Sunday, 12 April 2026

அப்பைய தீக்ஷிதரின் கடைசி நிமிடங்கள்”

 

இது ஏதோ ராஜேஷ் குமார் மர்ம நாவல் தலைப்பு என்று எண்ண வேண்டாம்

அப்பைய தீட்சிதர் 15 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சுமார் 104 கிரந்தங்கள் எழுதி இருக்கிறார்.  அவருடைய சம்ஸ்க்ருத ஞானம் அபாரமானது. அவர் சிவ பரமாக நிறைய கிரந்தங்கள் செய்திருக்கிறார். தேவி மகாத்மியத்தை சுருக்கி “துர்கா சந்திர கலா ஸ்துதி” என்ற ஒரு படைப்பு மிகவும் விசேஷமானது.

மேலும்  हरि हर अभेद स्तुति: என்று “பேதமற்ற சிவா விஷ்ணு” என்று சம்ஸ்க்ருதத்தில் ஒரு கிரந்தம் எழுதி இருக்கிறார். அதில் ஆரம்பதில் “மா ரமணம் உமா ரமணம்” என்று ஆரம்பிக்கிறார். அதைதான் பாபநாசம் சிவன் பின்னால், ஹிந்தோள ரகத்தில் “மாரமணன் உமா ரமணன்-மலரடி” என்று பாடினார்.

எனக்கு, எங்கள் வரகூரில், பெருமாளுக்கு, ஸ்ரீ ருத்ரம் சொல்லி அபிஷேகம் பண்ணுவதால், இது “பேத சமாசாரம்” ஒரு பெரிய விஷயமாக இல்லை என்றாலும், அப்பைய தீட்சிதரின்,  வாழ்க்கை,  பக்தி அவர் படைப்புக்களைப் பார்க்கும்போது  பிரமிப்பாக இருந்தது.

ஒரு சின்ன உதாரணம்:

அவர் எண்ணுகிறார்  இப்போது நினைவு (ம) ஆரோக்கியம் இருக்கும்போது சிவ உபாசனை பண்ணுகிறேனே நாளை “ஒரு வேளை” பைத்தியம் ஆகி விட்டால் “பக்தி” பண்ணுவேணா என்று நினைத்து “ஊமத்தங்காயை அரைத்து குடித்து “பைத்தியம் ஆகிவிடுகிறார்” அப்போது அவர் சொல்லி அவர் சிஷ்யர்கள் எழுதிய “உன்மத்த பஞ்ச ஷதி” என்ற 50 ஸதுதிகள் ரொம்பவும் உஸத்தியானது.  மஹா பெரியவா இதைப் பற்றி சொல்லும்போது “இது அவர் எழுதிய மற்ற நூல்களை விட சிறந்தது” என்கிறார். (பிறகு  மருந்து கொடுத்து சாதாரணமாக ஆகிவிட்டார்).

இப்படியும் மகான்கள் நம் தேசத்தில் இருந்திருக்கிறார்கள் !!!!!

சிதம்பரத்தை நாம் மனக்கண்ணில் கொண்டு வந்தோம் என்றால், பெருமாளின் 108 திவ்ய க்ஷேத்ரங்களில் ஒன்று இருப்பது தான் ஆச்சர்யம் சிதம்பர நடராஜ மூர்த்தியை நேரில் பார்க்கும் நாம். இடது புறம் பார்த்தால், கோவிந்தராஜப் பெருமாள் இருப்பார். இப்படி பக்கத்தில் இருவரையும் வைத்துக்கொண்டு, தீட்சிதர் “ஹரி ஹர அபேத ஸ்துதி”  என்று சில ஸ்லோகங்கள் எழுதாமல் இருந்தால் தான் ஆச்சர்யம். !!! 

முத்துஸ்வாமி தீட்சிதர் சிதம்பர க்ஷேத்ரத்தில் உள்ள கோவிந்தராஜரைப் பற்றி பாடும்போது, भासमान चिदम्बर पुरि विलसितेन – one giving darshan in the Glorious city of Chidambaram  என்கிறார்.

 அ.தீ  காசிக்குப் போய் தான் தன் கடைசி காலம் இருக்க வேண்டும் என்று ஒரு வைராக்யத்தோடு இருக்க, ஏனோ சிதம்பர க்ஷேத்ரத்தில் இருந்து அவருக்கு நடராஜரை விட்டு மனம் வராமல் தவிக்கிறார். தன் கடைசி காலத்தில் ஒரு சுலோகம் எழுதுகிறார்.

चिदम्बरमिदं पुरं प्रथितमेव पुण्यस्थलं

सुताश्च विनयोज्ज्वला: सुकृतयश्च काश्चित्कृता:

वयश्च मम सप्ततेरुपरि नैवे भोगे स्पृहा

न किञ्चित् अहमर्थये  शिवपदं दिदृक्षे परम्

அர்த்தம்:  சிதம்பரம் என்கிற க்ஷேத்ரம் புன்யஸ்தலம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதுதான் உண்மை கூட. என்னுடைய வம்சாவளியினர் குழந்தைகளும் அதே வினயத்தோட இருக்கிறார்கள். ஏதோ எனக்குத் தெரிந்த சில கிருதிகள்/ஸ்லோகங்கள் பண்ணி இருக்கிறேன் என்கிறார். !!!

என்ன ஒரு பவ்யம் பாருங்கள் !!!. 

மேலும் சொல்கிறார்.- எனக்கு எழுபது வயதுக்கு மேல் ஆகிவிட்டது எனக்கு பெரிய ஆசை ஒன்றும் கிடையாது. ஆனால் ஒரே ஒரு சின்ன “கடைசி ஆசை” இருக்கிறது.  அந்த நடராஜருடைய பாத பதமம் மட்டும் பார்க்க மாட்டேனா !!!” என்று ஏங்குகிறார்.

கண்டிப்பாக நடராஜ மூர்த்தி நடனம் பண்ணி இருக்கவேண்டும் என்று உறுதியாக நம்பும் தீட்சிதர், அடுத்த ஸ்லோகத்தில் நம் கண் முன்னே அந்த நடராஜர் இருக்கும் காட்சியை விளக்கி “மெய் சிலிர்க்க வைக்கிறார்”

आभाति  हाटकसभानटपादपद्म

ज्योतिर्मयं मनसि मे तरुणारुणोअयं

என் கண் முன்னே “கனக சபையில் வீற்றிருக்கும்” நடராஜருடைய  அந்த பாத பதமம் ஜொலிக்கிறதே -ஆஹா என்ன அழகு ! என்ன அழகு !!

 என் மனசிலே “ஜ்யோதிர் மயமான “இளம் சூரியன்” போன்ற அந்த பாதங்கள்  தெரிகிறதே” என்று புளகாங்கிதம் அடைகிறார்.. “ஆஹா” என்று கதறுகிறார்

அப்பைய்ய தீட்சிதர் உயிர் பிரிந்து விடுகிறது

அப்படியே அந்த ஜோதியுடன் கலந்து விடுகிறார்

அதற்குப் பிறகு வரும் இரண்டு ஸ்லோகங்கள் அவர் பிள்ளைகள் என்றும் சொல்கிறார்கள், நீல கண்ட தீட்சிதர் என்றும் சொல்கிறார்கள். அவர் அந்த ஸ்லோகத்தை முடிக்கிறார்.

नूनं जरiमरण घोर पिशाच कीर्णा

संसार मोह रजनी विरतिं प्रयाता

நிச்சயம் அப்பைய தீட்சிதர், கோர சம்சார துக்கங்கள், கிழடு  என்ற இருட்டில்  இருந்து விடுபட்டு சூரியன் போன்ற அந்த பாதத்தில் இரண்டற கலந்து விட்டார்

நூனம் - என்ற பதத்திற்கு நிச்சயம் என்று பொருள்

நாராயண தீர்த்தர் – தரங்கத்தில் அகரூர், கம்சன் கிருஷ்ணனை அழைத்து வரச் சொல்லி” கிளம்பும்போது, நான் கிருஷ்ணனை நிச்சயம் பார்ப்பேன் என்ற கருத்தில் – த்ரஷ்யாமி கோகுல நிலையம்- நூனம் ” என்ற கிருதியில்
“நிச்சயம் அந்த கிருஷ்ணனைப் பார்ப்பேன்: என்ற அர்த்தத்தில் எழுதிகிறார்.

 

 

 

என் பள்ளி நாட்கள் – ஸ்ரீமதி வஸந்தா

 

இதை நான் எழுதுவதற்கு முன்பு, எனக்கு கல்வி அறிவு புகட்டிய செம்மங்குடியின், ஆரம்ப நிலைப்பள்ளியில் இருந்து, உயர் நிலைப்பள்ளி வரை இருந்த ஒவ்வொரு ஆசிரியருக்கும் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தக் காலத்தில் படிப்பு என்பது பெண்களுக்கு எட்டாக் கனிதான். “வயத்தில நெருப்பு” கதைதான். இருந்தாலும், தன் குழந்தைகள் படிக்கவேண்டும் என்று “மல்லு கட்டி” என்னையும் பள்ளியில் சேர்த்து அழகு பார்த்த, ஏன் அப்பா  கோ.ராமமூர்த்தி சாஸ்திரிகளையும், எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தும், துளி கூட அதை தன் அடுத்த தலைமுறைக்குத் தள்ளாமல், என் தந்தைக்கு நிழலாக இருந்த ஸ்ரீமதி, அலமேலு அம்மாள்.. . எப்போதும் ஏன் சிந்தையில்..

பெண்கள் வீட்டை விட்டு வெளியே போவது என்பதே மிகவும் கஷ்டம். ஏதோ நவராத்திரி, கோவில் திருவிழா என்றால் தான் அனுமதி.

1953-54 Batch மாணவி நான்.  நான் படிக்கும்போது 6 ம் வகுப்ப இந்தப் பள்ளியில் தான் இருந்தது.  பிறகுதான் செம்மங்குடி உயர்நிலைப்பள்ளிக்கு மாறியது.

நான் ஆரம்ப நிலைப் பள்ளியில் படிக்கும்போது சீனி சார் தான் ஹெட் மாஸ்டர். அவர் ஒரே வாத்யார் தான்.

பிறகு, கம்பௌண்டர் பெண் சரோஜா அவர்கள் டீச்சர் ஆக சேர்ந்தார்கள்

இன்றும் எனக்கு நினைவு இருக்கிறது. கரும்பலகையில் “ஜெய விஜய” என்று தமிழ் புத்தாண்டின் பெயர் எழுதி இருக்கும்.

வானமே எல்லை. SKY is the Limit. என்று ஆயிரம் வார்த்தையில் விளையாடினாலும், எங்கள் தமிழ் ஆசிரியர்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

என்று அர்த்தத்துடன் சொன்ன அந்த குறள், எங்கேயோ ஒரு கிராமத்தில் பிறந்த என்னை, SSLC யில் முதல் மார்க் வாங்க வைத்து,

 நான் பணி புரிந்த அஞ்சல் துறையில், அகில இந்திய அளவில் சிறந்த அதிகாரி என்று விருது வாங்கியது எல்லாவற்றிற்கும் காரணம் இந்தப் பள்ளியில் நான் முதலில் எழுதிய “அ” தான்.

நான் SSLC முழுப் பரிசை, குடவாசல் அருகில் உள்ள “ஓகை” என்ற இடத்தில் உள்ள பள்ளியில் எழுதினேன். நான் குடவாசல் வரை அந்த வயதில் போனதே, பெரிய சாதனை என்றே கூறலாம்.

நான் 1962-63 SSLC முடித்தேன்.  அடுத்த வருடம் திருமணம் ஆகிவிட்டதால், நான் முதல் மாணவியாக வந்த அந்த பரிசை என் தங்கை வாங்கினாள்

கற்க கசடற என்ற அந்த வள்ளுவனின் வார்த்தையை மெய்யாக்கிய பள்ளி இது, எப்படி மறக்க முடியும் ?

நான் மட்டும் அல்ல, என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நீங்காத  நினைவுள்ள பள்ளி இது. 

என் பையனும் இங்கு படித்தான் என்பது இரட்டிப்புப் பெருமை.

எங்கள் வீடு என்ற சொர்க்கம்- பத்தாயம் முழுவதும் நெல், பின் கட்டில் முழுவதும், தேங்காய், பலாப்பழம், ரூம் முழுவதும் பட்சணங்கள், ஒரு 10 பேருக்குக் குறையாமல் தினமும் சாப்பாடு. உறவுகள் பொக்கிஷமாக பார்க்கப்பட்ட காலம் அது. இப்போது நினைத்தாலும் நெஞ்சு இனிக்கிறது.

எங்கள் பள்ளி என்ற போதிமரம் மூலம் எனக்குக் கிடைத்த ஞானம் அளப்பரியது.

ஒரு வருடம் முன்பு உயர் நிலைப் பள்ளிக்கு சென்று அங்கு இப்போது இருக்கும் தலைமை ஆசிரியருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டது மிகவும் மகிச்சியாக இருந்தது.

நூறாவது ஆண்டு கொண்டாடும் இந்தப் பள்ளிக்கு எனது மனப்பூர்வமான ஆசிகளும், ஏன் சிரம் தாழ்ந்த நன்றிகளும் உரித்தாகுக  இதைக் கொண்டாடும் இந்த வருடத்தில் என்னையும் பங்கு கொள்ள வைத்தமைக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்

Thursday, 9 April 2026

செம்மங்குடியில் சுவாஸினி பூஜை.

 

செம்மங்குடியில் சென்ற பிப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரை 28 ம் ஆண்டு, கும்பாபிஷேக தினமான, சம்வத்ஸராபிஷேக மகோற்சவம் இனிதே நிறைவேறியது.

செம்மங்குடி ஆனந்தவல்லி எங்கள் கிராமத்து ஜனங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். அபிராமி பட்டர் சொன்னது போல்,

“பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி உன்றன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய்”

அவளை பார்த்துக் கொண்டிருதால் போதும், அப்படியே உருகிப் போய்விடுவோம்.

ஆனந்தவல்லி க்கு ஒரு சிறப்பு பூஜை என்றால் அது நிஜமாகவே கோலாகலமாக கொண்டாடப்படும்.  நவாவர்ண பூஜை என்ன ! ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர், திருக்கல்யாணம் என்ன, வீதி உலா என்று ஸ்ரீ வித்யா உபாஸகர்களால் மிகவும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது.

எல்லாவற்றிர்க்கும், மேலாக, வரும் எல்லாருக்கும் மூன்று வேளையும் வயிறார சாப்பாடு. இதற்கு எவ்வளவு செலவு ஆகிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்

செம்மங்குடி என்ற சிகரத்தின் மகுடமாக, எங்கள் ஏகாம்பர மாமாவும், ஸ்ரீ. செல்வ கணேஸ சிவ குருக்கள் அவர்களும் மற்றும் சிவஸ்ரீ ஹரிஹர சிவம் அவர்களும் இவர்களின் வம்சாவளியான பால ஆனந்த பிரசாத் மற்றும் ஆனந்த குருக்கள் எலோரும் சேர்ந்து, அசேஷ கிராமத்து ஜனங்களோடு, மற்றும் பல “உழவாரப்பணி” பக்தர்களுடன்  சேர்ந்து நடத்திய  மிகச் சிறந்த வைபவம் இது.

இதில் 4.3.26 அன்று நடந்த் ஸுவாசினி பூஜை பற்றி கொஞ்சம் சொல்லலாம் என்பதுதான் இந்த பதிவு:

சுவாஸினி (அ) சுமங்கலி பிரார்த்தனை என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மங்களகரமான விசேஷங்கள் வருவதற்கு முன்பு செய்யும் நிகழ்வு. காஞ்சி மகான் பல சந்தர்ப்பங்களில் இதன் பெருமையை சொல்லி இருக்கிறார்.

ஸுவாஸின்யர்ச்சனா ப்ரீதா.. என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு ஸ்லோகம் வருகிறது.  அதாவது ஸுமங்கலிகளின் வழிபாட்டில் மகிழ்ச்சி அடைபவள் என்று பொருள்.  செம்மங்குடியில் அன்று இந்தக் கண் கொள்ளாக் காட்சியைப் பார்த்தவர்கள், பாக்கியம் செய்தவர்கள் என்றே சொல்லலாம்

 

வேதமே, சுமங்கலிகளை கொண்டாடுகிறது.

“ஸுமங்கலீரியம் வதூரிமாம் ஸமேத பஸ்யத  I

சௌபாக்யமஸ்மை தத்வா யா தாஸ்தம் விபரேதன” II

 

என்ற ஆசீர்வாத மந்திரத்தில். “கல்யாணமான பெண்ணிற்கு, சுமங்கலி என்ற அந்தஸ்து கொடுத்து, அனைத்து ஸௌபாக்யங்களும் கொடுக்குமாறு வேதம் தேவர்களைப் பிரார்த்திக்கிறது”

 

ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் இந்த ஸுவாசினி பூஜை என்பது மற்ற பூஜைகளுடன் ஒப்பிடும்போது சற்றே மாறுபட்டது.

ஒரு கிராமத்தில், 300   சுமங்கலிப் பெண்களோ அல்லது 100 பேரையோ, அழைத்து வந்து, அவர்களை ஒரு மூன்று மணி நேரம் உட்கார வைத்து, அம்பாளாக வரித்து, அஷ்டோத்திரம் சொல்லி, கற்பூரம் காண்பித்து, எல்லாம் முடிந்தவுடன், அவர்களுக்கு வாழை இல்லை போட்டு, விருந்தோம்பல் செய்து,, நலங்கு இட்டு, திருப்பி அனுப்பி வைக்கும் வைபவம் இது

இதில் சொல்லப்பட்ட அஷ்டோத்ரம், எங்கள் ஊரின் மிகவும் பிரஸித்தி பெற்ற வரகூர் ஸ்வாமிகள் அவர்கள் எழுதிய மூல மந்த்ரம். ஓலைச்சுவடியில் இருந்து அவரே அதைக் கொடுக்க, தலைமுறை தலைமுறையாக “சிவாசாரியார்” வம்சாவளியில் கொண்டு சென்று இன்று இதை சுமங்கலிகளுக்கு அஷ்டோத்திரமாக பூஜை செய்வது என்பது மிகவும் பிரமிப்பூட்டும் விஷயம்.

இந்த முறை 108 சுமங்கலிகளை அழைத்து அவர்களுக்கு மேற்சொன்னாபடி, எல்லா உபசாரங்கள் செய்து அனுப்பி வைத்தார்கள். இதற்க்கு முந்திய வருடம் 300 சுமங்கலிகளை அழைத்து வந்து பூஜை செய்தார்கள்.

முதலில் செம்மங்குடி கிராமத்தில் பிறந்த சுமங்கலிப் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து, பிறகு வெளியில் இருந்து.  இதில் ஆச்சர்யம் என்ன வென்றால், இதில் பங்கு பெறுவதற்கு, எதிர்பார்த்ததற்கு மேலாக பெண்கள் பேர் கொடுக்க, மிகவும் திண்டாடி இந்த பைனல் லிஸ்டை, ரெடி பண்னியது என்பதே, ஒரு மிகப்பெரிய சவால்.

கிராமத்தில் இவர்களை முதலில் பதிவு செய்து,  அழைத்து வருவது, தங்க வைப்பது, மற்ற உபசாரங்கள், எல்லாம் முடிந்து, திருப்பி ஜாகிரதையாக அனுப்பி வைப்பது என்பது மிகவும் கடினம். 

ஒரு குழு இரவு பகலாக வேலை செய்து, ஒவ்வொரு சுமங்கலிக்கும் சகல வசதிகளும் செய்து கொடுத்து, அவர்கள் முகம் கோணாமல், வெற்றிகரமாக நடத்தியது தான் ஒரு பெரிய சாதனை.  இதை நகரத்தில் கூட  நினைத்தே பார்க்க முடியாது.

மேலும் இந்த நாட்களில் நடந்த கோலாட்டம் அழகாக ஒத்திகை செய்யப்பட்டு, மிகவும் பிரமாதமாக நடந்தது. நவராத்திரி சமயத்தில் நடக்கும் “தாண்டியா” என்கிற வட நாட்டு  நடனத்தை நினைவு படுத்தியது.

கோலாட்டம் என்பது எத்தகைய முக்கியம் வாய்ந்தது என்பதற்கு ஒரு குறிப்பு எனக்குக் கிடைத்தது.

“ஹல்லீச லாஸ்ய சந்துஷ்டாயை நமஹா.... என்று லலிதா திரிஷதியில் ஒரு நாமம் உண்டு.  ஹல்லீசம் என்பது கோலாட்டம்.  லாஸ்யம் என்பது ஆட்டம்.  விசித்ரமான கோலாட்டக் குச்சிகளைக் கொண்டு பெண்கள் ஆடும் இந்த அற்புத நடனத்தை செம்மங்குடியில் பார்க்க வேண்டும்”

இதில் டிரஸ்டி ஸ்ரீ. சேதுராமன் அவர்களின் அர்ப்பணிப்பு, ஸ்ரீ. கௌரி ஷங்கர் அவர்களின் பங்களிப்பு எல்லாம் அபாரம். ஊர் கூடி தேர் இழுக்கவேண்டும் என்பார்கள், அது இங்கு நடந்தது

சௌந்தர்ய லஹரியில், பகவத்பாதாள் “உன் கருணையை என் மேல் கொஞ்சம் தெளி” என்கிறார் (ஸ்நபய க்ருபயா மாமபி ஷிவே). செம்மங்குடிக்கு நீங்கள் வந்தால், அந்த கருணை சுமுத்திரத்தில் நீங்கள் நனையலாம்.

எங்கள் ஆனந்தவல்லி யைப் பற்றி எழுதுவதென்றால் எனக்கு மிகவும் குஷி யாகிவிடும். நான் பிறந்த செம்மங்குடியில், “இதுதான் அம்பாள், இவளை இறுக்கிப் பிடிச்சுக்கோ” என்று  எனக்கு காட்டப்பட்டு, அவளுடனேயே வாழ்ந்த பள்ளி நாட்கள். வெள்ளிக்கிழமை வராதா என்று ஏங்கி, என் அம்மா குமுட்டியில் வைத்த பயத்தம் பருப்பு பாயஸமும், வடையும்  எடுத்து ஆனந்தவல்லிக்கு நைவேத்யம் பண்ணி, அதில் கொஞ்சம் சாப்பிட்டப்போது நான் அடைந்த இன்பம், இப்போதும் அடைகிறேன் என்றால் “அவள்” என்னிடம் காட்டும் கருணைதான்.

Seeing is believing என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒரு கிராமத்தில் இத்தனை விமர்சியாக நடக்கும் இந்த வைபவத்தை எவ்வளவு எழுதினாலும் போதாது. எல்ல்லோரும் வந்து பார்த்து அனுபவிக்கவேண்டும்.

ஒவ்வொரு வருடமும் மிகுந்த ஸ்ரத்தையுடன், மிகுந்த பக்தியுடன் செய்யப்படும் இந்த சம்வத்ஸர அபிஷேகம், எல்லோருக்கும் மங்களத்தைக் கொடுக்கட்டும்.

 

செம்மங்குடியில் சுவாஸினி பூஜை. Unedited Version

 

செம்மங்குடியில் சென்ற பிப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரை 28 ம் ஆண்டு, கும்பாபிஷேக தினமான, சம்வத்ஸராபிஷேக மகோற்சவம் இனிதே நிறைவேறியது.

செம்மங்குடி ஆனந்தவல்லி எங்கள் கிராமத்து ஜனங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். அபிராமி பட்டர் சொன்னது போல்,

“பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி உன்றன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய்”

அவளை பார்த்துக் கொண்டிருதால் போதும், அப்படியே உருகிப் போய்விடுவோம்.

ஆனந்தவல்லி க்கு ஒரு சிறப்பு பூஜை என்றால் அது நிஜமாகவே கோலாகலமாக கொண்டாடப்படும்.  நவாவர்ண பூஜை என்ன ! ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர், திருக்கல்யாணம் என்ன, வீதி உலா என்று ஸ்ரீ வித்யா உபாஸகர்களால் மிகவும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. மொத்த சிலவே ஏறக்குறைய 10.00 லட்சம். !!

எல்லாவற்றிர்க்கும், மேலாக, வரும் எல்லாருக்கும் மூன்று வேளையும் வயிறார சாப்பாடு.

செம்மங்குடி என்ற சிகரத்தின் மகுடமாக, எங்கள் ஏகாம்பர மாமாவும், சிவஸ்ரீ ஹரிஹர சிவம் அவர்களும் சேர்ந்து, அசேஷ கிராமத்து ஜனங்களோடு, மற்றும் பல பக்தர்களுடன் சேர்ந்து நடத்திய  மிகச் சிறந்த வைபவம் அது.

இதில் 4.3.26 அன்று நடந்த் ஸுவாசினி பூஜை பற்றி கொஞ்சம் சொல்லலாம் என்பதுதான் இந்த பதிவு:

சுவாஸினி (அ) சுமங்கலி பிரார்த்தனை என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மங்களகரமான விசேஷங்கள் வருவதற்கு முன்பு செய்யும் நிகழ்வு. காஞ்சி மகான் பல சந்தப்பங்களில் இதன் பெருமையை சொல்லி இருக்கிறார்.

ஸுவாஸின்யர்ச்சனா ப்ரீதா.. என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு ஸ்லோகம் வருகிறது.  அதாவது ஸுமங்கலிகளின் வழிபாட்டில் மகிழ்ச்சி அடைபவள் என்று பொருள்.  செம்மங்குடியில் அன்று இந்தக் கண் கொள்ளாக் காட்சியைப் பார்த்தவர்கள், பாக்கியம் செய்தவர்கள் என்றே சொல்லலாம்.  

வேதமே, சுமங்கலிகளை கொண்டாடுகிறது.

"ஸுமங்கலீரியம் வதூரிமாம் ஸமேத பஸ்யத  I

சௌபாக்யமஸ்மை தத்வா யா தாஸ்தம் விபரேதன" II

 என்ற ஆசீர்வாத மந்திரத்தில். “கல்யாணமான பெண்ணிற்கு, சுமங்கலி என்ற அந்தஸ்து கொடுத்து, அனைத்து ஸௌபாக்யங்களும் கொடுக்குமாறு வேதம் தேவர்களைப் பிரார்த்திக்கிறது” 

ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் இந்த ஸுவாசினி பூஜை என்பது மற்ற பூஜைகளுடன் ஒப்பிடும்போது சற்றே மாறுபட்டது. ஒரு கிராமத்தில், 300   சுமங்கலிப் பெண்களோ அல்லது 100 பேரையோ, அழைத்து வந்து, அவர்களை ஒரு மூன்று மணி நேரம் உட்கார வைத்து, அம்பாளாக வரித்து, அஷ்டோத்திரம் சொல்லி, கற்பூரம் காண்பித்து, எல்லாம் முடிந்தவுடன், அவர்களுக்கு வாழை இல்லை போட்டு, விருந்தோம்பல் செய்து,, நலங்கு இட்டு, திருப்பி அனுப்பி வைக்கும் வைபவம் இது

இந்த முறை 108 சுமங்கலிகளை அழைத்து அவர்களுக்கு மேற்சொன்னாபடி, எல்லா உபசாரங்கள் செய்து அனுப்பி வைத்தார்கள். இதற்க்கு முந்திய வருடம் 300 சுமங்கலிகளை அழைத்து வந்து பூஜை செய்தார்கள்.

முதலில் செம்மங்குடி கிராமத்தில் பிறந்த சுமங்கலிப் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து, பிறகு வெளியில் இருந்து.  இதில் ஆச்சர்யம் என்ன வென்றால், இதில் பங்கு பெறுவதற்கு, எதிர்பார்த்ததற்கு மேலாக பெண்கள் பேர் கொடுக்க, மிகவும் திண்டாடி இந்த பைனல் லிஸ்டை, ரெடி பண்னியது என்பதே, ஒரு மிகப்பெரிய சவால்.

நகரத்தில் என்றால் கூட பரவாயில்லை. கிராமத்தில் இவர்களை முதலில் பதிவு செய்து,  அழைத்து வருவது, தங்க வைப்பது, மற்ற உபசாரங்கள், எல்லாம் முடிந்து, திருப்பி ஜாகிரதையாக அனுப்பி வைப்பது என்பது மிகவும் கடினம்.

ஒரு குழு இரவு பகலாக வேலை செய்து, ஒவ்வொரு சுமங்கலிக்கும் சகல வசதிகளும் செய்து கொடுத்து, அவர்கள் முகம் கோணாமல், வெற்றிகரமாக நடத்தியது தான் ஒரு பெரிய சாதனை.  இதை நகரத்தில் கூட  நினைத்தே பார்க்க முடியாது.

இதில் சொல்லப்பட்ட அஷ்டோத்ரம், எங்கள் ஊரின் மிகவும் பிரஸித்தி பெற்ற வரகூர் ஸ்வாமிகள் அவர்கள் எழுதிய ஓலைச்சுவடியில் இருந்து எடுக்கப்பட்டது

 மேலும் இந்த நாட்களில் நடந்த கோலாட்டம் அழகாக ஒத்திகை செய்யப்பட்டு, மிகவும் பிரமாதமாக நடந்தது. நவராத்திரி சமயத்தில் நடக்கும் “தாண்டியா” என்கிற வட நாட்டு  நடனத்தை நினைவு படுத்தியது.

கோலாட்டம் என்பது எத்தகைய முக்கியம் வாய்ந்தது என்பதற்கு ஒரு குறிப்பு எனக்குக் கிடைத்தது

“ஹல்லீச லாஸ்ய சந்துஷ்டாயை நமஹா.... என்று லலிதா திரிஷதியில் ஒரு நாமம் உண்டு.  ஹல்லீசம் என்பது கோலாட்டம்.  லாஸ்யம் என்பது ஆட்டம்.  விசித்ரமான கோலாட்டக் குச்சிகளைக் கொண்டு பெண்கள் ஆடும் இந்த அற்புத நடனத்தை செம்மங்குடியில் பார்க்க வேண்டும்”

சௌந்தர்ய லஹரியில், பகவத்பாதாள் “உன் கருணையை என் மேல் கொஞ்சம் தெளி” என்கிறார் (ஸ்நபய க்ருபயா மாமபி ஷிவே). செம்மங்குடிக்கு நீங்கள் வந்தால், அந்த கருணை சுமுத்திரத்தில் நீங்கள் நனையலாம்.

எங்கள் ஆனந்தவல்லி யைப் பற்றி எழுதுவதென்றால் எனக்கு மிகவும் குஷி யாகிவிடும். நான் பிறந்த செம்மங்குடியில், “இதுதான் அம்பாள், இவளை இறுக்கிப் பிடிச்சுக்கோ” என்று  எனக்கு காட்டப்பட்டு, அவளுடனேயே வாழ்ந்த பள்ளி நாட்கள். வெள்ளிக்கிழமை வராதா என்று ஏங்கி, என் அம்மா குமுட்டியில் வைத்த பயத்தம் பருப்பு பாயசத்தை எடுத்து ஆனந்தவல்லிக்கு நைவேத்யம் பண்ணி, அதில் கொஞ்சம் சாப்பிட்டப்போது நான் அடைந்த இன்பம், இப்போதும் அடைகிறேன் என்றால் “அவள்” என்னிடம் காட்டும் கருணைதான்.

ஒவ்வொரு வருடமும் மிகுந்த ஸ்ரத்தையுடன், மிகுந்த பக்தியுடன் செய்யப்படும் இந்த சம்வத்ஸர அபிஷேகம், எல்லோருக்கும் மங்களத்தைக் கொடுக்கட்டும்.

 

 

Saturday, 14 March 2026

தாடகை

 

இராமாயண காலத்தில் இருந்து இன்று வரைக்கும், இந்த தாடகை வதம், வாலி வதம், விபீஷண சரணாகதி போன்ற சில விஷயங்கள் “சரியா தவறா” என்ற வாதம் இன்றும் உண்டு.

தமிழ் அறிஞர் சத்யசீலன், புலவர் கீரன் போன்ற பலர், இன்று, இலங்கை ஜெயராஜ் போன்ற பலரும் சரி, தவறு என்று போட்டி போட்டுக் கொண்டு பேசுவதைக் கேட்டு பார்த்து இருப்போம். நமக்கே, அட போங்கப்பா !!! என்று டீ வீயை அணைக்கும் வரை.

இதில் தாடகையை வதம் செய்யலாமா ? அவள் அரக்கியாக இருந்தாலும் ஒரு பெண் இல்லையா, என்று வக்காலத்து கும்பல் ஒன்று இன்றும் உண்டு.

மாதரையும் தூதரையும் கொல்வது பாவம் என்பது தர்மம். தர்மத்தின் வழி நடந்த ராமன் தர்மம் தவறி நடக்கலாமா ?  என்று ஒரு கும்பல் கலாய்க்கவேண்டியது.

விச்வாமித்ரரே, தாடகையை போட்டுத் தள்ளி இருக்க வேண்டியதுதானே, எதுக்கு ராமனைக் கூட்டிக்கொண்டு போனார் ?  என்று ஒரு கும்பல் அலப்பறை.

தாடகையை, இவள் அரக்கி, பெண்ணில்லை. பெண்ணிற்கு உண்டான ஒரு குணமும் இவளிடம் கிடையாது, எனவே கொன்று விடு ! என்று முனிவர் சொல்லி  ராமன் செய்ததாக நாம் படித்து இருக்கிறோம்

கொஞ்சம் கம்பனிடம் வருமோம்

ஒரு அரக்கி பெண்ணில்லை என்று சொல்ல வரும் கம்பன் அந்த அரக்கியைப் பற்றி விவரிக்கிறார். -  நாம் கொஞ்சம் கற்பனை செய்வோம். -என்ன சொல்லமுடியும் சார். >

அவள் பற்கள் நீளமாக இருந்தன, பருத்த உடம்பு, கண்ணில் தீப்பொறி, கைகள் அகலம். இத்யாதி இதாயதி. நம்முடைய கற்பனைக்கு வருவது அவ்வளவுதான்.

படிப்பவர்களுக்கு, தாடகை ஒரு பெண்ணே அல்ல என்ற எண்ணம் வர வேண்டும். அப்போதுதான் ராமன் மேல் பழி வராது.

கம்பன் கூறுகிறான்

சிலம்புகள் சிலம்பிட செழித்த கழலோடும்: 

தாடகை நடந்து வருகிறாள். அவள் காலில் சிலம்பு அணிந்து இருக்கிறாள். அந்த சிலம்பில் பரல்களுக்கு பதில், மலைகளை பிடுங்கி கோத்து இருக்கிறாள். கொஞ்சம் கற்பனை செய்து கொள்ளுங்கள். கொஞ்சம் மேரு மலை, மேற்கு தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி, விந்திய அப்படியே கொஞ்சம் நம்ம பரங்கி மலையையும் சேர்ந்து பாருங்கள். !!!!   நினைத்துப் பார்க்கும் நமக்கே கொஞ்சம் திகில் ஆகா இருக்கும் .....

நிலம் புக மிதித்தனள்:

அந்தத் தரையை அழுத்த மித்திது நடக்கிறாள். அந்த தரையில் பள்ளம் விழுகிறது. எவ்வளவு பெரிய பள்ளம் தெரியுமா  ?

நெளித்த குழி வேலை சலம் புக:

அதில் கடல் தண்ணீர் வந்து நிறையுமாம்.  கடல் ஊருக்கு வருகிறது என்றால் அது எவ்வளவு பெரிய பள்ளமாக இருக்கவேண்டும். அப்போ அவள் கால்.....

அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப் பிலம் புக

அவள் வரும்போது அனல் கக்கும் கண் உள்ள எமனும் தெறித்து ஓடி, ஏதோ குகைக்குள் ஒளிந்து கொள்வானாம்.

எமனுக்கு எமள்.....

நிலக்கிரிகள் பின் தொடர வந்தாள்

அவள் கொலுசில் கோத்தது போக மிச்ச மலைகள் எல்லாம் அவள் பின்னே ஓடி வருமாம்.

எதோ காத்து அடிச்சால் பேப்பர் பறந்து வருமே.  தெலுங்கு பட சண்டையில் வீரர்கள், புவி ஈர்ப்பு விசையை பழிப்பது போல் மேலே பரப்பார்களே.. அது போல.

என்று முடிக்கிறார்

இவள் பெண்ணா. நளினம் எதாவது இருக்கிறதா ?  என்று நம்மை தீவிரமாக யோசிக்க வைக்கும் பாடல் இது.

விச்வாமித்த்ரர் யாகம் செய்வதால், விரதம் மேற்கொண்டு, வதம் செய்யாமல் இருந்தார் என்பதாலும், “இதனை இதனால், இவன் முடிக்கும்” என்று ஆராய்ந்ததினால் ராமன் வந்தான் என்பதாலும், அவருடைய தொலை நோக்குப் பார்வை ராமனைக் கூட்டிக்கொண்டு, சீதையை கல்யாணம் செய்து கொடுப்பதில் மூலம், தம் “அரிச்சந்திரனையும், சந்திரமதியையும் பிரித்த பாபத்திற்க்கு பிராயச்சித்தம் தேட, ராமனை அழைத்துக் கொண்டு போனார், என்பது ராமாயணத்தை நன்கு படித்தவர்க்கு புரியும். 

இதில் இன்னொரு சூக்ஷமமான விஷயம், விஸ்வாமித்ரர், தசரதனிடம், ராமரை மட்டும் கேட்டார். தசரதன், பயந்து, கூடவே லக்ஷ்மணனையும் அனுப்பித்தார். போரில், ராமன் இலக்குவனை சேர்க்கவே இல்லை, தாடகை வதம், மாரீசனை, குற்றுயிரும் குலையிருமாய், கடலில் தள்ளியது, (பின்னணி ராவணன் மரணத்துக்கு உதவியாய் இருப்பான் என்ற ஒரு நல்ல எண்ணம்) எல்லாம் ராமன் ஒருவனே செய்தான்

ஆனால் அதே சமயம் இலக்குவன் வீரத்தை குறைத்து மதிப்பிட்டுவிடுமே என்று இந்த்ரஜித்துடன் போருக்கு, இலக்குவனை மட்டும் அனுப்பி வைத்த்தான்.

விராட வதம் போது, இலக்குவனை, சீதையை ரட்சிக்கும் பொறுப்பை விட்டு விட்டான்.

ராமன் ஒரு அற்புதமான Management Consultant/Expert

 

 

Wednesday, 11 March 2026

பட்டினத்தார் பக்தி

 நாம் பக்தி செய்கிறோம்.  கோவிலுக்குப் போகிறோம். வீட்டில் காலையில் எழுந்து விளக்கு வைத்து, சுவாமிக்கு புஷ்பத்தால் அர்ச்சனை செய்கிறோம். அப்போ அப்போ விரதம் இருந்து உடலை வருத்திக் கொள்கிறோம். சபரிமலை, பழனி என்று ஒரு மண்டல விரதம் வேறு. பல மைல் கால் நடையாக நடந்து கோவிலுக்குச் செல்கிறோம். அர்ச்சனை செய்கிறோம்.  க்ஷேத்ராடனம் என்று பல கோவிலுக்கு சென்று பல தெய்வங்களைப் பார்க்கிறோம். அப்போ அப்போ அன்னதானம் செய்கிறோம். தினமும் விஷ்ணு ஆராதனை, சிவா ஆராதனை வேறு..... சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கண் முழிப்பு வேறு...

இதெல்லாம் செய்துவிட்டு, “நான் தான் பக்தி செய்தேன்” என்று சொல்லிக் கொள்கிறோம். வெளியில் சொலாவிட்டாலும், நம் மனதுக்குள்ளே, “நான்தான் சிறந்த பக்திமான்” என்று அப்பப்போது சொல்லிக் கொள்கிறோம்.... இல்லையா.........

பட்டினத்தார் சொல்கிறார்.  யார்.... இவர்....”ஒன்றுமே வேண்டாம் என்று ஒரே இரவில் எல்லாவற்றையும் உதறிவிட்டு கோமணத்தைக் கட்டிக்கொண்டு புறப்பட்டவர்.”.. யார் “காதறுந்த ஊசியும் வாராது காண கடைவழிக்கே” என்றவர் - . சொல்கிறார்.  

நான் செய்வது என்ன பக்தி, அந்த மூன்று பேர் முன்னால் ஏன் பக்தி எம்மாத்திரம்.....என்று புலம்புகிறார்.

யார் அந்த மூன்று பேர்  

“வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன்”  -  சிறுத்தொண்ட நாயனார் என்று ஒருவர் இருந்தார். 

அவர் வீட்டுக்கு சிவனடியார் உருவத்தில் வந்த  சிவன், "பிள்ளைக் கறி" போட்டால் சாப்பிடுகிறேன் இல்லையென்றால்  சாப்பிடமாட்டேன் என்றார். அவரும் ஒத்துக் கொண்டார்.  சிவனடியார் சில நபந்தனைகளை வைத்தார்.

 பிள்ளை ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும்

 பிள்ளைக்கு ஒரு உடல் குறையும் இருக்கக் கூடாது

 தாய் பிடித்துக் கொள்ள, தகப்பன் பிள்ளையை அரிந்து சமைக்க   வேண்டும்

முக்கியமாக, இருவரும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடக் கூடாது.

சிறுத்தொண்டரும், அவர் மனைவியும் ஒத்துக் கொண்டு பிள்ளைக் கறி செய்து போட்டார்கள். (பிறகு நடந்தது நம் எல்லோருக்கும் தெரியும்)

இது பக்தியா, நான் செய்வது பக்தியா ????- என்று கேட்கிறார் பட்டினத்தார் 

இரண்டாவது:

மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன்

சூள் என்றால் சத்தியம்

திருநீலகண்ட நாயனார் என்று ஒருவர் இருந்தார்.  “தில்லை வாழ் அந்தணர்க்கும் அடியார்க்கும் அடியேன், திருநீலகண்ட குயவனார்க்கும் அடியேன் என்று” வாழ்ந்த தகுந்த பெருமை உடையவர்.

அவர் கொஞ்சம் மனச் சஞ்சலமுடன், காமத்தைக் கட்டுப்படுத்தாமல் இருந்தார். இது அவர் மனைவிக்குத் தெரிய, எதோ ஒரு சந்தர்ப்பத்தில், மனைவியை நெருங்கும்போது, “எம்மைத் தொடாதீர்கள், அந்தத் திருநீலகண்டத்தின் மீது ஆணை” என்று சொல்லிவிட்டார்.

எம்மை என்று சொன்னதால், எல்லாப் பெண்களையும் மற்றும் அல்லாது தன மனைவியையும் குறிக்கும் என்பதால், தன் இச்சைகளை துறந்து, கடைசி வரையில், தன் மனைவியிடம் போகாமல் ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

காமத்தை அடக்க முடியுமா என்ன ?  இந்த உலகத்தில் மண்ணுக்கும், பெண்ணுக்கும் அடிமையாகாமல் எத்தனை பேர் இருக்கிறோம்.  ?

ஒரே குடிசையில், இருவரும் தனியே... “சத்தியம் செய்த ஒரு வார்த்தைக்காக” காம் நிலையை அப்படியே நிறுத்தி ஒரு வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்

பட்டினத்தார் சொல்கிறார்.. “இப்படி ஒரு வாழ்க்கை நான் வாழ வில்லையே, இப்படி ஒரு பக்தி நான் பண்ணவில்லையே ? என்று

மூன்றாவது

“நாலாறில் கண்ணிடத்து அப்பவல்லேன்”

யார், நம்ம கண்ணப்ப நாயனார். சிவலிங்கத்தைக் கண்ட ஆறாவது நாளிலேலேயே மனம் உருகி, அந்தக் கண்ணில் இருந்து இரத்தம் வடிவத்தைப் பொறுக்க மாட்டாமல், தன் ஒரு கண், இல்லை, இரண்டு கண்களையும் தோண்டி தர விழைகிறார்.  7 வது நாளில்  "நில் கண்ணப்ப? என்று சிவபெருமான் தரிசனம்.....

இந்த பக்தி எங்கே ?  இவர்கள்  செய்த பக்தியில் நூற்றில் ஒரு பங்கு நான் செய்ய வில்லையே ?

“நானினி சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பனுக்கே” என்று முடிக்கிறார்......

நாம் ஏதோ பேருக்கு பக்தி பண்ணிவிட்டு, ஒன்றும் துறக்காமல், சுகர் மாத்திரையும் சாப்பிட்டுக் கொண்டு, ஸ்வீட்டையும் சாப்பிட்டுக் கொண்டு, -வைகுண்டத்தில் நமக்கு ஒரு சீட் , CONFIRMED என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம்

பட்டினத்தார், அனைத்தையும் விட்டுவிட்டு, போவோமோ, மாட்டோமோ என்று சந்தேஹப்படுகிறார்.

தேறுவதெப்போ நெஞ்சே, தெளிந்து கரை ஏறுவதேப்போ நெஞ்சே என்ற நீலண்ட சிவன் பாடல் தான் நினைவுக்கு வருகிறது....

அப்படி என்றால் நான் எப்படித்தான் பக்தி செய்வது என்று சண்டைக்கு வரக்கூடாது.

பக்திக்கு வைராக்கியம் முக்கியம்.  பக்தி பண்ணி கொண்டே இருக்க வேண்டும். பக்தியில் கர்வம் கூடாது.  நாம் பெற்றோர்கள் செய்த அந்த பக்தியை நாம் செய்தாலே போதும்.