Thursday, 31 January 2013

karmA- Nice Article in Tamil

பலர் கர்மா என்ற சொல்லையோ அதன் விளக்கத்தையோ புரிந்து கொண்டிருந்தாலும்,


அன்றாட வாழ்வியலில் அதன் பொருளை உணர்வதில்லை.



தனக்கு மிகவும் நெருங்கிய உறவொன்றை இழந்த நண்பர் ஒருவர் கதறினார் -

"எனக்கு மட்டும் இறைவன் ஏன் இப்படி செய்கிறான், நான் என்ன பாவம்

செய்துவிட்டேன்..." என்று.



ஆக்கமும், நடத்தலும், நீக்கலும் அவன் செயல்தான் என்றாலும், ஒருவருடைய

கர்மாவினை இறைவன் நிர்ணயிப்பதில்லை. ஒருவருக்கு உடலில் புற்று நோய் வந்து

உடல் மெலிந்து போகவும், இன்னொருவர் திடகாத்திரமான உடல் கட்டுடன்

விளையாட்டு வீரராக புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும் என்றும் எங்கிருந்தோ

இறைவன் நிர்ணயிப்பதில்லை. எப்படி அவரவர் செய்யும் உடற்பயிற்சிக்கு

ஏற்றவாறு அவர் உடற்கட்டு அமைகிறதோ, அதுபோல, உங்கள் ஆத்ம சக்தியினை எந்த

அளவிற்கு நீங்கள் பயற்சியில் ஈடுபடுத்துகிறீர்களோ, அதற்கேற்றாற்போல்

உங்கள் கர்மாவும் அமையும்.



இன்னமும் சொல்லப்போனால், கர்மாவே உங்களுக்கு ஒரு ஆசானாக ஆக்கிக் கொள்ள

முடியும். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம் கருமமே கட்டளைக்கல்லெனத்

தெளிதலும், எக்கருமம் எந்த விளைவினை ஏற்படுத்தும் என்னும் அனுபவ அறிவும்,

இருந்தால், அதுவே அவரவர்க்கு கீதா உபதேசம்.



கர்மா என்பது தலைவிதி அல்ல. அது முன்பே நிர்ணயிக்கப்பட்டது அல்ல. மேலே

இருந்து கொண்டு எந்த ஒரு கிரகமோ, நட்சத்திரமோ, ஏன் கடவுளே கூட, இந்தா,

பிடி, உனக்கு இந்த கர்மா என்று வழங்குவதில்லை. நம் வாழ்வில் நடக்கும்

எந்த சம்பவத்தையும் இறைவன் முன்பாகவே தீர்மானிப்பதில்லை. இன்னும்

சொல்லப்போனால், இறைவன் நமக்கு எந்த சோதனையும் கூட தருவதில்லை.



நம் கர்மாவினை நாமே தீர்மானிப்பதால், என்ன செய்தால் நல்ல கர்மா கிட்டும்?

எவ்வாறு கர்மாவினை மேலாண்மை செய்யலாம்?. இதோ, உலகப்பொது மறையில் இருந்து

பத்து மேலாண்மை முத்துக்கள்:



1. பதிலடி கொடுக்கத் தேவையில்லை. பதிலடி கொடுப்பதால், புதிய கிளைக் கர்மா

உருவாகிட வழி வகுக்கும். அகத்தாய்வு செய்யின், அதற்கு அவசியமே இல்லை

என்பதறிவீர்.

மறத்தல் வெகுளியை யார்மட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும். (303)



2. நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ளவும். தீமை விளையும் போது, அதற்கு

காரணமானவரை பொறுப்பாக்குவது இயற்கை. ஆனால், நன்மையும் தீமையும் மற்றவரால்

வருவதல்ல, அதற்கு அவர் ஒரு கருவி மட்டுமே உணரவும். ஏனெனில்,



நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

அல்லற் படுவ தெவன் (379)



3.மறப்போம், நன்மை செய்வோம். தனக்கு தீமை செய்தவரின் மேல் சினம்

கொண்டால், அந்த சினத்தின் விளைவால், அடி மனது எப்போதும் கனன்று கொண்டே

இருக்கும். ஆனால் அதை மறந்து, நன்மை செய்யும்போது, அதுவே நல்ல கர்மாவாக

திரும்பும்.



இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல். (314)



4. விளைவுகளை யோசிக்கவும். இன்னொருவருக்கு துன்பம் விளைவித்தல் எளிது.

அதன் விளைவு தனக்குத்தான் கர்மாவாக வந்து முடியும் என்ற அறிந்தவர்,

அதனாலாவது, மற்றவர்க்கு துன்பம் தராமல் இருப்பர்.



நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர். (320)



5. தீவினை வேண்டாம். இன்னொருவரின் துன்பமும், தம் துன்பம் என்று

கருதினால், தீவினைகளை தவிர்க்கலாம்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை. (315)



6. இறையருள் நாடவும். நீங்கள் தனிமரமாய் உங்கள் கர்மாவினை தூக்கிக்

கொண்டு திரிய வேண்டியதில்ல. எல்லா வளமும் அருள காத்திருக்கிறான், எல்லாம்

வல்லவன். அவன் அருளை நாடினால், ஏற்கனவே செய்த வல்வினைகளை தகர்த்திடும் மன

உறுதியும், தூய செயல் ஆற்றலும் கிட்டும்.



வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. (4)



7. ஏற்கனவே இருக்கும் கர்மாவை குறைக்க/தீர்க்க முயலவும். ஒருவர்

அறவழிகளில் தொடர்ந்து நடந்து வந்தால், ஏற்கனவே செய்த தீவினைகளால்

வரப்போகும் துன்பமும் குறைந்து விடும்.



ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல். (33)



8. அறவழியில் நடந்து நல்ல கர்மாவினை சேர்க்கவும். ஏனெனில்,



வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல். (38)



9. எந்த சமயத்திலும் யாரையும் இழிவு செய்ய வேண்டாம். ஏனெனில்,



எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை. (317)



10. அகத்தேடல் எனும் அருந்தவத்தில் ஈடுபடவும்.

அகம் ஒளிரும் நிலை பெற்றிட, உள்ளார்ந்து, உள் மனதில் இறைவனின்

பிம்பத்தினை தேடுவர். அவர் நற்சிந்தனையுடன் செயல்பட்டு தமது கர்மா

முழுதும் தீர்த்திட, பிறவிப் பெருங்கடலை கடந்திட அருள் பெறுவர்.



சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோக்கிற் பவர்க்கு. (267)



மொத்தத்தில் நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும்.



இதில் இறைவனின் பங்கென்ன என்று கேட்டால், இறைவனை வேண்டி நிற்பதனால்,

கர்மாவில் குறுகிட்டு அதை குறைப்பதிலோ, அல்லது தற்காலிகமாக தள்ளிப்போடவோ

அவனால் இயலும். சரி, நல்ல கர்மாவையே ஒருவர் பெரிதும் சம்பாதித்து

வைத்திருக்கிறார் என்றால், அவருக்கு இறைவனின் துணை தேவையில்லையா என்று

கேட்கலாம். அப்படிப்பட்ட ஒருவருக்கு, இறைவன் இன்னொன்றாக இருக்காது. அவர்

ஆன்மீகவாதியாக இருப்பாரென்றால் தான் நடக்கும் அவன் வழியே அற வழி என்பார்.

எங்கெங்கும் நிறைந்தவன் இறைவன் என்று எல்லாவற்றிலும் இறைவனைப் பார்ப்பார்

அவர். ஆன்மீகத் தேடலில் அடிஅடியாய் எடுத்து வைத்து, தம் ஆத்ம சக்தியினை

வளர்த்துக் கொண்டவருக்கு, மொத்த கர்மாவும் எளிதில் தீர்ந்திடும்.

மறுபிறவி இல்லா நிலையும் வாய்க்கப் பெற்றிடும்.



ஜோதிடமும் கர்மாவினால் இப்படி நாம் நடக்கலாம் என்பதை, கோள் மற்றும்

நட்சத்திர அமைப்புகளின் உதவியுடன் கணித்துச் சொல்வதுதான்.



நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த

கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு

தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்

தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

Monday, 14 January 2013

உங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா?

சங்க காலத்தில் "தை நீராடல்", "பாவை நோன்பு" என்றெல்லாம் அழைக்கப் பட்டது பொங்கல் பண்டிகையாக இருக்கலாம் என்பது சிலர் கூற்று. ஏனெனில் நல்ல மழையையும், விளைச்சலையும் காண்பதற்காகவே இயற்கை அன்னையை, பூமித்தாயைப் போற்றிக் கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர். சாண உருண்டையைப் பிள்ளையாராகக் கருதுவார்கள் என்பதை ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம். இந்தச் சாண உருண்டையை ஒரு சிலர் வரட்டியாகத் தட்டிப் பொங்கல் அன்று அடுப்பு எரிக்கப் பயன்படுத்துவதாகவும், மற்றும் சிலர் வழக்கப்படி சாண உருண்டைகள் சேகரிக்கப் பட்டு, பொங்கலுக்கு மறுநாள் ஒரு கூடையில் அவற்றைப் போட்டுக் கொண்டு சிறு குழந்தைகள் ஒன்று கூடிக் கிளம்புவார்கள். வீடு வீடாகச் சென்று கும்மியடித்துப் பாடிக் காசுகளை வாங்கிக் கொண்டு அதில் பொரிகடலை, நாட்டுச் சர்க்கரை வாங்கிக் கூடைப் பிள்ளையாருக்குப் படைத்துவிட்டுப் பின்னர் ஊர்ப்பொது வாய்க்காலில் அந்தச் சாண உருண்டைகளைக் கரைப்பார்கள். இந்த வாய்க்காலில் கரைக்கப்படும் சாணம் எருவாகி, ஊரின் நிலங்களுக்கு நீர் பாய்கையில் பயிர்களைச் செழிப்பாக வளர வைக்கும் என்பது நம்பிக்கை.


ஒரு மாதம் கோலத்தில் வைத்த சாணப்பிள்ளையார் அந்த மாதம் முழுதும் சுவரில் காய்ந்து கொண்டு இருப்பார். ஆனாலும் வாய்க்காலில் கரைக்கையில் சிறு குழந்தைகளுக்குத் துக்கம் தாங்க முடியாமல் அழுகை வந்துவிடும். அப்போது அவர்கள் பாடும் கும்மிப் பாடல் கீழ்க்கண்டவாறு:

வட்ட வட்டப் பிள்ளாரே, வாழக்காயும் பிள்ளாரே

உண்ணுண்ணு பிள்ளாரே ஊமத்தங்கா பிள்ளாரே

வார வருசத்துக்கு வரவேணும் பிள்ளாரே

போன வருசத்துக்குப் போயி வந்தீர் பிள்ளாரே

வாடாம வதங்காம வளத்தினோமே பிள்ளாரே

வாய்க்காலு தண்ணியிலே வளர விட்டோம் பிள்ளாரே

சிந்தாம சிதறாம வளத்தினோமே பிள்ளாரே

சித்தாத்துத் தண்ணியிலே சிந்துறோமே பிள்ளாரே

போய் வாரும் போய் வாரும் பொன்னான பிள்ளாரே

வர வேணும் வர வேணும் வருசா வருசம் பிள்ளாரே

என்று பாடி ஆடிக் கொண்டு பிள்ளையாரை வழியனுப்பி வைப்பார்கள்.

பொங்கல் பண்டிகையை மூன்று நாட்கள் கொண்டாடுவது நம் மரபு. முதல்நாளை போகி என்னும் "பழையன கழிதல்" நடைபெறும். ஊர்ப் பொதுவில் ஓர் இடத்தில் அவரவர் வீட்டுப் பழைய பாய், கூடைகள், முறங்கள் போன்ற இயற்கையான நாரினால் செய்யப் பட்ட பொருட்களைப் போட்டு எரிப்பார்கள். இப்போது போல் அப்போது ப்ளாஸ்டிக் குடங்களோ, ப்ளாஸ்டிக் பாய்களோ கிடையாது. மக்கள் இயற்கையாய்க் கிடைக்கும் நார்களில் இருந்தும், பூமியில் கிடைக்கும் மண்ணிலிருந்துமே பாத்திரங்கள், பாய்கள், படுக்கைகள் செய்து பயன்படுத்தினார்கள். இவற்றை எரித்துப் புதியதாய்ப் பொங்கலுக்கு வாங்குவார்கள். இந்த வழக்கம் இன்று ரப்பர், ப்ளாஸ்டிக், தெர்மாகோல், பாலிதீன் பைகள் போன்றவற்றைப் போட்டு வலுக்கட்டாயமாய் எரித்து மூச்சு விடத் திணறும் அளவுக்குப் புகைமண்டலத்தை எழுப்பும் வழக்கமாக ஆகி விட்டது. அதோடு முன்பெல்லாம் கிராமங்களில் இந்தப் பழைய பொருட்களைப் போட்டு எரிக்கும் தீயிலிருந்தே நெருப்பு எடுத்துப் போய்ப் பொங்கல் பானைக்கு அடுப்பு மூட்டும் வழக்கமும் இருந்து வந்தது.

பொங்கலுக்கு முதல் நாளே வீடு சுத்தம் செய்யப் பட்டுப் பொங்கல் பானை வைக்கும் இடம் நல்ல பசுஞ்சாணத்தினால் சுத்தம் செய்யப்படும். சாணத்தினால் மெழுகுவார்கள். அவரவர் வழக்கப்படி அரிசி மாவினால் கோலம் போடுவார்கள். ஒரு சிலர், அடுப்பு வைக்கும் இடத்திலேயே சூரியன், சந்திரன் போலக் கோலம் போடுவார்கள். சில வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் இடத்தில் சூரியன், சந்திரன் போல் கோலம் போடுவார்கள். இது அவரவர் வீட்டு வழக்கத்தை ஒட்டியே வரும். மனித மனத்தின் முக்கிய மூன்று கரணங்கள் ஆன மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை நினைவு கூரும் விதமாக மூன்று கற்கள் முக்கோணமாய் வைக்கப்பட்டதாய்த் தெரிய வருகிறது..முக்கரணங்களின் உதவியால் தெய்வீகமான பாலைப் பொங்க விட்டு, ஆத்ம ஞானமென்னும் பொங்கலைப் பெறலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதே இதன் முக்கிய தத்துவமாகவும் அறிகிறோம்.

பொங்கல் வைக்கப் போகும் பானை ஒரு சிலர் புத்தம்புதியதாக வாங்குவார்கள். மண் பானை இல்லாமல் வெண்கலமாய் இருந்தாலும் சில வீடுகளில் புதிய பானை வாங்குவது வழக்கம். மற்றபடி சென்ற வருடங்களில் உபயோகித்த வெண்கலப் பானையையே நன்கு சுத்தம் செய்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் தடவி, மஞ்சள் கொத்துக் கட்டிப் பாலும் நெய்யும் சேர்த்து வீட்டில் இறைவனை வழிபடும் பூஜை இடத்தினருகே வைத்து வழிபட்டுப் பின்னர் அடுப்பில் நல்ல நேரம் பார்த்து ஏற்றுவார்கள். சூரியன் மகர ராசியில் நகர ஆரம்பிப்பதால் மகர சங்கிராந்தி எனவும் அழைக்கப்படும் இந்தப் பொங்கல் பண்டிகையில் பொங்கல் வைப்பதை சங்கராந்தி காலம் ஆரம்பிக்கும் தை மாசம் பிறக்கும் நேரத்தில் செய்வதைச் சில வீடுகளில் வழக்கமாய்க் கொண்டிருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் இந்த வருடம் காலை ஒன்பது மணிக்கு மேல் பத்தரைக்குள் பொங்கல் வைக்க நல்ல நேரம் எனச் சொல்கின்றனர்.

சூரியன் தெற்குத் திசையிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதையே மகர சங்க்ரமணம் அல்லது உத்தராயண புண்யகாலம் என்கிறோம். பொங்கல் பொங்கி விட்டு அன்றைய தினம் விளையும் எல்லாக் காய்களையும் போட்டுக் குழம்பு வைப்பது பல வீடுகளில் வழக்கம். பொதுவாக இதற்கு நாட்டுக்காய்களான, கத்திரி, வாழை, சேனை, பூஷணி, பறங்கி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, அவரை, மொச்சை, கொத்தவரை, சிறு கிழங்கு, பெருகிழங்கு போன்றவையே பயன்படுத்துவார்கள். காலப் போக்கில் இன்றைய பழக்கத்திற்கு ஏற்ப ஒரு சிலர் உருளைக்கிழங்கு, காரட், பீன்ஸ், செளசெள போன்றவையும் தக்காளியும் சேர்க்கின்றனர். இனிப்பான பொங்கலை உண்பதற்குக் காரமான குழம்பு தான் தொட்டுக்கொள்ள உதவும் என்று மட்டுமில்லாமல், இறைவனுக்கு நிவேதனமாகவும் படைப்பதால் பூமியில் விளையும் அனைத்தும் அவன் அருளால் கிடைத்தது என்று நன்றி கூறும் விதமாகவும் இதைச் செய்கின்றனர். மண்ணின் அடியில் விளையும் கிழங்குகள், மண்ணின் மடியில் படரும் கொடிகளின் காய்கள், செடிகளின் காய்கள், மரங்களின் காய்கள் என அனைத்து வகைக்காய்களும் இந்தக் குழம்பில் இடம் பெறும். பின்னர் அந்தக் குழம்பை தினம் தினம் சுண்ட வைத்துக் கொஞ்ச நாட்களுக்குச் சாப்பிடுவதுண்டு.

பொங்கல் நிவேதனத்தில் பயன்படும் மஞ்சள் கொத்து மங்கலத்தையும், தோகையுடைய கரும்பு இனிப்பையும், இஞ்சிக் கொத்து காரத்தையும், வெற்றிலை, பாக்கு துவர்ப்பையும் கொடுக்கின்றன என்பதால் இந்தச் சுவைகள் அனைத்தும் வாழ்வில் இடம் பெறும் என்பதையும் கூறாமல் கூறுகிறது. தமிழ் நாட்டில் உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்றெல்லாம் அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, மற்றச் சில மாநிலங்களில் மகர சங்கிராந்தி எனவும், லோகிரி எனவும், மஹாபிகு எனவும் அழைக்கப்படுகிறது. விவசாயிகள் அவர்கள் விவசாயத்துக்குப் பயன்படும் அனைத்துப் பொருட்களையும் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுவார்கள். ஏர்க்கலப்பை, கருக்கரிவாள், மரக்கால், உழக்கு, கூடை முறங்கள், களைக்கொட்டு,மண்வெட்டி, கடப்பாரை போன்ற பொருட்கள் இதில் அடங்கும். ஆந்திராவில் பொங்கல் சமயத்தில் பொம்மைக்கொலு வைப்பார்கள் என்றும் தெரிய வருகிறது. குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் அன்று பட்டம் விடும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். மேலும் எள், வேர்க்கடலை ஆகியவற்றில் வெல்லம் சேர்த்து உருண்டைகளாகவோ, வில்லைகளாகவோ செய்து ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வார்கள். இதன் மூலம் ஒருவருக்கொருவர் அன்பு வலுப்படும் என்பது அவர்கள் நம்பிக்கை.



நிலைப்படிகளை நன்கு கழுவிக் கோலம் போட்டு மாவிலைக்கொத்துகளாலும் வேப்பிலைகள், பூளைப்பூ போன்றவற்றால் தோரணங்கள் கட்டித் தொங்க விடுவார்கள். வாசலில் சூரியனுக்கு வழிபாடு நடப்பதால் பெரிய தேர்க்கோலம் ஒற்றைச் சக்கரத்தோடு போடுவார்கள். ஒரு சிலர் வாசலிலேயே வடக்கே சூரியனின் உருவத்தையும், தெற்கே சந்திரனின் உருவத்தையும் வரைவார்கள். தீஞ்ச தீபாவளி,(வெடிகள் வெடிப்பதால் தீய்கிறது அல்லவா) காஞ்ச கார்த்திகை(கார்த்திகைக்கு அப்புறம் மழை நின்றுவிடும். மண் காய்ந்து கொண்டு வரும்) இவை எல்லாம் போய் நல்ல விளைச்சல் கண்டு அறுவடை செய்யும் நாளை மஹாராசன் பொங்கல் என உழவர்கள் சொல்வார்களாம்.

ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் மார்கழி உற்சவம் பொங்கல் அன்றே நிறைவு பெறும். அன்று தண்டியல் எனப்படும் வாகனத்தில் ஆய்ச்சியரைப் போல் கொண்டை போட்ட வண்ணம் எழுந்தருளும் ஆண்டாளுக்கு பக்தர்கள், கரும்பு, மஞ்சள் எனப் பல பொருட்களைக் காணிக்கையாகக் கொடுப்பார்கள். அவற்றைப் பெற்றுக் கொண்டு ஆண்டாள் திருவீதிகளில் உலாவரும் காட்சி சிறப்பாக இருக்கும் என்று தெரிய வருகிறது.


படத்துக்கு நன்றி கூகிளாண்டவர். தகவல்கள், பல பத்திரிகைகளில் இருந்தும் ஆங்காங்கே கேட்டும் திரட்டியவை

Friday, 4 January 2013

Sanjay- Music Academy - 2012

Sanjay gave a soothing concert in MA


No double tambura, no double “radal”, no half a dozen disciples, no laptop, tablet, books, no half a dozen flasks with different color hot drinks, no dozen chains hanging in the neck- Sanjay.

Mellifluous voice, the amount of “uzhaippu” with his limitations in his voice, nAdaswara/somu pudis-Sanjay.

At 9 AM, when I went to Music Academy to buy ticket, the dais was full and they have LCD tickets (mini hall) that to only 5 tickets. Priced same as dais, I purchased two for my family members.

This must be the 12th kutcheri of his last 15 days tryst. The previous day, his valaji RTP and “hindi” pallavi in KGS was greeted “sitting” as well as “standing” applause. (I heard)

Endu dAginadO- Talking to very close committee members of MA, ardent devotee of ThyagarAja, he emphasised the 3rd saraNam of this kriti (where the mudra was there) could have been taken instead of first.

He had to cut short of Arabhi because of time. But it was very good. Maduvanthi, in Hindustani style” was too good.

All plastic chairs in between the rows in VIP area shows the love the crowd has in sanjay’s music.

Sri Rama Rama Ramedhi Rame Raame.....

A guru was teaching Vishnu Sahasra naamam to a group of young boys. Guru chanted the slokam :


Sri Raama Raama Raamethi Rame Raame Manorame
Sahasra naama Tathulyam Raama Naama Varaanane



Then he told the boys: "if you chant Raama naamam 3 times, it is equivalent to chanting the whole Vishnu Sahasranaamam or chanting Lord's Naamam 1000 times.

One of the boys could not agree with the teacher. He questioned the teacher "Guro, how can 3 times=1000 times? I do not get the logic. How 3 naamams =1000 naamams?

The smart Guru, a great devotee of Lord Raama spontaneously explained: Lord Shiva says that the name of Lord Rama is the sweetest of all the words & chanting this name would be equivalent to chanting the whole Vishnu Sahasranama or thousand names of Vishnu.

Here is the interesting calculation to prove that 3 times chanting of Rama naamam = 1000 times chanting or chanting the whole Vishnu Sahasranaamam.

Take the name Rama. It has two Sanskrit letters RA& MARA (2nd consonant in Sanskrit : ya, RA, la, va, sa and sha)

MA(5th consonant in Pa, Pha, Ba, Bha, MA).

Substitute the value of RA & MA as 2 & 5 to make RAMA : 2 X 5= 10. So Rama Rama Rama = in nos: 2x5 x 2x5 x 2x5 =

10x10x10 = 1000. Three times chanting Rama naamam is equivalent to chanting it 1000 times. The boy was happy with the answer and started learning Vishun Sahasra naamam with full concentration and devotion. Let us thank the naughty boy and spread this to many friends

for their information and chanting Rama Namam at least (1000) times both morning and evening atleast. Jai Shri Ram! Sree Seetha Lakshmana Bharatha Shathrugna Hanumath Sametha Sree Ramchandra swamine Namaha.

Tuesday, 1 January 2013

Malladi Brothers-Music Academy- 2012

In MA, everyone wants to show their full potential in his/her concert. RTP shows the portrayal of the uzhaippu. Ranjani & Gayatri’s RTP was outstanding, (I heard.) In line with this, a well structured RTP in GowrimanOhari was rendered by MBs in MA yeststerday.


Well prepard pallavi- line was

“dEEkshita vara Shyama ThyagarAjam bhajE Sangeetha sadhgurum sadA”

Covering all the trinities. Raga mAlika has a real pleasant suprise, They took ragas of pancharatna kritis, pancha boothalinga stala rAgAs of MD, swara jathi rAgAs of SS.

It was wonderful experience with EmbAr kannan returning this rAga mAlika ragas in the reverse order. Unfortunately the RTP itself was taken at 8.46 PM. So, some more volleys of this rAgA, tAnam were missing.

KV Prasad

EmbAr kannar

Udupi Sridhar-ghatam

1. Tulasi jagajjanani-sAvEri- Thyagarajar-2 min neraval in “caraNa yugambulu nadulaku parama vaikuNThamaTa” (s)

2. Ragam-Ananda bhairavi- 2 min-AnandESwarENa samrakshitOham- (Anandabhairavi)- (S). Interestingly, this kriti details the inner forms of Lord Shiva.

3. Sub-main-ravikriya-Ragam- himagiri kumAri Eswari- MD= (s)

4. nAdhupai-madhyamAvathi-Thyagarjar

5. Main-kAmbohdi- “Sri raghuvara apamEya mAmava” –Thyagarjar -neraval in sitA nAthat tyAgarAja nutAnila sutApta sugunAbharana” (s)

6. Tani

7. RTP-GowrimanOhari (as said above)

8. chidambaramE ninai manamE-nAdanAmakriya- ?

9. annamacharya kriti- sindu bairavi- (forgot the name)

All the kritis –the rendering and the return by embAr were very good. They could have avoided madhyamavathi so that they could have spent 5 min more on RTP

Tani took 15 minutes. KVP, matured mridangist shows the class in his tani along with ghatam vidwan.

Monday, 24 December 2012

Sangeetha KalAnidhi Concert-MA-24.12.12

Sri.Trichur Ramachandan


Sri.Mannargudi Eswaran

Sri M.A.Sundaresan

Sri. V. Suresh

Sometimes, you love to write a review for a concert. Here is this..

Rasikas who assembled in MA on this vaikunta Ekadasi day could not have asked for more. Sri TR showed vaikuntam through his impeccable music.

I am yet to find a superlative word for his concert. It is very hard to tell you which of the accompanists excelled better than other. It was 400% fully charged concert. After the concert was over, Sri TR stood up accepting 5 minutes standing ovation. At this age, he proved that age has got nothing to do if you had a guru like GNB and worshipping music like his guru.

See his amazing list. Any true GNB fan would like to hear from Sri TR, a ranjani varNam. Yes he started with the same.

1. ambOruha pAdame-ranjani varNam –Shri GNB

2. Malayamarutham-rAgam for 3 minutes –niravathi sukhadAyagi nine nammaga lEdha- Neraval in “karashobha bhimba vadanE” and Swaram. –Shri GNB

3. PantuvarAli (3 minutes) followed by Sri. SundararAjam bhajEham- MD

4. Sundara nandakumara – madhyamAvadhi- OV Kavi.

5. rAgam-BegadA- followed by kalayAmi ragurAmam – Swati TirunAl and swaram in dymaNi kula tilakam.

6. vara rAgalayya-Senju kAmbodhi-Thyagarajar

7. Bairavi-main- sarvAndaryAmi-Thyagarajar-Neraval in “tAriteliyadhu kontenu”- Swaram

8. Tani

9. unnadiyE Gati enru-bahudhari-GNB

10. RTP-ShanmugapriyA- Pallavi-“kanaga sabEsan dharisanam kaNdEn Anandam koNdEn-tillai”

11. HindustAni geet- rAga Hamir- (he said- in memory of his Hindustani guru Pandi KrishnAji). The song was like this “.....kaisE ghar jAvUn”

12. Sonnadhai seidhida”-rAga mAlika

13. yogeendrAnAm-verse from nArayaneeyam- Hamsanandi, Danyasi, sahAna, surutti.

---------Standing ovation--------

In MA, he must have rendered maximum number of kritis. Each and every kriti is a stamp of GNB and AAA+ rated. Some excerpts.

OVK song has got 9 saraNams. He rendered it beautifully. With swara jatIs.

Violin-MAS was in full swing. He played less time but the amount of bhAvams in his return was amazing. Along with Sri TR claps were pouring many times for him.

Shanmugapriya- that is the RTP I was yearning for. In a three stage rAgA Alapana, he brought the essence of the rAgA.

I thought my search for good music ended with this after I came out.

Tani- ME and Suresh- outstanding. After a long time, heard breathtaking kaNakkus from Ghatam. ME ever-smile added more taste to this “feast”.

Friday, 21 December 2012

Gurucharan in MA 20.12.12

Sikkil Gurucharan


Sanjeev

Tiruvarur Bhaktavatchalam

Sethuraman-Ganjira

Music Academy

20.12.12

Kritis are as follows:

vanajAksha- Mandari

sharanambhava karunAmayE- hamsavinodhini-Narayana Teertar tarangam (Swaram)

Sub-main-kAnada-followed by kamalAmbA na chinta diccavammA-Garbhapuriswar-Adi talam (R)

Begada- Ele iLankiliyE- TiruvembAvai

Main-sAveri-rAma bAna trAna-TyagarAja – Neraval in “tammudu badalina vela”-Swaram

Tani

RTP-kOsalam- Pallavi

“Kosalai bAlA

mAsilA vEErA

Asila rAma” rAgA mAliga-Kalyana vasantham, varAli.

Kunittha puruvamum –verse from tevAram followed by “Eppadi pAdinarO adiyAr” –sudhananda Bharati.

Unmai arindhavar-sunanEsa ranjani-Bharathiar

ThillAna-Bhagesri

SGC gave another good performance. It was 4.15 slot and he had to wrap it up before Smt Vishaka hari’s programme. His rAgA selection dedication to bring real bhAva in each and every kriti are impeccable.

kOsalam was the only rAga that did not fit into my RTP imagination. He should have selected a better rAga for RTP. It was 6PM, he took this RTP and finished by 6.30 PM.

Sanjeev throughout the concert closely followed SGC and his return was as usual brilliant.

Somehow, I don’t vote for TB as he always blasts mridangam not plays mridangam. His tani with Sethuraman was a sort of hitting and blasting. Sethuraman was a poor guy, did not know what to do ? TB played as if it was the last day of the world (?). In between tani, he changed the mridangam too.

I attended BGS and MFAC (I arrived at the venu after the main for these two programmes, so I could not write the review). His BGS PurvikalyAni RTP (kanda jAti triputa) tuned by mannArgudi Eswaran was superb. Next is bahudAri RTP in MFAC, third is koslam.

SGC has developed a niche for himself and at par with mallAdi, Vijay sivA. Go and enjoy an agmark carnatic music. Happily live hereafter.