Saturday 20 October 2012

KaRRadhum suTTadhum-Ashtanga Yogam




அஷ்டாங்க யோகம்:


ஈசன் திருவருளால் தெளிந்த ஞானத்தைப் பெற்று, அதனால் யோகத்தைக்
கடைப்பிடித்தால் பிறவாப் பேரின்பமாகிய முக்தி கிட்டும். ஈசன் சனகாதி
முனிவர்களுக்கு கூறிய யோக சாரம் ஜனகர், அத்திரி, வியாசர் முதலியோரால்
உலகின் பிரசித்தமாயிற்று.


1. பற்றின்றி இருத்தல் இயமம். இது உண்மை பேசுவதாலும் ஒழுக்கம்
வழுவாமையாலும் பற்றற்ற தன்மையாலும் ஏற்படும். மனம், வாக்கு, காயம்
இம்மூன்றாலும் பெண்களைத் தீண்டாது இருப்பது பிரம்மச்சரிய நெறி,
தூய்மையாக இல்லறத்தை நடத்துவதும் பிரம்மச்சரிய நெறியைச் சேர்ந்ததே
வானப்பிரஸ்த ஆசிரமம் கடைபிடிப்போர் முற்றும் துறந்த சந்நியாசிகள்,
மனைவியருடன் காட்டில் உறைவர்.


2. பற்றற்று இருக்குமாறு உள்ளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது
நியமம். இதன் மூலம் சவுசம், தவம், மகிழ்ச்சி, ஜபம், சிவ பிரணிதானம்
ஆகியவற்றை அடையலாம். ஆசையின்மை என்ற மண்ணால், ஞான நீரில்
உள்ளத்தை நீராட்டித் தூய்மை செய்தல் அகச்சவுசம் எனப்படும். புனித நீராடி,
திருநீறு அணிதல் புறச்சவுசமாகும். தவம் என்பது சாந்திராயண விரதம்
அனுஷ்டிப்பதாகும். அதாவது, வளர்பிறை அமாவாசை அன்று உபவாசம்
இருந்து மறுநாள் முதல் நாள் ஒரு கவளம், இரண்டாம் நாள் இரண்டு கவளம்
என்று கூட்டிக் கொண்டே சென்று பௌர்ணமி அன்று மறுபடியும் உபவாசம்
இருக்க வேண்டும். பின்னர் தேய்பிறையில் நாளொன்றுக்கு ஒரு கவளமாக
குறைத்துக் கொண்டே வந்து அமாவாசை தினம் திரும்பவும் உபவாசம் இருக்க
வேண்டும். மறைநெறிகளில் நின்று ஆசிரம நிலைகளுக்கு ஏற்ப இருப்பது
மகிழ்ச்சி ஆகும். ஈசனைத் தியானித்தல் சிவப்பிரணிதானம் ஆகும்.

3. ஆசனம் : யோக நிலைக்கான அங்கங்களில் ஆசனமும் ஒன்று. அது
பத்மாசனம் போன்ற பல. அவற்றில் ஒன்றைக் கடைபிடிக்க வேண்டும்.

4. பிராணாயாமம் : ஏதேனும் ஒரு பொருத்தமான ஆசனத்தில் அமர்ந்து
பிராணாயாமம் செய்ய வேண்டும். அது மூன்று வகை. பிராணாயாமம் செய்யும் போது வியர்வை தோன்றினால் அதமம், மனதில் சஞ்சலம் இருந்தால் மத்திமம், சிந்தையில் மகிழ்ச்சி ஏற்படின் உத்தமம். ரேதஸ் மேல் நோக்கி எழும் மந்திரம் ஜபித்துப் பிராணாயாமம் செய்வது சகற்பம் என்றும், இன்றி செய்வது விகற்பம் என்றும் பெயர் பெறும். நம் உடலில் பத்து வித வாயுக்கள் உள்ளன.


1. உயிருக்கு அத்தியாவசியமானதால் இதயத்தில் தங்குவது பிராணவாயு.

2. கீழ்நோக்கிப் பிரிவது அபானவாயு.

3. உடலெங்கும் நிறைந்து இரத்த ஓட்டம், சீரணமான உணவு உடலில் பரவ
உதவுவது வியானவாயு.

4. உறுப்புகளின் சந்திகளில் தங்குவது உதானவாயு.

5. உடலைச் சமனப்படுத்தவது சமன வாயு.

6. விக்கல், கக்கல் ஏற்படக் காரணமானது கூர்ம வாயு.

7. தும்மலை உண்டாக்குவது கிரிகா வாயு.

8. கொட்டாவிக்கு உதவுவது தேவதத்தவாயு

9. உடலை வீங்கச் செய்வது தனஞ்செய வாயு.

10. நாகன் வாயு - பாடுதல், கண் சிமிட்டல், மயிர்க்கூச்சலுக்கு உதவுவதுஇந்தப் பத்துவித வாயுக்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளல் மிகவும்
அவசியம்.

5. பிரத்தியாகாரம் : இச்சைகளினால் பாதிக்கப்படும் ஐம்புலன்களைத் தடுத்து
நிறுத்துவது இது.

6. புலன்களை அடக்கி மனதில் தெளிவை ஏற்படுத்தி ஒரு நிலையில்
நிறுத்துவது தாரணை.


7. ஆதியந்தமில்லாப் பரம்பொருளை மனக்கண்முன் நிறுத்தி நிலைப்பது
தியானம் ஆகும்.

8. ஈசனைத் தியானித்து மனம் உருகி மெய் மறந்த நிலையில் இருப்பது சமாதி
ஆகும். இந்த எட்டும் யோக அங்கங்கள் ஆகும்.

MahA periaVa- Amazing Article

Listen to Guru, Think of Guru, Pray to Guru. Follow Guru's path.  Adhere to Guru.. What not....

The 54 Lives Saved by Annai! (Mahima of Sringeri Sri SharadambaL)
Author: Sri Ramani Anna (in Tamil)
Source: Sakthi Vikatan issue dated Oct 10, 2007
Translator: saidevo

Series: Wonders Witnessed by this Adiyavan

This happened several years ago. We decided on a yAtrA (pilgrimage) to the kSetras (holy places) in Karnataka, more than fifty devotees of us teaming up for the tour. We started our journey in a large tourist bus. It was our custom to first go to Kanchi, have darshan of PeriyavaaL and then continue our journey.

Around 4 o' clock in the afternoon of that day we stood up after prostrating to Maha SwamigaL in SriMaTham. Giving us his blessings, laughing and raising both his hands SwamigaL asked, "You people have come as a large ghoSTi... well, what's the matter?" Forthwith I elaborated on the details of our Karnataka yAtrA to SwamigaL.

Feeling happy he asked, raising his eyebrows, "What is the uddesha (motive) about the first place to go?" I said, "It is our uddesha, Periyavaa, that on reaching Mangalore, we would first go to Talakkaveri, do our saMkalpa snAnam (bath and prayer) there and then go to Sringeri. After that we have decided to have darshan at SubrahmaNya, Dharmasthala, Udipi, Kollur Mukambika, Kateel Durga Parameswari... in this order."

Before I could finish SwamigaL interrupted me. "Wait, wait... In the list you have mentioned, you have missed an important place..." Looking at us who were all standing with a question mark on our faces, and smiling, Periyavaa advised us, "What, you don't understand? I shall tell you... Horanadu kSetra! Mother is staying there as Annapurani, giving her anugraham. A very special place. Must have darshan!"

He continued: "You people do as I tell you now. First go to Sringeri kSetram from Mangalore. There, do your snAnam in Tunga, first have Guru Darshan, get prasAdam from them, then have darshan of SharadambaL and start from there (to other places). After this, you may go to the places in your order of preference. Let one thing be kept in mind though. Anyday you go to Sringeri, as far as possible, reach the place before sAyarakSai (evening)."

All of us nodded our heads in affirmation, prostrated and got up. That Walking God ordered distribution of anugraha prasAdam to us all. The driver and conductor of the bus were called and the prasAdam given to them too. We started thereafter.

On the next morning, our journey from Bangalore to Mangalore. We stayed in a Kalyana Mandapam in Mangalore at night. On the morning the next day we got ready to move after taking bath. A man named Ramanathan who accompanied us came to me and said persuadingly, "We shall first go to Talakkaveri from here. After doing our saMkalpa snAnam there, why not go to Sringeri later?"

I did not agree to that. "Whatever uttaravu (direction) Kanchi Periyavaa has given, we should only follow that!", I said. It was not acceptable to them. "First we should go to Talakkaveri only!" they compelled me, as if having discussed it already among them. However much I pleaded with them, nobody was prepared to lend me ears.

The bus travelled towards Talakkaveri. Staying there for a day and after finishing our saMkalpa snAnam, we started our journey towards Sringeri. It was 8:00 o' clock in the night. Both the front tyres of the bus that was going on the mountain road to Sringeri got punctured and the bus stopped. It was pitch dark outside. In the light from a torch light, Driver and Conductor started working on removing the wheels with the punctured tyres and fixing the Stepney wheels in their place. Hunger pinched our stomach; our last meal was at noon in Bagamandala. Somehow the bus started moving at 10 o' clock. Suddenly it started drizzling. It was 11 o' clock and yet there was no sight of Sringeri. Only then we had the doubt whether we were going on the right road! As God-given, we sighted a man coming in the distance. We stopped the bus near him and inquired. He patted on his head and said, "This road leads to another place. 15 km before you should have turned on the road that branched to the right." It gave us a shock!

So the bus needed to be turned towards the direction we came. Driver got down and had a look. A narrow road, with valleys on both sides. Climbing onto his seat, Driver said with a falsely assured courage, "You people don't worry. I shall back up little by little with sharp turns on the steering wheel and somehow move the bus to an about turn!" and got on the task. Sitting with fear, we started chanting Rama Namam. Somehow having managed to turn the bus ninety degrees, Driver said in a loud voice, suddenly worried, "Sir, sir... Howevermuch I step on the brake, the bus starts slipping behind! Raise an even louder ghoSaNam (proclammation) in the name of God... Only He should save us all now!" His words had the effect of dissolving tamarind inside our belly. We too felt the bus slipping behind. All of us with tears welling up in our eyes started wailing, "Sringeri Sharadambaa, save us Ma! Sringeri Maha Sannidhaname, save us! Kanchi PeriyavaaLe, Ramachandra Murtiye, save us, save us...!"

Suddently Driver said, "Sir, I have now taken my leg from the brake! The vehicle is not slipping behind! As if a hundred people are supporting it from behind, the vehicle stands intact! Now no worry at all. Shall turn the bus in a few moments" and started on his efforts. We did not stop the nAma ghoSaNam.

appAda! (At last) the driver managed to turn the bus. All of us breathed a sigh of peace! It was exactly 12:00 hours midnight. Exactly at one-thirty we reached the entrance to Sringeri Samasthanam. A GanapadigaL who was standing at the entrance to receive us (it is my recollection that it was Nageswara GanapadigaL!) said with a laugh, "Vaango, vaango! You are all coming from Madras, right? First wash your hand and feet and come have some food. You would be hungry. Rice Uppuma and Bringal Gotsu are ready!"

"How do you know, ShastrigaaL that we are coming? We did not even write to you?" I asked him. He said laughing, "It is vAstavam (true) that your coming will not be known to people who are like us. Maha Sannidhanam, dIrgha darshigaL (with foresight) will be knowing everything, you see? It was only Maha Sannidhanam who called me around eleven o' clock and gave orders, 'To have darshan of Sharada, 54 Bhaktas from Madras are coming in a bus. They all come with great hunger! So ask our people to prepare Rice Uppuma and Gotsu and keep the food ready. In addition, for them to stay, arrange a large hall.' After arranging all that I have come to stand here and receive you all!" He sunk us in surprise.

Seeing the dIrgha dharsanam and karuNa (compassion) of SriSriSri Abhinava Vidyatheertha SwamigaL, ADiyEn (I) wondered. Tears rushed to my eyes. Seeing that ShastrigaL said, "You are amazed at this thing... I am going to tell you another thing in the morning; you would then be really stunned!" and led us on. Hot Uppuma and Gotsu were served ready in 54 nuni (top) banana leaves. We ate the food filling up our stomach.

The next morning. Finishing our snAnam in the Tunga river, we started to have darshan of Maha Sannidhanam SriSriSri Abhinava Vidyatheertha SwamigaL. The ShastrigaL we met last night was seen by us.

To him I asked joining my palms, "You said you would tell us some vishayam (news) in the morning. I pray that you please tell it now."

ShastrigaL started talking: "Would have been around 12 o' clock last night. Sitting in his ekAnta (private) room, Maha Sannidhanam was examining some Shastra books. I was sitting in the outer hall. Suddenly coming out, Maha Sannidhanam kept both his hand pressed hard to the wall and started murmurming some mantra. I too got up. From the posture of Maha Sannidhanam it seemed as if he was supporting the wall from falling. I did not understand anything. Five minutes later, taking his hands off the wall, Maha Sannidhanam came to me and said, 'You witnessed and wondered why I kept my hands against the wall in that pose and did some Japam. It is nothing else. The bus wherein came those people from Madras to have darshan of SharadambaL missed its way. Later when they realized the mistake and turned the bus, the brakes did not apply... bus started moving behind on its own. The Bhaktas in them wailed, 'save us, save us!' calling aloud the name of Amma Sharada. So I supported the bus from slipping behind by resting my hands on the walls. Now everything is alright, and the bus is coming towards Sringeri! You go and make the arrangements as I told you', and went inside his room. I stood stunned!" Listening to this, all of us wept. We started to have darshan of that Walking ShAradAmbAL.

Looking at this ADiyEn who prostrated and got up, SriSriSri Maha Sannidhanam said laughingly, "Should always listen to what the Mahaans say. And follow it. If you make a change in it everything that happens would be changed too. What, you understand?" With these words he did anugraha of prasAdam. This ADiyEn then realized that Maha Sannidhanam only informed in sUcaka (by indicating) to the fact of our not following what Sri Kanchi Periyavaa ordered for us!

Glossary:
sUcaka - indicating, betraying, informer, sign, omen
ghoSTi - group, gathering


Thursday 18 October 2012

Karrathum suttadhum Part 9- Poetry from father to Son

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!


வசதியாகத்தான் இருக்கிறது மகனே…

நீ கொண்டு வந்து சேர்த்த

முதியோர் இல்லம்

பொறுப்பாய் என்னைஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ

வெளியேறிய போது, முன்பு நானும்

இது போல் உன்னை

வகுப்பறையில் விட்டு விட்டு

என் முதுகுக்குப் பின்னால்

நீ கதறக் கதறக்

கண்ணீரை மறைத்தபடி

புறப்பட்ட காட்சி

ஞாபகத்தில் எழுகிறது!



முதல் தரமிக்க

இந்த இல்லத்தை

தேடித் திரிந்து

நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட

அன்று உனக்காக நானும்

பொருத்தமான பள்ளி

எதுவென்றே

ஓடி அலைந்ததை

ஒப்பீடு செய்கிறேன்!



இதுவரையில்

ஒருமுறையேனும்

என் முகம் பார்க்க

நீ வராமல் போனாலும்

என் பராமரிப்பிற்கான

மாதத் தொகையை

மறக்காமல்

அனுப்பி வைப்பதற்காக

மனம் மகிழ்ச்சியடைகிறது

நீ விடுதியில்

தங்கிப் படித்த காலத்தில்

உன்னைப் பார்க்க வேண்டும் என்ற

ஆவல் இருந்தாலும்

படிப்பை நினைத்து

உன்னை சந்திக்க மறுத்ததன்

எதிர்வினையே இதுவென்று

இப்போது அறிகிறேன்!



இளம் வயதினில்

நீ சிறுகச் சிறுக சேமித்த

அனுபவத்தை

என் முதுமைப் பருவத்தில்

மொத்தமாக எனக்கே

செலவு செய்கிறாய்

ஆயினும்…

உனக்கும் எனக்கும்

ஒரு சிறு வேறுபாடு

நான் கற்றுக்கொடுத்தேன்

உனக்கு…

வாழ்க்கை இதுதானென்று

நீ கற்றுக் கொடுக்கிறாய்

எனக்கு…

உறவுகள் இதுதானென்று!

karrathum suttadhum -Part 8 - What is life ?

சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான்.

நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போக வேண்டிய திசை வேறு.

போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.

கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.


ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...

‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர வில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள். பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்!

நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Friday 12 October 2012

MahA periavA- 2

Meeting a Russian

Many years ago, some Russian scholars had come to Chennai for a research on Hindu culture. Maha Swami was then camping at Mylapore and so they had darshan of Him and took many photographs of Him. They gave the photographs to the Russian Ancient Culture Academy in Russia also.

In 1987, Russia held a festival of Indian Culture in the Soviet Cultural Academy in Chennai. Dr.Padma Subramanyam (PS) gave a lecture on Bharatham, Kutchipidi, etc. Then, she was invited to Russia, where she met Prof.Ribakov, who was the chief of Russian Scientific Academy and Russian Ancient Culture Institute.

She was surprised to see a portrait of Maha Periava in his room. When asked, he said it was given by a friend who had visited Him in Chennai and he also wanted to meet Him and clarify a few doubts. Subsequently, he came to Chennai and Dr.PS accompanied him to Kanchipuram. But, Maha Swami was down with fever and the sishyas said they cannot meet Him. They were disappointed and didn't know what to do.

Just then another sishya came to them and said that Periava asked them to come in. They went in, and Prof.Ribakov and Periava kept looking at each other for a while. Then, Dr.PS asked the Prof to clarify his doubts. But the Prof said that all his doubts have already been clarified.

Now comes the best part. Periava asked 'Russians speak their language mixed with Sanskrit, but in Northern Russia do they speak the language without any mix of Sanskrit?' Ribakov was surprised and said 'yes'.

Then Periava said, ' you say Russia now. In the ancient times it was known as Rishivarsham. You know why? That is where Rishis like Yagnavalkiyar were running a Vedic Research Center. Then he spoke about the history of Russia at length. Then the Prof said that he wanted to become a Hindu.

Periava said 'you already are'.But the Prof insisted on a Hindu name for him. Periava laughed and said ' he has grey beard like Rishis. So, from now on his name is Rishi'.

Well, that Rishi, runs a branch of Ramakrishna mutt in Moscow now.

Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam


Maha Periava 1

Though published many timesand read by many AsthikAs,  writing about Him again and again will not diminish or bore.  Here is my first article.

பல வருடங்களுக்கு முன் கரூரைப் பூர்விகமாகக் கொண்டராமநாத கனபாடிகள் என்கிற வேதவித்வான் ஸ்ரீரங்கத்தில்வசித்து வந்தார். அவர் மனைவி தர்மாம்பாள்;ஒரே மகள் காமாட்சி.

அவர் வேதங்களைக் கரைத்துக் குடித்திருந்தாலும் வைதீகத்தைவயிற்றுப் பிழைப்பாகாக் கொள்ளவில்லை. உபன்யாசம்பண்ணுவதில் கெட்டிக்காரர். அதில், அவர்களாகப் பார்த்துஅளிக்கிற சன்மானத் தொகையை மட்டும் மகிழ்ச்சியுடன்பெற்றுக்கொள்வார். ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகளிடம்மிகுந்த விசுவாசமும் பக்தியும் உள்ள குடும்பம்.

இருபத்திரண்டு வயதான காமாட்சிக்குத் திடீரெனத் திருமணம்நிச்சயமானது. ஒரு மாதத்தில் திருமணம். மணமகன்ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியர்.

தர்மாம்பாள் தன் கணவரிடம் கேட்டாள்,"பொண்ணுக்குக்கல்யாணம் நிச்சியமாயிடுத்து, கையிலே எவ்வளவுசேர்த்து வெச்சிண்டிருக்கேள்?" கனபாடிகள் பவ்யமாக,"தாமு, ஒனக்குத் தெரியாதா என்ன? இதுவரைக்கும்அப்படி இப்படின்னு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சிருக்கேன்சிக்கனமா கல்யாணத்தை நடத்தினா இது போதுமே"என்று சொல்ல, தர்மாம்பாளுக்குக் கோபம் வந்துவிட்டது.

"அஞ்சாயிரத்த வெச்சுண்டு என்னத்தப் பண்ண முடியும்?நகைநட்டு, சீர்செனத்தி,பொடவை, துணிமணி வாங்கி,சாப்பாடுபோட்டு எப்படி கல்யாணத்தை நடத்த முடியும்? இன்னும்பதினையாயிரம் ரூவா கண்டிப்பா வேணும். ஏற்பாடுபண்ணுங்கோ!" இது தர்மாம்பாள்.

இடிந்து போய் நின்றார் ராமநாத கனபாடிகள்.

உடனே தர்மாம்பாள், "ஒரு வழி இருக்கு, சொல்றேன், கேளுங்கோ,கல்யாணப் பத்திரிகையைக் கையிலே எடுத்துக்குங்கோ, கொஞ்சம்பழங்களை வாங்கிண்டு நேரா காஞ்சிபுரம் போங்கோ, அங்கேஸ்ரீமடத்துக்குப் போய் ஒரு தட்டிலே பழங்களை வெச்சு,கல்யாணப்பத்திரிகையையும் வெச்சு மகா பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிஷயத்தைச் சொல்லுங்கோ. பதினைந்தாயிரம் பண ஒத்தாசைகேளுங்கோ...ஒங்களுக்கு 'இல்லே'னு சொல்லமாட்டா பெரியவா"என்றாள் நம்பிக்கையுடன்.

அவ்வளவுதான்...ராமநாத கனபாடிகளுக்குக் கட்டுக்கடங்காத கோபம்வந்துவிட்டது. "என்ன சொன்னே..என்ன சொன்னே நீ!பெரியவாளைப் பார்த்துப் பணம் கேக்கறதாவது...என்ன வார்த்தபேசறே நீ" என்று கனபாடி முடிப்பதற்குள்.....

"ஏன்? என்ன தப்பு? பெரியவா நமக்கெல்லாம் குருதானே? குருவிடம்யாசகம் கேட்டால் என்ன தப்பு?" என்று கேட்டாள் தர்மாம்பாள்.

"என்ன பேசறே தாமு? அவர் ஜகத்குரு. குருவிடம் நாம "ஞான"த்தைத்தான்யாசிக்கலாமே தவிர, "தான"த்தை [பணத்தை] யாசிக்கப்படாது"என்று சொல்லிப் பார்த்தார் கனபாடிகள். பயனில்லை. அடுத்த நாள்"மடிசஞ்சி"யில் [ஆசாரத்துக்கான வஸ்திரங்கள் வைக்கும் கம்பளி்ப் பை]தன் துணிமணிகள் சகிதம் காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டுவிட்டார்கனபாடிகள்.

ஸ்ரீமடத்தில் அன்று மகா பெரியவாளைத் தரிசனம் பண்ண ஏகக் கூட்டம்.ஒரு மூங்கில் தட்டில் பழம், பத்திரிகையோடு வரிசையில் நின்றுகொண்டிருந்தார் ராமாநாத கனபாடிகள். நின்றிருந்த அனைவரின்கைகளிலும் பழத்துடன் கூடிய மூங்கில் தட்டுகள்.

பெரியவா அமர்ந்திருந்த இடத்தைக் கனபாடிகள் அடைந்ததும்அவர் கையிலிருந்த பழத்தட்டை ஒருவர் வலுக்கட்டாயமாகவாங்கி, பத்தோடு பதினொன்றாகத் தள்ளி வைத்துவி்ட்டார்..இதைச் சற்றும் எதிர்பார்க்காத கனபாடிகள், "ஐயா...ஐயா...அந்ததட்டிலே க்ல்யாணப் பத்திரிகை வெச்சிருக்கேன். பெரியவாளிடம்சமர்ப்பிச்சு ஆசி வாங்கணும். அதை இப்படி எடுங்கோ" என்றுசொல்லிப் பார்த்தார். யார் காதிலும் விழவில்லை.

அதற்குள் மகா ஸ்வாமிகள்,கனபாடிகளைப் பார்த்துவிட்டார்.ஸ்வாமிகள் பரம சந்தோஷத்துடன், "அடடே! நம்ம கரூர் ராமநாதகனபாடிகளா? வரணும்..வரணும். ஸ்ரீரங்கத்தில் எல்லோரும்க்ஷேமமா? உபன்யாசமெல்லாம் நன்னா போயிண்டிருக்கா?"என்று விசாரித்துக் கொண்டே போனார்.

"எல்லாம் பெரியவா அனுக்கிரகத்துலே நன்னா நடக்கிறது"என்று சொல்லியபடியே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம்பண்ணி எழுந்தார். உடனே ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே,"ஆத்திலே...பேரு என்ன...ம்..தர்மாம்பாள்தானே? சௌக்யமா?ஒன் மாமனார் வைத்யபரமேஸ்வர கனபாடிகள். அவரோடஅப்பா சுப்ரமண்ய கனபாடிகள். என்ன நான் சொல்ற பேரெல்லாம்சரிதானே?" என்று கேட்டு முடிப்பதற்குள், ராமநாத கனபாடிகள்"சரிதான் பெரியவா, என் ஆம்படையா [மனைவி] தாமுதான்பெரியவாளைப் பார்த்துட்டு வரச் சொன்னா.."என்று குழறினார்.

"அப்போ, நீயா வரல்லே?"; இது பெரியவா.

"அப்படி இல்லே பெர்யவா. பொண்ணுக்குக் கல்யாணம்வெச்சுருக்கு, தாமுதான் பெரியவாளை தரிசனம் பண்ணிட்டுபத்திரிகையை சமர்ப்பிச்சு.." என்று கனபாடிகள் முடிப்பதற்குள்"ஆசீர்வாதம் வாங்கிண்டு வரச் சொல்லியிருப்பா" என்று பூர்த்திபண்ணிவிட்டார் ஸ்வாமிகள்.

பதினையாயிரம் ரூபாய் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்றுபுரியாமல் குழம்பினார் கனபாடிகள். இந்நிலையில் பெரியவா,"உனக்கு ஒரு அஸைன்மெண்ட் வெச்சிருக்கேன். நடத்திக்கொடுப்பியா?" என்று கேட்டார்.

"அஸைன்மெண்டுன்னா பெரியவா?" இது கனபாடிகள்.

"செய்து முடிக்கவேண்டிய ஒரு விஷயம்னு அர்த்தம்.எனக்காகப் பண்ணுவியா?"

பெரியவா திடீரென்று இப்படிக் கேட்டவுடன், வந்த விஷயத்தைவிட்டுவிட்டார் கனபாடிகள். குதூகலத்தோடு,"சொல்லுங்கோ பெரியவா, காத்துண்டிருக்கேன்"என்றார்.

உடனே பெரியவா, "ஒனக்கு வேற என்ன அஸைன்மெண்ட்கொடுக்கப் போறேன்? உபன்யாசம் பண்றதுதான். திருநெல்வேலிகடையநல்லூர் பக்கத்துல ஒரு அக்ரஹாரம் ரொம்ப மோசமானநிலையில் இருக்காம். பசு மாடெல்லாம் ஊர்ல காரணமில்லாமசெத்துப் போய்டறதாம். கேரள நம்பூதிரிகிட்டே ப்ரஸ்னம் பார்த்ததுலபெருமாள் கோயில்ல "பாகவத உபன்யாசம்" பண்ணச் சொன்னாளாம்.ரெண்டு நாள் முன்னாடி அந்த ஊர் பெருமாள் கோயில் பட்டாச்சாரியார்இங்கே வந்தார். விஷயத்தைச் சொல்லிட்டு,"நீங்கதான் ஸ்வாமி"பாகவத உபன்யாசம்" பண்ண ஒருத்தரை அனுப்பி உதவிபண்ணணும்"னு பொறுப்பை என் தலைல கட்டிட்டுப் போயிட்டார்.நீ எனக்காக அங்கே போய் அதைப் பூர்த்தி பண்ணி்ட்டு வரணும்.விவரமெல்லாம் மடத்து மானேஜருக்குத் தெரியும் கேட்டுக்கோசிலவுக்கு மடத்துல பணம் வாங்கி்க்கோ. இன்னிக்கு ராத்திரியேவிழுப்புரத்தில் ரயில் ஏறிடு. சம்பாவனை [வெகுமானம்] அவாபார்த்துப் பண்ணுவா. போ..போ...போய் சாப்டுட்டு ரெஸ்ட்எடுத்துக்கோ" என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு பக்தரிடம்பேச ஆரம்பித்துவிட்டார் ஸ்வாமிகள்.

அன்றிரவு விழுப்புரத்தில் ரயிலேறிய கனபாடிகள் அடுத்த நாள்மதியம் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கினார். பெருமாள் கோயில்பட்டர் ஸ்டேஷனுக்கே வந்து கனபாடிகளை அைழைத்துச் சென்றார்.

ஊருக்குச் சற்று தொலைவில் இருந்தது அந்த வரதராஜப் பெருமாள்கோயில். கோயில். பட்டர் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டார்.கனபாடிகள். ஊர் அக்ரஹாரத்திலிருந்து ஓர் ஈ காக்காகூடகனபாடிகளை வந்து பார்க்கவிலை. "உபன்யாசத்தின்போது எல்லோரும்வருவா" என அவரே தன்னை சமாதானப் படுத்திக்கொண்டார்.

மாலை வேளை, வரதராஜப் பெருமாள் சந்நிதி முன் அமர்ந்துஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தைக் காஞ்சி ஆச்சார்யாளைநினைத்துக்கொண்டு ஆரம்பித்தார் கனபாடிகள். எதிரேஎதிரே ஸ்ரீவரதராஜப் பெருமாள், கோயில் பட்டர்,கோயில் மெய்க்காவல்காரர். இவ்வளவு பேர்தான்.

உபன்யாசம் முடிந்ததும், "ஏன் ஊரைச் சேர்ந்த ஒத்தருமேவரல்லே?" என்று பட்டரிடம் கவலையோடு கேட்டார்கனபாடிகள்.

அதற்கு பட்டர்,"ஒரு வாரமா இந்த ஊர் ரெண்டுபட்டுக்கிடக்கு! இந்தக் கோயிலுக்கு யார் தர்மகர்த்தாவாக வருவதுஎன்பதிலே ரெண்டு பங்காளிகளுக்குள்ளே சண்டை, அதைமுடிவு கட்டிண்டுதான் "கோயிலுக்குள்ளே நுழைவோம்"னுசொல்லிட்டா. உப்ன்யாசத்துக்கு நீங்க வந்திருக்கிற சமயத்துலஊர் இ்ப்படி ஆயிருக்கேனு ரொம்ப வருத்தப்படறேன்" என்றுகனபாடிகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண் கலங்கினார்.

பட்டரும், மெய்க்காவலரும்,பெருமாளும் மாத்திரம் கேட்கஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தை ஏழாவது நாள் பூர்த்தி பண்ணினார்,ராமநாத கனபாடிகள். பட்டாச்சார்யார் பெருமாளுக்கு அர்ச்சனைபண்ணி பிரசாதத் தட்டில் பழங்களுடன் முப்பது ரூபாயைவைத்தார். மெய்க்காவல்காரர் தன் மடியிலிருந்து கொஞ்சம்சில்லரையை எடுத்து அந்தத் தட்டில் போட்டார். பட்டர்ஸ்வாமிகள் ஒரு மந்திரத்தைச் சொல்லி சம்பாவனைத் தட்டைக்கனபாடிகளிடம் அளித்து , "ஏதோ இந்த சந்தர்ப்பம் இப்படிஆயிடுத்து. மன்னிக்கணும்.ரொம்ப நன்னா ஏழு நாளும் கதைசொன்னேள். எத்தனை ரூவா வேணும்னாலும் சம்பாவனைபண்ணலாம். பொறுத்துக்கணும். டிக்கெட் வாங்கி ரயிலேத்திவிட்டுடறேன்" என கண்களில் நீர் மல்க உருகினார்!.

திருநெல்வேலி ஜங்ஷனில் பட்டரும் மெய்க்காவலரும் வந்துவழியனுப்பினர். விழுப்புரத்துக்கு ரயிலேறி, காஞ்சிபுரம்வந்து சேர்ந்தார் கனபாடிகள்.

அன்றும் மடத்தில் ஆச்சார்யாளைத் தரிசிக்க ஏகக் கூட்டம்.அனைவரும் நகரும்வரை காத்திருந்தார் கனபாடிகள்.

"வா ராமநாதா! உபன்யாசம் முடிச்சுட்டு இப்பதான் வரயா?பேஷ்...பேஷ்! உபன்யாசத்துக்கு நல்ல கூட்டமோ?சுத்துவட்டாரமே திரண்டு வந்ததோ?" என்று உற்சாகமாகக்கேட்டார் ஸ்வாமிகள்.

கனபாடிகள் கண்களில் நீர் முட்டியது. தழுதழுக்கும் குரலில்பெரியவாளிடம், "இல்லே பெரியவா, அப்படி எல்லாம்கூட்டம் வரல்லே. அந்த ஊர்லே ரெண்டு கோஷ்டிக்குள்ளேஏதோ பிரச்னையாம் பெரியவா, அதனாலே கோயில் பக்கம்ஏழு நாளும் யாருமே வல்லே"என்று ஆதங்கப்பட்டார்கனபாடிகள்.

"சரி...பின்னே எத்தனை பேர்தான் கதையைக் கேக்க வந்தா?"

"ரெண்டே..ரெண்டு பேர்தான் பெரியவா.அதுதான் ரொம்பவருத்தமா இருக்கு" இது கனபாடிகள்.

உடனே பெரியவா, "இதுக்காகக் கண் கலங்கப்படாது. யார் அந்தரெண்டு பாக்யசாலிகள்? சொல்லேன், கேட்போம்" என்றார்.

"வெளி மனுஷா யாரும் இல்லே பெரியவா. ஒண்ணு, அந்தக்கோயில் பட்டர். இன்னொண்ணு கோயில் மெய்க்காவலர்"என்று சொல்லி முடிப்பதற்குள், ஸ்வாமிகள் இடி இடியென்றுவாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

"ராமநாதா... நீ பெரிய பாக்யசாலிடா! தேர்ல ஒக்காந்துகிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன்ஒருத்தன்தான் கேட்டான். ஒனக்கு பாரு.ரெண்டு பேர்வழிகள்கேட்டிருக்கா. கிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலி"என்று பெரியவா சொன்னவுடன் கனபாடிகளுக்கும்சிரிப்பு வந்துவிட்டது.

"அப்படின்னா பெரிய சம்பாவனை கெடச்சிருக்க வாய்ப்பில்லைஎன்ன?" என்றார் பெரியவா.

"அந்த பட்டர் ஒரு முப்பது ரூவாயும், மெய்க்காவல்காரர்ரெண்டேகால் ரூவாயும் சேர்த்து முப்பத்திரண்டே கால் ரூவாகெடச்சுது பெரியவா!" ;கனபாடிகள் தெரிவித்தார்.

"ராமநாதா, நான் சொன்னதுக்காக நீ அங்கே போயி்ட்டு வந்தே.உன்னோட வேதப் புலமைக்கு நெறயப் பண்ணனும்.இந்தச்சந்தர்ப்பம் இப்படி ஆயிருக்கு" என்று கூறி, காரியஸ்தரைக்கூப்பிட்டார் ஸ்வாமிகள். அவரிடம், கனபாடிகளு்க்குச் சால்வைபோர்த்தி ஆயிரம் ரூபாய் பழத்தட்டில் வைத்துத் தரச் சொன்னார்.

"இதை சந்தோஷமா ஏத்துண்டு பொறப்படு. நீயும் ஒ்ன் குடும்பமும்பரம சௌக்கியமா இருப்பேள்" என்று உத்தரவும் கொடுத்தார்ஸ்வாமிகள்.

கண்களில் நீர் மல்க பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தகனபாடிகளுக்கு, தான் ஸ்வாமிகளைப் பார்க்க எதற்காகவந்தோம் என்ற விஷயம் அப்போதுதான் ஞாபகத்துக்குவந்தது."பெரியவாகிட்டே ஒரு பிரார்த்தனை...பெண் கல்யாணம்நன்னா நடக்கணும். "அதுக்கு...அதுக்கு..." என்று அவர்தயங்கவும்,"என்னுடைய ஆசீர்வாதம் பூர்ணமாக உண்டு. விவாகத்தைசந்திரமௌலீஸ்வரர் ஜாம்ஜாம்னு நடத்தி வைப்பார்.ஜாக்ரதையா ஊருக்குப் போய்ட்டு வா." என்று விடைகொடுத்தார் ஆச்சார்யாள்.

ரூபாய் பதினையாயிரம் இல்லாமல் வெறுங்கையோடு வீட்டுவாசலை அடையும் தனக்கு, மனைவியின் வரவேற்பு எப்படிஇருக்குமோ என்ற பயத்துடன் வீட்டு வாசற்படியை மிதித்தார்ராமநாத கனபாடிகள்.

"இருங்கோ..இருங்கோ...வந்துட்டேன்..."உள்ளே இருந்து மனைவி தர்மாம்பாளின் சந்தோஷக் குரல்..

வாசலுக்கு வந்து, கனபாடிகள் கால் அலம்ப சொம்பில் தண்ணீர்கொடுத்தாள். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துப் போனாள்.காபி கொடுத்து ராஜ உபசாரம் பண்ணிவிட்டு,"இங்கே பூஜைரூமுக்கு வந்து பாருங்கோ" என்று கனபாடிகளை அழைத்துப்போனாள்,

பூஜை அறைக்குச் சென்றார் கனபாடிகள்.அங்கே ஸ்வாமிக்குமுன் ஒரு பெரிய மூங்கில் தட்டில்,பழ வகைகளுடன் புடவை,வேஷ்டிஇரண்டு திருமாங்கல்யம்,மஞ்சள்,குங்குமம்,புஷ்பம்இவற்றுடன் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றும் இருந்தது.

"தாமு..இதெல்லாம்..." என்று அவர் முடிப்பதற்குள்,,"காஞ்சிபுரத்துலேர்ந்து பெரியவா கொடுத்துட்டு வரச் சொன்னதாஇன்னிக்குக் காத்தால மடத்தைச் சேர்ந்தவா கொண்டு வந்துவெச்சுட்டுப் போறா. "எதுக்கு?"னு கேட்டேன். "ஒங்காத்து பொண்கல்யாணத்துக்காகத்தான் பெரியவா சேர்ப்பிச்சுட்டு வரச்சொன்னா"னு சொன்னா" என்று முடித்தாள் அவர் மனைவி.

கனபாடிகளின் கண்களில் இப்போதும் நீர் வடிந்தது. "தாமு,பெரியவாளோட கருணையே கருணை. நான் வாயத் திறந்துஒண்ணுமே கேட்கலே. அப்படி இருந்தும் அந்தத் தெய்வம்இதையெல்லாம் அனுப்பியிருக்கு பாரு" என்று நா தழுதழுத்தவர்"கட்டிலே ரூவா எவ்வளவு இருக்குன்னு எண்ணினியோ" என்றுகேட்டார். "நான் எண்ணிப் பார்க்கலே" என்றாள் அவர் மனைவி.

கீழே அமர்ந்து எண்ணி முடித்தார் கனபாடிகள்.

பதினைந்தாயிரம் ரூபாய்!

அந்த தீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து"ஹோ"வென்று கதறி அழுதார் ராமநாத கனபாடிகள்.





Thursday 11 October 2012

Karradhum sutta- Part VII Always a Solution for a Problem

தவிர்க்கமுடியாதவற்றைத் தாங்குவதே தீர்வு!




தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,''நீ நாளையே பன்றியாகிச் சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான். எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான். பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் துணையைத்தேடிக்கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,'' மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என் மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான். மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,'' மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக்கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும் '' என்று மகனுக்கு அறிவுறுத்தினான்.







நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன. முதல் வழி பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது. அடுத்தது, பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது. இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது. பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன் மாதிரி பிரச்சினையோடு வாழ்வதே தீர்வாகிறது.







பிரச்சினைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழிதான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சினைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லையே! மூப்பு, பிணி,சாவு, சூழல் முதலியவற்றைத் தடுப்பது இன்றுவரை முற்றிலும் சாத்தியமாகவில்லையே!







பிறவியிலோ, விபத்திலோ உறுப்புகளை இழந்தவர், அன்பான உறவுகளைப் பறிகொடுத்தவர், கடைசிமுறையீடும் தோற்று, தூக்குமேடை ஏறவேண்டியவர், புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் வாழ்பவர்- இவர்கள் மட்டுமன்றி, ஏற்றே ஆகவேண்டிய கசப்பான பணியை ஆற்றவேண்டிய சூழலில் உள்ளவர், மனமாறுபாடுடைய மனித உறவுகளுடன் வாழ்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் - இவர்களெல்லாம் பிரச்சினைகளோடு வாழ்ந்தே தீரவேண்டியவர்கள்..







''உனக்கு ஏழரை நாட்டுச்சனி. ஆனால் ஓராண்டுக்கு மேல் பிரச்சினையில்லை'' என்றான் சோதிடன். பாதிக்கப்பட்டவன் எப்படியெனக்கேட்டதற்கு,'' ஓராண்டில் கஷ்டங்கள் பழகிவிடும். மீதி ஆண்டுகளில் துன்பம் தெரியாது'' என்றானாம். துன்பங்கள் பழகிப்போனால் அதன் வேதனை கரைந்துவிடும் என்பதே உண்மை.







தணிப்பறியாத் துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்று, தம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள், அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.



43 வயதில் நிரந்தரமாகக் கண்பார்வையிழந்த ஆங்கிலக்கவி மில்டன் அதன் பிறகே ஆங்கிலத்தின் மிகச்சிறந்த காவியமான இழந்த சொர்க்கத்தை எழுதினார்.



விபத்தில் ஒரு காலையே இழந்த இளம்பெண் சுதாசந்திரன் அதன்பிறகே செயற்கைக்காலைப் பொருத்திக்கொண்டு சிறந்த நாட்டியக்கலைஞராகவும், நடிகையாகவும் ஓளிவீசிக்கொண்டிருக்கிறார்.



தூக்குமேடை ஏறும் முன்நாளில் கூடப் பதற்றப்படாமல், கடைசியாகத் தனக்குப்பிடித்த குலோப் ஜாமனைச் சுவைத்துவிட்டு, லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலைப் படித்துகொண்டு ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக்கியவர் விடுதலை வீரர் பகத் சிங்.



கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வசந்தி பரவத்தொடங்கியதை அறிந்து, தம் மனைவியிடம், ''மதுரம்! நான் சாகலேன்னா இவங்க விடமாட்டாங்க போல இருக்கே. இவங்க திருப்திக்காவது ஒருதரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கிறதே''என்று அந்த இறுதிநாள்களிலும் நகைச்சுவையைத் தவழவிட்டார்.



பிரிட்டனில் 21 வயது இளைஞர் ஒருவர் , முற்றிலும் அத்தனை உறுப்புகளையும் முடக்கிப்போடும் மோசமான நரம்புநோயால் பாதிக்கப்பட்டு பேச்சும், உடல்அசைவும் இழந்தும், கவலைப்படாது, சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு, மின்னணு கருவியைக்கொண்டே தம் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரே இன்றைய தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரும், ஐன்ஸ்டைனுக்குப்பிறகு மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரும், அண்மையில் அமெரிக்காவில் மிக உயரிய அறிவியலாளர் விருதைப்பெற்றவருமான ஸ்டிபன் ஹாக்கின்ஸ்.







பிரச்சினை எவ்வளவு பெரிதாயினும் அதனோடு ஐக்கியமாகி கூடவே வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும், பொறுமையும் வளர்த்துக்கொண்டால் இந்தச் சாதனையாளர்கள் வரிசையில் நாமும் சேரலாம்.



தவிர்க்கமுடியாதவற்றைத் தாங்கும் வழிகள்:



1.சந்தித்தே ஆகவேண்டிய பிரச்சினைகளைக்கண்டு ஓடினால் தெருநாய்போல் அது நம்மைத் துரத்தும். துணிவு என்ற கல்லைக் கையில் எடுத்தால் அது தலைதெறிக்க ஓடும். அஞ்சாமையை அணிகளனாகப் பூண்டவர்களுக்கு மலையளவு துன்பங்களும் கடுகாகும்.



2.'வாழ்க்கை துன்பமயமானதுதான். அது துன்பமயமானது என்று உணர்ந்தபின் துன்பப்படத் தேவையில்லை' என்று புத்தர் கூறியதைச் சற்று ஆழமாகச் சிந்தித்துப்பார்த்தால் எந்தத் துன்பத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும். துன்பங்களை நேசிக்கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் துன்பங்களே நம்மைச் செதுக்கும் சிற்பிகள்.



3.உங்களைவிடத் துன்பப்படுபவர்கள் உங்களைச் சுற்றி நிறைய இருப்பதைக் கண்திறந்து பாருங்கள். உங்கள் துன்பம் தூசியாகும். 'உலகம் என்பது நாடகமேடை. நாமெல்லாம் நடிகர்கள்!' என ஷேக்ஸ்பியர் சொன்னதை ஏற்றால், வாழ்வில் சந்திக்கும் துன்பங்களும் மேடையில் நடிகர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் போல நம்மைத் தாக்கா.



4.சாக்ரடீசையும், அபிரகாம் லிங்கனையும்விடக் குடும்பவாழ்வில் துன்பப்பட்டவர்கள் யாரிருக்க முடியும்? இதனையும் மீறி சிந்திக்கவும்,செயல்படவும், உயரவும் அவர்களுக்கு உதவியது அளவற்ற பொறுமை. பொறுமையாக இருந்து, பதட்டமடையாமல் பிரச்சினைகளோடு வாழ்வது எப்படி? என உங்கள் சூழலுக்கேற்ப சிந்தியுங்கள். புதிய ஆற்றல் பிறக்கும்.

Karrathum suttadhum Part VI- Navrathiri

A beautiful article in Tamil
நவ ராத்திரி பூஜை சிறப்புக்கள்




சர்வ லோகத்தையும் சிருஷ்டித்து, மனித குலத்தின் ஜென்ம, கர்ம, பாப வினைகளைத் தன்னுள் அடக்கி மகிழ்ந்துரையும் நீலகண்டனாம் எம்பெருமான் சிவனையும் மனித குலத்தைக் காத்து, எப்பிறவியிலும் செல்வத்தை அள்ளி வழங்கும், மால் எனப் போற்றும் விஷ்ணுவையும், பூமண்டல உயிர்களைப் படைத்து, திக்கெட்டிலும் திகம்பரனாய் விளங்கும் பிரம்மாவையும் இயக்கும் சக்திகள் மூன்று. தயாள குணவதியாய் எண்ணிலடங்கா உயிரினங்களை இயக்கி வரும் தாயாகவும், அனாதைகளுக்கு ஆதரவாகவும், பூமகளாய் நிற்கும் பராசக்தியான துர்காவும், ஸ்வர்ண தேவியாய் அஷ்ட செல்வங்களை உலகிற்கு ஈந்து, மனித குலத்தையும் பிற உயிர்களையும் மகிழ்ச்சியாய் வாழ வைக்கும் மஹா லக்ஷ்மியும், விரும்பியவர்க்கு அறிவாற்றலையும், ஞானத்தையும் அள்ளித் தரும் நாமகளாம் சரஸ்வதியும் அதி மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கு சக்திகளாக இருந்து இப்பூமண்டலத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த முப்பெரும் சக்திகளை முதன்மையாக்கிக் கொண்டாடப் படுவது தான் இந்த நவ ராத்திரி பூஜைகளாகும்.



தட்சிணாயண ஆஸ்வின சுக்கில பட்ச பிரதமைத் திதியன்று தொடங்கி நவமி திதி வரை ஒன்பது நாட்கள் மகா சக்தியை துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஸ்வரூபமாய் பூஜை செய்து இந்த சக்திகளின் அருளைப் பெறுவதே நவ ராத்திரி பூஜைகளின் நோக்கமாகும். இந்த ஒன்பது நாட்களிலும் ஒவ்வொரு நாளாய் சக்தியின் அருளை வேண்டி அதற்கென அமைந்த பூஜை முறைப்படி வழிபாடு செய்து வந்தால் ஸ்தீரிகள் தீர்க்க சுமங்கலிகளாகவும், புத்திரப் பேறு இல்லாதவர்கள் புத்திரப் பேறு பெறுவதும், தோஷங்கள் பல இருந்தாலும் அவை அனைத்தும் இந்த ஒன்பது நாட்களில் அம்பாளை வேண்டுவதன் மூலம் நீங்கி விடும் என்பதும் கண்கூடு.



நவ ராத்திரி பூஜைகளின் முதல் நாளன்று அம்பாள் மகேஸ்வரியாகத் தோன்றுகிறாள். மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்களை அழித்து மனித குலத்தைக் காத்த பெருமை இந்த முதல் நாளன்று அம்பாளுக்கே சேருகிறது. இந்த முதல் நாளில் அம்பாளை மல்லிகைப் பூவால் அலங்கரித்து, தோடி ராகம் பாடி வழிபாடு செய்து வர எல்லா நற்பலனையும் பெற முடியும்.



இரண்டாம் நாளன்று கெளமாரியாய் அம்பாள் தோன்றி, அசுரர்களை அழித்து, தன் பிள்ளைகளைக் காத்ததைக் கொண்டாடும் நோக்கோடு, அன்று மல்லிகைப் பூவால் அம்பாளை அலங்கரித்து, கல்யாணி ராகம் பாடி, புளியோதரை படைத்து வழிபாடு செய்து வர நோய் நொடிகள் நீங்கும்.



மூன்றாம் நாளன்று அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்து, மனித குலத்தைக் காக்க வராகி வடிவம் கொண்டாள். சம்பங்கி மலரால் அம்பாளை அலங்கரித்து, காம்போதி ராகம் பாடி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்ய செல்வங்கள் பெருகும்.



நான்காவது நாளன்று மஹாலக்ஷ்மியாய் அம்பாள் தோன்றி மனித குலத்திற்கு சகல சம்பத்துக்களையும் வழங்குகிறாள். அன்று மஹாலக்ஷ்மியை மல்லிகைப் பூவால் அலங்கரித்து, பைரவி ராகம் பாடி, அன்னம் நைவேத்யம் செய்து வழிபட்டால் மஹாலக்ஷ்மி அருள் கூடும்.



ஐந்தாம் நாளன்று மஹாலக்ஷ்மி வைஷ்ணவி தேவியாய் அவதாரம் கொள்வதால் அன்று தேவியை முல்லைப் பூக்களால் அலங்கரித்து, பந்து வராளி ராகம் பாடி, தயிர் சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டால் வைஷ்ணவி தேவியின் அருள் கிடைத்து சகல பாக்கியங்களும் சேரும்.



ஆறாம் நாளன்று மஹாலக்ஷ்மி இந்திராணியாகத் தோன்றுவதால் அன்று செம்பருத்திப் பூக்களால் அம்பாளை அலங்காரம் செய்து, நீலாம்பரி ராகம் பாடி, தேங்காய் சாதம் படைத்து வழிபட மனக் கவலைகள் எல்லாம் நீங்கும், விரோதங்கள் அகலும், வெற்றிகள் பல கிட்டும்.



ஏழாம் நாளன்று சரஸ்வதி ஞான சக்தியாய்த் தோன்றுவதால் சரஸ்வதி தேவியை வெண் தாமரையால் அலங்கரித்து, பிலஹரி ராகம் பாடி, எலுமிச்சை சாதம் படைத்து வழிபட சரஸ்வதி கடாட்சம் கிட்டும், கல்வி சிறக்கும்.



எட்டாம் நாளன்று சரஸ்வதி தேவி நரசிம்ஹியாகத் தோன்றுவதால் அன்று ரோஜா மலர்களால் அம்பாளை அலங்கரித்து, புன்னாக வராளி ராகம் பாடி, சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட, கேட்ட வரம் உடனே கிடைக்கும், ஞான சக்தி மிகுதியாகும். ஒன்பதாம் நாளன்று கலைமகள் சாமுண்டியாக அவதரிப்பதால் அம்பாளை செந்தாமரை மற்றும் வெள்ளைத் தாமரையால் அலங்கரித்து, வசந்தா ராகம் பாடி, பால் பாயசம் படைத்து வழிபாடு செய்தால் தடைபட்டு வந்த பல சுப காரியங்கள் தடங்கல் இல்லாமல் நிறைவேறும்.



இந்த ஒன்பதாம் நாளன்று துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியரையும் பூஜை புனஸ்காரங்களால் வழிபட்டு, அவரவர் செய்யும் தொழிற் கருவிகளையும் புத்தகங்களையும் அலங்காரம் செய்து, தேவியர் முன்னர் வைத்து, லலிதா சகஸ்ரநாமம், துர்கா நாமாவளி, லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்திரம் ஆகியவற்றால் மகா சக்திகளைப் போற்றி அம்பாளுக்குப் பிடித்த பொரி, கடலை, சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்தால் இனி வரும் காலம் சுபமானதாகவும், காரியங்களில் வெற்றி கொடுப்பதாகவும், தொழில் முன்னேற்றத்தை வழங்குவதாகவும் இருக்கும். இந்த நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்று நாம் சிறப்பாக அழைத்து வழிபட்டு வருகிறோம்.



நவ ராத்திரி விழாவின் இறுதி நாளான பத்தாவது நாள் துர்கா தேவி மகிஷாசுரனை வதம் செய்து மகிஷாசுர மர்த்தினியாகத் தோன்றுகிறாள். தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் இந்தப் பத்தாம் நாள் விஜய தசமி என நம் எல்லோராலும் கொண்டாடப் படுகிறது. இன்று காலை ஒன்பதாம் நாள் படைத்த தொழிற் கருவிகளுக்கு மறு பூஜையிட்டு அதைப் பயன்படுத்தினால் செய் தொழிலில் வெற்றி கிடைக்கும். ஒன்பதாம் நாளன்று படைத்த புத்தகங்களுக்கும் மறு பூஜையிட்டு, அம்பாளை வேண்டிப் புத்தகங்களைப் படிக்க, சரஸ்வதியின் அருள் உடனே கிடைக்கும். இன்று குழந்தைகளைப் பள்ளிக் கூடங்களில் சேர்த்து வித்யாரம்பம் செய்தால் குழந்தைகளுக்குக் கல்வி ஞானம் பெருகும். விஜய தசமி நாளான இந்தப் பத்தாவது நாள் இரவில் அம்பாள் குதிரை வாகனத்தில் அம்பெய்து, திருவீதி உலா வந்து மக்களைக் காப்பதாக ஐதீகம் உள்ளது.



வீரம், செல்வம், ஞானம், இந்த மூன்றும் ஒருவருக்கு இருந்து விட்டால் மனித வாழ்வு மிகச் சிறப்புடையதாகவே இருக்கும். இந்த மூன்று சக்திகளையும் முப்பெரும் தேவியரிடம் இருந்து பெறுவதே நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும்.

குருஜி ‘கார்த்திகா’ சித்தார்த்

Abhishek Raguram in KGS-Gokulashtami Series

Abhishek’s Mohanam in KGS




Vocal Recital by Abhishek Raghuram, Mysore V. Srikanth (Violin), Shertalai R. Ananthakrishnan (Mrudangam), Anirudh Athreya-Kanjira

Date- 29.9.12

Venue- Krishna Gana Sabha

Event- 57th Year of Gokulashtami Celebtration.

• Sahana-karunimpa-varNam.

• Kokiladhwani rAga for 3 min followed by TolinEnu jEyu-Thyagarajar

• Mundu vEnukA-Darbar-Thyagaraja

• Bairavi rAgam for 5 minutes followed by “ChitayamAm”- Dikshitar. Neraval in “mangalakara mandhahAsa vadhanam” and swaram in “uttunga gamanEEya”

• dEnuka-rAgam for 5 minutes followed by “Teliyaledu rAma” –ThyagarAjar

• Main- Mohanam- “evaroora ninuvina”-Thyagarajar

• Tani

• kApi rAgam for 2 min -Aravinda padamalar- kApi-ambujam Krishna

• TillAna-mohan kalyAni

• Mangalam

This is my second concert of AS. In my first concert, 4 months back, he rendered bairavi and the same kriti. Surprisingly, it is not same as it was. He put different kanakku’s in swarams and beautiful neraval.

My father always admires mahArajapuram vishwanatha Iyer’s Mohanam and for me too, the mellifluous voice of Maharajapuram santhanam in Mohanam is still No.1. I have also listened this rAga from various artists. But Saturday mohanm was something unparallal and something extra ordinary. AS took a nearby 30 minutes only for rAga Alapana of Mohanam before giving it for violin. Such a stamina and such a rendition !!!. He, normally, does not have any boundaries like “stage by stage building of rAga Alapana”. He throws the rAga and allows the rasikAs to select the beauty part of it wherever it is found. Normally, when a rAga is rendered, we know when the artist is going to finish. But for AS, suddenly there is one more like waves. Bravo man !!!!. Truly a genius.

A near 3 hours concert and each and every rendition of kiriti was given its due respect and able supported by accompanists.

Denuka rAga alapana, something new to me. Teliyaledhu – is used as a filler in concert. Nice rendition.

Mysore Srikanth and mridhangaam, Ganjira- made the concert more soothing and ecstasic.



Karratum Suttadhum Part V

Another beautiful Management theory through PurAnam...

When Rishi Gotama returned to his house, he found his wife, Ahalya, in the arms of Indra, king of the Devas. Furious,he cursed his wife Ahalya to turn into stone and Indra to be covered with sores. This story is found in the first chapter of the Ramayana, the Balkanda, which deals with the childhood and education of Ram,prince of Ayodhya. The sage Vishwamitra takes Ram to the hermitage of Gotama and shows him the stone that was once Ahalya. She has been condemned to be trodden upon by bird, beast and stranger. Vishwamitra asks Ram to touch the stone with his feet and liberate Ahalya so that she can rejoin her husband.
In the different versions of the Ramayana, the story of Ahalya is told differently. In some versions, she is the guilty adulteress, who gets caught in the act. In other versions, she is innocent, duped by the wily Indra who takes the form of her husband. There are versions where Ahalya is the bored and tortured wife who finds solace in the arms of Indra. The narrators struggle to explain why Ram forgives Ahalya. It makes sense for Ram to forgive someone wrongfully accused than someone who is truly guilty.
Often in business, we have to deal with people who have not kept their commitment, who have broken their word, who have demonstrated questionable integrity. There are attempts to justify their actions and plead their case. There are attempts to show that the conclusions drawn are based on false data, spread by mischievous forces. We have to decide if we have to let Ahalya stay a stone or liberate her from misery. We have to decide when the punishment, justified or not, is enough.
It was clear to Paritosh that the caretaker of the company guest house was siphoning funds. But there was no proof. It was a combination of hearsay and gut feeling. Murlidhar the caretaker was told to go on a long leave. In his absence, Jotiraj, took over as caretaker and the services in the guest house showed a marked improvement at a much lower cost. The old-timers said maybe Murlidhar was simply inefficient. The auditors said Murlidhar was a cheat. Murlidhar insisted he was innocent.
After six months of deliberations, Paritosh reinstated Murlidhar. Everyone wondered if Murlidhar was innocent or if he had been forgiven. When asked Paritosh said, “I really do not know. But the six months has been harrowing enough for Murlidhar. If he was guilty, he has been punished. If he was innocent, he will learn to be more efficient. No one is perfect and people do make mistakes in life. If we do not forgive and move on, we will end up creating a smug self-righteous organization where there is no compassion. That is not the kind of company I wish to create.” Perhaps compassion is also the lesson Vishwamitra was trying to teach Ram.