Saturday 30 March 2024

>> ஜெய ஜெய வராஹபுரி வெங்கடேசா >>>

 எங்கள் பெருமாள் அளப்பரிய கருணை மிக்கவர். அது எங்கூர்க்காரர்களுக்கு நன்கு தெரியும். அதனால் தான் எந்த உத்சவம் என்றாலும், எங்கு இருந்தாலும் உடனே வரகூர் வந்து, பெருமாளைக் கொண்டாடித் தீர்ப்பார்கள்.

நேற்று, நான் மைலாப்பூர் ஸ்ரீ ராம் சிட்ஸ் கிளைக்கு சென்றிருந்தேன். அங்கு உயர் அதிகாரியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது வரகூர் புராணத்தை பாடிவிட்டு, மேலே பார்த்தால் வரகூர் பெருமாளின் காலண்டர் மாட்டி இருக்கிறது. யாரோ மாட்டி இருக்கிறார். இதே போல். P.S.CBSE  பள்ளியில், Secretary யும், பெண்ணாத்தூர் அவர்களின் பேரனும், இப்போது தலைமை நிதி நிர்வாகி யும் (Treasurer of PS Group of School) ஆன ஸ்ரீ P.S.Prabhakar  அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் அருகில் வரகூர் monthly calender இருந்தது. அவரிடம் கேட்டபோது, “யாரோ கொண்டு கொடுத்தார்கள், நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கொடுத்து விட்டார்.  இந்த சின்ன விஷயங்கள், வரஹூர்க்காரனான எனக்கு சின்ன சிலிர்ப்பு உண்டாக்கும் நிகழ்வுகள்.

அது போகட்டும்

சேங்காலிபுரம் என்று ஒரு ஊர் உண்டு.  (அனந்தராம் தீட்சிதர்) அங்கு பிறந்தவர்கள், காசிக்குப் போக மாட்டார்கள். ஏனென்றால் சேங்காலிபுரம் தான் காசி, அங்கு ஓடும் தீர்த்தம் தான் கங்கை என்று. இன்றும் அப்படித்தான்.

அப்படித்தான் வரஹூர்

மஹா பெரியவா சொல்லுவார் “வரஹூர் க்காரானுக்கு அவன் பெருமாள் உசத்தி. வேறு ஒரு கோவிலுக்குப் போகவும் யோசிப்பான். அங்கு போனாலும், வரஹூர் சுவாமியாகவே அதையும் பார்ப்பான்?” என்று

ஏன் அப்பா சொல்வார். மஹா பெரியவாளிடம், ஒருவர் சென்று, “நான் வரஹூர் போய் வந்தேன் என்று சொல்ல, அவர் “தனியா போனியா, ஆத்துக்காரியை அழைச்சிண்டு போனியா” என்று கேட்க, அவர் “தனியா போனேன்” என்றார். அதற்க்கு, பெரியவா “எண்டா, வரஹூர் பெருமாளே, தாயாரை மடியில் வச்சிண்டு இருக்கார். நீ என்னடான்னா, தனியா போனேன் கறியே..... இனிமேல் அங்கு போனால் தம்பதி சமேதரா போங்கோ” என்றாராம்.

இந்தக் கதை எதுக்கு என்று அப்புறம் சொல்கிறேன்.

நேற்று முன் தினம், இப்போது இருக்கும் எங்கள் ஊர் பட்டாச்சார்யார், சில நிர்பந்தங்கள் காரணமாக, போக வேண்டிய சூழ்நிலை. இவர் வந்து சுமார் ஒரு வருடம் இருக்கலாம். இதற்க்கு முன்பு இருந்த மாது பட்டாச்சர்யார் (நாங்கள் அன்புடன் கூப்பிடும் மாது அண்ணா) திரும்பி வருவதாக முடிவு செய்யப்பட்டு விட்டது.

இப்போது இருக்கும் பட்டாச்சர்யார், எப்படி வந்தார் என்பது, வரகூர் வாசிகளுக்கு மட்டுமே தெரியும். பெருமாளின் கருணை எத்தகையது என்பது. இது போகட்டும். !!!!

இந்த நிகழ்வை நான் யோசித்தேன். இதில் பெருமாளின் திருவிளையாடல் என்ன என்று ?  ஏன் ஒருவர் வரவேண்டும், ஒரு வருடத்திற்குள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று ???? 

இப்போது இருக்கும் பட்டாச்சர்யாருக்கு ஒரு மகன் உண்டு. அவர் பேர் வெங்கடேஷ் பட்டாச்சர்யார். (ஜூனியர் பட்டாச்சார்யார்). வரகூர் பெருமாள் பேரும் அதே தான்.

வெங்கடஷுக்கு  திருமண வயது. அவருக்கு திருமணம் ஆக வில்லை. தாயார் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார் இரண்டு மூன்று வருடமாக. சரியாக அமையவில்லை.  என் அம்மாவிடம் பல முறை சொல்லியும் இருக்கிறார். ஏன் அம்மா, எப்போதும் எல்லோரிடமும் சொல்லும் ஒரே வார்த்தை. “வரஹூர் பெருமாளை கெட்டியா புடிச்சிக்கோங்கோ.. அவர் கை விடவே மாட்டார், இது சத்தியம்”  என்பதுதான்

இங்கு வந்த சில மாதங்களிலே, அவருக்கு சில மாதங்களில் நிச்சயம் ஆகி, பெருமாள் சந்நிதானத்தில் கல்யாணம் ஆகி விட்டது. ஊர் கூடி கல்யாணம்.

எங்கள் பெருமாள் என்ன நினைத்தார் என்றார். “நீங்கள் என் ஊருக்கு வாருங்கள், என்னைத் தொட்டு பூஜை செய்யுங்கள், நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி, சொன்ன வண்ணம் செய்து, உரியடி உற்சவத்தையும், இப்போது இருக்கும், பட்டாச்சர்யார் மூலமாக நடத்திக் கொண்டும் விட்டார்.

ஆனால், மாது அண்ணாவை விட, எங்கள் பெருமாளுக்கு மனமில்லை. திருமணமான எந்தப் பெண்ணுக்கும், பிறந்த வீட்டுப் பாசம் விடாது, என்பது போல. மிகவும் பிடித்த மாது அண்ணாவை திருப்பிச் சேர்த்துக் கொண்டுவிட்டார்.

இப்போது நான் சொன்ன கதை புரியும்.  தனியாக வந்த எங்கள் ஜூனியர் பட்டாசார்யாரை தம்பதி சமேதராக அனுப்பி வைத்தார்.

அதுதான் எங்கள் பெருமாள் அணுகிரஹம்.....

திருமூலர் சொன்னது போல் “ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை, யார் அறிவார் அந்த அகலமும் நீளமும்”

//....ஜெய ஜெய வராஹபுரி ஸ்ரீ வெங்கடேசா..........

 

 

  

 

 

 

 

 


No comments: