Tuesday 26 July 2016

கர்ணனும் பட்டினத்தாரும்- அவர்களது தாயன்பும்



“கற்றதும் கற்க நினைத்தும்”

சமீபத்தில் TAMILVU.ORGஎன்ற ஒரு இணைய தளத்தை பார்க்க நேர்ந்தது. இதன் கரு எப்படி என்றால், சமீபத்தில் தீவுத்திடலில் நடந்த புத்தகக் கண்காட்சியில், தமிழ் இனைய தளத்தைப் பற்றி ஒரு STALLஒதுக்கப்பட்டு இருந்தது.  அங்கு சென்று பெசிக்கொண்டிருந்த போது, மேற்சொன்ன இ.த பற்றி பேசினார்கள்.

“மிக அருமையான புத்தகங்களை (UPLOAD) “ஏற்றி இருக்கிறோம்” உங்களுக்கு படிப்பதற்கு எளிமையாக” என்றார்கள்.

அந்த “இ.த” பார்த்த போது முதலில் “சித்தர் இலக்கியங்களை’ பார்த்தேன். அதில் பட்டினத்தாரின் அருமையான தொகுப்பைப் பார்த்தேன்.

அதனுடைய தாக்கம் தான் இந்தக் கட்டுரை.

பட்டினத்தாரின் ஒரு செய்யுளைப் பாப்போம்

ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பே னினி

மேற்கூறிய செய்யுள் பட்டினத்தார் தன் தாயார் மரணத்தை கேள்விப்பட்டு கதறி அழுது பாடிய வரிகள்.

புலவர் கீரன் அவர்கள் கர்ணனைப் பற்றிக் கூறும்போது, ஒரு கட்டத்தில் கர்ணன், தன்னைப் பெற்றெடுத்த தாயான குந்தியை சந்திக்க நேருகிறது. தாய் குந்தி கர்ணனை தன் மகன் என்று ஒப்புக்கொள்ள இசையும் ஒரு கட்டம். 

கர்ணன் ஒரு போர்வை வைத்திருந்தான். அது அவனைப் பெற்று நதியில், ஒரு பெட்டியில் வைத்து விடும்போது, அவனுடன் அந்தப் போர்வையையும் சேர்த்து குந்தி அனுப்புகிறாள். அந்தப் போர்வையை யார் முதுகில் போர்த்தினால் அவர்கள் எரியாமல் இருக்கிறார்களோ, அவர்களே கர்ணனின் உண்மையான அம்மா என்று ஒரு நிலை.

நிறைய பேர் “நான் தான் உண்மையான அம்மா என்று பொய் சொல்லிக்கொண்டு வருவார்கள். இந்தப் போர்வைக் கதையை சொன்னவுடன் ஓடி விடுவார்கள்.

கீரன் சொல்லுவார்- “என்ன கேவலம் இது.  அன்புத் தாயின் அரவணைப்புக் கிடைக்காமல் மேலும் நாட்டையே ஆளும் உரிமை பெற்றிருந்தாலும், அது தெரியாமல், செஞ்சோற்றுக் கடன் என்ற ஒரு வலையில் விழுந்து, அலைக்கழிக்கப்பட்டு, ஒரு பேரரசராக இருந்திருக்க வேண்டியவன், தாயின் அன்பும் கிடைக்காமல், பேரரசராகவும் இல்லாமல் தரையில் விழுந்து உயிரை விட்ட ஒரு துர்பாக்யசாலி இந்தக் கர்ணன்”, என்பார்

பட்டினத்தாரைப் பற்றிச் சொல்லும்போது, என்னதான், உலகத்தை நன்கு புரிந்து கொண்டு, “காதறுந்த ஊசியும் வாறது காண் கடை வழிக்கே” என்று ஆணித்தரமாக சொன்ன பட்டினத்தார், தன் தாய் மறைந்த செய்தியை கேட்டவுடன் கதறி அழுத் சொன்ன வார்த்தைகள்தான் நான் ஆரம்பத்தில் எழுதிய வார்த்தைகள்.

உணர்ச்சி பூர்வமான இந்த கட்டத்தில் தாய் பாசத்தைப் பற்றிப் பேசும்போது, இந்த பட்டினத்தாரின் செய்யுளை மேற் சொல்லி காட்டுவார்.

அதனால் தான் என்னவோ, ஸ்ரீ லலிதா சஹாஸ்ரநாமத்தில் முதல் வரி “ஸ்ரீ மாதா மகாராஞ்சி” என்று தாயின் பெருமையை அம்பாளைத் தாயாக பாவிக்கும் அருமையான் ஒரு கருத்துடன் ஆரம்பிக்கிறது.

கர்ணன் தாயன்பு வேண்டாம் என்று நினைத்தாலும், அவன் தன் தாய் குந்தியிடம் கேட்ட வரத்தில்,நான் இறந்தபிறகு உரறிய, நீ என்னை, உன் மகன் என்று சொல்லவேண்டும் என்றான்.  பட்டினத்தார் சிறிய வயதிலே முழு “அநுபூதி” பெற்றாலும் தாயன்பை அவரால் புறக்கணிக்க முடியவில்லை

தாய் தாய் தான்.


எந்தக் காலத்திலும், யாராலும் தாயின் இடத்தை நிரப்ப முடியாது.

Monday 25 July 2016

Sanjay Subramanyan- Sri. Tanjore Upendran Remembrance day- 24th July 2016



Tanjavur Upendran’s 25th remembrance day was celebrated on 24th July 2016 at NGS, Chennai.

Full credit to Neyveli narayanan and Murugabhoobhathi  for this whole day’s programme.  The stage itself was very beautiful,  Temple bell-like a set hanging above the stage-was something unique.  Disciples celebrating  “remembrance Day”  for their Guru at such a level is very appreciable.   As a left handed player, like pazhani, his photo itself, showing his left hand, was very majestic.

When I was entering the hall, stalwarts, Shri VVS, Karikudi mani, Sikkil baskaran and Smt. Vedavalli and 2 more people were at the stage and paying “huge’ tributes to TU. 

I could go to the evening session half an hour before Sanjay’s concert.  Sanjay’s concert started at 7.35, instead of the scheduled 7.15.  The concert, unusually, went upto 9.35.  After a longtime, I could listen to Sanjay’s  2 hours concert deviating from his customary 3 hours and more…..

Nagai Sriram
Srimushnam rajarao- mridhangam
S.Venkatraman
Sanjay, growing beard,  partially white, looked like kabAli star.  Immediately, I have a “kavidhai”

இவருடைய கச்சேரி என்றால் ஜாலி
தமிழை அழகுற தருவதில் அவர் இன்னொரு வாலி
அவரின் கற்பனை ஸ்வரங்களுக்கு ஏது வேலி
அவர் சங்கீத உலகின் கபாலி

--Sri ramya chittAlanAra swaroopa- JayamanOhari-Adi- Thyagarajar  (S)
It looked like sriranjani  intiatlly to me and I was wrong.
--kedhAram-rAgam for 1 minute-ThyagarAja Gurum AshrayE-MDR
Very melodius one,  lovely chittaiswaram.
--LathAngi-Sub-main- dinamE sudhinamU IsvarI kripa-  Neraval in “Sri Lathangi yani satatamu ninu kOri”        
   ThyAgarajar  (S)

Very interesting neraval.  Sanjay displayed all his “swara jAlam in lathAngi- Nagai Sriram equally carried that brilliantly.   This concert was supposed to have Nagai muralidharan, instead it was replaced by over by Nagain Sriram.   For me there is no difference, both the violinists are superb. 
Interesting note about this kriti is as per T.K.Govinda Rao’s book, this was not ThyAgarAja kriti.  When he started I thought this would be Badrachala armadas kriti, as later’s  kriti also starts with “dinamE”

There is a word “bhava sAgara” in this kriti.  Sanjay did a slow-“water fall like descending note in this, which was repeated in violin by NS.    “So delicious”

--Kambodhi-Main- rAsA vilAsa-Swathi TirunAl- (S)
What a rendition.  Full throat AlApana.  Sanjay’s full energy was displayed.  Excellent rendition.

-Adugalum mAdugalum azhagudaiya pariyum”- virutham  (must be Ahir bairavi).
“Nittham unnai tEdi manam ninaippathellAm poyyA- (Whose kriti)

The above kriti was never heard from Sanjay.  Though, it was nice,  some other virutham would have been better.

PavamAna

The crowd was 75% expecting some more (may be RTP). But he finished it in 2 hours.  May better luck next time.

Srimushnam rAja Rao- I think he was like TiruvArur bhakthavatsalam.  He was slapping, blasting the instrument.  If anyone went near to him that time, he would have slapped that person also.  I thought 

Mannargudi or his usual Neyveli would have been better …

Violin-Cool-Nagai  Sriram with his “killing smile” captured  the heart of full crowd with his instrument.

Tani was good.

Wednesday 20 July 2016

ஓ. எஸ். தியாகராஜன்-இசைக் கச்சேரி - Sathur Centenary Celebtration



சாத்தூர் A G சுப்ரமண்யம் அவர்களின் நூற்றாண்டு விழா வைபவம்- கடைசி   நாள்-
நாத இன்பம், ராகசுதா ஹால்-மயிலாப்பூர், சென்னை

17th July 2016

ஸ்ரீ. ஓ. எஸ். தியாகராஜன்-வாய் பாட்டு
புதுக்கோட்டை அம்பிகா பிரசாத் –வயலின்
சென்னை எஸ். தியாகராஜன்- மிருதங்கம்
நெற்குன்றம் சங்கர்- கஞ்சிரா

சங்கீத பூஷணம் சாத்தூர் அவர்களின் நூற்றாண்டு விழாவை மூன்று நாட்களாக அவர்களின் குடும்பத்தார்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடினார்கள்.  ஸ்ரீமதி புவனா ராஜகோபாலன் மற்றும் ஸ்ரீமதி லலிதா சந்தானம் அவர்களும், இந்த programme இனிதாக நடை பெற பல மாதங்களாக உழைத்து, அந்த காலத்து இசை மேதைகளை தேடி இண்டர்வியூ செய்து, வீடியோ எடுத்து மூன்று நாட்களும் அதை போட்டுக் காட்டினார்கள்.  மிகவும் அருமையாக இருந்தது.

மூன்று நாட்களும் ராமகிருஷ்ண மூர்த்தி, விஜய் சிவா, ஒ எஸ் தியாகராஜன் அவர்களின் இசை இந்த நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தது என்பது உண்மை. மூன்றும் பேர்களும், சாஸ்திரிய சங்கீதத்தின் பாரம்பர்யத்திலிருந்து வழுவதவர்கள். சரியான selection.

ஓ.எஸ்.தியாகராஜன் அவர்கள் மிகவும் பண்பட்ட பாடகர். மிகச்சிறந்த பாடாந்தரம். அவருக்கு இன்னும் சங்கீத வித்வத்சபையின் உயரிய விருதான சங்கீத கலாநிதி கிடைக்காதது, எனக்கு மிகப் பெரிய குறைதான்.  அலட்டல் இல்லாத சங்கீதம் அவருடையது.  அவருடைய கச்சேரி இரண்டு வகையில் அன்று பெருமை சேர்த்தது. ஒன்று சாத்தூர் அவர்களுக்கே உரித்தான “தியாகராஜ கிருதிகள்” அதில் முழுவதும் நிரம்பி இருந்தன.  கச்சேரி முடிவில் அவரிடம் கேட்டபோது “என்னமோ, சாத்தூர் அவர்களே பாடு என்று சொன்னால் போல் இருந்து” என்றார்.  இரண்டாவது, நிறைவாக, ஆஞ்சநேயர் கிருதி ஒன்று பாடி, நிறைவு செய்தார்.  சாத்தூர் அவர்களின் தாயார் கோடி ராம நாமம் எழுதியவர் என்று பிரபல மிருதங்க வித்வான் – டி, கே முர்த்தி அவர்கள் வீடியோ வில் சொல்லியிருந்தார்.
அந்தக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு நிகழ்ச்சியை ஆஞ்சநேய தியானம் கொண்டு முடித்தது, சாத்தூர் அவர்களின் ராம பக்தியை பறை சாற்றியது.

அவர் பாடிய பாடலைப் பார்ப்போம்
பவனுத- மோகனம் – தியாகராஜர்
எவரனி –தேவாம்ருத வர்ஷினி
ஸ்ரீ காந்தனி- பவப்ரியா
ரீதிகௌளை-ராகம்- தொடர்ந்து- ராக ரத்னா மாலிகசே, ரஞ்சில்லு.. நிரவல் & ஸ்வரம்“bhAgavatOttamulu gUDi pADE kIrtanamula
நாடாடித மாடலே-ஜனரஞ்சனி – நிரவல் & ஸ்வரம்  தனகு வசின பாத
லாவண்யா ராமா- பூர்ண ஷட்ஜம்
காப்பி-மெயின்- இந்த சொவ்க்யமதினே- அருமையான நிரவல் & ஸ்வரம்–“swara rAga laya sudhA rasa mandu
தனி
சாகர சயன விபோ- பாகேஸ்ரீ- சுவாதி திருநாள் கிருதி
பாஹி ராம தூத சஹித- வசந்தவராளி
மங்களம்

அருமையான தனி ஆவர்த்தனம். வயலின்காரர், சில இடங்களில் சொதப்பினார்.

நான் மெயின் ஒரு வெயிட்டான ராகம் எடுத்து பாடுவார் என்று நினைத்தேன்.

காபி எடுத்தவுடன் சற்று “பேஜாராகிப் போனேன்”. Untime ல் காபி சாப்பிட்டு அஜீர்ணம் வந்து விட்டது.  காபி அருமையாக இருந்தாலும், ஒரு கிருதியைக் குறைத்துக்கொண்டு காம்போதியோ, சங்கராபரணமோ பாடியிருக்கலாம்

அருமையான கச்சேரி கேட்ட அனுபவம்.  சாத்தூர் குடும்பத்திற்கு நன்றி