Friday 29 March 2013

ஆத்மா வேறே. மனஸ் வேறே.

வாழ்க்கை என்று எதைச் சொல்கிறோம்? சாப்பிடுவது, கல்யாணம் பண்ணிக் கொள்வது, குழந்தை குட்டி பெற்றுவது, படிப்பது, ஸம்பாதிப்பது, ஊர் ஊராய் ஓடுவது, பாட்டு கேட்பது, சினிமா பார்ப்பது, நாவல் படிப்பது என்று இப்படி அநேக கார்யங்களைப் பண்ணுவதைத்தான் வாழ்க்கை என்றும் ஜீவனம் என்றும் சொல்கிறோம்

. இந்தக் காரியங்களில் நம்மை செலுத்துவதாக அநேக எண்ணங்கள் இருக்கின்றன. இந்த எண்ணங்களையெல்லாம் பிறப்பிப்பது மனஸ். கார்யங்களில் நம் இந்த்ரியங்களை ஏவுவதும் அதுதான். ஆகையால் தனி ஜீவன் என்கிறவனின் ஸாரமாகத் தோன்றுகிற ஜீவனம் என்பதே மனஸை ஸென்டராக வைத்து நடத்தப்படுவதுதான். எண்ணத்தினாலும் கார்யத்தினாலும் உருவாகிற ஜீவனம் என்பது எண்ணமும் காரியமுமில்லாத ஆத்மாவைக் குறித்ததாக இருக்க முடியாதுதானே?

ஆக, என்ன முடிவுக்கு வருகிறோமென்றால், ஃபிலாஸஃபி முடிவில் நாம் எந்த முடிவுக்கு வந்தாலும் சரி, லோகத்திலே ஜீவனம், ஜீவத்வம் என்றால் அவை மனசை வைத்துத்தான்! ஆகையால் “நான் ஜீவ ஜகத்தில் இல்லை’ என்று பகவான் அடித்துச் சொல்கிறபடி ஆத்மா ஜீவ பாவத்தில் இல்லை என்றால், அது மனசிலே இல்லை என்றே அர்த்தம்.
ஆத்மா மனசிலே இல்லை என்றால் ஆத்மா வேறே. மனஸ் வேறே. ஆத்மாவுக்கு வேறாக மனஸ் இருக்க வேண்டும். ஆத்மாவுக்கு அந்நியமாக, இரண்டாவதாக த்விதீயமாக இருப்பதே மனஸ் என்றாகிறது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்



Sunday 24 March 2013

On those we depend

Devdutt Patanaik-"Iam always impressed by his article as it connects Management theory with our Religion

n Puri Temple, Orissa, every year when the chariot is made from the wood of a sacred tree, worship is offered to the tree, the instruments that will be used to carve the tree and the carpenter who will turn the tree into the chariot. Even in household rituals, before the deity is worshipped, prayers and offerings are made to the implements of worship like the bell, the pot, the conch-shell, and the lamp. Thus every link in the chain is worthy of worship. Does this make Hindus monotheists or polytheists?

This question confronted 19th century Orientalists when they first translated Vedic hymns. They noticed that each hymn of the Veda evoked different gods, like the Greeks, but each time the deity being invoked was being treated as the one supreme god, like the Christians. This confused them.

Some suggested Hindus were henotheistic; they worshipped only one god but acknowledged the existence of others. Max Mueller came up with the term kathenotheistic, which means every god was treated as the supreme god turn-by-turn at the time of invocation. In other words, context determined the status of the god. In drought, Indra who brought rains was valued. In winter, Surya, the sun, was admired. In summer, Vayu, the wind, was worshipped. So it is in business. Everybody we deal with in business is important. But importance soars as our dependence on them increases. Importance is a function of context, which makes all businessmen followers of kathenotheism.

Sivakumar owns a small company that makes spare parts for cars. The business has been growing well. Sivakumar allocates one day a week with every department. Monday is for sales & marketing, Tuesday is for logistics, Wednesday is for production, Thursday is with finance, Friday is with human resources, Saturday is with admin and all contract workers. When asked by his secretary why he scheduled his day so, he said, “Each one of them contributes to my success. So I give each of them value by devoting an hour each day for each department. Every department matters, and every department is special. If I focus only on one department, the others will feel neglected and even negative, which I do not want. By valuing all of them, I ensure no hierarchy is created. Each one is important in their own way. The business depends on all of them.”

Rakesh who is Sivakumar’s main rival in the market, has a different strategy. For him customers are god and everything and everyone in the company is geared to satisfy the customers. He values the customer-facing department more than the rest. This ensures great revenue and clarifies the value of customers.
Both Sivakumar and Rakesh do well in the market. Both make profits. But their approach to managing their teams is very different. Sivakumar follows the model of katheotheism: there are many gods, each valued depending on context. Rakesh follows the model of monotheism: there is only one God, the customer.

பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்புக் கணிதம்..!

செயற்கைக்கோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .

பண்டைய வானவியலில் ஒரு நாளினை 60 நாழிகையாகப் பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாழிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்குக் கிடைக்கும் நிமிடங்கள்
24*60=1440 ஆகும் .

வருடத்தின் சில நாட்களில் பகல் நீண்டு இருக்கும் சில நாட்களில் இரவு
நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து
இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைக்கோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டுக் கூறியுள்ளனர்

ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலை முதன் முதலில்
உலகிற்குக் கூறினான்.

சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்

“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி “


சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு
நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்

ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள
வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல் நீடிக்கும்

ஐப்பசிக்குப் பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்குப்
பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில்
இரவு நீடிக்கும்

பாடலின் கடைசி வரி " விடுபூ முடி " மிக மிக முக்கியமான வரியாகும் இந்த
வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது இந்த வாக்கிய கணித முறை தான் சோதிடவியலுக்கு
அடிப்படையானதாகும்.

வாக்கியக் கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து
கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

பகல் நீட்டிப்பைக் காண
வி - டு - பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளை எடுத்துக்கொள்வோம்

வி என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி

இது போலவே வி - டு - பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளைக் கொண்டு
இரவு நீட்டிப்பு மாதங்களுக்குக் கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்

மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை
வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே

வ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்

இது போல வி - டு - பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல் எழுத்து முதல்
கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது

பகல் நீட்டிப்பு

வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்

இரவு நீடிப்பு

கார்த்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருப்பது எப்படி?

ஒருவர் ஒரு நாளில் சிறிது நெரம் செய்யும் தியானப் பயிற்சி அவருக்கு அளவிட முடியாத சந்தோசத்தை மகிழ்ச்சியைத் தருகிறது என்றால் அது மிகையாகாது. மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் கோபம், எதிர்பார்ப்பு, கவலை, ஆதங்கம் இவையெல்லாம் மிகவும் சகஜம். ஆனால் இவையெல்லாம் ஒரு அளவிற்கு மேல் சென்றால் அதுவே அவனுக்கு மிகப் பெரிய வியாதி. இவைகள் எல்லாம் மனிதனின் உணர்ச்சிகளின் வடிகால்கள். இந்த உணர்ச்சிகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் ஒரு எல்லைக்குள் வைத்திருக்கும் ஒரு அற்புதமான கருவிதான் தியானம்.

மருத்துவ உலகமே ஒத்துக் கொள்ளும் ஒரு உண்மை என்னவென்றால்  ஒரு நாளையில் சிறிது நேரம் செய்யப்படும் தியானப் பயிற்சியினால், மனிதர்களின் உணர்சிகளின் வெளிப்பாடுகளான கோபம், கவலையினால் உண்டாகும் வியாதிகளில் இருந்து பாதுகாப்பது மட்டும் அல்லாது உணமையான சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது அல்லது இருக்கும் சந்தோசத்தை அதிகரிக்கின்றது என்பதுதான். 


அடிக்கடி கோபப்படுதலும், கவலைப்படுதலும் நாளடைவில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் ரத்தக் கொதிப்பு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் ஆளாக நேரிடும். இன்னும் சிலருக்குப்  புற்று நோயும் உண்டாகுவதற்க்கும் வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் மருந்து மாத்திரைகளுக்குக் கட்டுபடாத வியாதிகள் கூடத் தியானப் பயிற்ச்சிக்குக் கட்டுப்பட்டு நிவாரணம் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரு மனிதனுக்குச் சொத்து சுகம் இல்லையென்றாலும் வியாதிகள் இல்லாமல் இருந்தால் அதுவே அவனுக்கு கிடைக்கும் மிகப் பெரிய சந்தோசம் மகிழ்ச்சி. .   

கடந்த கால நினைவுகளையோ அல்லது எதிர் கால நிகழ்வுகளை நினைத்துக் கவலைப்படாமல் இன்று என்ன நடக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் நினைக்கச் செய்து மனத்தினைத் தேவையில்லாமல் கவலைப்படச் செய்யாமல் இருந்தாலே அதுவே அவனுக்கு மிகப் பெரிய சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும்  தரும். அந்த சந்தோசத்தைத் தியானம் மட்டுமே கொடுக்கவல்லது என அனுபவித்தவர்கள் கூறுகின்றனர்.  அது மட்டும் அல்லாது அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சந்தோசமாகவும் மகிழ்ச்சியுடனும்  வாழலாம்.  

பெரும்பாலான வியாதிகளுக்கு மூல காரணமே ஒருவருடைய நினைப்புத்தான். அங்கு இங்கு என்று சுற்றித் திரியும் மனதைத் தியானம் தொடர்ந்து செய்வதின் மூலம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அப்படிக் கட்டுக்குள் வைத்திருக்கும் போது சந்தோசமும் மகிழ்ச்சியும் உண்டாகும். மனதினால் தேவையில்லாத நினைவுகளினால் உண்டாக்கப்படும் வியாதிகளையும் தடுத்து நிறுத்தலாம் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். 

தியானம் ஒரு மனிதனைச் சரியாக சிந்தனை செய்ய வைக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. மனித சிந்தனை சரியாக இருக்கும் போது அங்கு தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடம் இல்லை. தேவையில்லாத சிந்தனைகள் இல்லாத பட்சத்தில் அங்கு மகிழ்ச்சி நிலவும். உடம்பில் தேவையில்லாத
வியாதிகள் குடியேறுவதற்க்கும்  வாய்ப்பு இல்லை அதனால் உடல் ஆரோக்கியத்திற்க்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இல்லை.

ஒருவர் எதற்கு எடுத்தாலும் கோபப்படும் மனப்பான்மையை விட்டார் என்றாலே அவருக்கு சந்தோசத்திற்ககும் மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இல்லை. ஒருவருடைய கோபத்திற்க்கு மூல காரணமே உணர்ச்சிகளுக்கு இடம் கொடுப்பதுதான். பந்தம், பாசம், உற்றார், உறவினர்கள் போன்றோரின் உணர்ச்சிகளுக்கு, பேச்சுக்கு, செயல்களுக்கு  இடம் கொடுக்கும் போது அங்கு அறிவுக் கண் மூடப்பட்டு விடும். அறிவுக் கண் மூடப்பட்டிருக்கும் போது அங்கு சந்தோசம், மகிழ்ச்சி என்பது இருக்காது. அறிவுக் கண் திறக்கப்பட்டு உணர்ச்சிகளின் உண்மையான காரணம் என்னவென்று தெரியும் போது அங்கு கோபம் என்பது இருக்காது. கோபம் என்பது இல்லை என்றால் அங்கு சந்தோசமும் மகிழ்ச்சியும்  நிரந்தரமாகக் குடியேறும்.


ஒருவருடைய அறிவுக் கண்களை திறக்கும் சக்தி தியானத்திற்கு மட்டும் தான் உண்டு. ஒருவர் தியானப் பயிற்ச்சியை தொடர்ந்து பழக்கப்படுத்தும் போது அவருக்கு சந்தோசத்திற்க்கும் மகிழ்ச்சிக்கும்  பஞ்சமே இல்லை.

Saturday 23 March 2013

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-11

1. மூலிகையின் பெயர் :- சுண்டை.

2. தாவரப்பெயர் :- SOLANUM TARVUM.

3. தாவரக்குடம்பம் :- SOLANACEAE.

4. வேறு பெயர்கள் :- கடுகிபலம், பீதித்தஞ்சம், பித்தம், அருச்சி, கராபகம், சுவாசகாசினி. முதலியன.

5. பயன் தரும் பாகங்கள் :- இலை, காய், வத்தல், மற்றும் வேர் முதலியன.

6. வளரியல்பு :- சுண்டை ஒரு பெருஞ்செடி இனத்தைச் சேர்ந்தது. இது சுமார் 5 அடி முதல் 10 அடி உயரம் கூட வளரக்கூடியது. எல்லா வித மண் வளத்திலும் வளரக்கூடியது. இதற்கு ஆங்கிலத்தில் TURKEY BERRY என்று சொல்வார்கள்.
சுண்டையில் இரு வகையுண்டு. மலை காடுகளில் தானே வளர்வதை மலைச்சுண்டை என்றும், தோட்டங்களிலும் சம வெளியிலும் வளர்வதை ஆனைச்சுண்டை அல்லது பால் சுண்டை என்றும் சொல்வர். அகன்ற இறகாக உடைந்த நேர் அடுக்கில் அமைந்த இலைகளையும் வெண்நிரப் பூங் கொத்துக்களையும், உருண்டையான காய்களையும் உடைய முள்ளுள்ள செடியாகும். பச்சைக் காய்கள் பழுத்தால் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
பழம் காய்ந்தால்  வத்தலாக மாறிவிடும். ஒரு பழத்தில் சுமார் 200 விதைகள் இருக்கும். காய் சற்று கசப்புடையது. வற்றலாகக் கடைகளில் கிடைக்கும். இது உலகெங்கும் உள்ளது. இதன் தாயகம் புளோரிடா என்றும் மேற்கிந்தியாவிலும் பின் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அவாய், பசிபிக்தீவுகளிலும், நடு அமரிக்காவிலும், தென் அமரிக்காவிலும், பிரேசிலிலும் பரவியதாகக் கூறுவர். இதை இன விருத்தி செய்ய விதைமூலமாகவும், கிளைகளை வெட்டி வைத்து முறைப்படி வளர்த்தியும் பயிரிடுவார்கள்.

7. மருத்துவப் பயன்கள் :- சுண்டை கோழையகற்றியாகவும், வயிற்றுப்பூச்சிக் கொல்லியாகவும், சுண்டைக் கசாயம் பாம்புக்கடி வீரியம் குறைக்கவும், நீரிழிவு நோய், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு முதலியன குணமாக்கக் கூடியது. மலேசியாவில் இதன் விதையை பல் வலி குறையப் பயன்படுத்துகிறார்கள். வியட்னாமில் இதன் இலையை மாதவிடாய் தொல்லைக்கும், தோல் வியாதியைப் போக்கவும் பயன்படுத்துகிறார்கள். இதன் பழம் சாப்பிட்டால் வயிற்றுவலி போகும்.

பால் சுண்டைக் காயைச்சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி முதலியன தீரும்.

உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, பின் காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு உணவில் பயன் படுத்தி வர மார்ச்சளி, ஆஸ்துமா, காச நோய் தீரும். வயிற்றுப் போக்கு நின்று விடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம் ஆகியவை தனித்தனியே எடுத்து இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து இடித்த சூரணம் காலை, மாலை 2 சிட்டிகை ஒரு டம்ளர் மோரில் சாப்பிட்டு வர பேதி, மூலம், பசியின்மை, மார்ச்சளி, நீரிழுவு தீரும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து சாப்பிடப் பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியவை தீரும்.

இதன் வேர்ப்பட்டையை பொடிசெயுது தேய்காய் தொட்டியில் வைத்து ஒரு சிட்டிகை மூக்கிலிட்டு உள் இழுக்க தலைநோய், நீரேற்றம், மண்டைக் குடச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர் பாய்தல் நிற்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பைப் பிண்ணாக்கு சம அளவு எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழப்பு நோய் தணியும்.

சுண்டை வேர் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாச்சல் குணமாகும்.

இதன் வத்தலை காயவைத்து அதனுடன் புளித்த மோர் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து உணவுடன் உண்ண நீரிழிவு நோய் குறையும்.


 

விஜய வருடமும் 14-04-2013.பஞ்சாங்கம் பார்க்கும் பலனும்

தனது பெயரிலேயே வெற்றியைத்தாங்கும் விஜய வருஷம் தர்ம
மார்க்கத்தில் செல்லும். அனைவருக்கும் பெரும் வெற்றியைத் தரும்,
ஸர்வம் காலக்ருதம் மன்யே' என்னும் [பாகவதத்தில்] பீஷ்மாசாரியாரின்
வாக்குப்படி அரூபமாகவும் அர்ச்சாவதார மூர்த்தியாகவும் காக்ஷி தரும்
பகவானே கால ஸ்வரூபியாகவும் இருக்கிறார். காலதேவனுக்குக்
கட்டுப்பட்டே அனைத்தும் நடைபெறுகிறது.


யுகம்,,வருஷம்,அயனம்,மாதம், பக்ஷம், வாரம்,நாள் என பலபிரிவுகளக
நமக்குக் காக்ஷி தரும் கால ஸ்வரூபியான பகவானின் வர்ணனையே
பஞ்சாங்கம். பகவானைப்பற்றிய சரித்ரங்கள் மஹிமைகள் அடங்கிய
புராணங்களுக்கு ஒப்பானவை பஞ்சாங்கங்கள்.பஞ்சாங்கத்திலுள்ள
விபரங்களையும் படித்து அறிந்து கொள்வதாலேயே பற்பல நன்மைகள்
கிடைக்கின்றன.


"திதேஸ்ச ஸ்ரியமாப்நோதி வாராத் ஆயுஷ்ய வர்தனம்
 நக்ஷத்ராத் ஹரதே பாபம் யோகாத் ரோக நிவாரணம்
கரணாத் கார்ய ஸித்திஸ்ச பஞ்சாங்க பலமுத்தமம்"


ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்தவுடன், இன்று என்ன திதி?
என்று அறிவதால் செல்வம் பெருகும்.கிழமையை அறிவதால் ஆயுஸ்
வளரும். இன்று என்ன நக்ஷத்ரம்? என்பதை அறிவதால் பாபங்களில்
சிறிது குறையும்.இன்று என்ன யோகம்? என்பதை அறிவதால் ரோகம்
விலகும். கரணம் என்ன? என்று அறிவதால் காரியம் சித்தியாகும்.

Friday 22 March 2013

பக்தனின் பாடலுக்கு ஆடிய வரகூர் வேங்கடேசர்!


Thanks to Sri.Ramakrishnan, Mumbai for this Article. 

                     றைவனின் விளையாட்டுகள் மிக வினோதமானவை. அடியார்கள் மீது கருணை புரிந்து தன்வசமாக்கி, அவனைப் பாடகனாக- கவிஞனாக- துறவியாக- முக்தனாக ஆக்குவது அவனது திருவிளையாடல்!

இசைக்கும் இறைக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை பல மகான்களின் வரலாறுகள் நமக்கு உணர்த்தும். ஊத்துக்காடு வேங்கட சுப்ரமணியனுக்கு சிறுவயதிலேயே காளிங்க நர்த்தன கிருஷ்ணன் குருவாக அமைந்து கானம் போதித்தார். அவரது கிருஷ்ண நடன கானம் அலாதியான சுவையுடையது.

ராணி மீராபாய் கண்ணன்மீது பாடிய பாடல்கள் வடநாட்டில் மிகப் பிரசித்தமானவை. முகலாய அரசரான அக்பர் இசைக் கலைஞர் தான்சேனுடன் தன் உயிரையும் பொருட் படுத்தாமல் மாறுவேடத்தில் வந்து, மீராபாயின் பாடலைக் கேட்டு முத்துமாலையைப் பரிசளித் தார் என்றால், மீராபாயின் பாடல்கள் எவ்வளவு உருக்கமானவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வகையில் இறையருள் பெற்ற பல மகான்களில், ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற மகானைப் பற்றி இங்கு காண்போம்.

ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகில் உள்ளது காஜா என்ற கிராமம். இதை வெல்லத் தூர் கிராமம் என்றும் சொல்வர். இங்கே தாள பஜ்ஜலா என்ற வீட்டில் 1675-ஆம் ஆண்டு பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தார் கோவிந்த சாஸ்திரி. வேத, உபநிடத, புராண, இதிகாசங் களிலெல்லாம் தேர்ச்சி பெற்றார். பொதுவாக வேதம் ஓதுபவர்கள் சங்கீதம் பயில மாட்டார் கள். (சாம வேதமே சங்கீதம்தானே.) ஆனால் கோவிந்த சாஸ்திரி சங்கீதத்திலும் நாட்டியத்தி லும் பாண்டித்யம் பெற்றிருந்தார். திடகாத் திரமான உடலையும் கொண்டவர்.

உரிய பருவத்தில் அச்சம்மா என்ற பெண்ணை கோவிந்த சாஸ்திரிக்கு மணம் முடித்து வைத்த னர். அச்சம்மா கிருஷ்ணா நதியின் தென்கரை யிலுள்ள கிஞ்சுபள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவள். கோவிந்த சாஸ்திரி கிருஷ்ணா நதியை நீந்திக் கடந்தே அப்பக்கம் செல்வாராம். ஒருசமயம் அச்சம்மா தாய்வீடு சென்றிருந்தாள். அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கோவிந்தருக்கு ஏற்பட்டது. வழக்கம்போல ஆற்றிலிறங்கி நீந்தத் தொடங்கினார். அவரைத் துறவியாக்க எண்ணிய கிருஷ்ணனின் லீலைபோலும்- திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. எவ்வளவோ முயன்றும் நீந்த முடியாத நிலை. வேறு வழியில்லை... தர்ம நுட்பங்களை அறிந்த கோவிந்த சாஸ்திரி ஆபத்சகாயம் எடுத்துக் கொண்டார். தன் பூணூலைக் கழற்றி வீசி விட்டார். பெருக்கெடுத்த வெள்ளம் தணிந்தது. நீந்திக் கரை சேர்ந்தார் கோவிந்தர்.

வழக்கம்போல மனைவியின் இல்லத்திற்குச் சென்றார். ஆனால் அவர் மனைவியோ அவரை கணவனாகக் கருதாமல், ஒரு துறவிக்குரிய பாவனையில் வரவேற்று உபசரித்தார். கோவிந்த ருக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. அங்கிருந்து புறப்பட்டு நேராக காசிக்குச் சென்றார். ஸ்ரீசிவ ராமானந்த தீர்த்தரிடம் முறையாக சந்நியாச தீட்சை பெற்றார். ஸ்ரீநாராயண தீர்த்தர் என்னும் சந்நியாசப் பெயரும் பெற்றார்.

பின்னர் பிரயாகை, மதுரா, பிருந்தாவனம், பூரி ஜெகந்நாதம் போன்ற தலங்களைத் தரிசித்துப் புனித நீராடி, வராக க்ஷேத்திரமான திருப்பதி வந்து சேர்ந்தார். அங்கே அவருக்கு வயிற்றுவலி உண்டாயிற்று. "வயிற்று வலியா, வேங்கடேசரைத் துதி' என்று சொல்வர். ஆனால் திருப்பதி வாசனோ நாராயண தீர்த்தரின் கனவில் தோன்றி, "காவேரிக் கரைக்குப் போ' என்றாராம்!

அங்கிருந்து திருச்சி வந்த நாராயணர் குணசீலம் வந்து சேர்ந்தார். (இங்குள்ள பெரு மாள், குணசீல மகரிஷியின் தவத்திற்கு மகிழ்ந்து கோவில் கொண்ட பரவாசுதேவர். பில்லி, சூன்யத்தால் பாதிக்கப் பட்டவர்கள், பேய், பிசாசு பிடித்தவர்கள் இங்கு வந்து ஒரு மண்டல காலம் தங்கி, நண்பகல் பூஜையின்போது அளிக்கும் தீர்த்தப் பிரசாதத்தை அருந்தியே குணமடைந்திருக்கிறார்கள். இன்றும் இது நடந்து வருகிறது. இத்தலப் பெருமாளை திருமலையானின் அண்ணன் என்பர். பெரிய திருப்பதி எனப்படுகிறது குணசீலம். திருமலை யானுக்குச் செய்யும் பிரார்த்தனையை இங்கு செய்கிறார்கள்.) "இந்தப் பெருமாள்தான் தன் நோயைத் தீர்ப்பாரோ' என்று அவரை வணங் கியபடி அங்கேயே இருந்தார். ஆனால் அவர் கனவில் தோன்றிய குணசீலப் பெருமாள், "பொழுது விடிந்ததும் ஒரு மிருகம் தென்படும். அதைப் பின்தொடர்ந்து செல்' என்றார். (விநாயகர் வழிகாட்டியதாகவும் சொல்வர்.)

காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இரண்டு வெள்ளை வராகத்தைக் கண்டார். இறைவன் ஆணைப்படி அந்தப் பன்றி களைப் பின்தொடர்ந்து சென்றார். அவை பூபதிராஜ புரம் என்ற கிராமத்தை அடைந்து ஒரு பாழடைந்த கோவிலுக்குள் சென்று மறைந் தன. அக்கோவிலுக்குள் சென்று பார்த்த போது, லட்சுமி தேவியை மடியில் அமர்த்திய வண்ணம்- சங்கு, சக்கர தாரியாக- லட்சுமி நாராயணராக பெருமாள் காட்சி தந்தார். நாராயண தீர்த்தர் அந்தக் கோவிலைச் செப்பனிட்டு பெருமாளை வணங்கி வந்தார். அவர் வயிற்றுவலி முற்றிலும் குண மாயிற்று! (வராகம் காட்டியதால் இத்தலம் வரகூர் என்றும்; பெருமாள் வரகூர் வேங்கடேசர் என்றும் அழைக்கப்படுகிறார்.)

வரகூர் பெருமாள் நாராயண தீர்த்தரிடம் ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்தத்தை- கிருஷ்ண லீலைகளை கத்ய, பத்ய கானமாக நடனத்திற்கு ஏற்ப செய்திடப் பணித்தார். அவ்வண்ணமே அவர் வடமொழியில் "ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' என்னும் கிரந்தத்தை இயற்றினார்.

இதில் முதல் பாடலாக கணபதி துதியைப் பாடியுள் ளார்.

"ஹிமகிரி தனயா பத்யம்

ஹேமாசல சாப சமுதிதம் தேஜ:

கிமபிமஹத்தம் மாத்யம்

ஸ்மர்த்தவ்யம் விக்னதிமி ஹரனாய.'

கதாகாலட்சேபம் செய் பவர்கள் மேற்கண்ட சுலோகத்தைப் பாடியே தொடங்குவார்கள்.

அடுத்து கருடபகவானைப் பாடி, பின்னர் பூரி ஜெகந்நாதரைப் பாடி பிறகு வரகூர் பெருமாளை,

"ஸர்வஞான க்ரியா சக்திம்

ஸர்வ யோகீஸ்வர ப்ரபும்

ஸர்வ வேதமயம் விஷ்ணும்

ப்ரப விஷ்ணும் உபாஸ்மஹே'

என்று போற்றுகிறார்.

அடுத்து தசாவதார கீர்த்தனைகள், கண்ணன் பிறப்பு, கண்ணனின் லீலைகள் என்று பாடி, இறுதியாக ருக்மிணி திருமணத்தை மிக விரி வாகப் பாடியுள்ளார். இப்பாடல்களைப் பாடி நர்த்தனமும் புரிந்தார் நாராயண தீர்த்தர். அந்தப் பாடலின் இசையில் மயங்கிய பெரு மாளும் நடனம் புரிவாராம். அங்கே நட்டுவனாராக இருந்தவர் ஆஞ்சனேயர் என்கிறார்கள். அதற்கேற்ப இங்குள்ள ஆஞ்சனேயரின் பெயர் தாளங்கொட்டி ஆஞ்சனேயர் என்பதாகும்.

கோவிலில் ஒரு துறவி நடனமாடுவதை கிராமத்திலிருந்த ஆன்மிகவாதிகள் கண் டித்தனர். "இது வேங்கடவன் ஆணை. அவருமல்லவா என்னுடன் நடனமாடுகிறார்!' என்றார் நாராயண தீர்த்தர். "அப்படியெனில் அதை நாங்களும் காண வேண்டும்' என்று அவர்கள் சொல்ல, இறைவனை வேண்டினார் தீர்த்தர். பெருமாளி டமிருந்து உத்தரவு கிடைத்தது.

அதன்படி பெருமாள் சந்நிதியின் முன் திரை இடப்பட்டது. மக்களெல்லாம் கோவிலின்முன் திரண்டனர். இறைவனை வணங்கி நாராயண தீர்த்தர் பாட, சந்நிதிக்குள் பெருமாள் நடனம் ஆடினார். அவரது சலங்கை ஒலி ஜல்ஜல் என்று அனைவரது செவிக்குள்ளும் புகுந்து மெய்சிலிர்க்க வைத்தது. மக்கள் நாராயண தீர்த்தரின் பாதங் களில் வீழ்ந்து பணிந்தனர். அவரது பாடல்களை மக்கள் அனைவரும் பாடி மகிழ்ந்தனர்.

ஆந்திரத்தில் பிரபலமானவர் சித்தேந்திர யோகி. இவர் நாராயண தீர்த்தரின் சீடர். இவரால் அமைக்கப்பட்ட குச்சுப்பிடி நடனமும், பஜனை பாகவதர் கள் மேளாவின் மெலட்டூர் சம்பிரதாயத்தில் பாடி ஆடும் கீதங்களும், குண்டூரி லுள்ள அத்தங்கியிலும் நாராயண தீர்த்தரின் கிருஷ்ணலீலா தரங்கிணிப் பாடல்களே பயன்படுத்தப் படுகின்றன. இவை மிகுந்த ஆனந்தத்தைத் தருபவை. சரணாகதி தத்துவத்தை வெளிப்படுத்தும் வண்ணம் இப்பாடல்கள் இருக்கும்.

கோபியரின் ஆடை களைக் கவரும் லீலைகளில் வேத- உபநிடதத் தத்துவங் கள் உள்ளன. ராஸலீலையில் ஜீவாத்மா- பரமாத்மா பாவம் வெளிப்படும். ஸ்ரீமத் பாகவதத்தில் ராதையைக் குறிப்பிட வில்லையே என்னும் குறையை நிவர்த்தி செய்வது போல் உள்ளன இவரது ராதையைப் பற்றிய பாடல்கள்.

வியாசர் பாகவதத்தில் ராதையைப் பற்றிக் கூறவில்லையே என்ற ஆதங்கத்தில், பூரி ஜெகந் நாதரே ஜெயதேவராக அவதரித்து கீத கோவிந்தம் என்னும் பக்தி ரசம் சொட்டும் கிரந்தம் செய்தாராம். அந்த ஜெயதேவர் கண்ணனின் லீலைகளைப் பாடவில்லையே என்று வருந்தி, அவரே நாராயண தீர்த்தராக அவதரித்து கண்ணனின் லீலைகளைப் பாடினார் என்பர்.

நடனத்திற்கு ஏற்ப பாடப்படும் 153 பாடல் களைக் கொண்ட ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி 39 ராகங்களில் அமைந்துள்ளது. இவற்றில் 43 பாடல்கள் நாதநாமக்கிரியா, மத்யமாவதி, சௌராஷ்ட்ரா ஆகிய மூன்று ராகங்களைக் கொண்டே அமைந்துள்ளன.

இன்றும் வரகூர் ஆலயத்தில் கிருஷ்ணலீலா தரங்கிணி பாடப்படுகிறது. ஜென்மாஷ்டமியிலும் நவமியிலும் சிறப்பாக உற்சவங்கள் நடக் கின்றன.

நாராயண தீர்த்தர் கிருஷ்ணலீலா தரங்கிணியை பலச்ருதியுடன் இவ்வாறு முடிக்கிறார்:

"ஸ்ரீகோபாலன் என்னும் கார்மேகத்திலிருந்து பெருகிய- அவரது பெருங்கருணை என்னும் மழைத் தாரைகள், ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற மலைமீது விழுந்து பரவி, அவை முழுதும் ஒன்று சேர்ந்து, இந்த கிருஷ்ணலீலா தரங்கிணி என்னும் ஆறாகத் தோன்றி, கிருஷ்ண பக்தர்கள் என்னும் வயலில் பாய்ந்தோடி, உலகை இன்பமுறவும் ஆனந்தமுறவும் செய்யும்!'

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-10 Inboxx

பப்பாளி.


1. மூலிகையின் பெயர் -: பப்பாளி.

2. தாவரப்பெயர் -: CARICA PAPAYA.

3. தாவரக்குடும்பம் -: CARUCACEAE.

4. பயன்தரும் பாகங்கள் -: இலை, காய், பால், மற்றும் பழம். முதலியன.

5. வளரியல்பு -: பப்பாளி தமிழகமெங்கும் பரவலாக வளர்க்கப்படுகிறது. எல்லாவகை மண்களும் ஏற்றது. நீண்ட குழல் வடிவ காம்புகளில் பெரிய அகலமான கைவடிவ இலைகளை உச்சியில் மட்டும் கொண்ட மென்மையான கட்டையுடைய பாலுள்ள மரம். கிளைகள் அரிதாகக் காணப் பெறும். பெரிய சதைக் கனியை உடையது, பழம் உருண்டையாகவும், நீண்டும் இருக்கும்.


ஆண் மரம் பெண் மரம் என்று உண்டு. அயல் மகரந்தச் சேர்க்கையில் அதிக பழங்கள் விடும். பல்லாண்டுப் பயிர். ஒரு ஏக்கருக்கு 1000 நாற்றுக்கள் தேவைப்படும். இது நடும்பொழுது 8 அடிக்கு 8அடி இடைவெளி விட்டு 2 X 2 X 2 அடி ஆழக் குழிகள் வெட்டி உரமிட்டு நட வேண்டும்


வாரம் ஒரு முறை தண்ணீர் பாச்ச வேண்டும். 10 மதத்தில் பலன் கொடுக்கும் இது 700 கிலோ இலைகள் 5000 கிலோ காய்கள் கிடைக்கும். இலைப்புள்ளி நோய், இலைக் கருகல் நோய் வந்தால் மருந்தடிக்க வேண்டும்.
பதப்படுத்த நிழலில் 4 நாட்கள் உலர வைக்க வேண்டும். பப்பாளிக் காயிலிருந்து கீறி விட்டு பால் எடுத்து அதைப் பக்குவப் படுத்தி மருந்துக்குப் பயன் படுத்ததுகிறார்கள். இதில் முக்கிய வேதியப் பருள்கள் கார்பன், கார்போசைடு மற்றும் பப்பேன் உள்ளன.


இதில் வைட்டமின் ஏ மற்றும் ஈ உள்ளன. வருட செலவு ரூ.30,000 ஒரு வருடத்திற்கு வரவு ரூ.70,000 ஆக வருட வருமானம் ரூ.40,000. கோவையில் செந்தில் பப்பாயா நிறுவனம் நாற்றுக் கொடுத்து அதன் பாலை விலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். விவசாயிகள் நல்ல பயன் அடைகிறார்கள்.

6. மருத்துவப் பயன்கள்-: பப்பாளி வயிற்றுப் புழுக்கொல்லுதல், தாய்பால் பெருக்குதல், மாதவிலக்கைத் தூண்டுதல், நாடி நடையை உயர்த்தி உடலுக்கு வெப்பம் தருதல், மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்குவது. சிறுநீர்ப பெருக்குவது கொழுப்பைக் கரைத்து உடலை இளைக்க வைப்பது.

பப்பாளி பாலை விளக்கெண்ணையில் கலந்து கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

பெரியோர் 30 துளி விளக்கெண்ணெய் + 60 துளிப் பால்
இளைஞர் 60 துளி விளக்கெண்ணெய் + துளிப் பால்.
சிறுய குழந்தை 15 துளி விளக்கெண்ணெய் + துளிப் பால்.

வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பது குன்மம் எனப்படும். காயின் பாலை சேகரித்துக் காய்ச்சினால் பொடித்து உப்பாகி விடும். இந்த உப்பில் ஒரு கிராம் அளவு நெய் கலந்து சாப்பிட பித்த குன்மம், பிறவயிற்றுவலி, வாய்வு, வயிற்றுப் புண் குணமாகும்.

இதன் பாலை தேங்காய் நெய்யில் கலந்து தடவ வாய்புண், உதட்டுப்புண் குணமாகும். இப்பாலுடன் பொரித்த வெங்காரம் சேர்த்துத் தடவ வேர்க்குரு குணாகும். மண்டைக்கரப்பான், சொறிக்கு படிகாரத்துடன் இப்பாலை மத்திதுப் போட குணமடையும்.

பப்பாளிக்காயைச் சமைத்து வாரம் மூன்று நாள் உண்டு வரத் தடித்த உடம்பு குறையும். பழம் நாளும் ஒரு துண்டு சாப்பிடலாம். தாய்ப் பால் பெருகும்.

மாத விலக்கில் தடை இருந்தால் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் நீங்கும். ஓரிரு மாதக்கருவும் கலையும். விதையைத் தூள் செய்து 5 கிராம் வெல்லத்தில் சாப்பிட கரு கலையும். தடைபட்ட விலக்கு வெளியைறும்.

புலால் செய்வோர் 2-3 துண்டு பப்பாளிகாயைப் போட்டு வேக வைத்தால் எளிதில் வேகும். பதமாகவும் சுவையாகவும் இருக்கும்.

நாள்தோறும் 1 துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரல், வீக்கம் குறையும். செரிபாற்றல் பெருகும் குன்மம், ரணம், அழற்சி, வயிற்றுப் பூச்சி, மலச்சிக்கல், சிறுநீர்பாதை அழற்சி ஆகியவை தீரும்.

பல்லரணையால் வீக்கம் ஏற்பட்டு வலி இருந்தால் பாலைத் தடவ கரைந்து குணமடாயும். பழம் அதிக அளவில் சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு வரும்.

சந்தனம்.

1. மூலிகையின் பெயர் -: சந்தனம்.

2. தாவரப் பெயர் -: SANTALUM ALBUM.

3. தாவரக்குடும்பம் -: SANTALACEAE.

4. வேறு பெயர்கள் -: முருகுசத்தம் என அழைப்பர்.

5. ரகங்கள் -: இதில் வெள்ளை, மஞ்சளை சிவப்பு என மூன்று வகைகைள் உள்ளன. அதில் செஞ்சந்தனம் மருந்தாகப் பயன்படுகிறது.

6. பயன் தரும் பாகங்கள் -: சேகுக்கட்டை மற்றும் வேர்.

7. வளரியல்பு -: தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது. இது துவர்ப்பு மணமும் உடையது. தமிழகத்தில் தனிப் பெரும் மரமாகும்.
மாற்றடுக்கில் அமைந்த இலைகளை யுடைய மரம். இலைகளின் மேற் பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப் பகுதி வெளிறியும் காணப்படும். கணுப்பகுதியிலும் நுனிப் பகுதியிலும் மலர்கள் கூட்டு மஞ்சரியாக காணப்படும். உலர்ந்த நடுக் கட்டை தான் நறுமணம் உடையது. மருத்துவப் பயனுடையது.
இதை காடில்லாத மற்ற இடங்களில் வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்ட வேண்டும். இதன் விலை மிகவும் அதிகம். இது நன்கு வளர்வதற்கு பக்கத்தில் ஒரு மரம் துணையாக இருக்க வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம் விட ஆரம்பிக்கும்.


இந்தப் பழத்தைப் பறவைகள் உட்கொண்டு அதன் எச்சம் விழும் இடத்தில் விதை மூலம் நாற்றுக்கள் பரவும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுப் பலன் கிடைக்கும்.

8.மருத்துவப்பயன்கள் -: சந்தனம் சிறு நீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயற்படும். வியர்வையை மிகுவிக்கும், வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும். சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத் தணிக்கும், விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தும் குளிர்ச்சி தரும். உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன் படுகிறது.

முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புக்கள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன் படுத்தப்பட்டாலும், கிருமி நாசினி செய்கை, உடல் அழற்சியை குறைக்கும் தன்மை உடையது.

கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி, சொறி, படர் தாமரை, வெண்குட்டம், கருமேகம் வெப்பக்கட்டிகள், தீர்ந்து வசீகரமும் அழகும் உண்டாகும்.

பசும் பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும்.

சந்தனத்தூள் 20 கிராம், 300 மி.லி. நீருல் போட்டுக் காய்ச்சி 150 மி.லி.யாக்கி வடிகட்டி 3 வேளையாக 50 மி.லி. குடிக்க நீர்க் கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதயப் படபடப்பு குறையும். இதயம் வலிவுறும்.

சந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் கொள்ள பால் வினை நோய், தந்திபேகம், பிரமேகம், கனோரியா, பெண் நோய் என்று பல பெயர் பெறும் இவை யாவும் குணமாகி உடல் தேறி, நோய் தீரும்.


நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லியில் சுண்டைக்காய் அளவு சந்தன விழுதைக் கலந்து 40 நாள் குடித்து வர மதுமேகம் தீரும்.

சந்தன எண்ணெய்-தைலம் -‘எசன்ஸ்’ 2-3 துளி பாலில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறும். நெல்லிக்காய்ச்சாறு, அல்லது கசாயம் 50 மி.லி. யுடன் அரைத்த சந்தனம் 5-10 கிராம் கலந்து 48 நாள் காலை, மாலை குடிக்க நீரிழிவு குணமாகும்.

நன்றி: மூலிகை வளம் குப்புசாமி அவர்களுக்கு



 




--


      



 


 

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..!

இந்த பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி.. அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்...? ...

உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது . தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது. உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல்.

மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.

வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.

நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.

வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது.

வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.

உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது. இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள். இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.

இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோயும் நெருங்கியதில்லை.. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது.

உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.

நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது... புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..

ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து.. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.

முடிந்த மட்டும் மிளகு பொடியை வீட்டிலே தயார் செய்யுங்கள். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.. ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடி சேர்த்து சமைத்தால் சுவை மற்றும் செரிமானம் கிடைக்கிறது. உடல் நலத்தில் ஒட்டு மொத்த சுகாதாரத்திற்கும் மிளகு நல்லது. அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.

மணல் கயிறு Part II

சாஃப்ட்வேர் பெண்கள் எதிர்பார்க்கும் மாப்பிள்ளைக்கான தகுதிகள்:

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண் போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பாகிட்டுமணி , அம்மா உமா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கணுமே. வித்யான்னு வெச்சிடுவோம்.

நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.

வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG
படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCA வைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்னதான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

வித்யா: எனக்கு என் கேரியர் தான் முக்கியம்?

நா.நா: டிபன் கேரியரா? நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3.
பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான்
மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டேலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க
தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.

நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.
வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்.

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்.

பிதாமஹர் புரந்தரதாசர்

தாசி லீலாதேவி வீட்டிற்கு வந்த பகவான்

பகவான் பண்டரிநாதன் புரந்தரதாசரைப் பற்றிச் சற்று சிந்திக்கத் தொடங்கினார். ‘நல்ல வித்தையும், ஞானமும் கொண்ட இவர் அகம்பாவம் கொண்டு சீடர்களைத் திட்டுவதும், குட்டுவதும், பக்தனைச் செம்பால் மொத்துவதும் போன்ற துர்க்குணங்கள் கொண்டு விளங்குகிறாரே’ என நினைத்து வருந்தினார் ‘எவராயினும் எம் முன்னிலையில் புரந்தரதாசரும், பக்தர்களும் எனக்குச் சமமானவர்களே. இவர் திடீரென கோபமாவது அவர் நற்குணத்தையும், பக்தியையும், தவத்தையும் பாழாக்கி பாதித்துவிடுமே’ எனவும் எண்ணினார்.
அவரிடமுள்ள இத்தகாத செய்கையை ஒடுக்க வேண்டி அவருக்குத் தகுந்த பாடம் கற்பிக்க ஒரு யுக்தியை மேற்கொண்டார். அதாவது, பகவான் பாண்டுரங்கன், தன் சந்நிதியிலிருந்து தன் தங்கத் திருக்காப்புகளில் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு, அன்றிரவே புரந்தரதாசரைப் போன்று வேடம் தாங்கிய கோலத்தில், அங்கிருந்து புறப்பட்டு, பண்டரிபுரத்தில் வசித்து வந்த பக்தியில் சிறந்த, புனிதவதியான லீலாதேவி என்னும் நல்லுள்ளம் கொண்ட தேவதாசியின் இல்லத்தை நாடிச் சென்றார். அவரைக் கண்டதும், அவள் மகிழ்ந்து, அவர் பாதம் தொழுது அன்புடன் மதிப்பளித்து அவரை வரவேற்றார்.
“சுவாமி! இந்த இரவு நேரத்திலா தாங்கள் இங்கு வரவேண்டும்? என்னால் தங்களுக்கு என்ன ஆகவேண்டும்?” எனக் கேட்டாள். “திவ்ய அழகு வதனத்தை உடையவளே! உன்னைக் கண்டு ரசித்துப் போகவே இங்கு வந்தேன்.” என்ற காதல் நோக்கோடு அவளிடம் இவ்வாறு பகவான் கூறினார். “என்ன ஆச்சரியம்! பாண்டுரங்கனின் மெய்த் தொண்டராகிய தாங்களா இவ்வாறு கருதி இங்கு வந்தீர்கள்? என்னால் இதை நம்ப முடியவில்லையே! சுவாமி! உயரிய நிலையிலுள்ள, பக்தியைப் பரமானந்த வாழ்வாக நினைத்து வாழும் தாங்கள், இவ்வாறு தாழ்வான எண்ணம் கொண்டு இங்கு வந்திருப்பதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இது உங்களுக்கு மட்டுமல்லாது, எனக்கும் வீண் அவப்பெயரை உண்டாக்கும். அதனால் உங்களின் உண்மையான பக்திக்குப் பெரும் களங்கமும் ஏற்படும். வேண்டாம் உங்களுக்கு இந்த ஈனத்தனமான எண்ணம். என் குலத்தாரின் இழிந்த செய்கை என்னிடமும் இருக்குமென எதிர்பார்த்துத் தாங்கள் இங்கு வந்தீரோ? உங்களின் தவறான கருத்தை மாற்றிக்கொண்டு இப்போதே உடனே இங்கிருந்து போய்விடுங்கள்” என மன வேதனையோடு அவரிடம் தெரிவித்தாள்.
உடன் புரந்தரதாசர் (பகவான்) “லீலாதேவியே! நீ இவ்வாறு எனக்குப் பதில் தருவாய் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இப்போது நீ என்னைப் பரிதாப நிலைக்கு ஆளாக்கிவட்டாய். பரவாயில்லை. இருப்பினும், நான் உன்னை இங்கு வந்து பார்த்ததன் பரிசாக இதோ இந்தத் தங்கத் திருக்காப்பை உனக்குப் பரிசாக அளிக்கிறேன். இதையாவது நீ பெற்றுக் கொள்.” என்றார் பகவான் புரந்தரதாசர். இதைக் கேட்டதும் லீலாதேவியானவள் “இதைத் தாங்களே திரும்ப எடுத்துச் செல்லுங்கள். எனக்கு இந்தக் காப்பு வேண்டவே வேண்டாம். வீண் ஆசை வார்த்தைகளைக் காட்டி, இதைப் பெறும்படியாகச் செய்து என்னை அபசாரத்திற்கு ஆளாக்காதீர்கள். இனி ஒரு க்ஷணம் கூட நீங்கள் இங்கு இருக்கக்கூடாது. உங்களைக் கை கூப்பி வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். இவ்விடத்தை விட்டு உடனே நகருங்கள்” என்றாள்.
“வல்லிக்கொடியென விளங்கும் லீலாதேவியே! நான் உன் வதனத்தைக் (முகம்) கண்டு ரசிக்கக்கூடிய வாய்ப்பையாவது எனக்கு நீ அளித்தாயல்லவா? அதற்காகவாவது, இந்தப் பொற்திருக்காப்பை உனக்கு மகிழ்வோடு அன்பளிப்பாக அளிக்கிறேன். மறுக்காமல் இதை நீ அவசியம் பெற்றுத்தான் ஆகவேண்டும்” என்று தன் மாயா சக்தியால் அத்திருக்காப்பை அவள் பெறும்படியாகச் செய்து விட்டுச் சற்று அப்பால் சென்று மறைந்தார்.
மறுநாள். பொழுது புலர்ந்ததும் அர்ச்சகர்கள் சந்நிதியின் கதவுகளைத் திறந்ததும், பகவானின் திருக்காப்பொன்று அங்கில்லாதிருப்பதைக் கண்டு, அவர்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர். களவு போன செய்தியை உடன் அவ்வூர் அரசனுக்குத் தெரியப்படுத்தினர். இதைக் கேட்டதும் பெரும் சினம் கொண்ட அரசன் “என் ஆட்சியில் இப்படியொரு திருட்டா? இத்திருட்டைக் கண்டுபிடித்துத் தெரியப்படுத்துவோருக்குத் தக்க சன்மானம் அளிக்கப்படும்” எனப் பறைசாற்றும் படியாக உத்தரவைப் பிறப்பிக்கச் செய்தான் மன்னன். உடன் பறைசாற்றிய செய்தியை அறிந்த தாசி லீலாதேவி பயந்து, இனி, பகவானின் திருக்காப்பைத் தான் வைத்திருப்பது தெய்வ அபசாரமாகுமெனவும், பின் அதனால் இராஜ தண்டனைக்கு ஆளாக நேரிடுமெனவும் உணர்ந்த அவள், உடன் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண அரசவையை நோக்கி விரைந்து சென்றாள். அரசனை நேரில் சந்தித்துப் புரந்தரதாசரால் தனக்கு இந்தக் காப்பு தரப்பட்டதையும், மற்றும் அங்கு நடந்த விவரத்தையும் ஒன்றுவிடாமல் எடுத்துரைத்துத் திருக்காப்பை அரசனிடம் அவள் ஒப்படைத்தாள்.
உண்மை தாசருக்கு இராஜதண்டனை. பகவான் தடுத்தாட் கொள்ளல்
இச்செய்தியை அறிந்த அரசன் அடங்காத கோபங்கொண்டு பொங்கி எழுந்தான். உடன் இரு காவலர்களை அழைத்து, புரந்தரதாசரை உடனே தன் அவைக்கு அழைத்து வருமாறு உத்தரவைப் பிறப்பித்தான். காவலர்களும் உடன் சென்று புரந்தரதாசரைக் கையோடு அழைத்து வந்து அரசன் முன் கொண்டுவந்து நிறுத்தினர். அவரைக் கண்டதும், அரசன் கோபத்தால் பல்லை நறநறவென கடித்துக் கொண்டு திருட்டைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். விசாரிக்கும்போது, புரந்தரதாசர் “நான் குற்றவாளி அல்ல. நான் பண்டரிபுரம் செல்லவுமில்லை, தாசிலீலாதேவியின் வீட்டிற்குச் செல்லவுமில்லை. அவளை எனக்கு யாரென நிச்சயமாக உண்மையாகத் தெரியவே தெரியாது. இதை பாண்டுரங்கன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். இது என் மீது சுமத்தப்படும் வீண் பழி” என தன் மறுப்பை மன்னனிடம் வேதனையோடு தெரிவித்தார். “நான் எதன் மீதும் ஆசை வைக்காதவன். எப்போதும் நான் பகவன் நாமாவைத் துதித்துக்கொண்டு, அவனின் நித்திய சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதும் தான் என் அன்றாட வேலை. சிற்றின்பம் துய்த்தல் என்பதை நான் அறவே நினையாதவன்” எனக் கடுமையாக வழக்காடி எதுவுமே அறியாத நான் நிரபராதி என மனம் நோக மன்னனிடம் எடுத்துக் கூறினார்.
உடன் லீலாதேவி “மன்னவா! இவர் பேச்சை நம்பாதீர்கள். இவருக்குத் தாங்கள் அளிக்கப்போகும் தண்டனையிலிருந்து இவர் தப்பித்துக் கொள்வதற்காக இவ்வாறெல்லாம் நாடகமாடுகிறார். மெய்யை மறைத்து, பொய்யை உண்மையாக்கப் படாதபாடுபடுகிறார். பார்த்தீர்களா? பக்திமானாக, நேர்மையின் அவதாரமாக இருக்க வேண்டிய இவர் இப்போது கூறும் பொய்யான பேச்சில் தாங்கள் மயங்கிவிடாதீர்கள் எனக்கூறி மன்னவா! இவர் நிச்சயமாக என் இல்லம் நாடி வந்து இன்மொழிகளையெல்லாம் அழகாக என்னிடம் தொடுத்துப்பேசி வசீகரிக்கச் செய்ததோடு இத்திருக்காப்பை வலுக்கட்டாயமாக என்னிடம் கொடுத்து விட்டுப்பின் அங்கிருந்து விரைவாகச் சென்று விட்டார். இது முற்றிலும் என் இல்லத்தில் நடந்த உண்மைச் சம்பவம்” என வலுவான முறையில் அவர் தப்பமுடியாத அளவுக்கு மன்னனிடம் எடுத்துரைத்தாள். அதனால் வலுவிழந்து மேலும் எதுவும் பேச முடியாத புரந்தரதாசர் மனம் நொந்து தலைதாழ்ந்தார். அவளின் வாதங்களைக் கேட்ட மன்னன், லீலாதேவி கூறுவது முற்றிலும் உண்மையென நம்பி அதை ஏற்று, புரந்தரதாசர் பண்டரிநாதனின் சிறந்த உண்மையான பக்தராகையால் பெரும் தண்டனையை அளிக்க முற்படாது, முப்பது கசையடியே அவருக்குப் போதுமானது எனத் தன் தீர்ப்பை வழங்கினான். அப்போது புரந்தரதாசர் நினைத்ததாவது:
‘நிரபராதியான எதுவுமே அறியாத அடியேனுக்குப் பகவான் எதை வைத்துத் தவறாக இத்தண்டனையை எனக்களித்துள்ளாரோ? பாண்டுரங்கா! இது எனக்குத் தேவைதானா? என்ன சோதனையோ? அறியேன். பாகவத அபசாரம், பகவத் அபசாரம், போன்றவற்றைச் செய்ததன் காரணத்தால்தான் இத்தண்டனையை யான் இப்போது அனுபவிக்கும்படியாயிற்று’ என நினைத்துக் கொண்டு கண்ணீர் மல்க மிகவும் வேதனையடைந்தார்.
“நான் வெகு நாள்களாக பகவத் பக்தியில் ஈடுபட்டு என்ன பயன்? என் வித்யாகர்வமும், நான் இதற்கு முன், செய்துவந்த பாபச் செயலும் எனக்குச் சரியான பாடத்தைப் புகட்டி நல்ல தண்டனையையும் அளித்துவிட்டன. உண்மை பக்தியுள்ளம் கொண்ட தொண்டனுக்கு கோபம் தீயதுதான். அது இப்போது என்னை நன்கு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. பகவானையே செம்பால் மொத்திய பாபியல்லவா நான்? தவறு செய்வோர் எவராயினும் சரி அவர் பிடியிலிருந்து தப்பவே முடியாதென்பதற்கு எனக்கு ஏற்பட்ட இச்சம்பவம் நன்கு எடுத்துக் காட்டிவிட்டது. பகவானே! பாண்டுரங்கா! இத்தண்டனையை அனுபவித்த பின்பாவது என்னிடமுள்ள அசூயைகள் (கெட்ட குணங்கள்) யாவும் நீங்கப் பெற்று அன்றாடம் சாந்தி நிலவ அடியேனுக்கு அருள்புரிவீராக!” எனக் கூறிக்கொண்டே மன்னன் தனக்குக் கொடுத்த தண்டனையை ஏற்றுக் கொண்டு காவலர்களோடு புறப்பட்டுச் சென்றார்.
விண்ணில் ஓர் அசரீரி!
எவரும் எதிர்பாராத அது சமயம் “மன்னவா! சற்றுக் கவனி! குற்றம் எங்குள்ளது எனச்சரிவர ஆராய்ந்தறியாது, தவறேதும் சிறிதும் செய்யாத தாசரைத் தண்டிக்கும் எண்ணம் கொண்டீரே! திருக்காப்பை யார் களவாடியது? அது எப்படிக் களவு போனது என்பதைச் சிறிதும் சிந்தியாது, உம் மதியீனத்தால் சரியான முறையில் விசாரணையும் செய்யாது, அந்த அப்பாவி பக்தர் புரந்தரதாசருக்குத் தக்க ஆதாரம் எதுவுமின்றி எதைவைத்து நீர் அவருக்கு இவ்வாறு தண்டனையை அளித்தீர்? இது தான் உம் நீதியோ? வழக்கைச் சரியானபடி நீர் விசாரணை செய்திருந்தால் இதன் உண்மை யாதெனத் தானாகவே சரியாக வெளி வந்திருக்கும். சந்நிதியை நன்றாகப் பூட்டி, சாவியை அர்ச்சகர் எடுத்துக் கொண்டு போயிருக்கும்போது, சூதும், வாதும், எதுவும் அறியாத அப்பழுக்கற்ற புரந்தரதாசர் சந்நிதிக்குள் எவ்வாறு புகுந்து திருக்காப்பைக் களவாடியிருக்க முடியும்? சற்றாவது சிந்தித்துப் பார்த்தீரா?”
“பூட்டிய பூட்டானது பூட்டியவாறேயிருந்ததைப் பூஜைகள் செய்யும் பட்டாச்சாரியார்கள் உம்மிடம் எதுவும் எடுத்துக் கூறவில்லையா? உடன் அவர்களையாவது அழைத்து இது சம்பந்தமாக விசாரணையாவது செய்தீரா? எதையும் சரிவர ஆராய்ந்தறியாது எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு அவருக்கு இவ்வாறு நீர் தீர்ப்பளித்தீர்? நடந்த உண்மைகள் யாவும் உமக்குச் சரிவர எதுவுமே தெரியாதபோது குற்றமற்ற என் உண்மை பக்தன் புரந்தரதாசர் எவ்விதத்தில் குற்றவாளியாவார்? அவர் குற்றவாளி இல்லையே! எம் தாசரின் பெருமையை உலகத்தார் அறியும் பொருட்டே, அவருக்குத் தண்டனையை அளித்து ஆட்கொள்ள வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடே இந்த உபாயத்தை நாமேதான் செய்தோம். புரிந்ததா? தாசர் உண்மையில் லீலாதேவி வீட்டிற்குச் செல்லவுமில்லை. திருக்காப்பை அவளிடம் அவர் அளிக்கவுமில்லை. அப்பழுக்கற்ற, எத்தவற்றையும் செய்யாத அவரை உடனே விடுதலை செய்வீராக” என அசரீரியின் வாயிலாக பகவான் பாண்டுரங்கன் மன்னனுக்குக் கடுமையாக ஆணையிட்டார். உடன், இதைக் கேட்ட மன்னனும் தலைவணங்கி, பகவான் சொன்னவை அனைத்தையும் பணிவுடன் ஏற்றுக்கொண்டு, தான் செய்த தவற்றுக்குக் கண்ணில் நீர் பெருக்கெடுக்க அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.
“புரந்தரதாசரே! இனி நீரும் சரி, உம் சிஷ்யர்களும் சரி. எனக்கு ஒன்றே என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே இனி இதை உணர்ந்து நீர் மேலும் சிறிது காலம் வரை, இவ்வையகத்தில் யாவருடனும் ஒன்று சேர்ந்து பக்தி புரிந்து பின் என்பதம் வந்து சேர்வீராக” என அருளிச் செய்து பகவான் மறைந்தார்.
பின் அவர் தன் உண்மையான பக்தியின் சக்தியாலும், இறைவனின் திருவருளாலும், உலகத்தாரைச் சிறந்த பக்தியுள்ளம் படைத்தவராக்கினார். பின் தானும் இடைவிடாது மனமுருகிப் பக்தி செய்து கொண்டிருக்கையில் அது சமயம், திருமாலும், திருமாது சமேதராய் அவருக்குக் காட்சியளித்து, புரந்தரதாசரையும், அவர் மனைவியையும் தன் பதத்துக்கு அழைத்துக் கொண்டார்.
முடிவுரை

- ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

[ அக்டோபர் 2010-ல் கல்கியில் வெளியானது]

இப்போது வாழ்க்கையில் உங்களுக்கு நிம்மதியிருக்கிறதா ? ஏதோ அப்பப்போ கொஞ்சம் சந்தோஷம், திருப்தி ஏற்பட்டாலும், ஒன்று மாற்றி ஒன்று ஏதோ இழுபறிச் சக்திகளிடம் மாட்டிக்கொண்டே இருக்கும்படிதானே இருக்கிறது. ""ஆஹா''என்று,""அக்கடா''என்று, ""நமக்குக் கவலையே இல்லை'',பயமே வராது, துக்கமே வராது'''என்றெல்லாம் சொல்லும்படியான உறுதிப்படுத்திய சாந்தியாயிருக்கிறதா ? இல்லையோல்லியோ ?
இல்லை என்றுதான் பதில் சொல்வீர்கள். சரி, எதனால் இத்தனை சலனம், பறப்பு? இழுபறி, சிரமம் எதனால் ?
இதை யோசித்தீர்களானால்,யாராலும் க்ஷணம்கூடச் சும்மா இருக்காமல் ஏதாவது கார்யம் செய்துகொண்டே இருக்கத் தோன்றுவதாயும், இந்தக் கார்யங்களினால்தான் சாந்தியைக் குலைக்கிற எல்லாம் வந்து சேர்வதாயும் தெரியும். கார்யமே இல்லாவிட்டால்தான் சாந்தி என்பது இரண்டும் இரண்டும் நாலு என்கிற மாதிரி எவருக்கும் தெரியும். ""எதற்காகக் கார்யம் ?'' என்பது அடுத்த கேள்வி. இதை யோசித்துப் பாருங்கள். பார்த்தால் பலவிதமான ஆசைகளில் எதுவோ ஒன்றின் பூர்த்தியை முன்னிட்டுத்தான் ஒவ்வொரு கார்யமும் என்று புரியும். கோபத்தினாலோ மோஹத்தினாலோ வேறெந்த உணர்ச்சியினாலோ செய்கிற சகல கார்யங்களுங்கூட அந்த உணர்ச்சிகளுக்கெல்லாம் அடியிலே மூலமாகப் பதுங்கியிருக்கிற ஓர் ஆசையினாலேதான் என்று கொஞ்சம் தீர்க்கமாக ஆலோசித்துப் பார்த்தா புரிந்து விடும்.
சரி, கார்யத்தை நிறுத்திவிடலாமா என்று பார்த்தீர்களானால், அது லேசில் சாத்தியமில்லை என்பது தெரியும். ப்ரக்ருதி ( நேச்சர் ) ஒருத்தனை ஏதாவது கார்யத்தில் ஏவிக்கொண்டேதானிருக்கிறது என்று தெரியும். அதனாலேதான், சாஸ்திரம் இந்த ஸ்டேஜில் என்ன சொல்கிறதென்றால், ""கார்யம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால், ஆசை வாய்ப்பட்டுச் செய்வதைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஸ்வந்த ஆசைக்காகச் செய்வது என்றில்லாமல் உலக நலனுக்காக கார்யங்களைப் பண்ண ஆரம்பியுங்கள்'' என்கிறது.