இந்த வருட ஸ.க விருது வீணை ஜெயந்தி குமரேஷ் அவர்களுக்கு
கொடுத்ததின் மூலம் சங்கீத வித்வத் சபை, ஒரு விதத்தில், பிராயச்சித்தம் செய்து
விட்டது என்று சொல்லல்லாம்.
கொஞ்சம் வீணை பற்றி:
சரஸ்வதி வீணை என்று வழங்கப்படும் தென்னிந்தியா வீணை. சங்கீத
வித்வத் சபை, லோகோ (logo) வில் இருக்கும்
ஒரு வாத்தியம்.
மாணிக்க வீணாம்”” என்று காளிதாசன் நேரே அம்பாளைப் பார்த்து
பாடிய வாத்தியம்
ஏன் வீணை என்று AI ஐ தேடினால் அற்புதமான விளக்கங்கள் கிடைக்கும். வேண்டுமென்றால் தேடிப்
பார்க்கவும்
சபாவுக்குச் சென்று கேட்பதற்கு முன்பே, இரண்டு ரெகார்ட் (Record Player – Record), 45 RPM. அதில் சிட்டிபாபு அவர்களின் ஒரு ரெகார்ட்
அடிக்கடி கேட்டு இருக்கிறேன். ஒரு ஹம்சனாதமும், குந்தலவராளி யும். அவர் அழகாகவேறு
இருப்பார், அந்த கவரில்.
இரண்டாவது, எஸ். பாலச்சந்தர், மேலே பார்த்துக்கொண்டு
வீணையுடன் உட்கார்ந்து இருப்பார். அவருடைய பல வாசிப்புகள் அசர வைப்பவி. எப்படி
மாலியை புல்லாங்குழலில் இருந்து பிரிக்க முடியாதோ, அது போல், அவருடைய ஒரு lec-dem கூட கேட்டிருக்கிறேன்.
வீணையும் நாதஸ்வரமும் எனக்கு மிகவும் பிடித்த வாத்தியம்.
நல்ல வித்வான் வீணை வாசித்தாலே மனம் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
இப்போது இருக்கும் ரமணா பாலச்சந்திரன் என்ன வாசிப்பு, அட
அட. நம் சங்கீதக்காரர்கள் பாக்கியம் செய்து இருக்கிறோம் நிச்சயமாக
போன சீசனில் கூட, மியூசிக் அகாடெமியில், காலை ஒரு வீணை
கச்சேரி கேட்டேன். மிகவும் அருமை. ரஞ்சனி ராகம் தனம் பல்லவி. பின்னி எடுத்தார்.
இப்போது இவர்:
வீணை என்ற ஒரு வாத்யம்தான், நாதம், லயம் இரண்டையும் கையாளக் கூடியது.
8 வது படிக்கும்போதே வீணை வாசிக்க தொடங்கிவிட்டார்
வீணை வாசிப்பில் பல பாணிகளின் ஒப்பீடு என்னும் தலைப்பில் ஆராய்ச்சி
செய்து முனைவர் பட்டம் வாங்கயிருக்கிறார்.
வாசிக்காத மேடை இல்லை. போகாத நாடு இல்லை. ஆத்மார்த்தமான வாசிப்பு
இரண்டு வீடியோ நீங்கள் பார்த்தே ஆக வேண்டும். ஒரு
ஜெ.குமரேஷ் உடன் ஜாகிர் உசேன் வாசிக்கும் காபி ராக ஸ்வர பிரசாதம். இரண்டாவது
மாண்டலின் ஸ்ரீநிவாஸ், திருவையாரு
உற்சவத்தில், ஜாகிர் உசேனுடன் வாசிக்கும் சாருகேசி.
.எனக்கு முன்னமே சொன்னாற்போல், எஸ். பாலச்சந்தர் என்ற ஒரு
இரு முகம் கொண்ட கலைஞனை மிகவும் பிடிக்கும். மிகச் சிறந்த டைரெக்டர், மிகச் சிறந்த
வீணை வித்வான். டைரக்டர் ஸ்ரீதர் தன் படங்களில் புதுமைகள் புகுத்தும் முன்பே இவர்
பல சாதனைகளை செய்திருக்கிறார்.
எஸ். பாலச்சந்தரை இவர் குருவாகக் கொண்டது மிகவும் உசத்தி.
“என்ன வாசிக்கலாம்” என்று ஒரு கச்சேரியில் எஸ்.பாலச்சந்தர்
ஜெயந்தி குமரேஷைக் கேட்டார். வர்ணத்திலிருந்து தொடங்குவது மரபு என்பதால், நவா வர்ண
மாலிகை வர்ணம் என்று சொல்ல, எஸ். பாலச்சந்தர், ஒன்பது ராகங்களில், ஆலாபனை, தானம், ஸ்வரப்ரஸாதம் என்று மூன்று மணி நேர
கச்சேரி, ஒரே வர்ணம் ஆக்ரமித்துக் கொண்டுவிட்டது.
ஜெயந்தி குமரேஷ், மிருதங்கம் போன்ற பக்க வாத்தியங்கள்
எதுவும் இல்லாமல் நாற்பத்தைந்து ராகங்கள் தானம், ஸ்வரப்ரசாதம் மட்டுமே அடங்கிய
முழு கச்சேரி செய்து இருக்கிறார்.
வாய்ப்பாட்டுக்கு நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள். வீணைக்கு
அத்தனை பேர் இல்லை. நீ வாய்ப்பாட்டை விட்டு விட்டு முழு மூச்சாக வீணையில்
ஈடுபடவேண்டும் என்று எஸ். பாலச்சந்தர் கேட்டுக் கொண்டதன் பேரில்- இன்று நமக்கு ஒரு
சங்கீத கலாநிதி.
கடைசியாக:
சங்கீத கலாநிதி கொடுத்தும் சில பேரை ப்ரைம் ஸ்லாட் 4
PM – 9.15 PM ல் பாட வைத்து படுத்துவது என்று ஸ.வி.சபை உறுதியாக
இருக்கிறது. இன்னும் சுதா ரகுநாதன், சௌம்யா பாடிக் கொண்டிருக்கிறார்கள். வரும்
வருடம் 100 வயது கொண்டாடப் போகிறது.
மிகவும் உசத்தியான கௌரவம் பெறும் ஜெயந்தி குமரேஷ்
அவர்களுக்கு வாழ்த்துக்கள்.