Tuesday 6 June 2017

वेङ्कटेश समो देवो न भुतो न भविष्यति - திருவேங்கடமுடையானை நான் பார்க்கச் சென்ற கதை.....

திருப்பதி என்ற இந்த க்ஷேத்ரம் மட்டும், நாம் நினைத்தால் போகவே முடியாது. நீங்கள்  cango  போன்ற அரிதான நாட்டுக்குக் கூட போய் வரலாம். ஆனால், திருப்பதியில் உங்கள் பருப்பு வேகவே வேகாது. !!
அது “பாலாஜி” நினைக்க வேண்டும்.  நிதர்சனமாக, அருள் பாலிக்கும் தெய்வம் அவர்.. அதனால்தான் அன்னமாச்சார்யா, “மாங்கு மாங்கு” என்று திருப்பதி பாலாஜியைப் பற்றி மட்டும், கீர்த்தனைகள் எழுதி இருக்கிறார். அதில் ஒரு பாடலில். (ராகம்- வசந்தா) எழுதுகிறார்.
vADe venkaTAdri meeda vara daivamu
pODimitO poDa joope poDavaina daivamu ||

He is the God on Venkatadri that bestows boons.  He is the top most God appearing in all splendour

திருப்பதி வேங்கடேசனு(ரு)க்கு சமமான தெய்வம் கடந்த காலத்திலும் இலை, எதிர் காலத்திலும் இல்லை என்பதும், திருமலா க்ஷேத்ரம் போல, ஒரு க்ஷேத்ரம்  இந்த உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது என்றும், சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு.

பல முறை நான் நினைப்பதுண்டு.  நாளில்லை, கிழமை இல்லை, எப்போது பார்த்தாலும், கூட்டம்...என்ன தான் இருக்கிறது ? என்று. ஆனால் அந்த ஒரு க்ஷணம், அவர் சன்னதியில் நின்றால், பிறப்பு அற, நம்மை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தக் கூடிய அனுபவமாகத்தான் இருக்கும்.  (அன்று (1-5-17) தர்ம தரிசனம் 12 மணி நேரம் ஆகியது என்றும், Rs. 300 ரூபாய் தரிசனம் 8 hours ஆகியது என்றும் கேள்விப்பட்டேன்.)  குழந்தைகளையும், உறவினர்களையும் அழைத்துக்கொண்டு, உச்சி வெய்யிலின் வெப்பத்தோடு, queue ல் நின்று கொண்டிருக்கும் மக்கள், ஒவ்வொருவரையும், தனித்தனியாக அருள் பாலிக்கும், கலியுகக் கடவுள். அவர் 22 மணி நேரம், ஓய்ச்சல் ஒழிவு இல்லாமல் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தமாஷாக சொல்வதுண்டு, மற்ற தெய்வங்களெல்லாம், பாலாஜியிடம், கேட்டார்களாம் “எங்களுக்கு மட்டும் வருமானம் குறைவாக இருக்கிறது. ஆனால் உனக்கு மட்டும் கஜானா நிரம்பி வழிகிறது. இது எப்படி சாத்தியம்” என்று

அதற்க்கு பாலாஜி சொன்னாராம். “நீங்கள் 8 மணி நேரம் duty பார்க்கிறீர்கள்.  நான் sleepless, almost all shift duty பார்க்கிறேன். அதான் எனக்கு ஜாஸ்தி வருமானம்” என்றாராம்

வயதாகிவிட்ட படியால், நான் எந்த ஒரு நிகழ்வையும், கடவுளோடு தொடர்பு கொண்டு, அவர் எனக்கு கொடுக்கும் punishment ஆகவோ அல்லது அருள் ஆகவோ பார்க்கத் தொடங்கி விட்டேன்.
கடைசியில் இருந்து என் அனுபவத்தை ஆரம்பிக்கிறேன்:
திருமலா பிரயாணம் முடிந்து கீழ் திருப்பதி வந்து, தமிழ் நாடு பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு நிமிர்ந்து பாத்தால், பஸ்சில் எழுதப்பட்ட இரண்டு குறிப்புகள் என்னைக் கவர்ந்தன.  (Bus No TN 54- N 1521).

முதலாவது

“நீ கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், அவர் நூறு அடி உன்னை நோக்கி எடுத்து வைக்கிறார்.

இரண்டாவது

குணம் நாடி குற்றம் நாடி, அவற்றுள், மிகை
நாடி மிக்கக் கொளல்-  குறள்

சடாரென்று ஓங்கி ஒரு அறை விட்டாற் போல், இரண்டு குறிப்புகளுமே, என்னுடைய திருப்பதி விஜயத்தில் என் அனுபவத்தை, பறை சாற்றிய உண்மை.

இன்னொரு விஷயம் என்ன என்றால் நான் போக வேண்டாம் என்று நினைத்தாலும் கூட, அவர் நினைத்தால் அவர் சன்னதிக்கு வந்துதான் ஆக வேண்டும்.  அது தான் நடந்தது எனக்கு.

நான் திருப்பதி போகவேண்டும் என்று plan பண்ணாத விஜயம் அது. திருப்பதி போக வேண்டுமென்றால் தரிசனத்திற்கு “on line booking”  தான். அங்கு போய் டிக்கெட் வாங்குவதென்பது என்பது கிடையாது. சாதாரணமாக, 3 மாதத்திற்கு முன்பே டிக்கெட் புக் ஆகி விடுவதால், திடீரென்று, தரிசனம் என்பது நடக்காத ஒன்று.  (ஒரு வேளை senior citizen - உதவியாளராக (escort) சென்றால், தரிசனம் கிடைக்கும்.  இதற்கு ஆன்லைன் புக்கிங் தேவை இல்லை.)

சேங்காலிபுரம் சுப்பிரமணிய தீட்சிதர், திருமலாவில், ஸ்ரீ மத் பாகவத சப்தாஹ பாராயணம் செய்து கொண்டிருந்தார்.  அது 7 நாள் வைபவம். திருமலாவில் SMC கல்யாண மண்டபம் ஒன்று வாடகைக்கு எடுத்து, மஹா விஷ்ணுவின் அவதார பெருமைகளைப் போற்றி சொல்லும் சப்தாஹம் மிகவும் விஷேஷமான ஒன்று. 300 சப்தாஹங்களைச் செய்து, காஞ்சி பெரியவர்களால் கௌரவிக்கப்பட்ட, தீக்ஷிதர், உபன்யாசம் செய்ய ஒப்புக்கொண்டு திருமலா வந்திருந்தார். அவருடன் 20-30 பேர் வந்திருந்தார்கள்.  காலையில் மூல பாராயணம் (in Sanskrit).  மதியமும், இரவும், பிரவசனம். நடுவில் அஷ்டபதி, திவ்ய நாமம், டோலோத்சவம், போன்ற பல நிகழ்சிகள் உண்டு.  வருபவர்களுக்கு, டிபன், சாப்பாடு காபி இத்யாதிகள். முக்யமாக VIP தரிசனம்,

கல்யாண மண்டபம், போன வருடம், இடித்துவிட்டு, ஒரு அரசு அலுவலமாக மாற்றுவதற்கு, TT Devasthanam  முடிவு செய்திருந்தார்கள். இதற்கு முன்பு 3-4 தடவை, சப்தாஹம் இங்கு நடத்தியபடியால், sentimental attachment வந்துவிட்டது. பெருமாள் அனுக்ரஹத்தில், கடைசியில், வேறு ஏதோ ஒரு காரணத்தினால், மண்டபம் இடிக்கப் பட வில்லை.  இது, இன்னொரு அணுக்ரஹம்.

தீக்ஷிதர், இதைப் பற்றிச் சொல்லும்போது, “நான்வரகூர் பெருமாளிடம் முறையிட்டேன். (“கல்யாண மண்டபம் இடிக்காமல்- இருக்க). அவர் அனுக்ரஹத்தில், கடைசியில், இடிக்காமல் விட்டுவிட்டார்கள்”. அதாவது ஒரு பெருமாளின் சிபாரிசு.....

என் பெற்றோர்கள், தீக்ஷிதர்க்கு மிகவும் வேண்டியவர்கள் என்பதால், திருச்சியில் இருக்கும் என் பெற்றோர்களை, மிகவும் வற்புறுத்தி, திருமலாவுக்கு வரச்சொன்னார்கள்.  ஆனால் என் பெற்றோர்களால் போக முடியாத நிர்பந்தம். அதனால், சென்னையில் இருக்கும் என்னை திருப்பதி போகச் சொன்னார்கள். எனக்கு முதலில் Rs. 300 டிக்கெட் புக் செய்யாததால், (இது நடந்த தேதி) தரிசனம் செய்யாமல், உபன்யாசம் மட்டும் கேட்க போவதா ? என்ற கேள்வி.  அப்போது VIP டிக்கெட் பற்றி எனக்குத் தெரியாது.

மே 1 லீவாகப் போனதால், திங்கள்கிழமை2 and half  நாட்கள் லீவ் எனக்குக் கிடைத்தது.  என் வீட்டிலும் மனைவி, குழந்தைகள் வெளியூர் சென்றதால், திருச்சி போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 

அம்மா வற்புறுத்தியதால் “சரி” திருப்பதி போகலாம் என்று முடிவு செய்தேன். 

4 மணிக்கு central station ல் சப்தகிரி.  சனிக்கிழமை ஆனதால், செம கும்பல். எதோ ஒரு reserved compartment ல். படியில் உட்கார்ந்து கொண்டு அரக்கோணம் வரை சென்றேன்.  பிறகு உட்கார இடம் கிடைத்தது
மேலே திருமலாவிற்குப் போகும்போது, மணி 10. கல்யாண மண்டபத்தை அடைந்து, இரவு சாப்பிட்டு விட்டுப் படுக்கும்போது, தலைவலி ஆரம்பித்து விட்டது.

நம்ப மாட்டீர்கள். அடுத்த நாள், Sunday, முழுவதும் நான் எழுந்திருக்கவே இல்லை. கடும் தலைவலி, ஜலதோஷம். ஜுரம் வேறு வருவது போல் ஆகிவிட்டது.  சாப்பிடவே இல்லை. ஏகாதசி பட்டினி போல்.. மனதிற்க்கு, மிகவும் கஷ்டமாக இருந்தது.  எதற்கு வந்தோமோ, - கதையும் கேட்கவில்லை, சாமி தரிசனமும் இல்லை. அவர்களுக்கு எந்த உதவியும் இல்லாமல் உபத்ரவமாக இருந்த அந்த நாள் மிகவும் வேதனையாக இருந்தது. 

அப்போது தான் நான், திரௌபதியைப் போல் பிரார்த்தித்தேன். “நான் செய்கின்ற பக்தி பொய் என்றால், இப்படியே என்னை திருப்பி அனுப்பிவிடு, உன் தரிசனம் எனக்குக் கிடைக்க வில்லை என்றால் பரவாயில்லை ஆனால், தலைவலியைக் கொடுத்து, எல்லோரும் என் மேல் அனுதாபப் படும்படி வைக்காதே” என்று

திங்கள் கிழமை, உடல் நிலை முழுவதுமாக சரியாகிவிட்டது.  அன்று எதேச்சையாக ருக்மணி கல்யாணம். மேலும் ராமானுஜ ஜெயந்தி ஆன படியால், சாயந்திரம், பெருங்களத்தூரிலிருந்து, ஒரு மகான் “லக்ஷ்மி ந்ருசிம்ஹர் விக்ரஹம்” கொண்டு வந்து ராமானுஜ ஜெயந்தியை கொண்டாட (இந்த மண்டபத்தில்) வருவதாக பிளான்.  காலையில் உஞ்ச வ்ருத்தி, மூல பாராயணம், ருக்மணி கல்யாணம் எல்லாவற்றிலும், முழுவதுமாக லயித்து, கலந்து கொண்டது மனசு திருப்தியாக இருந்தது. 
மதியம், சீனியர் சிடிசன், ஒருவரோடு  escort ஆக போகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதனால் 2 மணி நேரத்தில், சுவாமியைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.  சாயந்திரம், லக்ஷ்மி ந்ருசிம்ஹர் பூஜை- ஆக திங்கள்கிழமை, மிகவும் பக்தி பூர்வமாக கழிந்த தினம்.

இப்போது தான், முக்கிய கட்டம்:

செவ்வாய் கிழமை ஆபீஸ். அதனால் திங்கள் கிழமை இரவு திருமலாவிலில் இருந்து புறப்படவேண்டும். திடீரென்று, செவ்வாய் கிழமை, VIP டிக்கெட் இருக்கிறது, நான் வந்து தான் ஆகவேண்டும், என்று தீக்ஷிதர், மகன், ராம் பிரசாத், மிகவும் கேட்டுக் கொண்டார்.. முதலில் தயங்கிய நான், பிறகு ஒப்புக் கொண்டேன்.
நான் பார்த்த VIP தரிசனம், என் வாழ்கையில் பெற்ற மிகப் பெரிய பேறு. சுவாமியின் அருகில் சென்று பார்ப்பது என்பது, என் போன்ற சாதாரண மனிதருக்கு மிகவும் அரிது.  சுவாமியை பார்க்கும் தூரத்தில் இருந்து, வேங்கடாத்ரி வாசனின் அருகாமை வரை, “க்ஷேமம் குரு கோபாலா” என்ற நாராயண தீர்த்தர் தரங்கத்தைப் பாடிக்கொண்டே சென்றேன். இந்த பாடல் முடியும்போது, நான் திருவேங்கடமுடையானின் பாதத்தை, மிக அருகில், பாக்கும் பாக்கியம் கிடைத்தது.

நான் நினைத்தது ஒன்று.

தரிசனமே கிடையாது என்று நினைத்து, டிக்கெட் கிடைக்காமல் அதை ஊர்ஜிதம் செய்வது போல் உடல் நிலையம் மோசமாக பொய் ஏண்டா வந்தோம் என நினைத்த எனக்கு.........

நடந்தது ஓன்று:  

TWO TIMES DHARSAN,  ராமானுஜ ஜெயந்தி மற்றும் 
ருக்மணி கல்யாணம், (கோலாட்டம்)), வெண்னை தாழியை கட்டி, அதை சுற்றி டான்ஸ் , இத்யாதிகள்.....

செவ்வாய் அரை நாள் லீவ் எடுத்தாலும், எனக்கு கிடைத்த VIP தரிசனம் தான் என் திருமலா பிரயாணத்தில் டாப் கிளாஸ்.


இப்போது மேலே நான் எழுதிய பாராவைப் (பஸ்சில் நான் படித்த வாசகம்) படியுங்கள். எல்லாம் புரியும்.

No comments: