Thursday 9 November 2023

நிலை பெறுமாறு எண்ணுதியேல்.. –

 

நிலையான ஒன்றை வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்....?

செல்வம் – வரும் போகும்...

ஆரோக்கியம் – இன்று வரும் நாளை  போகும்

சுற்றவும் உறவும்.....ரயில் பிரயாணம் போல....

மனமோ – ஒரு நொடிக்கு ஓராயிரம் நினைவுகள்.

வாலிபம், சடார் என்று ..... முதுமை

 

இங்கு சற்று நின்று திருப்புகழை யோசிப்போம்

 

முதுமை பற்றி திருப்புகழ் நிறைய சொல்கிறது......

“மனையவள் நகைக்க, ஊரின் அனைவரும் நகைக்க, லோக மகளிரும் நகைக்க......”

என்று ஒரு திருப்புகழ்.... இதன் அர்த்தம்... “வயசாகி விட்டது, நோய் வந்து படுத்து விட்டோம்.. மனைவி நகைக்கிறாள். ஆசையாக நம்முடன் கூடி, அளவளாவிய மனைவி, நக்கல் அடிக்கிறாள்.  எப்படா கூடாரம் காலியாகும் என்று பார்க்கிறாள்”

இதில் மூன்றாவது வரி. லோகத்தில் உள்ள மகளிரும் நகைக்க. என்ற அர்த்தத்தில் ஒரு வார்த்தை வருகிறது. அருணகிரிநாதர், மிகவும் அனுபவத்துடன் இந்த வரியை எழுதுகிறார்.

லோகத்தில் வேறோரு பெண், நமக்குத் தெரியாதவள், நம் நிலைமையைப் பார்த்துச் சிரித்தால்,.. நமக்கு எப்படி இருக்கும். கூனிக் குறுகி போவோம்.  ஒரு ஆண், எந்த வயதாக இருந்தாலும், ஒரு பெண்ணிடம், பந்தா காட்டாமல் இருக்க மாட்டான். ஏதோ ஒரு வகையில்.

அப்படிபட்ட ஒரு பெண். நம்மைப் பார்த்து நகைத்தால். அது கொடுமை.

திரும்பவும் தலைப்புச் செய்திக்கு வருவோம்

இங்கு அப்பர் என்ன சொல்கிறார் என்றால்....

நிலை பெற வேண்டும் என்றால், நிதமும் கோவிலுக்குப் போ,

புலவர்கள் முன் உட்கார்ந்து, அவர் சொல்லும் கருத்துக்களை மெய் மறந்து கேள்.  தலை ஆரக் கும்பிடு.  கூத்து ஆடு. சங்கரா சங்கரா  என்று பிதற்று. ....என்கிறார்

தேவராம்:

நிலை பெறுமாறு என்னுகியேல் . நெஞ்சே நீ

வா. நித்தலும் எம்பிரானுடைய கோவில் புக்கு.

புலவர் தன் முன் அலகிட்டு, மெழுகும் இட்டு, பூமாலை

புனைந்து எத்தி, புகழ்ந்து பாடி, தலை ஆரக் கும்பிட்டு,

கூத்தும் ஆடி, சங்கரா ஜெய ஜெய போற்றி போற்றி என்றும்

அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ.....