Thursday, 22 November 2012

நோ பார்மாலிட்டீஸ் ப்ளீஸ்...!


எண்ணம் போலத்தான் வாழ்க்கை. சரி, இதையும் சொல்றீங்க. அதே நேரம், நடக்கிற எல்லா விஷயங்களும் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டவைன்னும் சொல்றீங்க..? ஒன்னுக்கு ஒன்னு contra ஆகுதே.... கொஞ்சம் புரியும்படியா சொல்ல முடியுமான்னு நண்பர் ஒருத்தர் கேட்டார். 

இறைவன் விதி என்னும் ரூபத்தில் , ஒவ்வொருவரின் எண்ணங்களையும் செயல்களையும் தீர்மானிக்கிறார். அதன் விளைவுகளையும் கூட. ஒருவரது மதி செயல்படக்கூட விதி ஒத்துழைக்கவேண்டும். அவரவர் பூர்வ ஜென்ம வினைகள் விதி ரூபத்தில் இப்படித் தான் விளையாடுகின்றன. எல்லோரும் தான் கஷ்டப்பட்டு வேலை செய்றாங்க. ஆனால் ஒரு சிலர் மட்டும் மேலே மேலே உயர்ந்துவிடுறாங்க. ஆனால், இன்னும் சிலர் அவர் அவர் முயற்சிக்குப் பலன் கிடைக்காம தானே இருக்கிறாங்க. 

அதனால, நம்ம முயற்சிக்கு பலா பலன் குறைவா கிடைக்குதுன்னா, நம்ம கர்ம கணக்கிலே , கொஞ்சம் குறையுதுன்னு நினைச்சிக்கிட்டு , இன்னும் விடாமல் உங்கள் முயற்சியை தொடருங்கள்...! பலன் நிச்சயம். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். அதை நினைத்து வருந்தி பயன் இல்லை இனி நடக்க விருப்பவை மேலும் நம் பாவக் கணக்கில்  சேரா வண்ணம் நம் செயல்கள் அமையட்டும்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற ரெண்டுங் கெட்டான்  நம்பிக்கையின்மை தான் நம்மோட பெரிய  பலவீனம். கடவுள் இல்லவே இல்லை என்று வாதிடும் நாத்திக வாதிகள் கூட, மரண தருவாயில் யாராவது விபூதி கொடுத்தால், உடனே பூசிக் கொள்கிறார்கள் அப்படியாவது மரணம் தள்ளிப் போகாதா என்கிற நம்பிக்கையில். நம்மைப் போன்றவர்களுக்கு சிறிய வயதில் இருந்தே கடவுள் இருக்கிறார் என்றே சொல்லி சொல்லி வளர்த்து இருக்கிறார்கள். இருந்தாலும் மனதில் ஊசலாட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. முழு மனதோடு இறைவனை நம்புபவர்களுக்கு எந்த ஒரு பார்மாலிட்டீஸூம்  தேவையில்லை என்பதை கீழே உள்ள ஒரு சிறிய கதையைப் படிக்கும்போது நீங்கள் உணர முடியும்....



 

எந்த சக்தி நம்மை, இந்த உலகை ,இயக்குகிறதோ  அந்த பரம்பொருளை முழுவதும் பணிந்து - நம் அன்றாட கடமையை செவ்வனே செய்து வந்தாலே , நம் முயசிகள் பலனளிப்பதொடு - அவன் தரிசனமும் கிட்டும். இதுதான் ஒரு கர்ம யோகியின் செயல்...... நாம் அனைவரும் செய்யக் கூடியது இதுதான். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து சந்நியாசம் வாங்கிக் கொள்வது , இயலாத காரியம். ஆனால், அவனை நினைத்தபடியே நம் எல்லா செயல்களும் செய்வது நம்மால் முடியும் காரியம். நம்பிக்கையுடன் முயல்வோம்..!

ரொம்ப நாளைக்கு முன்பு, படித்த இரண்டு கதைகளை , நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். ரொம்ப எளிமையான, அதே சமயம் மனதை விட்டு அகலாத அருமையான கதைகள். இவை, நமக்கு ச் சொல்லும் செய்திகள் ஏராளம்...! படித்துப் பாருங்கள்!

கடவுள் உங்கள் ஊருக்கு வரப்போகிறார். இந்த அசரீரி ஒலியைக்கேட்டதும், மக்கள் அனைவரும் செய்துகொண்டிருந்த வேலைகளையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஊர் எல்லைக்கு ஓடினார்கள். அனைவரும் வழிமேல் விழிவைத்து  கடவுளுக்காகக் காத்திருந்தனர், ஒரே ஒரு 
வேலைக்காரச் சிறுமி மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தானுண்டு தன் வேலை உண்டு என வீட்டு வேலையை கவனமாக பார்த்து கொண்டிருந்தாள். 

கொஞ்சநேரத்தில் காற்றைப் போல், கதிரொளியைப் போல் முதியவர் ஒருவர் உதித்தார் ஊருக்குள்! வெறிச்சோடிக் கிடந்த வீதிகளில் வலம் வந்தார். ஆளரவமற்ற வீடுகளைப் பார்த்துப் புன்னகைத்தார். மெல்ல நடந்தார். ஒரு வீட்டுக்குள்ளிலிருந்து மட்டும் பாத்திரம் உருட்டும் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்தார் முதியவர். கடமை உண்ர்ச்சியுடன் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள் வேலைக்காரச் சிறுமி.

சின்னப் பெண்ணை வாஞ்சையோடு அருகே அழைத்தார் முதியவர். அளவான ஆசையையும், அளவற்ற ஆசியையும் கொடுத்தார். ஊரார் வந்ததும், நான் என் கடமையைச் செய்து கொண்டிருந்தால், கடவுள் எனக்கு தரிசனம் தந்தார் எனக்கூறு..! என்று சொல்லிவிட்டு அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு மறைந்தார். யார் தன் கடமையைச் சரியாக செய்கிறார்களோ அவர்களுக்கு கடவுள் தரிசனம் தருவார்.

நன்றி : தினமலர்
==================================================================

லியோ டால்ஸ்டாய் என்றாலே ரஷிய இலக்கியத்தின் சிறந்த படைப்புகளான ‘போரும் சமாதானமும்’ மற்றும் ‘அன்னா கரீனா’வும் நினைவுக்கு வரலாம். ஆனால் அவருடைய கட்டுரைகளும், சிறுகதைகளும் கூட மிகச்சிறந்தவையும், பொருள் பொதிந்தவையும் ஆகும். உதாரணத்திற்கு அவருடைய ’மூன்று ஞானிகள்’ என்ற சிறுகதையைச் சொல்லலாம்.

ஒரு பிஷப் பாதிரியார் பல யாத்திரிகர்களை அழைத்துக் கொண்டு கடல்கடந்து இருக்கும் ஒரு புனிதத்தலத்திற்குக் கப்பலில் செல்கிறார். கப்பலில் செல்கையில் அந்தப் புனிதத்தலத்திற்குப் போகும் வழியில் உள்ள ஒரு தீவில் மூன்று மகத்தான ஞானிகள் இருப்பதாக சிலர் பேசிக் கொள்வதைக் கேட்டார். மனித குலத்தின் மேம்பாட்டுக்காக அந்த ஞானிகள் சதா சர்வகாலம் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் சொல்லவே பிஷப்பிற்கு அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. கப்பல் கேப்டனிடம் அவர் அந்தத் தீவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார். அந்தத் தீவின் கரை வரை கப்பல் செல்ல முடியாதென்றும், தீவருகே சென்று ஒரு படகில் தான் அங்கு செல்ல முடியும் என்றும் கூறிய கேப்டன் அவரை மனம் மாற்றப் பார்க்கிறார். ஆனால் பிஷப் தன் விருப்பத்தில் உறுதியாய் இருக்கவே கேப்டன் ஒத்துக் கொள்கிறார்.

அந்தத் தீவிற்கு சற்று தொலைவில் கப்பல் நிற்க படகு மூலம் அந்தத் தீவிற்கு ஆவலுடன் பிஷப் பயணிக்கிறார். ஆனால் தீவில் மூன்று ஞானிகளைக் காண்பதற்குப் பதிலாக அவர் கண்டது கந்தலாடைகள் அணிந்த வயதான மூன்று கிழவர்களைத் தான். பிஷப்பின் உடைகளைப் பார்த்து அவர் மிக உயர்ந்த நிலையில் உள்ள பாதிரியார் என்பதைப் புரிந்து கொண்ட கிழவர்கள் அவரை பயபக்தியோடு வரவேற்று உபசரிக்கின்றனர்.

அவர்களிடம் சிறிது நேரம் பேசியவுடனேயே அவர்கள் மூவருக்கும், கல்வியறிவோ, பைபிள் பற்றிய ஞானமோ இல்லை என்பது பிஷப்பிற்குத் தெரிந்து விட்டது. இந்த படிப்பறிவில்லாத கிழவர்களைப் போய் ஞானிகள் என்று சொல்லித் தன் ஆவலை வீணாகத் தூண்டி விட்டார்களே என்று எண்ணிய பிஷப் அவர்களிடம் நீங்கள் எப்படி பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கேட்டார்.

“நாங்களும் மூவர். நீங்களும் மூவர். எங்கள் மீது கருணை காட்டுங்கள்” என்று சொல்லி பிரார்த்தனை செய்கிறோம்” என்று மூன்று கிழவர்களும் பணிவுடன் சொன்னார்கள்.

அவர்கள் நீங்கள் மூவர் என்று சொன்னது கர்த்தர், பிதா, பரிசுத்த ஆவியைச் சேர்த்துத் தான்.

பிஷப் திகைப்படைந்தார். “இது என்ன பிரார்த்தனை. இப்படியுமா பிரார்த்தனை செய்வார்கள்” என்று அவருக்கு தோன்றியது.

இவ்வளவு தூரம் வந்து இவர்களின் அறியாமையை அறிந்த பின் அவர்களுக்கு எப்படிப் பிரார்த்தனை செய்வது என்று சொல்லித் தருவது தன் கடமை என்று உணர்ந்த பிஷப் அவர்களுக்கு முறைப்படியாக பிரார்த்தனை செய்வது எப்படி என்பதைக் கற்றுத் தந்தார். அவர் அவர்களது அறிவுக்கேற்ப எளிய பிரார்த்தனையை தான் கற்றுத் தந்தார் என்றாலும் அதைக் கற்கவே அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். இத்தனை வருடங்கள் ஒரு வரி பிரார்த்தனை செய்து வந்த அவர்களுக்கு சில வரிகள் கொண்ட புதிய பிரார்த்தனை சிரமமாக இருந்ததில் ஆச்சரியம் இல்லை அல்லவா?

எப்படியோ அவர்களுக்கு முறைப்படி கற்றுத் தந்த பிஷப் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு படகு மூலம் கப்பலுக்குத் திரும்பினார். அவர் கப்பலை நெருங்கிய சமயத்தில் அந்த மூவரும் அவர் படகை நோக்கி ஓடோடி வந்தார்கள். “ஐயா எங்களை மன்னியுங்கள். எங்களுக்கு மீண்டும் தாங்கள் சொல்லித் தந்த பிரார்த்தனை மறந்து விட்டது. இனியொரு முறை சொல்லித் தருவீர்களா?”

தரையில் ஓடி வருவது போல கடலில் சர்வ சாதாரணமாக ஓடி வந்த அவர்களைப் பார்த்த பிஷப் பிரமித்தார். அவர்களை சிரம் தாழ்த்தி வணங்கி சொன்னார். ”நீங்கள் இது வரை செய்து வந்த பிரார்த்தனையையே தொடர்ந்து செய்யுங்கள் பெரியோர்களே. உங்களுக்கு வேறெந்த பிரார்த்தனையும், போதனையும் தேவையில்லை. முடிந்தால் தயவு செய்து எனக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்”

பிஷப்பே பழைய பிரார்த்தனையை தொடர்ந்து செய்தால் போதும் என்று அனுமதி அளித்து விட்ட திருப்தியில் அந்த மூவரும் அவரை வணங்கி விட்டு நிம்மதியாகத் தங்கள் தீவிற்குத் திரும்பினார்கள். அவர்கள் சென்ற திசையில் ஒரு பொன்னிற ஒளியை அந்தக் கப்பலில் இருந்த அனைவரும் கண்டார்கள்.

எந்த வழிபாட்டையும், பிரார்த்தனையையும் புனித நூல்களில் சொல்லப்பட்ட விதங்களை பின்பற்றியோ, முன்னோர் பின்பற்றி வந்த சம்பிரதாயங்களை பின்பற்றியோ, முறையான சடங்குகள் என்று நாம் நம்பி வருவதை பின்பற்றியோ செய்தால் தான் அது இறைவனை எட்டும் என்ற நம்பிக்கையில் தான் பெரும்பாலானோர் இருக்கின்றனர். பெரும்பாலான மதத்தலைவர்களும் அப்படியே தான் மக்களை வலியுறுத்துகின்றனர்.

ஆனால் பிரார்த்தனைகளின் மகத்துவம் சடங்கு, சம்பிரதாய வழிகளில் பின்பற்றப்படுவதில் இல்லை. அது ஆத்மார்த்தமாகவும், நம்பிக்கையுடனும், பக்தியுடனும் செய்யப்படுவதிலேயே தான் இருக்கின்றது. எல்லா மதங்களிலும் இந்த செய்தி பிரதானமாகச் சொல்லப்படுகின்றது.

நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் இதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். கண்ணப்ப நாயனார் வழிபட்ட விதம் சம்பிரதாயத்தைப் பின்பற்றியது அல்ல. ஆண்டாள் வழிபட்ட விதமும் அப்படியே. சபரியின் பக்தியும் அப்படியே. இறைவன் செவிமடுத்து வந்த பிரார்த்தனைகள் பெரும் பண்டிதர்களுடைய பிரார்த்தனைகளாக இருந்ததில்லை. நீண்ட சொல்லாடல்கள் நிறைந்ததாக இருந்ததில்லை. மாறாக அவை தூய்மையான, எளிமையான நெஞ்சங்கள் பெரும் பக்தியோடு செய்யப்பட்ட மனமுருகிச் செய்த பிரார்த்தனைகளாக இருந்திருக்கின்றன.

தருமி என்ற தரித்திரப் புலவனும், கண்ணப்பன் என்ற வேடுவனும், வந்தி என்ற பிட்டு விற்கும் கிழவியும் பிரார்த்தனையால் இறைவனைத் தங்களிடமே வரவழைத்த கதைகள் நாம் அறிவோம். டால்ஸ்டாய் சொன்ன அந்தக் கதையிலும் தேவாலயங்களில் முறைப்படி நீண்ட நேரம், நீண்ட காலம் முறைப்படி பிரார்த்தனை செய்தும் ஒரு பாதிரியார் அடையாத நிலையை ஒரு வேடிக்கையான வாசகத்தைப் பிரார்த்தனையாகச் சொல்லி வந்த மூன்று கள்ளங்கபடமற்ற கிழவர்கள் அடைந்ததைப் பார்த்தோம்.

எனவே உங்கள் பிரார்த்தனைகள் எளிமையாக இருக்கட்டும். அவை உண்மையாக இருக்கட்டும். அவை நியாயமானவையாக இருக்கட்டும். அவை இதயத்தின் ஆழத்தில் இருந்து வருபவையாக இருக்கட்டும். நீண்ட பிரார்த்தனைகளிலும், சடங்கு, சம்பிரதாயங்களிலும் அதிகமாய் கவனம் செலுத்தாமல் மனத்தூய்மையுடனும், பக்தியுடனும் பிரார்த்தித்தால் உங்கள் பிரார்த்தனைகள் என்றுமே வீண் போகாது.

இந்த அருமையான கதையை இணையத்தில் பதிவேற்றிய திரு என். கணேசன் அவர்களுக்கும் ஈழ நேசனுக்கும் மனமார்ந்த நன்றி!

உங்கள் முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய தடைக் கல்?

உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தால் முதலில்
அதை நீங்கள் ஒழிக்கவேண்டும்.
தாழ்வு மனப்பான்மைதான் உங்கள்
முன்னேற்றத்திற்கான மிகப் பெரிய தடைக் கல்லாகும்.



தாழ்வு மனப்பான்மை ஒருவரது தன்னம்பிக்கையைத் தகர்த்து எறிந்து விடும்.
எதையும் தோல்விகரமான மனப்பான்மையிலேயே எண்ணத் தோன்றும்.
சிலர் வறுமையான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள்.


பள்ளியில் படிக்கும்போதும் சரி கல்லூரியில் படிக்கும்போதும் சரி
இவர்கள் வசதியான பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கும்.
வசதியான பிள்ளைகள் அணிந்திருக்கும் உடைகள், செலவு செய்யும் மனப்பான்மை,
உணவுப் பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மனதைப் பெரிதும் காயப்படுத்தி இவர்களுடைய
தன்னம்பிக்கையை இழக்க வழி செய்கிறது. அதுவே அவர்களிடத்து  தாழ்வு மனப்பான்மை உண்டாகக் காரணம் ஆகிறது.


இந்தத் தாழ்வு மனப்பான்மை காலப்போக்கில் மற்றவர்கள் தங்களை
மதிக்க வேண்டும் பாராட்ட வேண்டும் என்ற ஆசையினால்
நியாயத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள்.


காலப்போக்கில் உண்மை தெரிந்த உடன் மிகவும் மனம் நொடிந்து
போய் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அவ நம்பிக்கையுடன் ஈடு படுகின்றனர்.


தாழ்வு மனப்பான்மை உங்கள் தோற்றத்தையே மாற்றி
மற்றவர்கள் உங்களை வெறுக்கும் அளவுக்கு செய்து விடும்.


சிலருக்குப் படிக்கும் காலத்திலேயே தாழ்வு மனப்பான்மை
உண்டாகிவிடும்.  அதன் விளைவாகச் சரியாகப் பாடங்களில்
கவனம் செலுத்தமுடியாமல் போய் குறைவான மதிப்பெண்
எடுப்பார்கள். மனம் நொந்து போய் இனி நம்மால் அதிக
மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்ற தவறான முடிவுக்கு
வந்து விடுவார்கள்.


பள்ளியில் நன்றாகப் படிக்காத எத்தனையோ பேர் நாட்டில்
முதல் மந்திரிகளாகவும் பிரதம மந்திரிகளாகவும் இருந்துள்ளார்கள்.
இதற்க்கு சரியான உதாரணம் மறைந்த பெருந்தலைவர்
காமராஜர் ஆவார்கள்.


பள்ளிப் படிப்பு என்பது ஒருவருடைய  வாழ்க்கையை ஓரளவு தான்
நிர்ணயம் செய்யும். ஒருவருடைய  வளமான வாழ்க்கையைத் தீர்மானம்
செய்ய வாழ்க்கையில் எத்தனையோ வழிகள் உள்ளன.


பிறக்கும் குழந்தைக்குத் தாழ்ந்தவரா உயர்ந்தவரா என்று தெரியாது.
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் சுய நலம் உள்ள
மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை.
படைப்பில் எவரும் உயர்ந்தவர் அல்ல தாழ்ந்தவர் அல்ல.
அனைவருமே சமம். 


இது போன்று தாழ்வு மனப்பான்மை உண்டாகப் பல காரணங்கள்
கூறலாம். தாழ்வு மனப்பான்மையை உங்கள் மனதிலிருந்து
விரட்ட வேண்டும் என்றால்
முதலில் நம்பிக்கை எனும் விதையை உங்கள் மனதில்
விதிக்க வேண்டும்.


நாம் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்ற நம்பிக்கை விதையை
மனதில் ஊட்டித் தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து எறியுங்கள்.  


நம்பிக்கை எனும் விதையை ஊட்டுவதற்குத் தியானம்
பெரிதும் உதவுகிறது. தியானம் எனும் அறிய கலையின் மூலமாக
தாழ்வு மனப்பான்மையினைத் தகர்த்து எறியலாம்.


தியானம் செய்வதின் மூலமாகச் சிந்தனைத் திறன் சரியாக
வேலை செய்து நாம் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்ற உண்மையினை
உணரச் செய்து  ஒருவரது மனதில் இருந்து தாழ்வு மனப்பான்மையினை தூக்கி எறியச்  செய்கிறது.

ஆறுவது சினம்; சீறுவது அல்ல

இன்னல்களை ஏற்படுத்திவிடும் கோபத்தின் கெடுதி உணர்ந்தே பெரியோர் பலரும் ‘கோபம் தவிர்! கோபம் தவிர்!’ என்று சொல்கிறார்கள். பாரதியும் அதைப் ‘பழகு’ என்றுதான் சொல்கிறான். பழக்கமில்லாவிட்டால் ஏடாகூடமாய்ப் பாய்ந்துவிடும்@ நம்மையும் சேர்த்தே குதறிவிடும் என்பதுதான். அதனால்தான் ‘சீறுவதல்ல, ஆறுவதே சினம்’ என்றிருக்கிறார்கள்.

அடுத்த வீட்டுக்காரனிலிருந்து அமெரிக்காவின் நடவடிக்கைகள் வரை நமது கோபத்துக்குத் தீனி போடப் பலப்பல உண்டு. அந்த நெருப்பினால் நாமும் நம்மோடு பிறரும் வெந்து விடாமல் பார்த்துக்கொள்ளத் தெரிய வேண்டும். தனிப்பட்ட கோபமாக இருந்தாலும் சரி சமூகக் கோபமாக இருந்தாலும் சரி அதன் பாதிப்புகள் விளைவுகளை நாம் உணர்ந்திருக்க வேண்டும்.இலக்கிய உதாரணங்களில் பார்த்தால் கூட, கோபம், அதற்கு ஆளாகியவர்களையும் அழித்து, கோபப்பட்டவர்களையும் அழித்தே அடங்கியிருக்கிறது. அப்படியொரு முதுசமாக நமக்குள் வந்திருக்கும் கோப-வன்முறை உணர்வுகளை, மனிதர்கள் இன்று அடைந்திருக்கும் நாகரிக வளர்ச்சியுடன் பொருத்தி ஆராய்ந்த பிறகே பொங்க வேண்டும். அதே பழைய ‘பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம்’ வகையறாக்களுடன் வீர, ரோச வெறிகளைப் பொங்க விடுவது…. பத்தாயிரம் வருட நாகரிக வளர்ச்சிக்குப் பின்னான இன்றைய மனிதனுக்குரிய இயல்போ விவேகமோ அல்ல.

“போர்த் தொழில் விந்தைகள் காண்பாய், ஹே! பூதலமே” என்ற பார்த்தனின் முழக்கத்தோடு எழுந்த பாண்டவர்களின் கோபம் கௌரவர்களை மட்டும் அழித்து அடங்கிவிடவில்லை. பாண்டவர் தரப்பையும் மிச்சம் விடாமல் அழித்துவிட்டே ஓய்ந்தது என்பதே உண்மை.

“பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடொழிப்பேன் மதுரையும்….” என்று பொங்கிய கண்ணகியின் கோபம் ஒரு நகரையே அழித்துவிட்டே ஓய்ந்தது.

“….உலகங்கள் வீயுமாறும் திக்குடை அண்ட கோளப் புறத்தவும் தீந்து நீரின் மொக்குளின் உடையுமாறும் காண் என முனியும் வேலை” என்று கோபத்தில் உலகை அழித்துவிடத்தான் துடிக்கிறது ராமனின் வீரமும்! “ஆராயாமல் மாயமானின் பின் சென்ற குற்றம் உங்களுடையது. குலத்துக்கே நாசம் உண்டாக்கியதில் பாதிப்பங்கு குற்றத்தை உங்களிடமே வைத்துக்கொண்டு சும்மா கோபவெறி கொள்ளுதல் தப்பு” என்று சடாயு எடுத்துரைப்பதாகக் கம்பன் பாடுகிறான்.

குலத்துக்கே நாசம் விளைவிக்கும் கோபத்தை யாரும் சரி என்று கொண்டாட முடியாது. அப்படிக் கொண்டாடுதல் முழுக்க முழுக்க சுயநலத்தின் பாற்பட்டதே.

கோபமும் வீரமும் வெகுமக்களின் அழிவைக் கொண்டுவருவதாக அமையும்போது, அது பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோபமாக இருந்தால் கூடப் பாராட்டப்பட முடியாத ஒன்றே. மக்களைக் காக்கின்ற வகையில் அந்தக் கோபத்தை ஒத்திவைப்பதோ அல்லது வேறுவழியில் சாதித்துக் கொள்வதற்கான புத்திசாலித்தனத்தைப் பிரயோகிப்பதோதான் நெஞ்சில் சமூக அக்கறை இருப்பவர்களின் எண்ணமாக இருக்கும்.

இத்தனை ஆண்டுகால மனித அறிவு வளர்ச்சியில், இந்த நிலையை வந்தடைய முடியாதவர்கள் வெறும் ஆதிமனித அழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் குழுவாகவே ரோசத்தில் தீய்ந்தழிவதைத் தடுக்க முடியாமற் போகும்.


--


      
          

kaRRadhum suTTadhum-sAlaGramam

This word has become extinct.  The most precious way of offering our Poojas is this.  It is one of the inseparable pooja in any staunch Hindu devotee.  To know more about in Tamil


பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம். இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல் ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது. பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது. 
இங்கு சக்ரதீர்த்தம் என்னும் இந்தப் பகுதி தான் சாளக்கிராமம்  என்றழைக்கப்படுகிறது.
இந்த ஹரி சேத்திரத்தில் உள்ள சகல கற்களிலும், (குளிர், காற்று இவைகளில்லாமல் அமைந்துள்ள ஸைலகர்ப்பத்தில்) விஷ்ணுவின் சகல  அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது.
சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.
சாளக்கிராமத்தின் சிறப்பு : சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு. சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள். சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம்.
சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும்.
1. ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண சாளக்கிராமம்.
2. நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிறாமம்,
3. இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம்.
4. இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன சாளக்கிராமம்.
5. வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம்.
6. விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது தாமோதர சாளக்கிராமம்.
7. மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்.
8. விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம்.
9. பதினான்கு சக்கரங்களும் கொண்டது ஆதிசேட சாளக்கிராமம்.
10. சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதன சாளக்கிராமம்.
11. ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம்.
12. மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம்.
13. இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ஹயக்ரீவ சாளக்கிராமம்.

14. இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம்.
15. துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது வாசுதேவ சாளக்கிராமம்.
16. சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன சாளக்கிராமம்.
17. விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது அநிருத்த சாளக்கிராமம்.
இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும்.   சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும்.
12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்விய தேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர்.   12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன.   வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.
நீலநிறம்     - செல்வத்தையும், சுகத்தையும் தரும்
பச்சை          - பலம், வலிமையைத் தரும்
கருப்பு          - புகழ், பெருமை சேரும்
புகைநிறம் - துக்கம், தரித்திரம்.
சாளக்கிராமம் என்பது என்ன?



அற்புதங்கள் நிறைந்த சாளக்கிராமம்!

ஒவ்வொரு கோவில்களிலும் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிகளுக்கு தான் வழிபாடு , திருவிழாக்கள் நடத்தப்படுவதை அறிந்திருப்போம். மூலஸ்தானத்தில் சாளக்கிராமம் என்ற ஒரு தெய்வீக கல்லுக்கு பூஜை நடப்பதை யாரும் அறிந்து இருக்க மாட்டார்கள்.   இந்த சாளக் கிராமம் நேபாளம் முக்திநாத் கோவில் அருகில் கண்டேகி நதியில் மட்டுமே உருவாகுகிறது. இதில் தான் சுவாமி குடியிருப்பதாக ஐதீகம். பெருமாள் கோவில்களில் இதை சாளக் கிராமம் என்றும், சிவன் கோவில்களில் பானலிங்கம் என்றும், விநாயகர் கோவிலில் சோனபத்ரம் என்றும் அழைக்கிறார்கள்.   இந்த சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி உள்ளதாம். பக்தர்கள் இறைவனை வேண்டி துளசி செடியை கண்டேகி ஆற்றில் போட்டு கைகளை விரித்து தண்ணீரில் மூழ்கியபடி நின்றால் தங்களுக்கு இறைவனின் அருள்படி சாளக் கிராமம் கிடைக்கும் என்கிறார்கள்.   நம் வீட்டிலும் இந்த சாள கிராமத்தை வைத்து வழிபடலாம். 12 சாளக் கிராமங்கள் இருந்தால் அந்த வீட்டில் பெருமாளே குடியேறி இருப்பதாக ஐதீகம்.





Monday, 19 November 2012

KaRRadum suTTadhum-What God thinks ?

ஆண்டவன் போடும் கணக்கு அது புரியுமா நமக்கு!






அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நம் வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு காரியத்திற்கும், ஒரு காரணம் இருக்கும். கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அது. சமீபத்தில் ஜப்பானில் சுனாமியின் கோர தாண்டவத்திற்க்குப் பிறகு, அங்கு நடந்த ஒரு விஷயம் , ஜப்பான் இந்த உலகத்திற்கே கொடுத்த ஒரு பாடம். டிசிப்ளின். நிவாரண உதவியாக உணவுப் பொட்டலம் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் எல்லோரும் வரிசையில் நின்று வாங்குகின்றனர். கூச்சல், குழப்பம், தள்ளு முள்ளு எதுவும் இல்லை. ஒரு சிலருக்கு கிடைக்காமல் உணவுப் பொருட்கள் காலியான போது, ஒரு சிலர் - தனக்கு ஒன்று போதும். மிகுதியாக உள்ளதை இவருக்கு கொடுங்கள், என்று திருப்பிக் கொடுத்தனர். மேலும் இன்னொரு அதிசயம். நம் ஊரில் ஒவ்வொரு முறையும் நடக்குமே, நெஞ்சில் அறைந்து கொண்டு , கண்ணீர் பிளிற, ஒப்பாரி வைப்பார்களே - "கடவுளே உனக்கு கண் இல்லையா"? என்று பார்ப்பவர் நெஞ்சம் பதற - அந்த மாதிரி ஒரே ஒருவர் கூட புலம்பவில்லை. மவுனமாக, அந்த வலியை ஜீரணித்து, அதன் பிறகு அதில் இருந்து மீண்டு வந்து , சரித்திரம் படைக்கிறார்கள்.



WHATEVER HAPPENS LIFE MUST MOVE ON



சென்ற வாரம் ஒருநாள், நண்பர் சுந்தர் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர் ஒரு விஷயத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் குடும்பத்தினர் பழனிக்கு யாத்திரை சென்று திரும்பும்போது ட்ரெயினில் , அவர்களது லக்கேஜ் பேக் ஒன்று திருட்டு போயிருக்கிறது. அதேநாளில் இங்கே சென்னையில் இவரது பாக்கெட்டில் இருந்த ஒரு பொருளும் தவறி தொலைந்து போயிருக்கிறது. ஒரே நாளில், அடுத்தடுத்த இழப்புக்கள், கொஞ்சம் அவரை ஆடிப் போக வைத்து இருக்கின்றன. இருந்தாலும், நடந்த நிகழ்வுக்கு நிச்சயம் எதோ ஒரு காரணம் இருக்கும், என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டு இருக்கிறார்.தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி, ஒரு பெரிய இழப்புக்குப் பதிலாக இதோடு முடிந்தது - கடவுள் கருணை மிக்கவன் என்று நினைத்தாராம். என்னே ஒரு மனப் பக்குவம்!



இதே கருத்தை வலியுறுத்தும், ஒரு அருமையான கதையை , அவர் தனது தளத்தில் ஏற்கனவே பகிர்ந்துள்ளார். நமது வாசகர்களும் தெரிந்து கொள்ளும்விதமாக நமது தளத்திலும், இங்கே பகிர்ந்துள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள்.

=================================================



ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது.



தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே… அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க, அதற்க்கு பதிலளித்த இறைவன், “எனக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்கு பதிலாக நீ நிற்கலாம். ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும். யார் என்ன சொன்னாலம் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ ஒரு சாமி விக்ரகம் என்பதை மறந்துவிடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூற, அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார்.



அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு, கோவில் கர்ப்ப க்ரஹத்தில் இவர் நிற்க, இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்று கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தான். முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான். செல்லும்போது, தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான். இதை கர்ப்ப க்ரஹத்தில் இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருக்கும் நம் ஹீரோ பார்க்கிறார். ஆனால், இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்படியே அசையாது நிற்கிறார்.



சற்று நேரம் கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ரட்சிக்கவேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படை தேவைகள் கூட கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயாக பார்த்து ஏதாவது எனக்கு ஒரு வழி சொல்” என்று மனமுருக கண்களை மூடி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்துகொண்டான்.



சில வினாடிகள் கழித்து கண்ணை திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது. உள்ளே பணத்தை தவிர தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக்கொள்கிறான்.



இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருந்த, அந்த சேவகரால் இப்போதும் எதுவும் சொல்லமுடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையை தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்.



அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரை பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல, நம் ஹீரோ உடனே இறைவனை நினைத்துக்கொள்கிறார். “இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த நம் பணியாள் நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையை கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.



இரவு வருகிறது. கோவில் நடை சாத்தப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில் நின்றுகொண்டிருந்த நம் பணியாளிடம் இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார். “மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான்.

இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார். என்னடா இது, நம்மை பாராட்டுவான் என்று நினைத்தால் இப்படி கோபித்து கொள்கிறானே என்று பணியாள் துணுக்குற்றான்.



“நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்துகொள்ளவில்லை….? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்….? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? ”



இறைவன் தொடர்ந்து பேசலானான்…. “செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளை தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதை கொடுத்தான்.



இந்த சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனை காக்கவே அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான்.



இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான் இறைவன் கோபத்துடன்.சேவகன், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்.



“இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொருப் பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.” என்றான் இறைவன் புன்னகைத்தபடி.

————————————————-

நம் வாழ்வில் இப்படித் தான்… நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கு காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்துவைத்திருப்பான். அதை கண்டுபிடிப்பதில் தான் அனைவரும் வேறு படுகின்றனர்.



எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தையும், புரிந்துகொள்ளும் பக்குவத்தையும் இறைவனிடம் எப்போதும் வேண்டுவோம். இப்போதைய தேவை அது தான்.



அதே போல நமக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையின் போதும், மனம் தளராது இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, ‘எல்லாம் நமது நன்மைக்கே’ என்ற பக்குவத்தை நாம் வளர்த்துக்கொண்டால், எப்பேர்பட்ட சோதனைகளும் சாதனைகளாகிவிடும். எந்த துரோகமும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.







--





Sunday, 18 November 2012

Abhishek Raguram - Bharat Sangeet Utsav- 2012

Abhishek Raguram in Bharat Sangeet Utsave -2012
Mysore V.Srikanth
Anantha Krishnan
Guruprasanna

Abhishek Raghuram’s “neelam” concert.
Those who do not know the meaning of neelam may see the last line of this review.
AS performed the previous day in Bharathiya Vidhya bhavan in mylapore and today in NGS

The concert started at 7.10 and at 9 PM, he finished karaharapriya rAgam and at 9.30 PM, he finished the kriti and tani started.  At 9.45, he started some other kriti, when I left.

Full energy packed concert.  From start to finish, not even a second, the concert lacked interest.  From 500 people, it got reduced to 60 at 9.30 PM, but he continued .....
The magnitude of reach of any rAga and kriti rendering is exemplary.  In his dictionary, there is no word “contentment” or “enough” or “tiredness”.
For him, he releases one rAga devata (rAgam). Slowly the rAgam controls AS instead of AS controls it. The Raga makes AS a slave and releases after the former gets satisified with it. The result is absolute beauty of any rAga to the rasikAs.
Remember, he did not leave MSK any return till karaharapriya. He elaborated the rAga and immediately kriti.  But in swaram and neraval, he made all the three accompanists sweat. Even Ganjira which is normally takes a low key in all the concerts was in full flow.
His ACE effect on rasikas merits mention. Aura of consistent Energy or Abhishek creative Energy.  See the rAga line up- gowli bandu, nAttakurinji, bairavi, kalyAni, neelAmbari and karaharapriya.  He suffocated the rasikas with breathtaking Alapana and swarAs.
Song list is.

Tarunam Idamma- Gowlibandu-Shyama Sastri
nAttakurinji rAgam for 5 minutes followed by mAmava sadA varadE, mahishasura sundari... Swathi tirunAl kriti, neraval in   ”lalitha manihAra su lalithE mAmpAhi....”  and Swaram.
bhairavi rAgam for 5 minutes – kAmAkshi ambA- Swara jathi. Neraval in “bhakta jana kalpa lat..karunAlayA”
kalyAni- rAgam for 7 minutes-mEErana brovahitE- neraval in “nEE pAdapankajamU nera nammina vAdu gAdA..... Swaram.
karaharapriya-Main followed
sadAnandamu sarvEswara ni padAravindamu pai-bhaji- karaharapriya- Annamacharya  (RNS)- tuned by Sri.NedanUri gAru, neraval in “dayamagu tavalA” and swaram in sadAnandamu.  After neraval, I thought he is going to leave it to Tani, but he started swarAs ..mmm. great going.
Tani
Neelam is the recent name of a storm in Chennai.
I don’t see a parallel artist to have got this much  energy.  Another memorable concert.  There are two aspects,
One is the rasikAs-  I see most of them sitting at the edge of the seat with an anticipation what next, what suprise is he going to throw....what is the next volley of swarAs, neravAl.  Amazing stuff. Magnatising effect.
I observed the camera man, sitting behind the camera to the left side of the auditorium (right of the artist).  He had observing very closely AS and did not even take his eyes off.  Such a performance.
Some rasikAs discuss about sowkhyam aspect, clarity of kritis. For me, he has got sowkhyam. If he trims his rAga Alapana and sticks to the time, he will be the youngest person to get Sangeetha kalAnidhi award.
This time, he is singing in MA at 7 PM slot.  Eager to see, when he finishes the concert ?
Tani is another wonder of this concert. 

Tuesday, 6 November 2012

Malladi Brothers- Mylapore Arts Academy

Malladi Brothers


Mysore Srikanth

Neyveli Skanda Subramanyam

Ganjira vidwan – Papanasam sethuraman

Mylapore arts academy- 4th Nov 2012.

Venue-P.S.High School-Mylapore. – Song list..

jalajAksha- asAveri varnam- lalgudi G Jayaraman

small sketch of harikAmbodhi followed by sanitodi-Thyagarajar

- Alathur Brothers rendered this soulfully. After a long time, I heard this from another Brothers. Good rendering. Swaras with the same vivacity.

mAnasa guruguha- MD – simple catchy Ananda bhairavi.

kalyAni-Sub-main followed by one of the pancharatna kritis of kovoor, “nammi vachchina nannu” –Thyagarajar. Neraval in “Shri soundarya nAyagi pathE” and Swaram.

Ini oru kaNam unai- Sriranjani-pApanasam sivan- I always woder when they sing Tamil compositions that they do not make mistakes. Of course, small mistakes do happen but I always admire their interest in rendering one Tamil kriti, if the concert is in Chennai. (They used the word “malai samSaram” instead of “manai samsAram” in Charanam). Thinking wild, I understood, “malai samsAram” is also correct because of the “problems in samsAram (family)”

SahAna-Main-followed by “oorakE galkunA rAmuni bhakthi”- well rendered. Actually, I heard this long before through Maharajapuram santhanam concert and one cassette (AVM). Sahana is always very soothing. Once I heard MS ‘enna perum tavam” of periasamy tooran’s composition. May be from that day, my love to this rAga doubled.

Tani

HarismaranE- yaman kalian- Dasar

Deva devottama deve- YadugulakAmbodhi-Annamacharya

Deva devam –Sindu bhairavi- Narayana Teerthar

CharanumuLe- kApi- bhadrachala armadas

Mangalam

Neyveli SS- was a last minute replacement. His experience with all senior artists helped him to give his imprint in this concert. Simple and very well patterned tani with Ganjira vidwan.

Malladi Duo’s concert is always excellent. One can copy-paste his other reviews here. For me, Vijay Siva and Malladi- both have the knack of performing to the “definition” of CM padhdhati. No aberration.

This concert also proved to be another good concert. They bring all forgotten/not heard Thyagarjar’s kritis into limelight.

Mysore Srikant (violin), Neyveli SS (mridangam) and Ganjira vidwan were close associates to enthuse the vocalists. The raga sancharas at the hands of Mysore S were enticing; while the mridangam support was graceful. The Tani was very good.

The asAveri varNam gave a glorious start to the performance, creating an environment conducive to sukham. The list of songs selected their interest in giving 100% whereever they sing without losing rasikas interest. \

It was announced before the start of the concert that they arrived from vijayawAda despite heavy rain and storm. Rasikas were was truly lucky and reciprocated their thanks to stay till mangalam.