என்று அருணகிரிநாதர்,
வல்லக்கோட்டை முருகனை துதித்துப் திருப்புகழ் எழுதி இருக்கிறார்.
இந்தக் கோவில் கும்பாபிஷேகம் ஆகி இன்று ஒரு வருடம் பூர்த்தி ஆகிறது. சம்வத்ஸரம். அதனால் கோடை நகர் முருகனைப் பற்றி......
இது சென்னையில் இருந்து ஸ்ரீ பெரும்புதூர்,- படப்பை, ஓரகடம் வழியாகச் செல்லும்போது, வழியில் அழகான பெரிய “போர்டு” உங்களை வரவேற்கும். கொஞ்சம் உள்ளே போனால்.... கோவில்
1500 வருட ஸ்தலம். வேலுக்கு மட்டும் தனியாக ஒரு சந்நிதி உண்டு.
அற்புதமான கோவில். மூலவர் மிகவும் உயரம். ஒரு ஏழு அடி இருக்கும். வளர்ந்து கொண்டே இருக்கிறார். நான் நினைப்பதுண்டு. குருக்கள் “நேர் முகத் தேர்வு” பண்ணும்போது, ஆகம விஷயங்களைத் தவிர, உயரத்தையும் பார்க்கவேண்டும் என்று. தலைக்கு மேல், "அயம் மே ஹஸ்தோ பகவான்" எல்லாம் பண்ண முடியாது
ஆறு முகங்களோடு, என்கண்
மாதிரி ஒரு மூலவரும் உண்டு
“யாமிருக்க பயமேன்” என்று
அபய ஹஸ்ததைக் காட்டி, முருகன் சொன்ன இடம் இதுதான் என்று ஒரு அற்புதமான சரித்திரம்
உண்டு
வள்ளல் என்ற அசுரன், மிக
அதிக வரங்களைப் பெற்று, தேவர்களைத் துன்பப்படுத்த, அவர்கள், முருகனிடம் முறையிட,
அவர் இந்த அரசன்/அசுரனை அழித்துக் கோட்டையை’ கைப்பற்றிய இடம் தான் வல்லக் கோட்டை. இன்னொரு சரித்திரமும் உண்டு.
அருணகிரியார் மைலாபூரிலும்
பாடி இருக்கிறது. எப்படி போனார் என்று தெரியாது, இங்கும் பாடி இருக்கிறார்.
திருப்போரூரில் இருந்து,
திருத்தணி போகும் வழியில் உள்ளது. அருணகிரிக்கு வல்லக் கோட்டை வா ! என்று முருகன்
கனவில் சொன்னதாக ஒரு வரலாறு உண்டு
மூலவருக்கு எதிரில் இரண்டு மயில்கள் இருப்பது ஆச்சர்யம். இதைப் பற்றி அங்கு இருந்த குருக்களிடம் கேட்ட போது- “அசுரர்களை அழித்துக் காப்பது என்ற தொழிலையும், பக்தர்களை காத்து, அருளுவது என்ற இரு செயலையும் ஒன்றாகச் செய்பவர். ஒரு மயில் கொஞ்சம் உக்ரமாக இருக்கும், அது அசுர வதம், இன்னொன்று சாந்தமாக இருக்கும் – பக்த சம்ரக்ஷணம்”
நான் கண்ட இன்னொரு விஷயம்,
மூலவர் மிகவும் அருகில். நாம் கோவிலுக்குப் போனோம் என்றால், மூலவர் எங்கோ உள்ளே
இருப்பார். கற்பபூரம் காட்டும்போதுது
கொஞ்சம் முகமும், பாதமும் தெரியும். இங்கு
மூலவர் கிழக்கு நோக்கி இருப்பதாலும், நல்ல வெளிச்சம். பெரிய விக்ரஹம் ஆதலால்
ஆனந்தமாக அபிஷேகமோ, தீபாரதனையோ மிக அருகில் பார்க்கலாம்
பாதிரி மரத்திற்க்குக் கீழே, இந்த திருவிளையாடல் புரிந்த முருகன்.
அருணகிரிநாதர், சென்னை வாழ்
மக்களின் “பரிதாப” நிலையைப் புரிந்துகொண்டு ஒரு எளிமையான திருப்புகழ் ஒன்று பாடி
இருக்கிறார். அவர் சொல்கிறார்
“அம்மாவின் உடலில் இருந்து கஷ்டப்பட்டு
பிறந்து
ஆசையுடனே பிறந்து, நேசமுடனே
வளர்ந்து, அழகான ஆண் மகனாகி,
உலகம் முழுது சுற்றி,
கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டிகளை பெற்று, போதும் போதும் என்று பணம் சேர்த்து –
இதே மாதிரி – “போகமதிலே
உழன்று பாழ் நரகு எய்தாமல் உந்தன் பூ அடிகள் சேர அன்பைத் தருவாயே” என்று எச்சரிக்கிறார் !!!”
இது ஒரு பாதி
அடுத்த பாதி= திருமால்,
சிவன், அம்பாள் அவருடைய வீரம் என்று திருப்புகழை முடிக்கிறார்.
திருப்புகழைப் படித்தால் –
எல்லா கடவுளையும் ஒரு சுற்று வரலாம் என்பதற்கு உதாரணம் சொல்லும் – இன்னொரு திருப்புகழ்
இதை மாயா மாளவ கௌளையில்-
ஸ்ரீ ராகவன சார் ;பாடியிருக்கிறார். Kaumaaram.com ல் கேளுங்கள். கண்களில் கண்ணீர் வரும்.
இதில் இன்னொரு ஆச்சர்யமான
விஷயம். அன்னதானம். “பக்கத்தில் “RENAULT கம்பெனி” தன்னுடைய CSR பணத்தின் மூலமாக, ஒரு அன்னதானக் கூடம் கட்டி, பாத்திரங்கள்
வாங்கி, நிரந்தரமாக சமையர்காரர்களை போட்டு, நித்யம் அவர்கள் செலவில் அன்னதானம்
செய்கிறார்கள்
No comments:
Post a Comment