கண்ணனை என்னன்னெமோ சொல்லி
அழகு பார்த்துவிட்டார்கள். தோழி தூது,
காற்று தூது, வண்டு தூது என்று என்று வேறு பல தூதுகள். கண்ணன் ஒன்றும் மஸிகிரமாதிரி தெரியவில்லை
கிருஷ்ணன்
எனக்குத்தான் சொந்தம் என்று கோபிகைகள் சண்டை வேறு. உத்தவர் பார்த்து அசந்த அந்த
கோபிகைகளின் பக்தி பற்றி அதிகம் சொல்லியாகிவிட்டது.
பிதாமகர்
செம்மங்குடி மாமா பாடிய காபி ராக “பருலனமாட” என்ற ஜாவளி யைக் சமீபத்தில் கேட்க
நேர்ந்தது. ஜாவளி இன்று நடனம் ஆடக் கூடிய
வகையில் அமைந்த பாட்டு. வீணை தனம்மாள் அவர்கள் இதில் வித்தகி.
இந்தப்
பாட்டு பாடி யூ டியூபில் இருக்கிறது. செம்மங்குடிக்கு ஒரு எண்பது வயது இருக்கும்.
அசந்து போன ராக ஆலாபனை. அந்த பாடலின் முன்னே கிருஷ்ண கர்ணாம்ருதம் த்தில் இருந்து
ஒரு ஸ்லோகம் பாடினார்.
அந்த
ஜாவளியே மிக அழகான அர்த்தம் கொண்டது. “கிருஷ்ணா யாராவது உனக்கு மயக்க மருந்து
கொடுத்து விட்டார்களா... மிகவும் வாடியிருக்கும் உன் முகம் எதனால். ? யார் பேச்சையும் கேட்காதே. என்னிடம் வந்து
விடு... என்பது போல் போகிறது....அந்தப் பாடல்.....
இப்பொது
அந்த ஸ்லோகத்தைப் பற்றிதான் இந்தப் பதிவு.
“ஆயி
முரளி முகுந்த ஸ்மேர...” என்று தொடங்கும் வரிகள். இதன் அர்த்தம்
“ஏ
புல்லாங்குழலே, உனக்கு கிருஷ்ணனின் சுவாசத்தின் இனிமை புரியும். அந்த புன்சிரிப்புடன்
கூடிய, தாமரை மலரையொத்த அந்த
மிகவும்
அழகான பு.வி.தூ..... (தலைப்பு)
நாராயண
தீர்த்தர், தன் பாடலில் (கோவிந்த மிஹ) மின்னும் உதட்டில் இருந்து வரும் அந்த
புல்லாங்குழல் இசை நம்மை மயக்குகிறது... என்கிறார். இந்தப் பாடலை, பாகேஸ்ரீ ராகத்தில் அமைத்தது
பிதாமகர் தான்....
புல்லாங்குழல்
கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் என்கிறார்.
கண்ணதாசன்....
ஊட்த்துக்காடாரின்
பாடல்கள் தான் எத்தனை எத்தனை.
கிருஷ்ணன்
நமக்கு சந்தோஷம்.....
No comments:
Post a Comment