Tuesday, 25 February 2025

தனி மூவர்

 

இன்று சிவராத்திரி. கொஞ்சம் ஈஸ்வர த்யானமும்,  நிறைய சுப்ரமண்ய சுவாமியும்.

             இருவர் என்றால் நமக்கு சட் என்று மணிரத்னம்     படம் நினைவு வரும். இது ரத்னங்களை மணிகளாக  செய்து “திருப்புகழ்” என்ற பெயரில் கொடுத்த/சொல்லப்பட்ட - மூவர் கதை

      நம் புராணங்கள், கடவுள், முனிவர்கள்   இவர்களைக்       குறிப்பிடும்போது மூன்று மூன்றாகவே குறிப்பிடும் பழக்கம் துர்கா, லக்ஷ்மிசரஸ்வதி,- பிரம்மா, விஷ்ணு சிவன்., சங்கீத மும்மூர்த்திகள்,- சைவக் குரவர்கள்- மாணிக்கவாசகர்அப்பர், சுந்தரர். சிவபெருமானை குறிக்கும்போது கூட, உமையாள்கங்கையாள், இந்தப் பக்கம், ஸ்ரீதேவிபூமிதேவி உடனுறை பெருமாள். ராமரைக் கூட, வைதேஹி கூட, லக்ஷ்மனனும் சேர்த்து....

          திருப்புகழ் ஒரு அமிர்தம். அந்தத் தமிழின் அழகு சொல்லி மாளாது. அர்த்தத்துடன் படிக்க, எப்படியெல்லாம், அருணகிரி முருகனைக் கொண்டாடுகிறார் என்று மெய் சிலிர்க்கும். சத்குரு நாராயண தீர்த்தரின் தரங்கமும் அப்படித்தான்.  சுவாமியை நேரில் பார்த்தோ, மனதில் வைத்து, எழுதும்போது, இப்படித்தான் வருமோ ?

     அருணகிரிநாதரின் தமிழ் சற்று சிரமம்.     சம்ஸ்க்ருத்தில் நாரயணீயம் போன்று. ஆனால் அதில் மூழ்கினால், பரமானந்தம் தான்......

            ஒரு உதாரணம் பார்ப்போம்

.......  .  பொருது கையிலுள அயில் நிணம் உண்க

         குருதி புனலேழு கடலினும் மிஞ்ச     புரவி கனமயில் நடவிடும் விந்தை குமரேசா..........

          என்று ஒரு பாட்டின் வரிகள். இதில் இரண்டாவது வரி புரியும், மூன்றாவது வரி, சற்று, புரிந்தமாதிரி  இருக்கும், முதல் உஹூம்.... இதன் அர்த்தத்தை கடைசியில் பார்ப்போம்

            சரி. மூவர் பற்றி பார்ப்போம். முருகப் பெருமான் மூன்று பேருக்கு பிரணவ உபதேசம் செய்தார் என்ற ஒரு பெரிய உண்மையை நமக்குச் சொல்கிறார். பக்தி இலக்கியங்கள் படித்தவருக்கு, திருவிளையாடல் படம் பார்த்தவருக்கு, ஒருவர் நிச்சயம் தெரியும், முருகன் சிவ பெருமானுக்கு   உபதேசித்தார் என்று. 

             இதிலும் இரண்டு விஷயங்கள், வேறு வேறு இடத்தில்  சொல்கிறார்.

            ஒன்று, சிவபெருமானின் இரு காதில் ஓதுகிறார் என்று ஒரு திருப்புகழிலும், தன்னுடைய வாகனமாகிய எருதின் மேல் உட்கார்ந்து, முருகனை சுற்றி வந்து பிரணவ மந்திரத்தை கேட்கிறார் (சேவேறும் ஈசர் சுற்ற மாஞான போத முத்தி) என்றும்

            இண்டாவது, பிரணவ மந்திரத்தை வாங்கிக் கொள்பவர், பிரம்மா தான். அவர் பிரணவத்தின் பொருள் நான்தான் என்று இறுமாப்பாக சொல்ல, வீரபாகுவைக் கூப்பிட்டு, ஜெயிலில் போட்டுவிட, சிவபெருமான் வந்து, சொல்லி வெளியில் விட்டு, அவருக்கும் உபதேசம் செய்கிறார்.

        மூன்றாவது யார் ?

          குறு முனி அகத்தியர் தான். எந்த முனிவருக்கும் கிடைக்காத பாக்கியம் அவருக்குக் கிடைத்து இருக்கிறது. ஆச்சர்யமான முனிவர், மீனாக்ஷி கல்யாணத்திலும் இருப்பார், ராமாயணத்தில், ஆதித்ய ஹ்ருதயமும் சொல்லிக் கொடுப்பார். “அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்” என்று சீர்காழி கோவிந்தராஜன் உருவத்தில், ராவணனோடு மல்லு கட்டுவார்.  ஔவையாருடன் கலந்து உரையாடுவார்

         அருணகிரி, அகத்தியரை, எப்படி அறிமுகப்படுத்துகிறார் என்பது அழகின் உச்சம்.

          புடவி அணி துகில்....” என்ற சாருகேசி ராகத்தில் அமைந் திருப்புகழ்

            அவர் சொல்கிறார். “இந்த உலகத்தை (நிலப் பரப்பை) ஒரு மங்கையாக நினைத்துக் கொண்டு, அதற்க்கு நீலக் கலரில் ஒரு சேலையைக் கட்டு. அதுதான் கடல். அந்தக் “எட்டு   கடலையும்” ஸ்வாஹா... என்று ஓரே மூச்சில் குடித்த அகத்தியர்” என்கிறார்

       

           "புடவிக் கணி துகில் ஏன வளர் அந்த

           கடல் எட்டையும் அற குடி முனி”

             அடுத்தது, பிரம்மா

         எட்டு கண்களுடன்,ஆயிரம் தாமரை இதழ்களில் உட்கார்ந்து, சுயம்புவாக  பிரம்மா

         “என்கண் புனித சததள நிலைகொள் சுயம்பு சதுர்வேதன்”

          மூன்றாவதாக சிவனைக் கொண்டாடுகிறார்.

         “கண்களில் கனல் கொப்பளிக்க, புரம் எட்டையும் எரித்து, ரொம்ப   கஷ்டப்பட்டு, ஒரு அழகான சிரிப்பை உதிர்த்தாராம்”

          புரமெட்டறி எழ விழி கனல் சிந்தி, கடினத்தொடு சில சிறு நகை கொண்டு அற்புத கர்த்தரஹர பர சிவன் இந்த தனி மூவர்”........

          என்று சொல்கிறார். சொல்லிவிட்டு, இந்த மூவருக்கும் ப்ரணவ     உபதேசம்  செய்தார் என்று பாடல் போகிறது

             ஏன்  சிரித்தார் என்று காஞ்சி மகாஸ்வாமி ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறார். அதை வேறு ஒரு தருணத்தில் பார்ப்போம்

         முடிந்தால் kaumaaram.com சென்று இந்தப் பாட்டைசாருகேசி ராகத்தில் குருஜி ராகவன் சார் பாடிய ஆடியோ கேளுங்கள் அழகு சொட்டும்

         முதலில் ஒரு பாடல் எழுதினேனே- அதற்கு       பதில்

....   .     பொருது கையிலுள ஆயில் நிணம் உண்க    “தன்னுடைய வேலினால், (ஆயுதத்தால்)  பகைவர்களில் கொழுப்பை சாப்பிட்டு” – (நிணம் = கொழுப்பு)     

             இரண்டு- தெரியும்     

            மூன்றாவது- தன்னுடைய மயிலை, குதிரையைப்     போல் வேகமாக ஓட்டுகிறார்.     இரண்டு கால் மயிலை, எப்படி குதிரை போல் வேகமாக ஓட்ட முடியும் ? அதனால் தான் “விந்தை குமரேசா” என்கிறார்.     பிரணவ உபதேசம் பண்ணிய சுவாமிக்கு, இதெல்லாம் எம்த்திரம்

            இந்த சிவராத்திரி எல்லோருக்கும் மங்களத்தைக் கொடுக்கட்டும்....