Monday 12 June 2023

திருப்ப்கழ் என்ற ஒரு அமிர்தம் - பாகம் 1

 

பாகம் 1- தடிநிகர் அயிற்கடாவி.....

என்று ஒரு தமிழ் வார்த்தை இருக்கிறது. திருப்புகழில்.

 

தமிழை நேசிப்பவருக்கு திருப்புகழை நேசிக்காமல் இருக்க முடியாது. இந்த ஜன்மத்தில் திருப்புகழை நாம் படித்து விடவேண்டும். ராகம் தெரிந்தால் ராகத்தோடு பாடி விடவேண்டும். இல்லாவிட்டால் தமிழ் தெரிந்து இந்த ஜன்மம் வேஸ்ட்.....

 

நமக்கு மிகவும் தெரிந்த, “முத்தைத் திரு” பாட்டை எடுத்துக் கொண்டால், ஏதோ, ‘அகத்திக் கீரை” என்ற வார்த்தையெல்லாம் வருகிற மாதிரி இருக்கும். ஆனால் நிஜ அர்த்தமே வேறு.

 

இந்த தமிழகம், தமிழ் நாடு, என்று அரட்டை அடிப்பவர்களுக்கு, ஒரு நாலு திருப்புகழைப் பார்த்து படியுங்கள் என்று சொன்னால் போதும். பிறகு அப்படி ஒரு வாக்குவாதமே இருக்காது.

 

எனக்குத் தெரிந்தவரை, திருப்புகழ் ஒரு குழந்தை.  முருகனே ஒரு ஞானக்குழந்தை. அதனால் அவருடைய பாடலும் அப்படியே. அருணகிரிநாதர் போன்று ஒருவர் அவதரித்து நமக்குக் கொடுத்த அற்புதமான பொக்கிஷம் இது.

 

வள்ளி மலை சச்சிதானந்த ஸ்வாமிகள் பற்றி ஒரு கதை உண்டு. அவர் திருப்புகழுக்காக தம் வாழ் நாளை அர்ப்பணித்தவர்

 

பீ.எஸ். கிருஷ்ண அய்யர் என்பவர் வள்ளி மலை சச்சினாந்த சுவாமிகளுடன் கடைசி காலத்தில் நெருங்கி பழகியவர். ஸ்வாமிகள் சொன்னது “அருணகிரி நாதர்  திருஞான சம்பந்தர் அவதாரம் – என்று சொன்னதாக.

 

“இருமலு ரோக”. என்று ஒரு திருப்புகழ் உண்டு. டாக்டர்கள் வியாதி பேர் தெரியவில்லை என்றால் இந்தப் பாட்டை refer பண்ணலாம்.  அதே போல் “கெளரி மனோஹரி” ராகத்தில் “வலிவாத பித்தமோடு” என்று ஒரு பாடல் உண்டு

 

அருகே போய் கூப்பிட்டால் திருப்புகழ் கிட்டே வராது. அதன் போக்குக்குப் போய், ஆழப் புரிந்து கொண்டு. அருகே சென்றால், நம்மை அணைத்துக் கொள்ளும்

 

நாம் என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறோம் என்றால் kaummaaram.com க்குதான். திருப்புகழின் ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் எழுதி இருக்கிறார்கள்.  இதில் இங்கிலீஷ் ல் வேறு. பிரமிக்க வைக்கும் முயற்சி. ஸ்ரீ. கோபாலசுந்தரம் என்பவர் எழுதி இருக்கிறார். அவருக்கு ஒரு கோடி நமஸ்காரம் செய்யலாம்

 

உதாரணத்திற்கு, மேலே எழுதி இருக்கும். “தடி நிகரி அயிற்கடாவி” என்ற வரி. கீழ்க்காணும் வரியில் உள்ள ஒரு வார்த்தை..

 

.....தடி நிகரி அயிற்கடாவி அசுரர்கள் இறக்குமாறு, சமரிடை விடுத்த சோதி...... (மனையவள் என்று தொடங்கும் திருப்புகழ்) – சத்தியமாக பார்த்துப் படித்தாலே தப்பாக படிப்போம்

 

“மின்னல் போல ஒளி விடும் வேலாயுதத்தை வீசி” அசுரர்கள் இறக்குமாறு சண்டை போட்ட, ஒளிப்பிழம்பான முருகா: என்று இதற்குப் பொருள்.

 

இப்படி அர்த்தம் தெரியவில்லை என்றால் யாரும் திருப்புகழ் கிட்டயே போக மாட்டோம்.

 

இன்னொருவர், திருப்புகழ் ராகவன் சார். எல்லா பாடல்களுக்கும் ராகம் போட்டு, தாளக் கட்டையும் குறிப்பிட்டு, பாடவும் பாடி, அவரி இறுதி மூச்சு வரையும் பாடி, இன்றும் இந்தியா/உலகம் முழுவதும், திருப்புகழ் பஜனை என்று ஒன்று பிரமாதமாக நடந்து கொண்டு இருக்கிறது என்றால் அவர்தான் காரணம்.

 

உதாரணமாக, கெளரி மனோஹரியில், மேலே சொன்ன வல்லிவாத பித்தமொடு” – இந்த ஒரு பாடல் தான் இந்த ரகத்தில் இருக்கிறது. கௌமார்த்தில்  அவர் பாடியும் இருக்கிறார். எப்படி கரெக்டாக கெளரி மனோஹரியில் உட்காருகிறது என்பது இன்று வரை எனக்கு ஆச்சர்யம்

 

அதே போல் திருவான்மியூர் முருகன் மேல் தர்மவதி ராகத்தில் “குசமாகி” என்ற ஒரு பாடல் அமைக்கப் பட்டிருக்கிறது. இது ஒரு அபாயகரமான ராகம், கிட்டக்க அரை டஜன் ராகங்கள் தொட்டுக்கொண்டு இருக்கின்றன. அதை கற்றுக்கொண்டு பாடினால், தர்மவதி ராகத்தை யார் பாடினாலும் கண்டு பிடித்து விடலாம்.

 

திருப்புகழை ஆழப் படித்தால், முதல் ஆறு வரியில், நாம் எப்படி வாழ்கிறோம், எப்படி வாழ வேண்டும் என்று ஒரு நீதியை, “பளார்” என்று அறைகிறார் போல் சொல்லுவார். அடுத்த 6 வரியில், அந்த முருகன், திருமால் மருகன், எப்படி அணுக்ரஹம் செய்ய வேண்டும் என்று சொல்வார்.   

 

திருப்ப்கழை இன்னும் கொஞ்சம் புகழலாம் -