Tuesday, 25 February 2025

தனி மூவர்

 

இன்று சிவராத்திரி. கொஞ்சம் ஈஸ்வர த்யானமும்,  நிறைய சுப்ரமண்ய சுவாமியும்.

             இருவர் என்றால் நமக்கு சட் என்று மணிரத்னம்     படம் நினைவு வரும். இது ரத்னங்களை மணிகளாக  செய்து “திருப்புகழ்” என்ற பெயரில் கொடுத்த/சொல்லப்பட்ட - மூவர் கதை

      நம் புராணங்கள், கடவுள், முனிவர்கள்   இவர்களைக்       குறிப்பிடும்போது மூன்று மூன்றாகவே குறிப்பிடும் பழக்கம் துர்கா, லக்ஷ்மிசரஸ்வதி,- பிரம்மா, விஷ்ணு சிவன்., சங்கீத மும்மூர்த்திகள்,- சைவக் குரவர்கள்- மாணிக்கவாசகர்அப்பர், சுந்தரர். சிவபெருமானை குறிக்கும்போது கூட, உமையாள்கங்கையாள், இந்தப் பக்கம், ஸ்ரீதேவிபூமிதேவி உடனுறை பெருமாள். ராமரைக் கூட, வைதேஹி கூட, லக்ஷ்மனனும் சேர்த்து....

          திருப்புகழ் ஒரு அமிர்தம். அந்தத் தமிழின் அழகு சொல்லி மாளாது. அர்த்தத்துடன் படிக்க, எப்படியெல்லாம், அருணகிரி முருகனைக் கொண்டாடுகிறார் என்று மெய் சிலிர்க்கும். சத்குரு நாராயண தீர்த்தரின் தரங்கமும் அப்படித்தான்.  சுவாமியை நேரில் பார்த்தோ, மனதில் வைத்து, எழுதும்போது, இப்படித்தான் வருமோ ?

     அருணகிரிநாதரின் தமிழ் சற்று சிரமம்.     சம்ஸ்க்ருத்தில் நாரயணீயம் போன்று. ஆனால் அதில் மூழ்கினால், பரமானந்தம் தான்......

            ஒரு உதாரணம் பார்ப்போம்

.......  .  பொருது கையிலுள அயில் நிணம் உண்க

         குருதி புனலேழு கடலினும் மிஞ்ச     புரவி கனமயில் நடவிடும் விந்தை குமரேசா..........

          என்று ஒரு பாட்டின் வரிகள். இதில் இரண்டாவது வரி புரியும், மூன்றாவது வரி, சற்று, புரிந்தமாதிரி  இருக்கும், முதல் உஹூம்.... இதன் அர்த்தத்தை கடைசியில் பார்ப்போம்

            சரி. மூவர் பற்றி பார்ப்போம். முருகப் பெருமான் மூன்று பேருக்கு பிரணவ உபதேசம் செய்தார் என்ற ஒரு பெரிய உண்மையை நமக்குச் சொல்கிறார். பக்தி இலக்கியங்கள் படித்தவருக்கு, திருவிளையாடல் படம் பார்த்தவருக்கு, ஒருவர் நிச்சயம் தெரியும், முருகன் சிவ பெருமானுக்கு   உபதேசித்தார் என்று. 

             இதிலும் இரண்டு விஷயங்கள், வேறு வேறு இடத்தில்  சொல்கிறார்.

            ஒன்று, சிவபெருமானின் இரு காதில் ஓதுகிறார் என்று ஒரு திருப்புகழிலும், தன்னுடைய வாகனமாகிய எருதின் மேல் உட்கார்ந்து, முருகனை சுற்றி வந்து பிரணவ மந்திரத்தை கேட்கிறார் (சேவேறும் ஈசர் சுற்ற மாஞான போத முத்தி) என்றும்

            இண்டாவது, பிரணவ மந்திரத்தை வாங்கிக் கொள்பவர், பிரம்மா தான். அவர் பிரணவத்தின் பொருள் நான்தான் என்று இறுமாப்பாக சொல்ல, வீரபாகுவைக் கூப்பிட்டு, ஜெயிலில் போட்டுவிட, சிவபெருமான் வந்து, சொல்லி வெளியில் விட்டு, அவருக்கும் உபதேசம் செய்கிறார்.

        மூன்றாவது யார் ?

          குறு முனி அகத்தியர் தான். எந்த முனிவருக்கும் கிடைக்காத பாக்கியம் அவருக்குக் கிடைத்து இருக்கிறது. ஆச்சர்யமான முனிவர், மீனாக்ஷி கல்யாணத்திலும் இருப்பார், ராமாயணத்தில், ஆதித்ய ஹ்ருதயமும் சொல்லிக் கொடுப்பார். “அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்” என்று சீர்காழி கோவிந்தராஜன் உருவத்தில், ராவணனோடு மல்லு கட்டுவார்.  ஔவையாருடன் கலந்து உரையாடுவார்

         அருணகிரி, அகத்தியரை, எப்படி அறிமுகப்படுத்துகிறார் என்பது அழகின் உச்சம்.

          புடவி அணி துகில்....” என்ற சாருகேசி ராகத்தில் அமைந் திருப்புகழ்

            அவர் சொல்கிறார். “இந்த உலகத்தை (நிலப் பரப்பை) ஒரு மங்கையாக நினைத்துக் கொண்டு, அதற்க்கு நீலக் கலரில் ஒரு சேலையைக் கட்டு. அதுதான் கடல். அந்தக் “எட்டு   கடலையும்” ஸ்வாஹா... என்று ஓரே மூச்சில் குடித்த அகத்தியர்” என்கிறார்

       

           "புடவிக் கணி துகில் ஏன வளர் அந்த

           கடல் எட்டையும் அற குடி முனி”

             அடுத்தது, பிரம்மா

         எட்டு கண்களுடன்,ஆயிரம் தாமரை இதழ்களில் உட்கார்ந்து, சுயம்புவாக  பிரம்மா

         “என்கண் புனித சததள நிலைகொள் சுயம்பு சதுர்வேதன்”

          மூன்றாவதாக சிவனைக் கொண்டாடுகிறார்.

         “கண்களில் கனல் கொப்பளிக்க, புரம் எட்டையும் எரித்து, ரொம்ப   கஷ்டப்பட்டு, ஒரு அழகான சிரிப்பை உதிர்த்தாராம்”

          புரமெட்டறி எழ விழி கனல் சிந்தி, கடினத்தொடு சில சிறு நகை கொண்டு அற்புத கர்த்தரஹர பர சிவன் இந்த தனி மூவர்”........

          என்று சொல்கிறார். சொல்லிவிட்டு, இந்த மூவருக்கும் ப்ரணவ     உபதேசம்  செய்தார் என்று பாடல் போகிறது

             ஏன்  சிரித்தார் என்று காஞ்சி மகாஸ்வாமி ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறார். அதை வேறு ஒரு தருணத்தில் பார்ப்போம்

         முடிந்தால் kaumaaram.com சென்று இந்தப் பாட்டைசாருகேசி ராகத்தில் குருஜி ராகவன் சார் பாடிய ஆடியோ கேளுங்கள் அழகு சொட்டும்

         முதலில் ஒரு பாடல் எழுதினேனே- அதற்கு       பதில்

....   .     பொருது கையிலுள ஆயில் நிணம் உண்க    “தன்னுடைய வேலினால், (ஆயுதத்தால்)  பகைவர்களில் கொழுப்பை சாப்பிட்டு” – (நிணம் = கொழுப்பு)     

             இரண்டு- தெரியும்     

            மூன்றாவது- தன்னுடைய மயிலை, குதிரையைப்     போல் வேகமாக ஓட்டுகிறார்.     இரண்டு கால் மயிலை, எப்படி குதிரை போல் வேகமாக ஓட்ட முடியும் ? அதனால் தான் “விந்தை குமரேசா” என்கிறார்.     பிரணவ உபதேசம் பண்ணிய சுவாமிக்கு, இதெல்லாம் எம்த்திரம்

            இந்த சிவராத்திரி எல்லோருக்கும் மங்களத்தைக் கொடுக்கட்டும்....

 

 

 

Monday, 17 February 2025

கோவில் மாமாவும், மஹா பெரியவாளும்

 

21.01.2025 அன்று சாயந்திரம் 4 மணிக்கு கோவில் மாமா சிவலோக ப்ராப்தி அடைந்தார்.

மைலாப்பூரில் ஒரு இருபது இல்லை பத்து வருஷம் இருந்தவர்களுக்கு, கோவில் மாமாவை நன்கு தெரிந்து இருக்கலாம்..  மந்தவெளி, திருவேங்கடம் தெரு, நார்டன் ரோடு, மற்றும் பல அடுக்கு மாடி கட்டிடங்களில் உள்ள பிள்ளையார் கோவில்களில் உள்ள பிள்ளையாருக்கு பூஜை செய்யும் ஒரு பிராமணர்.  நார்டன் ரோடில் இருக்கும் டாக்டர் பீ.எஸ் ராமக்ருஷ்ணன் அவர்களின் ‘சர்ஜிகல் கிளினிக்” இல் உள்ள பிள்ளையார் கோவிலும் இவர் ‘உபாத்யாயம்” தான்.

ஒரு பை கையில் வைத்துக்கொண்டு, பஞ்சகஜம், வஸ்திரம், வளர்ந்த தாடி சஹிதம், நடந்து போய்க் கொண்டே இருப்பார். தேவநாதன் தெரு, மந்தவெளி மார்கெட், ராமகிருஷ்ண மடம், கபாலி கோயில், வெள்ளீஸ்வரர் கோவில் போன்ற பல இடங்களில் சர்வ சாதாரணமாக பார்த்து இருக்கலாம். சட் என பார்த்து விலகும் முகம்.

2 வருடம் முன்பு, ஒரு சின்ன டேப் ,மாதிரி ஒன்று வாங்கி வைத்துக்கொண்டு, ரோடில், சன்னமாக அவருக்கே கேட்கும்படி, ருத்ரம், சமகம், கனக தாரா....இத்யாதி ச்லோகங்களைக் கேட்டுக்கொண்டே செல்வார். அதுதான் அவர் சொத்து. மற்றவர்க்கு கனவிலும் கூட கேடு நினைக்காத பேர்வழி. அவர் உண்டு அவர் வேலை உண்டு

 

 

 

என்று இருப்பவர். அவர் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து கொண்டு யாரோ கொடுக்கும் மொபைல் சார்ஜ், மற்றும்

சாப்பாடு, தெரிந்த ஆட்டோ என்று வாழ்க்கையை ஒட்டிக் கொண்டு இருந்தார்

நான் திருவேங்கடம் (விரிவு), தெருவில், கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வீட்டின் மேல் போர்ஷனில் இருக்கும்போது (என்று நினைக்கிறேன்), எதிரில் உள்ள, பிள்ளையார் கோவிலுக்கு தினமும் பூஜை செய்ய வருவார். செய்துவிட்டு, பிரசாதம் கொடுக்க, கி.மூ ஆத்துக்கு வர, எனக்கு பரிச்சயமானார். பல விஷயங்களில், எனக்கும் அவருக்கும் ஒத்துப் போக, சட் என்று எனது மனதில் ஒட்டிக் கொண்டார். என் மனைவியிடம் (அவள் கலியுக நாயன்மார்களில் ஒருத்தி, யாராவது அடியவர்க்கு “அமுது படைத்து விட்டு பிறகு தான் அவள் சாப்பிடுவாள்). கோவில் மாமா. வசமாக மாட்டினார். அவரைப் பற்றி அறிந்துகொண்டு, காபி, பிறகு, டப்பாவில் சாப்பாடு என்று கொண்டுக்க ஆரம்பித்து பல வருடங்கள் அது தொடர்ந்தது. அவர் மனைவி பல வருடங்கள் உடல் நிலை சரியாக இல்லாமல் போன வருடம் இறந்து போனாள். மிகவும் ஸ்ரமமான மரணம்.

நான் திருவேங்கடம், சாய் பாபா கோவில் பின்புறம், சப்த்கிரி அபார்ட்மென்ட், திரும்ப திருவேங்கடம், இப்போது, ஸ்ரீனிவாச AVENUE, இராஜா அண்ணாமலை புரம் என்று மாறினாலும், அவர் மாறாமல் எங்களை பின் தொடர்ந்து வந்தார்.

 

 

என் மனைவி அவர் இரண்டு நாள் வரவில்லை என்றால், போன் பண்ணி விடுவாள். திடீரெண்டு இரவு 7 மணிக்கு

போன் செய்து காபி வேண்டும் வரவா என்பார். ஏன் மனைவி காபி யும் கொடுத்து, இரண்டு இட்லியும் கொடுப்பாள். “அமாவாசை” என்றால் நிச்சயம் ராத்திரி பலகாரம் எங்கள் வீட்டில் தான்.

வீட்டிற்கு வந்தால், கண்ணை மூடிக் கொண்டு த்யானம் பண்ண ஆரம்பித்து விடுவார். சுவாமி ரூமுக்கு சுவாதீனமாக வந்து உட்கார்ந்து இருப்பார். அவருடைய டேப் பை, போட்டு பாட்டு ஸ்லோகம் கேட்பார்,  பூஜை பண்ணச் சொன்னால் பண்ணுவார். நைவேத்யம் பண்ணுவார். ஆக, எங்கள் வீட்டில் ஒரு அங்கமாகவே போய் விட்டார். என் குழந்தைகள் கல்யாணத்தில் வந்து ஆசீர்வாதம் பண்ணினார். என்னுடைய 60 விழாவில் திடீரென்று வந்து ஒரு சால்வையைப் போத்தி, ஆசீர்வாதம் செய்து விட்டுப் போய் விட்டார்.

அவர் அம்மாவைப் பற்றி சொல்லாத நாளே இல்லை. வாழ்ந்து கெட்ட குடும்பம். ஆகவே வலிகள் அதிகம்.

போன வைகுண்ட ஏகாதசி அன்று விடியற் காலை 3  மணிக்கு மாதவ பெருமாள் கோவில் சென்று 8 மணிக்கு வீட்டிற்கு வந்து காபி குடித்துவிட்டு, அடுத்த நாள் கூடாரவல்லி க்கு சக்கரை பொங்கல் செய்யச்சொல்லி (திருவேங்கடம் தெரு பிள்ளையார் கோவில் நைவேத்யம்)

 

சென்றவர், அடுத்த நாள் வரவே இல்லை. என் மனைவி போன் செய்ய, ஒரு ஆட்டோ காரன் எடுத்து அவர் மந்தவெளி BSS ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆயிருக்கார் என்றார். ஷாக்.

நான் வைகுண்ட ஏகாதசிக்கு, எங்களை வரகூர்  அகண்ட விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணத்திற்கு போய் விட்டேன். கூடாரவல்லிக்கும்  அங்கேயே இருந்ததால், எனக்கு இந்த விஷயம் தெரியாது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவர் மருத்துவமனை யில் டிஸ்சார்ஜ் – ஆனவர் அதற்க்கு பிறகு உடல் நிலை தேறாமல், இசபெல் மருத்துவனையில் சேர்த்து, 4 -5 நாட்களில் இறந்து போனார். வைகுண்ட ஏகாதசியில் இருந்தவர் அடுத்த ஏகாதசிக்கு இல்லை

சட் என்ற அந்த ஒரு இறப்பும், அதன் பிறகு ....

1 அவரின் உறவு பையன் “காரியம் பண்ண வர மாடேன்” என்று சொன்னது

2. அவரின் ஷெட்டகர், தன் மனைவுடன் (87 வயது) வந்து, நின்று அவரது காரியங்கள் செய்ய உதவி செய்தது

3. இசபெல் ஆஸ்பத்திரியில், அவர் மாலை 4 மணிக்கு  மரணிக்க, நான் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்க, ஏன் ஆடிட்டர் நண்பன் ராஜு, உடனே ஒரு வாத்யாரை அனுப்பி, 7 மணிக்குள் காரியம் செய்ய உதவியது

 

 

3. “வாங்க சார், இதை மாதிரி அனாதைப் பிர....ளை நான் தூக்கி இருக்கிறேன்” என்று ஏன் கூடவே இருந்த ஏன் நண்பர் பி. எஸ். பள்ளி. ஸ்ரீ. ஸ்ரீனிவாசன்.

4’ இவ்வளவு காலம் பிள்ளையாருக்கு ஆசை ஆசை யாக பூஜை செய்து, அவருக்கு கொள்ளி போடக் கூட ஆள்

இல்லாமல் அனுப்பிவைத்த “சதா விமுக்தி தாயகம்” என்று போற்றக்கூடிய பிள்ளையார்  !!! (ஏன் அப்படிச் செய்தார் ?)

5. அவர் நக்ஷத்ரம், கோத்ரம், ஷர்மா கூட யாருக்கும் தெரியாமல் இருந்தது, அதை நானாவது தெரிந்து வைத்துக் கொண்டு இருக்கலாமோ என்று - எனக்கு ஏன் மேல் வந்த கோபம்

6. அவர் நாமிணீ போடாததாலும், செக் புக், நெட் பாங்கிங் என்ற எந்த ஒரு வசதியையும் வைத்துக் கொள்ளாமல், வங்கியில் இருந்து எடுக்க முடியாமல் போன சில லக்ஷங்கள்

7. அவரை இசபெல் ஆஸ்பத்திரியில் சேர்த்து. இறந்த பிறகு பல உதவிகள் செய்த மந்தவெளியில் இருக்கும் டாக்டர் ரேவதி.

சில பேரின் இறப்பு, ஒரு பாடம், சில பேர், ஆச்சர்யம், சில பேர் ஒரு கழிவிரக்கம். மாமா மூன்றும் கலந்த கலவை. இறந்தபிறகு, அவரை இன்னும் சற்று கவனித்துக் கொண்டு

 

 

 

இருக்கலாமோ என்று தோன்றியது.  ஏன் என்று தெரியவில்லை. அவர் வீட்டில் வந்து செய்த த்யானத்தில் ஒரு உண்மை இருந்தது. எனக்கும் த்யானம் அவ்வப்போது கூடியது. அவர் ஆசியும் கூட இருக்கலாம். என் வீட்டிருக்கு வந்தால் தான் அவருக்கு “தன் வீட்டில் இருந்து” போல் இருக்கிறது என்று அடிக்கடி சொல்லுவார். ஒவ்வொரு தடவை ஏன் மனைவி ஏதாவது சாப்பிட குடுத்து விட்டு அவருக்கு நமஸ்காரம் பண்ணுவாள். “சௌபாக்யவதி பவ” என்ற ஆசி  என்ற அவரது ஒலிகள் இப்போது காற்றில் கரைந்து விட்டது.   

முற்றும், OOPS

என்னது, இது ?.....  மஹா பெரியவா என்று தலைப்பில் ஒரு வார்த்தை இருக்கிறது, அதை பற்றி ஒன்றுமே எழுதவில்லை என்றுதானே......? 

மாமா காரியங்கள் முடிக்க, அங்கு இங்கு பணம் வாங்கி, அவர் வீட்டில் இருந்த சில பொருள்களை விற்று....நானும் கொஞ்சம் பணம் போட்டு, ராம்ஜி வாத்யார் மூலமாக அவரது காரியங்களை முடித்த பிறகு, கொஞ்சம் பணம் இருந்தது அதை என்ன செய்வது என்று தெரியவில்லை. மயிலாப்பூர் சங்கர மடத்தில் கொடுத்து விடலாமா, வேத பாடசாலை, அனாதை ஆஸ்ரமம் என்று பல குழப்பங்கள்,

எனது ஆத்து வாத்யார், மயிலாப்பூர் ஸ்ரீ சுவாமிநாத சாஸ்த்ரிகள் இடம் என்று கேட்கலாம் என்று திடீரென்று தோன்ற, அவர் வீட்டிற்குப் போனேன்.

 

அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல். “மைலாப்பூரில், மஹா பெரியவா கோவில் ஸ்ரீ கணேஷ் ஷர்மா அவர்களால், புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடை பெற இருக்கிறது, அதற்கு ஏதாவது ஒரு கைங்கர்யத்திற்கு கொடுத்து விடுங்கள்” என்று சொல்ல – மிகவும் அழகான முடிவாக இருந்தது.

எனக்கு கோவில் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியும்.  ஆனால  கும்பாபிஷேகம் எப்போது ? என்று தெரியாது. நான் வீட்டிற்கு சாப்பிட்டுவிட்டு சாயந்திரமாக போலாம் என்று நினைத்தவன், போய் பணத்தை கொடுத்து விட்டு வந்துவிடுவோம். ஜி பெ தானே, என்று அந்த இடத்திற்குப் போனேன்.

 

இப்போதுதான் ட்விஸ்ட்.

அங்கு பெரிய கும்பல். என்னடா இது !!! என்று போய் பார்த்தால், பெரியவா பிரதிஷ்டா தினம். இன்னும் அரை மணியில் பெரியவா பிரதிஷ்டை பண்ணுவதற்காக மூல விக்ரஹம் தயாராக இருக்க, ருத்ரம், பாட்டு, என்று அந்த இடமே திமிலோகப் பாட்டுக் கொண்டிருந்தது. எனது நண்பர், ஸ்ரீ. ராமநாதன், மற்றும் சில நண்பர்கள் அங்கு இருந்ததால், சந்தோஷமான தருணங்கள்

கும்பகோணத்தில் இருந்து ஸ்ரீ. தினகர ஷர்மா, கணேஷ் ஷர்மா  போன்ற பல பெரியவர்கள் நிறைந்த அந்த இடம் தேவ லோகம் போல காட்சி அளித்து. நான் ருத்ரம் சொல்லி, சில பாடல்கள் பாடி, மருந்து (பீடத்தின் கீழே வைப்பதற்கு)

 

செய்வதற்கு உதவிகள் செய்தேன். பிரதிஷ்டை முழுவதும் தரிசனம் செய்வதற்கு பெரிய பாக்கியம் கிடைத்தது.

வீட்டிற்கு 3 மணிக்கு வந்து சாப்பிட்டேன்....

முடிவுரை-

நான், கோவில் மாமாவுக்காக செய்தது சரியா,? ஒழுங்காக அவரை கரையேத்தினேனா ? என்று மனக்குடைச்சல் இருந்து கொண்டே இருந்தது.

நான் பணம் என்னவோ அடுத்த நாள் தான் கொடுத்தேன் (வேத ப்ராம்ணாளுக்கு சாப்ப்ட்டுக்காக) அனால் அதற்க்கு முதல் நாளே என்னை வரவழைத்து, நான் இருக்கிறேன் என்று கையை தூக்கி ஆசீர்வாதம் பண்ணுவது போல், நான் செய்த காரியங்களை ஆமோதிப்பது போல், “கருணை புரியம் கண்கள், அருள் தரும் கரங்களாக”

எனக்கு பணம் வேண்டாம், நீ வந்து என்னைப் பார் என்று சொல்வது போல....................

நிச்சயாக முடிவுரை.

இவ்வளவு படித்த உங்களுக்கு அவர் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ள தோன்றவில்லை !!. எனக்கும் தான். அவர் இறந்த பிறகு, அவர் ஆதார் கார்டில் கண்டுபிடுத்தேன், ஆர். கிருஷ்ணமூர்த்தி என்று......

Sunday, 14 July 2024

செம்மங்குடி ஸ்ரீ வெங்கட்டு சித்தப்பா......கனகாபிஷேகம்

 

என் செம்மங்குடிக்கு என்று பல பெருமைகள் உண்டு

 

இதை இரண்டாகப் பிரிக்கலாம்

 

ஒன்று பேரின்பம்

ங்கீத பிதாமகர் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர்

எங்கள் பெருமாள், சிவன் கோவில்

நான் படித்த பள்ளி

என்னை ஆளாக்கிய ஸ்ரீ. ராமுர்த்தி சாஸ்த்ரிகள் அண்ட் அலமேலு அம்மாள் -என் குடும்பம்

 

சில சிற்றின்பங்கள்

-சிவன் கோவில் அருகில் இருக்கும் குளம்

-ராம நவமி பானகம், நீர்மோர்

-மேல குளத்தில் இருந்த நெல்லிக்காய் மரம்

-ஆவணி அவிட்டம், அன்னாபிஷேக  சாப்பாடு

-எங்கள் வீட்டின் பின்னாடி இருந்த வாய்க்காலில் நானும்  சசியும் தட்டைத் தூக்கிப்போட்டு, அது அருகே வருவதை ரசித்த நாட்கள்.

-சப்பரம்

- மழை கொட்டி, சாக்கைப் போத்திக் கொண்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் காலை வேளையில், “ஸ்கூல் லீவு” யாரோ ஒருவர் சைக்கிளில் சொல்லிக் கொண்டே செல்லும்போது கிடைத்த சுகம்

- மார்கழி மாதம் பஜனை

- தீபாவளி, பொங்கல் விழா

 

பேரின்பத்தில், எங்கள் ஸ்ரீ. வெ.சி வின் கனகாபிஷேகத்தை தாராளமாக சேர்க்கலாம்.

அவருக்கு திருஷ்டி வந்து விடுமோ என்று, இந்த கட்டுரையை எழுத தயங்கினேன். இருந்தாலும்.....அவர் வழிபடும் செம்மங்குடி அய்யனாரைப் பணிந்து எழுதுகிறேன்.

ஸ்ரீ. வெங்குட்டு சித்தப்பா -உண்மையாக, அவர் உறவு எப்படி என்றால், என் தாத்தாவின் தாத்தா, அவர் தாத்தா, அண்ணன், தம்பி. அதனால் இவரும் என் தாத்தா தான். ஆனால், எங்கள் குடும்பத்தில் இஷ்டத்திற்கு உறவை சொல்லி கூப்பிடுவோம். அதனால் இந்த பெயர். அதனால் தான் சித்தப்பா, அதனால் அவர் மனைவி சித்தி...

எங்கள் செம்மங்குடியில்,  என் தாத்தா ஸ்ரீ. ராமமூர்த்தி சாஸ்த்ரிகள்,  கனகாபிஷேக ஸ்ரீ. வெங்குட்டு தீக்ஷிதர், ஸ்ரீ. சிவகுரு தீட்சிதர், ஸ்ரீ குமாரு தீட்சிதர் என்று  4 ரத்தினங்கள் உண்டு. 2 துண்டு கல்கண்டு, ஒரு தேங்காய் மூடி, சுமாரான வாழை பழம்,  நாலு அணா, எட்டணா வுக்காக நடையாய் நடந்து வைதீகம் பார்த்த மகானுபாவர்கள்.  இன்றும் அவர்களை நான் நினைவு கொள்ளும்போது கண் பனிக்கிறது. 

எங்கள் பக்கத்து வீடு. அவர்கள் வீட்டில், 6 க்கு மேல் குழந்தைகள். எங்கள் வீட்டிலும் பல. உறவுக்கு அப்பாற்பட்டு, எங்கள் குடும்பத்திலும் அவர் குடும்பத்திலும் ஒரு அன்யோன்ய நெருக்கம் உண்டு. ஏன் மாமா, அவரின் மூத்த மகன் ஸ்ரீ. யக்ஞ ராமன் கிளாஸ் மேட்ஸ். அவருடைய இன்னொரு பையன், நாகராஜன் எனக்கு நெருங்கிய என் வயது.  என்னுடைய பெரியம்மா, சித்தி, அவர் குடும்பத்தில் உள்ள லேடீஸ், விஷாலி அக்கா, சந்திர அக்கா. மற்றும் ஸ்ரீநிவாசன் என்று.

சாஸ்த்ரிகள் என்பது ஒரு மதிப்பிற்குரிய பெயர் என்பதால், எல்லா வீட்டிலும் நான் “ சாஸ்த்ரிகள் பேரன்” வந்திருக்கான் என்று சுவாதீனமாக உள்ளே நுழைந்து பேசும் “பாக்கியம்” எனக்கு உண்டு.

துவும் பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி. “ஏ ராம்கி வாடா” என்று அன்புடன் ஏதாவது தின்பதற்கு கொடுத்து விடுவாள், நாகராஜன் அம்மா. சீடை, முறுக்கு, பொரி உருண்டை. எப்போது சென்றால் என்ன கிடைக்கும் என்று எனக்கு சரியாகத் தெரியும். நவராத்திரி கொலுவின் போது, என் சித்திகளுடன் கொலு பார்க்கப் போவேன். அவாத்தில் எல்லா பெண்களுடன் சேர்ந்து இன்னொரு முறை செல்வேன். எல்லாம் சுண்டல் மோகம் தான்.

இந்தப் பக்கம் இன்னொரு friend வெங்குட்டு ஆம். அது கொஞ்சம் பெரிய இடம்.  தட்டாத்தி மூலை கிராமத்தில் இருந்து, எப்போதாவது வெங்குட்டு வந்தால் நான் அவன் வீட்டில் போய் உட்கார முடியும்.  அவாத்தில் தோசை எனக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால், “போர்” தண்ணீர் பிடிக்க அடிக்கடி போய் வருவேன். அவ்வளவு தான்.

அதனால் நாகராஜன் வீட்டுக்கு செல்வதில் எனக்கு உரிமை ஜாஸ்தி.

அவருக்கு கனகாபிஷேகம் செய்தது மூலமாக, எங்களுக்கு ஒரு பெரிய பாக்கியம். நான் என் குடும்பத்துடன் சென்று ஆசி வாங்கியது, என்னை அடையாளம் கண்டு சித்தப்பா பேசியது. செம்மங்குடியில் பல நண்பர்களை மீண்டும் சந்தித்தது. அருமையான சாப்பாடு.

இன்றும் ஏன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும், சித்தப்பா குடும்பத்தில் அனைவருக்கும் ஏன் நன்றி கலந்த நமஸ்காரங்கள்.

 

 

 

 

 

 

 

 


Saturday, 22 June 2024

மஹா பெரியவாளும், சென்ற மைலாப்பூர் அனுஷமும் (20.6.24)

 

மு.கு. இதை படித்துவிட்டு நான் ஏதோ அனவரதமும் பெரியவாள நினைச்சுண்டு உருகி உருகி பூஜை பண்ணுகிறேனோ என்று கற்பனை பண்ண வேண்டாம்.  அடுத்த ஜன்மத்தில் சின்ன வயசில் இருந்தே பக்தி பண்ண வேண்டும்  என்று ஆசைப்பட்டு, இந்த ஜன்மத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சாதாரண பிரஜை நான். அப்போதும், முப்போதும் பண்ணும் காயத்ரி ஜெபத்தில் அப்போ அப்போ அவரை நினைத்து வாழ்பவன்.

நான் எல்லாம் சௌந்தர்ய லஹரியில் பகவத்பாதர் சொன்னால் போல் “தவீயாம்சம் தீனம் ஸ்னபய க்ருபயா மாம்பி ஷிவே” வகை தான்

இப்போது விஷயத்திற்கு வருவோம்:

வரஹூர் பெருமாள் அனுக்ரஹத்தாலும், பெற்றோர்களின் ஆசிகளினாலும், ஏன் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து, நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடை பெற்று வருகிறது.

நி.தா க்கு பத்திரிகை அடிக்கலாமா வேண்டாமா என்று குழம்பி, ஒரு சபையைக் கூட்டி,  இந்த வாட்ஸ் ஆப் மக்களுக்கு, தெரிவிப்பதற்காக, ஒரு கார்டு பாதிரி அடிக்கலாம் என்று “முக்கா” மனதாக முடிவு செய்து, மைலாப்பூர் ஒரு DTP கடையில் உட்கார்ந்து ஒரு மாதிரி கார்டு தயார் பண்ணினேன். இரண்டு நாட்கள் உட்கார்ந்து, நேற்று (19) இரவு  ஒரு 7.30 மணிக்கு முடித்தேன்.

10 கார்டுகள் பிரிண்ட் போட்டு வீட்டுக்கு, மெட்ரோ போடுவதனால், லஸ் பூரா அடைக்கப்பட்டதாலும், மத்தள நாராயண தெரு வழியாக வரும்போது, “மயிலாப்பூர் மஹா பெரியவா” என்று நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் ஸ்ரீ. கணேஷ் ஷர்மா அவர்கள், மாதா மாதா செய்யும் அனுஷ தினம், மஹா பெரியவா புறப்பாடு, திரும்பி, தேரடி தெரு பக்கம் சென்று கொண்டிருந்தது. அதாவது எனக்கு பெரியவா முதுகு (பின் பக்கம்) காட்டிக்கொண்டு.

அப்போதுதான் எனக்கு அனுஷ நினைவு வந்து, உடனே, போவதா வேண்டாமா என்று யோசித்து, கொஞ்சம் பூ வாங்கி கொடுத்து சுவாமியை பார்த்துவிட்டு உடனே போகலாம் என்று நினைத்தேன். அதற்க்கு இரண்டு காரணம்

-    முழுவதுமாக இருந்தால் 9.30 ஆகி விடும். பசி

-    இந்தியா T 20 மேட்ச் வேறு

அப்படியே வலது பக்கமாக திரும்பி, அம்பிகா அப்பளம் எதிரில் உள்ள பூக்கடையில், கொஞ்சம் கட்டின பூவும், ஒரு தாமரையும் எடுத்துக்கொண்டு வேறு வழியில் சென்று பா.வி.ப. வாசலில் வண்டியை நிறுத்தி பார்த்தால், சரியாக பெரியவா ஊர்வலம் நின்று கொண்டு இருந்தது.

அப்போது தான் எனக்குத் தோன்றியது, நிச்சயதார்த்தப் பத்திரிகை பிரிண்ட் பண்ணி இருக்கிறோமே என்று, அதில் ஒன்றை எடுத்து, பூ, தாமரை இவைகளுடன், ஸ்ரீ. கணேஷ் ஷர்மா அவர்களிடம் கொடுக்கலாம் என.  கொடுத்தேன். அங்கு ஏன் இனிய நண்பரும், மஹாதானபுரம் மாமாவின், ஆப்தாளும் ஆன ஸ்ரீ. ராமநாதன், பெரியவா பாதுகையை தன சிரசில் மேல் வைத்துக்கொண்டு முன்னாள் நிற்க, அதன் மேல் ஏன் பத்திரிக்கையை வைத்து, பிறகு, சுவாமியின் சித்ர படத்தின் அருகில் பூக்களின் நடுவே வைத்தார்.  நான் ஒரு நிமிடம் சிலிர்த்துப் போனேன்.  பிறகு கொஞ்சம் புஷ்பத்தை பெரியவா காலடியில் இருந்து எடுத்து எனக்குக் கொடுத்தார்.  பத்திரிகை தரவில்லை

நான் பணி புரியும் பள்ளியில் வில்வ மரம் ஒன்று உண்டு. நான் சில தளங்களைப் பறித்து, உள்ளே உள்ள கோவிலில் வைத்து உள்ளே செல்வேன். 19 இரவு, நான் கிளம்பும்போது, திடீரென்று, ஒரு கிளையை ஒடித்து, அருகில் இருக்கும் மாமா வீட்டிருக்குச் சென்று கொடுத்து விட்டுப் போனேன்.  சத்தியமாக அடுத்த நாள் அனுஷம் என்பது, ஸ்ரத்தையாக் அனுஷ பூஜை செய்யும் என் மாமா அந்த வில்வத்தில் அர்ச்சனை செய்வார் என்பதும் எனக்குத் தெரியாது.  எனக்குத் தெரிந்து நான் வில்வ தளம் பறித்து அவருக்கு முன்பு கொடுத்ததாக நினைவு இல்லை – இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக மேலே நான் கூறிய விஷயம்.

நான் கிளம்பி விட்டேன். வேறு சில வேலைகளை முடித்துவிட்டு, திரும்பி வீடு செல்லுபோது, திடீரென்று எனக்கு ஒரு சந்தேஹம், “ஒரு வேளை, ஸ்ரீ.க.ஷ பூஜை முடிந்தவுடன் அந்தப் பத்திரிக்கையை எடுத்துக் கொடுப்பதற்காக என்னைத் தேடினால் என்ன செய்வது. ? அது ஒரு அபசகுனமாக படுமோ” என்று யோசித்து, கடைசியில் சரி, அனுஷ பூஜை முடிந்தே சென்று விடுவோம். என்று திரும்பி, பெரியவாளிடமே வந்தேன்.

அப்போது ஊர்வலம் முடிந்து, ஒரு சிறிய வீட்டில், (மண்டபம் தனியாக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்), உள்ளே போவதற்கு முன்பு, அலங்கார வண்டியில் இருந்து எடுத்து, வாரையில் கட்டி  ‘English Note” க்கு, ஸ்ரீ பாதம் தாங்கிகள் டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தனர். பிறகு, நாதஸ்வரம், கற்பகமே கண் பாராய்” பாட. சுவாமி உள்ளே போய் விட்டார்.

நல்ல கும்பல். உள்ளே செல்ல இடம் இல்லாததால், வெளியிலேயே, கடைசியாக, சுவாமியை பார்க்கும் ஒரு கோணத்தில் நின்று கொண்டு இருந்தேன்.

அப்போதுதான் அது நடந்தது. உள்ளே சென்ற மறு நொடி, ஒரு மழை ஒன்று வந்தது. சட சட என்று பெரிதாகி, ஒரு 15 நிமிடத்தில், எங்கள் செம்மங்குடியில் வீட்டில் பின்னே ஒரு சிறு வாய்க்கால் உண்டு.  அது போல் தண்ணீர். எனக்கும் மழைக்கும் ஒரு மூன்று அடி.  கொட்டித் தீர்த்துவிட்டது. நான் சன்னமாக, பிலகரி ராகத்தில், ஸ்ரீ. பாலசுப்ரமணிய என்ற தீக்ஷதர் கிருதியை பாடிக்கொண்டு நின்றுகொண்டு இருந்தேன்.. உள்ளே ஷோடசோபசாரங்கள் முடிந்து,  ‘விதிதாகில சாஸ்த்ர” முடிந்து, தீபாராதனை காட்டி,  நவநீத சோராய....நாராயணாநந்த தீர்த்த குருவே” பாடி முடிந்து, பிரசாதம் கொடுத்து, எல்லோரும் வெளியே வந்த போது, சுத்தமாக மழை நின்றிருந்தது. ......

நான் பிரசாதம் வாங்கிகொண்டு, பத்திரிக்கை வாங்கிக்கொள்ளலாமா வேண்டாமா, யார் கொண்டுப்பார், என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருதேன். பிறகு, பெரியவா படம் அருகில் நின்று கொண்டு இருந்த ஒருவரிடம், அந்த பத்திரிக்கையை எடுத்து தருமாறு கேட்க, அவர் தேடி, தேடிக் கிடைக்கவே இல்லை.

நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்ல, வெளியே வந்து லேசாக தூறல் போட, வண்டியை எடுத்து வீடு வந்து சேர்ந்தேன்.

 

இது என்ன கருணை ? ஏன் எப்படி நடந்தது. என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு நிலை.

 

பாலக்ருஷ்ண ஜோசியர் மஹா பெரியவாளைப் பற்றி சொன்னதாக  திருவீழி அவர்கள் சொன்னதை நான் நினைவு கூறுகிறேன்

“It requires tremendous misfortune to escape the impartial gaze of His Holiness”

இதான் எனக்கு நினைவு வந்தது

 

திரும்பி வீட்டுக்கு வரும்போது, சங்கீதாவை தாண்டி லெப்ட் எடுக்கும்போது, திரும்பிப் பார்த்தேன். கபாலி கோவில், சீரியல் லைட், மின்ன, கீழே குளத்தில் அதன் பிம்பம் தெரிய, அந்த லைட் கண் சிமிட்டி, - வடிவேல் சொன்னது போல் = இதெல்லாம் ஒண்ணுமே இல்லை, இன்னொரு ஸ்பெஷல் ஐடெம் இருக்கு” என்பது போல்...

 

பி.கு.  வரஹூரில், கோணங்கி வேஷம் போட்டு, வருபவரிடம், சம்ஸ்க்ருத பாஷை யை திராவிட பாஷையில் சொல்லச் சொல்லுவார். அதே போல் ஆரம்பத்தில். நான் சொன்ன சௌந்தர்ய லஹரி வார்த்தைக்கு அர்த்தம்.  (என்னுடைய தம்பி மனைவி அபர்ணா கேட்டதனால்)

“நான் தீனன், உன்னுடைய கடாக்ஷம் என்ற ஒரு எல்லைக்குள்ளேயே நான் இல்லை. இருந்தாலும், உன்னுடைய கடாக்ஷம் என்கிற அமுதத்தை ஏன் மேல், தெளி, ப்ரோக்ஷனம் பண்ணு” என்கிறார்... யார் சொல்கிறார். ஆதி சங்கரர்.  (இதுவும் மஹா பெரியவா, கடாக்ஷ வீக்ஷண்யம் என்று 1962-63 களில், சொன்ன உபன்யாசத்தின் ஒரு பகுதி)

பஞ்ச கச்சம் கட்டிக்கொண்டு, ஸ்ரத்தையாக கண்ணீர் மல்க தரிசனம் செய்பவர்களும், ஆனந்தமாக நடனம் ஆடும் ஸ்ரீ பாதம் தாங்கிகளும், எந்த ஒரு லஜ்ஜையும் இல்லாமல் அங்க பிரதட்சிணம் செய்யும் பக்தர்களும் வேத பிராம்மணர்களும், அஷ்டபதி அபங் பாடும் பாகவதர்களுக்கும் இருக்க, சாதாரண ஒரு தீனன் எனக்கு அருள் புரிகிறார் பாருங்கள்

அதான் பெரியவா..........

பி.கு 2

நான் ஏன் ஸ்ரீ. பாலசுப்ரமணிய பாட்டு பாடினேன் என்று இரவு நினைத்துப் பார்க்க அந்த பாடலில், “ஆபால கோப, விதித தீன சரண்ய” என்று முத்து தீக்ஷிதர் சுவாமி மலை சுப்பிரமணிய சுவாமியை நினைத்து அந்தப் பாட்டு பாடியிருக்கிறார்

இப்போது உங்களுக்கும் தெரிந்து இருக்கும்......

 

Tuesday, 18 June 2024

அரை பக்க பக்தி - 1 - "குஞ்சரரசன்"

 மனிதன் தோன்றும் முன் இறைவன் இருந்தானா  ?

இருந்தார் என்கிறார் வில்லிப்புத்தூரார்.  அதை கர்ணன் இறக்கும் தருவாயில், அவனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டும்போது, கஜேந்திரமோக்ஷத்தை மேற்கோள் காட்டுகிறார்.

“குஞ்சரராசன் முனன்று தோற்றியபடியே தோற்றினான்” என்கிறார்.

குஞ்சர ராசன் - யானைகளின் தலைவன் (கஜேந்திரன்).  இந்தப் பாடல் ஆரம்பத்தில் "போற்றிய கன்னன் கண்டு கலிப்ப" என்கிறார்.  கன்னன் என்று இரண்டு சுழி போட்டால் கர்ணனைக் குறிக்கும்.

இறைவன் என்பவன் மனிதர்களின் கற்பனையில் உத்த்தவன் என்று சொல்பவர்களும் உண்டு.  மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பு, விலங்குகள் இருந்தன என்று வைத்துக் கொண்டால்,  ஒரு யானை துன்பத்தில் இருந்த பொது அதை காக்க வந்திருக்கிறார்.

அற்புதமாக சுகப்ரஹ்மம் அதை தன்னுடைய ஞான த்ருஷ்டியால் உணர்ந்து,  ஸ்ரீ மத் பாகவதத்தில் நமக்குச் சொல்லி இருக்கிறார். இதில் என்ன ஒற்றுமை என்றால், "ஆதி மூலமே" என்று கஜேந்திரன் கூறிய போது, ஒரு வினாடி கூட வெயிட் பண்ணாமல், தன்னுடைய வாகனமான கருடனை நினைக்க, உடனே அதன் மேல் ஏறி சடுதியில் கிளம்பி ...முதலையை கொன்று கஜேந்திர மோட்சம்.  முதலைக்கும் மோட்சம்

அதே போல் கர்ந்ணன் குற்றுயிராய் வீழ்ந்து கிடந்த வுடன், ஒரு நிமிடம் கூட தாமதியாமல்,  அவனுக்கு அருள் புரிய வருகிறார். என்ன ஒரு அருமையான ஒற்றுமை.

எந்த நிலையிலும், அவனை சரணாகதி பண்ணினால்,  திரௌபதி போல, உடனேயோ, சபரி போல காத்திருந்தோவ- - காக்க பெருமாள் ரெடி.