Tuesday 27 December 2022

சாத்தூர் கிருஷ்ணா ராமரத்னம் -சங்கீத வித்வத் சபை -21.12.22

 

சாத்தூர் ஏ‌ஜி சுப்ரமணியன் அவர்களுடைய பேரன் இவர். 

தன்னுடைய 20 வயதிலேயே “சங்கீத பூஷணம்’” விருது பெற்ற சாத்தூர்ஏ ஜி சுப்ரமணியன் (ஏ‌ஜி‌எஸ்)அவர்களைப் பற்றி, இந்த ஜெனரேஷன் மக்களுக்கு கொஞ்சம் தான். தெரியும்.  ஆத்மார்த்தமாக, கர்நாடக இசையை நேசிப்பவர்களுக்கு, இந்த இசைக் களைஞரைப் பற்றி நன்கு தெரியும்.

இவருடைய இசைய அதிகமாக பதிவு பண்ணாமல் போனால் கூட, அவருடைய சில கச்சேரிகளைக் கேட்கும்போது, அவருடைய ஆழ்ந்த சங்கீத அம்சங்கள் நம்மை அசர வைக்கும். தன் வாழ்க்கையில், நெறியுடன் வாழ்ந்த கலைஞர்.

அனுஷ்டானம் என்ற ஒரு மிகவும் மேன்மையான சக்தியையும், சங்கீதம் என்ற மிகப் பெரிய கலையையும், இரண்டு கண்களாக பாவித்து, காஞ்சி, மகா பெரியவரிடம், அளவு கடந்த பக்தியுடன் வாழ்ந்தவர்.

இப்போது, சங்கீத கலைஞர்களோ, ஸம்ப்ரதாய பஜனை (ராதா கல்யாணம் போன்ற) பண்ணுபவர்களோ, (உயரே செல்ல செல்ல), முதலில் விட்டு விடுவது, அனுஷ்டானம் தான். (First casuality)

மிகவும் ஸ்ரத்தையாக, தன் பெண்களுக்கு, சங்கீதம் சொல்லிக்கொடுத்து, சாத்தூர் சகோதரிகள் என்ற ஒரு உயர்ந்த இடத்தை கொடுத்து, அவர்களும் சென்னையிலும், சங்கீத வித்வத் சபையிலும், பல ஊர்களிலும், கச்சேரி செய்து, தன் தந்தை பாணியை தன்னுடைய சிஷ்யர்கள் மூலமாக இன்றும் கொண்டு சென்று இருக்கிறார்கள்.  

இவர்களுடைய ஷிஷ்யர் தான் எஸ்‌கே‌ஆர்.

ஒவ்வொரு வியர்வைக்கும், “காலம்” வேர் வைக்கும், - என்ற வாலியின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது. சாத்தூர் என்ற சங்கீத பூஷணத்தின் பேரன் அவர் உட்கார்ந்த இடத்தில், உட்கார்ந்து பாடுவது, அந்தக் குடும்பத்திற்க்கு, பெருமை மட்டும் இல்லை. சாத்தூர் பாணியை, இதுவரை கேட்காதவர்களுக்கு, இது ஒரு சான்ஸ்.

HCL க்காக, MA மினி ஹாலில் பாடி இருக்கிறார். முதல் முறை, ஒவ்வொரு கர்நாடக இசைக் கலைஞனின் கனவு மேடையில் ஏறிப் பாடுகிறார்

ஒரு 11.45 முதல் 1.15 வரை, ஒரு கச்சேரி என்பது, ஒரு சவாலான. குறுகிய நேரத்தில், ஒரு சப்-மெயின், மெயின், தனி –அதுவும் மிகவும் பெருமை வாய்ந்த சங்கீத வித்வத் சபையில்.

இப்போது கச்சேரி”:

 

விக்னேஷ் தியாகராஜன் – வயலின்

ராகவன் VS- மிருதங்கம்

அவருடைய மிகவும் பிரபலபமான “ஆரபியும்” “கல்யாணியையும்” பாடி தாத்தாவுக்கு பெருமை சேர்த்தார்.

பட்ணம் அவர்களில் தோடி ராக வர்ணத்துடன் ஆரம்பித்த அவர்.  சாத்தூர் அவர்களின் மிக பிரபலமான ஆரபி ராக நாத சுதா ரசம் என்ற ரூபக தாள கிருதியை அலசினார்.

பொறுமையாக, ரீதிகௌள ராகத்தை எடுத்து, அழகாக ராகம் பாடி. “ஓராறு முகனே” என்ற நீலகண்ட சிவன் பாடலைப் பாடினார். ஈராறு” என்ற இடத்தில் ஸ்வரம் பாடி முடித்தார்.

கல்யாணியை எடுத்து, தாத்தா பாணியில், சில பிடிகளை” அப்படியே இறுகப் பிடித்துக் கொண்டு, ராகம் பாடி, ஏதாவுனரா”- வை எடுத்து, (தியாகராஜர்) மிகவும் சிறப்பாக பாடினார். நிரவலை “சீதா கௌரி வாகீஸ்வரி யனு” ல் எடுத்து ஸ்வரம் பாடி முடித்தார்

அரவிந்த பத மலர் –காபி ராக அம்புஜம் கிருஷ்ணா பாடலைப் பாடி முடித்தார்

சுகமான தனி. 

மேலே ராகஆலாபனையில் சற்று ஸ்ரமப்பட்டாலும், முதலில் ம்யூசிக் அகாடெமியில் பாடும் இவரது இந்த முயற்சி மிகவும் பாராட்டப் பட வேண்டியது, கல்யாணியில் நிரவல் மிகவும் அநாசாயமாக இருந்தது.

ஆஸ்த்ரேலியாவில் இருக்கும் இவர், டிசம்பர் ல் நல்ல இசை கேட்க/கொடுக்க சென்னை வருகிறார்.

மீண்டும் மீண்டும் நிறைய கச்கேரிகள் செய்து, நம்மை சந்தோஷப்படுத்த வாழ்த்துவோம்

 

No comments: