Friday 3 March 2017

அபிராமி அந்தாதி – கி. வா. ஜ. - கண்ணதாசன் - விளக்க உரை:

பாடல்:- 13

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளேபின் கரந்தவளே, கறைக கண்டனுக்கு மூத்தவளேமூவா முகுந்தற்கு இளையவளே மாத்தவளே, உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

இதன் பொருள் அநேகம் பேருக்குத் தெரிந்தாலும், சில வார்த்தைகள பார்க்கலாம்.

முதல் வரிகளின் அர்த்தம்:
பதினான்கு புவனங்களையும் பெறாது பெற்றவளே.  அவைகளைக் காக்கின்றவளே, பின் மாயை வடிவில் ஒடுக்குபவளே.

கறைக்கண்டனுக்கு மூத்தவள் என்றால் என்ன பொருள். ?
ஆல கால விஷத்தை உண்டதால் கறை என்று ஆயிற்று- என்று கண்ணாதாசன் கூறுகிறார்
“மூவா” என்பதற்கு “சீர் இளமை” என்றும் கூறுகிறார்.

கி. வா ஜகந்நாதன்:
பிரமன் முதலான மூவரிடத்தும் இருந்து, முத்தொழிலையும் இயற்றுபவள், அம்பிகை என்று சொல்வர்.  அதாவது, ஆதி சக்தியில் இருந்த சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள். லலிதா சஹாஸ்ரநாமத்தில், “ஸ்ருஷ்டி, கர்த்ரி, பிரஹ்மரூபா, கோப்த்ரி, கோவிந்தா ரூபிணி”  மேலும் “சம்ஹாரிணி, ருத்ர ரூபா” என்றும் வருகிறது.  “சக்தித் தத்துவத்திநின்றும்  சதாசிவ ததத்துவம் தோன்றலின் மூத்தவள்” என்றும் சொல்லலாம்.

மாத்தவளே- பெரிய தவத்தை உடையவளே என்று பொருள்



No comments: