Friday 7 July 2017

வரஹூர் மகாமஹோபாத்யாயர்கள் – பகுதி 4


ஸ்ரீ நாராயண சாஸ்த்ரிகள்

இவர் “பகுதி- 3 ல் சொல்லிய மகான் ஸ்ரீ. ராமகிருஷ்ண சாஸ்திரிகளின் தம்பி ஆவார்

திருவையாறு பாலக்ருஷ்ண சாஸ்திரிகளிடம் சாஹித்யம், வியாகரணம் இவைகளைக் கற்றவர். சாமுதிரி மகாராஜாவின் வித்தியாலயத்தில் கள்ளிக்கோட்டையில் சம்ஸ்க்ருத ஆசிரியராக இருந்தார். பிறவியிலேயே கவிதா வாசனை உடையவர்.

ஆசிரியர் பணியில் இருந்து ஒய்வு பெற்றதும், வரஹூரில் தங்கி, பெருமாளை பூஜித்து வந்தார். மாலை நேரங்களில், சிறுவர்களை அழைத்துச் சென்று கோவிலின் பிரகாரங்களை, புல்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்வார். இரவு நேரங்களில், நாரயணீயம், பாகவதம் இவைகளைப் பாராயணம் செய்து பொருள் கூறுவார்.

கிருஷ்ணனிடம் மிகுந்த பக்தி கொண்டவர். உரியடி உற்சவத்தை வருணித்து, வட மொழியில், வசனம், செய்யுள் இரண்டு வடிவத்திலும் சம்பூ என்ற பெயரில் இயற்றி உள்ளார். இந்நூலானது, 1941 வருஷம் எஸ். வீ குருசுவாமி சாஸ்த்ரிகள் அவர்களால், சோதிக்கப்பட்டு, A. ராமசாமி ஐயரால் வெளியிடப்பட்டது.

இவர் எழுதிய நூல்கள்

1)      சிக்யோத்சவ பிரபந்தம்

2)      மதாலசா சரிதம்

3)      மதோன் மூலனம்

4)      ஸுக ஜீவனம்

5)      மன்கண்டேய நாடகம்

6)      காமாக்ஷி துதி சதகம்

7)      குருவாயூர் கிருஷ்ணா சதகம்

8)      குணசேகரம் வெங்கடேச சதகம்

9)      ஸ்ரார்தார்ஜூ நீயம்

பரம பக்தனான, நாராயண சாஸ்திரிகள் அவருடைய பக்திக்கு அடையாளமாக ஏகாதசியில் பூத உடலை நீத்து, வைகுண்ட பதவி அடைந்தார்.

பாஷ்ய பாவக்ஞ்ச வெங்கட்ராம சாஸ்த்ரிகள்

19 வது நூற்றாண்டின் முடிவில், வரகூரில் பிறந்தவர். பைங்காடு மஹா மஹோபாத்யாய கணபதி சாஸ்திரிகளிடம், வேதாந்த சாஸ்த்ரத்தை முறைப்படி காற்றவர். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர்.  ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகளால், “பாஷ்ய பாவக்ஞ” என்று விருது அளித்து கௌரவிக்கப்பட்டவர்.

ஆர்யா தர்மம் என்ற பத்திரிக்கையின் ஆசிரியாக இருந்தார். சிலகாலம் திருவானைக்கோவில் வித்யா ஸ்தாபனத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.  தர்ம சாஸ்த்ரத்திலும், ஜோதிட சாஸ்த்ரத்திலும், மாசற்ற அறிவு படைத்தவர்.

மிகக் கடினமான் விஷயங்களை, தக்க த்ருஷ்டாங்களைக் காட்டி, தெளிவாய்  துலங்கும்படி பேசும் திறன் வாய்ந்தவர்.

முறைப்படி சோம யாகம் செய்து சோமயாஜியாகத் திகழ்ந்தவர்.  கும்பகோணம், திருச்சிராப்பள்ளி இவைகளில் நடைபெறும் அத்வைத சபைகளில் சிறந்த பண்டிதராக விளங்கியவர்.

காசியப்பா, அம்பி சாஸ்த்ரிகள்

அம்பி சாஸ்த்ரிகள் என்ற சுப்ரமணிய சாஸ்த்ரிகள் வரகூரில் வேம்பைய்யர் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே வேத சாச்ற்றங்களை அப்யாஸித்தவர்.  உரில், பலருக்கும், சம்ஸ்க்ருதம், சாஸ்திரம், புராணம் இவைகளை போதித்தவர்.

ப்ராதஸ்நானம், உத்யோபஸ்தாதம், ஒளபாசனம், வைஸ்வதேவம், புராணபடனம், ஆலயதர்சனம் இவைகளை நாள்தோறும் விடாது அனுஷ்டித்தவர்.  இவரும் அத்வைத சபைக்கு சென்று வருவார்.

மேலும், காசி வாசி சிவசுவாமி சாஸ்திரிகள், விஷ்ணுபுரத்தில் சம்ஸ்க்ருத பாடம் சொல்லி வந்த ரங்கநாத சாஸ்த்ரிகள், கைலாசமய்யர் சகோதரர், விஸ்வநாத சாஸ்த்ரிகள்- இவர்கள் அனைவரும் வரகூரில் பிறந்தவர்களே..

No comments: