மனிதன் தோன்றும் முன் இறைவன் இருந்தானா ?
இருந்தார் என்கிறார் வில்லிப்புத்தூரார். அதை கர்ணன் இறக்கும் தருவாயில், அவனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டும்போது, கஜேந்திரமோக்ஷத்தை மேற்கோள் காட்டுகிறார்.
“குஞ்சரராசன் முனன்று தோற்றியபடியே தோற்றினான்” என்கிறார்.
குஞ்சர ராசன் - யானைகளின் தலைவன் (கஜேந்திரன்). இந்தப் பாடல் ஆரம்பத்தில் "போற்றிய கன்னன் கண்டு கலிப்ப" என்கிறார். கன்னன் என்று இரண்டு சுழி போட்டால் கர்ணனைக் குறிக்கும்.
இறைவன் என்பவன் மனிதர்களின் கற்பனையில் உத்த்தவன் என்று சொல்பவர்களும் உண்டு. மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பு, விலங்குகள் இருந்தன என்று வைத்துக் கொண்டால், ஒரு யானை துன்பத்தில் இருந்த பொது அதை காக்க வந்திருக்கிறார்.
அற்புதமாக சுகப்ரஹ்மம் அதை தன்னுடைய ஞான த்ருஷ்டியால் உணர்ந்து, ஸ்ரீ மத் பாகவதத்தில் நமக்குச் சொல்லி இருக்கிறார். இதில் என்ன ஒற்றுமை என்றால், "ஆதி மூலமே" என்று கஜேந்திரன் கூறிய போது, ஒரு வினாடி கூட வெயிட் பண்ணாமல், தன்னுடைய வாகனமான கருடனை நினைக்க, உடனே அதன் மேல் ஏறி சடுதியில் கிளம்பி ...முதலையை கொன்று கஜேந்திர மோட்சம். முதலைக்கும் மோட்சம்.
அதே போல் கர்ந்ணன் குற்றுயிராய் வீழ்ந்து கிடந்த வுடன், ஒரு நிமிடம் கூட தாமதியாமல், அவனுக்கு அருள் புரிய வருகிறார். என்ன ஒரு அருமையான ஒற்றுமை.
எந்த நிலையிலும், அவனை சரணாகதி பண்ணினால், திரௌபதி போல, உடனேயோ, சபரி போல காத்திருந்தோவ- - காக்க பெருமாள் ரெடி.
No comments:
Post a Comment