்று கோட்டுவாத்தியம் நாராயண அய்யங்கார் ஒருமுறை சொன்னார்.

மணி அய்யர் தவறாமல் வானொலியில் ஆங்கிலச் செய்தி கேட்பார். அரசியலில் ஆர்வம் இல்லை என்றாலும் செய்தியை அறிந்து வைத்திருப்பதில் அவருக்கு விருப்பம். “அவருக்க பிடித்த எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. கன்னிமாரா நூலகத்துக்குச் சென்று ஷாவின் நூல்களை விரும்பிப் படிப்பார்’ என்கிறார் அவருடைய நண்பர் வி.கே. விசுவநாதன். அதேபோல் கிரிக்கெட்டிலும் ஆர்வம் அதிகம். வானொலியில் ரன்னிங் கமென்டரி கேட்காமல் இருக்க மாட்டார்.
ஒருமுறை காஞ்சிப் பெரியவர் மயிலாப்பூர் வந்தபோது, “மணி அய்யர் வீட்டில் இருக்கிறாரா’ என்று சீடர்களிடம் விசாரித்தார். அது காலை நேரம். வீட்டில்தான் இருப்பார் என்று தெரிந்ததும், உடனே கிளம்பி கற்பகாம்பாள் நகரில் இருக்கும் மதுரை மணியின் வீட்டுக்கு வந்துவிட்டார். மணி அய்யருக்கு தூக்கிவாரிப் போட்டு விட்டது. மகா பெரியவரை பக்தியுடன் வரவேற்றார்.

“ம்... பாடு!’ என்றார் மகா பெரியவர்.

“நான் இன்னும் ஸ்நானம் கூடப் பண்ணலை, பெரியவா!’ என்று சமாளித்தார் மணி அய்யர்.

“நீ சங்கீதம் என்கிற சாகரத்தில் மூழ்கி இருப்பவன், குளிக்காவிட்டாலும் பரவாயில்லை... பாடலாம்.!’ என்றார்.
“மிருதங்கம் வாசிக்கிறவா இப்போதான் போனா...’ என்று இழுத்தார் மணி அய்யர்.

“நான் தாளம் போடுறேன் நீ பாடு’ என்று அங்கேயே உட்கார்ந்து கைகளால் தாளம் போட ஆரம்பித்துவிட்டார் மகா பெரியவர்.
வேறுவழியில்லை. காஞ்சி மகான் முன் அந்தக் காலை நேரத்தில் பாடினார் மதுரை மணி அய்யர்.

வீணை தனம்மாள் மாதிரி சுமார் ஆயிரம் பாடல்கள் மணி அய்யருக்குத் தெரியும். ஒவ்வொரு சீசனிலும் 10-12 புதிய கீர்த்தனைகளை அறிமுகப்படுத்துவார். பின்னர் 3-4 என்று குறைத்துக் கொண்டாராம்.

பல ஆண்டுகளுக்கு முன், திருச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் இலக்கியவாதி கு.ப.ராஜகோபாலனின் குடும்ப நிதிக்காக மணி அய்யர் செய்த கச்சேரி முடிவில் பேசிய தேசத் தொண்டர் டாக்டர் சாமிநாத சாஸ்திரியார், “மதுரை மணி அய்யர் என்பதைவிட மதுரமணி அய்யர் என்பதே பொருந்தும்’ என்று கூறினார்.

“மகாத்மா காந்தி மணிமொழி வழிநடப்போம்’ என்று எழுத்தாளர் சிட்டி, மதுரை மணி அய்யரிடம் ஒரு பல்லவி எழுதிக் கொடுத்தார். காந்திஜி ஜனவரி 30 அன்று சுடப்பட்டு இறந்ததற்கு நாலைந்து நாட்கள் கழித்து அவர் திருச்சி வந்தபோது எழுதிய பல்லவி அது. உடனே ஷண்முக ப்ரியாவில் மெட்டமைத்து, கூடவே கானடா ராகத்தில் சுவரம் பாடி அமர்க்களப்படுத்திவிட்டார் மணி அய்யர்.

இசை வல்லுனராக டாக்டர் எஸ்.ஏ.கே. துர்க்கா, மதுரை மணி அய்யரின் ராக ஆலாபனை தனித்துவம் வாய்ந்தது என்று புகழ்ந்திருக்கிறார். சின்னச் சின்ன சங்கதிகளாகப் பாடி கடைசியில் ஒன்றாக இணைப்பாராம். அதில் கார்வைகள் நிறைந்திருக்கும். அந்த சஞ்சாரங்களில் சுவரங்களின் ஆதிக்கம் அதிகமாம். நிரவலுக்கு அவர் தேர்ந்தெடுக்கும் வரிகள் நல்லனவாக, முழு அர்த்தம் தெரிவிப்பதாக இருக்கும்.

காபிநாராயணி, கௌடமல்ஹார், ரசாளி, விஜயனாகரி எல்லாம் மதுரை மணி அய்யர் பிரபலப்படுத்திய அபூர்வ ராகங்கள்.
அக்டோபர் 12, 1912 அன்று பிறந்த மதுரை மணி அய்யருக்கு, பன்னிரண்டாவது வயதில் ராமநாதபுரம் அலவக்கோட்டை கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் கச்சேரி. அவர் பிரபலமான பின்னரும் அவரைத் தேடி வந்து கச்சேரி செய்யுமாறு கேட்ட எவருக்கும் அவர் ஏமாற்றம் அளித்ததில்லை. சன்மானம் குறித்து அவர் கவலைப்பட்டதும் இல்லை. அதற்காகப் பேரம் பேசியதும் இல்லை. கச்சேரிகளில் பணம் வாங்கிக் கொண்டு பாடுவதால் “நிதி சால சுகமா’ என்ற தியாக ராஜரின் கிருதியை அவர் பாடுவதே இல்லை.

மதுரை மணி அய்யரின் பாட்டைக் கேட்டு மயங்கிய இளைஞர் பாலசுப்பிரமணியன், ஐ.ஐ.டி. மாணவர். கடைசித் தேர்வு எழுத வேண்டும். அன்று காலை மதுரை மணி அய்யரின் கச்சேரி ரேடியோவில் ஒலிபரப்பாகிறது என்று அறிவித்தார்கள். பாலு பரீட்சைக்குப் போகவே இல்லை. “மதுரை மணியின் இசையைவிடவா ஐ.ஐ.டி பரிட்சை முக்கியம் என்று உட்கார்ந்து முழுக் கச்சேரியையும் கேட்டேன்!’ என்றார் பாலு. பின்னர் அவர் இந்தியன் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார்.

மதுரை மணி அய்யரின் கடைசிக் கச்சேரியை, சென்னை மியூசிக் அகாடமியில் கேட்ட நினைவு இருக்கிறது. அரங்கம் மேலேயும் கீழேயும் நிரம்பி வழிந்தது. சம்மணம் இட்டு அமர்ந்த வாக்கிலேயே அவரை ரசிகர்கள் சிலர் மேடையில் கொடு வந்து உட்கார வைத்தனர். திரை விலகியே இருந்ததால் இந்தக் காட்சியை கண்ட அத்தனை ரசிகர்களும் நெகிழ்ந்து போய்விட்டனர். கச்சேரி முடித்தபின் அந்த நெகிழ்ச்சி அப்படியே மகிழ்ச்சியானது.

மயிலை கபாலி கோயிலில் அவர் கச்சேரி நடக்கும்போது, கூட்டம் நிரம்பி வழியும். அதில் ரிக்ஷா ஓட்டுபவர் நிறையப் பேர் இருப்பார்கள். அவர்களைக் கச்சேரி முடிவதற்கு முன்னால் யாராவது வீடு திரும்பக் கூப்பிட்டால் வரமாட்டார்கள். கந்தன் கருணை புரியும் வடிவேல், எப்போ வருவாரோ, இங்கிலீஷ் நோட்டு எல்லாம் கேட்ட பிறகுதான் சவாரிக்கு வருவார்கள்! பண்டிதர் முதல் பாமரர் வரை தம் இசையால் மயக்கி வைதிருந்தார் மணி அய்யர்.

“அட, அதை எல்லாம் விடுங்கள். அவர் அன்றைக்கே ராக ஆலாபனை பண்ணும்போது, தரனன்னவுக்கு பதில், ஊ லல்லல்ல என்று பாடியிருக்கிறார் தெரியுமா?’ என்று ஒரு மதுரை மணி ரசிகர் வேடிக்கையாகக் கேட்டார். அவர் பாடுவதை நினைவுபடுத்திக் கொண்டபோது, அது உண்மைதான் என்று தோன்றிற்று!