Friday, 4 January 2019

சஞ்சய் சுப்ரமணியன்- ஒரு கச்சேரி –ஒரு விமர்சனம்


இந்த வருட டிசம்பர் சீசனில் (2018)  நான் சென்ற கச்சேரிகள் 5.  அதில் சஞ்சய் 2.  கீழே, குறிப்பிட்டு இருக்கும், தியாக பிரம்ம கான சபா, மற்றொன்று, தமிழ் இசை சங்கம் நடத்திய ஒரு கச்சேரி.

நேற்று,  (22.12.2018) தியாக பிரம்ம சபாவில்,  சஞ்சய், ஒரு 3 மணி   10 நிமிடங்களுக்கு ஒரு கச்சேரி செய்தார்.   

அவருடன், வரதராஜன்- வயலின் வாசிக்க, பல்லடம் ரவி மிருதங்கம் வாசிக்க, ஆலத்தூர் ராஜகணேஷ் கஞ்சிரா வாசித்தார்

இதை பிரமாதம் என்றோ, அற்புதம் என்றோ, ஆங்கிலத்தில் நாம் கொடுக்கும் –adjective/superlative  வார்த்தைகளுக்குள் உட்படுத்த முடியாது.  சம கால ரசிகர்களுக்கு, சஞ்சய், ஒரு பெரிய வரப்ரசாதம். எல்லா கச்சேரிகளையும் ஒரு 3 மணி நேரம் வைத்துக்கொண்டு, கவனமாக, ராகங்களையும், பாடல்களையும் உள்ளே புகுத்தி, புத்தகம் இல்லாமல், ஒரு ஸ்தித பிரக்ஞ்சன்” போன்று --ஒரு அற்புதம் சஞ்சய்.

நான் போன வருஷம்,  சஞ்சய் சுப்ரமண்யம் என்ற சந்கீத ராக்ஷசன் (ர்) என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அதனால், இந்த வருடம் ஒரு கட்டுரை தேவையா ? எனறு நினைத்தேன். இருந்தாலும், இந்த மகத்தான கலைஞனைப் பற்றி கொஞ்சம் எழுதுவது, எனக்கு ஒரு திருப்தியைத் தருகிறது- என்பதால்.

இந்த வருட டிசம்பர் சீசனில், நான் கேட்கும், சஞ்சயின், முதல் கச்சேரி. மற்ற சஞ்சய் கச்சேரிகளுக்கு, செல்ல முடியாவிட்டாலும், பல web site லும், season review விலும், என்ன பாட்டு பாடினார் என்று அறிந்து கொள்வேன்.

விமர்சனத்திற்கு, முன்பாக சில முக்கியமான விஷயங்களை அலசுவோம்.

-இவர் கச்சேரி எல்லா இடத்திலும் அரங்கு நிறைந்து இருக்கிறது

-சாதாரண கச்சேரி கட்டணத்தை விட, double the amount. உதாரணமாக, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்ல் மேடையில்  உட்காருவதற்கு  Rs. 300

-இவரின் சங்கீதத்தின் ஈர்ப்பு சக்தி கொஞ்சம் கூட குறைவில்லை.  தன்னுடைய  சங்கீதத்தில் அபாரமான ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார். தனக்கும் ரசிகர்களுக்கும், ஒரு “அமானுஷ்ய தொடர்பை”, கடைசி பாட்டு வரை வைத்திருக்கிறார். 

இதை, மகாராஜபுரம் சந்தானத்திடம் நான் பார்த்திருக்கிறேன்.  ஸ்ரீ. சக்ர ராஜ சிம்ஹானேச்வரி- என்ற ராக மாலிகை பாடலை, ம.ச- பாடாத மேடை இல்லை.  அப்படி அவர் மறந்து போனால் கூட, எழுதி கேட்டு பாடச் சொன்ன ரசிகர்களை நான் பார்த்திருக்கிறேன். இதற்கு முன்பு, என் தந்தை மூலம், மதுரை சோமுவிடமும், பல பெரியவர்களின் மூலம் மதுரை மணி அய்யரிடம் இருந்ததை கேட்டு இருக்கிறேன்.

என்னுடை நண்பர்கள் பலர், சஞ்சய், தன்னுடைய ரசிகர்களுக்கு, வருடத்திற்கு ஒரு 6 கச்சேரி இலவசமாக பண்ண வேண்டும் என்றும்,  பாரதீய வித்யா பவன்- வருடா வருடம் நடத்தும் “Free”  கச்சேரிக்கு- சஞ்சய் “இலவசம்” என்பதால் ஒத்துக் கொள்வதில்லை என்றும், சமீபத்தில் நடந்து முடிந்த, “தமிழும், நானும்” (ஸங்கீத வித்வத் சபை) கச்சேரியில், பால்கனி கடைசி டிக்கெட் – Rs. 300 என்றும் VIP ticket Rs. 2400 என்றும் வைத்து, அவருடைய சராசரி ரசிகர்கள் இடம் இருந்து விலகிச் செல்கிறார்”- என்று பல குற்றச்சாட்டுக்களைக் கூறினார்கள்.
எனக்கும் அப்படித் தான் தோன்றியது.

ஆனால், இன்னொரு புறம்- இப்போது SangeethapriyaWebsite and other sites- சஞ்சய் அவர்களின் கச்சேரி- “மானாவாரிக்கு” – Free to download and listen-- நாம் கேட்பதற்கு வசதியாக, இருக்கிறது. போராததிற்க்கு,  you tube ல், 24 மணி நேரமும், Video as well as Audio recording கேட்கலாம். அப்படி இருக்கும்போது, “இலவச கச்சேரி” எதற்க்கு ? என்ற ஒரு கேள்வி இருந்தாலும் கூட, சென்னையில் ஒரு 3 கச்சேரியாவது, Narada Gana Sabha-  போன்று ஒரு ஹாலில் சஞ்சய் – டிக்கெட் இல்லாமல்- செய்ய வேண்டும் என்று எனக்கும் ஆசைதான். என்ன இருந்தாலும் லைவ் ஆக இருந்து பார்ப்பது, ஒரு சுகம். என்ன தான் திருட்டு DVD இருந்தாலும் ரஜினி படம் த்யேட்டரில், முதல் ஷோ பார்ப்பது போல்
முதலில் இவர் பாடிய பாடல்களைப் பார்ப்போம்:

1.     முதலில், கூரநாடு நடேச பிள்ளை – வர்ணம் எடுத்து ஆரம்பித்தார். இது, அமிர்த வாஹினி ராகத்தில் அமைந்தது என்று அவரே சொன்னார். நான் சாரமதியோ, நடபைரவியோ என்று குழம்பி உட்கார்ந்து கொண்டு இருதேன்.  தியாகராஜர் இந்த ராகத்தில் “ஸ்ரீ. ராம பாதமா நீ க்ருபா ஜாலு னே”- ராமபிரானின் பாதத்தின் பெருமையைச் சொல்லும் பாடல்
2.   
   அடுத்து தியாகராஜர் க்ருதி என்று சொல்லி, “சோபில்லு சப்த ஸ்வர” ஆரம்பித்தார்.  எழு ஸ்வரங்களை புகழ்ந்து பாடும் பாடல்.  இந்த ஸ்வரங்கள் இல்லாவிடில், ஏது டிசம்பர் சீசன். ?- இதில் ஸ்வரம் செய்து முடித்தார்.

3.  முத்தையா பாகவதரின், “ஹிம கிரி தனயே-ஹேம லதே” என்ற சுத்த தன்யாசி கிருதியை எடுத்து – கொஞ்சம் ராகம் பாடினார். முடித்து ஸ்வரமும் கொஞ்சம் பாடினார்.

என்ன தான் சுத்த தன்யாசி-யாரு வேண்டுமானாலும் பாடட்டும்.  எனக்கு மிகவும் பிடித்த சிவாஜி கணேசன் படமான- பலே பாண்டியா- வரும் பாட்டு “நீயே எனக்கு என்றும் நிகரானவன்”. இரண்டாவதாக, சங்கீதக் கண்ணை திறந்து வைத்த, மகாராஜபுரம் சந்தானம் பாடிய “நாராயணா நின்ன நாமவ” என்ற தாசர் கருதியும், இந்த ராகத்தில் அமைந்து என் மனதில் பதிந்துவிட்ட அற்புதமான, மறக்க முடியாத பாடல்.
4.    
     அடுத்து, நவரச கன்னடா- வை எடுத்து, ஒரு 6 நிமிடம் ராகம் பாடினார். மிகவும் அழகான ராகம் இது.  “நான் ஒரு விளையாட்டு பொம்மையா” என்ற பாபநாசம் சிவன் கிருதியை, நவராத்திரியின் போது, இந்த பட்டுப் பாவாடை கட்டிக்கொண்டு, இளசுகள், கொலு வைத்து இருக்கும் வீட்டில், பாடும் பாடல் இது. இந்தப் பாடலைக் கேட்டுக் கேட்டு “புளித்துப் போன” எனக்கு, பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களின்- ‘நீ பாதமுலே கதியனி”. நிரதமு” என்ற பாடலை எடுத்துப் பாடி, கோடை மழை போல், குளிர்ச்சியைக் கொடுத்தார் இந்தப் பாடலில், “பூச்சி ஸ்ரீ. ஐ -"யார் யார் உன்னை, தன் வழியில் பிரார்த்தனை செய்கிறார்களோ, அவர்களையும் ரக்ஷிக்க வேண்டும்”- என்று “பொதுஉடைமை” பக்தியை வற்புறுத்துகிறார்

5.  அடுத்ததாக, “என்ன புண்ணியம் செய்தாயோ”- என்று சிவநாமயோகியார் அவர்கள் எழுதிய பாடலை பாடினார்.  இவர் யார் என்று வலைப்பகுதியில் தேடி கிடைக்கவில்லை. இந்தப் பாடலை இப்போதுதான் முதல் தடவை கேட்கிறேன்.

6.   கல்யாணி ராகம் மிகவும் அழகாக மாலை தொடுத்தது போல் பாடி, “நிஜ தாச வரதா” என்ற பட்ணம் சுப்பிரமணிய அயயர் பாடலைப் பாடினார்.  இந்தப் பாடலை ஒரு முறை மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். சஞ்சய் அவர்களின் “Blog” ல், ஒரு interesting ஆன, பதிவு உண்டு. விரும்பியவர்கள் படித்துக் கொள்ளலாம்.

ஒரு இடத்தில் பாடும் போது, நிஜ தாஸ என்று பாடி, 4-5 நொடிகள் கழித்து, “வரதா’ என்று பாடினார். அப்போது அவர் கை, வரதராஜன் பக்கம் இருந்தது. On the spot-humuor என்பது சஞ்சயிடம் நிறைய உண்டு.
7.      தனி
8. சௌந்தரராஜம் ஆஸ்ரயே- என்ற ப்ருந்தாவன சாரங்கா கிருதியை எடுத்து மெதுவாக தவழ விட்டார்.

9.  ராகம் தானம் பல்லவி= பத்தீப் என்ற ஒரு ராகத்தை எடுத்து, தானம் பாடி, “வெண்ணைத் தின்ன சின்னத் தனமா-வேணுகோபாலா”- என்ற பல்லவி வரியை எடுத்து பாடி முடித்தார்.
   
  இந்த ராகத்தில் "என் தாய் வாழ் எனும் மந்திர" என்று பாரதிதாசன் பாடலை இவரே பாடி இருக்கிறார்.  அற்புதமான பத்தீப் ராகத்தில் அமைந்த பாடல். 


  .  ஸ்ரீ ராம ஜெய ராம- யதுகுல காம்போதி யில் உற்சவ சம்பிரதாய கருதி ஒன்று பாடினார்.

ஒரு சில பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

வரதராஜன் மற்றும் அவரது மற்ற பக்க வாத்யங்கள், மிகவும் அழகாக தன்னுடைய பணியை இனிதே செய்தனர்.

இதுதான என்னுடைய முக்கியமான பகுதி:

ஒவ்வொரு முறையும் நான் சஞ்சய் அவர்களின் கச்சேரி முடிந்து வரும்போது T.M.KRISHNA அவர்களை நினைத்துக்கொள்வேன்.  எனக்குத் தெரிந்து, சம கால கலைஞர்களில், சஞ்சய்க்கு நிகராக, சங்கீத ஞானத்திலும் சரி, ரசிகர்களைக் கவரும் விததிலும் சரி, சஞ்சய்க்கு, நிகரானவர் TMK. 

TMK திசை மாறிப் போகாமலிருந்தால், டிசம்பர் சீசனில், இருவரின் கச்சேரியும் ஒரே நாளில், வேறு வேறு சபாவில் அமைந்தால், “யாருடைய கச்சேரிக்குப் போவது” என்று நான் முடிவு செய்ய ச்ரமப்பட்டு இருப்பேன்.  THANKS TO TMK ?

Monday, 24 December 2018

எழுதும் பணியே பணியாய் அருள்வாய் - 2) "தேதியூர் சாஸ்த்ரிகள் நூற்றாண்டு விழா மலர்"


முன்னுரை:
தேதியூர் சாஸ்த்ரிகளின் நூற்றாண்டு நினைவாக “பிரம்ம வித்யோபாக்யான சதகம்” என்று ஒரு புத்தகம் கிடைத்தது. Published in 1984

இவருடைய நூற்றாண்டு விழாவில் (1984), தேதியூர் மாமாவின் ஞாபகார்த்தமாக, வேதம், உபநிஷத், புராணம், இதிகாசங்களில் இருந்து, உபாக்யானங்கள் மூலம் போதிக்கப்படும் விஷயங்களை, மிகச் சிறந்த பண்டிதர்களைக் கொண்டு “பிரம்ம வித்யோபாக்யான சதகம்” என்ற ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

32 பண்டிதர்களைக் கொண்டு 1௦௦ வேதாந்த விஷயங்களை தயாராக்கி, இதை சம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும், எழுதி மேற் சொன்ன புத்தகத்தை வெளியிட்டு, அது எனக்குக் கிடைத்தது.

தேதியூர் சாஸ்த்ரிகள், மஹா பெரியவாளின் பரிபூர்ண ஆசியைப் பெற்றவர். பெரிய மஹான். தன் வாழ் நாள் முழுவதும், வேதாந்த சாஸ்த்ரத்தை அப்யாசம் செய்தவர். சென்னையில் அபிராமபுரத்தில், குருகுலம் என்று (ஆதி சங்கரருக்கு) ஒரு ஆலயம் ஸ்தாபனம் செய்து, வேத சம்ரக்ஷனை செய்தார்.  இப்போதும் மிகவும் பிரமாதமாக, சாந்நித்யம் கொஞ்சம் கூட குறையாத ஒரு கோவிலாக இன்றும் இருக்கிறது.

இந்தப் புத்தகம், திருவானைக்கோவிலில், இருந்த, மஹா பெரியாவளின், அணுக்கத் தொண்டரான,  மறைந்த A. சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகளிடம் இருந்து, என் தந்தைக்கு வந்து,  என் தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது   ஸ்ரீ. சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகள், ஜனாபதியிடம் இருந்து, சம்ஸ்கருதத்திற்காக பரிசு வாங்கியவர். என் தம்பியின் மாமனார் என்பதில் எனக்கு பெருமை.

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பெரியவா, இதற்க்கு “ஸ்ரீ முகம்” எழுதும்போது= “இந்த செயல் – அதாவது 32 பண்டிதர்களை வைத்து, தினம்தோறும் உபன்யாசங்கள் மூலமாக, நல்ல விஷயத்தை கேட்பதற்க்கு, ஏற்பாடு செய்து உள்ளார்கள்.  நல்லதை கேட்பதன் மூலம், நமக்கு இரண்டு பங்கு புண்ணியம் கிடைக்கிறது. சொல்பவர்களுக்கு, ஒரு பங்கு புண்ணியம் தான் உண்டு. இது எப்படி ?
நல்லது சொல்வதைக் கேட்டால், நாம் கேட்பதற்கு, ஒரு பங்கு புண்ணியம் தான் உண்டு.  நன்றாக சொல்வதைக் கேட்பதால், சொல்பவரும் நன்கு ஆலோசித்து, நல்ல விஷயங்களை நமக்குத் தெளிவாக எடுத்துச் சொல்வார். நல்ல விஷயம் சொல்லத் தூண்டிய புண்ணியமும் கேட்பவர்க்குக் கிடைக்கும்.

இதை எழுதுபவருக்கு எத்தனை பங்கு புண்ணியம் என்று எனக்குத் தெரியவில்லை ?!?  ஒரே விடை- மஹா பெரியவாதான்.

இந்தப் புத்தகத்தில்  உள்ள சில கட்டுரைகள நான் இந்தப் பதிவில் வெளியிடுகிறேன். ஏன் இதை செய்கிறேன் ?, என்ன பயன் ?, என்னை யார் தூண்டி விட்டு செய்யச் சொல்கிறார்கள் ?- எனற எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில், “மகா பெரியவா” தான்.  இதைப் படிப்பவர்களும், மஹா பெரியவாளின் பரிபூர்ண ஆசீர்வாதம் உண்டு என்பது நிச்சயம்.

1.       இக்ஷ்வாகு, மனு- சம்வாதம் (உரையாடல்)

இக்ஷ்வாகு, மனு உரையாடலை, ராமனுக்கு, வசிஷ்டர் கூறுகிறார்.- “ஓ
ராமா, உங்கள் வம்சத்தின் கூடஸ்தரான இக்ஷ்வாகு, ஒரு சமயம் தனிமையில், மனதில், இந்த உலகிற்க்கு காரணம் என்ன ? என்று ஆலோசித்து ஒன்றும் அறியாமல், பிரம்ம லோகத்தில் இருந்து மனு வந்த போது, அவரை, இதற்கு காரணம் கேட்டான்.

மனு இக்ஷ்வாகுவை பாராட்டி, “இந்த உலகம் பரமார்த்தத்தில், உண்மை நிலையில் இல்லாதது, அனால் கண்ணாடி உண்மையாக இருப்பதால், பிரதி பிம்பமும் இருப்பது போல், தோன்றுகிறது அல்லவா ! அதே போல், பரமாத்வாவின் சத்தியத் தன்மையினால், அதை பிரதிபலிக்கும் உலகமும் சத்யம் போலத் தோன்றுகிறது. ஆனால் தானாகவே சத்தியமாக இருக்கும் தன்மை உலகிற்கு இல்லையாதலால், அது மித்யை. (அசத்தியம்)

எங்கும் நிறைந்த பரமாத்மா, தன் மாயா சக்தியால் அக்ஞானிக்கு சிருஷ்டியை உண்டு பண்ணியும், ஜ்ஞானிக்கு, சம்ஹார ரூபமான வித்யா சக்தியால் எல்லாவற்றையும் சம்ஹரித்தும், கூடஸ்தமான, அத்வயமான, ஆத்மாவாக, எப்பொழுதும் இருக்கிறார். எங்கும் நிறைந்த பிரகாசமான ஆத்மா தெரியாமல் இருப்பதும், இல்லாததும் மேலும் பிரகாசமற்ற ஜகத் (உலகம்) நன்கு தெரிவதுமான ஆச்சர்யம், சேர முடியாததைச் சேர்த்து வைப்பதில்  சாமர்த்தியம் வாய்ந்த “மாயையின்” பலத்தால்தான்.

அப்படியானால், எந்த பாவனையால் ஆத்மாவை அறிந்து சுகமாக இருக்கலாம் என்றால், “கண்ணாடியில் தோன்றும் பிம்பத்தைப் போல், உலகின் தோற்றம், “ப்ராதிபாஸிகமே”, வாஸ்தவமல்ல, என்று பாவனை செய்து, உலகு எல்லாம் “சூன்யம், ஆலம்பனமற்ற சித்ரூபம் தான்” என்று பாவனை செய்ய வேண்டும்.

ஒ புத்ரனே, நீ முதலில் விவேக விலாசமடைந்து, சமாதியினால், வெளி உலகை மறந்து, பூரணமாயும், பயமற்றதுமான, சைதன்யமாகி, சரீரத்தை அடைவாயாக ! என்று யோக பூமிகைகளின் அபியாஸத்தினால், உண்டாகும் பயனைக் கூறி, அப்பயனை அடையும், எழு லோக பூமிகைகளையும் கூறி, மோக்ஷமென்பது, ஒரு தேசமோ காலமோ அல்ல, அஹம் என்று தேஹம், முதலியவைகளில், உண்டான பிரம்மஞானத்தினால் விலகுவது தான். அப்படிப்பட்ட, ஞானம் அடைந்த ஜீவன் முக்தனை பூஜிக்க வேண்டும். நமஸ்கரிக்க வேண்டும். அவனுடைய பக்தியினால் ஞானம் உண்டாகி, எந்த ஸ்தானத்தை அடைகிறானோ,  அதை யக்ஞ்ம் முதலியவைகளால் அடைய முடியாது.......

என்று கூறி மனு பிரம்ம லோகம் சென்றார்........

என்னுரை- இதை ஒரு மூன்று தடவையாவது படித்தால் தான் ஏதோ புரிவது போல் இருக்கும்.  

மனு மகரிஷியின் வாக்கியமல்லவா !!!. அது அப்படிதான் !!!!

Monday, 17 December 2018

எழுதும் பணியே பணியாய் அருள்வாய்- 1) எனக்குப் பிறவி வேண்டும்


என்னடா இது, பிறவி வேண்டாம்- பட்ட பாடு போதும் என்று ஒவ்வொருவரும், நொந்து, நூலாக இருக்கும் நிலையில், இப்படி ஒரு தலைப்பா ? 

shAstraM shArira mImAMsa devastu parameshvaraH |
AchAryaH shankarAchAryaH santu me janmajanmani ||

என்று ஒரு ஸ்லோகம் உண்டு

சாஸ்த்ரம் சாரீர மீமாம்ஸா
தேவஸ்து பரமேச்வர:|
ஆசார்ய: சங்கராசார்ய:
ஸந்து மே ஜன்ம ஜன்மனி ||

“சாரீர மீமாம்ஸா” என்றால் சரீரத்துக்குள் இருக்கும் உயிரைப் பற்றி சொல்கின்ற வேதாந்த சாஸ்திரம் என்று பொருள்.

நமக்கு எத்தனை பிறவி கிடைத்தாலும் ஒவ்வொரு பிறவியிலும், சாஸ்திரமான வேதாந்த சாஸ்த்ரத்தை படிக்க வேண்டும். பரமேஸ்வரனிடம் பக்தி வரவேண்டும்.  சங்கராசார்யரிடம், குரு பக்தி இருந்து, அந்த பக்தி வளர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.

இதில் ஆச்சர்யமான சில விஷயங்கள் இருக்கிறது:

ஒரு தடவை ஆதி சங்கரரிடம் பக்தி செய்து,  அத்வைத சாஸ்திரம் வாசித்து, பக்தி பண்ணினால், பிறவியே வராது. 

இது ஒரு வகை

ஒரு வேளை, நம்முடைய கர்ம வினையின் மூலமாக, ப்ராரப்தத்தின் மூலமாக, பிறவி இருக்குமேயானால், சஞ்சிதம் அவ்வளவு பலமாக இருக்குமே ! அதனால், அப்போது ஒரு ஜன்மா வருமே, ! அது இது போல் வரட்டும்.

எது போல் ?

பக்தி, வேதாந்தம் சாஸ்த்ரத்தில் ஒரு ஈடுபாடும், குரு சங்கராச்சர்யாரும் அருளும் எனக்கு வரட்டும் என்ற ஒரு எண்ணம் வளரும்படி- ஒரு ஜன்மம்

ஆகவே, அப்படிப்பட்ட மகத்தான மனிதப்பிறவி நமக்குக் கிடைத்து இருக்கிறது.

நாம் வேதாந்த சாஸ்திரம் ஸ்ரவணம் பண்ண வேண்டும். ஆச்சர்யாளிடம் பக்தி செய்ய’ வேண்டும். இதுதான் மனிதப் பிறவியின் லக்ஷ்யம். சாப்பிடுவது, உத்தியோகம் பார்ப்பது, குடும்பம், என்று பல “சரா புரா” பண்ணுகிறோமே, இது எல்லாமே, ஆத்மாவின் உண்மையான் ஸ்வரூபத்தை தெரிந்து கொள்ள சாதனமாக இருப்பதற்கு, தர்ம கார்யங்களை செய்வதற்கு, அனுஷ்டானம் செய்வதற்குத் தான் என்பதை உணர வேண்டும்

சரீரமாத்யம், கலு, தர்ம சாதனம்- என்ற பதத்திற்க்கு ஏற்றவாறு, சரீர போஷணம், இதற்கு இருக்கிறதே தவிர, உண்டு, உறங்கி, கூடி, இருப்பதற்கு அன்று.

ஆகவே முக்கியமான லக்ஷ்யம் “ஆத்மானுபவம்” தான்.

ஜந்துனாம் நர ஜன்ம துர்லபம்” – அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, “வையத்து வாழ்வீர்காள்”- போன்ற பல குறிப்புகள், நம்மை செம்மையான ஒருவாழ்க்கை வாழ சொல்லப்பட்ட பொன் மொழிகள் தான்.

“நாலு பேர் போற வழியில் போங்கள்” என்று கிராமத்தில் ஒரு பழ மொழி உண்டு. அந்த நாலு பேர்= சமயச் ஆச்சர்யர்களான, சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்க வாசகர்.- ஆவர்கள்.

நான் இதை எழுதும்போது


"பஜ கோவிந்தம்" நினைவுக்கு வந்தது. அதில், முதல் பாடலில், மூடனே,” இலக்கணம், சாஸ்திரம், இதெல்லாம் வேண்டாம். “கோவிந்தனை பஜித்தால் போதும்- என்கிறார்

என்னடா இது ? மேலே, சாஸ்த்ரங்களை ஸ்ரவணம் பண்ண வேண்டும் என்று சொன்னவர் பஜ கோவிந்தத்தில், இதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறாரே- என்று நினைக்கத் தோன்றும்.

கோவிந்தனை பஜிப்பது என்பது ஆரம்பம். மெதுவாக அந்த ஒரு “கோவிந்த பக்தி” வளர்ந்து, “வெளி உலகப் பற்று” என்பது கொஞ்சம் கொஞ்சம் ஆக விலகி, கடைசியில், ஒரு குரு உங்களைத் தேடி வருவார். அவர் சரணங்களில், பூரண பக்தி கொண்டால, இதயத்தில், கடவுளைக் காணலாம்.

இதை தான், பஜ கோவிந்தத்தில் கடைசி பாட்டில் சொல்கிறார். (“ஹ்ருதயஸ்தம் தேவம்”)

மானிட ஜென்மத்தை செம்மையாக கழித்தால், இறை இன்பம் என்பது கிடைக்கும். – இது தான் “என்” திருக்குறள்...

“மானிட ஜன்மம் மீண்டும் வந்திடுமோ’ என்று M.K.தியாகராஜ பாகவதர் குந்தலவராளியில், பாடிய பாட்டு, ஏனோ எனக்கு நினைவு வருகிறது.

மாணிக்க வாசகரை,  கைலாய நாதன், “கைலாசத்திற்கு வருகுறீரா” என்று கேட்க, மாணிக்க வாசகர் “வர மாட்டேன்” என்கிறார்.

அதை ஒரு காட்சியாகப் பார்ப்போம்

சிவ பெருமான் – மாணிக்க வாசகரே- கைலாயத்திற்கு வருகிறீரா ?

மா.வா- வரவில்லை
சி.பெ- “வரவில்லையா”- அவன் அவன் கைலாசத்திற்கு வருகிறேன் என்று அலைகிறான். நீ ஏன் வரமாட்டேன் என்கிறீர்
மா.வா- “கைலாசத்தில் என்ன இருக்கிறது ? யார் இருக்கிறார்கள் ?
சி.பெ-  நான் இருக்கிறேன்
மா.வா. பிறகு
சி.பெ- உமையம்மை இருக்கிறாள்
மா.வா- பிறகு
சி.பெ - வேறு யார் வேண்டும். ?
மா.வா- அடியவர் உண்டா ?
சி.பெ- இல்லை
மா.வா- அப்படி என்றால் என்னை பூ லோகத்திலேயே விட்டு விடு !!
சி.பெ- ஏன் ?

மா.வா- சுவாமி, நீர் இருக்கிறீர், உன் உடம்பில் உமையம்மை இருக்கிறாள்.  நீவிர் இருவரும் அடியவர் மனதில் இருக்கிறீர்.  அந்த அடியவர், பூ லோகத்தில் இருக்கிறார். நான், அடியவரைத் தொழுதால், உன்னையும், உமையம்மையும் வணங்கிய புண்ணியம் எனக்குக் கிடைக்கும். அதனால் என்னை, இங்கேயே விட்டு விடு.
என்று சொல்லி, கீழே வருமாறு அதை செய்யுளில் சொல்கிறார்

“உடையாள் உந்தன் நடுவிருக்கும்.
உடையாள் நடுவில் நீ இருத்தி,
இருவீரும் அடியார் நடுவில் இருப்பீர், அதனால்
அடியேன் அடியார் நடுவில் இருக்கும் அருளைத் தருவீர்
முடியே முதல”

மேற்கூறிய இந்த டயலாக்- கீரன் அவருடைய சொற்பொழிவில் சொன்னது. அந்த “குரல் வளம்” அந்த “தமிழ்”, இன்னும், என் மனதில் இருக்கிறது.  மேற் சொன்ன மாணிக்க வாசகரின் வரிகள், மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவிலுக்குப் போகும் வழியில் கல்லில் செதுக்கி இருக்கிறது.  இன்றும் படிக்கலாம்

கொஞ்சம் மேலே போய் சிந்திப்போம்;

முண்டக உபநிஷத் என்று ஒரு நூல் உண்டு.  அறிவு, ஞானம்- இவை இரண்டிற்கும் வித்தியாசம் என்ன ?  என்பதை விளக்கும்போது, இரு வகை ஒன்று- “அபர”  ஞானம், இரண்டாவது, “பர” ஞானம். அதாவது, ஆரம்ப அறிவு, விஷய அறிவு. In English, it is called lower and higher knowledge. Also it is called terrestrial and transcendental. – (தலை சுற்றுகிறதா ?)_       

என்ன சொல்ல வருகிறது என்றால்- lower knowledge is constituted of 

four Vedas-  Rig, Yajur, Sama, Atharva Vedhas

Six Vedhaangas, - Part of Vedhas

Sikshaa, - Phonetics

Kalpa,- Code of Rituals

Vyakaranam- Grammar

Nirukta –Etymology

chandas,- Metre and

Jyotisha- astrology.

அதாவது முதல் பாராவில் நாம், சாஸ்த்ரங்களை எவ்வளவு உயர்வாகச் சொல்கிறோமோ, அது சாதாரண அறிவு (lower knowledge) என்று மு. உ. சொல்கிறது

அப்படி என்றால் உயர்ந்த அறிவு என்பது என்ன ? என்று கேட்டால், - which leads to immortality or that which goes beyond the word-meaning in languages.- அதாவது விஷய அறிவு, பொது அறிவு, புத்தக ஆறிவு எல்லாவற்றையும் தாண்டி, - “வெட்ட வெளி தன்னில், மெய் என்று இருப்பவர்க்கு பட்டயம் எதற்கடி, குதம்பாய் ?!” – என்று “குதம்பை சித்தர் பாடலின் அர்த்தம் போல் இருக்கும் ?- (மோ...என்னவோ ?!!)

இந்த மு.உ- வியாக்யானம், சுவாமி சின்மயானந்தா அவர்களால் கொடுக்கப்பட்டது

மு.உ – எல்லாம் படித்து  தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். அடுத்த ஜன்மத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

இப்போதைக்கு- “கோவிந்தா” போதும்

எதேச்சையாக, நான் பதிவிடும் இந்த நாள்- வைகுண்ட ஏகாதசியாக அமைந்தது என் பாக்கியம்.