Saturday, 4 March 2017

மயிலையே அழகு, ஆழகே மயிலை - சாய் பாபா கோவில்

. பகுதி 2

ராமகிருஷ்ண பரஹம்சர், கடவுள் வழிபாட்டைப் பற்றிச் சொல்லும்போது, “தெய்வத்தின் கோட்டையைப் பிடிக்க, அதை படையெடுக்க வேண்டும். முற்றுகையிட வேண்டும்.”  என்றார்.தாமே அவ்வாறு அந்த கோட்டையை பிடித்தும் விட்டார். அது போல் மைலாப்பூரில் இருப்பவர்கள், இரண்டு கோவில்களை முற்றுக் கையிட வேண்டும். 

ஒன்று, சாய் பாபா கோவில், மற்றொன்று, கற்பகாம்பாள் (கபாலி) கோவில். 

மைலாப்பூர்  பற்றிச் சொல்லும்பபோது, சாய் பாபா கோவிலைப் பற்றிச் சொல்ல வில்லைஎன்றால், திருச்சி என்றால், ஸ்ரீரங்கம் பற்றிச் சொல்லாமல் இருப்பது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு.
சாய் பாபா கோவிலில் எனக்குப் பிடித்தது அன்ன தானம் தான்.  “கொடிது கொடிது, இளமையில் வறுமை” என்கிறார் ஒளவையார்.  சாய் பாபா கோவிலில், வருபவர்க்கு ஜாதி மதம் வேறுபாடு இல்லாமல், வயிராற, உணவு கொடுத்து மகிழ்விப்பது என்பது மிகவும் போற்றத்தகுந்த விஷயம். 

“யாவர்க்குமாய், உண்ணும் பொது ஒரு கைப்பிடி”- என்கிறார் திருமூலர்.
திருமூலரின் இந்த வார்த்தைக்கு ஆழ்ந்த, அசர வைக்கும் ஒரு விளக்கம் உண்டு:

“ஏழை ஆனாலும் - பணக்காரன் ஆனாலும் ,
உயர்ந்தவன் ஆனாலும் - தாழ்ந்தவன் ஆனாலும்,
உள்ளவன் ஆனாலும் - இல்லாதவன் ஆனாலும் ,
அவன் உணவை உண்ண எடுக்கும் போது 
அவன் தன் கையின் அளவால் 
ஒரு பிடி அளவு கொண்ட உணவைத் தான் எடுக்க முடியும் 
ஒரு பிடி அளவு கொண்ட உணவைத் தான் அள்ள முடியும்
ஒரு பிடி அளவுக்கு மேல் உணவை 
அள்ள முடியாது , எடுக்க முடியாது .
கோடி கோடியாக பணம் சேர்த்து வைத்தாலும் ,
எண்ணற்ற அளவில் செல்வங்களை குவித்து வைத்தாலும் ,
ஒன்றும் இல்லாத ஏழையாக இருந்தாலும் ,
ஒரு பிடி அளவு கொண்ட உணவைத் தான் அள்ள முடியும் .
அதை உண்ணும் வகையில் தான் 
இறைவன் நம்மைப் படைத்திருக்கிறார்.
இது அனைவருக்கும் பொதுவானது என்ற உண்மையை 
ஒவ்வொருவரும் உணர வேண்டும் .
இந்த சிந்தனை வந்து விட்டால் ,
இறைவன் அனைவரையும் சமமாகப் படைத்திருக்கிறார்”

அதனால் சாய் பாபா கோவிலின் அன்னதானம் மிக உன்னதமானது. என் வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பேறு, சாய் பாபா கோவிலின் பின் புறம் வீடு அமைந்தது தான்.  மிகவும் புகழ் பெற்ற ஆரத்தி, என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். எம். எஸ், சுப்புலட்சுமியின் “பஜ கோவிந்தம், விஷ்ணு சஹாஸ்ரநாமம், இரண்டும், காலையிலும், மாலையிலும், வீட்டில் உட்கார்ந்து கொண்டே கேட்கலாம். இதை விட பக்தி பண்ண விரும்பும் என்னைப் போன்ற ஒரு பாமரனுக்கு வேறு என்ன வேண்டும் ?

திரு. சுகி சிவம் அவர்கள் ஒரு அருமையான விளக்கத்தைச் சொன்னார்.  சாய் பாபா அவர்கள் எல்லோரிடமும் எதாவது பணம் கேட்டுக் கொண்டே இருப்பாராம்.  “ஒரு ருபாய் கொடு, இரண்டு ரூபாய் கொடு, ஐந்து ரூபாய் கொடு”, என்று தன்னை நாடி வரும் பக்தர்களிடம், நச்சரிப்பாராம்,  இது சில பேருக்கு எரிச்சலாகக் கூட இருக்கும். “என்ன இவர் பிச்சைக்காரர் போல” பணம் கேட்கிறார், என்று கூட தோன்றும்.
இதன் பின் அடங்கிய அருமையான தத்துவத்தை அறிந்து கொண்டால், சாய் பாபா எவ்வளவு பெரிய மஹான் என்பது நமக்குத் தெரியும்.

அதற்கு முன்பு, சாய் பாபாவைப், இன்னொரு முக்கியமான கதையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு முறை, சாய் பாபா இருந்த அந்த ஊரின் ராணி, ஒரு பல்லக்கில், சாய் பாபாவைப் பார்க்க வந்தாராம்.  மூடியிருந்த அந்தப் பல்லக்கில் இருந்து ஓரு தட்டு நிறைய தங்கக் கட்டிகள் இருந்தனவாம்.  அந்தத் தட்டை, பல்லக்கில் இருந்த படியே, ஒருவரிடம் கொடுத்து, சாய் பாபாவிடம் கொடுக்கச் சொன்னாராம். 

அப்போது, சாய் பாபா, தன்னுடைய சிஷ்யர்களுடன் இருந்தாராம். அவருக்குப் பிடித்த சிஷ்யர், சாய் பாபா பின்புறம் நின்று கொண்டு இருந்தாராம்.  அவர் இந்த தங்க கட்டிகளை பார்த்தவுடன், ஆசையாக அந்தத் தட்டை வாங்குவதற்கு சற்று முன்னே வந்தாராம்.
அப்போது, சாய் பாபா, அந்த சிஷ்யனை, நிறுத்தி, பார்த்து கேட்டாராம். “நான் தங்கமா, தட்டில் இருக்கும் இது தங்கமா” . அசந்து நின்ற அந்த சிஷ்யர், “நீங்கள்தான் தங்கம்” என்றாராம்.  “அப்போது அந்தத் தட்டில் இருந்த தங்கத்தை திருப்பிக் கொடுத்து விடு, வேண்டாம்” என்றாராம், சாய் பாபா.

இப்போது, நமக்கு ஒரு சந்தேஹம் வரும். தங்கப் பாளங்களை வேண்டாம் என்று சொன்ன சாய் பாபா, ஒரு ரூபாய் கொடு, ஐந்து ரூபாய் கொடு என்று கேட்பானேன் ?

திரு சுகி சிவம், சொல்லும்போது, “அவர் அவர்கள் தன் வாழ்க்கையில், நிறைய பாவம் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு உள்ளனர்.  அதனால் அவர்கள் சம்பாதித்த பொருளில் பாவம் கலந்து இருக்கிறது. பாபா, அவர்களிடம் பணம் வாங்குவதின் மூலம், அவர்களின் பாபத்தைக் குறைக்கிறார்- என்பது தான் அதன் உள்ளர்த்தம்.
நமக்காக, நம் நலத்திற்காக, பாபா எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்று நினைக்கும் போது மெய் சிலிர்க்கிறது.

தொடரும்

Friday, 3 March 2017

அபிராமி அந்தாதி – கி. வா. ஜ. - கண்ணதாசன் - விளக்க உரை:

பாடல்:- 13

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளேபின் கரந்தவளே, கறைக கண்டனுக்கு மூத்தவளேமூவா முகுந்தற்கு இளையவளே மாத்தவளே, உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

இதன் பொருள் அநேகம் பேருக்குத் தெரிந்தாலும், சில வார்த்தைகள பார்க்கலாம்.

முதல் வரிகளின் அர்த்தம்:
பதினான்கு புவனங்களையும் பெறாது பெற்றவளே.  அவைகளைக் காக்கின்றவளே, பின் மாயை வடிவில் ஒடுக்குபவளே.

கறைக்கண்டனுக்கு மூத்தவள் என்றால் என்ன பொருள். ?
ஆல கால விஷத்தை உண்டதால் கறை என்று ஆயிற்று- என்று கண்ணாதாசன் கூறுகிறார்
“மூவா” என்பதற்கு “சீர் இளமை” என்றும் கூறுகிறார்.

கி. வா ஜகந்நாதன்:
பிரமன் முதலான மூவரிடத்தும் இருந்து, முத்தொழிலையும் இயற்றுபவள், அம்பிகை என்று சொல்வர்.  அதாவது, ஆதி சக்தியில் இருந்த சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள். லலிதா சஹாஸ்ரநாமத்தில், “ஸ்ருஷ்டி, கர்த்ரி, பிரஹ்மரூபா, கோப்த்ரி, கோவிந்தா ரூபிணி”  மேலும் “சம்ஹாரிணி, ருத்ர ரூபா” என்றும் வருகிறது.  “சக்தித் தத்துவத்திநின்றும்  சதாசிவ ததத்துவம் தோன்றலின் மூத்தவள்” என்றும் சொல்லலாம்.

மாத்தவளே- பெரிய தவத்தை உடையவளே என்று பொருள்



Monday, 27 February 2017

மயிலையேஅழகு, அழகே மயிலை

கடந்த  10 வருடங்களாக மயிலாப்பூரில் வசித்து வருகிறேன்.   தருமமிகு சென்னை மாநகரத்தில்,  இந்த இடம் கடற்கரை ஓரத்தில் இருந்தாலும்,   கற்பகாம்பாள் கோவில் இருக்கும் இடம் என்பதால், என்னவோ மயிலாப்பூர், சென்னையின்  மத்தியில் இருப்பதாக ஒரு திண்ணமான எண்ணம். உலக அளவில் பிரசித்தி பெற்ற இடம்.   “என்னது !! சென்னைக்குச் சென்றபோது கபாலி கோவிலைப் பார்க்கவில்லையா ?  என்ன சார் நீங்க ?”  என்று யாராவது வெறுப்பேற்றுவதற்க்கு முன்பு மயிலாப்பூரை பார்ப்பது நலம். அது என்னவோ இந்தக் கோவிலைச் சுற்றி  விஷ்ணு கோவிலும், சிவன் கோவிலும் பல இருந்தும் கூட கற்பகாம்பாள் கோவில் என்பது ஒரு படி ஒசத்தித்தான் போலும். 
திருச்செந்தூர் போன்று கடற்கரைக் கோவிலாக இருந்தது, பிறகு, சாந்தோமில் உள்ள church க்காக, வழி விட்டு சற்று உள்ளே வந்தது.  பழைய சரித்திரத்தைப் பார்க்கும் போது, முதலில், போர்த்துகீசியர்களால் கடற்கரையில் இருந்த இந்த கோவிலை இடித்து  church கட்டப்பட்டது. பிறகு இந்த கோவிலைக் கட்டும்போது, இந்து ராஜாக்கள், church ஐ இடிக்க வில்லை.  அதற்கு மாறாக, சற்று உள்ளே தள்ளி கோவிலைக் காட்டினார்கள். இந்து மதத்தில், மத நல்லிணக்கம் எவ்வளவு உயர்வாக இருந்தது அந்தக் காலத்தில் என்பதற்கு இது ஒரு உதாரணம். 
நான்  முதலில் Chartered accountancy படிப்பு படிப்பதற்காக சென்னை வந்தபோது, இந்த இடத்தைப் பார்த்ததாக ஞாபகம் இல்லை. எங்கேயோ அண்ணா நகரில் மாமா வீட்டில் தங்கி பாண்டி பஜார் அருகே ஆடிட்டர் ஆபிசில் வேலை செய்து கொண்டு இருந்த எனக்கு மயிலாப்பூரின் மகத்துவம் தெரியாமற் போனது ஆச்சர்யம் இல்லை.
மறு பிரவேசமாக  சென்னையில் குடித்தனம் வைத்த பிறகு,  மந்தவெளிப்பாக்கம், மந்தவெளி, மயிலாப்பூர், என்று மானாவாரிக்கு வீட்டை மாற்றி, தற்போது, சாய் பாபா கோவிலில் பின்புறம் இருக்கும் அலமேலுமங்காபுரத்தில் வாசம்.
என்னமோ தெரியவில்லை, கபாலியுடன் சேர்ந்த கற்பகாம்பாள் அருளோ, அல்லது  முன்னோர்கள் செய்த புண்ணியமோ , மயிலாப்பூர் என்பது என் வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்டது.
என் மனைவி, லட்ச ரூபாய் கொடுத்தாலும் மயிலாப்பூர் விட்டு வரமாட்டேன் என்று சொல்ல  “என்ன இருக்கு இந்த மயிலாப்பூரில்” என்று கேட்கத் தோணவில்லை.  ஏனெனில், எனக்கே, இங்கு நிறைய இருப்பதால் !!!
உத்தர கோச மங்கை என்ற பெயரை  மயிலாப்பூரில் இருப்பவர்களோ, அல்லது, இங்கு வந்த செல்பவர்களோ,  எத்தனை பேருக்கு தெரியும்  ?   (பதில் கீழே)
கற்பகாம்பாள், கபாலியுடன், அழகாக உட்கார்ந்து கொண்டு, இருக்க, அவர்கள் எதிரில்  ஆஞ்சநேயசுவாமி  கை கூப்பி நின்று கொண்டு இருப்பதை,  கபாலி கோவிலில் எத்தனை பேர் பார்த்து இருக்கிறீர்கள் ? (பதில் கீழே)
கற்பகாம்பாள் சன்னதிக்குப் போகும் முன், நந்தியின் இடது புறத்தில் உள்ள சுவற்றில், திருவெம்பாவை எழுதி இருப்பதைப் பார்க்கலாம்,  அதே சுவற்றில், கீழ்கண்ட வாசகம் எழுதி இருக்கும்.


மாணிக்க வாசகர் அருளிய பொன் மொழிகள்:
“உடையாள் உந்தன் நடுவிருக்கும்
உடையாள் நடுவில் நீ இருத்தி
இரு நீரும் அடியார் நடுவில் இருப்பீர். அதனால்
அடியேன், அடியார் நடுவில் இருக்கும் அருளைத்
தருவீர், முடியே முதல....”

இதற்கு என்ன அர்த்தம் என்று யோசித்திருக்க்கிறோமோ ?
இதன் அர்த்தம்:
மாணிக்கவாசகரைப் பார்த்து, சிவபெருமான், கேட்கிறார்.
சி. பெ-  மாணிக்கவாசகரே, கைலாசத்துக்கு வருகிறீர்களா ?
மா. வா- வரமாட்டேன் !!
சி. பெ-  (அதிர்ச்சியுடன்)), என்னது வரமாட்டீரா !!!. அவன் அவன்  கைலாசம் கைலாசம் என்று அலைகிறான். நீர் என்னவென்றால் வரமாட்டேன் என்கிறீரே ?
மா. வா- கைலாசத்தில் என்ன இருக்கிறது ?
சி. பெ-  கைலாசத்தில், நான் இருக்கிறேன்.
மா. வா-  பிறகு
சி.பெ- உமையம்மை இருக்கிறாள்
மா. வா- பிறகு
சி. பெ- கந்த வேள் இருக்கிறார்
மா வா.- பிறகு
சி. பெ- பிறகு என்ன வேண்டும் மாணிக்கவாசகரே ?
மா. வா- அடியவர் உண்டா ?
சி. பெ- அடியவர் கைலாசத்தில் இல்லை
மா.வா- அப்போது நான் அங்கே வரவில்லை !
சி. பெ- (ஆச்சர்யத்துடன் ) –அடியவரிடம் என்னிடம் இல்லாதது என்ன இருக்கிறது ?
 மா. வா-  சுவாமி.   நீங்கள் இருக்கிறீர்கள், உன் உடம்பில் உமையவள் இருக்கிறாள், நீங்கள் இருவரும், அடியவர் மனதில் இருக்கிறீர்கள்.  அதனால், நான், அடியவரிடம் இருந்து விட்டால், உன்னோடும், உமையோடும் இருந்த பலன் எனக்குக் கிடைக்கும் அல்லவா !!.  அதனால் பூலோகத்தில் என்னை விட்டு விடவேண்டும்.
இப்போது மீண்டோம் அந்த கவிதையைப் படிக்கவும்
என்ன அழகான வரிகள்.  அம்சமான அர்த்தம்”
பல வித ஆச்சர்யங்கள் நிறைந்த இடமாக மயிலையைப் பார்கிறேன்.  இன்னும் காலில் செருப்பு போட்டுக்கொள்ளாமல்  மாட வீதியில் நடக்கும், மக்கள்,    (“மயிலை மாநகர் மேவிய கந்தப் பெருமாளே” என்று பாடிய அருணகிரிநாதர், “கல்லாடை புனைந்தருளும் கபாலியை, கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே” என்று பாடிய சம்பந்தர் போன்ற  துறவிகள் நடந்த இடம் என்பதால்.)
அருமையான தேவாரப் பாடல்களை பாடும், ஓதுவார் சத்குருநாதர்,  நவராத்திரியில், கொலு பொம்மைகள் கடைகள், கார்த்திகை தீபத்தின் பொது, அகல் விளக்குகள் கடைகள், எப்போதும் தூள் பரத்தும், பூ கடைகள், ஒரே விலையை எல்லா இடத்திலும் விற்கும் கறிகாய் கடைகள்.
மார்கழி மாதம் வந்தால் விடியற்காலை ஐந்து மணிக்கு, தெருவில் ஒரு கோஷ்டி விஷ்ணு சஹஸ்ர நாமம்  ஜபித்துக் கொண்டு வா, ஒரு பக்கம், புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம் போன்ற வேத கோஷங்கள், மறு பக்கம், பாபநாசம் சிவன் வம்சாவளியினர்  அவருடைய பாடல்களை பாடிக்கொண்டு வர, இன்னொரு பாகம், “தோடுடைய செவியன்” என்று  தேவாரப் பாடல்களைப் பாடிக் கொண்டு வர,  எனக்குக்
“கேட்க, பார்க்க, ரசிக்க,.....கோடி ஜன்மம் வேண்டும்” என்று சொல்லத் தோன்றும்.  சென்னையில் எத்தனை கோவில்களில்  மார்கழி மாதம் இத்தனை சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்பது எனக்குத் தெரியவில்லை.
63 வர் என்ற ஒரு வைபவம், -“காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி” என்று பாபநாசம் சிவன் பாடிய பாடலில் எத்தனை உண்மை இருக்கிறது என்பது 63 வர் உத்சவத்தின் போது பார்க்கலாம்.  ஏன் பாபநாசம் சிவன் கற்பகத்தையும், கபாலியையும் தவிர, அருகிலுள்ள வேறு சிவ ஆலயங்களைப் பாடவில்லை என்பது புதிராகவே இருக்கிறது.
இன்னும் கபாலியை முதலில் பார்த்த பின், கற்பகாம்பளைப் பார்க்கும் பேர்வழிகள் இருக்கிறார்கள். 
(சிவனுக்கு அப்புறம்தான் சக்தி என்பது ஆவர்கள் வாதம்)
சோலைகளும், மயில்களும் நிறைந்த இந்த இடம், இப்போது,  மாடங்களும், அடுக்கு மாடிக் கட்டிடங்களும், கோவில் நிலத்தை அபஹரித்துக்கொண்டு,  வரி கட்டாமல் இருக்கும், பிரகஸ்பதிகளும் (அவர்கள் பெயர், பொன்னெழுத்துக்களில் பொறிக்கப் படாமல், பெரிய எழுத்துக்களில் கோவில் உள்ளே வைத்திருப்பார்கள்.) கொண்ட ஒரு நவீன இடமாக காட்சி அளிக்கிறது.
 என்னதான் நவீனமாக இருந்தாலும், மாறாதது, கற்பகம்பாளும், கபாலியும் தான்.  

இப்போது உத்தர கோச மங்கை- மாணிக்கவாசகர், கற்பகம்பாளை, அர்த்தஜாமத்தில், சயன அறைக்கு அனுப்பும் போது, உத்தர கோச மங்கை என்று சொல்லி, போன்னூஸலில்  (பொன்னூஞ்சல்)  கபாலியுடன் உட்கார வைத்து ஆட்டுகிறார்.  இது பார்க்க வேண்டிய காட்சி.  
சயன அறைக்கு மேலே பார்த்தால்,  கபாலியும், கற்பகம்பாளும் உட்கார்ந்து கொண்டு இருக்க,  அவருக்கு எதிரே, ஆஞ்சநேயர் நின்று கொண்டிருக்கும் காட்சி,
மிக மிக அரிய காட்சி.  இதன் பின் புலத்தில் அமைந்த கதை எனக்குப் புரிய வில்லை என்றால் கூட,  அனுபவிக்க வேண்டிய ஒரு காட்சி.
 “இன்ன தன்மையன் என்று அறிய வொண்ணா, எம்மானை எளி வந்த பிரானை” என்று தேவாரத்தில் பாடியுள்ள படி,  மைலாப்பூர், இன்னவென்று அறிய வொண்ணா- சுகம் தரும் இடம்.

                                                                                      (தொடரும்)

Tuesday, 14 February 2017

Sringeri Jagadguru Speeches- one part

படித்ததும் பிடித்ததும்- பகுதி- ஓன்று


Sringeri Jagadguru on What to do if no time for Puja or Nitya Karma

Excerpt from the book: Sanatana Dharma Vol. 1
Chapter 11 Dharma is eternal and unchanging
Page 75-77

Today many people lament: ?Swamiji, we are not in a position to put into practice the principles ordained by the sastras. Times have changed. In the past people led a leisurely life. They used to indulge in religious pursuits from morning till evening. We have to rush to our offices at 8 AM in the morning. How can we take up religious practices, like in the past?? They request me to frame a new set of principles to suit the present day situation. In their opinion, rules framed by the Jagadguru would be accepted by all and would be valued.

I told them that Sri Adi Sankaracharya did not establish the Peethas to stipulate new sets of rules and procedures. He established these Peethas to guide the people, to encourage them and ensure that they abided by the Sastras. It is thus impossible, to change the sastras.

They persist, saying it is not possible to follow the guidelines laid down in the sastras. This is only due to the poor understanding of what is prescribed in the sastras. What do the sastras prescribe?

It is prescribed that we offer worship both in the morning and in the evening. If an elaborate worship is not possible owing to some constraints the sastras prescribe a shorter method of worship as a solution. Why is this not being adopted?

It is prescribed that you should chant the Gayatree mantra 1008 times during the sandhyavandana. If this is not possible it suggests that the mantra be chanted at least 108 times. If, even this is not possible it suggests that you chant the mantra at least 32 times.

The sastras suggest both, mukhyakalpa and anukalpa. lf you follow mukhyakalpa you have to chant the mantra 1008 times. If it is not possible to follow mukhyakalpa you may follow anukalpa and chant the Gayatree mantra only 108 times. What you are asking is - If there is a means by which sandhyavandana can be totally avoided. I am emphatically saying that it is not possible. It is my firm opinion; if it is not possible to chant the Gayatree mantra 1008 times, chant it 108 times; even if that is not possible chant it atleast 32 times, but do not give up sandhyavandana.

If you cannot perform worship in an elaborate manner, chanting Rudra and chamaka, perform it at least in a brief manner, chanting only the purushasookta.

lt would be sheer escapism if you say that even this is not possible.You have time for reading the news papers, for watching the television serials and all other activities. If you say you do not have time only for chanting the Gayatree mantra 108 times it would only amount to escapism. It is a lame excuse given to cover, your lack of interest and faith.

Wednesday, 21 December 2016

Vijay Siva and his "UA" Concert in Vani Mahal

N Vijay Siva
Manoj Siva
Charumathy raguram
Chandrasekhar Sharma-Ghatam

Date 20-12-2016

Thyaga brahma Gana Sabha

VS  has limited concerts this time.  He has decided not to perform in Music Academy,  MFAC,  NGS.  I thought of attending some of his concerts as he is always the best in “deliverables” of pure CM

Interesting point needs to be mentioned here.  Those who did not attend were fortunate.   In the name of innovation, in line TM Krishna , he started one new “concept’ in this concert, which went  “ugly
Let us see the list

·         DarbAr- varnam
·         Dinamani vamsa-Harikambodhi- (N) in sharva vinuta nanu”  and (S) in dinamani vamsa
·         Gowlipantu ragam for 3 minute s followed by “teradee yagarAda”  (T)
·         Bilahari-Sub main- shrI bAlasubrahmaNyA agacchAgragaNya-MD-  N in  AbAla gOpA vidita dInasharaNya- (S)
·         mAyammA-Ahiri-Shyama sastri
·         MadhyamAvathy-rAgam- SaravaNa bhava guhanE- P.Sivan
N in “annaiyOdu thandhai nee….. nambinEnE”
·         Bairavi- RTP- Kanta jati triupta-  pallavi line ஆனந்த நடனம் ஆடும் சபை, சித்சபை, ரவி சந்திர அக்னி நயனன்” followed in gowda malhar, vasantha bairavi.
·         Tani
·         jAvali-samamidhE rArA swami- PSI
·         Adu rAttE- nAmakkal rAmalingam pillai- behag and few other rAgAs
·         mahAyOga pEEtE- virutham- “pandarEEchA”- PahAdi  (Raga set by Violinist R.K.Sriramkumar)
·         iyal isai- husEni-Tiruppugaz-ArunagirinAthar.
·         Mangalam

Whenever I leave VS’ concert, I feel so sorry for the great musician who has been deprived of (now or never, I don’t know.  In my opinion, those who are not performing in MA will not get Sangeetha Kalanidhi (SK), the coveted SK.   He deserves it and his photo needs to be placed among the giants in MA wall. 

Just folding his hands, (like a student in front of the teacher (those days)), his control over the rAga, at any level, is amazing.  Though his bairavi RTP (was taken at 7.55 PM) was short,  his rendition was top class.   Any  rAgA for that sake.   He encouraged his two disciples to render some  swarA portion  in RtP and they did admirably well.    During the concert,  CR’s violin strings got detached and she took some time to repair it. VS filled beautifully that gap by rendering the rAgA.

Even in Parthasarathy sabha concert,  his tOdi, followed by   “Sri krishnam bhaja mAnasa” was the best of tOdi, I heard in recent times.  With Trichy Sankaran (in PSS), he created an aura of beautiful music around us.

Manoj Siva & CSS are one of the top 5 pairs to watch.  Together they perform well.  Understanding and execution are perfect sync.

Violinist does  not need any appreciation.  At this young age, her talent is exemplary.

Let me come to the main point.  VS had two screens ,as you see in Corporate Board Rooms, on both his sides.   When I entered the hall, I was surprised to see the screens,  the words of his song  appear in the screens in Tamil and meaning in English.   I thought  the sabhA  has fixed it for all the concerts for the rasikAs to know the rAgAs and the kritis and of course, meaning.  Later, I came to know that is the produce of VS.

It was new to me and though I enjoyed it initially and after some time, I felt irritation for the following reasons:

·         The font size is not uniform and sometimes, I don’t see what is written in English, sitting in the second row.

·         I don’t want to know the meaning of any of the kritis as I have listened these kritis, so far, without knowing the meaning.   If you ask me, what is the meaning  “dinamani vamsa”,  I don’t know even today, though, I have heard this song at least 50 times.   I know only the news paper “dina mani”
·         Even if the rAgA identification sake,  those rasikAs in Vani mahAl, definitely knows,  madhymavathi and bairavi.  This does not need any screen

·         It is a distraction for me from listening the music.

·         The good part is, meaning of mAyamma and abhang (pahadi), as appeared in the screen was very good and really made me to appreciate the composers.  Some tamil words need correction like  காமாக்க்ஷி

All well, now come to  climax.

·         When jAvali was sung by VS, he also tried to show the meaning in the SCREEN.  All of us know about jAvali and the meaning.  It is better not to sing in concert and even one sings, not to discuss the meaning.

·         It was so bad on the part of VS to show the English translations like “my husband is not there’, my father in law is also not there”, you e…..ed me, last night….etc….

·         I was shocked to see the lines and even the violinist was so embarrassed along with other artists.  It was very disturbing for the rasikAs.   The “project”  was managed by two young girls and one boy.  (at the end, I talked to them, in general).  I don’t know how these kids felt.

I don’t want to tell more about this, but, this is not in good taste that to from a senior artist VS.   His guru DKJ would not have agreed for this.  


I thought for a while whether it is “UA” certifed CM Concert !!!!

Thursday, 10 November 2016

சஞ்சய் சுப்ரமணியன்- கச்சேரி- பாரத் சங்கீத உற்சவம்-  2016






வரதராஜன்- வயலின்

நெய்வேலி வெங்கடேஷ்- மிருதங்கம்
ஆலத்தூர் ராஜ கணேஷ்- கஞ்சிரா


சஞ்சய் சுப்ரமணியம் தன் ஒவ்வொரு கச்சேரியிலும் தன்னுடைய தரத்தை உயர்த்துவதோடு, ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார். அவர்க்கென்று ஒரு “அர்த்தமுள்ள, பிரியமான” ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த ரசிகர் பட்டாளத்தில் நான் இருக்கிறேன் என்று சொல்வதில் எனக்கு கர்வம் உண்டு.


பா,ச,உத்சவத்தில், ராமகிருஷ்ண முர்த்தி, விஜய சிவா மற்றும் சஞ்சய் சுப்ரமண்யம் இவர்களது கச்சேரிகள் தான் சம்பிரதாய கச்சேரி.  ராமகிருஷ்ண முர்த்தி கச்சேரிக்கு என்னால் செய்ய முடியவில்லை. அதனால் இந்தக் கச்சேரிக்கு செல்ல முடிவு செய்தேன். விஜய் சிவா வரும் வெள்ளிக் கிழமை பாட இருக்கிறார்.


7 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கச்சேரி சற்று முன்பாகவே ஆரம்பித்து விட்டது. நான் மெதுவாக சென்றதில் இடம் கிடைக்காமல் பால்கனியில் தஞ்சம் அடைந்தேன். நாரத கான சபா போன்று ஒரு பெரிய ஹால் நிரம்பி வழிகிறது என்றால் அது சஞ்சய் கச்சேரியாகத்தான் இருக்க முடியும். அதுவும் ஒரு வார நடுவில், செவ்வாய்க்கிழமையில். சஞ்சய் எப்படி என்றால், “இதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட தருணம். என் உயிரைக் கொடுத்து இரண்டு மணி, மூன்று மணி நேரம் ரசிகர்களைத் திருப்தி படுத்துவேன். நாளையிலிருந்து எனக்கு கச்சேரி கிடையாது” என்ற தீர்மானமான கொள்கை உடையவர்.


இதை அவர் “சங்கீத கலாநிதி” விருது வாங்கியதற்காக எஸ் எல் நரசிம்ஹன் ஏற்பாடு செய்த ஒரு விழாவில், அவரே சொன்னார்.


கேதாரத்தில் ஒரு வர்ணம் ஆரம்பிக்க, கச்சேரி களை கட்டிவிட்டது என்றே சொல்லவேண்டும்.  புதிது புதிதாக வர்ணம் பாடுவது என்பதே ஒரூ சிறந்த முயற்சி. இரண்டாவது பாடலாக, சிவ சிதம்பரமே என்ற “முத்து தாண்டவர்” எழுதிய பாடலை பாடி, அதில் ஒரு நீண்ட ஸ்வரப்ரசாதம் செய்து தனது குரலை சற்று “தீட்டிக்கொண்டார்”. இது நாகஸ்வராவளி என்ற ராகம். இதில் “ஸ்ரீபதே” என்ற ஒரு தியாகராஜர் கிருதி ஒன்று உண்டு. அது சங்கீத கலாநிதி K.V.NARAYANASWAMY அவர்கள் பாட கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். அரியக்குடி பாணியின் அம்சமான பாடல்.


முதல் இரண்டு பாட்டுக்களில், சஞ்சய் கொஞ்சம் குரல் கலங்கிய நீர் போல் இருந்தது. நாடகப்ரியா என்ற சற்று பரிச்சயம் இல்லாத ரகத்தை எடுத்து ஆரம்பித்த போது தான், உண்மையான சஞ்சய் வெளியே வந்தார்.


ராகத்தை, நிதானமாக நிறுத்தி, சில இடங்களில், அந்த ராகத்தை பட்டை தீட்டி, மின்னும் வைரமாக ஜொலிக்கச் செய்தார்.

பாட்டு, “இதி சமயமு” என்ற மைசூர் வசுதேவசார் எழுதிய பாடல். “இது தான் சமயம், என்னை காப்பதற்கு” என்ற அர்த்தத்துடன், மிக எளிமையான அர்த்தத்துடன் எழுதப்பட்ட பாட்டு.  சமயமு என்ற இடத்தில், நிறுத்தி, அழகு படுத்தியது, தீபாவளி மருந்து (லேகியம்) சாப்பிட்டு, காபி குடித்தால், என்ன ஒரு சுகம் வருமோ, அந்த சுகம். நிரவலும் செய்து பாட்டுக்கு மேலும் அழகு சேர்த்தார்.


“வேலையா தயவில்லையா, எனக்கருள்” என்ற, கோடிஸ்வர ஐயர், பாட்டை எடுத்து, எக்ஸ்பிரஸ் வேகத்தில் பாட, அடுத்து வரும் பாட்டுக்காக மனம் ஏங்கியது. கோடீஸ்வர ஐயர், அய்யா என்று ஒவ்வொரு வரியிலும் முடியுமாறு எழுதிய ஒரு அற்புதமான பாடல்.
நீலாம்பரி ராகம் எடுத்தார். பொதுவாக நீலாம்பரி ராகம் என்பது “துக்கடா ராகம்’ என்பது என் கருத்து. அதை எவ்வளவு விஸ்தாரமாக பாடினாலும் 10 நிமிடத்திற்கு மேல்” ஒன்றுமில்லை என்று கருதுபவன் நான். அதனால், ராகத்தில் சற்று “கடுப்படைந்த” எனக்கு அருமையான கிருதியின் மூலம், திருப்தி செய்தார். பத வர்ணம் என்பதால், சற்று விஸ்தாரமான சிட்டைஸ்வரம்,

“ஆனந்தவல்லி” என்ற ஒரு சுவாதி திருநாள் பாடலை பாடியதன் மூலம். என் ஜன்மம் சாபல்யம் அடைந்தது என்றே சொல்ல வேண்டும். முதலில் இது தீட்சிதர் கிருதி என்றே நினைத்தேன். குரூகுஹ என்று நினைத்த எனக்கு “குரு முதம விரதம்” என்று கேட்டபோது தெரிந்தது, இடு சு.தி அவர்களின் பாட்டு என்பது. இதில், சிவனின் தாமரை மலர் போன்ற பாதத்தை மொய்க்கும் வண்டாக “அம்பாளை” கற்பனை செய்து பாடியிருப்பது, மகாராஜா சுவாதி திருநாள் எவ்வளவு “லயித்து’ இந்தப் பாடலை எழுதி இருப்பார் என்று புரிந்து.  மேலும் ஆனந்தவல்லி அம்பாளுக்கும் எனக்கும் நிறைய சம்பந்தமுண்டு.  எந்த ஊர் ஆனந்தவல்லியை மனதில் நினைத்து சுவாதி திருநாள் பாடினரோ, நான் பிறந்த ஊரான செம்மங்குடியின், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் அவர்கள் ஊர்தான், அம்பாள் பெயர் ஆனந்தவல்லி.  என் பாட்டி என் கையைப்பிடித்து அழைத்து சென்று காட்டிய முதல் கடவுள்.  ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர்.  

இந்த ராகம் பாடும்போது, வயலினில் வரதராஜன், மிருதுவாக, நீலாம்பரியை மீட்ட, ஆனந்தகமாக தூக்கம் வந்தது. வரதராஜனைப் பற்றி நிறைய சொல்லலாம்.  சஞ்சய்க்கு, நாகை முரளிதரனா, வரதராஜனா, என்றால், சாலமன் பாப்பாவுக்கே, தீர்ப்பு சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான்.

“ஹரிடாசுலு வெடலு” என்ற ஒரு, இதுவரை கேட்காத த்யாகராஜர் கிருதியை, துரித கதியில் பாடினார். இது, தியாகராஜர், உஞ்ச வ்ருத்தி எடுக்கும்போது பாடியிருக்கக் கூடும். இந்த யமுனா கல்யாணி ராகம், அழகாக இருந்தாலும், பாடிய விதம், மனசுக்கு ஒட்டவில்லை. ஒரு தியாகராஜர் கருதியாவது நிதானமாக, நிறுத்தி, ஓட்டாமல், அழகாக பாடவேண்டும் என்பது என் தீர்க்கமான கருத்து.

பைரவி ராகத்தை, மெயின் ஆக எடுதிக்கொண்டார், அதை கையாண்ட விதம், பிரமாதம் என்றே சொல்லவேண்டும். அவருக்கே உரிய நாதஸ்வர கோர்வை, அனயாசமான புடிகள் எல்லாம் இருந்தது, வரது, இந்த ராகத்திற்கு தான் வயலினால் அழகு சேர்த்த பிறகு, ராகம், தானம் பல்லவி ஆரம்பித்தார்.

பல்லவி- இதுதான். வேலவனே, கோலாகலனே, உனது பாதம் துணையே, ஒராறுமுகனே, அறுமுகனே.

பல்லவியில், பியாகடா, சுப பந்துவராளி, மோகனம் மூன்றையும் சரி சமமாக கொடுத்து, ஒரு அருமையான கல்யாண சாப்பாடு, சாப்பிட்ட திருப்தியைக் கொடுத்தார்.

தனி, தனியாக இல்லாமல் நெய்வேலியாரும், ஆலதுராரும் அழகான ஜோடி சேர்ந்து கையாண்டார்கள்

மணி ஆகிவிட்ட படியால், அவசரமாக கிளம்ப வேண்டியிருந்ததால், துக்கடா செக்க்ஷன் கேட்க முடியவில்லை.

மொத்தத்தில், ஒரு அருமையான கச்சேரி. அடுத்தது சென்னையில் 
எங்கே பாடினாலும் உடனே கேட்கவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார் என்பதை மறுக்கவே முடியாது.

கை தட்டல் என்பது ஒரு சம்ப்ரத்யகமாக இல்லாமல் ஆத்மார்த்தமாக இருந்தது.  வரதராஜனின் ஒவ்வொரு “தனி” யும் அருமை.