Wednesday, 5 August 2026

மூத்தோன் ஆயினை........

 

இன்று ஆடிக் கிருத்திகை. குரு வாரம்.  கொஞ்சம் முருகக் கடவுள்.  கொஞ்சம் குரு, கொஞ்சம் திருப்புகழ்.

ஒரு திருப்புகழில் “மூத்தோன் ஆகி” என்ற ஒரு வரியை உபயோகப் படுத்துகிறார்....

மூத்தோன் ஆகி என்ற சொல்லுக்கு பொருள் “மூத்த சகோதரனாய் விளங்கினாய்” என்று பொருள்.  இவர் எங்கே எப்படி மூத்த சகோதரன் ? என்ன புதுக் கதை ?

எத்தனை முறை சொன்னாலும்,  நான் “பால் மாறாத” ஒரே வார்த்தை. திருப்புகழ் ஒரு அமிர்தம்.  அதை பருக பருக நாம் அடையும் ஆனந்த்திற்க்கு அளவே இல்லை.

அந்த சந்தம், அந்த சொல் வார்த்தைகள். அர்த்தத்துடன் வரும் அந்த வார்த்தைகள்.  (உ.ம்)  “அ வு. ரு பிரணவா மந்திர கர்த்தவிய மாக வரு குருநாதா” என்று ஒரு வரி வருகிறது. அது அழகாக சாருகேசி ராகத்திலும் தாளத்திலும் உட்காருகிரது

திருப்புகழ் அன்பர்கள் குழு சென்னைக்கு தலைவராக இருக்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, இந்த திருப்புகழுக்கு ராகம், சந்தம் எல்லாம் போட்ட ராகவன் சார், ஆபீசில் இருந்து வந்து, முருகப்பெருமான் இருக்கும் பூஜை அறையில் கதவை சாத்திக்கொண்டு உட்கார்ந்து விடுவாராம். முருகன் ராகம் சொல்ல, சந்தம் சொல்ல இவர் எழுதுவாராம். அப்படி வந்த பொக்கிஷம் தான் திருப்புகழ்.

அந்த ராகவன் சார் என்ற மகானை, மந்தவெளி ஸ்ருங்கேரி மடத்தில் நடந்த திருப்புகழ் பஜனையில் நான் நேரே பார்த்து, நமஸ்காரம் செய்து, வீபூதி பிரசாதம் வாங்கி இருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போதும் மெய் சிலிர்க்கிறது.  மும்பையில் இருக்கும் என் சித்தி, எல்லா திருப்புகழையும் பார்க்காமல், ஒரு வரி பிறழாமல் பாடுவாள்.

ஒரு பாட்டு நான் “நெட்ரூ” பண்ணுவதற்குள், குண்டலினி சக்தி மேலே எழும்பி விடும் போல எனக்கு இருக்கிறது. திருப்புகழ் ஒரு பீஜம் போன்றது... அருணகிரிநாதர் என்ற மகான் நமக்கு அளித்த கொடை.

எத்தனை பேருக்கு அருணகிரிநாதர் திருப்புகழ் எழுவதற்கு முன்பே, வில்லிப்புத்தூரரிடம் ஒரு போட்டியில் இவர் ஜெயித்த கதை தெரியும் .? அதாவது வி/பு ஒரு பாடல் பாட இவர் பதில் சொல்ல வேண்டும், அதே போல் அ.கி பாடி அவர் பதில். இல்லாவிட்டால் தோற்றவர் காதை, ஜெயி த்தவர் அறுக்க வேண்டும்.  வி/பு பாடலுக்கு இவர் அர்த்தம் சொல்லி விட்டார். இப்போது அருணகிரி பாடுகிறார்.

..திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா.....

இது முதல் வரி, இது போல் இன்னும் மூன்று வரி இருக்கிறது. இதை ஒழுங்காகப் படித்தாலே போறும். நமக்கு புஷ்பக விமானம் ரெடி.

இதற்ககு பதில் தெரியாமல் வி.பு திணற, காதை அறுக்காமல்,  அர்த்தம் சொல்லி புரிய வைத்து, பாரதம் பாடுக. என்று அணுக்ரஹம பண்ணுகிறார்..

வில்லிபுத்தூராரின் பாரதம் இப்படி வந்தது தான். 

இதற்க்கு அர்த்தம் வாரியார் ஸ்வாமிகள் சொல்லி இருக்கிறார்.  அற்புதம். கூகுளில் கிடைக்கும் தேடி படியுங்கள்..

இன்று வியாழன், குரு அணுக்ரஹம் என்பது அப்படி சாதாரணமானது அல்ல. ப்ரேமி அண்ணா சொல்வது போல், நீ “ஆதி மூலமே” என்று கூப்பிடாதே, கஜேந்திரா என்று கூப்பிடு.  நமக்கு எதற்கு ஆதி மூலம். ஆயிரம் பேர் பகவானை நினைத்து மோட்ச கதி அடைந்திருக்கிறார்க்கள்.  அவர்களில் ஒருவனாய், ஒரு பிரஹலாதனை, துருவனை, ஆஞ்சநேயர்...இப்படி

ராமாயணத்தில் ஸபரி போன்ற ஒரு பாத்திரம் எங்கு தேடினாலும் கிடைக்காது. அவள் குரு கைங்கர்யம் பண்னினாள்,  குருவின் யாக சாலையை சுத்தம் பண்ணினாள்.  தரையை மொழுகினாள்,  பாத்திரம் தேய்த்தாள்.  ஒரு நாள் எல்லோ குருமார்களும் கிளம்ப, சபரி கேட்கிறாள் “என்னை தனியாக விட்டுப் போகிறீர்களே, நான் என்ன செய்வேன்” என்று கேட்க, முனிவர்கள் “நாங்கள் யாரைத் தேடித் போகிறோமோ அந்த பரமாத்மா, ராமன் என்ற பெயரில் உன்னை தேடி வருவார்”.  என்கிறார்கள்.

அதற்குப் பிறகு அவள் ராமனுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள், இந்த கனி, பழ வகைகள்... எல்லாம் ரெடியாக.

ராமன், லக்ஷ்மனனோடு வருகிறார். அவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறாள்.  உபசாரங்கள் முடிந்து, ராமர் என்ன வேண்டும் என்று கேட்கிறாள். சபரிக்குத் தெரியும், வந்தது சாக்ஷாத் பரமாத்மா என்று. முன்னமேயே (முடிவர்கள் சொன்னதன் பேரில்)

சபரி உடனேயே “ததி பாண்டன்” மாதிரி, பானையோடு வைகுண்டம் போகவேண்டும் என்று கேட்கவில்லை.  “எனக்கு ஒன்றும் வேண்டாம் ராமா. எதோ உன்னைப் பார்க்க வேண்டும் என்றார்கள். பார்த்து விட்டேன். நான் கிளம்புகிறேன். எனக்கு ஏற்கனேவே புஷ்பக விமானம் ரெடியாக இருக்கிறது” என்கிறாள்.  எந்த ராமனை முனிவர்கள் கட்டி தழுவவேண்டும் என்று நினைக்கிறார்களோ, எந்த ராமன் ராமாயணத்தில்  ஜகஜ்ஜாலம் பண்ணினானோ., எந்த ராமனை ஆஞ்சநேயர் அன வரதமும்  த்யானம் செய்கிராறோ, அந்த ராமனை சபரி கண்டுக்கவே இல்லை.

குரு கிருபை அது.

இப்போது திருப்புகழுக்கு வருமோம் !!!

 ஓர் உருவாகிய தாரக பிரம்மத்து – என்று தர்பாரி கானடாவில் ஒரு பாட்டு இறுக்கியது.  இந்தப் பாடல் அமைப்பு  ஒரு தேர் போல அமைக்கப்பட்டது. தேர் தட்டு போல, தேர் தட்டு, முதல்  7 வரை கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்லும். இப்படி அமைப்புடன் எங்கு தேடினாலும் ஒரு பாட்டு கிடைக்காது.

இது சுவாமி மலை திருப்புகழ். ஞானம் தெறிக்கும் பாட்டு. தர்பாரி கானடாவின் அத்தனை அழகையும் கொட்டித் தீர்த்த ஒரு பாட்டு. இந்தப் பாட்டை கேட்டு “ஆஹா” என்று ஆனந்தக் கண்ணீர் விடாதவர்கள் மிகக் குறைவு.

ஒன்றாய், இருமையின், நான்முகன் என்று பல ஆரம்ப வரிகளில் வரும் இந்தப் பாடல்  ஒரு சிறிய பகுதியைத் தருகிறேன்

முன்பொரு நாள்

உமையைம்மையின் இரு மார்பிலும் சுரந்த  ஞானப் பாலை அருந்தி

இயல் இசை நாடகம் என்ற மூன்று தமிழிலும் வல்லவனாகி

நால்வகை கவிகளிலும்  வல்லவனாகி

ஐம்புலன்களுக்கு அடிமைப்படாத அவர்களை ஜெயித்த உரிமையாளன் ஆகி

ஆறு முகம் உடைய சண்முகம் இவன்தான் என்று யாவரும் கூற

இப்போது  திருப்புகழ் வரிகள் “எழில் தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை” என்கிறார்.

இதில் “கழுமலத்து உத்த்தனை” என்றால் – சீர்காழியில் திருஞானசம்பந்தராக தோன்றினாய்” என்கிறார்.  அருணகிரிநாதர் என்ற குரு, சம்பந்தப் பெருமானை மேற்கோள் காட்டுகிறார்.

இந்தப் பாடலில் முடியுமோது “ஏரகத்து இறைவன் என இருந்தனையே” என்று முடிக்கிறார்.  இதை த.கா வில் பாடும்போது. நம்மை உருக்கும்.

கௌமாரம்.காம் ல் இந்தப் பாடல் ராகவன் சார் பாட நாம் இன்றும் கேட்கலாம்.

இப்போது முதல் கேள்விக்கு பதில் – வள்ளியை திருமணம் செய்ய கிழவன் ரூபத்தில்   முருகன் வந்து சேர,  இவள் பயந்து ஊட விநாயகர் யானை ரூபத்தில் வந்து  காப்பாற்றினார். . இந்த இடத்தில் முருகனுக்குப் பின்பு, விநாயகர் வந்ததால்,  முருகன் மூத்தோன் ஆகிறார்.

முருகா சரணம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Friday, 26 June 2026

கோடை நகர் வாழ வந்த பெருமாளே !!!!....

 

என்று அருணகிரிநாதர், வல்லக்கோட்டை முருகனை துதித்துப் திருப்புகழ் எழுதி இருக்கிறார்.

இந்தக் கோவில் கும்பாபிஷேகம் ஆகி  இன்று ஒரு வருடம் பூர்த்தி ஆகிறது. சம்வத்ஸரம். அதனால் கோடை நகர் முருகனைப் பற்றி......

இது சென்னையில் இருந்து ஸ்ரீ பெரும்புதூர்,- படப்பை, ஓரகடம் வழியாகச் செல்லும்போது, வழியில் அழகான பெரிய “போர்டு” உங்களை வரவேற்கும்.  கொஞ்சம் உள்ளே போனால்.... கோவில்

1500 வருட ஸ்தலம்.   வேலுக்கு மட்டும் தனியாக ஒரு சந்நிதி உண்டு. 

அற்புதமான கோவில். மூலவர் மிகவும் உயரம். ஒரு ஏழு அடி இருக்கும். வளர்ந்து கொண்டே இருக்கிறார். நான் நினைப்பதுண்டு. குருக்கள் “நேர் முகத் தேர்வு” பண்ணும்போது, ஆகம விஷயங்களைத் தவிர, உயரத்தையும் பார்க்கவேண்டும் என்று.  தலைக்கு மேல், "அயம் மே ஹஸ்தோ பகவான்" எல்லாம் பண்ண முடியாது

ஆறு முகங்களோடு, என்கண் மாதிரி ஒரு மூலவரும் உண்டு

“யாமிருக்க பயமேன்” என்று அபய ஹஸ்ததைக் காட்டி, முருகன் சொன்ன இடம் இதுதான் என்று ஒரு அற்புதமான சரித்திரம் உண்டு

வள்ளல் என்ற அசுரன், மிக அதிக வரங்களைப் பெற்று, தேவர்களைத் துன்பப்படுத்த, அவர்கள், முருகனிடம் முறையிட, அவர் இந்த அரசன்/அசுரனை அழித்துக் கோட்டையை கைப்பற்றிய இடம் தான் வல்லக் கோட்டை.  இன்னொரு சரித்திரமும் உண்டு.

அருணகிரியார் மைலாபூரிலும் பாடி இருக்கிறது. எப்படி போனார் என்று தெரியாது, இங்கும் பாடி இருக்கிறார்.

திருப்போரூரில் இருந்து, திருத்தணி போகும் வழியில் உள்ளது. அருணகிரிக்கு வல்லக் கோட்டை வா !  என்று முருகன் கனவில் சொன்னதாக ஒரு வரலாறு உண்டு

மூலவருக்கு எதிரில் இரண்டு மயில்கள் இருப்பது ஆச்சர்யம்.  இதைப் பற்றி அங்கு இருந்த குருக்களிடம் கேட்ட போது- “அசுரர்களை அழித்துக் காப்பது என்ற தொழிலையும், பக்தர்களை காத்து, அருளுவது என்ற இரு செயலையும் ஒன்றாகச் செய்பவர். ஒரு மயில் கொஞ்சம் உக்ரமாக இருக்கும், அது அசுர வதம், இன்னொன்று சாந்தமாக இருக்கும் – பக்த சம்ரக்ஷணம்”   

நான் கண்ட இன்னொரு விஷயம், மூலவர் மிகவும் அருகில். நாம் கோவிலுக்குப் போனோம் என்றால், மூலவர் எங்கோ உள்ளே இருப்பார்.  கற்பபூரம் காட்டும்போதுது கொஞ்சம் முகமும், பாதமும் தெரியும்.  இங்கு மூலவர் கிழக்கு நோக்கி இருப்பதாலும், நல்ல வெளிச்சம். பெரிய விக்ரஹம் ஆதலால் ஆனந்தமாக அபிஷேகமோ, தீபாரதனையோ மிக அருகில் பார்க்கலாம்

பாதிரி மரத்திற்க்குக் கீழே, இந்த திருவிளையாடல் புரிந்த முருகன்.

அருணகிரிநாதர், சென்னை வாழ் மக்களின் “பரிதாப” நிலையைப் புரிந்துகொண்டு ஒரு எளிமையான திருப்புகழ் ஒன்று பாடி இருக்கிறார். அவர் சொல்கிறார்

“அம்மாவின் உடலில் இருந்து கஷ்டப்பட்டு பிறந்து

ஆசையுடனே பிறந்து, நேசமுடனே வளர்ந்து, அழகான ஆண் மகனாகி,

உலகம் முழுது சுற்றி, கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டிகளை பெற்று, போதும் போதும் என்று பணம்  சேர்த்து –

இதே மாதிரி – “போகமதிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் உந்தன் பூ அடிகள் சேர அன்பைத் தருவாயே” என்று  எச்சரிக்கிறார் !!!”

இது ஒரு பாதி

அடுத்த பாதி= திருமால், சிவன், அம்பாள் அவருடைய வீரம் என்று திருப்புகழை முடிக்கிறார்.

திருப்புகழைப் படித்தால் – எல்லா கடவுளையும் ஒரு சுற்று வரலாம் என்பதற்கு உதாரணம் சொல்லும் – இன்னொரு திருப்புகழ்

இதை மாயா மாளவ கௌளையில்- ஸ்ரீ ராகவன சார் ;பாடியிருக்கிறார்.  Kaumaaram.com ல் கேளுங்கள். கண்களில் கண்ணீர் வரும்.

இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம். அன்னதானம். “பக்கத்தில் “RENAULT கம்பெனி தன்னுடைய CSR பணத்தின் மூலமாக, ஒரு அன்னதானக் கூடம் கட்டி, பாத்திரங்கள் வாங்கி, நிரந்தரமாக சமையர்காரர்களை போட்டு, நித்யம் அவர்கள் செலவில் அன்னதானம் செய்கிறார்கள்

 வரும் எல்லோருக்கும் சாப்பாடு உண்டு.

Monday, 8 June 2026

ஏன் கோவிலுக்குப் போக வேண்டும். ? ஏன் நமஸ்காரம் பண்ண வேண்டும் ?

 இப்போதெல்லாம் கோவிலுக்குப் போனால், நாம் உதட்டை தொட்டு ஏதோ செய்கிறோம். அல்லாது, நெஞ்சில் கையை வைத்து ஏதோ பேசுகிறோம். அல்லது குனிந்து தரையை தொட்டு விட்டு போகிறோம்.

இப்போது புது பேஷன், செருப்பைக் கூட அவுக்காம, கோபுர வாசலில் இருந்து ஒரு “பறக்கும் முத்தம்” கொடுத்து விட்டுப் போகிறோம். !!!!!

இதை விட கொடுமை என்னவென்றால்,  சுவாமி வீதி உலா வரும்போது, செருப்பு கூட அவுக்காமல்,  கற்பூரம் ஒத்திக் கொள்வது.  

தெரிஞ்சு செய்யும் பாபத்திற்கு பரிகாரம் கிடையாது !!!!

நம் முன்னோர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். நம்மை விட அவர்களுக்கு, பணம் கம்மி, வசதிகள் கம்மி, அடுத்த வேளை சாப்பாடு கேள்விக் குறி, பொழுது விடிஞ்சா, அஸ்தமிச்ச்ச்சா கவலை. ஆனால் அவர்கள் கோவிலுக்குப் போவார்கள். ஏதோ முடிந்த அன்ன தானம் செய்வார்கள். கோவிலுக்குப்  போனாலோ, வீட்டில் பெரியவர்களுக்கோ, நமஸ்காரம் பண்ணும்போது, “நெடுஞ்சாண்கிடையாக” விழுந்து நமஸ்காரம் செய்வார்கள்.  தம் உடல் முழுதும் தரையில் படும்படியாக.  சாஷ்டாங்கமாக.. 

மஹா பெரியவா சொல்லும் போது, “தண்டம்” சமர்பிப்பது என்று சொல்லுவார். தண்டம் என்றால் “கோல்” கையில் வைத்திருக்கும் கம்பு போன்றது. அதை விட்டால்

எப்படி கீழே விழுமோ அப்படி விழ வேண்டும் 

ஏன் எப்படி ?

முதலில் ஏன் கோவிலுக்குப் போகவேண்டும் ?  இது நிறைய பேருக்குத் தெரிவதில்லை. ஏதோ நெய் விளக்கு போடவேண்டும். வெள்ளிக்கிழமை அம்பாள், சனிக்கிழமை பெருமாள். நவஹ்ரகத்தைச் சுற்ற வேண்டும். ....இத்யாதி.

அது அல்ல காரணம்.  நம் எல்லா அவயவங்களும் சந்தோஷமாக இருப்பது கோவிலில் தான். உதாரணம். 

கோவிலுக்குப் போய் அம்பாள் அலங்காரத்தைப் பார்க்கிறோம். ஆஹா. தக தக என்று புடவை என்ன ? நகைகள் என்ன ? ஜொலிக்கிறாள்.  பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன ?  கண்ணுக்கு அழகு. அபிஷேகம் நடக்கிறது சிவனுக்கு. ஆஹா என்ன அழகு என்று மெய் மறந்து போகிறோம்

பக்கத்தில் ஒருவர். தேவாரமோ, ஒரு பாட்டோ பாடுகிறார்.  காதுக்கு இனிமை

நாம் “நமச்சிவாய வாழ்க, சுவாமி சரணம்” என்று ஸ்லோகம் சொல்கிறோம், நாக்குக்கு இனிமை.

கையெடுத்துக் கும்பிடுகிறோம். கைக்கு இனிமையாக இருக்கிறது.

ஒரு விளக்கு ஏற்றும்போது விரல்களுக்கு...

பிரகாரத்தில் நடக்கிறோம். காலுக்கு இனிமையாக இருக்கிறது.

கடைசியில் கொடி மரத்தில் நமஸ்காரம் செய்கிறோம். முழு உடலுக்கு இனிமையாக இருக்கிறது.

இந்த நமஸ்காரம் செய்யும்போது, முழு அவயமும் தரையில். ஏன் கொடி மரத்தில் ?

அந்த கொடி மரம், ;பல அதிர்வலைகளை ஏற்படுத்தும், “ஆன்மீக ஆண்டென்னா....”.  நாம் நமஸ்காரம் செய்யும்போது, அந்த அலைகள் நம் உடல் முழுதும் பாய்கிறது.  

அது மட்டுமல்ல ? எத்தனை பெரியவர்கள், மூதாதையர்கள், யோகிகள் இந்தக் கோவிலில் சுற்றி இருக்கிறார்கள். தரிசனம் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் நடந்த, நமஸ்காரம் செய்த இடந்தில் நாம் இருக்கிறோம் என்ற ஒரு நினைப்பே, நமக்கு உணர்ச்சி பூர்வமான தருணம்.

இதை நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்தால், அடுத்த தலைமுறை பக்தியால் காப்பாற்றப்படுகிறது.

இப்படி நம் உடல் முழுவதும் சந்தோஷமாக இருக்கும் வேறு ஒரு இடம் சொல்லுங்கள் பார்ப்போம் ?

 

 

 


Thursday, 4 June 2026

நான்கையும் பிடி, ஒவ்வொன்றாக விடு

 

குஞ்சு ஸ்வாமிகள் -ரமணர் இடையே நடந்த உரையாடல். அதன் மூலம் கிடைத்த உபதேசம்....

குருஜி. முரளீதர ஸ்வாமிகள் சொற்பொழிவின் ஒரு பகுதி - இது YOU TUBE ல் இருக்கிறது. கேட்கலாம். நான் எழுத்து வடிவில் தருகிறேன். அவ்வளவுதான்......

ரமண மகரிஷியிடம் சில விஷயங்களை நாம் கவனித்து இருக்கலாம். அவர் கண்ணை மூடிக்கொண்டு ஒரு போட்டோ விலும் இருக்க மாட்டார். யாருக்கும் உபதேசம் பண்ணமாட்டார். ஓரிரு வார்த்தைகள் பேசினால் அரிது.

குஞ்சு ஸ்வாமிகள், கேரளாவில் பிறந்து, திருவண்ணாமலை வந்து, பகவானிடம் எதாவது உபதேசம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். பகவானைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன், அவர் முதலில் எதை சொல்கிறாரோ, அதையே உபதேசம் என்று எடுத்துக் கொள்வது என்று முடிவு பண்ணினார்.

நாராயண தீர்த்தர், பெரும் வயிற்று வலியால் துடித்து, நடுக்காவேரியில் உள்ள பிள்ளையாரைப் பிரார்த்திக்க, கனவில், “காலை எழுந்தவுடன் எது முதலில் உன் கண்களில் படுகிறதோ, அதை தொடர்ந்து போ ! உன் வயிற்று வலி தீரும் என்று சொல்ல, அவர் காலையில் எழுந்து பார்க்க ஒரு வெள்ளைப் பன்றி ஒன்று நிற்க, அதை பின் தொடர்ந்து சென்று, பூபதிராஜபுரம் என்ற வரஹூரை அடைந்தார்.  பிறகு தரங்கிணி பாடினார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அது போல் குஞ்சு சுவாமிகளும், முதலில் அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் உபதேசமாக எடுத்துக் கொள்வது என்று தீர்மானித்தார்.

ரமண மகரிஷி இடம் வந்தவுடன் அங்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு கொட்டாங்கச்சியில் சூடாக கஞ்சி இருந்தது. அதை 4 நாய் குட்டிகள் சாப்பிட ஓடி வந்ததன. இதை பார்த்த குஞ்சு ஸ்வாமிகள் பதற,  பகவான், குஞ்சு சுவாமிகளிடம் “இந்த நான்கையும் பிடிச்சுக் கட்டு, ஒவ்வொன்றாக விடு” என்றார்.

சாதாரணமாக இந்த வரிகளைப் பார்க்கும்போது, நாய்குட்டி, சூடு கஞ்சி, குடித்தால் நாய்க்கு சுட்டுவிடும்... என்று தான் பார்ப்போம். ஆனால், குஞ்சு ஸ்வாமிகள் எவ்வாறு புரிந்து கொண்டார் ? 

ஜீவன் முக்தி அடைவதற்கு நான்கு நிலைகள்

பாராயணம்

ஜபம்

த்யானம்

ஆதம விசாரம்

நாம் எதை ஆழ்ந்து படிக்கிறோமோ, அதில் மனது லயித்துவிடும். நாம் வேதாந்த விசாரம் சம்பந்தமாக படிக்கும்போது. “உடல் நம்மது இல்லை. உடல் வேறு ஆத்மா வேறு. நீ மனசு இல்லை, அறிவு இல்லை” .....என்று அறிய - நிறைய வேதாந்த சமாசாரங்களை படித்துக் கொண்டே இருக்கவேண்டும். ராமனைப் போன்ற ஒரு ராஜா, ஒரு மனிதன், ஒரு சஹோதர பாசம், பணிவு, கருணை என்று ராமாயணத்தை படிக்கும்போது, நம் மனது பக்குவப்படும் – அதற்காக பாராயணம்.

ஊண் உறக்கமின்றி ஏழு நாள் ஸ்ரீ மத் பாவதம் கேட்டு முக்தி அடைந்த பரீக்ஷித் மகாராஜாவின் கதை கேட்கும்போது, மனது பக்தி மார்கத்தில் பக்குவப்படுகிறது – அதற்காக சப்தாக பாராயணம். ஒரு ராஜா “எழு நாட்களில் பாம்பு கடித்து இறக்கப் போகிறாய்” என்று தெரிய வர, உடனே, மோக்ஷ சாதனத்தை தேடுகிறான். எத்தனை பேருக்கு இந்த தெளிவு வரும் ?

கந்த சஷ்டி கவசம், விஷ்ணு சஹஸ்ரநாமம்,  லலிதா ஸ...எல்லாமே பாராயணம் தான் ..

அதனால் பாராயணம். ஏனெனில், மனது பல பிறவிகளில், உலகத்தோடு போய் பல விஷயங்க ளை உள் வாங்கிக்கொண்டு திரும்ப மாட்டேன் !!!! என்கிறது. அது திரும்பனும் என்றால் பாராயணம் மூலம் ஸ்திரப்படுத்தவேண்டும்.  

அடுத்தது ஜபம் – ஒரே மந்த்ரம். அதையே திருப்பி திருப்பிப் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும். (உ.ம்)  ராம நாம ஜபம் பண்ணிக்கொண்டே இருப்போம் என்று வைத்துக்கொள்வோம்.  ஒரு 10 நிமிடம் கழித்து, ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே என்று ஆரம்பித்து.  இன்னுமொரு 30 நிமிடம் கழித்து, நமச் சிவாயா அன்று குழப்பிக்க கூடாது. இதில் இருந்தே என்ன தெரிகிறது, “மனது சஞ்சலப்படுகிறது” என்று. ஏனெனில், சஞ்சலம் இல்லாமல் இருக்கத்தானே ஜபம். ?!! ஒரு ஜபத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, அதை எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். கோடி ராம நாமம் ஜபித்த, ஸத்குரு த்யாகராஜருக்கு, நேரே “வைதேஹி சஹிதம், ஆஞ்சநேயரோடு, ராம லக்ஷ்மணர்கள் காட்சி கொடுத்தார்கள். இது ஏதோ 1000 வருஷங்களுக்கு முன்பு இல்லை  200 வருடங்களுக்கு முன்பு, திருவையாறில்... 

அடுத்தது, த்யானம். மனதை அமைதியாக வைத்துக் கொள்வது. முருகப் பெருமான் அருணகிரிநாதரை காப்பற்றி, “சும்மா இரு, சொல் அற” என்று உபதேசம் செய்து விட்டு மறைந்து விட்டார். 

சும்மா இருப்பது அவ்வளவு எளிதா என்ன ? தவிக்கிறார். உருகுகிறார்.

அதை பாடலாகவே சொல்கிறார்:

சரண கமலாலயத்தை அரை நிமிட நேரமட்டில்

தவ முறை த்யானம் வைக்க அறியாத

சட கசட மூட மட்டி, பவ வினையிலே ஜெனித்த.

தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ !!!!

என்று திருப்புகழில் பாடுகிறார்.

நமக்கும் அதுதான். மனது அடங்காது. சிந்தையை அடக்கியே சும்மா இருத்தல் மிக அரிது. என்று தாயுமானவர் கூறுகிறார்.

அடுத்தது ஆத்ம விசாரம். நாம் ஏன் பிறந்தோம்.: ? நல்ல கதி அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் ? தப்பான வழியில் போனவர்களின் கதி  என்ன ஆச்சு ? என்ற பல பேர்களின் மூலம் இந்த ஜென்மத்திலேயே நமக்கு பகவான் காண்பித்துக் கொடுக்கிறான். அதை வைத்து நாம் கற்றுக் கொண்டு இந்த ஜன்மம் கடைத்தேறுவதர்க்கு உண்டான உபாயங்கள். !!!

நாம் எதிரில் உள்ளவர்களைப் பற்றி அறிவதற்கு பெரும் முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறோம். அதில் பல முறை தோல்விதான். ஆனால், முயற்சியை கை விடுவதில்லை. அதற்க்கு, முன்பு, உன்னை உள்ளே சுய பரிசோதனை செய்ய வேணும். நான் யார்.. என்று, !!!!

மேற்கூறியவற்றை, பண்ணிக் கொண்டே வா ?  உனக்கு ஜபம் வந்துவிட்டதா. ரொம்ப ஈசியாக ஜபம் உள்ளே உட்காருகிறதா ? அப்போ பாராயணத்தை விட்டுவிடு.

பிறகு, ஏகாக்ரமா, ஒரே நினைவோடு மனது இன்னும் ஒன்றிப் போய் ஒரு சமாதி நிலை போன்று மனது லயிக்கிறதா !! த்யானம் சித்திக்கத் தொடங்கி விட்டது. அப்போ ஜபத்தை விட்டுவிடு.

த்யானம் என்பது மூன்று வகை. த்யானம் பண்ணும் அந்த பொருள். த்யானம் பண்ணும் முறை, த்யானம் பண்ணும் நான்.......உதாரணம் – நான் கிருஷ்ணரை த்யானம் பண்ணுகிறேன். அதை பண்ணும் முறை (process)   பண்ணும் நான்.

இந்த மூன்றும் ஒன்று சேர்வதுதான் சமாதி. சகஜம். இந்த நிலை வந்துவிட்டதா. த்யானத்தை விட்டுவிடு.

இதுதான், நான்கையும் கட்டு, ஒவ்வொன்றாக அவிழ்த்து விடு.....

நான்கு நாய்க்குட்டிகளை வைத்துக் கொண்டு பகவன் ரமணர் சொன்ன உயர்ந்த விஷயம் இது. .......இதை விட எளிதாக விளக்கவே முடியாது.

இந்த நான்கில், பாதியில் நாம் இருந்தோமென்றால், அடுத்த ஜன்மத்தில் மற்றதை முடிப்போம். ஆக ஜன்மம் நிச்சயம்.

ஏன் இவ்வளவு வழி முறைகள், என்றால் நாம் LKG, UKG படிக்கும்போதே என்னவாக ஆக வேண்டும் என்று மனதில் ஒரு சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும்....

அப்போ கோவிலுக்கு போக வேண்டாமா ? 

கோவில், சிலைகள் என்பது பக்தியின் ஆதாரம். ஒரு பிள்ளையார் இப்படி இருக்கிறார், முருகன் இப்படி, தக்ஷிணாமூர்த்தி, பெருமாள் இவர்கள் எல்லோரையும் பார்த்து, மனதில் அந்த சிலா ரூபத்தைப் பதித்தால் தான், மேற்கூறிய நான்கும் நமக்கு வரும்.  இது தான் எல்.கே.ஜீ, யூ கே ஜீ.

இல்லாவிட்டால், யாரை நினைத்து த்யானம் செய்வது ?

கோவிலில் போய் ஸ்வாமியே மனம் உருக பிரார்த்திக்கலாம். இந்த புடவை அம்பாளுக்கு அழகா இருக்கே ? எங்க வாங்கி இருப்பார்கள் என்று யோசிக்கலாம். வாசலில் போட்டு வந்த புது செருப்பு, பத்திரமாக இருக்குமா ? என்று யோசிக்கலாம். இல்லாவிட்டால், சுவாமியை கவனிக்காமல் யாருடனோடு அரட்டை அடிக்கலாம்......

இது தான் ஆரம்பம்.... நமக்கே தெரியாமல் பக்திக்கு அச்சாரம் கோவிலில் போடுகிறோம். அதனால் தான் கோவிலுக்குப் போகவேண்டும்.

குஞ்சு ஸ்வாமிகள் ஒரு முறை, பகவானுக்காக, சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்தார். கொடுத்தவர், ஒரு டப்பாவில் போட்டுக் கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு வரும்போது, சேஷாத்ரி சுவாமிகளைப் பார்த்தார். அவர், கேரளாவில் இந்த கிராமமா ?  கிடாரங்கா ஊறுகாயா ? 100 வயது, மோக்ஷம் கிட்டும்” என்று சொன்னார்.

குஞ்சு சுவாமிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பகவானிடம் வந்து அந்த டப்பாவைத் திறந்தால், அதில் கிடாரங்காய் ஊறுகாய் இருந்தது. இவர் கேரளாவில் இருந்த ஊரையும் சரியாகச் சொன்னார்.  இதை பகவானிடம் கேட்டபோது, சேஷாத்ரி சுவாமிகளுக்கு “தெரியாதது ஒன்றுமில்லை” என்றார் பகவான். குஞ்சு ஸ்வாமிகள் 100 வயது வரை வாழ்ந்தார் ..

கடைசியில்”

ஒருவர் ரமணரிடம், நான் சரீரத்தை போஷிக்க வேண்டாமா ? என்று கேட்டார். அதற்க்கு ரமணர் சொன்னார். “நீ ஒன்னும் போஷிக்க வேண்டாம். உன்னுடைய பிராரப்தம் அதைச் செய்யும். இந்த ஜன்மமே நீ போன ஜனமத்தில் செய்த பாபம் புண்ணியத்தில் பலன் தான். நீ இந்த ஜன்மத்தில் புண்ணியம் செய். அது போதும் என்றார்.

Saturday, 30 May 2026

தீட்சிதர் தேன் துளிகள் - 5- விஸ்வாமித்ரர்

 

விஸ்வாமித்ரரை பல கோணங்களில் நாம் படித்து இருக்கிறோம். க்ஷத்ரியராக இருந்து தன் தபஸால் “ப்ரஹ்ம ரிஷி” யானவர். ஒரே ஜன்மத்தில் இப்படி ஒரு கீர்த்தி அடைந்தவர் யாரும் கிடையாது.

தீக்ஷிதர் கோணத்தில் இவரைப் பற்றிய தேன் துளிகளைப் பருகலாம்

தசரதர் அரண்மனைக்கு வருகிறார். தான் யாகம் பண்ணுவதற்காகவும், யாகத்தை கெடுக்கும் அசுரர்களை அழிக்க ராமனை அனுப்ப வேண்டுகிறார். “நான் சகல ஸ்ரேயசையும் தருகிறேன். “என்னை நம்பி அனுப்பு. நான் யாகத்திற்காக சில நியமங்களை வைத்திருக்கிறேன். நான் போர் புரிய முடியாது., அதனால் ராமர் வேண்டும்” என்று கேட்கிறார்

தசரதன் கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடிக்க, குல குரு வான வசிஷ்டர் வேண்டிக் கொள்ள, ஒரு மனதாக – லக்ஷ்மணனோடு அனுப்பிகிறார்.

விஸ்வாமித்ரர் – அழைத்துக் கொண்டு போகிறார். பலா-அபலா- என்ற மந்த்ரம் எடுத்து வைக்கிறார். அம்பை விடுவதற்கும், விடுத்த அம்பை திரும்பி எடுப்பதற்கும் மந்த்ரம், அகஸ்தியரிடம் இருந்து விசேஷ அஸ்தரங்கள். அகலிகை சாப விமோசனம். பல உப கதைகள், பகீரதன் கங்கையைக் கொண்டு வந்தது, ஸ்கந்த ஜனனம் போன்ற பல. தன் யாகத்தைப் பூர்த்தி செய்கிறார்.  மிதிலைக்குப் போகிறார், ஜனகள் பெண் சீதையை பிடித்து, ராமர் கையில் ஒப்படைக்கிறார்.

“போயிட்டு வரேன் ராமா ! என்று விந்திய மலையை நோக்கிச் செல்கிறார். அதன் பிறகு, பட்டாபிஷேகம் வரை ஒரு இடத்தில் கூட ஏன்- ராமர் பட்டாபிஷேகம் போது கூட -சம்பந்தா சம்பந்தம் இல்லாத ரிஷிகள் வந்திருந்தார்கள் - ஆனால் விஸ்வாமித்ரர் – தென்படவே இல்லை.

விச்வாமித்ரரோ, நடுவில் வந்து “என்ன ராமா ! “ஞாபகம் இருக்கா, நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேனே, கொஞ்சம் இது பண்ணி கொடு, அது பண்ணி கொடு” என்று கேட்டதாக இல்லை. ராமரும், சீதையைத் தொலைத்த பின், ஆஞ்சநேயரைப் பார்த்து, கொஞ்சம் தெற்கே போகாமல், வடக்கே போய், விஸ்வாமித்ரரைப் பார்த்து, “நீங்கள் கல்யாணம் பண்ணிக் கொடுத்த சீதை காணாமல் போய் விட்டாள். கொஞ்சம் கண்டு பிடிக்க “க்ளூ” கொடுங்கள்” என்று கேட்கவும் இல்லை.

“நான் நிறைய பேருக்கு நிறைய செய்தேன். என்னை யாரும் மதிக்க வில்லை. நன்றி கெட்ட உலகம். என்று புலம்பும் நிறைய பேருக்கு இது பாடம்.

இது மிக உயர்ந்த ஒரு எண்ணம். நாம் உதவி செய்துவிட்டு அதை மறந்து விட வேண்டும். “ஏன் அடிக்கடி வந்து உயிரை வாங்கறான்” என்று உதவி பெற்றவர்கள் நினைக்க,  உதவி பெற்றவர்களும், அதற்கு பிரதி உபகாரம் முடிந்தால் செய்யலாம் ஆனால் - படுத்தக் கூடாது. “செய்நன்றி கொன்ற மகற்கு” எல்லாம் சரிதான்.

திரும்பி விஸ்>

ஏன் விஸ்வாமித்ரர் அப்படி செய்தார் என்பதை ராமாயணத்தை கூர்ந்து படித்தவர்களுக்குத தெரியும்.  சூரிய வம்சத்தில், ராஜா ஹரிச்சந்த்ரனை படாது பாடு படுத்தி, அவனை மனைவியிடம் பிரித்து,  அவனை கஷ்டப்படுதியதற்கு, பிரதி பலனாக, ராமனுக்கும் சீதை க்கும் கல்யாணம் பண்ணி புண்யம் கட்டிக் கொண்டார் !!!

ஹரிச்சந்த்ரன் கதையை தீட்சிதர் சொல்லும் அழகே தனி

ஒரு முறை, வஸிஷ்டரிடம், இந்திரன், இந்த உலகத்திலேயே ஸத்யவான் என்று சொல்லக்கூடிய ஒரு மனிதன் இருக்கிறானா ? என்று கேட்க. வசிஷ்டர், என்னுடைய சீடன் அரிச்சந்திரன் ராஜாவாக சூர்ய வம்சத்த்தை ஆண்டு கொண்டிருக்கிறார். அவர் சத்தியம் நேர்மை தவறாதவர். என்று கூற, கூட்டத்தில் இருந்து,, தப்பு, தப்பு -வசிஷ்டர் சொல்வது தப்பு என்று ஒரு குரல் கேட்டது.

பார்த்தால், விஸ்வாமித்ரர் கூட்டத்தில் இருந்து வெளியில் வந்தார். அவருக்கு வசிஷ்டர் என்ன சொன்னாலும் மறுத்து பேசவேண்டும் என்ற ஒரு “கொள்கை” வைத்து இருந்தார். அதனால் அரிச்சந்திரனைப் பற்றி சொன்னது தவறு என்று சொன்னார்.  அவன் ஒன்றும் ஸத்ய ஸந்தன் இல்லை. என்றார்...

இந்த விவகாரம் போய் கொண்டே போனது. கடைசியில், அரிச்சந்திரனை பொய் பேச வைத்தால், வசிஷ்டரை, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஏற்ற வேண்டும், என்றும், கடைசி வரை உண்மையே பேசினால், விஸ்வாமித்ரருக்கு அந்த “மரியாதை”. என்றும் முடிவாயிற்று

விச்வாமித்ரர் அரிச்சந்த்ரனை சந்தித்து தன் வேலையை காட்டத் துவங்கினார். செல்வச் செழிப்புடன் இருந்த அரிச்சந்திரனைப் பார்த்து “ நான் யாகம் செய்யப்போகிறேன், அதற்க்கு “மலை அளவு” செல்வம் வேண்டும் என்று ஆரம்பித்து, அந்த நாட்டில், தன் தபஸால், பஞ்சம் வரும்படி செய்தார். 

அரிச்சந்திரன், வேறு வழியில்லாமல, விச்வாமித்ரருக்காக வைத்திருந்த செல்வத்தை செலவு செய்ய, கரெக்டாக வந்து, “வாக்கு தவறிவிட்டாய்” என்று சொல்லி, ராஜா, நாடு இழந்து, மனைவி இழந்து, கடைசியில் காசியில் “பிணம் எரிக்கும் “வெட்டியானாக” வேலை செய்யும் அளவுக்கு, அவனை “த்வம்ஸம்” செய்தார்.

தான் பெற்ற மகனே “உயிரிழந்து” வந்த போது கதறுகிறான். அப்போது கூட பொய் சொல்லவில்லை.

எந்த நிலையிலும் பொய் சொல்லக்கூடாது என்று ஸத்ய சந்தனாக வாழ்ந்த ஒரு ராஜா.

இப்போது கூட நாம் காசி போய் “அரிச்சந்திரா காட் (Ghat)”  என்று சொல்லும் அந்த இடுகாட்டில் சென்று ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் நமக்குக் கண்ணீர் வரும். எப்படி இருந்த ஒரு ராஜா, பொய் சொல்லமாட்டேன் என்று ஓரு வைராக்யத்தினால், படாத பாடு படுத்தப்பட்டார்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் “பிரச்னை வஷிஷ்டருக்கும், விச்வாமித்ரருக்கும் தான்., தேவையே இல்லாமல் அரிச்சந்த்ரனை மாட்ட வைத்து......

இப்போது, அரிச்சந்திரன் கேஸ் போட்டால்,  கீழ் கோர்ட்டிலே தள்ளுபடி செய்து,  ராஜாவை நாட்டிற்கும், ரிஷிகளை "சமத்தா தபஸ் பண்ணுங்கள்" என்று காட்டிற்கும் அனுப்பி இருப்பார்கள்.....

கடைசியில், வ்ருஷபா ரூடராக...பார்வதி, பரமேஸ்வராள் காட்சி கொடுக்க, சிரஞ்சீவியாக இன்றும் அரிச்சந்திரன் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

கடைசியில் என்ன வரம் வேண்டும் என்று ஈசன், அரிச்சந்திரனைக் கேட்டார்.

இப்படி ஒரு சம்பவம் நம் வாழ்வில் நடந்து, அட... நம் உண்மையே பேசி, கடைசியில், ஈசன் நம்மிடம் இந்த கேள்வியை கேட்டால். ?!!!!

“கையை பலம் கொண்ட மட்டும், இறுக்கி கொண்டு நம்மைக் காயப்படுத்திய அந்த நபரை.....ஒரே.........:  “....து”

அனால் அரிச்ச்சந்திரன் சொன்னார்.  “எந்த நிலையிலும், விஸ்வாமித்ரருக்கு “”கழுதை ஊர்வலம் வேண்டாம்” என்று சொன்னார். “அவர் பெரிய ரிஷி. ஏன் பிராரப்தம் நான் அனுபிவிக்கிறேன். அவரை விட்டு விடுங்கள்” என்றார்.

இப்படியும் நம் நாட்டில் அரசர்கள் இருந்திருக்கிறார்கள்.

அதனால் தான் ராமன், ராவணனை, இன்று போய் நாளை வா என்றார். ....

எந்த நிலையிலும தன் நிலை மறக்காமல் ஒரு குணம்.......