Thursday 22 June 2017

வரகூர் மஹாமஹோபாத்யாயர்கள் - பகுதி 3

ஸ்ரீ ராமகிருஷ்ண சாஸ்த்ரிகள்

இவர் 19 வது நூற்றாண்டில் வரகூரில் பிறந்தவர்.  தகப்பனார், அனந்த கிருஷ்ண சாஸ்த்ரிகள். தாயார் மீனாக்ஷி அம்மாள்.  சிதம்பரத்தில் இருந்த மஹா மஹோபாத்யாய  ஹரி ஹர சாஸ்த்ரிகளிடம் “நியாய வேதாந்த சாஸ்த்ரங்களைக்” கற்றுணர்ந்தார்.

சாஸ்த்ரிகளின் அதீதமான பாண்டித்தியம் பற்றிக் கேள்விப்பட்ட, திருவிதாங்கூர் மகாராஜா, இவரை, திருவனந்தபுரம் சம்ஸ்க்ருத கலா சாலையில் நியாய வேதாந்த அத்யாபகராக (teacher)  நியமித்தார்.

சாஸ்த்ரிகள் ஒரு சமயம், சன்யாசிகள் தலைமையில் நடக்கும், வித்வத் சதஸுக்கு (சபைக்குச்) சென்றார்.  அங்குள்ள வித்வான்கள் சாஸ்திரிகளிடம் “இந்த சபைக்கு எந்த பரீக்ஷை கொடுக்க வந்திருக்கிறீர்கள்”  என்று கேட்டனர்,  அதற்கு சாஸ்த்ரிகள், “இந்த சபையில் எவ்வளவு பரீட்சைகள் நடத்த முடியுமோ அவ்வளவு பரீக்ஷைகளிலும் பங்கு கொள்கிறேன்” என்றார்.  இதைக் கேட்டவுடன், சபையோர்கள் அச்சத்திலும், ஆச்சர்யத்திலும் ஆழ்ந்தார்கள்.  எட்டு பரீட்சைகள் கொடுத்து சாஸ்திரியார் வெற்றி பெற்றார். மேலும் எட்டு கேள்விகள் கொடுத்து சபையோர்களை பதில் அளிக்கச் சொன்னார். ஒருவருக்கும் பதில் கூற இயலவில்லை.  பின்னர் சன்யாசிகளின் வேண்டுகோளின்படி, சாஸ்த்ரிகளே பதில் சொன்னார்.  சன்யாசிகளின் பெரு மகிழ்ச்சியுடன் சாஸ்திரிகளுக்கு முதன்மையான பூரணமான சம்பாவனை கொடுத்தார்கள்.

தனக்கு மூலரோகம் சிகிச்சை செய்து கொள்ள, ஒரு சமயம், சாஸ்த்ரிகள் கொச்சிக்கு சென்றார். அச்சமயம் தர்க்க சாஸ்த்ரத்தில் பிரபல வித்வான்களான, பரீக்ஷித் மகாராஜவுடனும், மான்திட்டை நம்பூத்ரியுடனும், 45 தினங்கள் வாதம் புரிந்து முடிவில் சாஸ்த்ரிகள் வெற்றி பெற்றார்.

மஹாராஜா, வைரத்தினாலான இரண்டு தோடாக்களை (வளையல் போன்று) இரண்டு கைகளிலும் அணிவித்து “இணையற்ற தர்க்க பண்டிதர் தாங்கள் ஒருவரே” என புகழ்ந்து பேசினார்.
சாஸ்த்ரிகள் ஒரு சமயம், திருவனந்தபுரத்தில், சம்ஸ்க்ருத கல்லூரியில், வேதாந்த பேராசிரியராக இருக்கும்போது, கொச்சிக்கு வித்வத் சதஸ்ஸிற்கு அழைப்பின் பேரில் சென்றிருந்தார். அப்போது, மகாராஜாவிடம், என் ஊர் “வரகூர்சொல்ல, சாஸ்த்ரிகளுடைய பெருமையை புகழ்ந்து மிக ரஸமாக எடுத்துக் கூறினார்.

மீமாம்சையிலும், வேதாந்ததிலும், ஆழ்ந்த அறிவுள்ள நமது சாஸ்த்ரிகள், பாமதீ என்ற நூலின் பெயரை, ஒரு பெண்ணிற்கும், ப்ருஹதீ என்ற நூலின் பெய்ரை, மற்றொரு பெண்ணிற்கும் சூட்டி இருக்கிறார்.

திருவிதாங்கூர் வித்வத் சபைக்கும், வித்யாலயத்திற்க்கும் நம் சாஸ்த்ரிகள், திலகமாக விளங்கி வந்தார.

என் எண்ணம்
இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது, “வைரத்தில் தோடா பண்ணி ஒரு ராஜா கொடுத்திருப்பார் என்றால், என்ன ஒரு “பாண்டித்தியம்” இருந்திருக்க வேண்டும்” என்று தோன்றியது.  வரகூர் வாசியான இவருக்கு நம் பெருமாள் இப்படி ஒரு அணுக்ரகம் பண்ணி இருக்கிறார் என்று நினைக்கும் பொது நெஞ்சம் விம்முகிறது

இப்போது அவரது பெண்கள் (கடைசி பாரா) எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  அல்லது, அவர்களது வம்சம் (descendants) ?


உண்மையில், நான் உணர்ச்சி வசப்பட்ட கட்டுரை இது.

Wednesday 21 June 2017

வரகூர் மஹாமஹோபாத்யாயர்கள் - பகுதி 2

பேராசிரியர் ஸ்ரீ. எஸ் மார்க்க சகாயம்  M.A  அவர்கள்

இவர் முதல் பகுதியில் சொன்ன பிரம்மஸ்ரீ கல்யாண சுந்தர சாஸ்த்ரிகள் மற்றும், ப்ரும்மஸ்ரீ குருஸ்வாமி சாஸ்திரிகளுடனும் சேர்ந்தே படித்து அனேக பரீட்சைகள் பாஸ் செய்தார்.
இவர் வரகூரில் 1910 ம் ஆண்டு பிறந்தார். நல்ல வைதீகமான குடும்பத்தை சார்ந்தவர்.  வரகூர் வேம்பு அய்யர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  வரகூர் வேம்பு அய்யர் குடும்பத்தில் தோன்றிய சாசியப்பா என்று பிரசித்தமான ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகளின் தௌஹித்திரன் ஆவார்.


சென்னை சர்வ கலாசாலையில் சாஹித்ய சிரோமணி, வியாகரண சிரோமணி, வேதாந்த சிரோமணி போன்ற அனேக பட்டங்கள் பெற்றார். அண்ணாமலை சர்வ கலாசாலையிலும் வேதாந்த சிரோமணி பட்டமும் பல பாஷைகளின் ஒற்றுமை, வேற்றுமை விஞ்ஞானம் பற்றிய படிப்பு (Certificate of proficiency in comparative philology) சர்டிபிகேட்டும் அதே போல் பிலாசபி (philosophy) சர்டிபிகேட்டும் பெற்று இருக்கிறார்.


சென்னை சர்வகலாசாலையில் ஹிந்தி வித்வான் பட்டமும், ஜெர்மன் பாஷையில் டிப்ளோமா பட்டமும் பெற்று இருக்கிறார்.

அண்ணாமலை சர்வகலாசாலை செனட்டிலும், மதுரை சர்வகலாசாலை அகாடெமிக் கவுன்சிலிலும் (Academic Council) அங்கத்தினராக பணி ஆற்றினார்.     Madras University Board of Studies  யிலும் அங்கத்தினராக இருந்த ஒய்வு பெற்றிருக்கிறார்
படிப்பு முடிந்து முதல் எழு வருஷங்கள் சென்னை, வேப்பேரி சம்ஸ்க்ருத கல்லூரியில் வியாகரணம், சாகித்யம் போன்றவற்றை மாணவர்களுக்குப் பாடமாக சொன்னார்.  பிறகு காரைக்குடி அழகப்பா காலேஜில் 16 வருடங்கள் சம்ஸ்க்ருத பேராசிரியராகவும் இரண்டு வருடம் ஆங்கில பயிற்சியாளராகவும் (TUTOR) இருந்தார்பிறகு ராமேஸ்வரம் கல்லூரியில் ப்ரின்ஸிபாலாகவும்,  சம்ஸ்க்ருத பேராசிரியர் ஆகவும் எழு வருஷங்கள் உத்தியோகம் வகித்து பிறகு பெங்களூரில் வாசம் செய்து வந்தார்.

இவ்வளவு படிப்பும், பதவியும் வகித்திருந்தாலும் அவரிடத்தில் உள்ள வினயமும், ஆடம்பரமின்மையும், எல்லோரிடத்திலும் சுலபமாக பேசிப் பழகும் தன்மையும் மிகவும் கொண்டாடத்தக்கதாகும்.
என்னுடைய எண்ணம்

மிகவுமே பெருமையாக இருக்கிறது. சம்ஸ்கருத மொழியை எப்படி கொண்டாடி இருக்கிறார்கள் என்பதை படிக்கும்போது.  COMPARATIVE PHILOLOGY, இப்போது இன்டர்நெட் யுகத்தில், சர்வ சாத்தியம்.  அந்தக் காலத்தில் என்ன புத்தகம் ? ,  ஏது reference ?.   How  German language was possible ?

Simply amazing…

சாதாரணமாக நாம் பெருமையாகச் சொல்லும்போது,  ‘காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்” என்று சொல்லுவோம்.
வரகூர் ஆஸ்திகர்களான, நாம் “பூனூலைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.”



Thursday 15 June 2017

வரகூரில் பிறந்து மண்ணுக்கு பெருமை சேர்த்த மஹாமஹோபாத்யாயர்கள்

இது 1981  (20-8-1981) அன்று, வரஹூரில் நடைபெற்ற கும்பாபிஷேகம், தொடர்பாக வெளிவந்த “மலரில்” வந்த கட்டுரை.

இந்தக் கட்டுரை ஸ்ரீ வை.நடராஜ அய்யர் அவர்களால் எழுதப்பட்டது, அதனால் அவருக்கு முதற்கண் என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.  அவர் இந்தக் கட்டுரை எழுதாவிட்டால், வரஹூரில் பிறந்த மகான்களைப் பற்றி நமக்குத் தெரியாமல் போயிருக்கும். இதை நான் திரும்பவும் எழுதும் காரணமே, இப்போது இருக்கும் வரஹூர் ஆஸ்திகர்களும், மற்ற நண்பர்களும், இவர்களின் பெருமையை உணர்த்துவதற்கு தான்.

இப்போது பிரயாண வசதிகள் பல இருந்தும் கூட, நம்மால் ஒரு இடத்தில் இருந்து, வேறொரு இடத்திக்குப் போவது, பிரம்மப் பிரயத்னமாக இருக்கிறது. ஆனால், அந்தக் காலத்தில், இந்த வசதிகள் இல்லாதபோதே, மேல் படிப்புக்காக சிதம்பரமும், சென்னையும், ஏன், டெல்லி கூட போய் ஜனாதிபதியிடம் இருந்து பரிசு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, மிகவும் பூரிப்பாக இருக்கிறது

நம்மிடையே, இப்போது வெகு சிலரே பழைய முறையில் ஆசார அனுஷ்டானத்துடன் குருமுகமாக பக்தி ச்ரத்தையுடன் சாஸ்திரங்களைப் படித்து, படித்த சாஸ்திரங்களை பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பிராசீன சம்ப்ரதாயத்தில் வித்யாபியாசம் பெற்று, உலகத்திற்கு ஆத்ம வித்தையை போதித்து வந்த, இப்போது சூக்ஷ்மமாக, வரகூரில் இருந்து, நமக்கும் அனுக்ரகம் செய்து கொண்டிருக்கும்:

மகாஸ்ரீ  வரகூர் ஸ்ரீ கல்யாண சுந்தர சாஸ்த்ரிகள்

வரகூர் பிரம்மஸ்ரீ ஸ்ரீ. வி. ஏ. வி. குருஸ்வாமி சாஸ்த்ரிகள்

ப்ரும்மஸ்ரீ மார்க்க சகாயம் அவர்கள்

இவர்களுடைய அருமை பெருமைகளைத் தெரிந்துகொண்டால், வரஹுரில் பிறந்ததற்கு பெருமைப் படலாம்.

வரஹூரில் பிறந்து, இப்போது இருக்கும் வேத பாடசாலையில் படித்து, டெல்லி வரை சென்று, ஜனாபதியிடம் விருது பெற்றார்கள் என்பதை கேட்கும்போது/படிக்கும்போது  நாம் எவ்வளவு பாக்யசாலிகள் என்பது புரியும் !!

“எந்தரோ மகானுபாவுலு, அந்தரிகி வந்தனமு” என்று பக்கத்துக்கு ஊரான திருவையாறில், பிறந்து, சீதா லக்ஷ்மண அனுமன்(த்) சமேதராக ராமர் , எழுந்தருளி காட்சி கொடுத்து ஆட்கொண்ட, ஸ்ரீ தியாகராஜர் அவர்கள் சொன்னபடி, நாம் மேற்கூறிய மகான்களைப் பற்றி சற்று சிந்திப்போம்.

வரகூர் ப்ரும்ம ஸ்ரீ கல்யாண சுந்தர சாஸ்த்ரிகள்

பரம்பரையான சாஸ்த்ரக்ஞர்களுடைய வம்சத்தில் இவர் கி.பி. 1911 ல் பிறந்தார்.  ஆரம்பத்தில் கும்பகோணம் ராஜா பாடசாலையில், மகாமஹோபாத்யாய யக்ஞஸ்வாமி சாஸ்திரிகளிடம் சம்ஸ்க்ருதம் கற்றார். பிறகு  மயிலாப்பூர் சம்ஸ்க்ருத கல்லூரியின் மகாமஹோபாத்யாய கருங்குளம் கிருஷ்ணா சாஸ்த்ரிகளிடம் படித்து கி.பி 1982 ம் ஆண்டு சாஹித்ய சிரோமணி பரீக்ஷையும் அதே சாஹித்ய விசாரதா பரீக்ஷையும் பாஸ் செய்தார்.

அண்ணாமலை சர்வ கலா சாலையில் பண்டித பயிற்சி முறையையும் கி. பி. 1933 ல் பூர்த்தி செய்தார். கும்பகோணம் அய்யுவய்யர் வேதாந்த பாடசாலையில், சாஸ்திர ரத்னாகரம் ப்ரும்மஸ்ரீ வேப்பத்தூர் வைத்யநாத சாஸ்திரிகளிடம் 1934-37 ல் வேதாந்தம் படித்து வேதாந்த சிரோமணி பரீக்ஷையில் சிறப்பாக தேர்வு பெற்றார்.  1938 ம் ஆண்டு இவர் மறுபடியும்
மதராஸ் சம்ஸ்க்ருத கல்லூரியில், RESEARCH SCHOLAR ஆக சேர்ந்து, “வ்ருத்தி மீமாம்ஸா” என்ற ஆராய்ச்சி கிரந்தத்தை வெளியிட்டார்.
கும்பகோணம் அத்வைத சபா, திருச்சிராப்பள்ளி அத்வைத சபா, இவைகளில், நடத்தப்பட்ட, அனேக வித்யா பரீட்சைகளில் ஸ்ரீ கல்யாண சுந்தர சாஸ்த்ரிகள் சிறப்போடு தேர்வு பெற்று, சன்மானம் பெற்றார்.
மதராஸ் Government Oriental Manuscripts லைப்ரரியில் 16 வருடங்கள் பணியாற்றினார்.  அது சமயம் கையேட்டுப் பிரதியாக இருந்த அனேக அபூர்வ கிரந்தங்களை அச்சிட்டுப் பிரசுரப்படுதினார்.  தவிர தன்னுடைய ஸ்வதந்திர க்ரந்தங்கள் பலவற்றையும் இந்தக்காலங்களில் அச்சிட்டுப் பிரசுரித்தார்.

விவேகானந்தா கல்லூரி நிர்வாகிகள் வேண்டுகோளின் பேரில் M.A வகுப்பு மாணவர்களுக்கு வேதாந்த பாடம் சொல்வதற்கு ஆசிரியராக ஒப்புக் கொண்டு பணி ஆற்றினார்.

அதிலிருந்து ஒய்வு பெற்று பிறகு யுனிவெர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் நியமனம் பெற்று விவேகானந்தா காலேஜில் RESEARCH PROFESSOR ஆக பணியாற்றினார்.

இவ்வளவு உத்தியோக அலுவல்களுக்கிடையில் 25 வருஷ காலமாக சென்னையில் நுங்கம்பாக்கம் உபநிஷத் ஆஸ்ரமத்தில்- சாந்திபாட புரஸ்காரம் சம்பிரதாய முறையில் அத்யயன தினங்களில் ஆசார்ய சங்கரருடைய பிரஸ்தானத்ரய பாஷ்யங்களை தொடர்ந்து பாடம் சொல்லிவந்தார்கள். அனத்யயன தினங்களில் இதர பல அத்வைத கிரந்தங்களை பாடம் சொன்னார்கள். இவர்களுடைய பாடப் ப்ரவஸனங்களைக் கேட்டு ஆத்ம விஷயத்தில் விழிப்பு பெற்ற லௌகிகர்கள் கணக்கில் அடங்காது.

இந்த மகத்தான சேவையைப் பாராட்டி, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராசார்யாள் 1963 வருடம், “பாஷ்ய பாவக்ஞ” என்ற விருதை அளித்தார். இது மதிப்பு மிக்க விருது. ஏற்கனவே, இந்த விருது, முதல் தடவையாக வரகூர் வெங்கட்ராம சாஸ்திரிகளுக்கு வழங்கப் பட்டது. அவரும், இவரது உறவினர்தான்.

ஸ்ரீ கல்யாண சுந்தர சாஸ்திரிகளுடைய சம்ஸ்க்ருத வித்வத்தை சன்மானித்து 1979 ம் ஆண்டு பாரத ராஷ்ட்ரபதி யோக்யதா சன்மான பத்திரமும் RS 5000 With Certificate of Honour வழங்கி இருக்கிறார்.
தொடரும்.




Tuesday 6 June 2017

वेङ्कटेश समो देवो न भुतो न भविष्यति - திருவேங்கடமுடையானை நான் பார்க்கச் சென்ற கதை.....

திருப்பதி என்ற இந்த க்ஷேத்ரம் மட்டும், நாம் நினைத்தால் போகவே முடியாது. நீங்கள்  cango  போன்ற அரிதான நாட்டுக்குக் கூட போய் வரலாம். ஆனால், திருப்பதியில் உங்கள் பருப்பு வேகவே வேகாது. !!
அது “பாலாஜி” நினைக்க வேண்டும்.  நிதர்சனமாக, அருள் பாலிக்கும் தெய்வம் அவர்.. அதனால்தான் அன்னமாச்சார்யா, “மாங்கு மாங்கு” என்று திருப்பதி பாலாஜியைப் பற்றி மட்டும், கீர்த்தனைகள் எழுதி இருக்கிறார். அதில் ஒரு பாடலில். (ராகம்- வசந்தா) எழுதுகிறார்.
vADe venkaTAdri meeda vara daivamu
pODimitO poDa joope poDavaina daivamu ||

He is the God on Venkatadri that bestows boons.  He is the top most God appearing in all splendour

திருப்பதி வேங்கடேசனு(ரு)க்கு சமமான தெய்வம் கடந்த காலத்திலும் இலை, எதிர் காலத்திலும் இல்லை என்பதும், திருமலா க்ஷேத்ரம் போல, ஒரு க்ஷேத்ரம்  இந்த உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது என்றும், சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு.

பல முறை நான் நினைப்பதுண்டு.  நாளில்லை, கிழமை இல்லை, எப்போது பார்த்தாலும், கூட்டம்...என்ன தான் இருக்கிறது ? என்று. ஆனால் அந்த ஒரு க்ஷணம், அவர் சன்னதியில் நின்றால், பிறப்பு அற, நம்மை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தக் கூடிய அனுபவமாகத்தான் இருக்கும்.  (அன்று (1-5-17) தர்ம தரிசனம் 12 மணி நேரம் ஆகியது என்றும், Rs. 300 ரூபாய் தரிசனம் 8 hours ஆகியது என்றும் கேள்விப்பட்டேன்.)  குழந்தைகளையும், உறவினர்களையும் அழைத்துக்கொண்டு, உச்சி வெய்யிலின் வெப்பத்தோடு, queue ல் நின்று கொண்டிருக்கும் மக்கள், ஒவ்வொருவரையும், தனித்தனியாக அருள் பாலிக்கும், கலியுகக் கடவுள். அவர் 22 மணி நேரம், ஓய்ச்சல் ஒழிவு இல்லாமல் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தமாஷாக சொல்வதுண்டு, மற்ற தெய்வங்களெல்லாம், பாலாஜியிடம், கேட்டார்களாம் “எங்களுக்கு மட்டும் வருமானம் குறைவாக இருக்கிறது. ஆனால் உனக்கு மட்டும் கஜானா நிரம்பி வழிகிறது. இது எப்படி சாத்தியம்” என்று

அதற்க்கு பாலாஜி சொன்னாராம். “நீங்கள் 8 மணி நேரம் duty பார்க்கிறீர்கள்.  நான் sleepless, almost all shift duty பார்க்கிறேன். அதான் எனக்கு ஜாஸ்தி வருமானம்” என்றாராம்

வயதாகிவிட்ட படியால், நான் எந்த ஒரு நிகழ்வையும், கடவுளோடு தொடர்பு கொண்டு, அவர் எனக்கு கொடுக்கும் punishment ஆகவோ அல்லது அருள் ஆகவோ பார்க்கத் தொடங்கி விட்டேன்.
கடைசியில் இருந்து என் அனுபவத்தை ஆரம்பிக்கிறேன்:
திருமலா பிரயாணம் முடிந்து கீழ் திருப்பதி வந்து, தமிழ் நாடு பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு நிமிர்ந்து பாத்தால், பஸ்சில் எழுதப்பட்ட இரண்டு குறிப்புகள் என்னைக் கவர்ந்தன.  (Bus No TN 54- N 1521).

முதலாவது

“நீ கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், அவர் நூறு அடி உன்னை நோக்கி எடுத்து வைக்கிறார்.

இரண்டாவது

குணம் நாடி குற்றம் நாடி, அவற்றுள், மிகை
நாடி மிக்கக் கொளல்-  குறள்

சடாரென்று ஓங்கி ஒரு அறை விட்டாற் போல், இரண்டு குறிப்புகளுமே, என்னுடைய திருப்பதி விஜயத்தில் என் அனுபவத்தை, பறை சாற்றிய உண்மை.

இன்னொரு விஷயம் என்ன என்றால் நான் போக வேண்டாம் என்று நினைத்தாலும் கூட, அவர் நினைத்தால் அவர் சன்னதிக்கு வந்துதான் ஆக வேண்டும்.  அது தான் நடந்தது எனக்கு.

நான் திருப்பதி போகவேண்டும் என்று plan பண்ணாத விஜயம் அது. திருப்பதி போக வேண்டுமென்றால் தரிசனத்திற்கு “on line booking”  தான். அங்கு போய் டிக்கெட் வாங்குவதென்பது என்பது கிடையாது. சாதாரணமாக, 3 மாதத்திற்கு முன்பே டிக்கெட் புக் ஆகி விடுவதால், திடீரென்று, தரிசனம் என்பது நடக்காத ஒன்று.  (ஒரு வேளை senior citizen - உதவியாளராக (escort) சென்றால், தரிசனம் கிடைக்கும்.  இதற்கு ஆன்லைன் புக்கிங் தேவை இல்லை.)

சேங்காலிபுரம் சுப்பிரமணிய தீட்சிதர், திருமலாவில், ஸ்ரீ மத் பாகவத சப்தாஹ பாராயணம் செய்து கொண்டிருந்தார்.  அது 7 நாள் வைபவம். திருமலாவில் SMC கல்யாண மண்டபம் ஒன்று வாடகைக்கு எடுத்து, மஹா விஷ்ணுவின் அவதார பெருமைகளைப் போற்றி சொல்லும் சப்தாஹம் மிகவும் விஷேஷமான ஒன்று. 300 சப்தாஹங்களைச் செய்து, காஞ்சி பெரியவர்களால் கௌரவிக்கப்பட்ட, தீக்ஷிதர், உபன்யாசம் செய்ய ஒப்புக்கொண்டு திருமலா வந்திருந்தார். அவருடன் 20-30 பேர் வந்திருந்தார்கள்.  காலையில் மூல பாராயணம் (in Sanskrit).  மதியமும், இரவும், பிரவசனம். நடுவில் அஷ்டபதி, திவ்ய நாமம், டோலோத்சவம், போன்ற பல நிகழ்சிகள் உண்டு.  வருபவர்களுக்கு, டிபன், சாப்பாடு காபி இத்யாதிகள். முக்யமாக VIP தரிசனம்,

கல்யாண மண்டபம், போன வருடம், இடித்துவிட்டு, ஒரு அரசு அலுவலமாக மாற்றுவதற்கு, TT Devasthanam  முடிவு செய்திருந்தார்கள். இதற்கு முன்பு 3-4 தடவை, சப்தாஹம் இங்கு நடத்தியபடியால், sentimental attachment வந்துவிட்டது. பெருமாள் அனுக்ரஹத்தில், கடைசியில், வேறு ஏதோ ஒரு காரணத்தினால், மண்டபம் இடிக்கப் பட வில்லை.  இது, இன்னொரு அணுக்ரஹம்.

தீக்ஷிதர், இதைப் பற்றிச் சொல்லும்போது, “நான்வரகூர் பெருமாளிடம் முறையிட்டேன். (“கல்யாண மண்டபம் இடிக்காமல்- இருக்க). அவர் அனுக்ரஹத்தில், கடைசியில், இடிக்காமல் விட்டுவிட்டார்கள்”. அதாவது ஒரு பெருமாளின் சிபாரிசு.....

என் பெற்றோர்கள், தீக்ஷிதர்க்கு மிகவும் வேண்டியவர்கள் என்பதால், திருச்சியில் இருக்கும் என் பெற்றோர்களை, மிகவும் வற்புறுத்தி, திருமலாவுக்கு வரச்சொன்னார்கள்.  ஆனால் என் பெற்றோர்களால் போக முடியாத நிர்பந்தம். அதனால், சென்னையில் இருக்கும் என்னை திருப்பதி போகச் சொன்னார்கள். எனக்கு முதலில் Rs. 300 டிக்கெட் புக் செய்யாததால், (இது நடந்த தேதி) தரிசனம் செய்யாமல், உபன்யாசம் மட்டும் கேட்க போவதா ? என்ற கேள்வி.  அப்போது VIP டிக்கெட் பற்றி எனக்குத் தெரியாது.

மே 1 லீவாகப் போனதால், திங்கள்கிழமை2 and half  நாட்கள் லீவ் எனக்குக் கிடைத்தது.  என் வீட்டிலும் மனைவி, குழந்தைகள் வெளியூர் சென்றதால், திருச்சி போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 

அம்மா வற்புறுத்தியதால் “சரி” திருப்பதி போகலாம் என்று முடிவு செய்தேன். 

4 மணிக்கு central station ல் சப்தகிரி.  சனிக்கிழமை ஆனதால், செம கும்பல். எதோ ஒரு reserved compartment ல். படியில் உட்கார்ந்து கொண்டு அரக்கோணம் வரை சென்றேன்.  பிறகு உட்கார இடம் கிடைத்தது
மேலே திருமலாவிற்குப் போகும்போது, மணி 10. கல்யாண மண்டபத்தை அடைந்து, இரவு சாப்பிட்டு விட்டுப் படுக்கும்போது, தலைவலி ஆரம்பித்து விட்டது.

நம்ப மாட்டீர்கள். அடுத்த நாள், Sunday, முழுவதும் நான் எழுந்திருக்கவே இல்லை. கடும் தலைவலி, ஜலதோஷம். ஜுரம் வேறு வருவது போல் ஆகிவிட்டது.  சாப்பிடவே இல்லை. ஏகாதசி பட்டினி போல்.. மனதிற்க்கு, மிகவும் கஷ்டமாக இருந்தது.  எதற்கு வந்தோமோ, - கதையும் கேட்கவில்லை, சாமி தரிசனமும் இல்லை. அவர்களுக்கு எந்த உதவியும் இல்லாமல் உபத்ரவமாக இருந்த அந்த நாள் மிகவும் வேதனையாக இருந்தது. 

அப்போது தான் நான், திரௌபதியைப் போல் பிரார்த்தித்தேன். “நான் செய்கின்ற பக்தி பொய் என்றால், இப்படியே என்னை திருப்பி அனுப்பிவிடு, உன் தரிசனம் எனக்குக் கிடைக்க வில்லை என்றால் பரவாயில்லை ஆனால், தலைவலியைக் கொடுத்து, எல்லோரும் என் மேல் அனுதாபப் படும்படி வைக்காதே” என்று

திங்கள் கிழமை, உடல் நிலை முழுவதுமாக சரியாகிவிட்டது.  அன்று எதேச்சையாக ருக்மணி கல்யாணம். மேலும் ராமானுஜ ஜெயந்தி ஆன படியால், சாயந்திரம், பெருங்களத்தூரிலிருந்து, ஒரு மகான் “லக்ஷ்மி ந்ருசிம்ஹர் விக்ரஹம்” கொண்டு வந்து ராமானுஜ ஜெயந்தியை கொண்டாட (இந்த மண்டபத்தில்) வருவதாக பிளான்.  காலையில் உஞ்ச வ்ருத்தி, மூல பாராயணம், ருக்மணி கல்யாணம் எல்லாவற்றிலும், முழுவதுமாக லயித்து, கலந்து கொண்டது மனசு திருப்தியாக இருந்தது. 
மதியம், சீனியர் சிடிசன், ஒருவரோடு  escort ஆக போகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதனால் 2 மணி நேரத்தில், சுவாமியைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.  சாயந்திரம், லக்ஷ்மி ந்ருசிம்ஹர் பூஜை- ஆக திங்கள்கிழமை, மிகவும் பக்தி பூர்வமாக கழிந்த தினம்.

இப்போது தான், முக்கிய கட்டம்:

செவ்வாய் கிழமை ஆபீஸ். அதனால் திங்கள் கிழமை இரவு திருமலாவிலில் இருந்து புறப்படவேண்டும். திடீரென்று, செவ்வாய் கிழமை, VIP டிக்கெட் இருக்கிறது, நான் வந்து தான் ஆகவேண்டும், என்று தீக்ஷிதர், மகன், ராம் பிரசாத், மிகவும் கேட்டுக் கொண்டார்.. முதலில் தயங்கிய நான், பிறகு ஒப்புக் கொண்டேன்.
நான் பார்த்த VIP தரிசனம், என் வாழ்கையில் பெற்ற மிகப் பெரிய பேறு. சுவாமியின் அருகில் சென்று பார்ப்பது என்பது, என் போன்ற சாதாரண மனிதருக்கு மிகவும் அரிது.  சுவாமியை பார்க்கும் தூரத்தில் இருந்து, வேங்கடாத்ரி வாசனின் அருகாமை வரை, “க்ஷேமம் குரு கோபாலா” என்ற நாராயண தீர்த்தர் தரங்கத்தைப் பாடிக்கொண்டே சென்றேன். இந்த பாடல் முடியும்போது, நான் திருவேங்கடமுடையானின் பாதத்தை, மிக அருகில், பாக்கும் பாக்கியம் கிடைத்தது.

நான் நினைத்தது ஒன்று.

தரிசனமே கிடையாது என்று நினைத்து, டிக்கெட் கிடைக்காமல் அதை ஊர்ஜிதம் செய்வது போல் உடல் நிலையம் மோசமாக பொய் ஏண்டா வந்தோம் என நினைத்த எனக்கு.........

நடந்தது ஓன்று:  

TWO TIMES DHARSAN,  ராமானுஜ ஜெயந்தி மற்றும் 
ருக்மணி கல்யாணம், (கோலாட்டம்)), வெண்னை தாழியை கட்டி, அதை சுற்றி டான்ஸ் , இத்யாதிகள்.....

செவ்வாய் அரை நாள் லீவ் எடுத்தாலும், எனக்கு கிடைத்த VIP தரிசனம் தான் என் திருமலா பிரயாணத்தில் டாப் கிளாஸ்.


இப்போது மேலே நான் எழுதிய பாராவைப் (பஸ்சில் நான் படித்த வாசகம்) படியுங்கள். எல்லாம் புரியும்.