Sunday, 11 May 2025

உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே

 

இளமையாக இருக்கும் தமிழை வாழ்த்திப் பாடும் பாடல்.  என் பள்ளிக் காலத்தில் தேசிய கொடியின் அருகில் நின்று பாடிய பசுமையான நினைவுகள்.

இது “நீராரும் கடலுத்த” என்ற பள்ளி “இறை வணக்கப் பாடலின் கடைசி வரி”

இன்று சித்ரா பௌர்ணமி. நம் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்க அந்த அருணாசலேஸ்வரர் காக்கட்டும்

இன்று இந்தியா பாகிஸ்தான் சண்டை நடந்து கொண்டு வரும்போது, இந்த தலைப்பை வைத்து ஒரு சிறு கட்டுரை.

இந்த சண்டை முன்பு வந்த போது, ஏதோ காலேஜோ, ஸ்கூலோ- படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது, ஏதோ ரேடியோ, பேப்பர் அவைகளில் வந்த செய்தியை வைத்து, பாகிஸ்தான் அடி வாங்கி விட்டது என்று தெரிந்து கொண்டேன்

இப்போது, வரும் ஊடகங்களும், மாங்கு மாங்கு என்று கூட்டு டிஸ்கக்ஷன் என்று அலையும் சேனல் களும் இந்தியா-பாகிஸ்தான் சண்டையின் முழு வடிவத்தை நமக்கு உணர்த்துகிறது. பிரமிப்பாக இருக்கிறது

எனக்கு திருப்பியும் ராமாயணம் தான் நினைவுக்கு இருகிறது. ராமாயணம் சொல்லாத ராஜ தந்திரம் இல்லை. ராமன், ராவணனை இன்று போய் நாளை வா என்று சொன்னதாக இருக்கட்டும்,  அனுமன், இந்த்ரஜித்தின் பிரம்மாஸ்திறத்திர்க்கு, கட்டுப்பட்டது போல் நடித்து, ராவணனைப் பார்த்து புத்திமதி சொல்லும் காட்சியாகட்டும்.  விபீஷனர் சரணாகதி என்று வந்த போது, பல வித சர்ச்சைகள் இருந்தாலும், “சரணம் என்று என்னிடம் வந்த யாரையும் நான் காப்பாற்றியே தீருவேன்” என்ற ராமனின் முடிவு.

எல்லாவற்றிர்க்கும் மேலாக காகாசுரன் வதம். ராமாயணத்தில் இது சீதை, அசோக வனத்தில், அனுமாரிடம் சொல்வது போல் வருகிறது.  இது ரொம்ப முக்கியமான ஒரு நிகழ்வும். ராவணனை விட போசமானவன் காகாசுரன்.  ராவணன், சீதையை தூக்கி வந்தானே தவிர, அவளை நெருங்க கூட இல்லை, கெஞ்சுகிறான். மன்றாடுகிறான். ஒரு நிமிடம் கூட தவறாக சீதையை நெருங்க வில்லை.

ஆனால் காகாசுரன், சீதையை உடலால் துன்புறுத்துகிறான். அவள் உடம்பில் இருந்து ரத்தம் வருகிறது. தூங்கிக்கொண்டிருக்கும் ராமன் எழுந்துவிடப்போகிறானே என்று வலியைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறாள். ராமன் எழுந்து பார்த்து திடுக்கிடுகிறான். உடனே, கோபம் கொண்டு, ஒரு தர்ப்பையை எடுத்து மந்திர உச்சாடனம் செய்து அம்பாக விடுகிறான். அது காகாசுரனை துரத்து துரத்து என்று துரத்தி, கடைசியில், அசுரன், ராமன் காலடியில் வந்து விழுகிறான்.  உயிர் பிச்சை கேட்க, சீதை என்கிற அந்த தாய், பரிந்து பேச ஒரு கண்ணை மட்டும் எடுத்து அனுப்புகிறான்.

இதை அருணகிரிநாதர், ஒரு காதையும் கண்ணையும் எடுத்து அனுப்பினார் – என்று சொல்கிறார்.

விவேகானந்தர் சொன்னது போல், நம் நாடு சீதை பிறந்த நாடு, கீதை பிறந்த நாடு.  நாரி சக்தி என்று அரசு சொல்வது என்பது சாதாரண வார்த்தை இல்லை. ஆபரேஷன் சிந்தூர் என்ற வார்த்தையெல்லாம் யாருக்கோ தோன்றி இருக்கிறது. “ஆபரேஷன் வீரம்” என்று சொன்னால் வீரம் வராது.  “ஆபரேஷன் சிந்தூர்” என்று சொன்ன உடனே ஒரு ஜெர்க் வருகிறது.....

ஒரு வார்த்தையில் வீரம் வரவழைக்க முடியுமா என்ன ? அதுதான் ராம ராஜ்யத்தின் மகிமை

இரண்டு வீர பெண்மணிகளை முன் நிறுத்தி “Press Briefing” கொடுக்க வைத்தார் பாருங்கள். அரசியல் சாதுர்யத்தின் உச்சம்

 

இதில் அஜீத் டோவோல், பாதி விபீஷணர், பாதி ராஜ தந்திரி. பாகிஸ்தானின் இண்டு இடுக்கு எல்லாம் தெரியும். அப்போ அப்போ சொல்லி கலக்குகிறார்.  பாதி வெற்றி இவரால்

ஜெய்ஷங்கர், ஆஞ்சநேயர் போல. ராமன், அனுமனை முதலில் சந்திக்கும்போது, அவருடய நா வன்மையை பார்த்து ராமர் ஆச்சர்யப்படுகிறார். நான்கு வேதமும் நன்கு கற்ற ஒருவனால் தான் அப்படிப் பேச முடியும் என்கிறார். “நவ வியாகரண நிபுண” என்று முத்துஸ்வாமி தீட்சிதர் அவர் பாடலில் சொல்கிறார்.

இங்கு ஜெய்ஷங்கர. இவர் குட் மார்னிங் என்று சொன்னால், 1 லட்சம் பேர் உடனே குட் மார்னிங் சொல்கிறார்கள். லேசாக சிரித்துக்கொண்டே எதிரிகளை த்வம்சம் செய்கிறார்

பீஷ்மர், அம்பு படுக்கையில் படுத்து இருக்கும்போது. ஸ்திரீ தர்மம் சொன்னார். புருஷ தர்மம் சொல்லவில்லை. ஏனெனில், புருஷனுக்கு ஒரு தர்மமும் இல்லை. ஸ்திரீ சரியில்லை என்றால் ஒரு டம்ளர் காபி கூட கிடைக்காது. ஸ்த்ரீக்குள் புருஷன் அடக்கம்

மேற்கூறிய கதை எல்லாம், ஏதோ ஒரு வகையில் இப்போது நடக்கும் யுத்தத்துடன் சம்பந்தப் பட்டு இருப்பதை, நன்கு கவனித்தால் புரியும்.

எங்கோ வடக்கே நடக்கும், ஒரு சண்டையில, தெற்கே இருக்கும், நாம் நிறைய சுலோகம், ராம நாமம், காயத்ரி ஜபம் என்று வலிமை சேர்த்து அனுப்பிக் கொண்டு இருக்கறோம்.  மஹா பெரியவர் சொன்னது போல், பின் கோடு என்று ஒன்று போட்டால் சரியான இடத்திற்குப் போவது போல்

“ஆத்மானம் மானுஷம் மன்யே” என்று ராமனை சொல்லும்போது சொல்வோம். திருமால் ராமனாக அவதாரம் செய்து சாதாரண மனிதனாக, எல்லா கஷ்டத்தையும் அனுபவித்து தர்மம் தவறாமல் வாழ்ந்தார். பிறகு பகவத்பாதாள் அதே மாதிரி பிறந்து, வாழ்ந்து அத்வைத சித்தாந்தங்களை போதித்து, இன்றும் அவர் இல்லை என்றால், வேதம் இல்லை, நன்னூல்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு ஒரு வாழ்க்கை வாழ்ந்து விட்டுப் போனார். நாம் இருக்கும் காலத்தில் மஹா பெரியவா.....அதே போல்

அரசியல் தாண்டி இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரும் மனிதனும் நன்றி சொல்லவேண்டியது மோடி என்ற மகத்தான மனிதர்க்கு. போர் ஒத்திகை நடந்து கொண்டிருக்கும் பொது ஐ பி எல் நடத்துகிறார், நாள் முழுவதும் தூங்காமல், ஏதோ மீட்டிங் போடுகிறார்.  அஜீத் டோவால், ஜெய்ஷங்கர் என்ற தளபதிகள் அவருக்கு பக்க பலமாக.

இது ராம ராஜ்யமா ?  அப்படி என்றால் பிரதம மந்திரி என்ன ராமனா ? என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்

ராம-ராவண யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது. ராமன், ராவணின் போர் திறமையைப் பார்த்து வியக்கிறான்.  சரி போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று யோசிக்கும்போது,  ராமனின் தேரோட்டி, மாதலி,  "ராமா, பிரம்மாஸ்த்ரம் இருக்கிறது, மறந்து விடாதீர்கள்" என்று நினவு படுத்த, உடனே பிரம்மாஸ்திர பிரயோகம் பண்ண, ராவண வதம் முடிந்து.

இப்போது, மாதலி ரூபத்தில் இருக்கும்  அஜீத் டோவலோ,  ஜெய்ஷங்கரோ,  அல்லது முப்படை தளபதிகளோ,  "மோடி அய்யா,  நேரம் கடத்த வேண்டாம், நம்மிடம் "ப்ரஹ்மோஸ்"  இருக்கிறது, என்று நினைவு படுத்த....

விளைவு/.... REST WAS HISTORY...

எந்த வித பயமும் இல்லாமல் ஏதோ, குழாயடி சண்டை மாதிரி நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

கொரோனா காலத்தில் மருந்து இல்லாதவற்க்கு, இலவசமாக மருந்து கொடுத்தோம். நம்மை போட்டு பார்ப்பவர்களுக்குப், வேறு மாதிரி மருந்து கொடுத்துக் கொண்டு அவர்களையும் “போட்டு” பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த யுத்தத்தைப் பற்றி, ஒரு சில வரியில் சொல்வதானால்....

நான் CA படிக்கும்போது “Raiders of the Lost Arc” என்று ஒரு படம் வந்தது. சென்னையில் Pilot தியேட்டரில் மட்டும் அது 200 நாட்களுக்கு மேல் ஓடியது. Stephen Spielberg ,  படம்  Harrison Ford  என்ற ஒரு நடிகர் நடித்து இருப்பார்

நானும் என் அத்தை பையன், சாய்நாத் (சாய்), இப்போது ஹைதராபாதில் இருக்கிறான். அந்த படத்தை 10 தடவைக்கு மேல் பார்த்திருப்போம். போஸ்டரில் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்துக் கொண்டு இருக்கும், அந்தற்கு முன்பு ஹீரோ கண்ணை விரித்து பயத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பார். அதில் ஒரு சண்டைக் காட்சி வரும்.

“ஒரு பாலைவன கிராமத்தில் சண்டை நடந்து கொண்டிருக்கும். இவர் ஒரு சாட்டை வைத்து இருப்பார். திடீரென்று, ஜாம்பவான் போல ஒருவன் எதிரில்  நின்று, ஒரு பெரிய வாளை சுழற்றுவான். பார்க்க பயங்கரமாக இருப்பான். அவனை கண்டது கூட்டம் தெறித்து ஓடும்..  எதிரும் புதிருமாக நின்று கொண்டிருப்பார்கள். வேறு யாரும் கிடையாது. வில்லன் ஓடிவந்து ஹீரோ வைக் கொல்ல வருவான்.

அப்போதுதான் அது நடக்கும். ஹீரோ துப்பாக்கியை எடுத்து “டப்” என்று சுட்டுவிட்டு, திரும்பி நம்மைப் பார்ப்பார்.  Serious சீனை  full comedy ஆ பண்ணுவார். அந்த படம் முழுதும் adventure தான். ஆனால் இது தான் பெஸ்ட் சீன்

இதுதான் பாகிஸ்தான். உதார் மன்னர்கள்.

ஒரு இந்திய பிரஜையாக நாம் “திறம் வியந்து, நாம் செய்யும் செயல் மறந்து ராணுவ வீரர்களை வாழ்த்துவோம்”