Monday, 22 September 2014

Mandolin Srinivas and Lord krishna- An Unique Rasa Krida

I forgot the number of times, I attended his concert whether in Bangalore, Trichy and Chennai.  As instruments were rare those days , mandolin was accepted by rasikas, wholeheartedly.  Most of the rasikas wanted to see how this small “guitar” like instrument produces, so much gamakAs and pristine music !!!

I was told by one Senior Vidwan 2 days back, when he gave performance at an early stage, Indian Fine Arts,  Veena S Balachander got so moved and e removed his chain and gave it to him and told the audience- “mark my words, here is a genius who will rule the world with his strings”.

Yes, he did.  As Abhishek has in his throat, mandolin had in his fingers.

Some people I always wanted to meet, but could not,  like Shri MMI,  Madurai Somu, MGR (though I have seen, but could not meet) , Mali, Rajarathnam Pillai.  I feel all of these people all “avatAra purushAs” in their own way.

Long back when I was introduced to him by  Shri. Umayalpuram Sivaraman, I told him that I was one of the drops in the ocean of rasikas and I wanted to just stand near him to have the feeling of “maestro”.  He with his “usual” smile raised his hands upwards implying that it was “sadguru katAksham”

Another time, when I met him somewhere in Trichy,  I told him that you are not “Srinivasan” but Lord Krishna.  As He stole the hearts of “GopikAs” with his flute, you stole the hearts of million rasikas (gopikAs) with you Mandolin.   He smiled and refused to be compared with Lord.  He, then, enquired, about my family and there ended our meet.

After 3 years, when I met him after vani mahal concert,  he called my name “Ramji how are you and your family”.  I stunned to see his memory.  He asked me a question which I still remember- “Did I steal any rasika’s heart today”.  I was bowled over and could not control the emotions. 

On another day at a lounge at Chennai Airport- he was with Shri Vinayakaram. We again wandered  in the topic of Krishna/Gopika story and he informed me – when  Krishna wanted to perform “rAsa kreedai”,  He wanted to call Kopikas to His place and so, he started playing his flute.  GopikAs, on hearing the flute,  left their work, whatever they were doing.  Those who were cooking, milking the cow,  providing food to their husbands, boiling milk, and who were feeding- left the job(s) at once, and proceeding towards Lord.  But, the Gopikas who were wearing jewels, did not leave it as it is.  They were proceeding to Lord by wearing the jewels.  They had not left the jewels - pointing their craze for jewels.

Sukhabrahma rishi,  the creator of Srimadh Bhagavatham, who had no difference to the gender- How he captured the mind of ladies is a wonder- Mandolin concluded amidst laugh.

Slowly we developed a good relationship and exchanged few words, whenever we meet. May be he liked Gopika-Krishna comparison.

Iam m yet to come to terms that he is no more.  He is an epitome of “vidhya dadhati vinayam”.  How could a person of such caliber hava such humility ?.  Even Sri.Kadri and Sri. Gurucharan in their tribute wondered the same point. 

Prodigies like Tirivadudurai, or Mali, to my knowledge, did not have that humility.  I don’t see anything wrong with them too as I always see their vidwat (through their recordings) and plunge myself forgetting who they are, as a person..

But seeing a person with folded hands and say “Namaskaram” to a person like me, who is below average of a rasiga, is something incredible

I know his family problems which tore him apart.  Once I told him to go for a good counseling. He politely said- on my right side is Sri Satya sai baba and other side, Kanchi maha swamigal, why should I go for some thing else ?

Year before last, I told him, before the concert at MA, 4.30 PM slot, - “long time I did not hear “ranganayagam” from your mandolin.  He agreed and played that beautiful kriti. (nayaki)

The crematorium, in Besant Nagar, was full of people.  People who are supposed to remain calm and see the final rites,  gossiping how he died and what went wrong  in his family ?  Most irritating part was Sivamani playing drums as a tribute and people were surrounding  sivamani.as if it is IPL opening ceremony.   Even in death also, Srinivas was not allowed to be cremated  in peace.  

In the corner of the crematorium, I was standing controlling my tears remembering the maestro who lived for mandolin, conquered the world with that small instrument.

On the next day, while talking to karpagambal temple (Mylapore) senior shivachAryar who is the die hard fan of Mandolin (He likes MMI and Mandolin).  He always says- my father listens “karpagamE kadai kaN” kriti from MMI and after that no body touched my soul with this kriti except mandolin.  H said, “Saint Thyagaraja and Saint Narayana teertha were born in Andhra and became famous in Tamil Nadu and attained mukthi in TN.  Srinivas was another saint”

Very true.

He always says- “after a concert, I need two days rest to my mind as it is most stressful and on a  particular day’s of concert, I need full rest to my mind till evening, but unfortunately I don’t get” – The beauty was, he said  with smile. How sad it is ?

There was a concert with Flautist Shri Ramani.  It was the only concert, I think, where he teamed up with Shri.Ramani.  Both Flute and Mandolin never synchronises.  But both of them managed it perfectly.  Hamsadwani, Ranjani, karaarapriya- each and every raga rendered by both of them, as usual, gems. He rated this as one of the best concerts and cherished.


Friday, 8 August 2014

உஞ்சவிருத்தி – சுஜாதா - Amazing.short story. Even today, it is fresh.


சில ஆண்டுகள் வடக்கே இருந்து விட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் போன போது வழக்கம்போல் ரங்கு கடையில் போய் உட்கார்ந்தேன். ரங்கு ‘அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்’ அப்படியே இருந்தான். புதுசாக கூலிங்கிளாஸ் போட்டிருந்தான். ஆண்டாளின் பையன் அமெரிக்காவில் இருக்கிறானே பாச்சாவோ, யாரோ… அவன் கொடுத்ததாம். வழக்கம்போல் தம்பு, சீது போன்றவர்கள் வந்து அரசியலையும் சினிமாவையும் அலசினார்கள். தம்பு தேவகாந்தாரிக்கும் ஆரபிக்கும் வித்தியாசம் என்னவென்று பாடிக் காட்டினான். சீது யாருக்கு மொட்டைக் கடுதாசி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

‘‘நீ எப்ப வந்தே?’’ என்று கேட்டான் ரங்கு.

‘‘நேத்திக்குதான்.’’

‘‘கொஞ்ச நாள் இருப்பியா?’’

‘‘ஒரு மாசம் இருக்கலாம்னு ஆன்யுவல் லீவ்ல வந்திருக்கேன்.’’

‘‘நீ ஏர்ஃபோர்ஸ்லதான இருக்கே?’’

‘‘ஏர்போர்ட்ல.’’

‘‘ப்ளேன் எல்லாம் ஓட்டுவியாமே! பாகிஸ்தான் மேல நீதான் பாம் போட்டதா பேசிக்கிறா.’’

‘‘ரங்கா… பாரு, சரியா புரிஞ்சுக்கோ! நான் இருக்கறது ஏர்போர்ட். டெல்லில சப்தர்ஜங்னு பேரு விமானநிலையம். நீ சொல்றது ஏர்ஃபோர்ஸ். அது ‘பாலம்’கிற இடத்தில் இருக்கு.’’

‘‘ரெண்டும் ஒண்ணுதானே.’’

‘‘இல்…லை.’’

‘‘பின்ன… ஏர்ஃபோர்ஸ்ல யார் இருக்கா?’’

‘‘மேலச் சித்திரை வீதில ரங்காச்சாரிடா அது… அவன்கூட பைலட் இல்லை.’’

‘‘ஏர்ஃபோர்ஸ்னா எல்லாரும் பறக்க மாட்டாளோ?’’

‘‘மாட்டா!!’’

‘‘அப்ப நீ ஏர்ஃபோர்ஸ்ல இல்லை?’’

‘‘ஏர்போர்ட்… ஏர்போர்ட்!’’

‘‘பின்ன யாரோ, நீ ப்ளேன் ஓட்டறதா சொன்னாளே..?’’

‘‘அது சின்ன ப்ளேன். டிரெய்னிங் ப்ளேன்.’’

‘‘ஏர்போர்ட்ல பெரிய ப்ளேன்தானே இருக்கும்! போட்டுக் குழப்பறாங்கப்பா!’’

நான் அவனுக்கு மேலும் விளக்கும் முயற்சியைக் கைவிட்டேன். ரங்குவின் உலகம் அவன் வீடு, கடை இரண்டை விட்டு வெளியே எதும் கிடையாது. உலகம் முழுக்க அவன் கடைக்கு அரட்டையடிக்க வரும். இவன் இடத்தைவிட்டு நகரமாட்டான். பெருமாளைக்கூட பங்குனி, சித்திரை உற்சவங்களில் கடையைக் கடந்து செல்லும்போதுதான் சேவிப்பான்.

அப்போது ஒரு கிழவனார் கையில் சொம்புடன், ஒரு சிறுவன் குச்சியைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்ல… ‘உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்…’ என்று ஏறத்தாழ உளறலாகச் சொல்லிக்கொண்டு நட்ட நடுத் தெருவில் வந்துகொண்டிருந்தார். முகத்தில் ஒரு வாரத்துக்கு உண்டான வெண் தாடி. மார்பில் பூணூல். சவுக்கம். பத்தாறு வேஷ்டி.

‘‘ரங்கு, இது யாரு?’’

‘‘இவர் பேரு தேசிகாச்சாரி. ஜி.பி-னு ஐஸ்கூல்ல மேத் டீச்சர் இருக்காரே, அவரோட அப்பா.’’

‘‘ஆமாம். எதுக்கு சொம்பை கைல வெச்சுண்டு பிரபந்தம் சொல்லிண்டுபோறார்?’’

யாரோ அவர் சொம்பில் அரிசி போட்டுவிட்டு வணங்கி விட்டுச் சென்றார்கள்.

‘‘உஞ்சவிருத்தி.’’

‘‘புரியலை. ஜி.பி. இவரை வெச்சுக் காப்பாத்தலியா?’’

‘‘அதெல்லாம் இல்லை. பிடிவாதம்.’’

‘‘பணம் காசு இல்லையா? ஜி.பி. நிறையச் சம்பாதிக்கிறாரே!’’

‘‘இவருக்கே நிறைய சொத்து இருக்கு. சித்திரை வீதில ஜி.பி. இருக்கற வீடு இவர்துதான். மகேந்திரமங்கலத்தில் நெலம் எல்லாம் இருக்கு.’’

‘‘உஞ்சவிருத்தின்னா பிச்சை எடுக்கறதில்லையோ?!’’

‘‘ஆமாம். ‘பவதி பிக்ஷாம் தேஹி’ன்னு சொல்லலே… அவ்ளவுதான்!’’

‘‘புரியலை ரங்கு.’’

‘‘சில வேளைல பெரியவர்களுடைய பிடிவாதங்கள் புரியாது நமக்கு. இந்த பிராமணனுக்கு வீம்பு. போக்கடாத்தனம்.’’

ஜி.பி. என்னும் பார்த்தசாரதி செயலாக இருப்பவர். கணக்குப் பாடப் புத்தகம், நோட்ஸ் எல்லாம் போடுபவர். லட்சக்கணக்கில் விலை போகும்.

எஸ்.எஸ்.எல்.சிக்கு ஒரு செக்ஷனுக்கு கிளாஸ் டீச்சர். ஹைஸ்கூலில் சீனியர் டீச்சர் என்று மதிக்கப்பட்ட ஆசிரியர். தேசிய விருது வாங்கியிருக்கிறார். அடுத்த ஹெட்மாஸ்டர் அவர்தான் என்று பேசிக்கொண்டார்கள். அவர் தந்தையார் பிச்சை எடுக்கிறார் என்றால்…

‘‘வேணும்னுட்டே, மகனை அவமானப்படுத்தறதுக்குன்னுட்டே..’’

‘‘கண்ணு வேற தெரியலை.’’

‘‘கண்ணெல்லாம் நன்னாத் தெரியறது. தன்மேல சிம்பதியை வரவழைச்சுக்க, கண் தெரியாத மாதிரி பாடசாலைப் பையனை வெச்சுண்டு குச்சியைப் பிடிச்சுண்டு போறார்.’’

‘‘என்ன ப்ராப்ளம் அவருக்கு?’’

‘‘வரார். கேட்டுப் பாரேன்.’’

இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது அவரே கடைக்கு வந்து பெஞ்ச்சில் உட்கார்ந்தார். அவருடன் கொஞ்சம் ஈரம் காயாத வேஷ்டியின் நாற்றமும் வந்தது. எதையோ வாயிலே மென்றுகொண்டிருந்தார். கிட்டப் பார்க்கையில் ஆரோக்கிய மாகத்தான் இருந்தார். நல்ல மூங்கில் கம்பு. அதைப் பையன் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு நின்றுகொண்டிருக்க…

‘‘ஓய்! லைப்பாய், ரெக்சோனான்னு சோப்பு ஏதாவது போட்டுக் குளிக்கிறதுதானே? கிட்ட வந்தாலே கத்தாழை நாத்தம்!’’

‘‘மாட்டுப்பொண்ணு எங்கடா சோப்பு கொடுக்கறா? ஒரு அண்டா தண்ணிகூட வெக்கமாட்டேங்கறா ரங்கு.’’

‘‘ஜி.பி கிட்ட சொல்றதுதா&ன?’’

‘‘அவனா? பொண்டாட்டிதாசன்..! தொச்சு, அது என்னடா சாக்லெட்டு?’’

‘‘பட்டை சாக்லெட் தாத்தா.’’

‘‘அது எனக்கு ஒண்ணு இவனுக்கு ஒண்ணு கொடு! ரங்கநாதா..!’’ என்று பெஞ்ச்சில் உட்கார்ந்து, ‘‘தீர்த்தம் இருக்குமா? என்ன வெயில்.. என்ன வெயில்!’’

ரங்கு சாக்லெட் எடுத்துத் தர, மடியிலிருந்து அஞ்சு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

‘‘நீ யாரு… கோதை பேரன்தானே?’’ என்றார் என்னைப் பார்த்து.

‘‘ஆமாம் மாமா!’’

‘‘நீ ஏர்போர்ஸ்ல இருக்கியா?’’

‘‘ஏர்போர்ட்! மாமா, எதுக்காக இந்த வெயில்ல அலையறீங்க? வெயில் தாழ வீதிப் பிரதட்சணம் போகக்கூடாதா?’’

‘‘பாரு, வைஷ்ணவனா பொறந்தா பஞ்ச சம்ஸ்காரங்கள்னு அஞ்சு காரியங்கள் செய்யணும். அதான் ஐயங்கார். ஊர்த்வ புண்ட்ரம், சமாஸ்ரணம், திருவாராதனம், ஆசார்யன்கிட்ட உபதேசம் கேக்கறது, பரன்யாசம் வாங்கிண்டப்றம் உஞ்ச விருத்தி. பிச்சைபோடற அரிசியைத் தான் சாதம் வெச்சு சாப்பிடணும்!’’

‘‘மாமா, அதெல்லாம் வசதியில்லாத வாளுக்கு!’’

‘‘இல்லை. வைஷ்ணவனா பொறந்த எல்லாருக்கும். உனக்கு, எனக்கு… அந்த நாராயணனே மகாபலிகிட்ட யாசகம் போனான்.’’

‘‘நீங்க இப்படித் தெருவில போறது அந்தக் கடமையை நிறைவேத்தறதுக் காகவா?’’

‘‘ஆமா, வேறென்ன..?’’

‘‘உங்க ஃபேமிலியில அவாளுக்கு சங்கடமா இருக்காதோ?’’

‘‘எதுக்குச் சங்கடப்படணும்? எதுக்குங்கறேன்?’’

‘‘இல்லை மாமா… உங்க சன் பெரிய கணக்கு வாத்தியார். ஹெட்மாஸ்டர் ஆகப் போறார். நேஷனல் அவார்டெல்லாம் வாங்கினவர்.’’

‘‘அதனால?’’

‘‘மத்தவாள்ளாம் என்ன நினைச்சுப்பா? தோப்பனாரை சரியா வெச்சுக்காம தெருவில யாசகம் பண்ண அனுப்பிச்சுட்டார் பாரு, இவர் என்ன வாத்தியார்னு தானே நினைச்சுப்பா?’’

‘‘நினைக்கத்தான் நினைச்சுப்பா. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?’’

ரங்கு சில சமயம் பட்டென்று போட்டு உடைத்துவிடுவான்.

‘‘ஓய்… உமக்கு மாட்டுப் பெண்ணோட சண்டை. ஜி.பி. அவ பேச்சைக் கேட்டுக்கறார். அந்தக் கோபத்தைத்தான் நீங்க இப்படி அவரை அவமானப்படுத்திக் காட்டறீர்னு ஊர் உலகமெல்லாம் பேசிக்கிறது. உஞ்சவிருத்தி குஞ்சவிருத்தியெல்லாம் சால்ஜாப்பு!’’

‘‘சரி, அப்படியே பேசிக்கிறான்னா நீ என்ன செய்யணும்?’’

அவர் ‘நீ’ என்று அழைத்தது ரங்குவை அல்ல. அங்கு இல்லாத தன் மகன் ஜி.பி-யை. ‘‘நீ என்ன செய்திருக்கணும்? ‘அப்பா, நீங்க சொல்றதிலயும் நியாயம் இருக்கு. கொஞ்சம் தழைஞ்சு போங்கப்பா. நானும் அவளைத் தூக்கி எறிஞ்சு பேசாம இருக்கச் சொல்றேன்’னு சமாதானமா போகலாம் இல்லையோ..? எப்ப பார்த்தாலும் ‘அவ சொல்றதுதான் ரைட்டு, அப்பா… வாயை மூடுங்கோ’னு அதட்டினா எனக்கு எப்படி இருக்கும்..?’’

‘‘தனியா இருந்து பாருமேன்.’’

‘‘அதைத்தான் யோசிச்சிண்டிருக்கேன்.’’

‘‘இப்ப வீட்ல சாப்பிடறதில்லையா?’’

‘‘ரெண்டு தளிகை. எனக்கு உண்டான ஒரு மெந்தியக் குழம்பு, அப்பளத்தை நானே பண்ணிக்கறேன். ஒரு நெய் கிடையாது, கறமுது கிடையாது, தயிர் கிடையாது. மோர்தான். ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கலையே ரங்கா! பேதியாறது. அவா என்னவோ சாப்ட்டுட்டுப் போகட்டும். எனக்கு?’’

‘‘பிள்ளை?’’

‘‘அவனோட பேசியே ஒரு மாசம் ஆச்சு, ஒரே ஆத்துல இருந்துண்டு.’’

‘‘இதெல்லாம் சரி, உஞ்சவிருத்தி எப்டி உடம்புக்கு ஆறது உமக்கு? ரேஷன் அரிசியும் புழுங்கரிசியும் கைக்குத்தலும் கலந்திருக்குமே?’’

‘‘ஏதோ ரங்கநாதன் கிருபையில கல்லையும் ஜீரணிக்கிறது இந்த வயிறு. ஓடிண்டிருக்கு வண்டி.. இன்னும் எத்தனை நாள்… பார்க்கலாம். நான் செத்துப் போனேன்னா இந்தப் பாடசாலைப் பையன்தான் எனக்குக் கொள்ளி போடணும், கேட்டுக்கோ ரங்கு.’’

‘‘நீர் எங்கே செத்துப் போவீர்? இருக்கறவாளை சாகடிச்சுட்டுத் தான் போவீர். ஆயுசு கெட்டி உமக்கு!’’

அவர் மறுபடி வீதி பிரதட்சிணத் துக்குப் புறப்பட, ‘‘ஸ்ட்ரேஞ்ச்… வெரி ஸ்ட்ரேஞ்ச்’’ என்றேன்.

ஹைஸ்கூல் எப்படி நடக்கிறது என்று… என் கிளாஸ்மேட்தான் கரெஸ்பாண்டெண்டாக இருந்தான், அவனை விசாரிக்கப் போயிருந்தபோது ஜி.பி-யைச் சந்தித்தேன். பொதுவாக மேத்ஸில் மல்ட்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் வந்து தரமே போய்விட்டதாகச் சொன்னார். அவரேதான் ஆரம்பித்தார்…

‘‘அப்பாவைப் பாத்தியோ..?’’

‘‘பாத்தேன் சார்.’’

‘‘என்ன பிடிவாதம் பாத்தியா?’’

‘‘அவர் சொல்றதைப் பார்த்தா அவருக்குச் சோறு தண்ணி கூட சரியா கொடுக்கறதில்லைன்னு…’’

‘‘அப்படியா சொன்னார்? ஒரு நா எங்காத்துக்கு வந்து மாமியை சந்திச்சுக் கேட்டுப்பாரு. என் அப்பாதான்… இல்லேங்கலை. ஆனா, அவர் கார்த்தாலை எழுந்திருக்கறதிலிருந்து பண்ற அட்டகாசம்… எனக்கு நாலும் பொண்ணு. நாலும் நன்னாப் படிக்கறதுகள். அதுகளைப் படிக்க விடாம சத்தமா பாராயணம் பண்ணிண்டு, எல்லா ரையும் கண்டார… வல்லாரன்னு திட்டிண்டு, கோமணத்தோட புழக்கடைல அலைஞ்சுண்டு…’’

‘‘தனி வீடு பாத்துக் கொடுத்துர்றதுதா&ன?’’

‘‘போகமாட்டேங்கறாரே! ‘என் வீடு, நான்தான் இருப்பேன்’கறார்!’’

‘‘சரி, நீங்க போய்டறதுதா&ன?’’

‘‘யோசிச்சிண்டிருக்கேன். வாடகை கொடுத்து மாளுமா?’’

‘‘அவர்கிட்ட பணம் இருக்கில்லே?’’

‘‘இருக்கு. என்ன வெச்சிருக்கார்னு காட்டமாட்டார். வக்கீலைக் கூப்ட்டு நாலு தடவை வில்லை மாத்தி மாத்தி எழுதிட்டார். சீரங்கம்னு ஒரு பேத்தி மேல கொஞ்சம் பிரியம். அதுங் கிட்ட எதோ சொல்லிண்டிருக்கார்… ‘உங்க யாருக்குமே நன்னி கிடையாது. தொச்சுக்குத்தான் எல்லாம்னு உங்கம்மா கிட்ட சொல்லிடு…’ ’’

‘‘தொச்சுங்கறது…’’

‘‘பாடசாலைப் பையன். அவரை கார்த் தால கம்பு பிடிச்சு அழைச்சுண்டு போறா&ன அவன். கேக்கறதுக்கு நன்னாவா இருக்கு? எதுக்குக் கிழத்துக்கு நான் சிசுருஷை பண்ண ணும்கறா என் ஆம்டையா! நான்தான் அவளை சமாதானப்படுத்தி வெக்கறேன்… ‘அப்படியெல்லாம் செய்ய மாட்டார். கோபத்தில ஏதோ சொல்றார்’னு. அவ சொல்றது நியாயம்தானே?’’

‘‘தானே தளிப்பண்றதா…’’

‘‘அதெல்லாம் வெட்டிப்பேச்சு! ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தளிப்பண்ற உள்ளை மாடு கன்னுபோட்ட எடம் மாதிரி பண்ணிட்டுப் போவார். என் அப்பாவா இருந்தாலும், இந்த மாதிரி ஒரு பிடிவாதம் புடிச்ச கிழவனை நான் பாத்ததில்லை. போய்த் தொலைஞ்சாலும் பரவாயில்லைன்னு சில சமயம் அவ்வளவு வெறுப்பேத்தறார்.’’

‘‘அவருக்கு என்ன வேணுமாம்? எதாவது மனசில குறை வெச்சுண்டு இருக்கலாம் ஒரு இன்சொல், ஒரு பரிவு… அல்லது, ‘தாத்தா எப்டி இருக்கே?’னு பேத்திகள் கேட்டாலே போறுமா இருக்கலாம். உங்க மனைவியும் ‘அப்பா, எப்டி இருக்கீங்க? கண்ணுக்கு மருந்து போடட்டுமா’னு எதாவது கேக்கலாம்.’’

‘‘அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை. நீ வேணா சீதாகூட பேசிப்பாரு. நான் சொன்னது பாதிதான். அவ ஆங்கிள்ள பார்த்தா கதை ரொம்பக் கடுமையா இருக்கும். டெல்லிக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு தடவை சாப்பிட வா, எங்காத்துக்கு!’’

போயிருந்தேன். நான்கு பெண்கள் பதினைந்து, பதின்மூன்று, பத்து, எட்டு என்று அலைந்தன. எனக்கு முன்னால் ஸ்டூல் போட்டு தீர்த்தம் எல்லாம் பதவி சாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். எனக்காக மாமி ஜவ்வரிசிப் பாயசம் பண்ணியிருந்தாள். சமையல் எல்லாம் சூப்பராக இருந்தது.

நான் சென்றபோது, கிழவர் வாசல் திண்ணையில் காலை அகட்டி உட்கார்ந்து கொண்டு பனை விசிறியால் கீழே விசிறிக் கொண்டிருந்தார். நெற்றி சுருங்கி விரோதமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘‘இருக்கறவனுக்கு ஒரு வேப்பம்பூ சாத்துமது கிடையாது. வரவா போறவாளுக்கெல்லாம் பால்பாயசம். கேக்கறவா கிடையாது இந்தாத்துல’’ என்றார்.

‘‘வாங்களேன் மாமா… உங்காம்தானே? வாங்கோ, பாயசம் சாப்டலாம்’’ என்றேன்.

‘‘இந்தாத்திலயா? ஒரு திருஸ்தம் கூட எடுத்துக்கமாட்டேன்.’’

வாத்தியார் ஜி.பி-யின் மனைவி வெளிப்படையாகப் பேசினாள். ‘‘எவ்வளவு தூரம் பொறுத்துக்கறது? ‘பொறுத்துப் போ’னு இவர் பாட்டுக்கு சொல்லிட்டுப் பள்ளிக் கூடம் போய்டறார். இருபத்துநாலு மணி நேரமும் இவர் கூட மல்லுக் கட்ட வேண்டியிருக்கு. ரெண்டு பொண் வயசுக்கு வந்துட்டா. அவா முன்னாலயே கோமணத்தை அவுத்துக் கட்டிக்கறேர். ரெங்கராஜுவை கூப்ட்டு திண்ணைல உக்காந்துண்டு சர்வாங்க க்ஷவரம் பண்ணிக்கறேர். சாக்லெட்டு, பப்பர்மிட்டுனு வாங்கி ஒளிச்சு வெச்சுக்கறேர். பாட சாலைப் பையன்களுக்குக் கொடுத்தாலும் கொடுப்பார்… பேத்திகளுக்குக் கொடுக்க மாட்டார். அதுகளைப் படிக்க வெக்கறதே அவருக்குப் பிடிக்கலை. என்னைக் கண்டா ஆகவே ஆகலை…’’

‘‘இதுக்கெல்லாம் ஆதாரமா ஒரு சம்பவம் அல்லது காரணம் இருக்கணும் மாமி.’’

‘‘இருக்கு. அதைச் சொல்லிட்டுத் தான் ரசாபாசமாய்டுத்து! எங்காத்தில எனக்கு நிறைய செஞ்சிருந்தா. அதை அவர் அலமாரில வெச்சுப் பூட்டியிருந்தார். மாமியார் போறவரைக்கும் அதை நான் பார்த்தேன். பண்டிகை நாளில் என்னை எடுத்துப் போட்டுக்கச் சொல்வா. மாமியார் தங்கமான மனுஷி. அவர் போனதும், இது எதோ தங்கை பொண்ணு கல்யாணத்துக்கு எடுத்துக் கொடுத் துடுத்து போல! பாலிஷ் போட்டு வெள்ளிப் பாத்திரத் தையெல்லாம் கொடுத்திருக் கேர். போனாப் போறது, சொல்லிருக்கலாமில்லையா? ரங்கநாதன் கிருபை இவரும் சம்பாதிக்கிறேர். ஒரே ஒரு தடவை எச்சுமிக்கு தோடு செஞ்சு போடலாம். ‘அப்பா, அம்மா என் நகையெல்லாம் எங்க வெச்சிருக்கா?’னு கேட்டதுக்கு, ‘‘நகையா… உன்னை எதிர்ஜாமீன் இல்லாம இலவசமா கல்யாணம் பண்ணிண்டோம். உங்காத்துல உனக்கு என்ன போட்டா? உங்கப்பன் ஏமாத்திட்டான்’னார்.

எனக்கே தெரியும்… எனக்கு எத்தனை கேஷா கொடுத்தா, வைர மோதரத்துக்கு, பட்டு வேஷ்டிக்குன்னு… எத்தனை நகை போட்டான்னுட்டு. அதை எடுத்துச் சொன்னப்ப எல்லாம் கவரிங்னார். ‘இதை அப்பவே சொல்லியிருக்கறதுதானே?’ன்னேன். இவ்வளவுதாம்பா கேட்டேன். அதிலேர்ந்து என் மேலயும் என் பெண்கள் மேலயும் வெறுப்புன்னா வெறுப்பு அப்படிப்பட்ட வெறுப்பு. நின்னா குத்தம்.. உக்காந்தா குத்தம்…’’

இந்தச் சம்பாஷணை முழுவதும் அவருக்குக் கேட்டிருக்கவேண்டும்.

திண்ணையிலிருந்து சத்தம் போட்டார்… ‘‘எல்லாத்தையும் சொன்னியே, உன் நகை அத்தனையும் சப்ஜாடா நான் திருப்பித் தந்ததைச் சொன்னியா?’’

இவள் ‘‘மொத்தத்தில கால்பாகம் கூடத் திரும்ப வரலைப்பா. ரெட்டை வடம் சங்கிலி என்ன ஆச்சு, பச்சைக்கல் தோடு என்னாச்சு, பேசரி என்னாச்சு, ஒட்டியாணம், நாககொத்து என்ன ஆச்சு, வங்கி என்னாச்சு..?’’ என்றாள்.

‘‘பச்சைப்பொய். உங்களுக்கெல்லாம் என் கெட்ட குணம் மட்டும் தான் தெரியும். நல்ல குணம் எதும் கண்ணுக்கே தெரியாது.’’

இவள் சன்னமாக ‘‘நல்லது எதாவது இருந்தா சொல்லுங்கப்பா’’ எனறாள்.

நான் இந்தச் சண்டை ஓயாது என்று புறப்பட்டு வந்துவிட்டேன். என் சமாதான முயற்சிகள் அத்தோடு முடிந்தன.

அடுத்த வாரம், புறக்கடையில் பாசி வழுக்கி விழுந்துவிட்டார் கிழவர். தொடை எலும்பும் இடுப் பிலும் முறிந்துபோய் ஜி.பி. அவரை புத்தூருக்கு அழைத்துப் போக, அங்கே இன்னமும் சீரியஸாகி, அப்புறம் தில்லைநகரில் அவரை அட்மிட் பண்ணி, மாற்றி மாற்றி வாத்தியாரும் மாமியும் பதினைந்து தினம் அவருக்கு வேளா வேளைக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு போய்… ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் நான் ஊருக்குக் கிளம்பும் முதல் நாள்தான் இறந்து போனார்.

இத்தனைப் பாடுபட்டதுக்கு ஜி.பி-க்கோ மனைவிக்கோ பேத்திகளுக்கோ எந்தவிதப் பயனும் இல்லை. சொத்து முழுவதையும் தொச்சு என்கிற துரைசாமியின் பேரில் எழுதி வைத்துவிட்டு, அவன் மேஜராகும் வரை பதினெட்டு வயசு வரும் வரையில் வக்கீலை அந்தச் சொத்துக்கு கார்டியனாகப் போட்டு பதினெட்டாம் வயதில் அந்தச் சொத்து அவன் படிப்புக்கும் பராமரிப்புக்கும் போகவேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.

பாடி எடுக்குமுன் துக்கம் விசாரிக்க அவர் வீட்டுக்குப் போய் திண்ணையில் சற்று மௌனமாக உட்கார்ந்திருந்தேன். உள்ளே பேத்தி ஒருத்தி மட்டும் ‘தாத்தாஆஆஆ…’ என்று அழுது கொண்டிருந்தது. உஞ்ச விருத்திக்கு அழைத்துச் சென்ற பாடசாலைப் பையன் ‘‘மாமா, நாளைலருந்து வரவேண்டாமா? வேற எதாவது ஒத்தாசையா இருக்கேனே!’’ என்றான். ‘‘இந்த ஆமே உன்னுதுரா’’ என்றார் ஜி.பி. விசும் பலுடன். அவனுக்குப் புரியவில்லை. மாமிக்கு ஆத்து ஆத்துப் போயிற்று. ‘‘என்ன பாவம் பண்ணோம்னு இந்தத் தண்டனை கொடுத்துட்டுப் போனார் கிழவனார். எங்கப் பாம்மா போட்ட நகை எங்கேனு கேட்டது ஒரு பெரிய தப்பா? அதுக்கு இத்தனை பெரிய தண்டனையா?’’

ரங்கு ஜி.பி-யிடம் ‘‘ஓய்… இது பிதுரார்ஜித சொத்து. அதை எழுதி வெக்க கிழத்துக்கு உரிமையே கிடையாது. கிறுக்குப் புடிச்சாப்ல இப்படியெல்லாம் வில் எழுதினா கோர்ட்டில ஒத்துக்க மாட்டா. சண்டை போட்டு வாங்கிடலாம்.’’

ஜி.பி-தான் ‘‘ரங்கு, நமக்கு எது உண்டு, எது இல்லைன்னு தீர்மானிக்கிறதெல்லாம் ஸ்ரீரங்கநாதன்தான்’’ என்றார்.

அதன்பின் நான் அலகாபாத் போய்விட்டு கல்கத்தா, டெல்லி, அல்மோரா, பதான்கோட், கொலம்போ என்று சுற்றிவிட்டு ஆறு வருஷம் கழித்துதான் ஸ்ரீரங்கம் திரும்ப முடிந்தது. ரங்குவை முதல் காரியமாக விசாரித்தேன்… ‘‘ஜி.பி. வாத்தியார் என்ன ஆனார் ரங்கு?’’

‘‘ஏன் கேக்கறே… ஸ்கூல்ல புதுசா ஹெட்மாஸ்டரை நியமனம் பண்ணிட்டா. ரெண்டு பேருக்கும் ஆகலை. நோட்ஸ் போடக் கூடாதுன்னு தடை பண்ணிட்டா. கோவிச்சுண்டு ரிஸைன் பண்ணிட்டார். மணச்சநல்லூர்ல போய்ச் சேர்ந்தார். அங்கயும் சரிப்பட்டு வரலை. சம்பளம் சரியா வரலை. அதுக்கப்புறம் நோட்ஸ் போட்டு விக்கறதும் பாழாப் போச்சு. இவர் போட்ட நோட்ஸையே காப்பி அடிச்சு இன்னொருத்தன் போட்டு அரை விலைக்கு வித்தான். அவன்மேல கேஸ் போடறேன்னு வக்கீல்கள்ட்ட காசு நிறைய விட்டார். ஏறக்குறைய பாப்பர் ஆறநிலைக்கு வந்துட்டார். சொத்தும் இல்லை. பத்ரிக்கு போறேன்னு காலை ஓடிச்சுண்டார். மனசொடிஞ்சு போய்ட்டார். அப்றம்…’’ என்று ரங்கு பேச்சை நிறுத்தினான்.

நான் சன்னமாக, ‘‘எதாவது விபரீதமா ரங்கு?’’ என்றேன்.

‘‘அதை ஏன் கேக்கறே… கடைசியா ரங்கநாதன் கண்ணைத் திறந்துட்டார்.

‘‘எப்படி?’’

‘‘மூத்த பொண்ணு எச்சுமி இருக்கு பாரு, தொச்சுவைக் கல்யாணம் பண்ணிண்டு டுத்து. எல்லாம் சரியாப் போய்டுத்து. உஞ்சவிருத்தி தேசிகாச்சாரி சொத்து மறுபடி ஃபேமிலிக்கே வந்துடுத்து!’’

‘‘அந்தப் பையன் அதிகம் படிச்சிருந் தானா?’’

‘‘எட்டாம் கிளாஸ்க்கு மேல படிப்பு ஏறலை…’’

‘‘இந்தப் பொண்ணு?’’

‘‘எம்.சி.ஏ.’’

நான் வியப்புடன் ‘‘எப்படிக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது அந்தப் பொண்ணு… ஃபேமலிக்காக தியாகமா?’’

‘‘அதெல்லாம் இல்லை, காதல்!’’ என்றான் ரங்கு.

Friday, 1 August 2014

GururEva Gathihi- My SringEri Pilgrimage- Version II

Adishankara in his “Subramanya Bhujangam” tells about Him before plunging to praise Lord ShanmugA.

“na jAnAmi padhyam, na jAnAmi gadhyam, na jAnAmi shabdam, na jAnAmi chArttham

chidekA shadAsyA hridhi dhyothathe me, mukhAnis saranthe giraschApi chitram”

{I know not the science of musical sounds, I know not the meanings of complex texts either, I know not the nature of shlokas made of four types of padaas, nor do I know the intricacies of the gadhyam style! But in my heart, shines an effulgent light with six luminous faces, and because of that, from my mouth, amazing phrases with musical tone and meanings pour out in extempore}.

The above is -Adi shankara’s humbleness.

Thyagaraja humbleness in his vasantha kriti- Etla dorakitivo- goes like this- “ Do I owe this blessing to the greatness of you grace, or to the blessings of great and good men? Can it be the result of my dedicated worship of NAda? Dispeller of my distress. O spouse of SrI. How blessed am I to have...”

But an ordinary devotee like me ascending to the highest position by sadhguru krupa is something unbelievable. .

Iam blessed to have visited Sringeri on last Sunday (20th July 2014). It was one of those ChaturmAysYa Days and Sri.Swamiji was performing chAturmAysya Vratha.

Let me start with Anandha koti Namaskarams to MatAji.

It was organized through “Geeta govinda Samskrita sangha at Malleshwaram”, Bangalore. MatAji, old lady, with madisAr and a divine look, held my hand and led to have darshan of Guruji.

I don’t know how should I repay this debt ? Can we ever repay ever to Guru for his gratitude & blessings ?.

kArunyam, vAtsalyam, blessings of Guru, pOOrva janma punyAm, parents blessings, - Whatever you say ? I shudder think which factor/factors contributed to my “holy visit”, and if you want to have one name for all of these, that will be “MatAji”

I happen to be one of the fortunate persons of the 40 and odd bhaktas to have gone to Sringeri. It was a group led my MatAji and every year, during this Chaturmasya period, She makes it a point to visit Sringeri with his team and have drashan of Sadhguru and also conduct the Sanskrit dramas to perform before swAmiji.

Iam learning Sanskrit from Sri.Jayraj, at Tatvaloka, Chennai. Working in a Company with a tight schedule, one of my everyday’s morning rituals is to visit Mandaveli Sringeri Temple and pray to Sharadambal to give a good health and fine spirits. I never thought even in my dreams that I would visit Sringeri that to with such a wonderful team.

Sadhguru katAksham is boundless. Sometimes you just feel lost to know how much Sadhguru bestows His blessings and carry you in the path of salvation. It was an amazing experience that each and every step in my pilgrimage journey – so many Gurus hold my hand and take me to ParamEshti Guru. Recall the events that led to sringEri visit,

• My visit to Madaiveli temple made me to join Sanskrit classes at Tatvaloka. The Pandit at SringEri-Mandeveli is one of the first Gurus, in this, to bless me.

• Through Sanskrit classes, I was able to meet Sri.Jairaj- VidhyA guru.

• I had gone to Bangalore to my brother’s house at Malleshwaram and performed Sahasrnama archana to varagoor perumal, our family deity.

• Evening, I could go to Sri. Srinivasan, who has been nurturing young kids and teach vedhaBeing bachelor, he cooks everyday and serves those kids besides taking classes. A great Guru, under whom, my brother is learning Upanishad.

My wife who could not come and stayed with my brother, suddenly, wanted to come and fortunately, seat was there to take her in tbe charter bus.

While talking about Guru, I need to have a special mention about my father, Sri.S.Kunjithapatham, and my Tirumala visit, couple of months back along with him. For me, varagoor perumal and Balaji of Tirumala are same. Iam not deeply worried, if I can’t visit Tirumala but, will be worried if I don’t visit varagoor at least once in two months.

We reached Tirumala at 3 PM. Being tired, my parents took rest but I thought of trying Rs.300 ticket for a darshan. It took me 3 and half hours to have the darshan. Returning by 7 PM, we all wanted to go for a darshan, (though, next day morning, we had arranged special darshan for my parents).

No one could believe, with my father, we could have had the darshan in 30 minutes. Then only, I realized when there is a Guru, standing next to you, everything is possible including dharshan. Yes my father who is the “permanent green card holder (devotee) “ of varagoor perumal and He is the biggest fan of my father’s soulful singing of Tarangams. Varagoor perumal just directed Balaji to give darshan to his “lovable” devotee without waiting. When I followed the Guru, I was also fortunate to have the dharhan. !!

Truly, my father is our beloved Guru. For so many Asthikas of varagoor, he is Guru too. My father. Who is fondly called as professor, always talks about Sri.Shanker and Sri.Anand for their contribution in each and every activity of varagoor.

Coming back to Sringeri journey, Sri. Jayraj, our Sanskrit teacher, is one of a person who is an epitome of “Vidhya dadhati vinayam” . A simple, ever smiling, person and strong in his basics. In this age, Iam fortunate to have a teacher like Sri. Jayraj through which I learn Sanskrit.

When he started telling about the Sringeri visit, I could not believe that I would be part of the team. Till last day, I had my own doubts. But, I had confidence on Sadhguru and Sharadadevi (of Mandaveli) to shower the blessings.

All set for a memorable journey. The ordinary bus with a whole night journey, heavy downpour at Sringeri and long walk to Sadguru ashram are not worth of concern. It was He who, despite his chaturmasya vratha, gave darshan to us and accepted our Bhiksha Vandanam.

Evening, when Mataji conducted Sanskrit classical drama, He was attentive and witnessed the entire drama. As He likes Sanskrit, his interest could be seen as he enjoyed each and every scene.

SharadAmbA darshan, nithyakarma anushtAnam and japam (with my wife) had been done as if it was pre programmed. Good Plantain leaf lunch in the afternoon and plate dinner – what else does one want ?

I need to specially mention- the volunteers of this Group. Young girls and adults who relentlessly saw that we are safe in our journey, is worth a mention. Girls chanting “guru stotras and other slokas in the bus and they looked like “Sharadhambal as a young girl”. The Sanskrit drama, performed in front of swamiji, merits mention and chanting of “Mooka pancha sati”, sAmbhastagam and other Sanskrit drama dialogues- I have not seen this from youngsters. Undoubtedly, they are blessed kids.

Also nice to share the room with Sri.Srinivas & Mrs.Srinivas-practicing CAs and another blessed couple.

While returning, the bus reached Bangalore at 3 AM, so that I had some time to have a sleep at my house and leave for Chennai by 8AM train.

How come did I not get tired, coming in the normal bus, throughout the night journey- Guru only knows ?

Iam continuing my daily visit to Mandaveli Sharadambal temple- for what ? of course- application for visit to Sringeri one more time !!!.

GururEva gathihi….

Thursday, 31 July 2014

GururEva Gathihi- My pilgrimage to Sringeri

Adishankara in his “Subramanya Bhujangam” tells about Him before plunging to praise Lord ShanmugA.

“na jAnAmi padhyam, na jAnAmi gadhyam, na jAnAmi shabdam, na jAnAmi chArttham

chidekA shadAsyA hridhi dhyothathe me, mukhAnis saranthe giraschApi chitram”

{I know not the science of musical sounds, I know not the meanings of complex texts either, I know not the nature of shlokas made of four types of padaas, nor do I know the intricacies of the gadhyam style! But in my heart, shines an effulgent light with six luminous faces, and because of that, from my mouth, amazing phrases with musical tone and meanings pour out in extempore}.

The above is -Adi shankara’s humbleness.

Thyagaraja humbles in his vasantha kriti- Etla dorakitivo- goes like this- “ Do I owe this blessing to the greatness of you grace, or to the blessings of great and good men? Can it be the result of my dedicated worship of NAda? Dispeller of my distress. O spouse of SrI. How blessed am I to have...”

But an ordinary devotee like me ascending to the highest position by sadhguru krupa is something unbelievable. .

Iam blessed to have visited Sringeri on last Sunday (20th July 2014). It was one of those ChaturmAysYa Days and Sri.Swamiji was performing chAturmAysya Vratha.

Let me start with Anandha koti Namaskarams to MatAji.

It was organized through “Geeta govinda Samskrita sangha at Malleshwaram”, Bangalore. MatAji, old lady, with madisAr and a divine look, held my hand and led to have darshan of Guruji.

I don’t know how should I repay this debt ? Can we ever repay ever to Guru for his gratitude & blessings ?.

kArunyam, vAtsalyam, blessings of Guru, pOOrva janma punyAm, parents blessings, - Whatever you say ? I shudder think which factor/factors contributed to my “holy visit”, and if you want to have one name for all of these, that will be “MatAji”

I happen to be one of the fortunate persons of the 40 and odd bhaktas to have gone to Sringeri. It was a group led my MatAji and every year, during this Chaturmasya period, She makes it a point to visit Sringeri with his team and have drashan of Sadhguru and also witnessed the Sanskrit cultural programmes.

Iam learning Sanskrit from Sri.Jayraj, at Tatvaloka, Chennai. Working in a Company with a tight schedule, one of my everyday’s morning rituals is to visit Mandaveli Sringeri Temple and pray to Sharadambal to give a good health and fine spirits. I never thought even in my dreams that I would visit Sringeri that to with such a wonderful team.

Sadhguru katAksham is boundless. Sometimes you just feel lost to know how much Sadhguru bestows His blessings and carry you in the path of salvation. It was an amazing experience that each and every step in my pilgrimage journey – so many Gurus hold my hand and take me to ParamEshti Guru. Recall the events that led to sringEri visit,

• My visit to Madaiveli temple made me to join Sanskrit classes at Tatvaloka. The Padit at SringEri-Mandeveli is one of the first Gurus, in this, to bless me.

• Through Sanskrit classes, I was able to meet Sri.Jairaj- VidhyA guru.

• I had gone to Bangalore to my brother’s house at Malleshwaram and performed Sahasrnama archana to varagoor perumal, our family deity.

• Evening, I could go to Sri. Srinivasan, who has been nurturing young kids and teach vedha. Being bachelor, he cooks everyday and serves those kids besides taking classes. A great Guru, under whom, my brother is learning Upanishad.

My wife who could not come and stayed with my brother, suddenly, wanted to come and fortunately, seat was there to take her in tbe charter bus.

Sri. Jayraj, our Sanskrit teacher, is one of a person who is an epitome of “Vidhya dadhati vinayam” . A simple, ever smiling, person and strong in his basics. In this age, Iam fortunate to have a teacher like Sri. Jayraj through which I learn Sanskrit.

When he started telling about the Sringeri visit, I could not believe that I would be part of the team. Till last day, I had my own doubts. Working in a Corporate atmosphere and holding an important post, taking leave even on Sunday would be a question for me. But, I had confidence on Sadhguru and Sharadadevi (of Mandaveli). I always tell Her in my prayer- if you think Iam fit enough to see you in Sringeri, take me, otherwise, allow me to pray more/more perseverance/ give the “achanchala bhakti” to never disown you and make me stronger in bhakthi.

All set for a memorable journey. The ordinary bus with a whole night journey, heavy downpour at Sringeri and long walk to Sadguru ashram are not worth of concern. It was He who, despite his chaturmasya vratha, gave darshan to us and accepted our Bhiksha Vandanam.

Evening, when Mataji conducted Sanskrit classical drama, He was attentive and witnessed the entire drama. As He likes Sanskrit, his interest could be seen as he enjoyed each and every scene.

SharadAmbA darshan, nithyakarma anushtAnam and japam (with my wife) had been done as if it was pre programmed. Good Plantain leaf lunch in the afternoon and plate dinner – what else does one want ?

I need to specially mention- the volunteers of this Group. Young girls and adults who relentlessly saw that we are safe in our journey, is worth a mention. Girls chanting “guru stotras and other slokas in the bus and they looked like “Sharadhambal as a young girl”. The Sanskrit drama, performed in front of swamiji, merits mention and chanting of “Mooka pancha sati”, sAmbhastagam and other Sanskrit drama dialogues- I have not seen this from youngsters. Undoubtedly, they are blessed kids.

Also nice to share the room with Sri.Srinivas & Mrs.Srinivas-practicing CAs and another blessed couple.

While returning, the bus reached Bangalore at 3 AM, so that I had some time to have a sleep at my house and leave for Chennai by 8AM train.

How come did I not get tired, coming in the normal bus, throughout the night journey- Guru only knows ?

Iam continuing my daily visit to Mandaveli Sharadambal temple- for what ? of course- application for visit to Sringeri one more time !!!.

GururEva gathihi….



Monday, 23 June 2014

''இரண்டு சூரியன்கள்​"

''இரண்டு சூரியன்கள்''



ரா கணபதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் அபூர்வமான கட்டுரையின் சுருக்கம் இது



"இன்று அக்டோபர், 25 , 1992 காஞ்சி மகா சுவாமிகளின் நூற்றாண்டைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். மே மாதம் 1994ல் தான் அவர் நூற்றாண்டு முடிப்பார் என்ற போதும், நமக்கு இந்த தருணத்தில் இரட்டிப்பு பாக்கியம் கிடைத்திருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன், நூறு ஆண்டுகளைக் கடந்த இன்னொரு பெரிய ஞானியை இன்று நினைக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இதில் அபூர்வமான விஷயம் என்னவென்றால் இரண்டு ஞானிகளின் பெயர்களுமே 'சந்திரசேகர' என்பதுதான்.



அவர் வேறு யாருமல்ல, சிருங்கேரி சங்கர மடத்தின் சந்திரசேகர பாரதி சுவாமிகள்தான். காஞ்சி சங்கர மடத்தை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிர்வகித்துக்கொண்டிருந்த தருணத்தில் பாரதி சுவாமிகள் 42 ஆண்டுகள் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக இருந்தார். இருவருமே தெய்வீகமான அருளாளர்கள். ஒரே தருணத்தில் இரண்டு சந்திரசேகரர்கள் இரு வேறு மடங்களில் தலைமையை ஏற்று நடத்துவது பராசக்தியின் விளையாட்டு அல்லவா? இருவரும் ஒரே விஷயத்தில் பார்வையை செலுத்தும் இரண்டு கண்கள், என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். சந்திரன் போன்ற குளிர்ச்சியான இரண்டு முனிவர்களும் அத்வைத ஞானத்தை சூரியன் போல் வெளிச்சமிட்டு உலகுக்குக் காட்டி கொண்டிருக்கின்றனர். இருவருமே ஒப்பிட முடியாதவர்கள். அதே நேரத்தில் ஒப்பிடகூடியவர்களும் கூட!



மனித குலத்தை வாழ்த்தும் தகுதி உடையவர்கள் அவர்கள். நிபுணர்களைத் திகைக்க அறிவொளி படைத்தவர்கள். வேதாந்தக் கருத்துகளை எளியவருக்கும் புரியும் வகையில் எடுத்துச் சொல்லக்கூடியவர்கள். பெரிய ஞானிகள் மட்டுமே நடந்துகொள்வது போன்று, அடக்கமாக நடந்துகொள்பவர்கள். மாற்றங்களும் சீர்திருத்தங்களும் நிகழும் இந்தக் காலத்தில், பாரம்பரிய கட்டுபாடுகளை மீறாமல் எதிர் நீச்சல் போட்டுபவர்கள். 'ஜகத்குரு' என்ற பட்டதை அவர்களாக தேடிப் போகவில்லை. குருவாக அவர்கள் யாருக்கும் பாடம் கற்பிக்க முனையவில்லை.



இன்னோர் ஒற்றுமையும் இருக்கிறது. தமிழ் நாட்டிலுள்ள காஞ்சி மடத்தின் தலைவரின் தாய்மொழி கன்னடம். கர்நாடகத்தில் உள்ள சிருங்கேரி மடத்தின் தலைவரின் தாய்மொழி தெலுங்கு. இருவருக்குமே சந்நியாசத்தை ஏற்கும் தருணத்தில் குரு என்று யாருமே இருக்கவில்லை. ஆனால் இருவருமே குரு என்று ஒருவர் தேவை என்பதை உலகுக்கு வலியுறுத்தியவர்கள். உள்ளத்தளவில் இருவருமே ஒரே மாதிரிதான். ஆனால் அவர்கள் வெளியே நடந்துகொள்ளும் முறையையும் செயல்களையும் கண்ட உலகத்தினர், வேறு மாதிரி நினைக்கத் தொடங்கினர்.



முக்கியமான வேறுபாட்டை இங்கே விளக்கியாக வேண்டும் காஞ்சி முனிவர் பிரம்மஞானியாக இருந்தாலும் வெளியுலக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார். அவை எல்லாமே சாஸ்திர அடிப்படைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்று செயல்பட்டார், அதை அடைய அவர் திட்டங்களை தீட்டினார்.



சாஸ்திர முறைகளுக்கு மக்களைத் திருப்பும் ஆர்வம் கொண்டிருந்த சிருங்கேரி ஆச்சாரியார். பொதுவாகத் தன்னை தனிமைப்படுத்திகொண்டு, தியானத்தில் ஈடுபட்டார். அவர் நினைத்திருந்தால் அறிவுக்கடலில் நீந்தித் திளைத்திருக்க முடியும். ஆனால் தெய்வீகம் ஆன்மிகம் தவிர வேறு விஷயங்களில் அவர் கவனம் செலுத்த விரும்பவில்லை. சீடர்களையும் அகடமிக் (Academic) எனப்படும் அறிவு சார்ந்த விஷயங்களில் அக்கறை காண்பிக்கத் தூண்டவில்லை.



மதம் சரித்திரம் அல்லது இலக்கிய ரீதியான அடிப்படையில் மதத் தலைவர்கள் அல்லது மதம் சம்பந்தப்பட்ட விவாதங்களிலும் ஆர்வம் காட்ட மாட்டார். ஆதிசங்கரர் காலம், அல்லது அவரது சில நூல்கள் சார்ந்த பிரச்சனைகளையும் அல்லது வித்யாரண்யருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குருமார்கள் இருந்தார்களா என்பது போன்ற தர்க்கங்களிலும்... இதில் உண்மையை கண்டுபிடித்து அறிந்துகொள்வதற்கும், உனது சொந்த ஆன்மீக வளர்ச்சிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதோ? என்பதுதான் பாரதி சுவாமிகளின் பதிலாக இருக்கும்.



மாறாக, காஞ்சி முனிவரோ எல்லாத் துறைகளிலும் ஆய்வு மேற்கொள்வதை வரவேற்பார். அத்துடன் தாமே நவீன அறிவியலில் கடலில் தேடித் தேடி முத்து, பவளம், சங்கு, என்று கண்டெடுத்து, அறிவு குறித்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். இந்த இருவரையுமே சனாதன தர்மத்தின் இரு கண்கள் என்று போற்றினார்கள் பல நிபுணர்கள்.



ஆசார்யர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காவிட்டாலும், ஒரே இதயம் படைத்தவர்களாகவே இருந்தனர். 'தங்கள் திட்டங்கள் குறித்து பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொண்டனர்' என்று கே. பாலசுப்ரமணிய அய்யர், எல் எஸ் பார்த்தசாரதி ஐய்யர், மற்றும் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தச்சர்யார் போன்றவர்கள் என்னிடம் இந்த விஷயங்கள் குறித்து சொன்னது உண்டு.



காஞ்சி மடத்திலிருந்து எவர் வந்தாலும் அவர்களை மிக மரியாதையுடன் நடத்துவதுடன், மற்ற மடங்களுக்கும் அழைத்துச்செல்ல தம் தொண்டர்களை அனுப்பிவைப்பார் சிருங்கேரி ஆச்சார்யர். ''இப்படிப்பட்ட தேஜஸ்வியை வேறு எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? அது அவரின் தபஸின் மகிமை!" என்று மகா பெரியவ அவரைப் பற்றி சொல்வதுண்டு. அவருடைய தந்தை மற்றும் பாட்டனார் குறித்தும் பெரியவாள் உயர்வாகச் சொல்வதுண்டு.



சிருங்கேரி ஆச்சார்யரோ காஞ்சி பெரியவர் பற்றி ''அந்த ஞானியின் ஆன்மிக ஒளி அல்லவா உலகின் நன்மைக்கு காரணமாக இருக்கிறது!" என்று மகிழ்ச்சியுடன் கூறுவார்.



நீதித்துறையில் புகழ் பெற்றவர் டி.எம்.கிருஷ்ணஸ்வாமி அய்யர். இவர் பெரியவ பாலக்காட்டில் உள்ள பல்லாவூரில் 1927 -ல் தங்கி இருந்தபோது அங்கே சென்று திருபுகழ் பஜனைகள் செய்தார், பெரியவா இவருக்கு திருபுகழ் மணி என்று பட்டம் கொடுத்தார்.



அதன் பிறகு திருபுகழ் மணி கோவைக்குச் சென்று சிருங்கேரி ஆச்சாரியார் முன்பும் திருபுகழ் பஜனைகள் செய்தார். அவருக்கு காஞ்சி பெரியவா விருது தந்து கௌரவித்தது பற்றி கேள்விப்பட்டதும், ''அவர் அப்படி கௌரவம் செய்திருந்தால் அதை நாங்கள் இருவருமே அளித்ததாக வைத்துக்கொள்ளுங்கள்'!'' என்றாராம் சிருங்கேரி ஆச்சாரியார்.



இன்னொரு விஷேசம் என்னவென்றால் 1935 -ல் பெரியவா கோயமுத்துருக்கு விஜயம் செய்த போது, அவர் முகமிட்டிருந்ததே சிருங்கேரி மடத்தில்தான்!.



1935 -ஆம் ஆண்டு கல்கத்தாவுக்கு நவராத்திரி பூஜை செய்யப் போனார் காஞ்சி பெரியவா. அங்கே மகேந்திர சர்மா என்ற சிருங்கேரி மட அபிமானியும் இருந்தார். பூஜையின் 4 -ஆம் நாள் வரை அவரால் பொறுக்கமுடியவில்லை. நேராக சிருங்கேரி போய் சுவாமிகள் முன் நின்றார்.



சுவாமிகளுக்கு வந்ததே கோபம். உன்மனதில் வேறுபாடு என்கிற கல்மிஷம் புகுந்துவிட்டது. ஏன் பாதி பூஜையில் இங்கே வந்தாய்? மகா பாபம் செய்திருக்கிறாய் என் கண் முன்னாள் நிற்காதே திரும்பிப் போய்விடு என்று அவரைக் கடிந்துகொண்டாராம்.



ஆம். இரண்டு 'சந்திரசேகரர்களும்' ''சங்கர நாராயணன்'' எனும் ஒருவராகவேதான் இருந்தார்கள்

கண்ணதாசன் கவித் துளிகள்

அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா



அடுத்தவர் வாழ்வைக் கெடுத்தவன் ஒரு நாள் படுத்த பின் எழ மாட்டான்

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே

அதுதேடி இதுதேடி அலைகின்றார் எதுவந்து சேர்ந்தாலும் தவிக்கின்றார்

அநியாயம் செய்பவருக்கும் இங்கு மரியாதை

அன்பு நன்றி கருனை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்

அன்னை மனமே கோவில் அவளே என்றும் என் தெய்வம்



ஆசை குறையத் துன்பமும் குறைகிறது

ஆசை கொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் குடும்பத்திலே

ஆடை அணிகலன் ஆடம்பரங்களை ஆண்டவன் விரும்புவதில்லை

ஆத்திரமான கேள்விகளையும் அமைதியாகச் சமாளி

ஆபத்தை சந்திக்கத் துணிந்து விடு அழுவதை மட்டும் நிறுத்தி விடு

ஆரவார நடையைப்பார்த்து மயக்கம் கொள்ளாதே

ஆற்றாதழுதால் அழுத கண்ணீர் துடைக்கும் கையாவான்

ஆற்றும் கடமையை மறக்காதே காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே

இயற்கையழுதால் உலகம் செழிக்கும் மனிதனழுதால் இயற்கை சிரிக்கும்

இரக்கம் கருணைக்கு விளக்கம் ஈகை நல்லவர் வழக்கம்

இரந்துண்ணும் வாழ்வே எதனாலே இதயமில்லா மாந்தர் சதியாலே

இன்று நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் புரியலே

உடைப்பதை உடைத்து வளைப்பதை வளைத்தால் உலகம் உருப்படியாகும்

உண்மையென்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

உத்தமரென்றால் சுவர்க்கமிருக்கு உன்னையறிந்தால் அது பக்கமிருக்கு

உயர்வைத்தருவது ஒழுக்கம் ஊரும் உலகும் மதிக்கும்

உள்ளத் துணியும் முயற்சியும் கொண்ட உத்தமர் வாழ்வு மலரும்

உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்

உள்ளார்க்குச் செல்வங்கள் சொந்தம் இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்

உறவுக்கு என்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு

ஊசிக்குள்ளே ஒட்டகம் போனாலும் காசாசை போகாது கட்டையிலும் வேகாது

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்

எதையும் தாங்கும் இதயமிருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

எல்லாமும் எல்லாரும் பெற வேண்டும் இல்லாமை இல்லாத நிலைவேண்டும்

ஒவ்வொரு நாளும் வரலாறு உன்னை நினைத்து முன்னேறு

ஒழிந்து மறைந்து ஆட்டம் போட்டு உத்தமர் போல் பேசு

ஒன்றே சொல்வார் நன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி

கடந்தது உன் விளையாட்டு காலங்கள் யாவிலும் நல் வழிகாட்டு

கடமையைச் செய்வோம் கவலையை மறப்போம்

கண்ணீர் வடிப்பவன் மூடனடா காலத்தை வென்றவன் வீரனடா

கர்மமே யோகமானால் பிற துன்பத்தின் வலி தெரியாது

கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்

கலகம் இன்றி வாழுங்கள் உலகம் உங்கள் கைகளிலே

கலையங்கள் ஏங்குது சோறின்றி இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

கல்லினும் கொடிய மனமுண்டு அதில் கருணைக்கு எங்கே இடமுண்டு



காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோசத்தில் அவரது கவனம்

காமத்தில் கண்கள் கெட்டால் ஞானியின் பெயரும் முட்டாள்

காலங்களாலே கன்யம் பிறக்கும் கார்யம் பிறந்தால் காரணம் விளங்கும்

காலம் உனக்காகக் காத்திருக்காது காலடிச் சுவடுகள் கூடவராது

காலம் பொன்னானது கடமை கண்ணானது

காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிரைக் காப்பதுமில்லை

குற்றம் குறை பேசினால் சுற்றமென ஏதுமில்லை சொந்தமென நாதியில்லை

கெட்ட பின் ஞானியானவர்தன் பெண்மையை கேவலாமாகத்திட்டுவார்கள்

கையளவே இதயம் வைத்தான் அதில் கடல் போல் ஆசை வைத்தான்





கையிலே பணம் இருந்தால் கழுதை கூட அரசன்

கொடுத்தால் கிடைப்பது மரியாதை கொடுப்பவன் கையில் மலர்வாடை

கொடும்பாம்புகள் இங்கே கொத்தவிட்டு புத்தனைப் போல சத்யனாய் வாழுதடா

கொடுமை செய்த பகைவருக்கும் கருணை செய்வது அன்பு

கொடுமை வில்லிலும் இருக்கும் சிலர் வஞ்சகச் சொல்லிலும் இருக்கும்

கொத்தும் போது கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை

சட்டத்தின் பின்னால் சதிகார கூட்டம் தலைமாறி ஆடும் அதிகார ஆட்டம்

சட்டம் என்பது வெளிக்காவல் தர்மம் என்பது மனக்காவல்

சட்டம் தரும் சலுகை கூட சமுதாயம் தருவதில்லை

சட்டமென்பது இருட்டறை அதில் தர்மம் என்பதே விளக்கு

சத்யம் தோற்றதில்லை சரித்திரம் படித்த பின் சஞ்சலம் வருவதில்லை

சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை

சுருக்கத்து வேண்டும் உயர்வு பெருக்கத்து வேண்டும் பணிவு

சுவர்க்கமும் நரகமும் நம் வசமே

சொந்தம் ஒரு கைவிலங்கு அதில் பந்தம் ஒரு கால்விலங்கு

சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக்கிடப்பது மீதி

சோதனைகளாலே மனம் பக்குவபட்டால் பின் லாபம் தொடர்கிறது

தவறுதல் மனிதனின் பழக்கம் உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும்

தன் பசி கருதாமல் பிறர்க்கு கொடுப்பவர் தெய்வத்தின் தெய்வம்

தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

தன்னையறிந்தால் ஒரின்பம் தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்





திருடிச் சேர்த்த பணம் நிக்காது உன்னை உயிரோடு வைக்காது

துணிந்து விட்டால் தலையில் எந்தச் சுமையும் தாங்கலாம்





துறவும் நிர்வாணமே பெண்நிர்வாணம் கூட தெய்வீகமே





துன்பத்திலே பங்கு கொண்டால் கண்ணீர் சொல்வது நன்றி

துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு

தூய தங்கம் தீயில் விழுந்தாலும் குணம் மாறாது

தெய்வ புருஷன் ராமனுக்கே பொய்மான் எதுவென்று தெரியவில்லையே

தெரிந்தே கெடுப்பது பகையாகும் தெரியாமல் கெடுப்பது உறவாகும்

நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று ஞானிகள் சொன்னார் அன்று

நடப்பது சுகமென நடத்து நாளை நமதென நினைத்து

நம் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது

நமக்கும் மேலே ஒருவனடா நாலும் தெரிந்த கலைஞனடா

நல்லவர்க்கும் பகையுண்டு இங்கு நன்றியில்லாதவர் சிலருண்டு

நண்பனும் பகை போல் தெரியும் அது நாட்பட நாட்படப் புரியும்



நன்றே நன்று நல்லதை செய்து ஒன்றாய் வாழ்வது நன்று

நாடக வேசம் கூட வராது நாளைய உலகம் இவரை விடாது

நாலு பக்கம் வாசலுண்டு நமக்கும் ஒரு வழியுண்டு

நாளை என்ன நாளை இன்று கூட நமது தானே



நாளைப்பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நாளைய உலகம் நம் வசமே நல்லதும் தீயதும் நம்மிடமே



நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்

நெஞ்சிலே நினைவெதற்கு வஞ்சகரை மறப்பதற்கு

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி

நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன் நிச்சயம் மிருகமடா

நேர்மையிலும் தன் வேர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா‍‍

பசியென்று வந்தவர்க்கு புசியென்று தந்தவரை பரமனும் பணிவானடா



பட்டம் போல அவர் பளபளப்பார் ஙால் போல் இவர் இளைத்திருப்பார்

பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசமே ஏனடா

பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணையது

பயந்தவன் தனக்கே பகையாவன் துணிந்தவன் உலகுக்கு ஒளியாவான்

பரிபக்குவ நிலை பரிமானத்தின் மூலமே வருகிறது





பலன் எதிர்பாராது கர்மம் செய்

பாதை வகுத்த பின்பு பயந்து என்ன லாபம்

பாதையில் நடந்தால் ஊர் சேரும் போதையில் நடந்தால் வாழ்வு தடுமாறும்

பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது

பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால் காதல் கானல் நீரே





பாலும் சில நேரம் நீராகத் தெரியும் அது கண் செய்த தவறு

பாவத்தை கண்டால் விலகி விடு பாதையைப் பார்த்து நடந்துவிடு

பாவம் என்பது செய்யும் தீமை புண்ணியம் என்பது நாம் செய்யும் நன்மை

பாறையில் நெல் விதைக்கமுடியாது பாவத்தில் வந்தசெல்வம் நிலையாது





பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா

பிடிபட்ட பின்தானே கள்வன் அதுவரை அவன் பேரும் தலைவன்





பிறக்கின்ற ஆசை தவறாக இருந்தால் அது நடக்கவும் கூடாதம்மா

பிறர் தேவையறிந்து வாரிக்கொடுப்பவர் தெய்வத்தின் பிள்ளைகள்

பிறவியின் பயன் பிறருக்கு சேவை செய்வதே

பூப்போல மனதுக்கு சஞ்சலமில்லை பொல்லாத மனதுக்கு நிம்மதியில்லை





பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே

பூமியில் நேராக வாழ்பவர் எல்லாம் சாமிக்கு நிகரில்லையா

பேசமாட்டாரா என உலகம் ஏங்க வேண்டும் பேசினால் உலகம் நின்று கேட்க வேண்டும்

பேசாமலிருப்பது பெருந்திறமை மௌனமே மகா ஞானம்





பொய்யுடம்பு போன பின்னும் புகழடம்பு வாழாது

பொருளாதாரம் செய்த விந்தை இவள் பொருள் தாரமாகிவிட்ட சந்தை

போகங்களில் சிக்காதவனே புனிதன் ஆவான்

போற்றுப‌வர் போற்றட்டும் பொறுமையில்லாதவர் தூற்றட்டும்





மகனைப் படிக்க வை அவன் சம்பளத்தை எதிர்பாராதே

மலை போன்ற துன்பம் பனி போல மாறுவதுண்டு

மானத்தில் மங்கையர்கள் மானல்லவா கவரி மானல்லவா

மானத்தோடு வாழ்வதுதான் சுயமரியாதை





மூடக்கொள்கைகள் ஓழியனும் நல்ல மூதறிவாளர் பெருகனும்

மூல நோக்கம் சிருஷ்டி என்றால் விரஸமாகாது

யாரிடம் குறையில்லை யாரிடம் தவறில்லை வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது

வருவது வரட்டும் மனமே தினம் வாழ்வது தான் நம் கடமை

வாசல் என்றால் ஆயிரமிருக்கும் வாசல் தோறும் வேதனையிருக்கும்

வார்த்தையை விட மௌனத்துக்கு பல அர்த்தங்கள் உண்டு





வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்

வாழ்க்கை எல்லாம் வசந்தமே வாசமலர்கள் நம் உள்ளமே

வாழ்க்கை என்பது நாடகமே வந்து போனவர் ஆயிரமே

வாழ்க்கை ஒரு கேள்விக்குறி அவதாரங்கள் அதை ஆச்சர்யக்குறியாக நிமிர்ந்தன



வாழ்த்தும் கையில் வாளுண்டு போற்றும் மொழியில் விடமுண்டு

வாழ்தலில் பற்று வை வாழ்க்கையைக் கற்று வை

வாழ்வென்றும் தாழ்வென்றும் சக்கரம் சுழல்கின்றது அதில் சரித்திரம் நிகழ்கின்றது

விஞ்ஞானத்தை ஏசி அஞ்ஞான இருள்மூழ்கும் அப்பாவி மனம் மாறனும்

விதியென்று ஏதுமில்லை வேதங்கள் வாழ்க்கையில்லை

விதைப்பவன் தான் நீ அறுப்பவன் அவனே

விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது

வெறும் பேச்சு சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்னசெய்யும்

வேடம் போடும் கூட்டம் இங்கு மலிந்து விட்டது

Saturday, 17 May 2014

நேர்காணல்: சஞ்சய் சுப்பிரமணி​யன்

Sanjay Subramanyan, for me, is a wonder.  I relate him Partly with Great MMI and Semmangudi Mama and this is because he does not have the voice of a "typical" musician.
He managed to get this "gift" through his "asura" sAdagam, may be.  He has some "Principles" in his life. He does not give up for any reasons.  There is an interview with him that I reproduce below:

This might be an old interview. I am happy to reproduce here because of his simplicity in his replies and does not hide anything from his heart.  

நேர்காணல்: சஞ்சய் சுப்பிரமணியன்
"ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்கு
நான் முக்கியத்துவம் தருவது கிடையாது"

சமகால இசைக் கலைஞர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமைகளில் ஒருவரான சஞ்சய் சுப்பிரமணியனைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் - சென்னை இசை விழாவிற்கு முன்பு - எடுத்த நேர்காணல் இது. தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வரும் அரிய கலைஞர்களில் ஒருவரான சஞ்சய், தனது அனுபவங்கள், குருநாதர்கள், இசை குறித்த தனது பார்வை எனப் பல விஷயங்கள் பற்றிச் சுதந்திர உணர்வுடனும் கருத்துச் செறிவுடனும் பேசினார். அவரது இசைப் பிரவாகம் போலவே நிகழ்ந்த அந்த வெளிப்பாட்டிலிருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன.

சந்திப்பு: ப்ரசன்னா ராமஸ்வாமி, யுவன் சந்திரசேகர், வி. ரமணி, வி.கே. ஸ்ரீராம்
புகைப்படங்கள்: புதுவை இளவேனில்.

ஒலிநாடாவிலிருந்து நேர்காணலைக் கேட்டு எழுதியவர் பி.ஆர். மகாதேவன்.
தொகுப்பு: ப்ரசன்னா ராமஸ்வாமி

நீங்கள் சங்கீதத்தை வந்து அடைந்தது எப்படி?

கிரிக்கெட் விளையாடினேன். தலைல அடிபட்டதும் விட்டுட்டேன். வயலின் ஏழு வருஷம் படிச்சேன். கைல அடிபட்டதும் விட்டுட்டேன். செஸ் கிளப்ல மெம்பரா சேர்ந்தேன். பாதில விட்டுட்டேன். டிரெக்கிங் எக்ஸ்பெடிஷன்ல சேர்ந்து இமாலயாஸுக்குப் புறப்பட்டேன். இப்படி என்னோட வாழ்க்கைல பல விஷயங்கள் செஞ்சு செஞ்சு நின்னு போயிருக்கு. ஆனா இது எல்லாம் நடந்து வந்த அதே காலகட்டத்துலதான் சங்கீதமும் கத்துண்டேன். ஆனா அதை மட்டும் நான் விடவே இல்லை. அப்போ நினைச்சேன், சங்கீதம்தான் நம்மளோடது. நம்மளோட பெர்சனாலிட்டிக்கு அதுதான் ஒத்துவரும் என்று முடிவு செய்துகொண்டேன். இப்போவும் திசைதிருப்பக் கூடிய வேற பல விஷயங்கள் நடந்துகொண்டு இருக்கு. ஆனா, இப்பவும் சங்கீதத்தை நான் விடலை. தினமும் எத்தனையோ யோசனைகள் தோன்றிக்கொண்டே இருக்கு. இதைப் பண்ணணும் அதைப் பண்ணணும் என்று... ஒருவித ரெஸ்ட்லெஸ்னெஸ் இருந்துகொண்டே இருக்கு. ஒருவகையில் அதுதான் என் உந்துசக்தியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். என்றைக்கு அந்தப் பதட்டம் இல்லாமல் போகிறதோ அன்று நான் மூச்சுவிடுவதை நிறுத்திவிடுவேன் என்று தோன்றுகிறது.

கச்சேரியில் பாடும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?

என்னையே சர்ப்ரைஸ் பண்ணிக்கணும்னு நினைத்து முயன்றுவருகிறேன். முழுவதும் சங்கீதத்திலேயே ஊறியிருக்கும் எனக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்று நிச்சயமாக ஆடியன்ஸையும் ஆச்சரியத்திற்குளாக்கத்தான் செய்யுமில்லையா. எப்போது அவர்களுக்கு போரடிக்கிறதோ அப்போது என் கச்சேரிக்கு வருவதை நிறுத்திவிடுவார்கள். நானும் பாடுவதை நிறுத்திவிடுவேன்.
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் பாடகருக்கும் ஆடியன்ஸுக்கும் இடையில் ஒருவித உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்படுகிறது. அதுதான் ஒருவரது கச்சேரியை உட்கார்ந்து முழுமையாகக் கேட்கவைக்கிறது. சிலரது கச்சேரிகளில் பாதியில் எழுந்து போகச் செய்கிறது. ஒவ்வொரு பாடகருடைய திறமை, பாணி, பாடும் பாடல்கள் என வேறு விஷயங்களும் இருக்கின்றன என்றாலும் பாடகருடன் ஏற்படும் உணர்வுபூர்வமான பிணைப்பு என்பது மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது.
எனக்கு இசைல ஒருவித அன்ப்ரடிக்டபிலிட்டி இருக்கணும்னு ரொம்ப விரும்புவேன். ஒருவித சர்ப்ரைஸ் எலமென்ட் ஒவ்வொரு கச்சேரியிலயும் இருக்கணும்னு ரொம்ப முயற்சிப்பேன். ஏதாவது ஒண்ணு வந்து விழுந்தாக்கூடப் போதும்... அப்படி எதுவும் நடக்கலைன்னா எதையோ இழந்த மாதிரி எனக்குத் தோணும். இதுக்கு முன்னால எப்பவுமே பாடியிருக்காத விதத்துல ஒரு கீர்த்தனத்துலயோ ராகத்துலயோ ஏதாவது ஒண்ணு பண்ணணும்னு ரொம்ப ஃபோகஸ்டா முயற்சி செய்வேன்.
என்னோட இலக்கு ரசிகர்களைத் திருப்திப்படுத்துவது அல்ல. நல்ல இசையை உருவாக்க விரும்புகிறேன். நல்ல பாடல்களைப் பாட விரும்புகிறேன். ரசிகர்களைத் திருப்திப்படுத்துவது என்பதற்கு நான் முக்கியத்துவம் தருவது கிடையாது. சில பாடகர்களுக்கு எதுவுமே முக்கியமாக இருப்பதில்லை. முறையான இசை என்பதுகூட அவர்களுக்கு முக்கியமாக இருப்பதில்லை. அதை யார் என்ன செய்ய முடியும்? சாதாரணமாகப் பேசும் போதுகூட நீங்கள் பார்த்திருப்பீர்களே... சிலர் அசட்டுத்தனமாக ஏதாவது பேசுவார்கள். அது அவர்களது இயல்பு.
ஒரு சரணத்தை ரொம்பப் பிரமாதமா நாலு தடவை பாடிக் கைதட்டல் வாங்கி இருப்பேன். மறுபடியும் அதையே ரொம்ப அலட்சியமா இப்ப க்ளிக் ஆகிடும் பாருன்னு மறுபடியும் பாட முயற்சி செஞ்சிருக்கேன். மூஞ்சில அடிச்சா மாதிரி அந்தத் தடவை அது புஸ்ஸுன்னு போயிடும். தலைல அடிச்சுப்பேன். அதான் நாலஞ்சு தடவை கைதட்டல் வாங்கியாச்சே. மறுபடியும் ஏன் அது பின்னாலயே போகணும்னு அப்பறம் நினைச்சுப்பேன். வேற விஷயங்கள் பண்ணறபோது மறுபடியும் க்ளிக் ஆகிக் கைதட்டல் கிடைக்கும். அது வேற... ஆனா ஒரு நாள் அடி வாங்கறோம் இல்லையா... அது நம்மை செழுமைப்படுத்திக்க ரொம்ப உதவியா இருக்கும்...
இன்னிக்கு இன்ன இன்ன சங்கதிகளை இப்படி இப்படிப் பாடப் போறேன்னு ரொம்பத் தெளிவா தீர்மானமாயிடும். இன்னிக்கு சாரீரம் இப்படி இருக்கு. இந்த சங்கதியைப் பாடலாம். இந்த சபைலே மைக் இந்த கண்டிஷன்ல இருக்கும். இதுல இந்த சங்கதிகள் சரியா வராது... இன்னிக்கு இந்தப் பக்க வாத்தியங்கள் இருக்கு. இந்த சங்கதிகள் வேண்டாம் அப்படின்னு எல்லாம் தெளிவா தலைக்குள்ள தீர்மானமாகி இருக்கும். அந்தப் பாதைல அன்னிக்கு என்னோட ட்ராவல் அமையும். ஒரு ராகத்துக்குள்ள இறங்கிக்கொண்டே போகும்போது அந்தப் பயணம் இருக்கிறதே... ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கும். மைக்கோட கண்டிஷன், வயலின் சுருதி சேரலை, மணி ஆகிக்கொண்டிருக்கிறது... இது மாதிரியான விஷயங்கள் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் போதும் ராகம் நம்மை இழுத்துக்கொண்டு போகும். சில நேரங்கள்ல இது ஒப்பேறாதுனு தெரிஞ்சுடும். சட்டுனு ராகத்தை முடிச்சுடுவேன்.
ஓவியம் வரையற மாதிரிதான். மொதல்ல சில கோடுகள் வரையறதுவரை நம்ம திட்டப்படி போகும். அப்பறம் அது தானா நகரும். பாடும்போது சில ஏரியாக்களுக்குத் தன்னால போயிடறது உண்டு.
சில நேரங்கள்ல சில ஃப்ரேஸ் நமக்குப் பிடிச்சுப் போயிடும். ரொம்ப நன்னா அமைஞ்சுடும். அதையே சுத்திச் சுத்தி வருவோம். அதுவே ஒரு சிலந்திவலை மாதிரி ஆகி நாம அதுக்குள்ள மாட்டிக்கொண்டு விடுவதும் நடக்கும்.
பொதுவா நான் ராகம் பாடும்போது, ஆரம்பத்துல ஸ்டாண்டர்டா ஒரு விஷயம் இருக்கும்லயா, அந்த மாதிரிதான் ஆரம்பிப்பேன். சிலநாள் இன்னிக்கு அது வேண்டாம் வேற மாதிரி பன்ணிப் பார்ப்போமேன்னும் நினைச்சுப்பேன். ஆனா பொதுவா ஒரு குறிப்பிட்ட பாணிலதான் ஆரம்பிப்பேன். சில நாள் குயுக்தியா ஒரு ப்ரேஸ் மனசுக்குள்ள தோணும். அதை வெளிப்படையா காட்டாம கொண்டு போவேன். பாடும்போது அதோட பாதியைத்தான் கோடி காட்டுவேன். மீதியை வெளிலதான் முடிச்சுக்கணும். என் மனசுல அது முழுசா இருக்கும். ஆனா நான் பாதியைத்தான் வெளில காட்டுவேன். இலக்கியத்துல சொல்லாம சொல்லி உணர்த்தறது என்பார்களே அது மாதிரி... இன்னதுதான், இப்படித்தான்னு கிடையாது. எதுவா வேணுமானாலும் இருக்கலாம். தீர்மானமா எதையும் சொல்ல முடியாது. வயலின்காரர் ஏதாவது ஒண்ணு வாசிச்சிருக்கலாம். அதைப் பிடிச்சுண்டு கடகடன்னு போக ஆரம்பிச்சுடுவேன்.

ஒரு கச்சேரியை எப்படித் தொடங்குகிறீர்கள்?

கச்சேரில பொதுவா ரெண்டாவது மூணாவதா ராகத்தை வெச்சுப்பேன்.
மொதல்ல நம்மள வார்ம்-அப் பண்ணிக்கணும்லயா... அதுவும் போக கேட்கிறவர்களுக்கும் எடுத்த எடுப்புலயே ராகத்துக்குள்ள நொழையறது சிரமமா இருக்கும்...
வர்ணம் பாடி ஆரம்பிச்சாத்தான் கச்சேரி நன்னா இருக்கும்னு நெறையப் பேர் விரும்பறதுண்டு... சில பேர் விருத்தம் பாடியும் ஆரம்பிக்கறதுண்டு.
என்னோட குரல் ஒவ்வொரு கச்சேரிக்கு முன்னாலயும் எப்படி இருக்கும்னு என்னால யூகிக்கவே முடிஞ்சதில்லை. அது ரொம்பவும் மாறிண்டே இருக்கு. அதனால, அன்னிக்குப் பாடறதுக்கு முன்னால சாரீரம் என்ன மாதிரி இருக்கோ அதுக்குத் தகுந்த மாதிரி எல்லாத்தையும் ப்ளான் பண்ணிப்பேன். ஒருவேளை என்னோட குரலை ஸ்டெடியா வெச்சுக்கறது எப்படிங்கறதுல நான் போதுமான அக்கறை எடுத்துக்கலையோன்னுகூடச் சில நேரங்கள்ல தோணும். ஆனா இன்னொரு விதத்துல பார்த்தா அது ரொம்ப சவாலாகவும் உற்சாகத்தைத் தர்றதாகவும் இருக்கு. ஒருவேளை சாரீரம் ஃபிக்ஸ் ஆகி இதுதான் அப்படின்னு ஆகிட்டா அப்பறம் நான் வித்தியாசமா பண்ணணும்னா வேற விஷயங்களைத்தான் யோசிச்சாக வேண்டி இருக்கும். நேத்திக்கிப் பண்ணின கச்சேரி இருக்கே, சமீப காலத்துல நான் பாடினதுலயே ரொம்ப ஸ்மூத்தா நன்னா அமைஞ்சிருந்தது. கொஞ்ச காலமாவே ஒரு விதமான மாற்றம் என் குரல்ல தென்பட ஆரம்பிச்சிருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னால பாடினப்போ இருந்த மாதிரி இப்போ இல்லை. அது நன்னா தெரியறது. போன வருஷம் என்னோட பிளட் பிரஷர் அதிகமா இருந்தது. நான் சில மருந்துகள் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வந்தேன். அது என் குரலில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. இப்போ அந்த மருந்துகளைச் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். ஆனால், பழைய சாரீரம் வர கொஞ்சம் காலம் எடுக்கும் என்று தோன்றுகிறது.

நீங்கள் ராகம், தானம், பல்லவி பாடும் முறை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அதற்குக் காரணம்?

என்னோட குரல் அன்றைய தேதியில் ஆகச் சிறந்த நிலையில் இருக்கும்போதுதான் நான் பல்லவி பாட ஆரம்பிப்பேன். பொதுவா கச்சேரில ஒரு மணி நேரம் ஒண்ணரை மணிநேரம் பாடினதுக்கு அப்பறம்தான் பல்லவிக்கு வருவேன். அப்போ என்னோட குரல் ரொம்ப அருமையாக வார்ம்-அப் ஆகி இருக்கும். கிரிக்கெட்ல சொல்லுவார்களே மிடிலிங் த பால் பெர்ஃபெக்ட்லி ...ன்னு, அந்த மாதிரி ஒரு ஸ்டேஜ்ல இருக்கும்போதுதான் பல்லவிக்குள்ள நுழைவேன். அது மட்டுமில்லாம பாட ஆரம்பிச்சு ஒண்ணரை மணி நேரம் ஆகி இருக்கும்ங்கறதுனால மனசு அப்போ ரொம்ப ரிலாக்ஸ்டாக ஆக இருக்கும். கச்சேரி ஆரம்பிக்கும்போது இருந்த எந்தப் பதட்டமும் இல்லாமல் சில விஷயங்களைச் சாதித்துவிட்ட மன நிறைவோடு ரொம்பவும் அமைதியா இருக்கும். பல்லவியைப் பாடறதுக்கு என்ன மாதிரியா குரல் இருக்கணும்னு நினைப்போமோ அந்த மாதிரியே க்ரியேட்டிவா, சிறப்பா செய்யறதுக்கு ஏற்ற மாதிரியா, கனிஞ்சு இருக்கும். எந்த வித எல்லைகளும் தடைகளும் இல்லாமல் சுதந்திரமா கிரியேட்டிவ் எனர்ஜியோட அதைப் பாட முடியும். சில கச்சேரிகள்ல பல்லவி பாடலைன்னா எனக்கே ஏதோ பெரிசா இழந்த மாதிரித் தோணும். தானம் பாடும்போது கொஞ்சம் அதிகமாவே அதுக்கு நேரம் எடுத்துப்பேன். ஏதோ ஒப்புக்கு ஐந்து நிமிஷத்துல தானத்தை முடிச்சுட்டுப் பல்லவிக்குப் போகாம ரொம்பவும் பிரக்ஞைபூர்வமா தானத்தை விலாவாரியாப் பாடுவேன்.

மூன்றாவதாக, நான் தேர்ந்தெடுக்கும் பல்லவி வரியை நான் உபயோகிக்கும் விதம் இருக்கிறதே... அதற்கும் முக்கியத்துவம் தருவேன். நிலதா... ம...று ...லூ கொண்டி... நீ...னு மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் ஒரு நாள் பாடினேன். சாகித்தியமா அந்த வரிகளுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. ஒரு பெண் நின்றுகொண்டிருக்கிறாள் என்று ஏதோ அர்த்தம் அவ்வளவுதான். அந்தக் கச்சேரி முடிஞ்சு வெளியேவந்தபோது தஞ்சாவூர் சங்கரய்யர் சொன்னார், 'ரொம்ப நன்னா இருந்ததுப்பா... இதெல்லாம் 50 வருஷமா எல்லாரும் கேட்ட ஒரு சாகித்யம். அது காதுல ஒலிச்சுண்டே இருந்துருக்கும். ஈசியா அதோட அவாளால ஒன்றிக்க முடியும். அப்படியான சாகித்தியங்களைத்தான்
பல்லவிக்குப் பாடணும். புதுசா யாருமே கேக்காத வார்த்தைகளை எடுத்துண்டு பாடக் கூடாது. மனசிலயே நிக்காது' என்றார். நான் அது மாதிரிதான் ரொம்பவும் பரிச்சயமான வார்த்தைகளை மட்டுமே பல்லவிக்கு எடுத்துக்கொள்ளுவேன்.

பாடும்போது உங்களுக்குள் என்ன நடக்கிறது?

ஒருவித எக்ஸைட்மெண்ட்தான் அது. நாம நினைக்கற மாதிரி வந்துண்டு இருந்ததுன்னா, ஒரு புது விஷயம் நன்றாக நடந்ததுன்னா, பாடும்போது ஒருவித பரவச நிலைல இருப்பேன். அன்னிக்கு என்ன பாடினலும் திருப்தியா அமைஞ்சுடும். சில நாள்ல மேடைல ஏறும்போதே எரிச்சல் ஏற்பட்டுடும். தொண்டை சரி இல்லை. பக்கவாத்தியம் சரி இல்லை. ஆடியன்ஸ் எங்கயோ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். எப்போதுடா முடித்துவிட்டு எழுந்திருக்கப் போகிறோம் என்று தோன்றிவிடும். அன்றைக்குச் சிறப்பாகப் பாடுவதுதான் பெரிய சவால். எல்லாத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அடிச்சுப் பாடி முடிக்கறதுங்கறது பெரிய சவாலா இருக்கும். அப்படி நடந்துட்டா பெரிய வெற்றிதான். சில நேரங்கள்ல மொதல் பாட்டுலயே அவுட் ஆகிடும். அப்பறம் என்ன பாடினாலும் எனக்கென்னன்னு ஆடியன்ஸ் உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். நாமும் என்னமோ ஆகட்டும் என்று பாடி முடிப்போம். சில நேரங்கள்ல நேர்மாறா நடக்கும். நாம என்ன பாடினாலும் ஹிட் ஆகிடும். ஆடியன்ஸுக்கும் நம்ம முகத்தைப் பிடிச்சுப்போயிடும். நமக்கும் ஆடியன்ஸைப் பிடிச்சுப்போயிடும். இதுக்கெல்லாம் டெக்னிக்கலா ஒரு காரணமும் சொல்ல முடியாது. ஒரு தடவை பெங்களூரில் பாடிக்கொண்டிருந்தேன். என்னமோ தெரியலை, ஒருவித ரெஸ்ட்லெஸ் நெஸ் என்னைச் சூழ்ந்துவிட்டது. என்னவெல்லாமோ பண்ணிப் பார்த்தேன். என்ன பாடினாலும் ஒண்ணும் நடக்கமாட்டேன் என்கிறது. மிருதங்க வித்வான் அடித்து வாசிக்கிறார். வயலின்காரர் பிரமாதமாக வாசிக்கிறார். ஆனாலும் ஏதோ ஒன்று மூளியாக இருப்பதுபோல் மனசுக்குள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதைப் பிறரிடமும் நன்றாகப் பார்க்க முடிகிறது. பாடிக் கொண்டே இருந்தபோது ஸ்வரத்தில் ஒரு கணக்கு பாடிக்கொண்டு வந்தேன். சட்டென்று ஒரு மாற்றம் நிகழ்ந்தது. த ஹோல் அட்மாஸ்பியர் காட் எலக்ட்ரிஃபைட். அரங்கின் ஒட்டுமொத்த சூழலே மாறிவிட்டது.

வாக்கேயக்காரர்களில் அதிகம் பிடித்தவர்கள் ...

நெறையப் பேரைப் பிடிச்சிருக்கு. தியாகராஜர்ல ஆரம்பிச்சு தீட்சிதர் கிருதிகள், அப்பறம் நிறையத் தமிழ்ப் பாடல்கள், சுப்பராய சாஸ்திரி, பூச்சி சீனிவாச ஐயங்கார். அப்படி நிறையப் பேரைப் பிடிக்கும். குறிப்பிட்டுச் சொல்லும்படியா தனியா எதுவும் இல்லை.

பிடித்த பாடகர்கள்...

ஜி.என்.பி., செம்மங்குடி, மதுரை மணி அய்யர்... நிறையப் பேரோட பாட்டுகள் ரொம்பப் பிடிக்கும். இளையராஜா சங்கீதமும் ரொம்பப் பிடிக்கும். நிறையக் கேட்பேன். கர்நாடக சங்கீதத்துல எல்லாரையுமே பிடிக்கும். பிடிக்காதுன்னு ரொம்பக் கொஞ்சமாத்தான் இருக்கும்.
நெய்வேலி சந்தானகோபாலன் ரொம்பப் பிடிக்கும். சமகால கர்நாடக சங்கீதப் பாடகர்களில் இருந்து ரொம்பவே மாறுபட்டவர். சில விஷயங்களைப் பாடுவதில் அபாரமான கலைநயம் வாய்த்தவர். இசையை, பாடுவதை அவர் அணுகும் முறை எனக்குப் ரொம்பப் பிடித்திருக்கிறது. ஸ்கில் என்று பார்த்தால் நிறையப் பேரைப் பிடித்திருக்கிறது. மாண்டலின் ஸ்ரீனிவாசன்... சில நேரங்களில் பிரமிக்கும்படியான மென் பிரவாகம் அவரது கைகளிலிருந்து வெளிப்படும்.
'அற்புத ரஸத்தை மட்டுமே பார்த்துண்டு போகப்டாதுடா ... சாந்த ரஸம், சிருங்கார ரஸம் எல்லாம் இருக்கணும்' அப்படிம்பார் செம்மங்குடி. வர்ச்சுவாஸிட்டி பத்தி எனக்கு பிரமிப்பு உண்டு. அது மிகவும் கடின உழைப்பு தேவைப்படுகிற விஷயம். யாரெல்லாம் சிரத்தையோடு கடின முயற்சி எடுத்து ஒரு காரியத்தைச் செய்கிறார்களோ அவர்கள் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் நிறையவே உண்டு.
தமிழ் சினிமாப் பாட்டு ரொம்பப் பிடிக்கும். கடந்த பத்து வருடங்களாய் வரும் பாட்டுகளைவிட அதற்கு முந்திய பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். ஹிந்தியில் முகமது ரஃபி ரொம்பப் பிடிக்கும். ஹிந்தியில் அவர் ஒருத்தரைத்தான் பிடிக்கும். தமிழில் சுசீலா பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். காலத்தை வென்று நிற்கும் அருமையான பாடகி அவர். எஸ்.பி.பி. பிடிக்கும்.

பக்கவாத்தியக் கலைஞர்கள் பற்றிச் சொல்லுங்கள்.

ஒரு கச்சேரிக்குப் போகும்போது எனக்கு மனம் தெளிவாக இருக்கவேண்டும். நாலைந்து நண்பர்களாக ஒரு இரவு விருந்துக்குப் போகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். யாராவது ஒருவர் மனம் புண்படும்படியாகவோ தவறாகவோ சொல்லிவிட்டால் அந்த இரவு முழுவதுமே மொத்தமாக நசிஞ்சுடும். அதுபோலத்தான் கச்சேரியிலும். பக்கவாத்தியக்காரராக இருப்பவர் இணக்கமான மனநிலையில் இருக்க வேண்டும். நீ பெரியவனா நான் பெரியவனா என்று பார்க்க ஆரம்பித்தாரென்றால் ரெண்டாவது பாட்டிலேயே தெரிந்துவிடும். அதன் பிறகு அதையும் மீறித்தான் நான் பாடியாகணும். அடுத்த கச்சேரிக்கு அவர் பெயரைச் சொல்லும்போது வேண்டாமே என்று சொல்ல வேண்டி வந்துவிடும். நான் அதில் தீர்மானமாகத் தெளிவாக இருப்பேன்.
ட்ரடிஷனலா பார்த்தால் மெயின் பாட்டுலதான் தனி ஆவர்த்தனம் வர்ற மாதிரி வெச்சுப்பார்கள். அதுக்கு முன்னால வேற சில பாடல்களை நன்றாகப்பாடி இருக்கலாம். ஆனாலும் மெயின் பாட்டின் இடையில்தான் தனி ஆவர்த்தனம் வரும்படியாக அமைத்துக்கொள்வார்கள். முன்பெல்லாம் தனி ஆவர்த்தனத்துக்கு அப்பறம்தான் ராகம் தானம் பல்லவி பாடறது என்று வைத்துக்கொண்டிருந்தார்கள். பொதுவாகச் சில கச்சேரிகளில் ராகம் தானம் பல்லவி பாடி முடிக்கறதுக்கு ரெண்டேமுக்கால் மணி நேரம் ஆகிவிடும். அதற்குப் பின் தனி ஆவர்த்தனம் வாசிக்கச் சொன்னால் சிரமமாக இருக்கும். அவர்களும் தளர்ந்து போயிருப்பார்கள். தெம்போடு இருக்கும்போதே தனி ஆவர்த்தனம் வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குவது மிக அவசியம். அதில் எந்தத் தவறும் இல்லை. முன்பெல்லாம் அதற்காகத்தான் தனி ஆவர்த்தனத்தை முன்னால் வைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அப்படி விடும் நேரத்தில் ரொம்பவும் க்ரிஸ்ப்பாக வாசிப்பவர்களும் இருக்கிறர்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று இழுத்தடித்துக் கச்சேரியைக் காலி பண்ணுபவர்களும் இருக்கிறார்கள்.
பொதுவாகப் பக்கவாத்தியம் வாசிப்பதில் இரண்டு வகை உண்டு. நாம் ஒன்று பாட அதைப் பின்னால் அப்படியே வாசிப்பது என்று ஒரு பாணி. இன்னொருவகை நாம் பாடும்போது கூடவே அவர்களும் வாசித்துக் கொண்டுவரும் வேறொரு பாணி. நாகை முரளீதரன் பாடுவதைத் திரும்பி வாசிப்பதில் ஒரு நிபுணர். அந்த முறை நமது சங்கதிகளைப் பரிமளிக்கச் செய்கிறது. வரதராஜன் நிழல்போலக் கூட வருவார். வெளிநாட்டுக்காரர்கள் ரொம்பவும் வியந்து கேட்பார்கள் 'எப்படி ஒரு நிழலைப் போல அவரைப் பின்தொடர்ந்து செல்கிறீர்கள்' என்று...
நாம ஷட்ஜத்துல நின்னு பத்துச் சங்கதி பாடிக்கொண்டு வரும்போது அவர் பின்னணியில் ஸ... கொடுத்துக் கொண்டு வந்தால் கேட்பதற்கு ரொம்பவும் பிரமாதமாக இருக்கும்.

பக்கவாத்தியக்காரர்களுடன் இசை சம்பந்தமாக உரையாடல்கள் உண்டா?

நாகை முரளீதரன் இப்போது சில காலமாக என்னுடன் கச்சேரிகள்
செய்துவருகிறார். அவருடன் இருக்கும்போது என்னை நான் நன்றாகச் செழுமைப்படுத்திக்கொள்ள முடிகிறது. அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். ஒவ்வொருவருடைய இடத்தையும் வெகு அழகாகத் தீர்மானித்து அதற்கு ஏற்றாற்போல் வாசிப்பார். என்னை ஒரு கை பார்க்கறதுன்னு அவர் நினைத்தால் அவரால இறங்க முடியும். ஆனா அதைச் செய்யமாட்டார். இன்னிக்கு நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு கச்சேரி பண்ண வந்திருக்கோம். இது உன்னோட ஏரியா. இது என்னோடதுன்னு ரொம்ப அழகா வரையறுத்துக்கொண்டு செயல்படுவார். அவரோட திறமைகளைப் பத்தி அவருக்குத் தெரிஞ்சும் அவர் தன்னை வரையறுத்துக்கறதுங்கறது அவரோட பெரிய மனசைத்தான் காட்டறது. என்னோட ஏஜ் குரூப்ல உள்ள ஒருத்தர் அப்படி இருக்கறதுல ஒண்ணுமே இல்லை. ஏன்னா ரெண்டுபேருமே ஒரேவிதமான அனுபவம் உள்ளவர்கள்தான். அதனாலே அங்கே ஒருவிதமான ஃபிரண்ட்லியான உறவு இருக்கும். வயலின் கலைஞர் வரதராஜன், மிருதங்கக் கலைஞர்கள் அருண் பிரகாஷ், நெய்வேலி வெங்கடேஷ் போன்றவர்களுடன் இப்படி இருக்கும். முரளீதரன் என்னைவிட ரொம்ப சீனியர். சமீபகாலமாத்தான் எங்களுக்குள்ள பரிச்சயம் ஏற்பட்டிருக்கு. இருந்தும் அவர் அப்படி இருக்கறதுங்கறது அவரோட பக்குவத்தைத்தான் காட்டறது. அதோடு அது எனக்கு ஒருவகைல சவாலா இருக்கும். இன்னிக்கு நாமளும் ரொம்ப நன்னாப் பாடணும் அப்படின்னு என்னைத் தயார்ப்படுத்திண்டு போவேன். குருவாயூர் துரை, மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் போன்றவர்கள் வாசிக்கும்பொழுது 'இவ்வளவு பெரியவர்கள் வந்திருக்கிறார்கள், நாமும் நன்றாகப்பாட வேண்டும்' என்று என்னை நானே உற்சாகப் படுத்திக்கொள்ளுவேன்.

பாட ஆரம்பித்த பின்னாலே எப்படி அமைகிறது என்பதெல்லாம் வேற விஷயம். நாம ஒரு கணக்கைப் பாடுவோம். அது சரியா வந்திருக்காது. அவர் நன்றாக வாசித்திருப்பார். மொதல்ல நன்றாக வரவில்லை. மீண்டும் பாடுகிறேன் என்று சொல்லியபடியே பாடுவேன். பாடும்போது இந்த உரையாடலும் உள்ளுற ஓடிக் கொண்டிருக்கும். நாகை முரளீதரனுடனான கச்சேரிகளில் இதுபோல உரையாடல்கள் நடந்துகொண்டே இருக்கும். நான் ஒன்று பாடி இருப்பேன். அது அவருக்குச் சரியாக வந்திருக்கவில்லை என்றால் கச்சேரி முடிந்ததும் சொல்லுவார். 'நீ இந்த இடத்துல இப்படிப் பாடினாய்... அது எனக்குச் சரியா அமையலை. நான் வீட்டுல பயிற்சி எடுத்துண்டு வரேன்...' அப்படிம்பார். அவருக்கு நல்லா வாசிக்கத் தெரியும். அன்னிக்கு ஏதோ வராமப் போயிருக்கும். ஆனாலும் நம்மகிட்ட அப்படிச் சொல்லுவார். அப்பறம் 'ஏ.கே.சி. ஒரு சங்கதி வாசிச்சார்யா'னு வாசிச்சுக் காட்டுவார். நான் அதை அடுத்த கச்சேரில பாடுவேன். சிரிச்சுண்டே அவரும் அதை வாசிப்பார்.

அப்பறம் தியரிட்டிக்கலா என். ராமனாதன், எஸ்.ஆர். ஜானகிராமன், வேதவல்லி மாமி இவர்களோடு இசை பற்றி நிறைய விவாதிப்பதுண்டு. ஏதாவது சந்தேகம் என்றால் ஃபோன் பண்ணிக் கேட்பேன். இவர்கள் பாரபட்சம் பார்க்காமல், அக்கறையோடு பதில் சொல்வார்கள்.

மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசப்படும்போது எப்படி உணர்கிறீர்கள்?

இப்ப நாம ஒரு ராகத்தைப் பாடறோம். அதையே இன்னொருத்தரும் பாடறார். 'சார் நீங்களும் இதை நன்னாப் பாடினேள். அவரும் நன்னாப் பாடினார்'ன்னு நம்மகிட்டயே வந்து சொல்வார்கள். அதைக் கேட்கும் போது 'அவர் பாடினார்ங்கறதுனால இது நன்னா இருந்துடுத்தா...' அப்படின்னு மனசுக்குள்ள ஒரு சிந்தனை சட்டுன்னு வந்துட்டுப்போகும். இதைத் தவிர்க்கணும்னு நெனைப்பேன். ஆனா முடியலை. வர்றது. என்ன பண்ண?

சில சமயங்கள்ல அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாதுன்னு தோணும். வேற சில சமயங்கள்ல ரொம்பக் கஷ்டமா இருக்கும். ரெண்டும் இருக்கும். இது போன்ற விஷயங்களால பாதிக்கப்படாமல் இருக்க கூடுமானவரை முயல்வதுண்டு. அது மட்டுமில்லாமல் நான் இப்பப் பாடற விதத்துல பாடறதுனாலதான இப்படி ஒப்பிட்டுச் சொல்கிறாய்... வேறொன்றுடன் ஒப்பிடவே முடியாத அளவுக்குச் சிறப்பாக ஒன்றைப் பாடிக் காட்டுகிறேன் பார் என்று என்னை நானே தூண்டிவிட்டுக்கொள்வேன். 'சார் நேத்திக்கு உங்களோட கச்சேரி கேட்டேன். அதுக்கு முந்தின நாள் இன்னொருத்தரோட கச்சேரி கேட்டேன். ரெண்டும் நன்னா இருந்தது'. அப்படின்னு சொன்னார்னா அதைப் பத்தி எனக்கு ஒரு முடிவுக்கு வந்துக்க முடியும். 'ஓ... உங்களுக்கு அப்படித்தான் தோணினதா...' எந்த ஒரு விஷயத்தையும் பாஸிட்டிவாக எடுத்துக்கொள்வேன். ஒருவித சோம்பேறித் தனத்துனாலதானே இதுவரை இதைப் பண்ணாம இருந்திருக்கோம். இப்படிச் சொன்ன பிறகாவது நாம பண்ண ஆரம்பிப்போம்னு எடுத்துப்பேன்.

அதே சமயம் இன்னொருத்தர் ஒரு விஷயத்தை அருமையாகப் பண்ணினார் என்றால்... சே... இதை நாம செய்யணும்யா... செய்யாம விட்டுட்டோ மே... அந்த அளவுக்கு நம்மை தயார்ப்படுத்திக்காம இருந்துட்டோ மே... அப்படின்னு தோணும். அவர் செய்துட்டாரே நாமும் செய்தாக வேண்டுமே என்று இல்லை. இதை நாம செஞ்சிருக்கணுமே என்று தோன்றும். அப்படி என்னோட சுய கர்வத்தைத் திருப்திப்படுத்திக்க நானே முயற்சி எடுப்பேன். நாம பண்ணின ஒரு விஷயத்தை இதே கோணத்துல எடுத்துக்காம வேற மனோபாவத்துல எடுத்துக்கொண்டு யாராவது பண்ணினால் அது பிடிக்காது. ஏ.கே.சி.கூட இதை அழகாகச் சொன்னார் ஒரு தடவை. 'காருகுறிச்சியார் களத்தில் இறங்கினார். எனக்கும் அவருக்கும் போட்டி. அவர் ஒரு தோடியைப் பிரமாதமா வாசிச்சுட்டார். அதுக்கு ஈடா நாமளும் ஒண்ணு பண்ணியாகணுமேன்னு தேசிகர் கிட்ட போய் 'நாவுக்கரசர்'னு ஒண்ணைப் பாடம் பண்ணி வாசிச்சேன்' அப்படின்னார். இதைச் சமீபத்துலதான் கேள்விப்பட்டேன். அட, நாமளும் இந்த விஷயத்தை இப்படித்தான் எடுத்துக்கணும்னு முடிவுசெஞ்சேன். அது மட்டும் இல்லாம வேற யாரும் பண்ணிட முடியாத அளவுக்கு நாலஞ்சு விஷயங்களைப் பண்ணிடணும்னு முடிவெடுத்து சில விஷயங்கள் செய்ய ஆரம்பிச்சிருக்கேன். இது எல்லாம் அந்த டிஸ்ட்டர்பன்ஸுக்கான என்னோட எதிர்வினைகள். அவற்றை நான் அப்படித்தான் எதிர்கொள்ள விரும்புகிறேன். ஏற்கனவே நாம பண்ணினதையே பன்ணிக்கொண்டு இருக்க முடியவில்லை. ஒரு வகையான மூச்சுத் திணறலை அதில் உணர்கிறேன். அதை மீற வேறு சில விஷயங்களைச் செய்ய ஆரம்பிக்கிறேன்.

நாட்டுப்புறப் பாடல்களுடன் பரிச்சயம் உண்டா?

நான் மெட்ரோபாலிட்டன் வாசி... எனக்கு ஒன்றிரண்டு காவடிச் சிந்து பாடல்களைத் தவிர வேறெதுவும் தெரியாது. மிஞ்சிமிஞ்சிப் போனால் இளையராஜாவின் பாடல்களைத்தான் கேட்டிருக்கேன். அவரது பாடல்கள் அந்த வகையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்று தெரியவில்லை. ஆனால் அந்த அளவுக்குத்தான் கேட்டிருக்கிறேன்.
என்னுடைய பிறப்பு வளர்ப்பு, சூழல் போன்றவை ஒரு காரணமாக இருக்கலாம். எனக்கு அறிமுகமான விஷயங்களிலேயே எனக்குப் பல சவால்கள் இருந்ததால், ஒருவகை ஈடுபாடு இருந்ததால், வேறு பக்கம் போகாமல் இருந்திருக்கலாம்.

பிற ஆர்வங்கள்...

விளையாட்டுகளில், குறிப்பாகக் கிரிக்கெட்டில் ரொம்ப ஈடுபாடு உண்டு. இன்ட்டர்நெட் மோகம் உண்டு. போர்ட் கேம்ஸ் பிடிக்கும். இலக்கியம் ரொம்பப் பிடிக்கும். ஆரம்பத்தில் ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடு இருந்தது. இப்போது தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாடு வந்திருக்கு. படங்கள் நிறையப் பார்ப்பேன். பழைய தமிழ்ப் படங்கள் பிடிக்கும். வரலாறு ரொம்பப் பிடிக்கும். இப்போ சமீபகாலமா உடல் பயிற்சியில் மனம் வெகுவாக ஈடுபட ஆரம்பித்திருக்கிறது. கச்சேரிகளுக்குப் போவது தவிர பிரயாணங்களில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை.
இப்போது தனியாகச் சாதகம் என்று பண்ணுவதில்லை. கற்றுக்கொள்ள மாணவர்கள் வரும்போது அவர்கள் கூடப் பாடுவேன். அப்படி ஒன்றிரண்டு மணி நேரம் தினமும் பாடிவிடுவேன். அது தவிர நிறையப் பாட்டுக் கேட்பேன். கம்ப்யூட்டரில் ஏதாவது விளையாடிக்கொண்டிருப்பேன். குழந்தைகளுடன் காலையில் ஒன்றிரண்டு மணி நேரம் விளையாடுவேன். இரண்டு மணி நேரம் ஜிம்முக்குப் போவேன்.
கிரிக்கெட் மேட்ச் இருந்தால் எல்லாமே காலியாகிவிடும். வாரத்திற்கு ஒன்றிரண்டு சினிமாக்கள் பார்ப்பேன். முன்பெல்லாம் கேட்ஜெட் பைத்தியமாக இருந்தேன். போர்ட் கேம்ஸ் வந்த பிறகு அது கொஞ்சம் குறைந்துவிட்டது.
இன்ட்டர்நெட், லாப்டாப், செல்ஃபோன் என்று வாழ்க்கையில் கருவிகள் அதிகமாகிவிட்டன. இதனால் படிக்கிற வழக்கம் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. அது உண்மையிலேயே மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ஸ்போர்ட்ஸ், இலக்கியம் என நிறையப் படிப்பேன். ஹாரி பாட்டர் படிப்பேன்... இப்போதும் நோம் சாம்ஸ்கியின் ஒரு புத்தகத்தைப் படிக்க எடுத்துவைத்திருக்கிறேன்.

ஹிந்துஸ்தானி - கர்நாடக சங்கீதம்...

படே குலாம் அலிகான், அமீர்கான் கேட்டிருக்கேன். ஆனா, ஏனோ அந்த இசைல எனக்குப் பெரிய ஈர்ப்பு இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் இரண்டுமே வெவ்வேறானவை. ஒப்பிடவே கூடாது. வட இந்தியச் சாப்பாட்டையும் தென்னிந்தியச் சாப்பாட்டையும் ஒப்பிட்டு இது சிறந்தது இது தாழ்ந்தது என்று யாராவது சொல்ல முடியுமா... அதுமாதிரிதான். இரண்டுமே இரண்டு வகையானவை. அவ்வளவுதான். அணுகுமுறையிலும் உள்ளடக்கத்திலும் எல்லா விஷயங்களிலுமே வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்.

எனக்குப் பொதுவாக இரண்டையும் ஒப்பிட்டுப் பேசுவதே பிடிக்காது.
சிலர் என்னிடம் வந்து 'ஹிந்துஸ்தானியில் அப்படிப் பாடுகிறார்கள். நீங்க பாடுவதில்லையே' என்று கேட்கும்போது கோபமாகத்தான் வருகிறது.

ரசிகர்களின் அறிவு, கர்நாடக சாஸ்திரீய சங்கீதம் தெரியாத ஆடியன்ஸ்..
.
கர்நாடக இசை பற்றி எதுவுமே தெரியாத ஐரோப்பியர்கள் மத்தியில் நாலைந்து கச்சேரிகள் செய்திருக்கிறேன். அவர்கள் முன்னால் பாடும்போது ஒண்ணரை மணி நேரம் ஒண்ணேகால் மணி நேரம் என்ற கால நிர்ணயமே அடிபட்டுப் போய்விடும். அது மட்டுமில்லாமல் ரேடியோவில் கச்சேரி செய்வதுபோல ஆகிவிடும். பொதுவாக நான் பாடும்போது இசை குறித்து எவ்வளவு விஷயங்களை கேட்பவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமோ அவ்வளவையும் பகிர்ந்துகொள்ள முயற்சிப்பேன். ஒரு கீர்த்தனம், ஒரு ராகத்துல ஒரு சுருதி, இன்னொரு ராகத்துல இன்னொரு பல்லவி, அப்புறம் ஒரு தில்லானா, கடைசில ஒரு துக்கடா இப்படி ஒரே கச்சேரியில் பலதரப்பட்ட வடிவங்களைத் தர முயற்சி செய்வேன். நாம வேற வேற ராகத்தைப் பாடினாலும் அது பத்தித் தெரியாதவர்களுக்கு ஒரே ராகத்தையே திரும்பத் திரும்பக் கேட்கற மாதிரித்தான் தோணும். தோடி பாடிட்டு சங்கராபரணம் பாடினா சங்கீதம் தெரிஞ்ச ஆடியன்ஸுக்கு இது வேற காந்தாரம், இது வேற மத்யமம்ன்னு புரிஞ்சுக்க முடியும். வெளிநாட்டுக்காரர்களுக்கு அது புரிஞ்சுக்க முடியாது இல்லையா... அதனால நான் என்ன பண்ணுவேன், ஒரு ராகத்தை வேகமாப் பாடுவேன். இன்னொண்ணுல பிர்கா அதிகமாப் போடுவேன். குரல் நன்னா ஸெட் ஆயிடுத்துன்னா நீளமான ராகம் பாடறச்சே கார்வை கொடுத்துப் பாடுவேன். அந்த அனுபவமே வேறமாதிரி இருக்கும். என்னோட நோக்கம் என்னன்னா எவ்வளவு பலதரப்பட்ட விஷயங்களை ஒரு கச்சேரில தரமுடியுமோ அவ்வளவு குடுத்துர்றது. பாடும்போது அதே மாதிரி அமையாம வேற மாதிரியும் போகும். ஆனாலும் ஒரு தெளிவான ஐடியா மனசுக்குள்ள மொதல்லயே உருவாக்கிக்கொண்டுவிடுவேன். அதுல 60, 70 சதவிகிதம் அதே மாதிரிதான் பாடவும் செய்வேன்.
ஃபாரின் ஆடியன்ஸுக்கு முன்னால பாடறச்சே நமக்கு இன்னொரு சுதந்திரம் இருக்கும். என்ன வேணா பாடலாம். ஒரு மாதிரி ஃப்ரீக் அவுட்டா பாடலாம். அது சில சமயங்கள்ல நன்னா வொர்க் அவுட் ஆகவும் செய்யும்.
ஃபிரான்ஸுல ரெண்டு விதமான தியேட்டர்கள் இருக்கு. தியாட்டர் டெ ல வில்-லில் வர்ற ஆடியன்ஸ் ஒருவித க்யூரியாஸிட்டிக்காக வர்றவங்களா இருப்பார்கள். கீழைத்தேச இசை எப்படி இருக்கு... நம்ம தியேட்டர்ல வந்து பாடுகிறான் என்றால் நிச்சயம் பெரிய ஆளாகத்தான் இருக்கணும். அதனாலே, இவன் வாயத் திறந்தாலே நாம கைதட்ட வேண்டும் என்று வருவார்கள். ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் வரும். கைதட்ட ஆரம்பித்தால் நிறுத்தவேமாட்டார்கள். அது மாதிரிக் கைதட்டலை நாம் வேற எங்குமே கேட்க முடியாது. மொதல் பாட்டுக்கே கைதட்ட ஆரம்பித்துவிடுவார்கள். நாம் அடுத்த பாட்டுப் பாட ரெடியாகிக் காத்துக்கொண்டிருப்போம். ஆனாலும் கைதட்டி முடிஞ்சிருக்காது.
ம்யுஸி கீமேன்னு (Musee Guime) அரங்கம் இருக்கு. அங்கே வரும் பார்வையாளர்கள் வேறு வகையாக இருப்பார்கள். எண்ணிக்கையில் குறைவுதான். நமது இசைக்கு ட்யூன் ஆகி வார்ம் அப் ஆகச் சிறிது நேரம் எடுத்துக்கொள்வார்கள். அவங்களை உள்ளே அழைத்து வந்து ஈடுபாடு கொள்ளவைப்பது என்பது சவாலான விஷயம். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அவங்க அலைவரிசைக்கு நாம் போய் அவர்களைச் சந்திப்பது என்பதே சவாலான விஷயம்தான்.
ஒரு தடவை ஸ்பெயினில் கச்சேரி. ஒரு கிராமம். எதிரும் புதிருமாக வீடுகளும் சந்துகளும், நடுவில் கோவில் என்று ஒரு கத்தோலிக்க அக்ரஹாரம் போல இருந்தது. அங்கே ஒரு அருமையான அரங்கம் கட்டி வைத்திருந்தார்கள். 150 பேர் உட்கார்ந்து கேட்கலாம். அன்று 20 பேர் வந்திருந்தார்கள். பாடினபோது மூன்று முறை encore1 கேட்டார்கள். அந்த அரங்கத்தின் நிர்வாகி சொன்னார் - அதுவரையில் அங்கே அப்படி நடந்ததே இல்லையாம். எங்கேயோ ஒரு அலைவரிசையில் சகலத் தடைகளையும் தாண்டி இசையும் அவர்களும் அன்று சந்தித்துக்கொண்டார்கள்.

ஒலிபெருக்கிச் சாதனங்கள், நிகழ்ச்சி நேரத்து நெருக்கடிகள்...

ஒரு கச்சேரிக்கு மேற்கத்தியர்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறை இருக்கிறதே... நீங்கள் அதைப் பார்த்தால்தான் நான் சொல்வதை நம்புவீர்கள். 5 மணிக்குக் கச்சேரி என்றால் மூன்று மணிக்கே மைக் டெஸ்ட் ஆரம்பித்து விடுவார்கள். மைக் டெஸ்ட் என்றால் வெறுமனே ஸ ப ஸ பாடிட்டுப் போக முடியாது. முழுசாகக் கச்சேரியே செய்வதுபோலப் பாடவைத்துவிடுவார்கள். ஸ்பெயினில் மாட்ரிடில் ஒரு பெரிய அரங்கில் கச்சேரி நடந்தது. அதன் நிர்வாகி ஒரு பிரிட்டிஷ்காரன். முதல்லே என்னைப் பாடச் சொன்னான். அப்புறம் வயலினை வாசிக்க வைச்சான். அப்புறம் மிருதங்கத்தை வாசிக்கச் சொன்னான். "உங்களோட ஒரிஜினல் குரலை அப்படியே எந்தவிதக் கூடுதலோ குறைச்சலோ இல்லாமல் நேச்சுரலாகக் கேட்கவைக்க விரும்புகிறேன்" என்று சொன்னான். நான் ஆச்சரியத்தில் உறைந்துபோய்விட்டேன். "எந்தவித ஆம்ப்ளிஃபிகேஷனும் இல்லாமல் இயற்கையாக இருக்கும் குரலை மைக் மூலமாகக் கொண்டுவர விரும்புகிறேன்"ன்னான். அதற்காக ஸெட்டிங்குகளை மாத்தி மாத்தி அமைச்சு என்னை மறுபடியும் மறுபடியும் பாட வைச்சான். கடைசில மைக் இருக்கா இல்லையா என்பதே தெரியாத அளவுக்குக் கொண்டுவந்தான். 400, 500 பேர் வந்திருந்தார்கள்.
சில இடங்களில் மிகவும் மோசமாக அமைந்துவிடும். ஒலிபெருக்கி அமைப்பாளருக்கு நாம் சொல்வது புரியவே புரியாது. ரொம்பவும் சோதனையாகப் போய்விடும். அது மட்டுமில்லாமல் வயலின், மிருதங்கம் இவர்களுக்கு உள்ள மைக்குகளை ஒருவிதமாக அமைத்திருப்பார்கள். எங்களுக்குள் ஒருவிதச் சமன்பாட்டை எட்ட முடியாமல் போய்விடும். நான் வயலினின் சத்தத்தைக் குறையுங்களென்று சொல்ல முடியாது. அவர் மிருதங்கத்தின் சத்தத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் எல்லாமே ஒருவித லயத்துடன் ஒன்றுசேர வேண்டியிருக்கும். பக்கவாத்தியக்காரர் மூணு நாலு பாட்டுக்கு ஒலிபெருக்கிக்காரர்கூடவே பேசிக்கொண்டு இருக்க வேண்டி இருக்கும். 'ஐயா. பாட்டைக் கவனியுங்கோ'ன்னு சொல்லணும் போலத் தோணும். ஆன சொல்ல முடியாது. ஏன்னா எல்லாருமே சுமுகமா உணர்ந்தாதான் கச்சேரியை ஆரம்பிக்க முடியும். சில சபாக்கள்ல மைக் கடைசி வரைக்கும் ஸெட் ஆகவே ஆகாமப்போயிடும். நான் இப்போ ஒருவிதத்துல இதுனால எல்லாம் பாதிக்கப்படாம இருக்கக் கத்துக்கொண்டுவிட்டேன். ஆரம்பத்துல ரொம்பச் சிரமமா இருந்தது.
சரியாகக் கேட்க முடிகிறதா என்றால் நாலு பேர் சரியா இருக்கிறது என்பார்கள். வேறு நாலு பேர் கேட்கவில்லை என்பார்கள். சபா செக்ரட்டரி சொல்வார் 'நன்றாகத்தான் இருக்கிறது' என்று. 'ஆடியன்ஸ் சரியா இல்லை என்று சொல்கிறார்களே' என்பேன் மேடையில் அமர்ந்தபடியே... கச்சேரிக்குப் பதிலாக இந்த விவாதம்தான் நடக்கும்.
ஒரு சீசன்ல எல்லாச் சபாக்காரர்களுடனும் இதனால் சண்டை. ஒரு பாட்டு முழுவதும் மைக்கை எடுத்துத் தள்ளி வெச்சுட்டுப் பாடி இருக்கேன். அப்பறம் இது பத்தி எதுவும் கவலைப்படாம இருந்துடறதுன்னு முடிவு எடுத்தேன்.
இன்னிக்கு இருக்கற நிலைல மைக் இல்லாத கச்சேரி அப்படிங்கறதும் சாத்தியம் கிடையாது. மொதல்ல அதுக்கு ஏத்த மாதிரியான அரங்கம் வேணும். ரெண்டாவது, பக்கவாத்தியம் வாசிக்கறவர்கள் ரொம்ப சென்ஸிட்டிவா வாசிக்கணும். இப்போது இருப்பவர்கள் மைக்குடன் வாசித்துப் பழகினவர்கள். நாங்களும் மைக்குடன் பாடிப் பழகினவர்கள். மைக் இல்லாமல் வாசிக்க அவர்கள் தயாராகணும். பாடறவர்களுக்கும் அந்தச் சிரமம் இருக்கு. நான் வெளிநாடுகள்லயும் சரி இங்கேயும் சரி மைக் இல்லாம சில கச்சேரிகள் பாடி இருக்கேன். ஆனா ரொம்ப கஷ்டப்பட்டுப் பாடவேண்டி இருக்கும். ஏன்னா மிருதங்கம் வயலின் சத்தத்தை மீறி நாம பாட வேண்டிவரும். சில நேரங்கள்ல மிருதங்கத்தை நன்னா அடிச்சு வாசிக்க ஆரம்பிச்சா நாம எதுவும் சொல்ல முடியாது. நம்மளோட குரலைத்தான் உசத்திக்கொண்டாகணும். தற்போதைய நிலையில் மைக் இல்லாமல் பாடறது இம்பாஸிபிள்தான்.

ஒரு வகையில் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும், அவ்வளவுதான். இன்று இந்த இடத்திற்குப் போகிறோமா... சூழல் இப்படி இருக்கும் என்று என்னை முன்னாலேயே மனரீதியாகத் தயார்ப்படுத்திக் கொண்டுவிடுவேன். மனத்தில் அப்படி ஒருவிதச் சமநிலையைக் கொண்டுவந்தாக வேண்டி இருக்கிறது.

கச்சேரி கேட்க வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள். முதல் வரிசையில் இருந்துகொண்டு தப்புத் தப்பாகத் தாளம் போடுவார்கள். ஒருத்தர் என் எல்லாக் கச்சேரிகளுக்கும் வருவார். வந்து தப்புத் தப்பாகத் தாளம் போட்டு ரசிப்பார். நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். ஒரு நாள் நான் மிகவும் கஷ்டப்பட்டுத் தாளம் போட்டுப் பாடிக்கொண்டிருக்கிறேன். அவரது தப்புத் தாளத்தைப் பார்த்ததும் கோபம் வந்துவிட்டது.. 'தாளம் போடறதை நிறுத்துங்கோ' என்று சொல்லிவிட்டேன். அவர் கோபத்தில் எழுந்து போய்விட்டார். அதன் பிறகு என் கச்சேரிக்கு வருவதே இல்லை. அவர் தப்பாகத் தாளம் போட்டது கூடப் பரவாயில்லை. அதை ரொம்பவும் ரசிச்சு அடித்து அடித்து வேற போட்டுக்கொண்டிருந்தார். இப்படி நாம எதிர்பார்க்காத எத்தனையோ தொந்தரவுகள் வரும். சில இடங்களில் தனி ஆவர்த்தனத்துக்கு நிறைய நேரம் ஒதுக்கிவிட்டு மறுபடி பாடத் தொடங்குவேன். ஆனா ஒரு தடவை சபா செக்ரட்டரி வந்து மைக்கைக் பிடுங்கிக்கொண்டுவிட்டார். ஏன் என்று கேட்டால் 'வோட் ஆப் தேங்க்ஸ் சொல்ல வேண்டும்' என்று பேச ஆரம்பித்துவிட்டார். 'நான் இன்னும் பாடி முடிக்கவில்லை. இன்னும் ஒரு மணி நேரம் பாடப்போகிறேன். முடித்ததும் கூப்பிடுகிறேன்' என்று சொல்லிவிட்டேன்.

ஒரு தடவை பாபநாசம் சிவன் நினைவுக் கச்சேரியில் யாரோ பெரிய தலைவர் வந்திருந்தார். முக்கியமான ராகத்துக்கு முன்னாலயே அவரைப் பேசச் சொல்லிவிட்டார்கள். டெம்போ அப்படியே இறங்கிப்போய்விட்டது. அப்படி ஆகிவிட்டால் அதன் பின் கச்சேரியைத் தூக்கி நிறுத்தவே முடியாமல் போய்விடும்.

கச்சேரிக்கான பாடல்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

எனக்கு என்னன்னா, என்ன பாடறோம் அப்படிங்கறதைவிட எப்படிப் பாடறோம் அப்படிங்கறதுதான் முக்கியம். இப்போ புதுசா ஒரு டிரெண்ட் ஆரம்பிச் சிருக்கு. பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டிக் கச்சேரி நடந்தால் பிள்ளையார் பாட்டைப் பாடுவார்கள். ஆடியன்ஸும் அதை விரும்புகிறார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று கச்சேரி இருந்தால் காலைலயே போன் வந்துடும் 'இன்னிக்கு ஓ ரங்க சாயி பாடிடுங்கோ' அப்படினுட்டு. திருவாதிரையா இருந்தா நடராஜர் பத்திப் பாடுங்கோன்னு சீட்டு வரும்.

நான் பொதுவா அப்படிப் பாடுவது கிடையாது. ஒரு தடவை ஸ்ரீராம நவமிக்குப் பெங்களூர் சேஷாத்ரி புரத்துல கச்சேரி பண்ணினேன். அதில் பிலஹரி பாடி 'ஸ்ரீ சாமுண்டிஸ்வரி' பாடினேன். வோட் ஆஃப் தேங்க்ஸ் சொன்னவர் அருமையாகச் சொன்னார், 'எல்லாரும் ராம நவமின்னா ராமர் பாட்டைத்தான் பாடணும்னு நினைச்சுக்கறா. இன்னிக்கு சஞ்சய் ரொம்ப அழகா சாமுண்டீஸ்வரி பத்திப் பாடினார். இது என்னமோ நவராத்திரிக்குத்தான் பாடணும்னு சிலர் நினைச்சுக்கறது உண்டு. ஸ்ரீராம நவமிங்கறது ராமரோட விழா இல்லை. இசையோட விழா...' அப்படின்னு சொன்னார். அது மாதிரித் திருமலை திருப்பதில பாடினேன். அங்க எல்லாருமே பயங்கர வைஷ்ணவர்கள். எல்லாரும் பெருமாள் பற்றித்தான் பாடுவார்கள். பாபநாசம் சிவனோட சீடர் ஒருவர் 'திருவடி சரணம்2 பாடு' அப்படின்னார். 'என்ன மாமா இங்க இப்படிப் பாடச் சொல்றேளே' அப்படின்னேன். 'நான் சொல்றேன். அதையே பாடு' அப்படின்னார். அவருக்கு என்னன்னா வைஷ்ணவ சைவச் சண்டை, பிரிவுகள் எல்லாம் இருக்கக் கூடாதுன்னு ஒரு கொள்கை உண்டு. அங்கத் திருவடி சரணம் பாடினேன்.

விவாதி3 ராகங்களை எடுத்தாள்வது பற்றி...

விவாதி ராகத்தில் dissonant நோட்ஸா இருக்கும். பாரம் பரியமா என்ன சொல்லுவார்கள் என்றால் விவாதி பாடினால் ஆயுசு குறைந்துவிடும்... கெட்ட காரியங்கள் நடக்கும். அது பாவம்... தோஷம் அப்படின்னு சொல்வார்கள்.
நான் என் ஆரம்பக் கட்டத்தில் அதைப் பாடவேஇல்லை. ஆனால், எனது ரசிகர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கும் சிலர் 'நீ விவாதி பாடு... அது உன் குரலுக்கு ரொம்பவும் பொருத்தமாக இருக்கும்' என்று அடிக்கடி சொல்லுவார்கள். நான் அவர்களுடன் வாதம் செய்வேன். 'அதெல்லாம் ஒரு ராகமா... செம்மங்குடியும் அரியக்குடியும். ஜி.என்.பி.யும் அதை அவ்வளவா பாடினதே கிடையாதே... அவர்கள் எல்லாம் முட்டாள்களா... நான் மட்டும் பாடி இதில் பெரிதாக என்ன சாதித்துவிடப்போகிறேன்' என்று ஆரம்பக் கட்டத்தில் மறுத்திருக்கிறேன். அதன் பிறகு காலப்போக்கில் ஒன்றிரண்டு பாட ஆரம்பித்தேன். நாகை முரளீதரனுடனான தொடர்புக்குப் பின் அதிகமாகப் பாட ஆரம்பித்திருக்கிறேன். நாகை முரளீதரன் கல்யாணராமனுக்கு நிறைய வாசித்திருக்கிறார். பாலமுரளியும் கல்யாணராமனும்தான் நான் கேட்ட வரையில் விவாதியில் நிறையப் பாடி இருக்கிறார்கள். என்னுடைய குருவும் சொன்னார், 'நீ அதைப் பாடலாமேடா' என்று. அவர் அப்படித்தான். அழுத்தி 'இதை நீ பண்ணு'ன்னு ஒரு நாளும் சொல்லமாட்டார்.
...