Monday, 18 July 2016

மாதொருபாகனுக்கு ஒரு (அ)நீதி –பாகம் 1




ராம்குமார், சுவாதி பிரச்சினையில் சில பல விஷயங்ககள் தமிழ் கூறும் நல்லுலகுக்கு மறந்து விட்டதில் ஆச்சர்யம் இல்லை. மக்கள் எப்போதும் மயிர் கூச்செறியும் விஷயங்களை கேட்டு படித்து அதை அசை போடுவதையே தொழிலாக கொண்டு உள்ளனர்.  மறதி அதிகமாக இருப்பதால் அதை மறந்து புதிய விஷயத்திற்கு தாவுகின்றனர்.

இப்போது மக்களின் நினைவில் இருக்கும் ஒரே விஷயம் கபாலி ரிலீஸ் தான்   

பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகத்திற்கு தடை விதிக்கக் கூறி எழுந்த பிரச்னையில் நீதி மன்றம், இந்த புத்தகத்திற்கு தடை விதிக்கத் தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதவது இந்த புத்தகம் படிக்க தகுந்தது தான் என்று ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

எனக்கு ஞாபாகம் இருக்கிறது. ஒரு முறை எழுத்தாளர் சுஜாதா அவர்கள், குமுதத்தில் “இரத்தம் ஒரே நிறம்” (என்று நினைக்கிறேன்) என்று ஒரு கதை எழுதினார். இது ஏதோ ஒரு சரித்திர சம்பந்தமான ஒரு கதையோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைப் பற்றி, அந்தக் காலத்தில் அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பற்றி எழுதப்பட்ட ஒரு கதை.
இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்து குமுததில் அந்தக் கதை நிறுத்தப்பட்டது.  சுஜாதாவின் “வெறி” ரசிகனான எனக்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பின்பு கேள்விப்பட்டதில், அந்தக் கதை அந்த சமூகத்தினரை மிகவும் பாதித்ததாகவும், அவர்கள் சுஜாதாவுக்கும், குமுதம் காரியாலயத்தில் உள்ளவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆதலால் கதை நிறுத்தப்பட்டது என்று.  சுஜாதாவோ, குமுதமோ கோர்ட்டுக்கு போனதாக தெரியவில்லை.

எழுத்து சுதந்திரம் என்பது என்னவென்று என்னைக் கேட்டால், சம்மந்தப்பட்ட சமூகத்தினர் வன்முறையில் ஈடுபட்டால், அரசு தன்னைக் காத்துக் கொள்ள, அந்தக் கதையையோ, கட்டுரையையோ பதிப்பிப்பதை நிறுத்தி வைத்து, “எழுத்து சுதந்திரத்தை” காப்பற்றி விடும். இல்லையேல், எப்படி புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், வன்முறை இல்லை என்றால், அந்தப் புத்தகம் படிக்கத் தகுந்தது என்று தீர்ப்பு வந்து விடும்.

மாதொருபாகன் என்ற இந்த நாவல், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்த பிரிவினர் காலம் காலமாக கடவுளின் பெயாரால் சில பழக்க வழக்கங்களை கடைபிடிக்கின்றனர்.  பெருமாள் முருகனும் இந்த சமூகத்தை சேர்ந்தவர் தான்.

இதில் குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடிய சில வழக்கங்களைப் பற்றிய (ஒரு செயல் முறை பற்றிய) ஒரு கதை. இது உடற்கூறு சம்பந்தப்பட்டிருப்பதால் இதை மேற்கொண்டு சொல்ல முடியாத விஷயம் இது. பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டிய ஒரு விஷயத்தை அதே பிரிவை சார்ந்தவர் வெட்ட வெளிச்சமக்கியதன் மூலம் அந்த சமூக்கதில் இருக்கும் சகோதரிகள் வெட்கி தலைகுனிய வைத்துள்ளார். 
இதை நான் மேற்கொண்டு விவரிக்க முடியததிற்குக் காரணம், என் மகள் படித்து விடுவாளே என்ற பயம்தான்.  எந்த வித பயமும் இல்லாமல் தன் சமூகத்தினரைப் பற்றியும், தன் சகோதரிகள், தன் சமூகத்து தாய்மார்கள் தெய்வமாக மதித்து வரும் ஒரு பழக்கத்தை, பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டிய ஒரு விஷயத்தை புத்தகம் போட்டு விளம்பரம் செய்து விட்டு, அது உண்மைக் கதை தான் என்று வேறு புத்தகத்தின் முன்னுரையில் கூறி, அந்த ஊரின் பேரையும் சொல்லி, பிறகு இது கற்பனை என்று சொன்னால். – இதை கொடுமை என்று சொல்வதா ?, விதி என்று சொல்வதா ? கண்ணைக்கட்டிக் கொண்டிருக்கும் நீதி தேவதை, சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து, தவறாக சொன்னதன் மூலம் இன்னொரு “அலங்கோலதிற்கு” வழி வகுக்கும் செயலா ?

தீர்ப்பு வந்த உடனே எல்லா பத்திரிக்கைகளும் வரிந்து கட்டிக்கொண்டு பெருமாள் முருகனுக்கு நீதி கிடைத்து விட்டது போலவும், இனி எழுத்துலாக சுதந்திரம் காப்ப்பாற்றப்பட்டது போலவும் எழுத ஆரம்பித்து விட்டனர். பெருமாள் முருகனும் “நான் மீண்டும் எழுதுவேன்” என்று சொன்னதன் மூலம் நம் வயிற்றில் “பாலை” வார்த்தார்.  லெட்டர்ஸ் டு தி எடிட்டர் எல்லாம் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதோ கடவுளின் வார்த்தை போன்றும், பெருமாள் முருகன் காப்பாற்றப்பட்டார் என்பது போலவும் எழுதினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதி வரும் குருமூர்த்தி இந்த தீர்ப்பு தவறு என்று அடுத்த் தினமே ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் மிக அருமையாக் சில கருத்துக்களை எடுத்துச் சொன்னார். இதைப் பற்றி எழுதுவதற்கு முன்பு, ஹிந்து பத்திரிக்கை 11th July 2016 அன்று குருமூர்த்தியின் இண்டர்வியூ ஒன்றை போட்டிருந்தார்கள்.  இதில் கொடுமை என்னவென்றால், பாதியில் நிறுத்திவிட்டு, ஒரு website லிங்க் கொடுத்து, மேற்கொண்டு படிக்கச் சொல்லிவிட்டார்கள்.  இந்தப் பேட்டியை முழுவதும் போடுவதற்குக் கூட மனதில்லை.
(தொடரும்)

Tuesday, 5 July 2016

சாத்தூர் சகோதரிகளின் நாத இன்பம்- 30th June 2016



அந்த காலத்தில் MGM என்று ஒரு PRODUCTION கம்பெனி ஒன்று உண்டு. அதைக் காட்டும் போது ஒரு சிங்கம் கர்ஜிப்பது போல் காண்பிப்பார்கள். இரண்டு முறை கர்ஜிக்கும்.  இந்த கம்பனி எடுக்கும் படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கும் என்று உத்தரவாதமாக நம்பலாம்.

அது போன்று சாத்தூர் சகோதரிகள் கச்சேரி MGM.  MINIMUM GUARANTEE மியூசிக். ஆலத்தூர் சகோதர்கள் கச்சேரியைப் போல், கச்சேரி மேடையை எந்த காலத்திலும் ஜனரஞ்சகத்திற்கு விலை பேச மாட்டார்கள்.  கச்சேரி தர்மம் இஸ் PRIME IMPORATANT.  STRICT ADHERENCE டு சாத்தூர் பாணி..

.ஒரு முக்கியமான விஷயம்.  ஸ்ரீ சாத்தூர் அவர்களின் 1௦௦ வயது பூர்த்தியை ஒட்டி இந்த மாதம் 3 நாள் ஒரு பெரிய விழாவாக எடுத்து ராமகிருஷ்ண மூர்த்தி, விஜய் சிவா மற்றும் ஓ எஸ் தியாகராஜன் அவர்களின் கச்சேரி ஏற்பாடு செய்து உள்ளனர்.  சாத்தூர் அவர்களின் பேரன். அந்த நிகழ்ச்சியில் பாடுவதின் மூலம் சாத்தூர் அவர்களின் சங்கீதம் generation gap இல்லாமல் தொடரப்போகிறது.

பாரி முனையிலிருந்து ராக சுதா ஹால் சற்று தொலைவு இருந்தாலும் நான் வந்ததற்கு ஒரு முக்கிய காரணம் முதல் நாள் அபிஷேக் ரகுராம் என்ற ஒரு சங்கீத ராக்க்ஷசனின் ராகம் தானம் பல்லவி கேட்க நேர்ந்ததுதான். 

பல்லவி தர்பார் என்று ஒரு அமைப்பின் மூலம் கர்நாடிகா ரவிகிரன் AND பார்த்த சாரதி சபா சேர்ந்து RTP மட்டும் பாடக்கூடிய ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.   அதில் அபிஷேக் ரகுராம் மோகன கல்யானியில் ஒரு RTP பாடி என்னை ஒரு மாதிரி கிறங்க அடித்திருந்தார்.  அந்தக் கிறக்கம் தெளிய ஒரு அரு மருந்தாக நான் சாத்தூர் சகோதரிகளின் கச்சேரி கேட்க சென்றேன். ஹரிகேசனல்லுரின் “புவனேஸ்வரியா” வும், “தாமதம் தகாதய்யா” என்ற ஒரு தமிழ் கிருதியை தவிர வேறு பிரபலமான கிருதி இல்லாத ஒரு ராகத்தை வைத்து ஒரு RTP யைப் பாடி கலங்க அடித்தார். 

இதில் இவர்கள் மெயினாக பாடிய “ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே” என்ற முத்துசுவாமி தீட்சிதர் அவர்களின் காம்போதி ராக கிருதியை முதலில் பார்ப்போம். ஸ்ரீமதி லலிதாவின் காம்போதி ஆலபனை மிக அருமை என்று சொன்னால், பாட்டை அவர்கள் பாடிய விதம் அருமையோ அருமை. ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே யில் ஸ்வரம் எடுத்து தனி ஆவர்த்தனம் கொடுத்தார்கள்.  கல்லிடைக்குரிச்சியாரும், மடிப்பாக்கத்தாரும் மிக அழகாக தனி வாசித்தார்கள்.

காம்போதி ராகத்தில் அமைந்த இந்த பாடலோ, கொநியாடின என்ற கிருதியோ, ஒ ரங்கசாயி போன்ற கிருதிகள் – பல்லவியே களை கட்டும். பல்லவியை மட்டும் 15 நிமிடங்கள் பாடலாம். அதிலேயே நிறைய சங்கதிகள் உண்டு. GNB அவர்கள் இந்த பல்லவியை பாடிக்கேட்டால் அலுக்கவே அலுக்காது. சா.சகோ. இதை மிக அழகாக கையாண்டனர்.
அவர்கள் பாடிய பாடல்களைப் பார்க்கலாம்

இந்த கொபமேல ரா- கனராக மாலிகா (அ) தச ராக மாலிகா – வீணை குப்பைய்யரின் அருமையான வர்ணம்.  தியாகராஜரின் பஞ்ச ரத்ன ராகத்தில் அமைந்த இந்த வர்ணம், இதைத் தவிர, நாரயனகௌள, ரீதிகௌள, பௌளி, மேலும் கேதாரம் ஆகிய ராகங்களின் கூட்டுக் கலவை.  அநால், இவர்கள் பாடும்போது ஒன்பது ராகங்கள் தான் வந்தது.  சந்தேஹத்தை ஸ்ரீமதி புவனா அவர்களிடம் கேட்கும்போது, சாரங்கநாட்டை “என்ற ஒரு ராகம் வர வேண்டும், ஆனால் அது பாடாந்தரத்தில் இல்லை”, என்றார். எனக்கு புரிந்தது அவ்வளவுதான்...

நமாமி விக்ன விநாயகா-ஹம்சத்வனியில் அமைந்த கிருஷ்ணசுவாமி அய்யர் அவர்களின் கிருதி. சிட்டைஸ்வரம் அமைந்த சம்ஸ்க்ருத சாகித்யம். அதில் சரணத்தில் “க்ஷனாக்ஷித பலாப்தி கர” என்ற இடத்தில் அற்புதமான் ஸ்வரம் பாடினார்கள். இதை ஒரு முறை கே ஜே யேசுதாஸ் பாடிக் கேட்டிருக்கிறேன். ஸ்வரம் எடுத்த இந்த இடம் “dancing mood” ல் அமைந்த இடம். கணபதிக்கு பிடித்த இடம்.

இதே போன்று திருப்புகழில் “பக்கரை விசித்ரமணி” என்ற ஒரு பாடல், அழகான சந்தத்துடன் வருகிறது. அதுவும் dancing tunes ல் அமைந்த பாடல். இந்த பாடல் பூராவும் அப்படி அமைந்திருக்கிறது விசேஷம் என்றால் சா.சகோ. பாடிய ஸ்வரத்தில் அந்த அழகு நிறைந்து இருந்தது.

பாஹிமம் ப்ருஹன்னாயிகே என்ற சுவாதித் திருநாளின் ஹுசேனி -கிருதி அமைதியான அழகான கிருதி. இது கே. வீ நாராயணசுவாமி அவர்கள் பாடி பிரபலப்படுத்திய கிருதி. இது சுவாதித் திருநாள் அவர்கள் எழுதிய பாடல் தான என்று ஒரு புறம் discussion நடந்து கொண்டிருதாலும், அற்புதமான பாடலை அழகாக பாடினார்கள். இதுவும் சிட்டைஸ்வரம் அமைந்த கிருதி.

ஸ்ரீமதி புவனா சப்-main ஆக ஷண்முகபிரியா ராகத்தை எடுத்து பாடி “வத்தனே வாருலே” என்ற சத்குரு த்யாகராஜர் கிருதி யைப் பாடினார்கள்.  “தாரி தெலியு தெய்வமு நீவு” என்ற இடத்தில் நிரவலும், ஸ்வரமும் பாடி முடித்தார்.  “உன்னை விட்டால் என்னை யார் தேற்றுவார்” என்ற அர்த்தத்தில் அமைந்த மாஸ்டர் பீஸ். பாடல் இது.  இந்தப்பாடலை கேட்டே 
ரொம்ப நாளாகிவிட்டது

அடுத்ததாக “த்ரிலோக மாதா நானு” என்ற ஸ்யாமா சாஸ்திரி கிருதியை filler ஆகப் பாடி காம்போதி ராகத்தி main item ஆக எடுத்துக் கொண்டார்க்ள்.

காம்போதி ராக ஆலாபனை பற்றி முன்பே எழுதி விட்டேன்.

சஞ்சர தர= அஷ்டபதி –சிந்து பைரவியில் அமைந்த ஜெயதேவரின் அஷ்டபதி.

“ஸ்ரீ ஜகதம்ப கதம்ப” என்ற ராமச்சந்திர கவியின் ராக மாளிகை கிருதியை செஞ்சுட்டியில் ஆரம்பித்து பாடி பிறகு மங்களம் பாடி கச்சேரியை இனிதே முடித்தார்கள்.

உஷா ராஜகோபாலன்  இடைஞ்சல் இல்லாமல் வாசித்து கச்சேரிக்கு மேலும் ஆழகு சேர்த்தார்.

கச்சேரி முடிந்து திரும்பி வீட்டுக்கு வரும்போது ஷன்முகபிரியாவும், சுப்ரமண்யாய நமஸ்தே வும் கூடவே வந்தது.  நல்ல சங்கீதத்தை கேட்டதில் நல்ல தூக்கமும் வந்தது.


Sunday, 3 July 2016

பஞ்ஜாஷரியும் மகாபெரியாவளும்

வரகூர் நண்பர் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மொழி பெயர்த்து எழுதியிருக்கிறேன்.
மகாபெரியவாளைப்பற்றி எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.  அவருடைய அனுக்ரகங்கள் அளப்பரியவை.   அவரின் அனுக்ரஹத்தைப் பெற்றவர்களின் அனுபவங்கள் படிக்க கேட்க அலுக்காதவை.
விஜய் டி வி யில் போன வாரம் ஸ்ரீ கிருபானந்தவாரியாரின் அருள் பெற்ற, சிஷ்யையான தேச. மங்கையர்க்கரசி அவர்கள் பஞ்சாக்ஷர மஹா மந்திரம் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றினார்.

சிவபெருமான், ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையை உலகுக்கு புரிய வைக்க திருநாவுக்கரசர் (அப்பர்) மூலம் ஒரு நாடகம் ஆடினார். ஜைன மதத்தை சார்ந்த திருநாவுக்கரசர் ஒரு சமயம் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படஅந்த நோயை எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியாமல் போக அவுருடைய சகோதரியின் உதவியால் (சகோதரி சைவ மதத்தில் பற்று நிரம்பியவர்.) திரு நீறு பூசி ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து வயிற்று வலி குணமாகி சைவ மதத்தை தழுவினார். 

நாவுக்கரசர் சைவ மதத்தை தழுவினார் என்று கேட்ட ஜைன மதத்தின் ராஜா, மகேந்தர பல்லவன் உடனே அவரை கைது செய்து பல வித கஷ்டங்களை கொடுத்து அவரை மதம் மாற்ற முயற்சி செய்தான். சிவ பெருமானின் கருணையுடன் நாவுக்கரசர் வெற்றி கண்டார்,  மிகுந்த கோபம் கொண்ட ராஜா, கடலில் அவரை இறக்கி அவருடன் ஒரு கல்லை கட்டி விட்டான்.  எல்லோரும் நாவுக்கரசர் இறந்து போய் விட்டார் என்று நினைத்தபோது அவர் ஐந்தெழுத்து மந்திரமான பஞ்சாக்ஷரியை ஜபித்து கடலில் கட்டிய கல்லோடு மிதந்தார். என்னே ஒரு அற்புதம்.

தேச.மங்கையர்க்கரசி இதை பற்றி சொல்லும்போது மஹா பெரியவாளின் அனுக்ரஹத்தால் நடந்த சுவையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். 

ஆந்திரா மாவட்டத்தில் ஏதோ ஒரு இடத்தில் சிவன் கோவில் கட்டுவதற்காக ஸ்தபதி சிலை வடிக்க அதை தூக்கி கோவிலுக்கு கொண்டு போக நினைத்தபோது அதை தூக்கவே முடியவில்லை. எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம். மனது மிகவும் வருந்தி அவர்களுக்கும், நம் எல்லோருக்கும் ஒரே வடிகாலான மஹா பெரியவாழிடம் வந்து கேட்டார்கள்.

பெரியவா, சில நிமிடங்கள் மெளனமாக இருந்து விட்டு, பக்கத்தில் இருந்த அணுக்கத் தொண்டரை அழைத்து ஸ்ரீ வைத்யநாத சாஸ்திரி என்பவரை திருச்சியில் ஏதோ ஒரு இடத்தில் இருந்து அழைத்து வரச் சொன்னார்.
அவர் வந்து மிகுந்த பவ்யத்துடன் மஹா பெரியாவளுக்கும் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து விட்டு நிற்க, பெரியவாள் அவர் காதில் ஏதோ சொல்லிவிட்டு, வந்த ஆந்திர பக்தர்களை கூப்பிட்டு, சாஸ்திரிகளை அழைத்துக்கொண்டு போகச் சொன்னார்.

சாஸ்த்ரிகள் அங்கு போய் தன்னுடையை அனுஷ்டானத்தை முடித்து ஜபம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். ஆந்திர பக்தர்களுக்கு ஆச்சர்யம். தமக்கு எதோ உபாயம் சொல்லப்போகிறார் என்று நினைத்தால் சாஸ்த்ரிகள் கண்ணை மூடி உட்கார்ந்திருக்கிறாரே என்று.  இருந்தாலும் மஹா பெரியாவளின் ஆசி பெற்ற சாஸ்திரிகளின் செய்கையில் ஏதோ இருக்கிறது என்று பவ்யத்துடன் பணி விடை செய்தார்கள்.   இதே போன்று 21 நாட்கள் கடுமையாக ஜபம் செய்தார் சாஸ்த்ரிகள்.

ஜபம் செய்து முடித்த சாஸ்திரிகள், அவர்களைக் கூப்பிட்டு இப்போது அந்த விக்ரஹத்தை தூக்கச் சொன்னார்.  என்ன ஆச்சர்யம. அந்த லிங்கம் இலவம் பஞ்சு போல் மிகவும் இலகுவாக தூக்க முடிந்தது.
ஆச்சர்யத்துடன் இதன் காரணத்தை சாஸ்திரிகளிடம் கேட்க, சாஸ்திரிகள்,  “எனக்கு ஒன்றும் தெரியாது. பெரியவா என்னை கூப்பிட்டு, இங்கு வந்து நியமமாக பக்தி ச்ரத்தையுடன் பஞ்சாக்ஷரி மந்திரத்தை 21 நாட்கள் ஜெபிக்கச் சொன்னார்” என்றார்.

தன்னுடைய தபோ வலிமையால், வெகு காலத்திற்கு முன் நாவுக்கரசர் செய்து காட்டிய ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையை, இப்போது செய்து காட்டி, நடமாடும் தெய்வம் என்ற ஒரு வார்த்தைக்கு எடுத்து காட்டாக விளங்கிய பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்.

Thursday, 30 June 2016

இசையோடு கலந்த இன்ப வெள்ளம் - ஆலத்தூர் சகோதரர்கள்



விரும்பிக்கேட்ட கச்சேரி.  திரும்பக் கேட்ட கச்சேரி- 26th ஜூன் 2௦16
எஸ் எல் நரசிம்மன் அவர்கள் concertopedia என்ற அமைப்பின் மூலம் அந்த காலத்து கர்நாடக இசைப் பாடகர்களின் கச்சேரியை, ஒரு ஹால் வாடைக்கும் எடுத்து, மெனக்கட்டு எல்லாருக்கும் இ-மெயில் மூலமாக தெரிவித்து, ஒரு ஆடியோ சிஸ்டம் அமைத்து, ஆப்பிள் LAPTOP கொண்டு வைத்துக்கொண்டு, அழகாக நடத்தி வருகிறார்.  ARKAY CONVENTION அரங்கத்தில் சத்தான சுமார் நாற்பது பேர்கள் அமர்ந்திருக்க ஒரு அருமையான கச்சேரியில் மனது கரைந்தது என்பது என்னமோ உண்மை தான்.
இந்த காலத்து தொழில் நுட்பம் அவருக்கு கை கொடுக்க, அந்த காலத்து கச்சேரிகளை தூசி தட்டி அனாவசியமான ஒலிகளை அகற்றி “லட்டு” மாதிரி காதுக்கு இனிமையாக தருகிறார். அந்தக்காலத்தில், இந்த கச்சேரிகளை நேரில் கேட்டவர்கள் இந்த CLARITY யுடன் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

இதற்காகவே அவருடைய தொப்பியில் ஒரு இறகு கூட வைக்கலாம். (One more feature in his cap).  சங்கீதத்தில் மிக ஆழமான ஈடுபாடு இருந்தால்தான் இப்படி மெனக்கட முடியும். ஸ்ரீ யஞ்ஜராமன் டிரஸ்ட் மூலமாக ஏற்பாடு செய்திருந்தார்.

மைலபூரில் இருந்தால் இது ஒரு சௌகர்யம். போன வாரம் மதுரை மணி அய்யர் அவர்களின் இதே போன்று ஒரு கச்சேரி கேட்க நேர்ந்தது. அது சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்து போன்றது என்றால், இதுவும் இன்னொரு சர்க்கரை பந்தல் இன்னொரு தேன் மழை. 

மதுரை மணி அய்யர் கச்சேரியில்  சுருட்டியின் “அங்காரகமாஸ்ரயாம்யஹமும்”, பைரவியின் “கொலுவையும்” பேகடாவின் “அனுதினமுவும்”, போறதாதிற்கு ரசிகர் விருப்பமாக “பாமாலைக்கு” என்னை வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு போக,

ஆலதூராரின் ரீதிகௌளையில் “சேரராவதேயும்”, கேதாரத்தில் “ராமா நீ பையும்”. தோடியில் “தாசுவும்” என்னை தூங்கவிடாமல் செய்தது.  முகாரியின் ‘”எந்தா நின்னே” அவர்களுடைய கிரீடத்தில் பதித்த வைரம்.
சரஸ்வதி வாக்கியக்கார டிரஸ்டின் செக்ரெடரி N V சுப்பிரமணியன் அவர்களின் “ஆலத்தூர் சகோதரர்கள்” பற்றிய பேச்சு, கச்சேரியை போல் அருமையாக இருந்தது என்பதும் உண்மை. கச்சேரி முடிந்தவுடன் இவர் பேசியதால், ஆலத்தூர் சகோதரர்களின் “சங்கீத பாரம்பர்யத்தை, அதன் வீச்சை” புரிந்து கொள்ள முடிந்தது.

இது போன்ற கச்சேரிகளில் ஒரு சௌகர்யம் உண்டு.  வேண்டாத வயலினை cut பண்ணிவிடலாம். தனி ஆவர்த்தனம் வேண்டாம். போறும் என்றால் நிறுத்தி விடலாம். பல வித கச்சேரிகளில் இருந்து best kritis எடுத்துப் போடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக பாடியாவர்களுக்கு“பணம்”தரவேண்டாம்.

இந்த சகோதரர்களைப் பற்றி சில விஷயங்களை சொல்லியே அக வேண்டும். திருவையாறு தியாகராஜ ஆராதனை யில் 192எட்டில் ஆரம்பித்த அவர்களுடைய இசைப்பயணம் 1939 ல் MUSIC அகாடெமியில் வளர்ந்து பல வித பரிமாணங்களைத் தொட்டது.

1964- மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருது சுப்பையருக்கு கொடுக்க வந்தபோது, சுப்பையர் அதை வாங்க மறுத்ததோடு ஸ்ரீ நிவாச அய்யருக்கும் சேர்த்து கொடுக்க வேண்டும் ஏன்று நிர்பந்தித்தார். அந்த காலத்தில் சகோதரர்களுக்கு சங்கீத கலாநிதி கொடுக்கும் வழக்கம் இல்லை என்பதால் இந்த பிரச்னை. சுப்பையர் மேலும், அப்படி இல்லை என்றால் அடுத்த வருடம் இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.  ஸ்ரீனிவாச அய்யர் வயதில் பெரியவர் என்பதால் அவருக்கு முதலில் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய, அதை ஸ்ரீ நிவாச அய்யர், சுப்பையருக்குத்தான் முதலில் கிடைக்க வேண்டும் என்று அடம் பிடித்து வாங்க மறுத்தார்.  சுப்பையரின் தந்தை வெங்கடேச அய்யர் படத்தின் முன் சீட்டு குலுக்கி போட்டதில் சுப்பையரின் பெயர் வந்தது. அடுத்த வருடம் ஸ்ரீனிவாச அய்யருக்கு கொடுக்க வேண்டும் என்ற உத்தரவாதத்துடன்.  (தேங்க்ஸ் டு தஞ்சாவூரான் இன் ரசிகாஸ்.org)

ஆடுத்த வருடம் ஸ்ரீனிவாச யாருக்கு கொடுக்கும் போது, சுப்பையர் உயிருடன் இல்லை.என்பது உண்மையான சங்கீத சோகம்.

என்னுடைய தந்தையாருடன்.ஆலத்தூர் சகோதரரகளைப் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது.  என் தந்தை மதுரை சோமுவின் பரம ரசிகர். இருந்தாலும் அவர் அந்த காலத்து வித்வான்களிடம் வைத்து இருந்த மரியாதை மிகவும் உசத்தியானது. அவர் சொலும்போது அந்தக்காலத்தில் தனித் தனியாக ரசிகர்கள் இருந்தார்கள்.  சோமுவுக்கு என்று ஒரு கூட்டம். GNB க்கு என்று ஒரு கூட்டம். அதே போல் ஆலத்தூர் சகோதரர்களுக்கு என்று ஒரு கூட்டம் இருந்தது  ஒவ்வொரு கூடத்திலும் இருப்பவர்கள் அசகாய சூரர்களாக இருப்பார்கள்.  அந்த கச்சேரியை அக்குவேறு ஆணி வேறு என்று விமர்சனம் செய்வதில் சமர்த்தர்கள்.

Interestingly,  Srinivasa Iyer’s son, Mr.S.Thyagarajan was working as Principal of National College, Trichy where my father worked as Vice Principal.   Both of them are thick friends even now. 
என்னுடைய தந்தை எஸ். தியாகராஜன் அவர்களைப் பற்றிச் சொல்லும்போது, அவர் சொன்னதாகச் சொல்லுவார் “எனக்கு பாட்டு வராததிற்கு காரணம் என்னுடைய தந்தை சிஷ்ய பரம்பரையை வளர்க்காதது தான்.” என்றார்.  திருச்சியில் இருந்த மிகப் பெரிய தந்தையின் வீட்டை குடும்பச் சந்தையில் பிரிக்க நேர்ந்ததை நினைத்து இன்றும் வருதப்பட்டுக்கொண்டிருக்கிறார்”. என்பதும் ஒரு சோகம்.
என் வீ சுப்ரமணியம் அவர்களின் பேச்சின் சில பகுதிகளைக் கேட்டாலே ஆலத்தூர் சகோதர்களைப் பற்றி பல விஷயங்களை புரிந்து கொள்ள முடியும் அதனால், முதலில் இதைப் பாப்போம்..
-     
      19th Century யில் கர்னாடக சங்கீதம் ஒரு தனி விதமாக இருந்தது. அப்போது ராகம் தானம் பல்லவி தான் பிரதானம். தியாகராஜ கீர்த்தனைகள் துக்கடாவாக பாடப்பட்டன.  வர்ணம், ராகம் தானம் பல்லவி தான் முக்கியமாக இருந்தது.

-        20th century யில் தான் கீர்த்தனைகளுக்கு மதிப்பு கொடுத்து பாடத்தொடங்கிய காலம்.  So, composition music started only in 20th century beginning, and 19th century end. அதனால் கீர்த்தனைகளை பிரதானமாக பாடுவதற்கு சில எதிர்ப்புகள் கூட இருந்தது.  மேலும் இந்த கீர்த்தனைகளை ஸ்வரப்படுத்தி ஒரு கச்சேரிக்கு வாகாக கொண்டு வருவது என்பதும் ஒரு CHALLENGE என்றே சொல்லலாம்.  அதற்கு முக்கிய பங்கு வகித்தவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் (ARi).
-     
அதன் பிறகு பட்டமாள் ஸ்கூல் என்று ஒன்று உருவாயிற்று.  பட்டம்மாள் ஸ்கூல் என்றால் authentic. அப்போது எந்த ஒரு கீர்த்தனையும் முறையாக பாடாந்திரம் செய்ய வேண்டும் என்றால் பட்டம்மாள் ஸ்கூல் தான் முன்னோடியாக் இருந்தது. அதனால் பாடாந்திரம் மிக முக்கியம் என கருதப்பட்ட காலம். 

ஆலத்தூர் சகோதரர்கள் அவ்வாறாக பாடாந்திர சுத்தம் personified.

Excellence in singing, innovative outpour are two different factors of a singing pattern.
Alathur brothers music is excellence in singing wherein GNB’s singing is innovative outpour.  

இவர்களின் சங்கீதத்தில் ஒரு உண்மை இருக்கும். frankness. சங்கீதத்திற்கு, அந்த மேடைக்கு அவர்கள் கொடுத்த மரியாதை அலாதியானது.  ரசிகர்களுக்காக அவர்களுடைய ரசனைக்காக தன்னுடைய மேடை தர்மத்தை அவர்கள் விலை பேசியதில்லை.

Alathur பாணி became a Standard reference like pattammal school and so, they were double careful as to maintain the பாணி and not to truncate the kriti and bring the full “bhAvam” of the kriti.  They were particular not to face the wrath of Thyagaraja by singing it improperly.

அவர்களுடைய கச்சேரியை கேட்டு முடித்து வெளியில் வரும்போது முழு திருப்தியுடன் வரலாம்
-    
     மறி மறி நின்னே- காம்போதியில் தியாகராஜ கிருதி இவர் பாடாந்தரம் போல் எங்கும் கிடையாது.  ஆணித்தரமான ஒரு உண்மை.

-   ஜாம்பவான்களான GNB, MADURAI MANI IYER, ARI, FLUTE MALI இருந்த காலத்தில் இவர்கள் ENTRY ஆனதால் தனக்கென்று ஒரு இடம் பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

- 
b இரட்டையர்கள் பாடுவது அந்தக்காலத்தில் புதிது என்பதால்.இந்த பரீக்க்ஷார்த்த முயற்சியில் பல வித சோதனைகளை சந்திக்க வேண்டி இருந்தது.

- பழனி சுப்ரமணியம் பிள்ளையுடன் ஆலத்தூர் சகோதரர்கள் செயத கச்சேரிகள் மிகவும் உசத்தியானது.  Unobstrusive playing.  Later on  Sri.Vellore Ramabhadran.

-         பல்லவி பாடும் திறமை, திருப்புகழில் அவர்களுக்கு இருந்த ஒரு பற்று.
திருப்புகழை தனியாக ஒரு கச்ச்ரியாக நான்கு மணி நேரத்திற்கு பாடி இருக்கிறாகள். திருப்புகழின் சந்ததம் பிசகாமல் மாறாமல் அடுமையாக பாடுவதி வல்லவர்கள்.

சீரியஸ் மியூசிக் கேட்க வேண்டுமென்றால் பட்டம்மாள் ஸ்கூல் அல்லது ஆலத்தூர் ஸ்கூல்.என்று அந்தக் காலத்தில் வரையறுக்கப் பட்டிருந்தது.

மீண்டும் இப்படி ஒரு அருமையான கச்சேரியை கேட்ட்டதற்கு கேட்கவைத்ததிற்கு எஸ். எல்.நரசிம்ஹானுக்கு ஒரு –oh- போடலாம்