Thursday 23 October 2014

திவசம், திதி என்றெல்லாம் சொல்கிறார்களே அது எதற்காக?

சோ" எழுதிய எங்கே பிராமணன்? தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சுவையான கேள்வி-பதில் உரையாடல்:





கேள்வி : திவசம், திதி என்றெல்லாம் சொல்கிறார்களே அது எதற்காக? போகிறவர்கள் என்றைக்கோ போய்ச் சேர்ந்தாகி விட்டது. அவர்களுக்கு வருடா வருடம் இந்த மாதிரி ஒரு சடங்கு தேவையா? இங்கே கொடுக்கிற எள், தண்ணீர், பிண்டம் போன்றவை அங்கே அவர்களுக்குப் போய்ச் சேர்ந்து விடுமா? அவர்கள் இருக்கிற இடம்தான் உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் சொல்கிற மந்திரத்தின் மூலமாக, அவர்களுக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நன்மை விளையப் போகிறது? இந்தச் சடங்கு எதற்காக? பகுத்தறிவுக்கு இது சற்றும் ஒவ்வாதது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

சோ : நீங்கள் பகுத்தறிவு என்று பேசுவதால் முதலில் அந்த விஷயத்தைப் பார்ப்போம். இப்போது ஒரு தலைவரின் சமாதி என்று ஒன்றை நிறுவி, அங்கே போய் வருடா வருடம் மலர் வளையம் வைக்கிறார்கள். ஏன்? அந்தத் தலைவரும் என்றைக்கோ போய்ச் சேர்ந்து விட்டவர்தானே? இங்கே இவர்கள் வைக்கிற மலர் வளையம், அங்கே அவருக்குப் போய்ச் சேர்ந்து விடுமா? அல்லது அந்த மலரின் வாசனை அவருக்குப் போய் விடுமா? அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியாது. அதை மட்டும் ஏன் செய்கிறார்கள்? அதுவும் அவர் என்று இறந்தாரோ, அந்தத் தேதியில் போய்ச் செய்வானேன்? மற்ற தினங்களில் செய்தால், அந்த மலர் வளையம் அவருக்கு ஏற்புடையதாகாதா? அவர் இறந்த தினத்தன்று இந்த மரியாதையை ஒரு அரசியல்வாதி செய்யவில்லை என்றால், உடனே அவரைப் பற்றி பல விமர்சனங்கள் வருகின்றன. ‘இறந்த தலைவர் மீது இவருக்கு மரியாதை இல்லை’ என்ற பேச்சு வருகிறது. சரி, இப்படி மலர் வளையம் வைப்பதால் ஒருவேளை ஓட்டு வருமோ, என்னவோ தெரியாது.





ஆனால், நீங்கள் குறிப்பிட்ட திவசம், திதி இதைச் செய்வதால் புண்ணியம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறந்தவர்களுக்கு நாம் சிராத்தம் செய்கிறபோது, அது அவர்களுடைய பிரேதத்திற்காகச் செய்யப்படுகிற காரியம் அல்ல. அவர்கள் மூன்று உருவில் இருக்கிறார்கள். ஒன்று – ஆதித்ய ரூபம்; இரண்டாவது – ருத்ர ரூபம்; மூன்றாவது – வஸு ரூபம். அந்த ரூபத்தில் அவர்களுக்கு நாம் செய்கிற மரியாதை இங்கே செய்யப்படுகிற சிராத்தம். சிரத்தையோடு செய்யப்படுவதே சிராத்தம். இதில் முக்கியமானதே சிரத்தைதான். இந்த சிராத்தத்தைத்தான் திவசம், திதி என்றெல்லாம் சொல்கிறோம்.



இது ஒரு பண்டிகை அல்ல. இதை மிகவும் விமரிசையாகச் செய்யக் கூடாது. ‘ச்ராத்தம் ந விஸ்தாரயேத் தீமான்…’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது அறிவுடையோன் சிராத்தத்தை விமரிசையாகச் செய்ய மாட்டான். ஏனென்றால், இது ஒரு பொதுக்காரியம் அல்ல. சிராத்தத்தைச் செய்கிறவன் தனது முன்னோர்களுக்காகச் செய்கிற காரியம் இது. அதில் பெரிய விருந்து, படாடோபம் எல்லாம் கூடாது.





இறந்த முன்னோர்கள் எங்கே இருக்கிறார்கள்? நம்மால் பார்க்க முடியாதுதான். ஆனால், இன்று விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? வானுலகில் சில இடங்களில் ஜீவ ராசிகள் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். நிச்சயமாக அங்கு ஜீவராசிகள் கிடையாது என்று அவர்கள் சொல்லவில்லை. அந்த ஜீவராசிகளின் சக்தி என்ன, அவர்களுடைய அறிவு என்ன – என்பதெல்லாம் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் சொல்கிறார்கள். இந்த ஆராய்ச்சிகள் இப்படியே தொடர்ந்து, ஒரு கட்டத்தில், ‘மேலுலகில் ஜீவராசிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்; அவர்களுக்கெல்லாம் நல்ல அறிவு இருக்கிறது.





அவர்கள் நம்மை விட மிகவும் நுட்பமான அறிவு கொண்டவர்கள், திறன் கொண்டவர்கள்’ என்றெல்லாம் விஞ்ஞானிகள் கூறினால், நாம் என்ன சொல்வோம்? ‘ஏதோ விஞ்ஞானிகள் சொல்கிறார்கள், நமக்கு என்ன தெரியும்? நமக்கும் விஞ்ஞானத்திற்கும் சம்பந்தம் இல்லை’ என்றா சொல்வோம்? அப்படிச் சொல்ல மாட்டோம். விஞ்ஞானிகள் சொல்லி விட்டால் சரி என்று ஏற்று விடுவோம். அவர்கள் சொல்வதே அதற்கு நிரூபணம் ஆகி விடும். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து வேறு விஞ்ஞானிகள், இவர்களிடமிருந்து மாறுபட்டால், அதையும் நாம் ஏற்றுக் கொள்வோம். அதாவது அங்கே நம்முடைய சுய அறிவு என்பதற்கு வேலையே கிடையாது. என்ன சொல்லப்படுகிறதோ, அதை கண்மூடித்தனமாக ஏற்று விடுவோம். ஏனென்றால், அப்போதுதான் நமக்கு எல்லாம் புரிந்து விட்ட மாதிரி காண்பித்துக் கொள்ள முடியும். ஆனால், இப்பொழுது நம்பிக்கை ரீதியாக சிராத்தம் என்று சொன்னால், ‘யாருக்கு? எங்கே இருக்கிறான்?’ என்றெல்லாம் கேட்கிறோம்.



பித்ருக்கள் – அதாவது – மறைந்த முன்னோர்கள் ஆதித்யர்கள், ருத்ரர்கள், வஸுக்கள் ஆகிய மூன்று உருவில் இருக்கிறார்கள் என்று சொன்னோம். எட்டு வஸுக்கள், பதினோரு ருத்ரர்கள், பன்னிரெண்டு ஆதித்யர்கள் இன்னும் சிலர் பித்ரு தேவர்கள் என்று கூறப்படுகிறார்கள். இவர்களுடைய ஆதரவில்தான் நமது முன்னோர்கள், தங்களுடைய கர்மம் முடிகிற வரை, பித்ரு லோகத்தில் தங்குகிறார்கள். கர்மம் முடிந்த பின்பு, அவர்களுடைய அடுத்த பிறவி வரும். அதுவரை பித்ரு லோகத்தில் இருக்கிற அவர்களுக்கு நாம் சிராத்தம் செய்கிறோம்.ஒரு புண்ணிய தீர்த்தத்தில் சென்று சிராத்தம் செய்தால், அது தீர்த்த சிராத்தம். கங்கையில் செய்தால், அது கயா சிராத்தம். இப்படி பல சிராத்தங்கள் கூறப்பட்டுள்ளன.





பித்ரு தேவர்களையும், பித்ருக்களையும் வணங்கி நாம் செய்கிற சிராத்தம், ஹிந்து மதச் சடங்குகளில் மிகவும் புனிதமானவற்றில் ஒன்று

கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள் - அக்டோபர் 17

இன்று அமரர் கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள்   (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981). அமரத்துவம் வாய்ந்த கவிகள் புனைந்த அந்தக் காவியத்தாயின் இளைய மகனுக்கு அவனது குடும்பம் என்கிற இந்தக் கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொண்டு சிறப்புச் செய்கிறேன். 

குடும்பம்                                                                                                                                  

பக்திமிக்க பூஜையறை காதலர்கள் பள்ளியறை

சக்தியோடு நாயகனார் தவம்புரியும் மேருமலை

அக்கரையும் இக்கரையும் அதன் நடுவே காவிரியும்

பக்குவமாய் ஓடுதல் போல் பயிலுகின்ற கல்வியறை

முற்றமது காமசுகம் முளைக்கின்ற பூமியல்ல;



மற்றுமொரு ஜீவனுக்கு வரவு சொல்ல வந்த இடம்

தம்பதிகள் உறவினிலே தாய்வயிற்றில் பிள்ளைவரம்

தாய்தகப்பன் குணம் போல சேய்க்குணம் தவழ்ந்துவரம்

ஆதலின் ஒன்றையொன்று

அநுசரித்துப் போவதுதான்

காதலிலும் இன்பம் வரும்

கண்மணிக்கும் நல்லகுணம்.



காதலில் மனைவியவள்

கருவடைந்த பின்னாலே

ஐந்துமா தம்வரைக்கும்

அழுவதென்ப தாகாது

அன்னை அழுதாலோ அலறியவள் துடித்தாலோ

அங்கம் பழுதுபட்டு அழகிழந்த பிள்ளைவரும்

கண்ணிரண்டும் கெட்டுவரும் கைகால் விளங்காது

வாய்மொழியும் தேறாது வாரிசுக்கும் உதவாது

எப்போதும் சிரித்தபடி இருக்கின்ற பெண்மயில்தான்

தப்பாமல் நல்ல தொரு தங்கமகன்(ள்) ஈன்றேடுப்பாள்

கணவன் அழகாக்க் கண்மணியை எதிர்பார்த்தால்

மனைவி மனம்நோகும் வார்த்தை சொல்லக் கூடாது.

அன்பு மொழிபேசி அரவணைத்து எந்நாளும்

தன்னையே மனைவியவள் சார்ந்திருக்கச் செய்து விட்டால்

பொன்னை வடித்த்துபோல் புத்திரர்கள் பிறப்பார்கள்!



கணந்தோறும் கணந்தோறும் கணவனையே நினைத்திருந்தால்

அவள் பெறும் ஓர் பிள்ளை என்றும் அப்பாவைப் போலிருக்கும்

ஆளான பின்னாலே ஆண்டாண்டு பொறுத்தவள்தான்

நாளாகி வயதாகி நல்லமனம் முடித்தவள் தான்.

ஆசை நிறைந்தாலும் அடக்கம் மிகுந்தவள்தான்

ஆனாலும் அந்த அழுகுமயில் வாழ்க்கையிலே

சூலான பின்னால்தான் சுகம்காணும் மயக்கம் வரும்.!

தேடும் மனையாளைத் திருப்தியுடன் வைத்திருந்தால்

கூடுகின்ற சந்ததியும் குணத்தோடு வந்துதிக்கம்.

மணவாழ்வு வாழுகையில் மறுவார்த்தை ஆகாது!

தாய்கொடுத்த சீர்வரிசை சகிக்கவில்லை! என்பதுவும்

ஜாடையாய்ப் பேசுவதும் தரம் குறைத்துக் காட்டுவதும்

அப்பன் கொடுத்த்தொரு ஆழாக்கு என்பதுவும்

வடுவாக நின்றுவிடும் வாழ்நாளில் ஆறாது

கொண்டவள்மேல் ஓர்பொழுது கோபம் வருமென்றால்

சண்டாளி சூர்ப்பனகை தாடகைநீ என்றெல்லாம்

அண்டாவில் அள்ளிவந்து அளந்துவைக்க்கூடாது

நாளைக்குப் பார்ப்போம், நடப்பதெல்லாம் நடக்கட்டும்

என்றே படுத்துவிட்டால் எழுந்திருக்கும் வேளையிலே

பெண்டாட்டி அன்புவரும் பெரிய நினைவு வரும்.

கடுகு அரிசியினைக் கற்தரையில் கொட்டிவிட்டால் மறுபடியும் திரும்பாது!

ஆழாக்கு அரிசியிட்டு அதில் வாழ்வு வாழ்ந்தாலும்

தாளாத காதலுடன் தாய்போல ஊட்டிவிட்டால்

தேவர் அமுதமெல்லாம் ‘சீ என்றே ஆகிவிடும்

வாழ்வதற்கும் தாழ்வதற்கும் மனசுதான் காரணமாம்

இன்பமென எண்ணிவிட்டால் எப்போதும் இன்பமயம்

துன்பமெனத் தோன்றினாலோ தொலையாத துன்பமயம்.



ராமனது துன்பம் இனி நமக்குவரப் போவதில்லை

சீதைபட்ட வேதனையைச் சிந்தித்தால் துன்பமில்லை!

ஆதாரம் ஒன்றையொன்று அண்டி நிற்க வேண்டுமென்றே

ஓர்தாரம் கொள்கின்றோம் உடனிருந்து வாழ்கின்றோம்.

சேதாரம் என்றாலும் சேர்ந்துவிட்ட பின்னாலே

காதோரம் அன்புசொல்லிக் கலந்திருந்தால் துன்பமில்லை!

குற்றமெல்லாம் பார்த்துக் குறை பேசத் தொடங்கிவிட்டால்

சுற்றமென ஏதுமில்லை சொந்தமென நாதியில்ல்லை!

பற்றவைத்தால் வைத்த இடம் பம்பரம் போல் ஆடிவிடும்

தள்ளிவைத்தால் தங்கதும் தவிடாக மாறிவிடும்!

கையில் அரைக் காசுமில்லை கடன் கொடுப்பார் யாருமில்லை

என்றிருக்கும் வேளையிலே இருப்பதையே பெரிதாக்கி

கொத்தாக்க் கீரைதனைக் கொழம்புவைத்துப் போட்டாலும்

சத்தமின்றிச் சாப்பிடுங்கள் தருவான் இறைவன்.



சண்டையிட்டு ஆவதென்ன சஞ்சலம்தான் மிஞ்சிவிடும்

அண்டை அயல்சிரிக்கு அத்தனையும் கேலிசெய்யும்.

பகலில் அக்கம்பக்கம் பார்த்தபின்னால் பேசுங்கள்,

அந்திபட்டால் எப்போதும் அதுகூடக்கூடாது

வீட்டுக் கதைகளுக்கு விபரங்கள் வேண்டுமென்றால்

கட்டாக்க் கட்டிலில் குலவுங்கள் பேசுங்கள்

பால்கணக்கோ மோர்க்கணக்கோ பட்டெடுத்த

கடைக் கணக்கோ பேசும் கணக்கெல்லாம் பிறர் முன்னால் பேசாதீர்!



தப்புக் கணக்கென்று சந்தேகம் கிளப்பாதீர்!

பெண்டாட்டி தப்பென்று பிறர்முன்னால் சொல்லிவிட்டால்

கொண்டாட்டம் ஊருக்கு கொட்டுவார் கையிரண்டை!

பால்போன்ற வேட்டியிலே பட்டகறை அத்தனையும்

பார்ப்பவர் கண்களுக்கு படம் போல தோன்றிவிடும்!

நாட்டுமக்கள் வாழ்க்கையெல்லாம் நாலும் கலந்துதான்

வீட்டுக்கு வீடு ஒரு விரிவான கதையிருக்கம்

உன்கதையைக் கேட்ட்தானால் ஊரார் அழுவதில்லை

சிலரோ சிரிப்பார்கள்; திண்டாடு என்பார்கள்

நாட்டிலா வாழுகிறோம்; நாலும் திரிந்திருக்கம்

காட்டில் உலாவுகிறோம்; கவனம் மிகத்தேவை!

எடுத்தஅடி ஒவ்வொன்றும் எச்சரிக்கையாய் விழுந்தால்

அடுத்த அடி தப்பாது ஆண்டவனார் துணையிருப்பார்!

இந்துமதப் பெண்களது எத்தனையோ துன்பங்கள்

மெளனம் எனும் தீயினிலே மாயமாய்ப் போவதுண்டு

வாய்க்கட்டு வேண்டும் என்று வகையாய் உரைப்பார்கள்!

அதற்குப் பொருளிரண்டு, ஆகாத வார்த்தைகளை

ஊரெங்கும் வீசாமல் உள்ளேவை என்பதென்று

வாய்ச்சுவையை நாடி வயிற்றைக் கெடுக்காமல்

வாய்க்கட்டு போடு என்னும் வகையான புத்தியொன்று!

பெருக்கத்து வேண்டும் பணிவென்றும் எந்நாளும்

சுருக்கத்து வேண்டும் உயர் வென்றும் சொன்னார்கள்!

வற்றாத செல்வங்கள் வளமாகச் செருகையில்

அடக்கம் பணியிருந்தால் அனைவருமே மதிப்பார்கள்!

இவ்வளவு பணமிருந்தும் எவ்வளவு பணிவென்று

ஊரார் புகழ்வார்கள் உன்னடியில் பணிவார்கள்

கையில் பணமில்லை கடனாளி யாகிவிட்டான்

என்றெல்லாம் உரார் ஏளனமாய்ப் பேசுகையில்

கைநிறைய மோதிரங்கள் கடிகாரம் சங்கிலிகள்

பட்டாடை கட்டி பவனிவர வேண்டும்நீ

அப்போது ஊறார் அதை என்ன சொல்வார்கள்

எவனோ புளுகுகிறான்; இவனா கடனாளி?

பெண்டாட்டி பேரில் பெரியபணம் வைத்துள்ளான்

என்பார்கள் நீயே இன்னுமொரு தொழில் தெய்தால்

அவரே பணம் தந்து ஆதரிக்க வருவார்கள்

நான்குபுறம் கத்தி நடுவிலொரு முள்வேலி

முள்வேலி மீதே மோகனமாய் நாட்டியங்கள்

இதுதானே வாழ்க்கை! எதற்குக் கலங்குகிறாய்?

காலத்தைப் பார்த்துக் கணக்காய்த் தொழில் தெய்தால்

ஞாலமே உன்கையில் நவின்றாரே வள்ளுவனார்

நீரில் அழுக்கிருந்தால் நீர்ருந்த மாட்டோமா?

காய்ச்சிக் குடிக்கின்றோம்; கலவைக்கு வேலையென்ன?

இடுக்கண் வருங்கால் நகு என்றொல் எந்நாளும்

அடுத்து வருவ ததுபோல் இருப்பதில்லை



சகடத்தில் ஏறிவிட்டால் தாழ்ந்தும் உயர்ந்தும் வரும்

இருட்டு வெளிச்சமென இரண்டு வைத்தான் பேரிறைவன்.

இன்ப துன்பங்களுக்க இதுதான் நியதி என்றாள்!

கோடை வெயிலடித்துக் கொளுத்து கின்ற வேளையிலே

அம்மா மழைஎன் றவறுகிறோம், மழைவந்து

வெள்ளம் பெருக்கெடுத்து வீதியையே மூழ்கடித்தால்

வெய்யிலையே தெடி விடிகதிரை வணங்குகிறோம்!

கூடும் குறையும் குறைந்த்தெல்லாம் வளமாகும்

எப்போது எது நடக்கும் இறைவனுக்குத் தான் தெரியும்.

நடைபோடும் யந்திரங்கள் இவ்வுலகில் ஏதுமில்லை

போடும் நடையைப் பொடி நடையாய்ப் போடுங்கள்

நடைபோடும் வேலைதான் நாம்செய்யக் கூடுவது

பார்த்த நடந்து பக்குவமாய்த் தொடருங்கள்

அப்போதும் முதுகினிலே அடிவிழுந்தால் எல்லாமே

தப்பாத ஈசன் சாட்டை யென எண்ணுங்கள்

கண்ணீரால் எந்நாளும் கவலை மறைவதில்லை.

விண்ணாளும் வேந்தன் வீடுசெல்லும் காலம்வரை

எண்ணுவன எண்ணுங்கள் இயக்குங்கள் துன்பமில்லை.

Tuesday 21 October 2014

Vijay Siva Bharatiya Vidhya Bhavan 19th October 2014

Vijay Siva
Amrita Murali-Violin
Manoj Siva- Mridangam

Date- 19th October 2014



The incessant rain played havoc in the city for the past two days and despite the Diwali rush in and around Mylapore, there was full attendance in the main hall for VS’ concert.

It was last day of Mylapore Arts Academy who had been conducting programmes at Bharathiya Vidhya bhavan for the past 6 days.

Started with sada bAlarUbabhi vignanthri…. Adhi shankara’s Ganapathy prArthana slOkam in Subramanya bhujangam

• Kari kaLabha mukham- sAVEri- Dikshitar

• smaranE sukhamu- Janaranjani- Thyagarajar (N S)

  Neraval in “rama nAma shravanamu valla nAma rUpamE hrudayamu ninji”

• KalyAni rAgam followed by “kathaya kathaya mAdhavam- Tarangam by Narayana Teertha (R S)

• Nannu brO judaku tAmasa mElE- Todi- ShyAma Sastri/Subbaraya Sastri

• kAmbodhi- Main- followed by “nadamAdi tirindha umadhu idadu kAl”- Papa vinAsa mudaliAr

  Neraval in- “Shakthi sivakAma valli tan bhAgam nOgum enRu”

• SeetammA mAyammA- vasantha-Thiagarajar- (w/o chitta swaram)

• RTP- Nata bhairavi- Pallavi- Ananda nata bhairavEEsa, jagadEEsa, paramAnanda..

  Followed by ragamaliga in “ ananda bhairavEEsa, bhairavEEsa.”

• Tani

• PerugalAm tavam- 4 line verse – ended with “marugalAnadi vAzthi vaNanguvOmE”- Tirumarugal  
  pasuram

• bhajarE rE mAnasa- Abheri- Mysore vasudevachar.

• Vrutham- vadilERu tiri soolam tOnRum.. followed by vAnathin mEEdu”- Mand

• pavamAna-Mangalam

As VS has “smaranE sukham” in his concert, for me, it is “ShrunvathAm sukhAm” of VS. (listening pleasure)

I feel that I have a “chemistry” with Vijay Siva. I always expect him to deliver “sort of” “one out of 3 choices (of mine)” and he delivers.

On that day, when I entered the hall, I was thinking what should be his list. !!!

I prayed for any Ganapathi kriti, which long unheard. He rendered “Kari kalabha”

That day morning, I was listening “smaranE sukham” from Madurai Somu. It was commercial CD. I was wondering Thyagarja’s bhakthi and being Ekadashi day, it was in my memory. So, when Vijay Siva took it as the second, I though Oh, here it is !!!

Next, when he started kalyani, I thought of “nee sari sAti” or “kathaya kathaya”. Once, he rendered nee sari sAti in MGR-janaji school, along with Sriramkumar. It was a unique kriti and I still remember the classic kalyani on that day. Kathaya kathaya was Tarangam, the place (varagUr, where tharangam was originated) of which Iam closely related to. So, again I was lucky.

I was bit disappointed that he did not render “mudra” charanam. I am a “sort” of old school. Without mudra charanam, I feel, Guru’s blessings are not invoked. In my opinion, MS only renders whether it is EnnEramum un sannathiyil or sEvikka vEndumaiyya, MS sees that that “balakrishna” comes

NadamAdi tirinda a papa vinasa mudaliar kriti was a “satirical” kriti on Lord Siva. Very good and thought provoking and once I listened to KVN rendering. My grand mother, born in Chidambaram, who passed away a month back, sings that more often. She was 78 and she cherished Chidambaram days and so, the kriti was dear to her heart and through her singing I also learnt.. I was bit moved when I listened to this because I spent my good old days with my Grand mother in Semmangudi, where she got married and shifted from Chidambaram.

Nata bairavi RTP, though I got confused with saramathy and slowly I realized it was Nata bairavi with a grip on “sri valli dEva”. I thought he would add vasantha bairavi and sAlakha bhairavi but he finished with Ananda bairavi and bairavi…. Of course, no time and Manoj was given tani at 8.25 pm only.

Amritha murali had some slips in kalyani but she was very good in kritis followed by kalyani. Manoj Siva is ,as usual, good.

Dundi Ganapathy - in the Dikshitar kriti- Dikshitar composed this thinking of mayavaram Dundi Ganapathy. My father told me that “dundi” Ganapathy is famous only in kAsi. Mayavaram “Dundi” must have come after that like “vAthapi” was brought to Tiruvarur subsequently.

Some meanings of the kritis are thought provoking (at least for me). In sadha bAla verse, there is word which means, respected by Lion. Here, the Lion is referred to Lord Shiva. Wonder, how Shiva is relatead to Lion ?

Even in kari kalabha mukham. (The Ka, bha and Kha were rendered perfectly by VS, a “perfectionist” from DKJ school. ) There is a word, which says “wearing moon on his head”. This also I don’t understand. May be Poetic beauty. Or I may be ignorant.

Coming back to Vijay siva, I say some links to his kritis rendered on that day. His Ganapathy kriti followed by “smaranE sukham” of Lord RamA, followed by kathaya, where the GopikAs are asking Radha to let them know whereabouts of Krishna, a “search for God”

This is again followed by “lAvanyam” of BangAru kAmakshi, the beauty of Goddess. Who else can elicit better than Shyama/Subbaraya sastri ? Seething Goddess as “Sister” must have resulted in more “pAsa malar rasam” in kritis.

Actually, I thought, kAna kaN kOti, when he finished kambOdhi Ragam. Though, unexpected, he came out with superlative “nadamAdi”

Vijay Siva’s kritis are always soaked in bhakti. Strict to basics, a unique style of DKJ school. That always fit to my taste.

Once I told him coming out Naradha Gana sabha, how come once you sing “kumarEsha soonO, guha skantha sEnapathE” (verse in Subramanya bhujangam, he sang this on that day followed by subhramanyO), I could feel the existence of Lord Muruga in the hall, he had a big smile and politely refuted my statement.

For me, that is True and that is Vijay Siva