Monday 24 December 2018

எழுதும் பணியே பணியாய் அருள்வாய் - 2) "தேதியூர் சாஸ்த்ரிகள் நூற்றாண்டு விழா மலர்"


முன்னுரை:
தேதியூர் சாஸ்த்ரிகளின் நூற்றாண்டு நினைவாக “பிரம்ம வித்யோபாக்யான சதகம்” என்று ஒரு புத்தகம் கிடைத்தது. Published in 1984

இவருடைய நூற்றாண்டு விழாவில் (1984), தேதியூர் மாமாவின் ஞாபகார்த்தமாக, வேதம், உபநிஷத், புராணம், இதிகாசங்களில் இருந்து, உபாக்யானங்கள் மூலம் போதிக்கப்படும் விஷயங்களை, மிகச் சிறந்த பண்டிதர்களைக் கொண்டு “பிரம்ம வித்யோபாக்யான சதகம்” என்ற ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

32 பண்டிதர்களைக் கொண்டு 1௦௦ வேதாந்த விஷயங்களை தயாராக்கி, இதை சம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும், எழுதி மேற் சொன்ன புத்தகத்தை வெளியிட்டு, அது எனக்குக் கிடைத்தது.

தேதியூர் சாஸ்த்ரிகள், மஹா பெரியவாளின் பரிபூர்ண ஆசியைப் பெற்றவர். பெரிய மஹான். தன் வாழ் நாள் முழுவதும், வேதாந்த சாஸ்த்ரத்தை அப்யாசம் செய்தவர். சென்னையில் அபிராமபுரத்தில், குருகுலம் என்று (ஆதி சங்கரருக்கு) ஒரு ஆலயம் ஸ்தாபனம் செய்து, வேத சம்ரக்ஷனை செய்தார்.  இப்போதும் மிகவும் பிரமாதமாக, சாந்நித்யம் கொஞ்சம் கூட குறையாத ஒரு கோவிலாக இன்றும் இருக்கிறது.

இந்தப் புத்தகம், திருவானைக்கோவிலில், இருந்த, மஹா பெரியாவளின், அணுக்கத் தொண்டரான,  மறைந்த A. சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகளிடம் இருந்து, என் தந்தைக்கு வந்து,  என் தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது   ஸ்ரீ. சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகள், ஜனாபதியிடம் இருந்து, சம்ஸ்கருதத்திற்காக பரிசு வாங்கியவர். என் தம்பியின் மாமனார் என்பதில் எனக்கு பெருமை.

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பெரியவா, இதற்க்கு “ஸ்ரீ முகம்” எழுதும்போது= “இந்த செயல் – அதாவது 32 பண்டிதர்களை வைத்து, தினம்தோறும் உபன்யாசங்கள் மூலமாக, நல்ல விஷயத்தை கேட்பதற்க்கு, ஏற்பாடு செய்து உள்ளார்கள்.  நல்லதை கேட்பதன் மூலம், நமக்கு இரண்டு பங்கு புண்ணியம் கிடைக்கிறது. சொல்பவர்களுக்கு, ஒரு பங்கு புண்ணியம் தான் உண்டு. இது எப்படி ?
நல்லது சொல்வதைக் கேட்டால், நாம் கேட்பதற்கு, ஒரு பங்கு புண்ணியம் தான் உண்டு.  நன்றாக சொல்வதைக் கேட்பதால், சொல்பவரும் நன்கு ஆலோசித்து, நல்ல விஷயங்களை நமக்குத் தெளிவாக எடுத்துச் சொல்வார். நல்ல விஷயம் சொல்லத் தூண்டிய புண்ணியமும் கேட்பவர்க்குக் கிடைக்கும்.

இதை எழுதுபவருக்கு எத்தனை பங்கு புண்ணியம் என்று எனக்குத் தெரியவில்லை ?!?  ஒரே விடை- மஹா பெரியவாதான்.

இந்தப் புத்தகத்தில்  உள்ள சில கட்டுரைகள நான் இந்தப் பதிவில் வெளியிடுகிறேன். ஏன் இதை செய்கிறேன் ?, என்ன பயன் ?, என்னை யார் தூண்டி விட்டு செய்யச் சொல்கிறார்கள் ?- எனற எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில், “மகா பெரியவா” தான்.  இதைப் படிப்பவர்களும், மஹா பெரியவாளின் பரிபூர்ண ஆசீர்வாதம் உண்டு என்பது நிச்சயம்.

1.       இக்ஷ்வாகு, மனு- சம்வாதம் (உரையாடல்)

இக்ஷ்வாகு, மனு உரையாடலை, ராமனுக்கு, வசிஷ்டர் கூறுகிறார்.- “ஓ
ராமா, உங்கள் வம்சத்தின் கூடஸ்தரான இக்ஷ்வாகு, ஒரு சமயம் தனிமையில், மனதில், இந்த உலகிற்க்கு காரணம் என்ன ? என்று ஆலோசித்து ஒன்றும் அறியாமல், பிரம்ம லோகத்தில் இருந்து மனு வந்த போது, அவரை, இதற்கு காரணம் கேட்டான்.

மனு இக்ஷ்வாகுவை பாராட்டி, “இந்த உலகம் பரமார்த்தத்தில், உண்மை நிலையில் இல்லாதது, அனால் கண்ணாடி உண்மையாக இருப்பதால், பிரதி பிம்பமும் இருப்பது போல், தோன்றுகிறது அல்லவா ! அதே போல், பரமாத்வாவின் சத்தியத் தன்மையினால், அதை பிரதிபலிக்கும் உலகமும் சத்யம் போலத் தோன்றுகிறது. ஆனால் தானாகவே சத்தியமாக இருக்கும் தன்மை உலகிற்கு இல்லையாதலால், அது மித்யை. (அசத்தியம்)

எங்கும் நிறைந்த பரமாத்மா, தன் மாயா சக்தியால் அக்ஞானிக்கு சிருஷ்டியை உண்டு பண்ணியும், ஜ்ஞானிக்கு, சம்ஹார ரூபமான வித்யா சக்தியால் எல்லாவற்றையும் சம்ஹரித்தும், கூடஸ்தமான, அத்வயமான, ஆத்மாவாக, எப்பொழுதும் இருக்கிறார். எங்கும் நிறைந்த பிரகாசமான ஆத்மா தெரியாமல் இருப்பதும், இல்லாததும் மேலும் பிரகாசமற்ற ஜகத் (உலகம்) நன்கு தெரிவதுமான ஆச்சர்யம், சேர முடியாததைச் சேர்த்து வைப்பதில்  சாமர்த்தியம் வாய்ந்த “மாயையின்” பலத்தால்தான்.

அப்படியானால், எந்த பாவனையால் ஆத்மாவை அறிந்து சுகமாக இருக்கலாம் என்றால், “கண்ணாடியில் தோன்றும் பிம்பத்தைப் போல், உலகின் தோற்றம், “ப்ராதிபாஸிகமே”, வாஸ்தவமல்ல, என்று பாவனை செய்து, உலகு எல்லாம் “சூன்யம், ஆலம்பனமற்ற சித்ரூபம் தான்” என்று பாவனை செய்ய வேண்டும்.

ஒ புத்ரனே, நீ முதலில் விவேக விலாசமடைந்து, சமாதியினால், வெளி உலகை மறந்து, பூரணமாயும், பயமற்றதுமான, சைதன்யமாகி, சரீரத்தை அடைவாயாக ! என்று யோக பூமிகைகளின் அபியாஸத்தினால், உண்டாகும் பயனைக் கூறி, அப்பயனை அடையும், எழு லோக பூமிகைகளையும் கூறி, மோக்ஷமென்பது, ஒரு தேசமோ காலமோ அல்ல, அஹம் என்று தேஹம், முதலியவைகளில், உண்டான பிரம்மஞானத்தினால் விலகுவது தான். அப்படிப்பட்ட, ஞானம் அடைந்த ஜீவன் முக்தனை பூஜிக்க வேண்டும். நமஸ்கரிக்க வேண்டும். அவனுடைய பக்தியினால் ஞானம் உண்டாகி, எந்த ஸ்தானத்தை அடைகிறானோ,  அதை யக்ஞ்ம் முதலியவைகளால் அடைய முடியாது.......

என்று கூறி மனு பிரம்ம லோகம் சென்றார்........

என்னுரை- இதை ஒரு மூன்று தடவையாவது படித்தால் தான் ஏதோ புரிவது போல் இருக்கும்.  

மனு மகரிஷியின் வாக்கியமல்லவா !!!. அது அப்படிதான் !!!!

Monday 17 December 2018

எழுதும் பணியே பணியாய் அருள்வாய்- 1) எனக்குப் பிறவி வேண்டும்


என்னடா இது, பிறவி வேண்டாம்- பட்ட பாடு போதும் என்று ஒவ்வொருவரும், நொந்து, நூலாக இருக்கும் நிலையில், இப்படி ஒரு தலைப்பா ? 

shAstraM shArira mImAMsa devastu parameshvaraH |
AchAryaH shankarAchAryaH santu me janmajanmani ||

என்று ஒரு ஸ்லோகம் உண்டு

சாஸ்த்ரம் சாரீர மீமாம்ஸா
தேவஸ்து பரமேச்வர:|
ஆசார்ய: சங்கராசார்ய:
ஸந்து மே ஜன்ம ஜன்மனி ||

“சாரீர மீமாம்ஸா” என்றால் சரீரத்துக்குள் இருக்கும் உயிரைப் பற்றி சொல்கின்ற வேதாந்த சாஸ்திரம் என்று பொருள்.

நமக்கு எத்தனை பிறவி கிடைத்தாலும் ஒவ்வொரு பிறவியிலும், சாஸ்திரமான வேதாந்த சாஸ்த்ரத்தை படிக்க வேண்டும். பரமேஸ்வரனிடம் பக்தி வரவேண்டும்.  சங்கராசார்யரிடம், குரு பக்தி இருந்து, அந்த பக்தி வளர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.

இதில் ஆச்சர்யமான சில விஷயங்கள் இருக்கிறது:

ஒரு தடவை ஆதி சங்கரரிடம் பக்தி செய்து,  அத்வைத சாஸ்திரம் வாசித்து, பக்தி பண்ணினால், பிறவியே வராது. 

இது ஒரு வகை

ஒரு வேளை, நம்முடைய கர்ம வினையின் மூலமாக, ப்ராரப்தத்தின் மூலமாக, பிறவி இருக்குமேயானால், சஞ்சிதம் அவ்வளவு பலமாக இருக்குமே ! அதனால், அப்போது ஒரு ஜன்மா வருமே, ! அது இது போல் வரட்டும்.

எது போல் ?

பக்தி, வேதாந்தம் சாஸ்த்ரத்தில் ஒரு ஈடுபாடும், குரு சங்கராச்சர்யாரும் அருளும் எனக்கு வரட்டும் என்ற ஒரு எண்ணம் வளரும்படி- ஒரு ஜன்மம்

ஆகவே, அப்படிப்பட்ட மகத்தான மனிதப்பிறவி நமக்குக் கிடைத்து இருக்கிறது.

நாம் வேதாந்த சாஸ்திரம் ஸ்ரவணம் பண்ண வேண்டும். ஆச்சர்யாளிடம் பக்தி செய்ய’ வேண்டும். இதுதான் மனிதப் பிறவியின் லக்ஷ்யம். சாப்பிடுவது, உத்தியோகம் பார்ப்பது, குடும்பம், என்று பல “சரா புரா” பண்ணுகிறோமே, இது எல்லாமே, ஆத்மாவின் உண்மையான் ஸ்வரூபத்தை தெரிந்து கொள்ள சாதனமாக இருப்பதற்கு, தர்ம கார்யங்களை செய்வதற்கு, அனுஷ்டானம் செய்வதற்குத் தான் என்பதை உணர வேண்டும்

சரீரமாத்யம், கலு, தர்ம சாதனம்- என்ற பதத்திற்க்கு ஏற்றவாறு, சரீர போஷணம், இதற்கு இருக்கிறதே தவிர, உண்டு, உறங்கி, கூடி, இருப்பதற்கு அன்று.

ஆகவே முக்கியமான லக்ஷ்யம் “ஆத்மானுபவம்” தான்.

ஜந்துனாம் நர ஜன்ம துர்லபம்” – அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, “வையத்து வாழ்வீர்காள்”- போன்ற பல குறிப்புகள், நம்மை செம்மையான ஒருவாழ்க்கை வாழ சொல்லப்பட்ட பொன் மொழிகள் தான்.

“நாலு பேர் போற வழியில் போங்கள்” என்று கிராமத்தில் ஒரு பழ மொழி உண்டு. அந்த நாலு பேர்= சமயச் ஆச்சர்யர்களான, சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்க வாசகர்.- ஆவர்கள்.

நான் இதை எழுதும்போது


"பஜ கோவிந்தம்" நினைவுக்கு வந்தது. அதில், முதல் பாடலில், மூடனே,” இலக்கணம், சாஸ்திரம், இதெல்லாம் வேண்டாம். “கோவிந்தனை பஜித்தால் போதும்- என்கிறார்

என்னடா இது ? மேலே, சாஸ்த்ரங்களை ஸ்ரவணம் பண்ண வேண்டும் என்று சொன்னவர் பஜ கோவிந்தத்தில், இதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறாரே- என்று நினைக்கத் தோன்றும்.

கோவிந்தனை பஜிப்பது என்பது ஆரம்பம். மெதுவாக அந்த ஒரு “கோவிந்த பக்தி” வளர்ந்து, “வெளி உலகப் பற்று” என்பது கொஞ்சம் கொஞ்சம் ஆக விலகி, கடைசியில், ஒரு குரு உங்களைத் தேடி வருவார். அவர் சரணங்களில், பூரண பக்தி கொண்டால, இதயத்தில், கடவுளைக் காணலாம்.

இதை தான், பஜ கோவிந்தத்தில் கடைசி பாட்டில் சொல்கிறார். (“ஹ்ருதயஸ்தம் தேவம்”)

மானிட ஜென்மத்தை செம்மையாக கழித்தால், இறை இன்பம் என்பது கிடைக்கும். – இது தான் “என்” திருக்குறள்...

“மானிட ஜன்மம் மீண்டும் வந்திடுமோ’ என்று M.K.தியாகராஜ பாகவதர் குந்தலவராளியில், பாடிய பாட்டு, ஏனோ எனக்கு நினைவு வருகிறது.

மாணிக்க வாசகரை,  கைலாய நாதன், “கைலாசத்திற்கு வருகுறீரா” என்று கேட்க, மாணிக்க வாசகர் “வர மாட்டேன்” என்கிறார்.

அதை ஒரு காட்சியாகப் பார்ப்போம்

சிவ பெருமான் – மாணிக்க வாசகரே- கைலாயத்திற்கு வருகிறீரா ?

மா.வா- வரவில்லை
சி.பெ- “வரவில்லையா”- அவன் அவன் கைலாசத்திற்கு வருகிறேன் என்று அலைகிறான். நீ ஏன் வரமாட்டேன் என்கிறீர்
மா.வா- “கைலாசத்தில் என்ன இருக்கிறது ? யார் இருக்கிறார்கள் ?
சி.பெ-  நான் இருக்கிறேன்
மா.வா. பிறகு
சி.பெ- உமையம்மை இருக்கிறாள்
மா.வா- பிறகு
சி.பெ - வேறு யார் வேண்டும். ?
மா.வா- அடியவர் உண்டா ?
சி.பெ- இல்லை
மா.வா- அப்படி என்றால் என்னை பூ லோகத்திலேயே விட்டு விடு !!
சி.பெ- ஏன் ?

மா.வா- சுவாமி, நீர் இருக்கிறீர், உன் உடம்பில் உமையம்மை இருக்கிறாள்.  நீவிர் இருவரும் அடியவர் மனதில் இருக்கிறீர்.  அந்த அடியவர், பூ லோகத்தில் இருக்கிறார். நான், அடியவரைத் தொழுதால், உன்னையும், உமையம்மையும் வணங்கிய புண்ணியம் எனக்குக் கிடைக்கும். அதனால் என்னை, இங்கேயே விட்டு விடு.
என்று சொல்லி, கீழே வருமாறு அதை செய்யுளில் சொல்கிறார்

“உடையாள் உந்தன் நடுவிருக்கும்.
உடையாள் நடுவில் நீ இருத்தி,
இருவீரும் அடியார் நடுவில் இருப்பீர், அதனால்
அடியேன் அடியார் நடுவில் இருக்கும் அருளைத் தருவீர்
முடியே முதல”

மேற்கூறிய இந்த டயலாக்- கீரன் அவருடைய சொற்பொழிவில் சொன்னது. அந்த “குரல் வளம்” அந்த “தமிழ்”, இன்னும், என் மனதில் இருக்கிறது.  மேற் சொன்ன மாணிக்க வாசகரின் வரிகள், மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவிலுக்குப் போகும் வழியில் கல்லில் செதுக்கி இருக்கிறது.  இன்றும் படிக்கலாம்

கொஞ்சம் மேலே போய் சிந்திப்போம்;

முண்டக உபநிஷத் என்று ஒரு நூல் உண்டு.  அறிவு, ஞானம்- இவை இரண்டிற்கும் வித்தியாசம் என்ன ?  என்பதை விளக்கும்போது, இரு வகை ஒன்று- “அபர”  ஞானம், இரண்டாவது, “பர” ஞானம். அதாவது, ஆரம்ப அறிவு, விஷய அறிவு. In English, it is called lower and higher knowledge. Also it is called terrestrial and transcendental. – (தலை சுற்றுகிறதா ?)_       

என்ன சொல்ல வருகிறது என்றால்- lower knowledge is constituted of 

four Vedas-  Rig, Yajur, Sama, Atharva Vedhas

Six Vedhaangas, - Part of Vedhas

Sikshaa, - Phonetics

Kalpa,- Code of Rituals

Vyakaranam- Grammar

Nirukta –Etymology

chandas,- Metre and

Jyotisha- astrology.

அதாவது முதல் பாராவில் நாம், சாஸ்த்ரங்களை எவ்வளவு உயர்வாகச் சொல்கிறோமோ, அது சாதாரண அறிவு (lower knowledge) என்று மு. உ. சொல்கிறது

அப்படி என்றால் உயர்ந்த அறிவு என்பது என்ன ? என்று கேட்டால், - which leads to immortality or that which goes beyond the word-meaning in languages.- அதாவது விஷய அறிவு, பொது அறிவு, புத்தக ஆறிவு எல்லாவற்றையும் தாண்டி, - “வெட்ட வெளி தன்னில், மெய் என்று இருப்பவர்க்கு பட்டயம் எதற்கடி, குதம்பாய் ?!” – என்று “குதம்பை சித்தர் பாடலின் அர்த்தம் போல் இருக்கும் ?- (மோ...என்னவோ ?!!)

இந்த மு.உ- வியாக்யானம், சுவாமி சின்மயானந்தா அவர்களால் கொடுக்கப்பட்டது

மு.உ – எல்லாம் படித்து  தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். அடுத்த ஜன்மத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

இப்போதைக்கு- “கோவிந்தா” போதும்

எதேச்சையாக, நான் பதிவிடும் இந்த நாள்- வைகுண்ட ஏகாதசியாக அமைந்தது என் பாக்கியம்.




Thursday 13 December 2018

Germs of Spiritual Freedom


His holiness Abhinava Vidyateerta swamigal – excerpts from His book “Gems of Spiritual Wisdom”

Mind Control

It is not the object is desired for its own sake in reality.  It is for one’s own sake that one desires objects.

A man cares for his son not merely for the sake of the boy but because he feels that his happiness lies in his son’s happiness.

Even acts of self-sacrifice are motivated by the desire for happiness.

Mediation

“Dhyana”  is the state wherein the mind concentrates on just one object.  If mental concentration is achieved by practice, the mind can then be turned towards Ishwara and being,  thus purified, it can be directed towards the Atman, which is formless and devoid of attributes.

Normally, Dhyana alone in  insufficient to control desires.   When one is not doing meditation, one should assiduously cultivate dispaasion by the perception of faults in objects.  Studying spiritual texts daily and contemplating on the ideas expressed therein help one to conquer diseases.  The company of sages is very helpful in cubing longings.

Guru

A person, may, peruse the Upanishads, which expound the “Truth” and reflect deeply on the import of the scriptures.  But, this much is insufficient for him to get direct realization of the Supreme and hence, liberation. The grace and instructions of a Guru are vital for the dawn of enlightenment.

Mental puja

Mental puja requires no external accessory.  It is akin to meditation.  Here, the devotee mentally imagines the form of the  Ishta Devata”.   Sandal paste, flowers, incense, lamp, food, etc are mentally conceived and offered.  This puja is superior to external puja since, here, the mind is completely concentrated on the “Ishta Devata”.

Devotion to God

If we keep thinking positively of a particular object, attachment towards it develops.  If we repeatedly, think of some action as important, attachment arises towards it.  Likewise, if we incessantly think, “He is Supreme, There is immense happiness in contemplating on Him”, devotion towards Ishwara will become firmly established.

Intrinsically, God has no form.  But, he can take on any form.  God comes to some in the guise of a friend.  For instance, Krishna came to Arjuna as a friend. He came to Vasudeva and Devaki not as the Supreme but as their son.  To kamsa, He appeared in the role of an enemy.  We cannot know in what form     He will come to us

Dharma

When we start gazing at massive Gopuram,  we  feel insignificant.  We realise that compared to the huge structure, we are an insect-like creature.  Our ancestors built massive Gopurams to induce humility in people.

River Ganga does purify people.  When the faith of the p, eerson who resorts to her is intense, he is greately benefitted by her.  This, however, does not mean that one will be redeemed if one commits sins deliberately and then, bathes in the Ganges.

The Sastras say that in a marriage ceremony the Mantras should be chanted properly.  Nowhere, have the Sastras prescribed a grand reception party or buying of expensive silk sarees and different varieties of jewels.  New clothing does not mean expensive constumes.  If huge expenditure is incurred in marriages, the Sastras are not to be blamed.

Not only in wordly but also in religious and spiritual matters, doubts and misconceptions can cause great harm.  Lord Krishna told Arjuna, “Neither this world nor the next nor happiness is there for one who has a doubting mind”.

Friday 7 September 2018

புனரபி ஜனனம், புனரபி மரணம்


இப்படி ஒரு தலைப்பை வைத்து எதாவது எழுத வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை.  50 வயதுக்கு மேல் இருக்கும் யாரும் இந்த வார்த்தைகளை சற்று நினைவு கொள்வது நல்லது.  சுஜாதா (எழுத்தாளர்) சொல்லுவார், வயதாக வயதாக நான் ஹிந்து பேப்பரில்,  OBITUARY  COLUMN  முதலில் பார்க்க ஆரம்பித்து விட்டேன்”  என்று.

“எத்தனை தந்தையோ, எத்தனை தாயோ எத்தனை பிறவி வருமோ” என்று வைதீஸ்வரன் கோவில் பதிகத்தில் படித்ததாக ஞாபகம்.  இதை ஹம்சானந்தி ராகத்தில் பாடிப் பார்த்தால், வாழ்க்கையை நினைத்து சற்று பயமாகக் கூட இருக்கும். பாலாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி மேல் சற்று கூடுதல் பக்தி வரும்.


இந்த ஜீவனுக்கு பிறப்பு, இறப்பு என்ற இரு விஷயங்களில் இருந்து ஒய்வு கிடையாது. மனிதன் ஒவ்வொரு பிறவியிலும், நமக்கு உள்ளே இருக்கும் ஆசைகளால் உந்தப்பட்டு, அதை நிறைவேற்ற நினைத்து, போராடுகிறான். பல தவறுகள் செய்கிறான்.  சரி, அப்படியாவது அந்த ஆசைகளை முழுமையாக அடைந்தானா என்றால் அதுவும் இல்லை.   ஆசைகள் நிறைவேறாமலேயே மரணிக்கிறான். அடுத்த ஜன்மம் எடுக்கிறான். அடுத்த ஜன்மத்தில் விட்ட குறை தொட்ட குறையாக, பழைய ஆசைகளை பூர்த்தி செய்து கொள்கிறானா என்று பார்த்தால், அதையும் பண்ணாமல், இந்த ஜன்மத்தில், புது ஆசைகளையும் வளர்த்துக் கொள்கிறான். இதுதான் பு.ஜ, பு.ம- அர்த்தம்

“வாஸனா” என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு பதம் உண்டு. ஒவ்வொரு ஜன்மத்திலும் புது புது வாசனைகளை வளர்த்துக்கொண்டு, இந்த BALANCE SHEET ல், ACCUMULATED LOSS என்று சொல்லுவோமே, அது போல், ACCUMULATED VASANAS
Swami Chinmayantha beautifully explains this “We come here for purgation, but due to our ignorance of the way and the goal, the extrovertedness in us compels us to get ourselves attached to the objects, which have a beauty and a charm created by the imagination of our minds. 
Maayaa at work.”

கண்ணதாசன், பஜ கோவிந்தத்தை தமிழில் நாம் எல்லோருக்கும் புரியும்படி சொல்லும்போது,

“தாய்வயிற்றிலே பிறந்து
      தானிறந்து மீண்டும் மீண்டும்
        தாய்வயிற்றிலே பிறக்கிறேன்”
என்கிறார்...

இதைத்தான், மைசூர் வாசுதேவாசார் என்ற ஒரு மகான் எழுதிய “பஜரே ரே மானச” என்ற கர்நாடக தேவகாந்தரி ராகப்  பாடலில், “புக்தி, முக்தி, ப்ரதம்” என்கிறார்.  He gives both prosperity and salvation.

நாம் நம்முடைய ஆசா பாசங்களைக் குறைத்துக் கொண்டு, ஒரு முகமாக, நம் எண்ணங்களை “முராரியை” நோக்கிக் குவிக்கும்போது, மன இரைச்சல் குறையும்.  நம் மனது ஒரு “அமானுஷ்யமான நிசப்தம்/மரணம்” நோக்கி நகரும். இந்த  ஒரு நிலை ஆச்சர்யமானது.
இந்த ஆசா பாசங்கள் அற்ற நிலையில், ஆசைகள் அறவே ஒழிய, மறு பிறப்பு என்பது கிடையாது. – இதைப் படிக்கும்போது, ஏதோ பாலகுமாரன் நாவல் படிப்பது போல் இருந்தால், உங்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதல் வந்து விட்டது என்று அர்த்தம்.

எழுதுவது ஈசி. அதை கடைபிடிப்பது மிகவும் கஷ்டம்.

புலவர் கீரன் சொல்லுவார்.
கோவிலுக்குப் போய் கடவுளிடம் நீ என்ன வேண்டுவாய். ?

1)    எனக்கு நல்ல கதி வேண்டும். நல்ல மரணம் வேண்டும்.
2)    மறு பிறப்பு கூடாது
3)    இறக்கும் தருணத்திலும் கடவுளையே நினைத்துக் கொண்டு இறக்க வேண்டும்... பல பல

இப்படி சொல்லி விட்டு, வீட்டுக்கு வந்து “இதே குறிக்கோளாகக்” கொண்டு வாழ வேண்டும். அதை விட்டுவிட்டு, பக்கத்து வீட்டுச் சண்டை, சன் டீ வீ, அனாவசிய அரட்டை, மறுபடியும், குடும்பம், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன் என்று “உறவுச் சக்கரத்தில்” சுற்றிக் கொண்டு இருக்கக் கூடாது. 

இதையே திருவள்ளுவர்

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை, மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.’   என்கிறார்

ஆசையற்று இருப்பதை விரும்பும் பொது தான், பிறவாமை நிலை வரும் என்கிறார், - சாலமன் பாப்பையா அவர்கள்.

கீரன், ஆசையைப் பற்றி ஒரு ஜோக் சொல்லுவார். நான் செம்மங்குடியில் பள்ளிக் கூடத்தில் கேட்ட ஜோக் இது. இன்னும் ஞாபகம் இருக்கிறது

கடவுளையே நம்பாத ஒருவன் கடைசி காலத்தில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.  அவன் மகன், எப்படியாவது, அப்பாவிடம் கடவுளின் பேரை சொல்லச் சொன்னால், சொர்க்கம் போகலாம் என்று கருதி, அப்பாவிடம்  “அப்பா, எதாவது கடவுள் பேர் சொல்”  அன்று மன்றாடினான்.

அப்பா மிகுந்த பிரயாசையோடு, “முரு”, முரு” என்று சொல்வார்.  மகனும் மன
மகிழ்ந்து, ஒரு கப், தண்ணீர் கொண்டு வந்து, வாயில் உற்றி, சாய்ந்து படுக்க வைத்து, கண்ணீர் மல்க –“சொல்லுப்பா முருகா முருகா என்று சொல்லு” என்றான்.

அப்பா மிகுந்த ச்ரமத்துடன், எனக்கு :முறுகலா, ஒரு ரவா தோசை வேண்டும்” என்று கேட்டாராம்.

“ஆசைக்கோர் அளவில்லை, அகிலமெல்லாம் கட்டி ஆளவே” என்றார் பட்டினத்தார்.

காதறுந்த ஊசியும் வாராது காண், கடை வழிக்கே என்றார் அவர்.

மதுரை சோமு ஒரு பாட்டு ஒன்று பாடுவார்:

நாளை என்றொரு நாள் வருமா,
கந்த வேளை கை தொழ எழ வேண்டாமா ?

அதில் சரணத்தில்

“கண்ணிருக்கும் போதே கண்டு கொண்டாடு
காலிருக்கும் போதே கோவிலை நாடு
குரலிக்கும் போதே இறைவனைப் பாடு
கையிருக்கும் போது கும்பிடு போடு”

என்று முடியும்

பஜ கோவிந்தத்தில் வரும், இந்த அற்புதமான வரிகளான,  “புனரபி...” முடிவில்
கோவிந்தா, என்னிடம் கருணை காட்டு, நீதான் கருணை கடல், நீதான் முரா என்ற அசுரனை அழித்தவன்.  என்னுள் இருக்கும் “ஆசா பாசங்கள்” என்னும் “முராவை” அழித்துவிடு. – என்கிறார் ஆதி சங்கரர்
                           
சிவானத லஹரியிலும், பசுபதியின் பாதார விந்தத்தை, ஒரு கொடி, ஒரு கம்பை எப்படி சுற்றி வளருமோ, ஒரு பதி வ்ரதை, தன கணவரை எப்படி நினத்துக் கொண்டே இருப்பாளோ, - அப்படி நினைக்கவேண்டும்.

விதுரனிடம்- ஆச்சர்யமான விஷயம் எது என்று கேட்க – அவர் “கண்ணுக்கு முன்னாடி ஒருவன் இறக்கிறான். அவனை தூக்கிக் கொண்டு போவதைப் பார்த்த பிறகும் ஞானம் வராமல், பாபச் சுழலில் உழன்று கொண்டு மனிதன் வாழ்கிறானே, ஆசா பாசங்களை குறைத்துக் கொள்ளாமல்- வாழ்கிறானே !!!- இதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது”- என்றான்

Swami Chinmayanantha concludes like this

“Thus, to surrender unto Him and to sincerely invoke His grace is to create in us divine and godly “vaasanaas”, which are the only antidote to the ego and the egocentric vaasanaas, that constantly clamour in our bosom  for gratification.  Once these are hushed, the Song of the Flute-bearer shall be heard, the blue light of His aura can be seen,  the  Fragrance of His garland of wild flowers can be smelt, the butter in His hand can be tasted, the Embrace of the Infinite can be experienced”

பள்ளிக்கூடம்  சென்ற நாளிலிருந்து, மார்கழி மாத காலையில் கோவிலில் பாடும் பாட்டில், M.S.Subbulakshmi.  தன் தேன் குரலால், பஜ கோவிந்தம் பாடி கேட்டு, அதற்கு அர்த்தம் புரிந்து எழுதும் பொது, மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

நாம் எல்லோரும் உறுதி மொழி எடுக்க வேண்டும் என்றால், இதற்கு எடுக்கலாம்-
NO புனரபி ஜனனம், அதனால், NO புனரபி மரணம்