விஸ்வாமித்ரரை பல கோணங்களில் நாம்
படித்து இருக்கிறோம். க்ஷத்ரியராக இருந்து தன் தபஸால் “ப்ரஹ்ம ரிஷி” யானவர். ஒரே
ஜன்மத்தில் இப்படி ஒரு கீர்த்தி அடைந்தவர் யாரும் கிடையாது.
தீக்ஷிதர் கோணத்தில் இவரைப்
பற்றிய தேன் துளிகளைப் பருகலாம்
தசரதர் அரண்மனைக்கு
வருகிறார். தான் யாகம் பண்ணுவதற்காகவும், யாகத்தை கெடுக்கும் அசுரர்களை அழிக்க
ராமனை அனுப்ப வேண்டுகிறார். “நான் சகல ஸ்ரேயசையும் தருகிறேன். “என்னை நம்பி
அனுப்பு. நான் யாகத்திற்காக சில நியமங்களை வைத்திருக்கிறேன். நான் போர் புரிய
முடியாது., அதனால் ராமர் வேண்டும்” என்று கேட்கிறார்
தசரதன் கொடுக்க மாட்டேன்
என்று அடம் பிடிக்க, குல குரு வான வசிஷ்டர் வேண்டிக் கொள்ள, ஒரு மனதாக – லக்ஷ்மணனோடு
அனுப்பிகிறார்.
விஸ்வாமித்ரர் –
அழைத்துக் கொண்டு போகிறார். பலா-அபலா- என்ற மந்த்ரம் எடுத்து வைக்கிறார். அம்பை
விடுவதற்கும், விடுத்த அம்பை திரும்பி எடுப்பதற்கும் மந்த்ரம், அகஸ்தியரிடம் இருந்து
விசேஷ அஸ்தரங்கள். அகலிகை சாப விமோசனம். பல உப கதைகள், பகீரதன் கங்கையைக் கொண்டு
வந்தது, ஸ்கந்த ஜனனம் போன்ற பல. தன் யாகத்தைப் பூர்த்தி செய்கிறார். மிதிலைக்குப் போகிறார், ஜனகள் பெண் சீதையை
பிடித்து, ராமர் கையில் ஒப்படைக்கிறார்.
“போயிட்டு வரேன் ராமா !
என்று விந்திய மலையை நோக்கிச் செல்கிறார். அதன் பிறகு, பட்டாபிஷேகம் வரை ஒரு
இடத்தில் கூட ஏன்- ராமர் பட்டாபிஷேகம் போது கூட -சம்பந்தா சம்பந்தம் இல்லாத ரிஷிகள்
வந்திருந்தார்கள் - ஆனால் விஸ்வாமித்ரர் – தென்படவே இல்லை.
விச்வாமித்ரரோ, நடுவில்
வந்து “என்ன ராமா ! “ஞாபகம்
இருக்கா, நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேனே, கொஞ்சம் இது பண்ணி கொடு, அது பண்ணி
கொடு” என்று கேட்டதாக இல்லை.
ராமரும், சீதையைத் தொலைத்த
பின், ஆஞ்சநேயரைப் பார்த்து, கொஞ்சம் தெற்கே போகாமல், வடக்கே போய், விஸ்வாமித்ரரைப்
பார்த்து, “நீங்கள் கல்யாணம் பண்ணிக் கொடுத்த சீதை காணாமல் போய் விட்டாள். கொஞ்சம்
கண்டு பிடிக்க “க்ளூ” கொடுங்கள்” என்று கேட்கவும் இல்லை.
“நான் நிறைய பேருக்கு நிறைய செய்தேன். என்னை யாரும் மதிக்க
வில்லை. நன்றி கெட்ட உலகம். என்று புலம்பும் நிறைய பேருக்கு இது பாடம்.
இது மிக உயர்ந்த ஒரு எண்ணம். நாம் உதவி செய்துவிட்டு அதை மறந்து விட வேண்டும். “ஏன் அடிக்கடி வந்து உயிரை வாங்கறான்” என்று உதவி பெற்றவர்கள் நினைக்க, உதவி பெற்றவர்களும், அதற்கு பிரதி உபகாரம் முடிந்தால் செய்யலாம் ஆனால் - படுத்தக் கூடாது. “செய்நன்றி கொன்ற மகற்கு” எல்லாம் சரிதான்.
திரும்பி விஸ்>
ஏன் விஸ்வாமித்ரர் அப்படி செய்தார் என்பதை ராமாயணத்தை
கூர்ந்து படித்தவர்களுக்குத தெரியும்.
சூரிய வம்சத்தில், ராஜா ஹரிச்சந்த்ரனை படாது பாடு படுத்தி, அவனை மனைவியிடம்
பிரித்து, அவனை கஷ்டப்படுதியதற்கு, பிரதி
பலனாக, ராமனுக்கும் சீதை க்கும் கல்யாணம் பண்ணி புண்யம் கட்டிக் கொண்டார் !!!
ஹரிச்சந்த்ரன் கதையை தீட்சிதர் சொல்லும் அழகே தனி
ஒரு முறை, வஸிஷ்டரிடம், இந்திரன், இந்த உலகத்திலேயே ஸத்யவான்
என்று சொல்லக்கூடிய ஒரு மனிதன் இருக்கிறானா ? என்று கேட்க. வசிஷ்டர், என்னுடைய சீடன்
அரிச்சந்திரன் ராஜாவாக சூர்ய வம்சத்த்தை ஆண்டு கொண்டிருக்கிறார். அவர் சத்தியம்
நேர்மை தவறாதவர். என்று கூற, கூட்டத்தில் இருந்து,, தப்பு, தப்பு -வசிஷ்டர் சொல்வது தப்பு என்று ஒரு குரல்
கேட்டது.
பார்த்தால், விஸ்வாமித்ரர் கூட்டத்தில் இருந்து வெளியில் வந்தார். அவருக்கு வசிஷ்டர் என்ன சொன்னாலும் மறுத்து பேசவேண்டும் என்ற ஒரு “கொள்கை” வைத்து இருந்தார். அதனால் அரிச்சந்திரனைப் பற்றி சொன்னது தவறு என்று சொன்னார். அவன் ஒன்றும் ஸத்ய ஸந்தன் இல்லை. என்றார்...
இந்த விவகாரம் போய் கொண்டே போனது. கடைசியில், அரிச்சந்திரனை
பொய் பேச வைத்தால், வசிஷ்டரை, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஏற்ற
வேண்டும், என்றும், கடைசி வரை உண்மையே பேசினால், விஸ்வாமித்ரருக்கு அந்த “மரியாதை”. என்றும் முடிவாயிற்று
விச்வாமித்ரர் அரிச்சந்த்ரனை சந்தித்து தன் வேலையை காட்டத்
துவங்கினார். செல்வச் செழிப்புடன் இருந்த அரிச்சந்திரனைப் பார்த்து “ நான் யாகம்
செய்யப்போகிறேன், அதற்க்கு “மலை அளவு” செல்வம் வேண்டும் என்று ஆரம்பித்து, அந்த
நாட்டில், தன் தபஸால், பஞ்சம் வரும்படி செய்தார்.
அரிச்சந்திரன், வேறு வழியில்லாமல, விச்வாமித்ரருக்காக
வைத்திருந்த செல்வத்தை செலவு செய்ய, கரெக்டாக வந்து, “வாக்கு தவறிவிட்டாய்” என்று சொல்லி,
ராஜா, நாடு இழந்து, மனைவி இழந்து, கடைசியில் காசியில் “பிணம் எரிக்கும் “வெட்டியானாக”
வேலை செய்யும் அளவுக்கு, அவனை “த்வம்ஸம்” செய்தார்.
தான் பெற்ற மகனே “உயிரிழந்து” வந்த போது கதறுகிறான்.
அப்போது கூட பொய் சொல்லவில்லை.
எந்த நிலையிலும் பொய் சொல்லக்கூடாது என்று ஸத்ய சந்தனாக
வாழ்ந்த ஒரு ராஜா.
இப்போது கூட நாம் காசி போய் “அரிச்சந்திரா காட் (Ghat)” என்று சொல்லும்
அந்த இடுகாட்டில் சென்று ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் நமக்குக் கண்ணீர்
வரும். எப்படி இருந்த ஒரு ராஜா, பொய் சொல்லமாட்டேன் என்று ஓரு வைராக்யத்தினால்,
படாத பாடு படுத்தப்பட்டார்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் “பிரச்னை வஷிஷ்டருக்கும்,
விச்வாமித்ரருக்கும் தான்., தேவையே இல்லாமல் அரிச்சந்த்ரனை மாட்ட வைத்து......
கடைசியில், வ்ருஷபா ரூடராக...பார்வதி, பரமேஸ்வராள் காட்சி
கொடுக்க, சிரஞ்சீவியாக இன்றும் அரிச்சந்திரன் நம்மிடையே வாழ்ந்து கொண்டு
இருக்கிறார்.
கடைசியில் என்ன வரம் வேண்டும் என்று ஈசன், அரிச்சந்திரனைக்
கேட்டார்.
இப்படி ஒரு சம்பவம் நம் வாழ்வில் நடந்து, அட... நம் உண்மையே
பேசி, கடைசியில், ஈசன் நம்மிடம் இந்த கேள்வியை கேட்டால். ?!!!!
“கையை பலம் கொண்ட மட்டும், இறுக்கி கொண்டு நம்மைக் காயப்படுத்திய
அந்த நபரை.....ஒரே.........: “....து”
அனால் அரிச்ச்சந்திரன் சொன்னார். “எந்த நிலையிலும், விஸ்வாமித்ரருக்கு “”கழுதை
ஊர்வலம் வேண்டாம்” என்று சொன்னார். “அவர் பெரிய ரிஷி. ஏன் பிராரப்தம் நான்
அனுபிவிக்கிறேன். அவரை விட்டு விடுங்கள்” என்றார்.
இப்படியும் நம் நாட்டில் அரசர்கள் இருந்திருக்கிறார்கள்.
அதனால் தான் ராமன், ராவணனை, இன்று போய் நாளை வா என்றார். ....
எந்த நிலையிலும தன் நிலை மறக்காமல் ஒரு குணம்.......